Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Arius vs Athanasius திரித்துவ வரலாறு


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Arius vs Athanasius திரித்துவ வரலாறு
Permalink  
 


//அத்நாஷியஸின் விசுவாச அறிக்கையின் துவக்கம் இப்படியாக இருக்கிறது, அதாவது இரட்சிக்கப்பட எல்லாவற்றுக்கும் முன் ஒருவன் கத்தோலிக்க விசுவாசம் உடையவனாக இருக்க வேண்டுமாம்!! இந்த ஒரு விசுவாசத்தை முழுமையாகவும், பரிசுத்தமாகவும் கடைப்பிடிப்பவனை தவிர, சந்தேகத்திற்கு இடமில்லாமல் மற்றவர்கள் அனைவரும் நித்தியத்திற்கும் அழிந்துபோவார்களாம்!! இந்த விசுவாசத்தை கொண்டு வந்த அத்நாஷியஸின் வார்த்தைகளை இன்று ஆவி சபை என்று சொல்லும் பெந்தகோஸ்தே சபையினர் தாராளமாக பின்பற்றுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை!!

அது என்ன கத்தோலிக்க விசுவாசம்??

Baptism, Confirmation, Confession, Eucharist, Marriage, Holy Orders, Annointing of the Sick, Mass, Sin, Hell, Purgatory, Death, Divorce / Annulments,  Contraception / Abortion, Mary, The Pope

குழந்தை ஞாஸ்நானம், உறுதிப்பூசுதல், சாமியாரிடம் பாவ சங்கீர்த்தனம், நற்கருனை ஆராதனை, திருமன சடங்கு, (ரோமின்) புனித கட்டளைகள், நோயில் பூசுதல் (அவஸ்தை கொடுப்பது என்பார்கள்), திருப்பலி, பாவம், நரகம் (எரி நரகம்), உத்தரிக்கிரஸ்தலம், மரணம், விவாகரத்து, கருத்தடை / கருகலைப்பு, மரியாள் / புனிதர்கள், போப் ஆண்டவர்!!

ஒருவன் இரட்சிக்கப்பட மேலே உள்ள இத்துனை கத்தோலிக்க விசுவாசம் வேண்டும் என்று அத்நாஷியஸ் எழுதியதை இன்றைய பெந்தகோஸ்தே சபைகள் கூட பின்பற்றுகிறார்கள் என்பதை கேட்பதற்கு சற்று வருத்தமாக தான் இருக்கிறது!! எனக்கு இரட்சிப்புக்கு வேதம் சொல்லிக்கொடுப்பது,//

 

எப்படி கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் உங்களால் புளுக முடிகிறது நண்பரே? இதுதான் உங்கள் கிறிஸ்தவ விசுவாசமா? உண்மையிலே எனக்கு உங்களை நினைக்கும் பொது வெட்கமாக இருக்கிறது. கதோலிக் (Catholic ) என்ற வார்த்தையின் அர்த்தம் பொதுவான என்று உங்களுக்கும் தெரியும், கொஞ்சம் விஷயம் தெரிந்த எல்லாருக்கும் தெரியும் இருந்தும் ஏன் இப்படி ரோமன் கத்தொலிசத்தையும்,  ஆதி சபையின் பொதுவான விசுவாச அறிக்கையையும் குழப்பி வெட்கமில்லாமல் புரட்ட முடிகிறது? பெரேயன் என்று பெயரில் இருந்தால் போதாது நண்பரே, சற்றேனும் பெயருக்கு ஏற்ப நடக்க முயற்சியாவது செய்யுங்கள்! ஏசாயா கண்ட யேகோவா யார், ஆபிரகாம் விட்டுக்கு வந்த யேகோவா யார்? மோசேக்கு தரிசனமான தேவனாகிய கர்த்தர் யார் என்று பெரேயர்களைப்போல ஆராய்ந்தீர்களா? அவர்கள் ஆராய்ச்சி செய்து நற் குணசாலிகள் என்று பெயர்பெற்றர்கள். நீங்கள் இப்படி எழுதி அந்த பெயரை அசிங்கப்படுத்தாதீர்கள்!! நீங்கள் மறைத்து விட்ட மற்ற பகுதியையும் வெளியிடுகிறேன்.

 

 

...And the catholic faith is this:


3

And the catholic (universal) faith is this:

That we worship one God in Trinity,

and Trinity in Unity;

 

4
Neither confounding the Persons,

nor dividing the Substance.

 

5
For there is one Person of the Father,

another of the Son,
and another of the Holy Spirit.


6
But the Godhead of the Father,

of the Son,

and of the Holy Spirit,

is all one,
the glory equal,

the majesty coeternal.

 

7
Such as the Father is,

such is the Son,
and such is the Holy Spirit.

 

8
The Father uncreate,

the Son uncreate,
and the Holy Spirit uncreate.

 

9

The Father incomprehensible,

the Son incomprehensible,
and the Holy Spirit incomprehensible.

 

10
The Father eternal,

the Son eternal,
and the Holy Spirit eternal.

 

11
And yet they are not three eternals,
but one eternal.

 

12
As also there are not three uncreated

 nor three incomprehensibles,

but one uncreated, and one incomprehensible.

 

13
So likewise the Father is almighty,

the Son almighty,
and the Holy Spirit almighty.

 

14
And yet they are not three almighties,
but one almighty.

 

15
So the Father is God,

the Son is God,
and the Holy Spirit is God;

 

16
And yet they are not three Gods,
but one God.

 

17
So likewise the Father is Lord,

the Son Lord,
and the Holy Spirit Lord;

 

18
And yet not three Lords,
but one Lord.

 

19
For like as we are compelled by the Christian verity

to acknowledge every Person by himself to be God and Lord;

 

20
so we are forbidden by the catholic (universal) religion to say,

there are three Gods, or three Lords.

 

21
The Father is made of none,
neither created, nor begotten.

 

22
The Son is of the Father alone;
not made, nor created, but begotten.

 

23
The Holy Spirit is of the Father and of the Son;
neither made, nor created, nor begotten, but proceeding.

 

24
So there is one Father, not three Fathers;

one Son, not three Sons;
one Holy Spirit, not three Holy Spirits.

 

25
And in this Trinity none is afore, or after another;

none is greater, or less than another.

 

26
But the whole three Persons are coeternal and coequal.

27

So that in all things, as aforesaid,
the Unity in Trinity and the Trinity in Unity is to be worshipped.

 

28
He therefore that will be saved
must thus think of the Trinity.

29
Furthermore, it is necessary to everlasting salvation
that he also believe rightly the incarnation of

our Lord Jesus Christ.

 

30

For the right faith is that we believe and confess

that our Lord Jesus Christ,

the Son of God,

is God and man.

 

31
God, of the substance of the Father,

begotten before the worlds;
and man, of the substance of His mother,

born in the world.

 

32
Perfect God and perfect Man,
of a reasonable soul and human flesh subsisting.

 

33
Equal to the Father, as touching His Godhead,
and inferior to the Father, as touching His Manhood.

 

34
Who, although He is God and Man,
yet He is not two, but one Christ.

 

35
One, not by conversion of the Godhead into flesh,
but by taking of that manhood into God.

 

36

One altogether,

 not by confusion of substance,
but by unity of Person.

 

37
For as the reasonable soul and flesh is one man,
so God and man is one Christ;

 

38
Who suffered for our salvation,

descended into hell, *
rose again the third day from the dead;

 

39
He ascended into heaven,

He sitteth on the right hand of the Father, God, Almighty;

 

40
from thence He shall come to judge the quick and the dead.

 

41
At whose coming all men shall rise again with their bodies;

 

42
and shall give account of their own works.

 

43
And they that have done good shall go into life everlasting
and they that have done evil into everlasting fire.

 

44
This is the catholic (universal) faith,

which except a man believe faithfully
he cannot be saved.

 

Amen.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

ஏரியஸுக்கும் ஏரியனுக்குமிடையிலான வேறுபாட்டையும் காலத்தையும் உபதேசத்தையும் அதன் விளைவுகளையும் விளக்கினால் உதவியாக இருக்கும்; ஏனெனில் பலருக்கும் ஏரியஸுக்கும் ஏரியனுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றெண்ணுகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

COUNCIL_OF_NICEA.%20new.jpg

இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் ஒரு தெய்வக் கொள்கையுடையோராய் (Monotheistic) இருந்தமையினால் கிறிஸ்தவ சபைக்குள்ளும் இக்கருத்தின் முக்கியத்துவத்தினை கொண்டு வந்தனர். இதன் காரணமாக தேவனின் பன்மை நிலையை முற்றிலும் மறுதலிப்பவர்களாகவும் குமாரனினதும், தூயஆவியினதும் தேவத்துவத்தை சரியான விதத்தில் ஏற்ற்றுக் கொள்ளாதவர்களாகவுமே இருந்தனர்

ஆதிச்சபை பிதாக்கள் திரித்துவத்தைப் பற்றிய சரியான கருத்தினைக் கொண்டிருக்கவில்லை. சிலர் ஆள்தன்மையற்றிருந்த தெய்வீக வார்த்தை (Logos) சிருஷ்டிப்பின்போதே ஆள்தத்துவமுடைய நபராகியது என்று கருதினர். வேறு சிலர் குமரன் ஆள்தத்துவம் உடையவராகவும், பிதாவைப் போலவே நித்தியராகவும்   தெய்வீகத் தன்மையுடையவராய் இருந்தார் என கருதிய போதிலும் பிதாவைவிட சற்று தாழ்மையானவராகவே அவரைக் கருதினர். அக்கால கட்டத்தில் தூயஆவியனவரைப் பற்றிய எண்ணம் இறையியல் கருத்துப் பரிமாறல்களில் இடம்பெறவில்லை. தூயஆவியானவர் விசுவாசிகளின் இருதயத்தில் இரட்சிப்பு சம்பந்தமாக கிரியை செய்பவர் என்று மட்டுமே கருதினர். சிலர் தூயாவியை பிதாவுக்கு மட்டுமல்ல குமாரனுக்கும் கூட தாழ்வானதொன்றாகவே கருதினர். 

“மூவொருமை“ எனும் பொருளுடைய திரித்துவம் எனும் சொல்லை இறையியலில் புகுத்தி திரித்துவ உபதேசத்தை நெறிப்படுத்த ஓரளவு முயன்றவ Tertullian என்பவர்.  கூட திரித்துவ உபதேசத்தை சரியான முறையில் விளக்கவில்லை. இவரே முதன் முதலில் தேவனில் மூன்று ஆள்த்த்துவங்கள் உள்ளதென்றும் அவர்களின் ஐக்கியத்தைப் பற்றியும் வாதிட்டவர்

Tertullian உடைய காலத்தில் Monarchianism எனும் உபதேசம் தேவனின் ஒருமைத் தன்மையை வலியுறுத்தியதோடு குமாரனுக்கும் உண்மையான தேவத்துவத்தை கொடுத்த்து. எனினும் மூவொருமை என அர்த்தந்தரும் திரித்துவத்தின் உண்மையான கருத்தை இவ்வுபதேசம் மறுதலிப்பதாயிருந்தது. Tertullian உம் Hippolytus ம் இவ்வுபதேசத்தை பிழையென நிருபித்தனர். இவர்கள் மேலைத்தேய சபைகளில் இப்பிழையான உபதேசம் பரவுவதைத் தடுத்தனர். Origen என்பார் கீழைத்தேய சபைகளில் இவ்வுபதேசத்திற்கெதிராக வாதட்டார். இவர்கள் அப்போஸ்லருடைய விசுவாசப் பிரமாணத்தில் குறிப்பிட்டபடி திரித்துவ உபதேசத்தைப் போதித்தனர். 

Origen உடைய திரித்துவ உபதேசம் திருப்திகரமானதொன்றாகயில்லை. பிதாவும் குமாரனும் தேவத்தன்மை பொருந்திய சமமானவர்கள் என்பதை அவர் சரியாக விளக்கவில்லை. எனினும் நித்திய பரம்பரை (Eternal Generation) எனும் கருத்தினடிப்படையில் பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலுள்ள உறவை முதன் முதலில் விளக்கியவர் இவரே. (Divine Essence) பிதாவைவிட குமாரன் தாழ்வானவர் என்பதையே அவர் நித்திய ஜனனம் என்பதன் மூலம் விளக்கினார். இரண்டாந்தர தெய்வீக உயிர் அணுவையே பிதா குமாரனுக்கு கொடுத்தார். இதனால் குமாரன் ஒர கடவுள் (a God)   என கூறப்படலாமே தவிர கடவுள் (The God)  என கூறமுடியாது அவர் சில சமயங்களில் குமாரனை இரண்டாம் கடவுள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதுவே Origen இன் உபதேசத்தின் மிகப்பெரிய பிழையாகவும் பிற்கால கள்ளப்போதகமான  ஏரியனிஸம் தோன்ற காரணமாயமைந்த்து. மேலும் தூயஆவி குமாரனிலும் தாழ்வானதாக கருதியது மட்டுமல்ல குமாரனால் சிருஷ்டிக்கப்பட்டதொன்றாகவும் கருதினர். 

திருத்துவ உபதேசத்தைப் பற்றிய மிகப்பெரிய தர்க்கம் கி.பி. நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்த Arius உடன் சம்பந்தப்பட்டது. ஏரியஸ் என்ற குரு கி.பி.310ஆம் ஆண்டளவில் அலெக்சாந்திரியாவில் வாழ்ந்தவர்  இவர் ஒரு தெய்வ கொள்கையை (Monotheism) ஆதரித்தவராதலால் தேவத்துவம் ஒரு நித்திய ஆளில் தான் அடங்கியிருக்கிறது என்று வாதிட்டார். தேவனோடிருந்த வார்த்தை (Logos) தெய்வீக வல்லமையே (Divine energy)  என தெரிவித்தார். இவ்வல்லமையே கடைசியில் மாம்சமாகியது என போதித்தார்.  இவரது கருத்துப்படி குமாரனுக்கு ஆரம்பம் ஒன்றுண்டு. அவர் பிதாவினால் ஜெனிப்பிக்கப்பட்டவர் என்று ஏரியஸ் கூறினாலும் அதன் அர்த்தம் குமாரன் சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதேயாகும். குமாரன் உலக சிருஷ்டிப்புக்கு முன் ஒன்றுமில்லாததிலிருந்து சிருஷ்டிக்கப்பட்டவர் (Created out nothing) எனவே அவர் நித்தியராகவும் தெய்வீகத் தன்மை உடையவராகவும் இருக்க முடியாது என வாதிட்டார். கிறிஸ்து இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்தும் நடுநிலையானவர் மட்டுமே எனவும் எடுத்துரைத்தார் மேலும், அவர் திரித்துவத்தைப் பற்றியும் தவறான கருத்துக்களை முன்வைத்தார் அவரின் மறை எதிர்ப்புக் கருத்துக்களின்படி திரித்துவம் அறிவுசார் கொள்கை மட்டுமே.

 

குமாரனே முதலாவதாக சிருஷ்டிக்கபட்ட மிகப்பெரிய வஸ்து (being) அவர் சிருஷ்டிக்கப்பட்டதன் காரணம் இவரினூடாக உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்காகவே. எனவே அவர் மாற்றமடைபவர். (Mutable) எனவே இவருடைய புண்ணியங்களை தேவன் முன்னறிந்தமையால் (foreseen Merits)  தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டு எதிர்கால மகிமையின் அடிப்படையில் தேவனுடைய குமாரன் என்ற அழைக்கப்படுகின்றார். அவர் குமாரனாக சுவீகரிக்கப்பட்டமையால் (adopted) வணக்கத்திற்குரியவராக நியமிக்கப்பட்டுள்ளார் பிதாவை விட குமாரன் தாழ்வானவர் என்பது போல் தென்படும் வேதவசனங்களை ஏரியஸ் தன்னுடைய உபதேசத்திற்கு ஆதாரமாக உபயோகித்தார். (நீதி 8:22, மத் 28:18, மாற் 13:32,  லூக் 18:19,யோவான் 5:19, 14:28, 1 கொரி 15:28)

ஏரியஸ் இக்கருத்தை ஒவ்வொரு இடங்களிலும் போதித்தாரே ஒழிய அதை அவர் எழுத்தாக்கம் செய்யவில்லை. இருப்பினும் பிற்காலத்தில் இவை நூல் வடிவம் பெற்றதோடு அவற்றில் மிஞ்சியிருப்பது தலேய்ய (Thaleia) என்ற பெயரில் அறிமுகமாகும் பாடல்களின் சில பகுதிகள் மட்டுமே. மகனின் நீதியின் நிமித்தம் இறைமகன் என்ற பெயர் அவருக்கு அளிக்கப்பட்டது எனவும், அவர் திரித்துவத்தின் இரண்டாம் ஆளாயினும் தந்தையைப் போல் முடிவில்லாதவர் அல்லர் எனவும் இப்பாடலில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறான கருத்துக்கள் கிறிஸ்தவ விசுவாச உண்மைகளை சீர்குலைக்கச் செய்தது. கிறிஸ்துவின் இறைத்துவம் மறுக்கப்பட்டால் அவர் உலகிற்குப் பெற்றுக்கொடுத்த விடுதலை அர்த்தமற்றுப் போய்விடும். எனவே, தொடக்கத்திலிருந்தே அலெக்சாந்திரிய ஆயர் தூய சிறில் ஏரியசின் கொள்கைகளைப் பேதகங்கள் எனக்கூறி மறுத்து வந்தார் எனினும், நிக்கமேடியாவின் ஆயரான எயுசேபியுசின் உதவியோடு இப்பேதகம் மேலைத்தேயங்களில் பரவியது. 

இவர் குமாரனுடைய உண்மையான தெய்வத்துவத்தையும் நித்திய ஜனனத்தையும் (Eternal Generation)  வலியுறுத்தியவர். எனினும் அலெக்சாந்திரியாவின் Archdeacon   Athanasius  என்பவரே ஏரியஸின் கொள்கைகளின் எதிரியாகத் திகழ்ந்தார். இவர் உறுதியான எதற்கும் வளைந்து கொடுக்காத, சத்தியத்திற்காக போராடிய இறையியலாளர். 

 

Athanasius%20and%20arius%20new.jpg

கி.பி. 295இல் அலெக்சாந்திரியாவில் பிறந்த இவரது பெற்றோர் கிறிஸ்தவர்களாவர் முதலில் கிறிஸ்தவக் கல்வி கிடைக்காதபோதும் சிறுவயதிலிருந்தே துறவற வாழ்வில் பற்றுக் கொண்டிருந்தார் எனினும் கற்ற அறிவுள்ள ஒருவராக இருந்தமையால் கி.பி. 325இல் அலெக்சாந்திரியாவின் ஆயரின் செயலாளராக நியமிக்கப்பட்டார் இப்பதவியில் இருந்தமையால் நிசேயா திருச்சங்கத்தில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இத் திருச்சங்கத்தில் ஆரிய பேதகத்துக்கு எதிராக இவரால் பேசுவதற்கு முடிந்தது. இவருடைய வாழ்க்கையில் அதிக காலத்தை ஆரிய பேதகத்துக்குக்கு எதிராகப் போராடியதால் அத்தனாசிஸ் பற்றிக் கூறுகையில் ஆரிய பேதகத்தை மறக்க முடியாது. கி.பி. 328இல் அலெக்சாந்திரியாவின் ஆயருக்குப் பின் அத்தனாசிஸ் புதிய ஆயராக நியமனம் பெற்றார். பொதுநிலையின், துறவறத்தோர் என இருபாலாரும் விரும்பியதால் அத்தனாசிஸ் எகிப்து, லிபியா உள்ளடக்கப்பட்ட பரந்த மாகாணத்துக்கு பேராயராக நியமனம் பெற்றார் அன்று தொடக்கம் ஏழு வருடங்கள் தனது பிரதேசத்தில் பயணம் செய்து மக்களைத் தைரியப்படுத்திப் பாரிய பணியாற்றினார். அடிப்படைவாதிகளின் பயமுறுத்தலிலிருந்து பிரதேசத்தைக் காப்பாற்றுவதே அவரது ஒரே நோக்கமாயிருந்தது. 

 

„துறவற மடங்களில் வாழ்ந்த காலத்தில் இவர் விசேட செயலில் ஈடுபட்டார். அதாவது, அனேக நூல்களை எழுதி திருச்சபைக்கு வழங்கினார். இவை மிகவும் எளிய கட்டுரைகளாகும். இவற்றில் அனேகமாக ஏரியஸின் தத்துவத்திற்கு எதிராக எழுதப்பட்டவையாகும். இந்நூல்களில் திருவிவிலியத்துக்கு எழுதப்பட்ட அரும்பத விளக்க நூல் (அரும்பத விளக்கம்) எஞ்சியிருந்தது. திருவிவிலியத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 27 நூல்களை உள்ளடங்கியதாக முதன்முதலில் வெளியிட்டவர; புனித அத்தனாசிஸ் ஆவார். இவருடைய நூல்களின் விசேட தன்மையானது, எப்பொழுதும் உட்பொருளுடன் முன்வைப்பதாகும். இவர் திருவிவிலியத்தை கிறிஸ்துவை மையமாகக் கொண்ட தொனிப்பொருளில் அறிமுகப்படுத்துகிறார் 

கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் என்று கூறுவது தேவனுடன் உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும் என்பதை மறுதலிப்பதாக உள்ளது என வாதிட்டார். இவர் தேவத்துவத்தின் ஒருமைத்துவத்தை வலியுறுத்திய அதேசமயம் அதன் மூவொருமை (Tri-unity) திரித்துவதிற்கு எவ்வித முரண்பாடும் ஏற்படாவண்ணம் தனது இறையியல் கருத்தை வெளியிட்டார். பிதாவும், குமாரனும் தெய்வீக தன்மையுடையவர்கள் எனினும் தேவனில் பிரிவுகளோ அல்லது வேறுபாடுகளோ இல்லை இதனால் இரண்டாம் கடவுள் (Theos Devteros) என்று குமாரனைக் குறிப்பிடுவது தவறு எனத் தெரிவித்தார். தேவனுடைய ஒருமைத் தன்மையை முக்கியப்படுத்திய அதேவேளையில் அவர்களில் மூன்று நபர்கள் (Three hypostases) இருப்பதையும் கண்டுகொண்டார். குமாரன் சிருஷ்டிக்கப்பட்ட ஆரம்ப்மொன்றையுடையவர் என்பதை ஏற்றுக்கொள்ளாத அவர் குமாரனும் ஆரம்பங்களற்ற நித்தியமானவர் என தெரிவித்தார். குமாரன் எதையும் சார்ந்திராதவரும், தாமாகவே இருப்பவரும் என போதித்தார். மூன்று ஆள்கள் அல்லது ஆள்தத்துவங்கள் தேவனில் இருப்பதென்பது எவ்வித்த்திலும் தேவனில் பிரிவுகள் இருப்பதாக கருதப்படக் கூடாதென வாதிட்ட அவர் மூன்று கடவுள்கள் தேவத்துவத்தில் இல்லை என்று வாதிட்டார். மூவரும் சாரத்தில் (Essence) ஒன்றானவர்கள் என அவர் கூறினார். அத்தனாசிஸின் இறையியல் அடிப்படையான நம்பிக்கையே திரித்துவத்தின் உபதேசத்திற்காக போராட அவரை ஏவியது. தேவனுடனான உறவை அல்லது ஐக்கியத்தை ஏற்படுத்திக் கொள்வதே இரட்சிப்பின் அத்திவாரம் என அவர் நம்பினார். எனவே எந்தவொரு உயிரினமும் அல்ல. தேவனால் மட்டுமே நமக்கு இந்த உறவை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என விசுவாசித்தார். எனவே கிறிஸ்து தேவனாக இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என கருதிய அவர், குமாரனுக்கு முழுமையான வேதத்துவத்தை கொடுக்காத ஏரியசின் கொள்கைகளை எதிர்த்தார். 

ஏரியஸ் இற்கும் அத்தனாசின் குழுவினருக்குமிடையே வாக்குவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் Caesarea எனுமிடத்தைச் சேர்ந்த Evsetive   எனும் சபை சரித்திர ஆசிரியரின் தலைமையில் மூன்றாவது குழுவொன்று இரண்டிற்கும் நடுவில் வந்தது. அக்குழுவிவே பெரும்பான்மையினரைக் கொண்டிருந்தது. இது Origenist Portly என்று அழைக்கப்பட்டது. காரணம் Origen உடைய நியதிகளில் இக்குழு ஊக்கப்படுத்தப்பட்டிருந்தது. 

                                                                                                      (வளரும்)



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

«First  <  1 2 | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard