Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: போகிறேன், என் வழியில்...


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
போகிறேன், என் வழியில்...
Permalink  
 


~|| போகிறேன்,என் வழியில் ||~


ஜாமக்காரர்களின்
தூக்கத்தைக் கெடுத்தேனோ
துக்கத்தைத் தந்தேனோ

images?q=tbn:ANd9GcRw148sNYDnLp-hN41FmyKDOCuldaTxaizHeBLNzmRDlCmKT8z2


வேதமாணாக்கரின்
படிப்புக்கு இடையூறாக இருந்தேனோ
பிழைப்பைக் கெடுத்தேனோ

images?q=tbn:ANd9GcSfUjECwDCzL8GyNNypOLLZX53oLf1aBfveMYf1LUE9KE92mxxP

 

இடைத்தரகர்களின்
இடையில் புகுந்தேனோ
வியாபாரம் படுத்ததோ

images?q=tbn:ANd9GcQYkrLWa8aq6ksAKuZWUKvDOjwQQGlwBhKTjv7qBRUKUvh3HlszYw

இடையர் கிடையில் -இடையில்
திருடிய ஆடுகள் சிதறிபோனதோ
பொழுதுபோனதோ

வகைதொகையில்லாமல்
அணிசேர்கிறாய்
நீர்த்துப்போகிறாய்

images?q=tbn:ANd9GcRpD4cJ_KUaMJUpuNuTW8o13X9JsGIxWaQe6vnDKMKRax-yRdMf

நீர்த்துப்போன எதுவுமே
ஜீவனைத் தராது
விழலுக்கு இரைத்த நீராகும்

எதிரி நானல்ல, அம்பு நீயல்ல
எய்தவன் இருக்க அம்பை நோகும்
மனிதன் நானல்ல.

ஆண்டாண்டு காலம்
அழுதுபுரண்ட
மாண்டோர் வருவர்

ஆண்டவரின் நாளும்
விரைவில் மலரும்
பொழுது புலரும்

அன்று நீ அறிவாய்
அரியணைமுன் - என்னை
அறிந்தவர் யாரென்று

நீ என் முன்னால் நிற்க
நான் அவரோடு நிற்கும்
வேதனை வேண்டாமே

நீ என்னோடு நிற்க
நாம் அவரோடு நிற்கவே
உன்னோடு போராடினேன்.

இரட்சகர் அவரென்று அறிந்த
நீ இரட்சிப்பை இழந்தாயோ
சிட்சிப்பை மறந்தாயோ

ஒருபோதும் அறிந்திடாய்
உன்னோடிருந்தோர் - அன்று
நரக பாதாளங்களில்.

மனிதரை நரகத்தில் வாட்ட
இறைவன் தன் இன்னுயிரை
தரவில்லை என்பது மெய்யே.

ஆனால் மனிதருக்கு ஆன்மா
இல்லையென்று சொல்லும்
நீ மிருகம் தானே ?

போதும் இந்த விளையாட்டு
போகிறேன், என் வழியில்
வழியனுப்ப வந்துவிடு.

 

(இது வதனநூலில் படைக்கப்பட்டது.)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard