Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ”சில்சாம்”- எங்கே..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: ”சில்சாம்”- எங்கே..?
Permalink  
 


  • Yauwana Janam http://www.facebook.com/immanuela2/posts/197136007036730?notif_t=feed_comment_reply
    சில்சாமுடன் தொலைபேசியில் பேசினேன். ஆனால் அவரோ தன் பெயர் கனேசன் என்று கூறிவிட்டார். அவருடன் பேசியதில் அவர் பல்வேறு முரண்பட்ட தகவல்களைக் கூறியதோடு நான் சில்சாம் இல்லை. இல்லவே இல்லை என்று உறுதியாக மறுத்து விட்டார். நான் அவரிடம் கடைசியாக சொன்ன வார்த்தை : “ தாங்கள் சில்சாம் இல்லையானால் பரவாயில்லை. ஒருவேளை நீங்கள் சில்சாமாக இருக்கும் பட்சத்தில் இனி.. இது போல எழுதுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும். என்று தெளிவாகச் சொல்லிவிட்டேன்.. முன் சொன்னதையே திரும்பச் சொல்லுகிறேன் சில்சாம் தனக்கு விலாசத்தை ஏற்படுத்திக் கொண்டபின்பு ஆவிக்குரிய சபைகளின் குறைகள் என்று சொல்லுபவற்றை தைரியமாக சுட்டிக் காட்டட்டும்.

  • Yauwana Janam ‎@Golda Jasmine ”மலையைப் பார்த்து நாய் குலைக்கிறது” என்று விட்டுப் போகச் சொல்லியே பெரியவர்கள் அறிவுரை சொல்லுவார்கள். ஆனாலும் இணக்கமும் நட்பும் வேண்டியே விளக்கம் தருகிறோம். நம்முடைய விளக்கம் நல்ல விளைவுகளை உண்டாக்குமோ என்ற ஏக்கமே இதற்குக் காரணம். அதிலும் தொடர்ந்து திசைதிருப்பி சர்ச்சைகளை எழுப்புவோர் பக்கம் இனி திரும்பாதிருக்க முயற்சிப்போம்.

  • Yauwana Janam
    Golda Jasmine காமெடியாக இருக்கிறது சில்சாம் அவர்களே! தாங்கள் நாம், நமக்கு என்று பேசுவது!!
    Are you alright??

    தங்கள் கணக்கு முடக்கப்பட்டது மிகவும் வருத்தமே. அந்தளவிற்கு உங்கள் மேல் கோபம் //

    Yauwana Janam சாதுஜி அளவுக்கு எங்களுக்கு காமிடி வராதுங்க...பகலில் ஒரு வேடம் இரவில் ஒரு வேடம் போடும் ஆளுக்கு சாம்ரம் வீச காழ்ப்புணர்ச்சியுடன் போராடும் சில மாமிகளைவிட சில்சாம் கோடி மடங்கு மேன்மையானவர்.சாதுஜி மீது வரும் தூசிகளையெல்லாம் வெட்கமில்லாமல் ஊதி ஊதி சுத்தம் செய்யப்பார்க்கும் உங்கள் பெண்மையை நினைத்தாலே மிகவும் பெருமையாக இருக்கிறது.

    Golda Jasmine நல்லா இருங்க சில்சாம் அவர்களே! Or whoever you are. நல்லதுக்கு காலமில்லை!

    Yauwana Janam // தங்கள் கணக்கு முடக்கப்பட்டது மிகவும் வருத்தமே. அந்தளவிற்கு உங்கள் மேல் கோபம் கொண்டவர் யாரோ?? //

    சில்சாம் கணக்கு முடக்கப்பட்டுவிட்டதா,யார் முடக்கினார்...தெரியலையே..?

    உங்கள் எல்லோருக்கும் சில்சாம் பைத்தியம் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறோம்...அவர் மேல இவ்வளவு பாசம் வைத்திருப்பீங்கன்னு நாங்க நினைக்கல...நாங்க அவர் சார்பாக எழுத வந்திருக்கும் அவருடைய தம்பிகள்...உங்கள் பாசப் போராட்டத்தை அவரிடம் நிச்சயம் தெரிவிக்கிறோம்.அப்புறம் ஒரு விஷயம்,சாதுவையும் விசெவையும் ரொம்ப கேட்டதாகச் சொல்லுங்கள்..!

    இன்று இரவு ஒரு பொம்பளை பிசாசு சிலரை தூங்கவிடாது செய்ய சுற்றி சுற்றி வருகிறது.ஆனால் அதனை கர்த்தருடைய நாமத்தினால் மேற்கொள்ளுவோம். தூஷிக்கவும் தவறு செய்யவும் தூண்டும் அந்த பிசாசின் சதியை முறியடிப்போம்.ஒருவேளை சோற்றுக்காக மானத்தை விற்ற கள்ளனின் சூழ்ச்சிக்கு பலியாகமாட்டோம்.

    //whoever you are. நல்லதுக்கு காலமில்லை!//

    களையெடுக்கும் கண்ணம்மா
    மனசுக்குள்ளே என்னம்மா
    ரெட்டிப்பான நன்மை வரும் நிச்சயமா..? (உனக்கு..?)

    (சாது ரெட்டைப் புள்ள பொறக்குமுன்னு சொல்றாரோ..?)

  • Yauwana Janam
    Arputharaj Samuel
    சகோ.சில்சாம் அவர்களின் கணக்கு முடக்கப்பட்ட போது ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தவர்களில் நானும் ஒருவன். எனக்குத் தெரிந்த வரையில் நான் மட்டுமே அது சம்பந்தமாக பதிவு எழுதினேன் என்று நினைக்கிறேன்.

    http://www.facebook.com/note.php?note_id=2214660490799

    ஆனால் இப்போது சகோ.சில்சாம் என்ற பெயருக்கு வக்காலத்து வாங்குவதற்காகவோ அல்லது யௌவன ஜனம் என்ற பெயரில் வந்திருக்கும் அதே பழைய நபரோ எழுதுபவைகளைப் பார்த்தால் சகோ.சில்சாம் என்பவரின் கணக்கு மூடப்படவில்லை. அதை ஆரம்பித்தவரே முடக்கி வைத்து விட்டரோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில் இங்கு அனேக பொய் மலைகளைக் காண்கிறேன்.

    நான் பொய்யே சொல்லவில்லை என்பதை சம்பந்தப்பட்டவர் மறுக்கட்டும் பார்க்கலாம். உண்மையிலேயே சகோ.சில்சாமாக இருந்தவரை நினைத்து ரொம்ப பரிதாபமாக இருக்கிறது. யாருக்குப் பயந்து இந்த வேஷம்?

    ||சில்சாம் என்பவர் மறைந்தாலும் அவரால் ஏற்றி வைக்கப்பட்ட தீபமானது மனக்குமுறல்களுடன் தவித்த ஒவ்வொரு இளைஞனுடைய உள்ளத்திலும் ஜொலித்து ஒரு மாபெரும் சமய சீர்திருத்த இயக்கமாக உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.||

    நல்லா பேசுறீங்க ஐயா டயலாக்கு. பழைய காலத்துப் படத்துல கடைசி சீன்ல யாராவது செத்துப் போவாங்க. அப்ப கூட இதே வசனங்கள் வரும்.

    ||ஒருவேளை சோற்றுக்காக மானத்தை விற்ற கள்ளனின் சூழ்ச்சிக்கு பலியாகமாட்டோம்.||

    யாருங்க அந்தக் கள்ளன்.

    ||சீர்திருத்தமும் சுயபரிசோதனையும் செய்ய மறுக்கும் எந்தவொரு சமுதாயமும் வாழ்ந்ததாக சரித்திரமில்லை.||

    மிகவும் அருமையான வரிகள். இவ்வரிகளுக்குச் சொந்தக்காரருக்கே இவ்வரிகள் மிகவும் அதிகத் தேவையாக இருக்கிறது.

    சீர்திருத்தத்தைப் பற்றி மேடை போட்டு பேசுவது மிக எளிது. ஆனால் அச்சீர்திருத்தம் நம்மில் இருந்து புறப்படட்டும். நான் சுய பரிசோதனை செய்து பார்த்து மற்றவர்களுடன் என்னை ஒப்பிட்டுப் பார்க்காமல் இயேசுவுடன் என்னை ஒப்பிட்டுப் பார்த்து அவரைப் போல ஒரு சீர்திருத்தக்காரனாக இருந்தால் தான் அது உண்மையான சீர்திருத்தமாக இருக்கும்.

    ||சாதுஜி மீது வரும் தூசிகளையெல்லாம் வெட்கமில்லாமல் ஊதி ஊதி சுத்தம் செய்யப்பார்க்கும் உங்கள் பெண்மையை நினைத்தாலே மிகவும் பெருமையாக இருக்கிறது.||

    இவ்வரிகள் பழைய நட்புக்கு இலக்கணம். மிகவும் மோசமான வர்ணனை. ரெட்டிகாருக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் அல்லது என்ன வித்தியாசம்? ஒரு வித்தியாசமுமில்லை.

    ||தங்கள் கணக்கு முடக்கப்பட்டது மிகவும் வருத்தமே. அந்தளவிற்கு உங்கள் மேல் கோபம் கொண்டவர் யாரோ??||

    இது ”நமக்கு நாமே திட்டம்” என்பதாக உணர்த்தப்படுகிறேன்.

  • Yauwana Janam
    ‎@Arputharaj Samuel ||தங்கள் கணக்கு முடக்கப்பட்டது மிகவும் வருத்தமே. அந்தளவிற்கு உங்கள் மேல் கோபம் கொண்டவர் யாரோ??|| இது ”நமக்கு நாமே திட்டம்” என்பதாக உணர்த்தப்படுகிறேன்.

    அற்புதம் எந்த ஆவியினால் நடத்தப்படுகிறார் என்பது நன்கு புரிகிறது.ஒவ்வொருவருடைய சுயரூபம் வெளிப்படும் தருணம் போலிருக்கிறது.

    // சகோ.சில்சாம் என்பவரின் கணக்கு மூடப்படவில்லை. அதை ஆரம்பித்தவரே முடக்கி வைத்து விட்டரோ என்று எண்ணத்தோன்றுகிறது. //

    சில்சாம் அவர்களின் கணக்கு ஃபேஸ்புக்கில் மட்டுமே முடக்கப்பட்டது. இதுபற்றிய விவரம் உண்மையான நண்பர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    சில்சாம் அவர்கள் இங்கு எழுதமுடியாவிட்டாலும் மற்ற தளங்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

    ஒரு பெண்ணால் இவ்வளவு சாதிக்கமுடியுமானால் அது ஆச்சரியமே.ஆனாலும் ”எதிரிக்கு எதிரி” நண்பன் பாலிஸி எப்போதும் கைகொடுக்காது என்று சில்சாம் அவர்கள் அடிக்கடி சொல்லுவார்.

    யௌவன ஜனம் என்பது பன்மை சொல் என்பதை சில புத்திசாலிகள் கவனத்துக்குக் கொண்டு வர யௌவன ஜனம் விரும்புகிறது.இது ஒத்த கருத்துடைய நண்பர்களின் கூட்டுமுயற்சி என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்.

    எனவே மீண்டும் மீண்டும் பழைய புருஷனையே நினைத்துக்கொண்டு முனங்கும் மதியீன ஸ்திரீயைப் போல கிறிஸ்துவின் மணவாட்டி சபையார் நடந்துகொள்ளவேண்டாம் என்று யௌவன ஜனம் எச்சரிக்கிறது.

    1,44,000 பேரில் ஒருவராக இடம்பிடிக்க 2000 வருடமாக பிரயாசப்படும் கூட்டத்தைச் சேர்ந்தவர் எமக்கு விசுவாசத்தைக் குறித்து போதிக்க முயற்சிக்கவேண்டாம் என்றும் அறிவுறுத்தபடுகிறது.

  • Yauwana Janam
    ‎||சில்சாம் அவர்கள் இங்கு எழுதமுடியாவிட்டாலும் மற்ற தளங்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.||

    Arputharaj Samuel ////”எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல” அப்ப்டின்னு ஒரு சொல்லாடல் எங்க ஊர்ல சொல்வாங்க. சம்பந்தமே இல்லாம இங்கே ஏன் அது நினைவுக்கு வருது. :) ////

    ||ஒவ்வொருவருடைய சுயரூபம் வெளிப்படும் தருணம் போலிருக்கிறது.||

    Arputharaj Samuel ////ஆம். இந்தளவுக்கு ஒரு ஊழியராக இருக்கிறவர் பொய் சொல்ல முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. ////

    52. நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக் கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார்.

    53. இவைகளை அவர்களுக்கு அவர் சொல்லுகையில், வேதபாரகரும் பரிசேயரும் அவர்மேல் குற்றஞ்சாட்டும்பொருட்டு, அவர் வாய்மொழியில் ஏதாகிலும் பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்று உபாயம்பண்ணி அவரை மிகவும் நெருக்கவும்,

    54. அநேக காரியங்களைக் குறித்துப்பேசும்படி அவரை ஏவவும் தொடங்கினார்கள்.

    >லூக்கா.11

    ”இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை.மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்க வேண்டியதாயிருக்கவில்லை.”
    >(யோவான்.11:24,25)

    II தீமோத்தேயு 4:16 நான் முதல்விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக்கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக.

    Arputharaj Samuel ||ஒவ்வொருவருடைய சுயரூபம் வெளிப்படும் தருணம் போலிருக்கிறது.||

    ஆம். இந்தளவுக்கு ஒரு ஊழியராக இருக்கிறவர் பொய் சொல்ல முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது.

    II கொரிந்தியர் 11:31 என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறதில்லையென்று அறிவார்.

  • Yauwana Janam
    Arputharaj Samuel
    ///யௌவன ஜனமே திடீரென உங்கள் பதில் தன்னிலை விளக்கமாக வரக் காரணம் என்ன? உண்மையை ஒத்துக் கொள்ளுங்கள். அல்லது பேசாமல் சும்மா இருங்கள். தொடர்ந்து பேசி நீங்களே உங்களை பஞ்சராக்கிக் கொள்ளாதிருங்கள். சகோ.சில்சாமாக இருந்தவர் என்ன பேசினார் என்பதையும் பிதாவாகிய தேவன் அறிவார் என்பதை மறந்து விட வேண்டாம். இனிமேல் உங்களுக்கு நான் எந்தப் பதிலையும் தரப் போவதில்லை. ஏனெனில் நீங்கள் என்னுடைய எதிரி அல்ல. சாத்தானே என் எதிரி. அவனுக்கு எதிரான யுத்தத்தில் உங்களுடன் சம்பாஷித்து உங்கள் பெயரை ரிப்பேராக்க விரும்ப வில்லை. என்னை நட்பு பட்டியலில் இருந்தி நீங்கள் நீக்கியதால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது.////

  • Yauwana Janam
    யௌவன ஜனம் தளத்துக்கு எதிராக கை கோர்த்துள்ள எதிரிகள் வெட்கி இலச்சையடைவார்கள்.மீண்டும் சொல்லுகிறோம்,யௌவன ஜனம் என்பது ஒரு தனிநபர் அல்ல,அது ஒரு கூட்டு முயற்சி.

    சங்கீதம் 6:10 என் பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பிச் சடிதியிலே வெட்கப்படுவார்கள்.

    சங்கீதம் 35:26 எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷிக்கிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் இலச்சையாலும் மூடப்படக்கடவர்கள்.

    சங்கீதம் 40:14 என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு இலச்சையடைவார்களாக.

    சங்கீதம் 70:2 என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி நாணுவார்களாக; எனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி இலச்சையடைவார்களாக.

    சங்கீதம் 71:13 என் ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும், எனக்குப் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் நிந்தையாலும் இலச்சையாலும் மூடப்படவுங்கடவர்கள்.

    சங்கீதம் 71:24 எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி இலச்சையடைந்தபடியால், நாள்தோறும் என் நாவு உமது நீதியைக் கொண்டாடும்.

    சங்கீதம் 83:18 அவர்கள் என்றைக்கும் வெட்கிக்கலங்கி, நாணமடைந்து அழிந்துபோவார்களாக.

    சங்கீதம் 129:5 சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கிப் பின்னிட்டுத் திரும்பக்கடவர்கள்.

  • Yauwana Janam
    இத இத இததான் எதிர்பார்த்தேன் என்று கொய்யாலா கூவுகிறாராம்...தள்ளப்பட்ட கல் நான் எடுத்து நிறுத்தினீரே என்று பாடுகிறாராம்,குண்டலினி பாஸ்டர்..!

    வீட்டுக்கு விருந்துக்குக் கூப்பிட்டுட்டு ப்ரொஃபைல் கேட்பவரெல்லாம் சிலருக்கு மகாத்மாவாகத் தெரிகிறதாம். அதை கூப்பிடும் முன்பு அல்லவா யோசித்திருக்கவேண்டும் என்று யோசிக்க மூளை வேண்டுமே...அது எங்கே இருக்கோ..?

    இன்னும் காலம் கெட்டுவிடவில்லை.விஜய் ப்ரசன் போன்ற நண்பர்களின் படங்களைப் போட்டு கேவலமாக சித்தரித்து காமெண்ட் போட்ட இம்மானுவேல் ஆபிரகாம் எனும் நல்ல ஊழியர் அந்த இழிசெயலுக்காக மன்னிப்பு கேட்கட்டும்.ஒப்புரவாகிறோம்..!

    Daniel Das even this guy(chill sam) wrote some thing on my wall and i deleted him because he dose not have profile picture & people don't have profile picture are danger

    பொதுவாக கூச்ச சுபாவம் உள்ளவர்கள் எந்த போட்டோவிலும் தலையைக் காட்டமாட்டார்கள் என்ற சாதாரண விஷயம் கூட தெரியாமல் தானுவேலு என்று பெயர் வைத்திருப்பவரைக் கண்டால் நமக்கு சிரிப்பாக வருகிறது.

    தானுவேல் அவர்களே, நீங்கள் ஒரிஜினல் ஆசாமி என்பதில் சந்தோஷம்... ஆனாலும் கொஞ்சம் கோபக்காரர், அவ்வளவா ஜெபிக்க வராது...எனவே இம்மி போன்ற மோசடியாளர்களுக்கு எதிராக கடினமான கருத்துக்களை எழுதுகிறீர்கள்.

    என்ன நடக்கும் தெரியுமா,உலகத்தானை விட கேவலமான முறையில் உங்க அப்பன் பேரு என்ன உன் பாஸ்டர் பேரு என்ன உன் அட்ரஸ் என்ன என்று கேட்டு அருவருப்பான (அடிவருடி,நெஞ்சை நக்குபவர் என்றெல்லாம்..) காமெண்டுகள் பறக்கும்....பிறகும் உங்க போட்டோவையெல்லாம் இங்க விட்டு வைப்பீர்களா, ப்ரதர்..?

    ஆளுக்கொரு நியாயமாம்...இவிங்கல்லாம் கிஸ்தவங்களாம்...ச்சீய்..!
    5 December at 15:01 ·


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

  • Yauwana Janam
    Immanuel Abraham அவசரப்படாதீங்க ஐயா...ரொம்ப கொட்டிவிட்டால் பிறகு அள்ளுவது கடினமாகும்.நாங்கள் எங்களை ஒருபோதும் யூதர் என்று அழைத்துக்கொள்ளவில்லை.இப்போதைக்கு இங்குள்ள விவரங்களும் விலாசமுமே போதும் என்றெண்ணுகிறோம்.

    ”ஆடமாட்டாதவன் கூடம் கோணல் என்றானாம்..!”

    இப்ப...டியே இஸ்லாமிய விவாதங்களில் தீவிரமாக இருக்கும் உமர் எனும் நண்பரையும் விலாசம் கேட்டு நச்சரிப்பார்கள்,இஸ்லாமிய அடிப்படைவாதிகள்.ஆனால் அவரால் எழுப்பப்பட்ட நியாயமான கேள்விகளுக்கு இதுவரை யாரும் ஒழுங்காக பதிலளித்ததில்லை.மாறாக அவருடைய பிறப்பைக் குறித்தும் இனத்தைக் குறித்தும் (பாலினம்..) தூஷணமான கருத்துக்களால் அர்ச்சிப்பார்கள்.அவர்களுக்கும் அன்பான பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாம் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது நன்கு புரிகிறது.

    எதிராளியை தூஷித்து பெலவீனப்படுத்தும் கேவலமான குணம் கோலியாத்துக்கே உரியது என்று எண்ணுகிறேன். நீங்கள் பெலிஸ்தியனாகவோ அமலேக்கியனாகவோ இருந்தால் உங்கள் அழிவுக்கு நாங்கள் காரணமாக முடியாது,ஐயா.பிரச்சினையை தலைவரிடமே சென்று தீர்த்துக்கொள்ளலாம் என்று கருதுகிறோம்.

    குறிப்பு: தலைவருடைய ”விலாசம்” தெரியுமல்லவா..?

    கொலோசெயர் 2:10 மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.

    நீங்கள் பரிபூரணமுள்ளவராக இருக்கிறீர்களா ஐயா..? உங்களிடமிருந்து நாங்கள் எதை கற்றுக்கொள்ளட்டும்..?
    நீங்கள் இணையத்தில் பேசப்படுபவராக இருக்கவேண்டும் என்ற கேவலமான எண்ணத்தில் தானே மீண்டும் மீண்டும் சிலரை வம்புக்கு இழுக்கிறீர்கள் ?

    http://isakoran.blogspot.com/
    isakoran.blogspot.com
    பீ ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு நாம் கொடுத்த முதல் மறுப்பை இந்த தொடுப்பில் படிக்கலாம்: Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு - 1 முதல் பாகத்தில் பீஜே அவர்கள் "முன்னுரை"யில் எழுதிய விவரங்களுக்கு (பக்கம் 2 மற்றும் 3) நாம் பதிலைக் கண...

  • நான் போட்டக் கமெண்ட் ஏன் நீக்கப்பட்டது என்று யௌவன ஜனம் நிர்வாகி கூறுவாரா? ஏனெனில் அவருடைய ஒரு சிறிய கமெண்ட் நீக்கப்பட்டாலே அதற்காக ரொம்ப வருத்தப்படுவாரே. அதுவுமல்லாமம் பகிரங்கமாகத்தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று சொல்வாரே. ஏன் இந்த மாற்றம்.

  • Yauwana Janam
    மன்னிக்கவும்.எமது காமெண்டுகளை மற்றவர் நீக்கும்வரை இப்போதெல்லாம் காத்திருப்பதில்லை.எங்கே சர்ச்சை வெடிக்கிறதோ உடனே நாம் நம்முடைய காமெண்டுகளை திரும்பப்பெற்றுக்கொள்ளுகிறோம்.

    அவ்வாறே இங்கு இந்த திரியின் நோக்கத்துக்கு மாறாக பதியப்பட்ட நண்பர் அற்புதராஜ் அவர்களின் காமெண்டை நீக்கினோம்.இது நமக்கு தனிப்பட்ட முறையில் வேதனையாக இருந்தாலும் அது குறித்த விரிவானதொரு தனி மடலை நண்பருக்கு அனுப்பியிருக்கிறோம்.

    இந்த நாகரீகத்தை இதுவரை யாரும் கடைபிடிக்கவில்லை என்பதை அவர் நிச்சயம் அறிந்திருப்பார்.பண்பையும் நாகரீகத்தையும் நட்புறவையும் நாம் இயன்றமட்டும் பராமரித்து வருவதை நாம் யாருக்காக இங்கே பணிபுரிகிறோமோ அவர் அறிந்திருப்பதால் சௌகரியமாக உணருகிறோம்.

    கருத்து நீக்கப்பட்டதற்கான வெளிப்படையான காரணம்:
    இங்கே திரு.இம்மானுவேல் ஆபிரகாமின் கருத்து திரு.உமர் அவர்களுக்கெதிரான இஸ்லாமியரின் அணுகுமுறையினை நினைவுபடுத்தியதால் அதனைக் குறிப்பிட்டு திரு.உமர் அவர்களின் பணிகளைப் பாராட்டும் எண்ணத்துடன் அதற்கான தொடுப்பையும் நட்புணர்வுடன் இணைத்திருக்கிறோம்.

    ஆனால் தன்னை தான் அறிந்துணர்ந்துள்ள திரு.அற்புதராஜ் அவர்களோ உமர் அவர்களுடன் யாரும் ஒப்பிடத்தக்கவர்கள் அல்ல என்ற ரீதியில் காமெண்ட் பதித்திருந்தார்.இது இந்த கட்டுரையின் நோக்கத்தை திசைதிருப்புவதாக நாம் கருதியதால் திரு.அற்புதராஜ் அவர்களின் காமெண்டை நீக்கவேண்டியதானது.

    இதுபோன்று தனது செயலுக்காக விளக்கம் தரும் நட்பை அவர் அறிந்திருந்தால் அவர்களுடன் அவர் நட்பு கொள்ளட்டும்.

  • ‎||இந்த நாகரீகத்தை இதுவரை யாரும் கடைபிடிக்கவில்லை என்பதை அவர் நிச்சயம் அறிந்திருப்பார்.பண்பையும் நாகரீகத்தையும் நட்புறவையும் நாம் இயன்றமட்டும் பராமரித்து வருவதை நாம் யாருக்காக இங்கே பணிபுரிகிறோமோ அவர் அறிந்திருப்பதால் சௌகரியமாக உணருகிறோம்.||

    மாற்றுக்கருத்தை நீக்குவது மிகவும் நல்ல நாகரீகம். பண்பு. அதை விட அப்படி மாற்றுக் கருத்தைச் சொல்பவரை நண்பர் பட்டியலில் இருந்து நீக்குவது உன்னதமான பண்பு.

  • Yauwana Janam
    ‎//யௌவன ஜனம் கிறிஸ்தவ சபைகள் மற்றும் உபதேசம் சம்பந்தமான பொது பிரச்சினைகளை மட்டுமே அலசும். இதற்கு இடையூறாக இருக்கும் யாரோடும் நட்பு கொள்ளப்போவதில்லை. “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு “ -எனும் குறள்மொழிக்கேற்ப உபதேச மாறுபாடுள்ளவர்களுடன் போலியாக நட்புகொள்வதை இதுவரை தவிர்த்துவருகிறோம்,இனியும் முயற்சிப்போம்.//

    மாற்றுகருத்து சொன்னதற்காக நாம் நம்மை விலக்கிக்கொள்ளவில்லை.மேற்கண்ட கருத்துக்கு மாறாக அவருடைய செயல்பாடு இருப்பதாலேயே நீக்கவேண்டியதானது.இவ்வாறே கோல்டா அவர்களிடமிருந்தும் நம்மை விலக்கிக்கொண்டுள்ளோம். இதனை நீக்குதல் என்று குறிப்பிடாமல் விலகிக்கொள்ளுதல் என்று குறிப்பிடுவதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.

    ”யௌவன ஜனம்” என்பது ஒரு கூட்டுமுயற்சி என்று இத்தனை வெளிப்படையாக அறிவித்தபிறகும் ”சில்சாம்” எனும் ஒருவரையே மனதிற் கொண்டு கருத்துக்களைத் தூவிவரும் நண்பர்கள் ஒரே நாளில் அவருடைய மின்னஞ்சல் உட்பட அத்தனை செயல்பாடுகளையும் சிலர் தந்திரமாக செயல்பட்டு முடக்கினார்களே அதை அறிவார்களா ? அதை புனலாய்வு செய்வார்களா என்று அறியவிரும்புகிறோம்.அந்த வேதனையான நாட்களை யார் அறிவார் ?

    கடந்த மாதம் 11.ந்தேதி இந்த தனி நபர் யுத்தம் துவங்கியது.இதனை தேர்ந்த தொழில்நுட்ப வல்லுநா ஒருவரே செய்திருக்கமுடியும்.அப்படியானால் சில்சாம் எனும் ஒருவர் மீது அத்தனை விரோதம் பாராட்டும் நபர்கள் மத்தியில் இனியும் எப்படியும் செயல்படமுடியும் ?

    எனவே சில்சாம் அவர்களின் வ்ழிகாட்டுதலின்படி ”யௌவன ஜனம்” என்ற பொதுவான பெயரில் ஒத்த கருத்துடைய நண்பர்களின் உதவியுடனே இனி செய்லபட தீர்மானித்தோம்.இதனால் ”சில்சாம்” என்பவரை ஒழிக்க நினைத்தவர்களின் எண்ணத்தையும் பூர்த்திசெய்திருக்கிறோம்.

    எதிர்த்து நின்று மடிவோமே தவிர, ஓடிப்போகமாட்டோம்.
    Arputharaj Samuel

  • Devamanohar Michael ‎//Yauwana Janam
    ”யௌவன ஜனம்” என்பது ஒரு கூட்டுமுயற்சி //

    கர்த்தர் நாமம் மட்டும் மகிமைபடும்.

  • Yauwana Janam
    Immanuel Abraham //சில்சாம் தனக்கு விலாசத்தை ஏற்படுத்திக் கொண்டபின்பு ஆவிக்குரிய சபைகளின் குறைகள் என்று சொல்லுபவற்றை தைரியமாக சுட்டிக் காட்டட்டும்.//

    ரோட்டில் கிடக்கும் முள்ளை அகற்றுபவர்கள் விலாசம் தரவேண்டிய அவசியமில்லை.நம்முடைய நோக்கம் த...See more
    நான் சமீபத்தில் எழுதிய "கவரிங் கிறிஸ்தவம்" (http://www.facebook.com/note.php?note_id=260012470678321) என்ற கட்டுரையில். பல சுவிசேஷக் கூட்டங்களிலும், சபைகளிலும் பரிசுத்த ஆவியின் அக்கினி என்ற பெயரில் குண்டலினி களமிறக்கப் ப...



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

  • Devamanohar Michael சரியான நடவடிக்கை. கர்த்தரின் அன்பு நம்மை நெருக்கி ஏவுகிறது. கர்த்தர் நாமம் மட்டும் மகிமை படட்டும்.

  • அவர்களை பெரிய ஆட்களாக மாற்ற முயற்சி செய்ய வேண்டாம். பொதுவாக காணப்படும் தவறான உபதேசங்களை எடுத்து விளக்கமளித்தாலே போதும் இவர்கள் யாரின் உபதேசத்தை பின்பற்றுகிறார்கள் என தெரியவரும். இதற்கு நாம் யெகோவா சாட்சிகள், நவயுக அணியினர் இதர துர்உபதேசக் குழுக்களின் கருத்துகள் கொள்கைகள் என்ன என்பதை மற்றவர்களுக்கு விளக்க வேண்டும். இதன்போது மட்டுமே நாம் இவர்களை சிறந்த விதத்தில் வெற்றி கொள்ள முடியும். வெறுமனே அவர்கள் மெசியாவை தேவனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூவிக் கொண்டிருப்பதில் பயனேதும் விளையப்போவதில்லை

  • Yauwana Janam
    ‎// வெறுமனே அவர்கள் மெசியாவை தேவனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூவிக் கொண்டிருப்பதில் பயனேதும் விளையப்போவதில்லை...//

    மந்திரிகள் ராஜ சபையில் கம்பீரமாக அமர்ந்து ஆலோசித்துக் கொண்டிருப்பார்கள்;ஜாமக்காரர்களோ தெருவில் நின்று கூவிக்கொண்டிருப்பார்கள். எதிரிகளை அடையாளங் காட்டும் ஜாமக்காரர்கள் இல்லாது போனால்..?

    சிலர் கொடுப்பது ”தியரி” என்றால் நாங்கள் கொடுப்பது ப்ராக்டிக்கல்...புரிந்தவர்களுக்குப் புரியும்...மற்றவருக்கு எரியும்..!

  • Yauwana Janam, சபாஷ்..! சரியான முடிவு. உங்களைப் போன்ற நபர்களைத்தான் இணையம் வலைவீசித் தேடிக்கொண்டிருந்தது. ஆஹா.., ஓ..ஹோ..., கிடைத்துவிட்டீர்கள்.
    இனி கருத்தாழமிக்க கருத்துக்களுடன் களமாடுவோம். வருக.., வருக...!

  • Yauwana Janam
    ஒரு பாஸ்டருக்கு தான் எத்தனை முகம்..?!

    இங்கே ,

    // Immanuel Abraham · 5 mutual friends
    Peter Samuel S
    Arputharaj Samuel
    Bro Sam G Jacobs
    Eva Prem Kumar
    End Times

    Yauwana Janam, சபாஷ்..! சரியான முடிவு. உங்களைப் போன்ற நபர்களைத்தான் இணையம் வலைவீசித் தேடிக்கொண்டிருந்தது. ஆஹா.., ஓ..ஹோ..., கிடைத்துவிட்டீர்கள்.
    இனி கருத்தாழமிக்க கருத்துக்களுடன் களமாடுவோம். வருக.., வருக...!//

    இவ்வாறு எழுதும் அவர் தனது பக்கத்தில் உவ்வே எழுதுகிறார்,நல்ல நகைச்சுவையும் கிண்டலும் பரியாசமும் நிறைந்த மனிதர் போலும்..!

    http://www.facebook.com/note.php?note_id=196846197065711
    துருபதேசக்காரர்களுக்கு சம்மட்டி கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு சிம்மசொப்பனம்.   -என்ற கோஷங்களுடன் தனக்குத்தானே பரிசுத்தமான பல்வேறு அடைமொழியிட்டு மகிழ்ந்து கொள்கிற சில்லறை சாமான் என்ற சில்சாம் என்பவர். தன்னை யோவான...

  • Yauwana Janam
    மேற்காணும் திரியில் நாம் பதித்துள்ள கருத்துக்களும் அதற்கு பாஸ்டர் அவர்களின் எதிர்வினையும்...

    எங்களுக்கு யோவான் தான் ஐயா...விலாசம்....எருசலேம் வீதிகளில் அடித்து இழுத்துச்செல்லப்ப்பட்ட யூத இளைஞனுக்கு விலாசம் இருந்ததா..?

    நீங்கள் சொன்னபடி உங்கள் சபையை சோதிக்க இளைஞர்களை எந்த நிபந்தனையும் இன்றி கூப்பிடுங்கள்...மற்றவற்றை நேரில் பார்த்துக்கொள்ளுவோம்...பிறகு நாங்களே உங்களைக் கொண்டாடுவோம்...

    மேலும் இளைஞர்களான ப்ரஸன் விஜய் போன்றவர்களுடைய மனதைப் புண்படுத்தி எழுதிய வார்த்தைகளுக்காக மன்னிப்பு கேளுங்கள்...

    இன்னும் அவர்களுடைய தனி போட்டோ வையெல்லாம் போட்டு செய்த விமர்சனங்களுக்காக மன்னிப்பு கேளுங்கள்...

    இதையெல்லாம் செய்யாமல் துணிகரமாக இந்த மாதம் நீங்கள் அப்பத்தைப் பிட்டு அதை ஸ்தோத்திரம் பண்ணி இதைவாங்கி புசியுங்கள் என்று சொல்லி உங்கள் ஜனங்களை சாபத்துக்குட்படுத்தி உங்கள் தலையில் நீங்கள் நெருப்பை வாரி போட்டுக்கொள்ளாதீர்கள் பாஸ்டர்...!

    உங்கள் வெறி தணியவேண்டுமானால் சொல்லுங்கள் உங்கள் ஊருக்கே வருகிறோம்...நீங்கள் விரும்பியதை எங்களுக்கு செய்யுங்கள்...உங்கள் சபையை சோதிக்க குழு அனுப்பச்சொல்லி நீங்களே சவால் விட்டுவிட்டு பிறகு எடுத்த தீர்மானத்தில் உறுதியாக இல்லாமல் அந்தர்பல்டிகளை அடித்து கேலிப்பொருளாகி உங்கள் மேதாவிலாசத்தினால் விலாசம் இழந்து நிற்கிறீர்களே...நீங்களா எம்மைக் குறித்து குறைகூறுவது..? ரொம்ப பெருமை என்று நினைப்போ உங்களுக்கு..?

    Immanuel Abraham என்ன அழகான தத்துவமல்லாம் பேசுகிறது இந்த மிருகம் உனக்கு எந்த ஊரு உங்கப்பா பேரு என்ன? எஸ்ரீஉன்னோட சபை எது? நீ முதல்ல யாருன்னு சொல்ல வேண்டுமென கேட்கிறேன்.

    // யூத இளைஞனுக்கு விலாசம் இருந்ததா..?//

    எந்த யூதனும் தன்னை ஒளித்துக் கொண்டதாக சரித்திரமில்லை. நீ உன்னையே யூதன் என்று அழைத்துக் கொள்கிறாய் என்பதுதான் உன்னுடைய பைத்தியக்காரத்தனத்தின் உச்சக்கட்டம். பைத்தியங்களிடம் பேசி இனி பயனில்லை.
    2 December at 14:22 ·


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

கர்த்தருக்குள் பிரியமான நண்பர்களே,

”யௌவன ஜனம்” எனும் தளத்தின் சார்பாக இங்கே நண்பர்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் ஒரு பக்கம் துவங்கப்பட்டிருக்கிறது. இந்த முயற்சி ஒரு சிறிய மனிதனின் பெரிய கனவாகும். அது என்னவெனில் கிறிஸ்தவத்தை கேலிக்கூத்தாக்கும் பெரிய மனிதர்களுக்கும் சரியான கிறிஸ்தவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை கிறிஸ்து எனும் அரிய பொக்கிஷத்தை அறியவேண்டிய வண்ணமாக அறியாதோர்க்கு அறிவிப்பதே. சரியான கிறிஸ்தவத்தை யாராலும் அழிக்கமுடியாது; போலிகள் சந்தான பரம்பரையாக நிலைத்திடவும் முடியாது. நாம் போலிகளின் முகத்திரையை கிழிக்கும் பணியில் மும்முரமாக இருக்க, இதனால் வருத்தம் கொண்ட- நாகமானின் கஷ்டத்தினால் குஷ்டத்தை சுதந்தரித்த கேயாசி வம்சத்தார் சிலர் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டனர்,ஆனாலும் நாம் மனந்தளராமல் முன்னேறி வருகிறோம். உலகப் பிரகாரமான நட்புக்காகவும் அரட்டைக்காகவும் நாம் இங்கே வரவில்லை. கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் தொங்குசதைகளாகவும் முதிரா பிண்டங்களாகவும் உலாவரும் கழிசடைகளை கழிவறைக்கு அனுப்பவே போராடுகிறோம்.

பலருடைய நினைவு என்னவென்றால் சில்சாம் எனும் யாரோ ஒருவனே இத்தனை குழப்பத்துக்கும் காரணம்,அவனை ஒழித்துவிட்டால் எல்லாம் அமைதியாகிவிடும்,என்பதாக.எனவே சில்சாம் எனும் பெயரை சுற்றியே சர்ச்சைகளை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.சில்சாம் பெயரை முடக்கிவிட்டால் - அவனை அவமானப்படுத்தி- அவனை விவாதப் பொருளாகிவிட்டால் பிரச்சினையின் தீவிரத்தை குறைக்கலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சலித்து வெறுத்துப்போய் ஒதுங்கிவிட நினைத்தாலும், ”எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது.” (2.கொரிந்தியர்.11:28) என்று பவுலடிகள் சொல்லுவதுபோல போனது போகட்டும் , இயன்ற்தை இருக்கும்வரை செய்வோம் என்று மீண்டு வருபவனை மீண்டும் மீண்டும் நெட்டித் தள்ள எத்தனிப்போர் கோலியாத்தைப் போல குப்புற வீழ்ந்து அப்புறப்படுத்தப்படுவார்கள். சில்சாம்  என்பவன் தனிமனிதன் அல்ல,அவன் ஒரு இயக்கம் என்பதை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். சில்சாம் இல்லாவிட்டாலும் இது தொடரும் என்பதை எதிரிகள் உணரவேண்டும்.சில்சாம் யாராக இருந்தால் உனக்கென்ன, உன் நிலைமை சரியாக இருந்தால் அவன் ஏன் உன்னை சீண்டப்போகிறான்? சில்சாம் என்பவன் தன்னுடைய தோழர்களுடன் தெருவில் இறங்கி போராட துணிந்துவிட்டால் போலி கிறிஸ்தவமும் அதன் தலைவர்களும் சந்தி சிரிக்க முச்சந்தியில் நிறுத்தப்படுவார்கள் என்பதை (மேசியாவின்) எதிரிகள் உணரவேண்டும். 

  • ’தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான். அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக் குறித்துச்சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான். அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான். (யோவான்.1:6,7,8)

(மேசியாவின்) எதிரிகளான குள்ளநரிகள் நினைத்தன, குற்றஞ்சொல்லும் யோவானின் தலையைக் கொய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பதாக.ஆனால் ஐயகோ !  நிலைமை அத்தனை மோசமாகிவிட்டதா...அடடா, அவன் தான் சொன்னானே,

  • “யோவான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார்.அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான்.” (யோவான்.1:26,27)

இப்போது தெரிகிறதா,யோவான் தலையைக் கொய்துவிட்டால் மட்டுமே பிரச்சினை தீராது,அதற்கு பின்னர் நடந்ததை கடந்த 2000 வருடங்களில் மனுக்குலம பார்த்துக்கொண்டுதானிருக்கிறது; ஆனாலும் அதுகுறித்து கொஞ்சமும் அறிவும் சொரணையும் இல்லாமல் கொழுத்து சளுக்கு பண்ணுகிறார்கள்,சில்லறை பொறுக்கிகள். இனி சில்சாம் குறித்து யாரும் கவலைப்படவேண்டாம், அவனை உறவாடி கெடுக்க நினைத்தவர்களின் சூழ்ச்சி இனி பலிக்காது.(மேசியாவின்) எதிரிகளின் விருப்பப்படியே அவன் ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டான். எனவே இனி இந்த இயக்கம் மற்ற நண்பர்களின் ஆதரவுடன் தனித்தே இயங்கும். தூஷித்து உணர்ச்சிகளைத் தூண்டி குளிர்காய நினைக்கும் பேடிகளுக்கும் முன்னாள் கேடிகளுக்கும் பதில் சொல்ல இனி யாருமில்லை.

எனவே சில்சாம் சார்பாக யௌவன ஜனம் முன்வைக்கும் கோரிக்கை என்னவென்றால் இனி சில்சாம் குறித்து அறிந்தவரும் அறியாதவ்ரும் சரி அந்த பெயரைக் குறிப்பிட்டு எதுவும் பேசவேண்டாம். சில்சாம் முடக்கப்பட்டதும் ஒரு நன்மைக்கே என்போம்.ஏனெனில் ஒரு தனி மனிதன் சொல்லுவதில் பல்ரும் உள்நோக்கம் கற்பிக்கிறார்கள், பிரச்சினையை திசைதிருப்புகிறார்கள், தனிநபர் தூஷணங்களை அரங்கேற்றுகிறார்கள். இந்த தளத்தின் மாண்பையே குலைக்கும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் பலரது கருத்து சுதந்தரமும் தனிநபர் சுதந்தரமும் பாதிக்கப்பட்டு அச்சுறுத்தல் உண்டாகியிருக்கிறது.

விசால மனதுடனும் நல்ல நோக்கத்துடனும் தங்கள் சொந்த பெயரில் நண்பர்கள் வட்டத்தில் இணைந்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டிருந்த நண்பர்கள் அச்சுறுத்தப்பட்டு சிதறடிக்கப்பட்டுவிட்டார்கள். எப்படியெனில் அவர்கள் தங்கள் சந்தோஷ தினங்களையும் இன்பமான தருணங்களையும் மறக்கமுடியாத நினைவுகளையும் நண்பர்கள் வட்டாரத்தில் பகிர்ந்துகொள்வதற்காக பதிக்கப்பட்ட புகைப்படங்களும் அவர்கள் சம்பந்தமான விவரங்கள் சில்லறை பொறுக்கிகளான முன்னாள் கயவர்களால் களவாடப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்டது. இது அப்பட்டமான விதிமுறை மீறல் ஆகும்.ஒருவர் தனது நண்பர்களின் பார்வைக்காக வைத்த தன்னுடைய படத்தை இன்னொருவர் அனுமதியில்லாமல் எடுத்தாள்வது சைபர் க்ரைம் ஆகும். ஆனால் தான் முன்னாள் ரௌடி என்ற திமிரில் ஒரு ஆள் துணிந்து அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து அதற்கு காமெண்ட் போட்டு ரசிக்க அதற்கும் லைக் போட்டது ஒரு கூட்டம்.

நாமும் இதேபோன்ற விழிப்புணர்வு பணியில் இருப்பதால் நாமும் இதே குற்றத்தை செய்யும் ஆபத்து உண்டு.ஆனால் வித்தியாசம் என்னவென்றால் உபதேசம் சம்பந்தமான ஒரு குறிப்பிட்ட காரியம் தொடர்பாக அன்றி மற்ற சொந்த காரியங்களை நாம் அலசுகிறதில்லை.ஆனால் சில்லறை பொறுக்கிகளோ ஒவ்வொரு ப்ரொஃபைலாக நோண்டியெடுத்து இவர்களை விமர்சிக்கும் ஒவ்வொரு இளைஞனையும் குத்தி கிழித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களெல்லாம் ஒரு இளைஞனையாவது இங்கிருந்து ஆதாயம் செய்யும் பாரம்கொண்டதில்லை.ஆனால் இங்கே வரும் எண்ணற்ற இளைஞர்களை மனமடிவாக்குகிறார்கள்.நீ நன்மை செய்யாதிருந்தாலும் மன்னிப்பு உண்டு,ஆனால் நீ தடுக்கலாகவும் இடறலாகவும் இருந்து தீமைகளின் துணைவனாக கொடியேந்துகிறாய்,உன் நிழலே பகையாகும் நாளில் உன் அந்தரங்க பாவமெல்லாம் உன்னை தொடர்ந்து பிடிக்கும் நாளில் நீ புலம்பினாலும் உனக்கு ஒப்பாரி வைக்கவும் ஆள் இராது போகும்.

இறுதியாக, யௌவன ஜனம் என்பது மாற்றம் விரும்பும் இளைஞர்களின் கூட்டுமுயற்சி என்பதை கருத்தில் கொண்டு பக்திவிருத்தி ஒன்றையே இலக்காகக் கொண்டு கருத்துபரிமாற்றம் எனும் அற்புதமான வாய்ப்பை கண்ணியத்துடன் பயன்படுத்தி மாற்றத்தின் வாசலை அடைய விரைவோமாக. எருசலேம் தேவாலயத்தின் பன்னிரண்டு வாசலை வெவ்வேறு திசைகளிலிருந்து வந்து அடைய தீவிரிப்போரைப் போலவே நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தளத்திலிருந்து போராடுகிறோம்.இதில் யௌவன ஜனம் எனும் அமைப்பு ஆரோக்கிய உபதேசத்துக்காக நிற்க விசேஷமாகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டது என்பதை ஏற்கனவே நண்பர்கள் அறிவார்கள்.இந்த பணியுடன் போலிகளின் முகத்திரையினை கிழித்தெறியும் பணியும் தொடரும். யௌவன ஜனம் கிறிஸ்தவ சபைகள் மற்றும் உபதேசம் சம்பந்தமான பொது பிரச்சினைகளை மட்டுமே அலசும். இதற்கு இடையூறாக இருக்கும் யாரோடும் நட்பு கொள்ளப்போவதில்லை. “முகநக நட்பது நட்பன்று  நெஞ்சத்து அகநக நட்பது நட்பு “ -எனும் குறள்மொழிக்கேற்ப உபதேச மாறுபாடுள்ளவர்களுடன் போலியாக நட்புகொள்வதை இதுவரை தவிர்த்துவருகிறோம்,இனியும் முயற்சிப்போம்.

யௌவன ஜனம் தளத்தின் நிர்வாகி தனது குறிக்கோளாக குறிப்பிடுவது யாதெனில்...

துருபதேசக்காரர்களுக்கு சம்மட்டியாகவும் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும்  இந்த தளம் விளங்கும்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard