Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
RE: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


தளத்தில் வாங்குகிற வசவு போதாதுஎன்று சும்மா உங்களை தொலைபேசியிலும் அழைத்து வசவு வாங்க நான் என்ன முட்டாளா? ஒழுங்கு செயப்பட்ட (Moderated and Recorded ) ஒரு உருப்படியான விவாதமாக அது இருக்க வேண்டும்.
 
"நித்திய ஆக்கினை" என்றால் என்ன? அது என்ன "நித்தியம்" எது "நித்தியம்" என்று விளக்க முடியுமா?
 
 
கிழே காண்கிற வசனங்களுக்கு உங்களுடைய புரிந்து கொள்ளுதல் என்ன?
அது என்ன சரிரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்கள்?
 
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (மத்தேயு 10:28 )
 
தேவனுடைய கோபம் நிலை நிற்கும் என்றால் என்ன?
 
குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார் (யோவான் 3:36)
 
என்னது உயிரோடு இருந்து கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் மரியாமலே இருப்பார்களா?
 
உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (யோவான் 11:26)
 
சாத்தான் மட்டுமே நரகம் போவான் என்றீர்கள் இங்கே மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் நரகத்திற்கு போவர்கள் என்று வசனம் நேரடியாக சொல்லுகிறது!
 
அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள். வெளி (19:20)
 
மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். வெளி (20:10)

 
மாம்சமான யாவரும் என்பது எல்லோரும் என்றால் பாதகம் செய்த மனுஷர் யார்? (கேட்டு, கேட்டு அலுத்து போய்ட்டேன்யா!)
 
அப்பொழுது மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய அக்கினி அவியாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருப்பார்கள். (ஏசாயா 66:23 -24)
 
 
ஆயிரவருட அரசாட்சியின் முடிவில் எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்றால் கிழே சொல்லப்பட்ட கூட்டம் யார்?
 
அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும். அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது. (வெளி 20:7-9)
 
 
இவைகளுக்கு எல்லாம் செத்து போன ரசல் பதில் எழுதி வைத்து விட்டு செத்துபோனானா? அல்லது அவன் கல்லறையில் தான் போய் கேட்க்க வேண்டுமா?
 
நண்பர் Soul Solution எல்லாரையும் நாய், பன்றி என்று ஏசுவதற்கு பதிலாக இது மாதிரி நேரடியான வசனகளுக்கு பதில் கொடுக்கலாமே! எப்படியும் இதற்க்கு நேரடி பதில் வராது உங்களுக்கு புரியாது போன்ற வெட்டி வாய்ஜாலம் தான் வரும்




__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink Closed

கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் தொடுப்பில் கேட்கப்பட்ட கேள்விகள் இயேசுவை தொழமறுக்கும் ஒரு நபரால் கேட்கப்பட்டவை என எண்ணுகிறேன். எனவே அதை இங்கே தருகிறேன்.

http://www.tamilchristiannet.com/forum/topics/5221505:Topic:32716?commentId=5221505%3AComment%3A38618

மத் 7:6; உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு. 7:8; 7:9;

மத் 4:10 உன் தேவனாகிய யேகோவாவையே பணிந்து கொண்டு ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக.

யோவா 4:21-23 “ பிதாவை எங்கும் தொழுது கொள்ளும் காலம் வரும் ”

 

Replies to This Discussion

Delete
இயேசுவின் இரத்தத்தை நம்மில் பார்க்கும் பிதா இயேசுவையே நம்மில் பார்க்கிறார். நாம் இயேசுவின் நாமத்தில் எதைக் கேட்டாலும் இயேசு பிதாவிடம் கேட்பதாகவே அர்த்தமாகிறது. இயேசுவுக்குள் பிதா இருப்பதால் இயேசுவை தொழுதுகொள்ளலாம். (நமக்குள் இயேசு இருப்பதால் நம்மை தொழலாமா என கேட்கக்கூடாது!!!!).
ஐயா வசனம் இல்லாமல் சுயகருத்தை சொல்லலாமா?

www.bibleloversassembly.com

சகோதரரே,

தாங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்று புரியவில்லை.சற்று தெளிவாக கேள்வி கேட்கவும்.


தாங்கள் இயேசுவை வணங்க கூடாது என்று கூறுபவர்களானால் இதோ பதில்.

யோவான் 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.


தாங்கள் வேறு ஏதாவது கூற விளைந்தீர்கள் என்றால், தயவு செய்து முழுதாக கூறவும்.

 

Delete

அன்பு சகோதரரே, இங்கே சில வசன ஆதாரங்களை கொடுத்துள்ளேன். ஆனால் இயேசுவை பிதாவிடமிருந்த்து பிரித்து ஆராதிக்கவோ அல்லது வேண்டிக்கொள்ளவோ வசன ஆதாரமில்லை

ரோமர் 9:5 அவரே (கிறிஸ்துவே) சர்வத்துக்கும் மேலான தேவன்
1 கொரி 1:2 கிறிஸ்துவின் நாமத்தை தொழுதுகொள்கிறவன்

யோவான் 17: 21,22 பிதாவும் இயேசுவும் ஒன்றாய்

 

கீழே உள்ள‌ வ‌ச‌னங்க‌ள் இயேசுவுக்குள் நாம் ஒன்றாய் இருக்கிறோம் என்ப‌தை குறிக்கும்.

பிலிப் 3:9 கிறிஸ்துவுக்குள் இருக்கிற‌
கலாத் 3:27 கிறிஸ்துவை தரித்துக்
ரோமர் 12:5 கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரம்
கலாத் 2:20 கிறிஸ்துவே பிழைத்திருக்
1 கொரி 10:16 சரீரத்தின் ஐக்கியம்

மேலும் சில ஆதாரங்கள்

கொலொசெ 2:9 தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம்
யோவான் 8: 6 நானும் பிதாவுமாக‌
யோவான் 14:10, 14:20 நான் பிதாவிலும் பிதா என்னிலும்
யோவான் 5:18 தேவனுக்கு சமம்
பிலிப் 2:6 தேவனுடைய ரூபம்
கொலோ 1: 15 தேவனுடைய தற்சுரூபமும்

Peter Samuel S. Permalink Reply by Peter Samuel S. on May 7, 2011 at 9:53am

Delete
எபிரேயர் 1:6 தேவ‌தூதர்கள் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள்
Heb 1: 6. Very good verse. But Jehovah's witnesses could not see the truth. They are not yet saved. That is why.
Delete
Jehovah's witnesses were not Christians.
Delete
கிறிஸ்துவை உடையவனே கிறிஸ்தவன். கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று  ஏற்றுக்கொள்ளாதவன் அந்திகிறிஸ்து (1யோவான் 2:18, 2:22,23, 4:3, 2யோவான் 1:7,8,9,10)

மத்தேயு 7 அதிகாரம்

21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

Delete

அன்பு சகோதரரே ஒரு வசனத்தை பார்க்குமுன் அது எதற்காக எழுதப்பட்டது என்று முன்னும் பின்னும் பார்க்க வேண்டும் என்ற அடிப்படை கூட தெரியாமல் இருக்கிறீர்களே!!! நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வசனத்திற்கு முந்திய வசனம் கனி கொடுப்பதைப் பற்றியது. நாம் கனி கொடுப்பதே பிதாவின் சித்தம் என இயேசு இங்கே கூறியுள்ளார். கனி கொடுக்காமல் வெறுமனே கர்த்தாவே என்று கூப்பிடுவதில் அர்த்தமில்லை என்பது தான் இந்த வசனத்தின் அர்த்தம்.

யோவான் 15:5 ல் படித்ததில்லையா? என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது என்ற வசனத்தை? இயேசுவோடு இணைந்து கனி கொடுக்காமல் வெறுமனே கர்த்தாவே என்று கூப்பிட்டால் நான் உங்களை அறியேன் என்று இயேசு கூறுவார்.

1 யோவான் 2:23,24; 5:10,20; (2 பேதுரு 1:17 தான் தேவன் குமாரனைக் குறித்து கொடுத்த சாட்சி) குமாரனை அறிக்கையிடாதவன் தான் அக்கிரமசெய்கைக்காரன்.

I யோவான் 2 அதிகாரம் 22. இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

பிதாவையும் +குமாரனையும் மறுதலிக்கிறவனே = அந்திக்கிறிஸ்து.

Reply by abraham deva sahayam 10 hours ago

Delete

அப்படியாயின் இயேசுவை தொழக்கூடாது என சொல்கிறீர்களா? ஆயின் தங்களோடு விவாதிப்பதில் அர்த்தமில்லை என்றே கருதுகிறேன்.

எனக்காக தம்முடைய பரலோக மகிமையை துறந்து தேவனுக்கு சமமாயிருப்பதைக்கூட பெரிதாக எண்ணாமல் அவமானங்களையும் நிந்தைகளயையும் சகிக்க பூமியில் வந்து ஜீவனையும் கொடுத்து ........ தம்முடைய மகிமையில் என்னை சேர்த்துக்கொள்ள இத்தனை தியாகம் செய்தவரை நான் என்ன செய்யவேண்டும் என்கிறீர்கள்?

உலக தலைவர்களிடமிருந்து நன்மை பெறுகிறவர்கள் கூட என்ன செய்கிறார்கள் தெரியுமா? காலில் விழுந்து, அவர்கள் புகழ் பாடி .... எப்படியெல்லாம் நன்றியை வெளிப்படுத்தி கொண்டாடுகிறார்கள்.

உங்களிடம் சில கேள்விகள்:‍
1)ஆராதனை என்றால் என்ன என்று எண்ணுகிறீர்கள்?
2)தொழுதுகொள்ளுதல் என்றால் என்ன?
3)பிதாவுக்கு செலுத்தும் எதை இயேசுவுக்கு கொடுக்கக்கூடாது என்கிறீர்கள் (நன்றியையா, மகிமையையா, மரியாதையையா, அன்பையா, புகழையா, க‌ன‌த்தையா, வ‌ண‌க்க‌த்தையா)
4)இயேசு ஆதிமுத‌லாய் இருப்ப‌வ‌ர் என்ப‌தில் என்ன‌ சந்தேக‌ம் உங்க‌ளுக்கு?

பிதாவின் அன்பை நான் இயேசுவின் தியாக‌த்தின் மூல‌மாக‌வே அறிகிறேன். ப‌ரிசுத்த‌ ஆவியான‌வ‌ர் மூல‌ம் நான் அதை எனக்குள் உண‌ர்கிறேன். இதில் யாரை அதிக‌ம் கொண்டாடுவ‌து யாரை குறைத்து ம‌திப்ப‌து? என்ன‌ கேள்வி உங்க‌ளுடைய‌து?

த‌ங்க‌ளுக்கு மேலும் ஏதாவ‌து ச‌ந்தேக‌ங்க‌ள் இருந்தால் கீழ் காணும் தொடுப்பை சொடுக்க‌வும். ந‌ல்ல‌ ப‌தில்க‌ள் அதில் உள்ள‌ன‌.

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink Closed

Dear Sister and Brothers,

Kindly see the link also.

http://www.tamilchristiannet.com/forum/topics/5221505:Topic:32716?commentId=5221505%3AComment%3A38618

Their Questions: மத் 7:6; உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு. 7:8; 7:9;

மத் 4:10 உன் தேவனாகிய யேகோவாவையே பணிந்து கொண்டு ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக.

யோவா 4:21-23 “ பிதாவை எங்கும் தொழுது கொள்ளும் காலம் வரும் ”

My Answers: அப்படியாயின் இயேசுவை தொழக்கூடாது என சொல்கிறீர்களா? ஆயின் தங்களோடு விவாதிப்பதில் அர்த்தமில்லை என்றே கருதுகிறேன்.

எனக்காக தம்முடைய பரலோக மகிமையை துறந்து தேவனுக்கு சமமாயிருப்பதைக்கூட பெரிதாக எண்ணாமல் அவமானங்களையும் நிந்தைகளயையும் சகிக்க பூமியில் வந்து ஜீவனையும் கொடுத்து ........ தம்முடைய மகிமையில் என்னை சேர்த்துக்கொள்ள இத்தனை தியாகம் செய்தவரை நான் என்ன செய்யவேண்டும் என்கிறீர்கள்?

உலக தலைவர்களிடமிருந்து நன்மை பெறுகிறவர்கள் கூட என்ன செய்கிறார்கள் தெரியுமா? காலில் விழுந்து, அவர்கள் புகழ் பாடி .... எப்படியெல்லாம் நன்றியை வெளிப்படுத்தி கொண்டாடுகிறார்கள்.

உங்களிடம் சில கேள்விகள்:‍
1)ஆராதனை என்றால் என்ன என்று எண்ணுகிறீர்கள்?
2)தொழுதுகொள்ளுதல் என்றால் என்ன?
3)பிதாவுக்கு செலுத்தும் எதை இயேசுவுக்கு கொடுக்கக்கூடாது என்கிறீர்கள் (நன்றியையா, மகிமையையா, மரியாதையையா, அன்பையா, புகழையா, க‌ன‌த்தையா, வ‌ண‌க்க‌த்தையா)
4)இயேசு ஆதிமுத‌லாய் இருப்ப‌வ‌ர் என்ப‌தில் என்ன‌ சந்தேக‌ம் உங்க‌ளுக்கு?

பிதாவின் அன்பை நான் இயேசுவின் தியாக‌த்தின் மூல‌மாக‌வே அறிகிறேன். ப‌ரிசுத்த‌ ஆவியான‌வ‌ர் மூல‌ம் நான் அதை எனக்குள் உண‌ர்கிறேன். இதில் யாரை அதிக‌ம் கொண்டாடுவ‌து யாரை குறைத்து ம‌திப்ப‌து? என்ன‌ கேள்வி உங்க‌ளுடைய‌து?

த‌ங்க‌ளுக்கு மேலும் ஏதாவ‌து ச‌ந்தேக‌ங்க‌ள் இருந்தால் கீழ் காணும் தொடுப்பை சொடுக்க‌வும். ந‌ல்ல‌ ப‌தில்க‌ள் அதில் உள்ள‌ன‌.

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&...



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink Closed

//எப்படியானாலும் விலக்கப்பட்ட கனியை புசித்தால் சாகவே சாவாய் என தேவன் சொன்னபடி ஆதாமுக்கு நிகழாமல், கனியைச் சாப்பிட்டால் சாகவே சாவதில்லை என சாத்தான் கூறியபடிதான் நடந்துள்ளது (இந்த கிறிஸ்தவர்களின் கூற்றுப்படி).//

யார் சாகவே சாவது இல்லை என்று சொல்லுவது? மனசாட்சி என்று ஒன்று இருந்தால் சற்று யோசியுங்கள்! எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள் யாரும் சாகவே சாவது இல்லை என்று சொல்லுவது கோவை காமடியன்ஸ் தான். வேதம் ஆயிரம் முறை "நித்திய ஆக்கினை" , "நரகம்", "அத்தும மரணம்" என்று சொன்னாலும் இந்த காமடியன்சுக்கு ரசலே வேதம்

//இயேசுகிறிஸ்துதான் தேவன் என்று அவரோ அப்போஸ்தலரோ எப்போதாவது கூறியதுண்டா?

இயேசுகிறிஸ்து கூறியதில்லை. இயேசுவைத் தேவன் என அப்போஸ்தலர் கூறியுள்ளதாக ஞாபகம். வசனம் கிடைத்தபின் திட்டமாகக் கூறுகிறேன். ஆனால் சங்கீதக்காரன் இயேசுவைத் தேவன் எனக் கூறியதற்கு ஆதாரமான வசனம் உண்டு.//

யோவானும் அப்போஸ்தலர்தானே. அந்த வார்த்தை தேவனாய் இருந்தது என்று தெளிவாய் சொல்லுகிறாரே! அதனால் என்ன உங்கள் கூட்டம் இயேசு தேவன் இல்லை என்று முன்னமே முடிவு செய்து விட்டதால் முன்னே "ஒரு" போடுவீர்கள். ஆகையால் வேதத்தில் இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன அது உங்களுக்கு ஒரு பொருட்டா?


 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink Closed

இனி இவர்களுடன் விவாதிப்பது நம்முடைய தரத்தை குறைக்கும் என்பதால் இத்துடன் முடித்து கொள்ளுகிறேன். ஆனால் இந்த புரட்டர்கள் (கோவை காமடியன்ஸ், நண்பர் அன்பு மற்றும் பேத மாணவர்கள்) நேருக்கு நேர் விவாததிற்கு (தொலை பேசியிலோ அல்லது வேறு வகையிலோ) என்றும் தயாராகவே இருக்கிறேன்.
 
 
தேவன் அவருக்காகவே இருக்கிறார். அவர் இருப்பதற்கு உரிய காரணம் அவருக்குள்ளே இருக்கிறது என்று நான் சொன்னதை தேவன் மனிதனை நேசிக்கிறது இல்லை என்று நான் சொன்னது போல திரிக்கிறார். The Reson for God's existance is within Himself. The reson for existance of anything or anybody is not within himself or itself but outside. தேவன் உலகத்தை உருவாக்கும் முன்பும் பரிபூரனமாகதான் இருந்தார்.
 
 
ஏசாயா வேதத்தில் யேகோவா தேவனை பார்த்தேன் என்கிறார் இவர் கடந்த 2 மாதங்களாக இழுத்து அடித்து நாலு முறை மாற்றி, மாற்றி உளறியது அனைவரும் அறிந்ததே! ஐந்தாவதாக உளறியது "ஒரு காட்சி"  ஒரு காட்சி பார்க்க வேண்டும் என்றாலும் உருவம் வேண்டுமே! பிதாவுக்கு உருவம் இருக்கிறதா?
 
 
ஆபிரகாமுடைய கண்டது தரிசனமா? அப்படியென்றால் சாராளும் அபிரகாமும் சேர்ந்து ஒரே தரிசனத்தை பார்க்க முடியுமா? இப்போ எங்கே போனது அவருடைய மூலவசன சாப்ட்வேர்?
 
H7200
Original Word: רָאָה
Transliteration: raah (consitantly transalated as appear , saw)
 
 
கிழே வசனங்களை வாசிக்கிற , சுய நினைவுள்ள யாரும் இது ஒரு காட்சி அல்லது தரிசனம் என்று சொல்லமாட்டார்கள்.
 
 
ஆதியாகமம் 18 :
9. அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான்.

10. அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

11. ஆபிரகாமும் சாராளும் வயதுசென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று.

12. ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமானபின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்.

13. அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்?

14. கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்.

15. சாராள் பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார்.
 
 
தேவத்துவம் பரிபூரனமாய் உள்ள தேவர்கள் எத்தனை பேர் என்பது கேள்வி. இவர் ஆதாம் பற்றி எதோ உளறுகிறார். ஆதாமுக்குள் தேவத்துவம் பரிபூரனமாய் இருந்தது என்று வசனம் இருக்கிறதா?
 
சொலு சொலுசியன் என்ன மனநிலை உடையவர் என்பதற்கு அவருடைய பதிவுகளே சாட்சி! அவர் அத்வானி என்றால் மற்றொருவர் வாஜ்பாய். ரெண்டு பேரும் உள்ளுக்குள் ஒன்றுதான். பெரேயன் எழுதும் போது என்ன எழுதுகிறோம் என்றே அவருக்கு தெரியாது என்பதற்கு நல்ல உதாரணம் அவருடைய பதிவை வாசியுங்கள். காய்பா என்னும் மேசியாவின் விரோதி என்ன சொல்லுகிறோம் என்று தெரியாமல் சரியாய் சொன்னது போல இவர் ஏரியஸ் ஒரு விஷ ஜந்து, கள்ள போதகன் என்று இவர் இயேசுவுக்கும் மேலாக நேசிக்கும் இவருடைய குருவாகிய ரசலையும் (அவன் நக்கியது எரியசின் வாந்தியைதான்! ) ஒரு முறை அல்ல பல முறை தாக்கியிருக்கிறார்.
 
இவர் எந்த மன நிலையில் இருக்கிறார் என்பதற்கு இது ஒரு சாட்சி. (இதை படித்து விட்டு Edit பண்ணி விடுவார் என்பதால் அப்படியே Paste பண்ணுகிறேன்).
 
 
//ஏரியஸ் என்கிற விஷ ஜந்துவின் சீஷஜனமே!! அவன் தூவிய விஷத்தில் வளர்ந்திருப்பவர்களே,
இதோ ஜான் எழுதுகிறார்:
//வசனத்தை ஒழுங்காக புரிந்து கொள்ள துப்பில்லை அதற்குள் விவாதத்திற்கு வந்து விட்டார்! விசுவாசிக்கிறவன் எவனோ என்று அழகாக Qualify பன்னப்பட்டு இருக்கிறது. //
இதை ஏன் எழுதினார் என்பதை மறைத்து விட்டு ஏதோ எங்களுக்கு வசனத்தை போதிக்க கிளம்பியிருக்கிறார் ஏரியஸின் சீஷன்!! ஒரே தேவனை மூன்றாக கூறு போட்டு விற்கும் கூட்டத்திற்கு வசனம் பேச தகுதியே கிடையாது!!
தேவன் தன்னுடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார், உலகத்தை ஆக்கினைத்தீர்ப்புக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் த்ம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல் அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்க்காகவே அவரை அனுப்பினார்"‍ - (யோவான் 3:16,17 )
இந்த வசனத்தை அவர் சுட்டி காண்பிதத்தே, நீங்கள் ஏதோ தேவன் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் எப்படி இரட்சிக்கலாம் என்று தாடியை தடவியபடி அமர்ந்திருப்பதாக எழுதியதற்கு தான்!! தேவனுக்கு தான் மனிதன் மனிதனுக்கு தேவன் இல்லை என்று ஏதோ பிதற்றியதற்காக தான் இந்த வசனத்தை கொடுத்தார்!! இது அவர் மனிதர்கள் மேல் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தவே என்பதை உங்களை போன்ற நரகத்தில் பிரியம் கொண்டுள்ள மனிதர்களுக்கு காண்பிக்கவே இந்த வசனம் கொடுக்கப்பட்டிருக்கிறது!!
அந்த ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறாவன் எவனோ என்பதை கூட அவரே தான் பார்த்துக்கொள்கிறார், ஒரு பவுலின் மனமாற்றம், ஒர் யூதாஸின் விசுவாச துரோகம் இதற்கு சாட்சியாக இருக்கிறது!! தேவன் ஒருவனை கிறிஸ்துவிடத்தில் சேர்த்துக்கொள்ளாவிட்டால் ஒருவன் கிறிஸ்துவை விசுவாசிக்க முடியாது என்பது தெரியும் என்று நினைக்கிறேன்!! நீங்கள் அதை ஏதோ அடிகோடிட்டு காண்பிப்பதால் பெரிய ஞானி என்று என்ன வேண்டாம்!! அந்த விசுவாசத்தை கொடுப்பவரும் முடிப்பவரும் அவரே என்றும் வசனம் கூறுகிறது!! அப்படி என்றால் விசுவசியாமல் இருக்க செய்வதும் அவரின் வேலை தான் என்பதை உங்களை போன்ற நரக ரசிகர்களுக்கு புரியாது, உங்கள் கண்களை ஒருத்தன் கட்டி வைத்திருக்கிறான், அதையும் தேவனே அனுமதிக்கிறார்!! ஆனாலும் உங்கள் நரக போதனைக்கு பயந்து தான் ஒருவன் கிறிஸ்துவை விசுவசிக்கிறான் என்கிற போதனையை ஒரு போதும் பவுல் பேதுரு போன்றோர் செய்ததில்லையே!!
"இன்றே நீ கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாவிட்டால், இன்றே மரணம் உன்னை சந்தித்தால் நீ போகும் இடம் நரகம்" என்று வாய் கூசாமல் பொய் பேசும் கூட்டத்தை சேர்ந்தவர் தானே ஜான் அவர்களே!! தேவனின் அன்பே அனைவரையும் இரட்சிக்கும்படியாக கிறிஸ்துவை பூமிக்கு அனுப்ப செய்தது என்பதை மறுத்து பேசாதீர்கள்!! தேவனால் ஒன்றும் செய்ய முடியாது என்பது மிக பெரிய தேவ தூஷனம்!!
//அதே அதிகாரத்தில் அடுத்த வசனம் ரசலின் சிஷருக்கு தெரியவில்லையோ! இயேசு கிறிஸ்து உலகத்தை ஆக்கினைத்தீர்ப்புக்குள்ளாக தீர்க்கும்படி வரவில்லை ஏனென்றால் உலகம் அவருடைய வருகைக்கு முன்பே ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டு விட்டது
அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று. (யோவான் 3:18 )
NOTE thePast Tense! ஆங்கிலத்தில் "Condemned Already" என்று தெளிவாய் இருக்கிறது.
எல்லா பக்கிரியும் ரட்சிக்கப்பட்டு விடும் என்றால் யாருக்கு "நித்திய ஆக்கினை"?
அதே அதிகாரத்தில் உள்ள மற்ற வசனங்களையும் வாசிக்கலாமே!//
ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று என்றால் நீங்கள் ஏன் இத்துனை கஷ்டப்பட்டு ஊழியர்கள் இத்துனை கஷ்டப்பட்டு காடு மேடு என்று போதிக்கிறார்கள் என்று பிரசங்கித்து வருகிறீர்கள்!! அது தான் ஏற்கனவே ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட செய்தவர் தேவன் தானே!! அப்படி என்றால் தேவனின் சித்தத்தை தோற்கடிக்கும் நோக்கத்தில் செயல்ப்படுகிறீர்களோ!! நீங்கள் போதனை நரகத்தை காண்பித்து போதனை செய்து தேவன் ஆக்கினைத்தீர்ப்பை மாற்றிக்கொள்வாரோ!! அப்படி என்றால் தேவன் தான் சொல்லுவதில் நிலைத்திருப்பதில்லையா!! ஏரியஸ் ஜந்துவின் சீஷ கூட்டமே, நீங்கள் எல்லோரும் தேவதூஷனத்திற்கு மேல் தேவதூஷனம் செய்துக்கொண்டு இருக்கிறீர்கள்!! ஆனாலும் தேவன் அன்புள்ளவர், நீங்கள் நிச்சயமாக நரகத்திற்கு போக மாட்டீர்கள், ஏனென்றால் உங்களின் அறியாமைக்கு எல்லாம் தான் அவர் கிறிஸ்துவை அனுபித்திருக்கிறார்!!
நீங்கள் உங்களை பேரிய பரிசுத்தவான் என்கிற உதாரில் இருப்பதால் தான் உங்களுக்கு "எல்லா பக்கிரி"யும் இரட்சிக்கப்படுவார்களா? என்கிற ஆனவம் இருக்கிறது!! தேவனின் பார்வையில் நீங்கள் எப்படியோ அப்படியே தான் "எல்லா பக்கிரியும்"!! அந்த "எல்லா பக்கிரியையும்" காப்பாற்ற தான் கிறிஸ்து இயேசு வந்தார் என்று கூட தெரியாத குறுட்டு ஏரியஸின் சீஷனாக இருப்பது வேதனை தான்!! ஆனாலும் அந்த "எல்லா பக்கிரியையும்" சுவிசேஷம் சொல்லுகிறோம் என்று டுபாக்கூர் விட்டு வையிற்று பிழைப்பை தானே நடத்திக்கொண்டு இருக்கிறது தங்களை ஊழியர்கள் என்று சொல்லுகிற கூட்டம்!! சரி தானே!! அதான் எல்லாரையும் ஆக்கினைக்குள் தீர்த்துவிட்டார் என்கிரீர்கள், ஆனாலும் உங்களின் நரகத்தை காண்பித்து பயம் காட்டி தேவன் ஆக்கினைக்குள் தீர்த்தவர்களை நீங்கள் விடுவிக்கிறீர்களோ!! இதைவிடவா ஒரு பெரிய காமேடி சாரி தேவதூஷனம்!! என்ன துனிச்சல் உங்களுக்கு எல்லாம்!! தேவன் முடிவு செய்ததை மாற்ற நினைக்க‌!!
கேவலமான ஒரு மொழிப்பெயர்ப்பை வைத்துக்கொண்டு NOTE THE PAST TENSE என்று ஆங்கிலத்தில் எழுதுவது பெரிய காரியமே இல்லை!! உங்களுக்கு மூல பாஷை என்றால் ஆகாது, ஆகவே இதை உங்களை போன்றோரிடம் சொல்லுவது நேரம் வீண் அடிப்பதாகும்!! ஆனால் மூல பாஷையில் ""Already" என்கிற பதம் இல்லை!! ஏரியஸின் சீஷர்கள் தங்களின் வசதிக்கேற்ப மூல பாஷையை திரித்து எழுதியிருக்கிறார்கள், எங்கே உண்மை வெளிப்பட்டு விடும் என்று சாத்தான் தந்திரமாக உங்களை போன்றோர் மூலமாக ஒன்றை போதித்து வருகிறான், "மூல பாஷையில் ஆராய கூடாது": என்று தான்!! என்னமோ நீங்கள் படிக்கும் ஆங்கில, தமிழ் மொழிப்பெயர்ப்பு மூல பாஷையில் இருந்து வராமால் அப்படியே பரலோகத்தில் இருந்து இறங்கி வந்ததாக நினைப்போ!!
//தேவனால் பாவம் செய்யமுடியாது அதற்காக அவரால் எல்லாம் கூடும் என்பது பொய்யாகுமா?

போங்க சார் போய் ரசலை மறந்துவிட்டு வேதத்தை வாசியுங்கள்! உங்களுடைய சகா பெரேயனுடைய காமடிக்கு விரைவில் பதில் அளிக்கிறேன். அதற்க்கு முன்பே ரெண்டு பெரும் சேர்ந்து ஆதியாகமம் 18 அதிகாரத்தை ஒழுங்காக வாசியுங்கள்.//
தேவனால் எல்லாம் கூடும் என்று நாங்கள் தான் போதிக்கிறோம்!! நீங்களோ மனிதன் நினைத்தால் தான் தேவனால் கூடும் என்று போதிக்கிறீர்கள், புரிகிறதா!! ரஸ்ஸலை மேல் எங்களை விட நீங்கள் தான் அதிக மதிப்பு வைத்திருக்கிறீர்கள் போல், அடிக்கடி அவரை நினைத்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை போல்!! ஆதியாகமம் 18ம் அதிகாரத்தை படித்து விட்டு தான் உங்களுக்கு பதில் தந்திருக்கிறேன்!! யெகோவா தரிசனமானார் (Vision)!! ஆபிரஹாம் ஏறெடுத்து பார்க்கும் போது "மூன்று புருஷர்களை" கண்டான்!! அவன் ஒன்றும் யெகோவாவை பார்க்கவில்லை!! எத்துனை மாதமாக இதே பல்லவியை பாடிக்கொண்டு இருந்தீர்களே, ஏன் உடனடியாக பதில் தர முடியவில்லை!! வேறு ஒரு ஏரியஸிடம் பதில் வாங்க வேண்டுமோ!! யார் காமேடியன் என்று தெரியும் நாள் வருகிறது//
 


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink Closed

//இந்த வசனங்கள் பரிசுத்த வேதாகமத்தில் இருக்கின்றன. இவைகளை படித்தவர்கள் யாருமே இயேசுவை தொழலாமா என கேட்கமாட்டார்கள் என எண்ணுகிறேன்.//

 

உண்மைதான் சகோ .பீட்டர் சாமுவேல் ஆனால் வேதம் மாத்திரம் படித்தவர்களுக்குத்தான் உங்களுடைய கருத்து பொருந்தும் இவர்கள் வேதத்திற்கு மேலாக ரசலின் வாந்தியை நம்பும் ரசலின் சீஷர்கள் ஆகையால் இயேசுவின் நாமத்தை விட ரசலின் நாமமே இவர்களுக்கு இனிப்பாக இருக்கும்!


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink Closed

இயேசுவை தொழலாமா?
1) எபிரெயர் 1:6 தேவதூதர்கள் யாவரும் அவரை தொழுதுகொள்ளக்கடவர்கள் (மிகாவேல் தூதரையும் சேர்த்துதான்)
2) ரோமர் 9:5 அவரே சர்வத்துக்கும் மேலான தேவன்
3)கொலோசெயர் 2:9 தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் ... அவருக்குள்
4)யோவான் 5:18 தேவனுக்கு சமம்
5)பிலிப்பியர் 2:6 தேவனுடைய ரூபம்
6)கொலோசெயர் 1:15 தேவனுடைய தற்சுரூபம்
7) யோவான் 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்

இந்த வசனங்கள் பரிசுத்த வேதாகமத்தில் இருக்கின்றன. இவைகளை படித்தவர்கள் யாருமே இயேசுவை தொழலாமா என கேட்கமாட்டார்கள் என எண்ணுகிறேன்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink Closed

//இயேசுகிறிஸ்துவுக்கு 'நானே கடவுள்' என்று தெளிவாக சொல்ல தைரியமில்லையா? ஏன் இதைச் சொல்லி தன்னை சர்வவல்ல தேவன் என்று நிரூபித்திருக்கலாமே? ஏன் மீண்டும் மீண்டும் நான் அனுப்பப்பட்டவன், தேவனுடைய குமாரன் என்று சொல்லவேண்டும்?

யோசிக்கவே மாட்டார்களா? மூளை அத்துனை மழுங்கியா போய்விட்டது?//

 

யாருக்கு மழுங்கி விட்டது? கிறிஸ்து நான்தான் தேவன் என்று சொல்லவில்லையா? அப்புறம் எதுக்கு யூதர்கள் "நீ மனுஷனாயிருக்க எப்படி தேவனு என்று சொல்லலாம்" என்று சொல்லி அவர்மேல் கல்லெறிய முயன்றார்கள்?

அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (யோவான் 8:58)

அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள் (யோவான் 8:58)

யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். (யோவான் 10:33)

வார்த்தை தேவனோடு இருந்தது, அது தேவனாய் இருந்தது என்றால் புரட்டர்கள் முன்னாடி ஒரு "ஒரு" போடுகிறீர்கள்.
 
"உண்டானதெல்லாம் அவராலே அல்லாமல் உண்டாக்கப்படவில்லை" என்ற ஒரு சாதாரண வாக்கியத்தின் அர்த்தம் தெரியவில்லை!
 
"தேவத்துவம் எல்லாம் அவருக்குள் பரிபூரனமாய் இருந்தது" - தேவத்துவம் யாருக்குள் பரிபூரணம் இருக்கும் என்றால் பேந்த பேந்த முழிக்கிறீர்கள்.

 

யேகோவா என்பது பிதாவை மட்டுமே குறிக்கும் என்று எப்படி சொல்லுகிறீர்கள்? யேகோவா என்பது யாவே (YHWH) அதாவது "I AM WHO I AM" என்பதாகும். ஏசாயா பார்த்த யேகோவா யார்? ஆபிரகாம் விட்டுக்கு வந்த யேகோவா யார் என்று சொல்லுங்கள் அப்புறம் யாருக்கு மழுங்கி விட்டது என்று பார்க்கலாம்?

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink Closed

//மண்ணிக்கனும், உங்கள் யூகங்களை என் பதிலாக மாற்ற வேண்டாம்!!//
 

//    * அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய (YHWH)  ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். (ஏசாயா 6:5)
 
Date: 12:10:18 Apr 13, 2011 : யெகோவா தேவனை கண்கள் கண்டவுடன் ஆதமானான் என்பதையும் இந்த வசனத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளவும்!!//

Date: 08:21:34 Apr 16, 2011  : //எனக்கு தெரிந்தது தேவனை ஒருவரும் ஒரு போதும் பார்த்தது இல்லை, அப்படி என்றால் ஏசாயா தேவனை அல்ல, தேவனின் ரூபத்தில் இருந்த தேவ குமாரன் கிறிஸ்துவை தான் பார்த்திருக்க வேண்டும்!!//
 

Date: 10:33:10 Apr 17, 2011 : //தேவன் கானக்கூடாதவராக இருக்கிறபடியால், அவரை ஒருவரும் காணமுடியாது என்பதற்காக, அவரை காண்பவன் அதமாகிவிடுவான் என்பதை தெரியப்படுத்தவும் வசனம் தேவையே!! இதை அப்படி நினைத்துக்கொள்ளுங்கள்!!//

Date: 21:43:32 May 2, 2011 //"ஏனென்றால் யெகோவா தேவனை ஒருவனும் ஒரு போதும் பார்த்ததில்லையே, ஏசாயா உட்பட தான்!!யெகோவா தேவனை யாரும் கண்டதில்லை என்றால் நிச்சயமாக கண்டதில்லை தான்!! "//

 
இதிலே எங்கே  யூகம்  இருக்கு? நான் கேட்ட ஒரு Simple கேள்விக்கு பதிலளிக்காமல் இழுத்து அடிப்பதுதான் உங்கள் பெரேய விசுவாசமா? மறுபடியும் யார் அந்த யேகோவா என்று சொல்லவில்லையே! இயேசு கிறிஸ்து என்றால் எப்படி அவரை  யேகோவா என்று குறிப்பிடலாம்? பதில் வருமா அல்லது வழக்கமான பாட்டுதான் வருமா?


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


//மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பை காண்பார்கள் என்பது வசனமுங்கோ!! அது ஒன்றும் ரஸ்ஸலின் தனிப்பட்ட கருத்து கிடையாது!! உங்கள் போதனைகளுக்கு பாதகமாக இருப்பது எல்லாம் ரஸ்ஸலின் போதனை என்று ஒதுக்கி தள்ளுவதில் நியாயமே இல்லை!! கண்டிப்பாக யூதாஸும் பாக்கியவான் தான், என்ன அவன் அப்போஸ்தலரின் ஸ்தானத்தை இழந்து போனான், அவர் ஆட்டுக்குட்டியாரின் 12 அப்போஸ்தலர்களில் இல்லாமல் போய் விட்டான், அவன் சபைக்கு ஒரு அஸ்திபார கல்லாக இல்லாமல் போய்விட்டான், ஆனால் கிறிஸ்துவின் இரத்தம் அவனுக்கும் சிந்தப்பட்டிருக்கிறது, அவனும் உயிர்த்தெழுவான்!!//
 
ஏன் பர்னாபாஸ் கூடத்தான் அஸ்திபாரக்கல்லாக இல்லை. பர்னபாவுக்கும் , யுதாசுக்கும் என்ன வித்தியாசம்? யூதாஸ் பிறாவதிருந்தால் நலம் என்று வேதம் ஏன் சொல்லவேண்டும்? சாத்தான் மட்டும்தான் நரகம் போவான் என்பதற்கு என்ன வசன ஆதாராம் வைத்து இருக்கிறீர்கள்?
 
//லூக்கா 3:5 மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக்காண்பார்கள்//
 

மாம்சமான யாவரும் என்பது இங்கே யூதர்கள் மாத்திரம் அல்ல புறஜாதியாரும் தேவனுடைய ரட்சிப்பை காண்பார்கள் என்பதை குறிக்கும். இரட்சிப்பு என்பது ஒரு "Present Continues" வார்த்தை. நான் ரட்சிக்கப்பட்டு விட்டேன் என்றும் சொல்லலாம் , இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்பட்டுகொண்டு இருக்கிறேன் என்றும் சொல்லலாம். தேவனுடைய இரட்சிப்பு யூதர் மாத்திரம் அல்ல மாம்சமான யாவரும் காணும்படியாக கிறிஸ்துவில் வெளிப்பட்டது என்பதை இந்த வசனத்தின் பொருள். சிமியோன் அதைத்தான் சொல்லுகிறான்.
 
 
புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான் (லூக்கா 2:30-32)
 
 
சரி நீங்கள் உளறுவது போல மாம்சமான எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்றால் கிழே உள்ள வசனத்தின்படி மாசமான யாவரும் என்பது எல்லா மனிதர்களையும் குறித்தால் பாதகம் செய்த மனுஷர் யார்?
 
 
அப்பொழுது மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய
பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய அக்கினி அவியாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருப்பார்கள்.(ஏசாயா 66:23-24)
 
 
 
//ஆதாமுக்குள் எல்லாரும் (ஒருவர் விடாமல்) மரிக்கிறார்கள் என்பதை நம்புவீர்களென்றால், கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்க்ப்படுவார்கள் (ஒருவர் விடாமல், யாவரும்) என்பதையும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்!!.//
 

எல்லாரும் வெள்ளை சிங்காசன தீர்ப்பின் பொது உயிர்பிக்கப்படுவர்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். உயிர்ப்பிக்க பட்ட எல்லாரும் கிறிஸ்துவோடு பரலோகம் போகமாட்டார்கள் என்றும் எழுதியிருக்கிறது
 
 
அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்... அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாக பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து...அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார். (மத்தேயு 25:31,32,46 )

மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல் (வெளி 20:5)
 
கிழே உள்ளவசனம் தெளிவாய் சொல்லுகிறது மரித்தவர்கள் ஆயிரவருஷ அரசாட்சியின் முடிவில், பெரிய வெள்ளைச் சிங்காசன தீர்ப்பில் எழுப்பப்பட்டு கிரியையின் அடிப்படையில் நியாயத்தீர்ப்படைவார்கள் (அதாவது ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவர்கள்)
 
மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்(வெளி 20:12-13)
 
 
//1 கொரிந்தியர் 15:22. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.//

 

 

 

இது ஒரு சுலபமான புரிந்து கொள்ளக்கூடிய வசனம். பிறக்கிற எல்லா மனிதனும் ஆதாமுக்குள்ளாக பிறக்கிறான் ஆனால் எல்லாரும் கிறிஸ்துவுக்குள் பிறப்பது இல்லை. அவரை ஏற்று கொள்ளுகிறவர்கள் மட்டுமே பிள்ளைகளாக முடியும்
 
 
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)
 
 
//1 தீமோத்தேயு 2:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்....6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே//
 
 

எல்லாரும் சத்தியத்தை அறிந்து இரட்சிக்கப்பட தேவன் சித்தமுள்ளவராக இருக்கிறார் ஆனால் அது நிறைவேறவேண்டும் என்று அவர் பிரயாசபடுவதில்லை.
 
தேவனுக்கு இரண்டு சித்தங்கள் உண்டு. ஒன்று அவருடைய 'Will of Commandment" மற்றொன்று அவருடைய 'Will of Decree". உதாரணமாக யூதாசை குறித்த அவருடைய "Will of Command" அவன் இயேசு கிறிஸ்துவை காட்டிகொடுக்க கூடாது என்பதே ஆனால் அவருடைய "Will of Decree" என்பது அவன் கிறிஸ்துவை காட்டிகொடுக்க வேண்டும் என்பது.
பார்வோனை குறித்த "Will of Command" அவன் இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தருக்கு ஆராதனை செய்ய உடனே அனுப்ப வேண்டும் என்பதே ஆனால் "Will of Decree" அவனை கடினபடுத்தி தம்முடைய வல்லமையை காண்பிப்பதே! தேவன் தம்முடைய "Will Of Decree" ஐ மட்டுமே நிறைவேற்றுவார்.
 
அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன் குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,
ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள். (அப்போஸ்தலர் 4:28)
 
 
மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது. ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். (ரோமர் 9:17-18 )
 
 
//நீங்கள் கேள்விகளே கேட்டுக்கொண்டு மட்டும் இருக்க வேண்டாமே, சில சமயம் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கும் வசனத்துடன் பதில் தாருங்களேன்!!//
 
 
நீங்க பதில் கொடுத்த லட்சனத்தைதான் எல்லாரும் பார்த்தார்களே. ஏசாயா பார்த்த யேகோவா யார்? ஆபிரகாம் விட்டுக்கு வந்த யேகோவா யார்?
 
உங்கள் முதல் பதில்: பிதாவாகிய தேவன்
இரண்டாம் பதில்: இயேசு கிறிஸ்து
மூன்றாவது பதில்: பிதாவாகிய தேவன்
நான்காவது பதில்: கடைசியாக இயேசு கிறிஸ்து
 
கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் வருவது போல "Is this your final answer?" சரி என்றால் இயேசு கிறிஸ்துவை எப்படி யேகோவா என்று வேதம் அழைக்கலாம்? உங்களிடம் மட்டுமே இருக்கிறது என்று நீங்கள் நினைத்து(!) கொண்டு இருக்கிற அந்த Software ல் நல்ல கண்ணை கசக்கி விட்டு பார்த்து சொல்லுங்கள். மொத்தம் எத்தனை யேகோவாக்கள் வேதத்தில் இருக்கிறார்கள்?

நீங்கள் எழுதும் பதிலில் உங்களுடைய குழப்பத்தை சற்று விளக்குவீர்களா? அல்லது எனக்கு வசனம் தெரியவில்லை என்று வழக்கமான பாட்டு பாடுவீர்களா?

 
//எங்களுக்கு சென்னையில் இரண்டு நாட்கள் தலைப்பு வாரியாக கருத்தரங்கம் இருக்கிறது!! முடிந்தால் கலந்துக்கொள்ளுங்கள், தேதியும் முகவரியும் பிறகு பதிவிடுகிறேன்!!//
 
நான் சென்னையில் இருந்து இருந்ததால் கட்டாயம் கலந்து கொண்டு எல்லார் முன்னிலையிலும் கேள்விகேட்டு இந்த ரசலின் வாந்தி போதனையை வெளிப்படுத்தி இருப்பேன். Missing So much! நாலு தடவை மாத்தி, மாத்தி உளறுகிற நீங்கள் போய் கருத்தரங்கம் எடுக்கப்போகிரீர்களா? "வெளங்கின மாதிரித்தான்"
 
 
எல்லாரையும் "அலிகள்" என்று அழைத்தாரே ஒரு "வீரத்திருமகன்" நீங்கள் இந்த கருத்தரங்குக்கு அழைக்கும் "விபச்சார (வேசி) சபை மக்களிடம்" "இயேசு ஒரு தூதன்" , "இயேசு தொழத்தக்கவர் இல்லை" என்று Notice அடித்து கொடுத்துவிட்டு அழைக்க "தில்" இருக்கா? வருகிறவன் செருப்போடுதான் வருவான் (Sorry to say it but Truth must be told)


-- Edited by John on Monday 9th of May 2011 06:09:03 AM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink Closed

//இப்படி சொல்லி சொல்லி தான் சிலுவையை தொட்டு கும்பிடும் அளவிற்கு கத்தோலிக்க சபை சிலுவையை விக்கிரகமாக ஆக்கி வைத்திருக்கிறது!! சிலுவையை பற்றிய உபதேசம் என்றால், சிலுவை எந்த வடிவில் இருந்தது, அது எந்த மரத்தினால் செய்யப்பட்டிருந்தது, அதன் உயரம், கனம் என்ன என்று சொல்லுவதற்காக அல்ல!! சிலுவை என்பது பாடுகளை குறிக்கும் ஒரு வார்த்தையாகும், கிறிஸ்துவின் சிலுவை என்பது அந்த பாடுகளினால் மனிதர்களுக்கு இரட்சிப்பு உண்டாயிற்று என்பது தான் அதில் அடங்கியிருக்கும் சுவிசேஷம்!! இதை தான் சிலுவையின் சுவிசேஷம் என்று சொல்லுவோமே தவிர, கத்தோலிக்க சபைஅல்லது தினகரனின் பெதஸ்தாவில் சிலுவையை வைத்து அதை விக்கிரகமாக மாற்றுவது அல்ல‌!!//

சிலுவையை பற்றிய உபதேசம் இயேசுவின் பாடுகளை குறித்தது தானேயன்றி அது சிலுவையின் இஞ்சினியரிங் அமைப்பை பற்றி அல்ல என்பது எனக்கும் தெரியும், சிலுவையை பற்றிய உபதேசத்தை நீங்கள் சொல்லி தெரிந்துகொள்ளவேண்டிய அவல நிலையில் நான் இல்லை. அது போக நான் சிலுவையை தொட்டுக்கும்பிடும் பாரம்பரியத்தை சேர்ந்தவனும் அல்ல‌.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink Closed

//தேவனுக்கு மாற்று என்று யார் சொன்னது!! தேவனால் கிறிஸ்து நியமிக்கப்பட்டவர் என்று தானே எழுதியிருக்கிறேன்!! ஒருவரே சாவாமையுள்ள தேவன் எந்த ரூபத்திலும் மரிக்க முடியாது என்பது வேதம் எனக்கு தரும் விசுவாசம்!! ஆனால் தேவன் மனிதனாக வந்து மரித்தார் என்று எத்துனை பெரிய தேவ தூஷனத்தை எத்துனை சுலபமாக நம்புகிறீர்களே!! இருவரும் ஒருவரே என்கிறீர்களே, அல்லது பரலோகத்தை விட்டு அந்த சர்வவ்வல்லமை உள்ள தேவனே கிறிஸ்துவாக பூமிக்கு வந்தார் என்கிறீர்களே, அப்படி என்றால் சிலுவையில் இருந்துக்கொண்டு, கிறிஸ்து (அவர் தான் பரலோகத்தில் இருந்து இறங்கி வந்த தேவன் என்கிறீர்களே) யாரை நோக்கி கூப்பிடுகிறார், யாரிடம் தன் ஆவியை ஒப்புக்கொடுக்கிறார்!!??//

அப்போ இயேசு தேவன் இல்லை என்கிறீர்கள். அஃதாவது அவரது தெய்வீகத்தன்மையானது அவர் தொழுதுகொள்ளப்படும் அளவுக்கு உயர்ந்தது இல்லை என்கிறீர்கள், சரிதான். உங்களது வாதங்களுக்கும் இஸ்லாமியர்கள் மற்றும் யெகோவா சாட்சிக்காரர்களை தான் நினைவுபடுத்துகிறது ஆனால் பாருங்கள் பவுல் அப்போஸ்தலர் தனது நிருபங்களில் பலமுறை கர்த்தராகிய கிறிஸ்து என்று சொல்கிறார். இதற்கும் என்ன சொல்வீர்கள், அந்த கர்த்தர் வேற இந்த கர்த்தர் வேற என. இன்னும் கேட்டால் மூல பாஷை விளக்கம் வந்துவிடும். மூல பாஷை உங்களிடம் எங்கு கிடைத்தது.. ஒரிஜினல் நிருபங்களை கையில் வைத்திருக்கிறீர்களா, அப்படியே உங்களுக்கு ஏதாவது இருந்தாலும் அது யாராவ்து கொடுத்ததாக தானே இருக்கும். யார் கொடுத்தது ஏரியனா இல்லை ரசலா? 

ஏசாயா தீர்க்கன் இயேசு பிறப்பதற்கு முன்னமே அவரை வல்லமையுள்ள தேவன்,  நித்திய பிதா என்றெல்லாம் வர்ணித்திருக்கிறார், உங்க கணக்கு படி பார்த்தா அவர் தான் இருக்கிறதிலேயே மிகப்பெரிய தேவ தூஷணம் சொன்னவராக இருந்திருக்கவேண்டும். இதற்கும் என்ன விளக்கம் வைத்திருப்பீர்கள், ஆதி வேறு அனாதி வேறு நித்தியம் வேறு என.. இப்பெல்லாம் நீங்க என்ன எழுதப்போறீங்கன்னு முன்னரே தெரிஞ்சுடுது போங்க. 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
RE: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


ஏசாயா கண்ட யேகோவா யார்? ஆபிரகாம் வீட்டிற்கு வந்த யேகோவா யார் என்று இவர்கள் சொல்லும்வரை இவர்களுடன் விவாதிப்பது இல்லை என்று முடிவு செய்து இருக்கிறேன். இன்று காலையில் யோவான் 8 ஆவது அதிகாரத்தை வாசித்து கொண்டு இருந்தேன். நாம் சொல்லுவது புரியாதது போல நடிக்கும் மேசியாவின் எதிரிகளுக்கு   இயேசு கிறிஸ்து சொல்லுவதும் புரியாது என்று நினைக்கிறேன்.

  12. மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

13. அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக் குறித்து நீயே சாட்சிகொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.


(நீர் ஒருவராய் உம்மை பற்றி கொடுக்கும் சாட்சி உண்மையில்லை என்று சொல்லுகிறார்கள்)


14. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது; ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறியீர்கள்.

15. நீங்கள் மாம்சத்துச்கேற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை;

16. நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.

(நான் தனியே இருக்கவில்லை நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம் என்கிறார்)


17. இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே.


(நான் என்று சொன்னாலும் இரண்டு பேர் என்றும் சொல்லுகிறார்)


18. நான் என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறார் என்றார்.


(நான் சாட்சி கொடுத்தாலும் நான் மட்டுமல்ல பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறார் என்றார்)


19. அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார்.

(ரசலின் சீஷர்கள் போலவே பரிசேயரும், நீர் ஒருத்தர் தானே இருக்கிறீர் அப்புறம் எப்படி இரண்டு பேர் என்று சொல்லுகிறீர்.  பிதாவை எங்களுக்கு காண்பியும் என்று கேட்க அவர் என்னை நீங்கள் அறிந்தால் பிதாவையும் அறிவீர்கள் என்கிறார். இயேசுவிடம் போய் பிதாவை காண்பியும் அல்லது வெளிபடுத்தும் என்று சொல்லுவது போல அறிவீனமான காரியம் ஒன்றும் இல்லை! பிதாவிடம் உள்ள எல்லாம் இயேசு கிருஸ்துவிடமும் உண்டு, இயேசு கிறிஸ்துவிடம் உள்ள எல்லாம் பிதாவிடமும் உண்டு. இயேசு கிறிஸ்துவிடத்தில் இல்லாத ஒன்று என்று பிதாவினிடத்தில் ஒன்றும் இல்லை Also Vice Versa)

24. ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.


(இங்கே வருகிற "நானே" (I AM)  என்றால் யார் என்று தெரிந்த ஆத்துமாக்கள் பாக்கியவான்கள்!)


25. அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான்.

(இயேசு கிறிஸ்து தான் தேவன் என்பதை இதைவிட தெளிவாய் சொல்லியிருக்க முடியாது. பழைய ஏற்பாடு தெளிவாய் சொல்லுகிறது "யேகோவா ஒருவரே ரட்சகர் , வேறு ரட்சகர் இல்லை" , "யேகோவா ஒருவரே தேவன் வேறு தேவன் இல்லை", "யேகோவா ஒருவரே மணவாளன் வேறு ஒருவர் இல்லை" )

 

ஹ்ம்ம்...ரசலின் வாந்தியை விசுவாசிப்பவர்களுக்கு புரியுமா!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink Closed

//என் தேவனே, என் தேவனே, ஏன் என்னை கைவிட்டீர்!! என்றார் இயேசு ////கிறிஸ்து சிலுவையில் தன் ஆவியை தன் பிதாவிடத்தில் ஒப்படைக்கும் முன்!!


அத்நாஷியஸின் கூற்றின்படி மூவரும் (!!??) ஒரே நிலையில் இருப்பவர்கள்!! இந்த மூன்றில் ஒருவர் (ஆனாலும் இவர்கள் மூன்று அல்ல, ஒருவரே என்கிறார் அத்நாஷியச்) சிலுவையில் தொங்குகிறார், ஆனாலும் மூவரும் ஒருவரே, ஒருவர் பரலோகத்தில் இருக்கிறார், மற்றவர் தன்னை பாவமாக்கிறார், ஆனாலும் மூவரும் ஒருவரே, என்ன ஒரு விசுவாசம்!!

ஆனால் நம் சத்திய வசனங்களின்படி பார்த்தோமென்றால், உலக தோற்ற முதல் நமக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக கிறிஸ்து இயேசு பிதாவினால் நியமிக்கப்பட்டவராக இருக்கிறார் (இருவரும் ஒருவராக இருக்க முடியுமா!??)!! ஒருவர் நியமிக்கிறார், மற்றொருவர் நியமிக்கப்பட்டவராக இருக்கிறார், இருவரும் ஒரே நிலையிலோ, ஒரே தன்மையிலோ இருக்க வாய்ப்பே இல்லை!!

சிலுவை கிறிஸ்துவின் மரணத்திற்கு ஒரு சாதனமாக உபயோகிக்கப்படுத்தப்பட்டது, அது முக்கியம் இல்லை, மாறாக கிறிஸ்துவின் மரணமே நமக்கு பாடம்!! சிலர் இதை வைத்து பக்கம் பக்கமாக எழுதுவார்கள், நமக்கு கவலையில்லை!! சிலுவையின் உபதேசம் என்றால் ஏதோ சிலுவை மரத்தை பிரசங்கிப்பது கிடையாது, மாறாக கிறிஸ்துவின் மரணம் தான் சிலுவையின் உபதேசமாகும்!! சிலுவையின் உபதேசம் என்பது ஒரு துக்க செய்தி அல்ல, மனுகுலத்திற்கு அதுவே நற்செய்தி!!

இயேசு கிறிஸ்து சிலுவையில் மனுகுலத்திற்காக மரித்தார் என்பதே கிறிஸ்துவும் தேவனும் வேறு வேறு என்பதை நிரூபிக்கிறது!! அத்நாஷியஸ் சொன்னால் என்னா, அவர்களின் சீடஜனங்கள் சொன்னால் என்ன, வேதம் என்ன சொல்லுகிறது என்பது தானே நமக்கு முக்கியம்!!//

ஏரியனின் சீடர்களுக்கு கிறிஸ்து பற்றிய எல்லாமே இப்படி தான் விகற்பமாக இருக்கும். சிலுவையை பற்றிய உபதேசம் என்று தான் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, சிலுவை முக்கியம் இல்லையாம். சிலுவையை யாரும் வணங்குவதில்லை. சிலுவை கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூற வைக்கப்படும் சாதனமேயன்றி வேறில்லை என்பது எங்களுக்கும் தெரியும். 

கிறிஸ்து என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என ஏன் சொன்னார், ஏனெனில் அவர் மனிதனாகவும் இருந்தார். உலகத்தின் பாவ அந்தகாரம் அவரை மூடிய போது சொன்னது. தேவன் மாம்சமாகி மனிதனின் பாடுகளை அனுபவித்து மரணத்தையும் வென்றார். மனிக்குலத்தை ரட்சிக்க படைத்தவரே வந்தார் என்பது தான் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து. தேவன் தன்னால் ரட்சிக்க முடியாமல் தனக்கு பதிலாளியாக ஒரு substitute அனுப்பி ரட்சித்திருப்பார் என்பது அவரது நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்குகிறது.

The very idea of God sending a substitute to rectify and save humanity is blasphemous, disgusting and heretical. Jesus was never a substitute for God but God who came to save the world.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


 
//ஆக கிறிஸ்துவின் பிதாவே நம் பிதா என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா? பிதாவை இனியும் யெகோவா தேவன் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை, அவரை அப்பா பிதாவே என்று கிறிஸ்து அழைப்பது போல் நாமும் அழைக்கிறோம்!! நாமும் கிறிஸ்துவும் ஒருவரையே பிதா என்று அழைக்கும் போது, கிறிஸ்துவும் பிதாவும் ஒருவரே என்கிற வாதம் எப்படி எழும்பும்!?//
 
நிச்சயம் எழும்பாது! கிறிஸ்துவும் , பிதாவும் ஒருவரே என்று யார் சொன்னது? நீங்கள் இன்னும் என்ன சொல்லவருகிறீர்கள் என்று புரியவில்லை
 
//முட்செடியில் தரிசனமானவரை தான் வேதமே கர்த்தரின் தூதனானவர் என்று சொல்லும் போது தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் எப்படி அழைக்கலாம்?//
 
நான் அழைக்கவில்லை நண்பரே வேதம் அழைக்கிறது. கிழேஉள்ள  வசனத்தை திரும்ப வாசியுங்கள்.
 
  • அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது. (யாத்திராகமம் 3:2)

  • ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குத் தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார். (யாத்திராகமம் 4:5)

மோசேக்கு தரிசனம் ஆனது இயேசு கிறிஸ்துவே ஆனால் யாத்திராகமம் 4:5 ல் "தேவனாகிய கர்த்தர் உனக்குத் தரிசனமானதை " என்று எழுதியுள்ளதை வாசிக்கவும்.

//உங்கள் கேள்விக்கான   முடிவை நிங்களே எடுங்கள்!!!!  அப்படி உங்களின் வாதம் சரி என்று நீங்கள் சொன்னால் இயேசு சொன்ன வார்த்தை பொய்யாகவோ  அல்லது  தவறான மொழிபெயர்ப்பாகவோ இருக்கவேண்டும்!!  முடிவு உங்களுடையது. நன்றி //

வேத வசனம் ஒரு போதும் தவறாகாது! நான் பொய்யனாய் இருக்கலாம், நீங்கள் பொய்யனாய் இருக்கலாம் ஏன் இரஸ்ஸலும் பொய்யனாய் இருக்கலாம்!

  • தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.(ரோமர் 3:4 )

நண்பர் டினோ, இரண்டு வசனங்கள் ஒன்றுக்கொன்று எதிராய் தோன்றுமானால் இரண்டில் எதோ ஒரு வசனத்தை குறித்த நம்முடைய புரிந்து கொள்ளுதல் தவறு!  என்னுடைய சொந்த கருத்து எதுவும் இன்றி வசனங்களை கொண்டே இயேசு கிறிஸ்துவை "கர்த்தர்"(YHWH) என்றும், தேவனாகிய கர்த்தர்  (The LORD GOD) என்றும் அழைக்கலாம் என்று நிருபித்து இருக்கிறேன். இந்த இரண்டு கருத்துக்களையும் எப்படி Synch பண்ணுவது என்ற காரியத்திலும் உதவ தயாராக இருக்கிறேன். நீங்கள் திறந்த மனதுடன்  எந்தவித Presupposition ம் இல்லமால் வந்தால் சேர்ந்து ஆராயலாம்.



-- Edited by John on Wednesday 20th of April 2011 06:42:59 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink Closed

//அதற்கு காரணம் நம் ஊழியர்கள் துவங்கிய இயேசு நாதர், அருள் நாதர், சிலுவை நாதர் போன்ற பெயர்களில் தான் இருக்கிறது!! இந்த பெயர்களினால் வசியப்பட்டு போன ஜனங்களுக்கு யெகோவா தேவன் என்பது விளங்கிக்கொள்ள முடியாத பெயராக இருக்கிறது!! //

நாதர் என்பது "Lord" ன் தமிழாக்கம். Jesus The Lord என்று சொல்லுவது தவறா? Gracious Lord என்று சொல்லுவது தவறா? Lord of the Cross என்று சொல்லுவது தவறா?

//கிறிஸ்துவின் சீஷர்களானவர்கள் புத்திர சுவிகாரத்தின் ஆவியை பெற்றவர்கள், யெகோவா தேவனை இனி யெகோவா என்று அழைக்காமல், கிறிஸ்து இயேசு எப்படி அப்பா, பிதாவே என்று அழைக்கிறாரோ, அந்தபடியே அழைக்கலாம்!! நம் கிறிஸ்துவின் சீஷர்களாக மாத்திரம் இல்லை, தேவனின் குமாரர்கள் குமாரத்திகளாக இருப்பதினால் கிறிஸ்துவின் உடன் சுதந்தரவாளிகளாகவும் இருக்கிறோம்!! இந்த தகுதியை பிதாவே (யெகோவா தேவனே) நமக்கு தருகிறார்!! இதோ கிறிஸ்து இயேசு எப்படி பிதாவை அப்பா பிதாவே என்று கூப்பிடிகிறாரோ, அப்படியே நாமும் கூப்பிடவே அழைக்கப்பட்டிருக்கிறோம்!! இனி மோசையை போல் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமானத்திற்கு கீழ்ப்பட்டவர்களாக இல்லை என்பதற்கு சாட்சியமே, நாம் இனி அடிமைத்தனத்தின் ஆவியில் இல்லாமல் தேவனின் குமாரனான கிறிஸ்து இயேசுவின் ஆவியை பெற்று யெகோவா தேவனை அப்பா பிதாவே என்றே அழைக்கிறோம்!! //

மென்! நீங்கள் மேலே எழுதின அனைத்தையும் ஏற்று கொள்ளுகிறேன்!! ஆனால் இதற்கும் இந்த விவாதத்திற்கும் என்ன தொடர்பு?

//யெகோவாவின் நாமத்தைக் கூட உச்சரிக்கவிரும்பாத இவர்களிடம் வேதத்தைப் பற்றியும், வேதத்தில் இருக்கும் விஷயங்களை குறித்தும் விவாதிப்பதில் என்ன பயன் வரப் போகின்றது. சாத்தானிடம் இயேசு சொல்கிறார், மத்தேயு 4:10 அப்பொழுது இயேசு: "அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்".

வேதம் தெளிவாக சொல்கிறது முழு வணக்கமும் அவருக்கே என்று!! இதை புரிந்துகொள்ள ஏன் சிக்கல் என்று தான் புரியவில்லை!!! //

 அது அவ்வளவு சுலபம் இல்லை நண்பர் டினோ. நான் கேட்பதை சிறிது சிந்தித்து விடை கொடுங்கள். தேவனாகிய கர்த்தர் என்றால் பிதாவை மட்டுமே குறிக்கிறது என்று எப்படி முடிவு செய்தீர்கள்? உதாரணத்திற்கு முட்செடியில் மோசேக்கு தரிசனமான தேவனாகிய கர்த்தர் யார்?

  

  • அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது. (யாத்திராகமம் 3:2)

  • ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குத் தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார். (யாத்திராகமம் 4:5)

  முட்செடியில் தரிசனமான தேவதூதனானவர் யார்? அவரை தேவனாகிய கர்த்தர் என்று அழைக்கலாமா?

தேவனாகிய கர்த்தர் பிதா மட்டுமே என்றால் தரிசனமான அவர் எப்படி தரிசனமாக முடியும்? சிந்தியுங்கள் விடை கிடைக்கும்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink Closed

"இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்"-எனும் திரியில் பேத மாணவர்களுடன் சுவிசேஷம் அறிவிப்பது குறித்தும் மிஷினரி பணிகள் குறித்தும் நண்பர் ஜோசப் அவர்கள் வாதிட்டு வருகிறார்; அது குறிப்பிடத்தகுந்த நிலையை எட்டியுள்ளதாலும் இந்த திரியில் ஜாண் அவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு (மேசியாவின்) எதிரிகளைத் திணறடித்து வருவதாலும் வாதத்தின் தன்மையைக் கூர்மைப்படுத்தும் பொருட்டு சுவிசேஷம் மற்றும் மிஷினரி பணிகள் சம்பந்தமான கருத்துக்களைத் தனியே பிரித்து தனி திரியாகப் பதிக்கப்படுகிறது;

நண்பர் ஜோசப் அவர்கள் ங்கே தன்னுடைய வாதங்களைத் தொடர அன்புடன் வேண்டுகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


(...) கேட்க மட்டுமே தெரிந்தவர்களிடம் (...) கேட்பவர்கள் பாக்கியவான்கள்;

(...) கேளாதவர்களிடத்திலே (...) கேளாதவர்கள் பாக்கியவான்கள்..!

அண்ணனுக்கு ஜே...ஜாண் அண்ணனுக்கு ஜே..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


//யெகோவா தேவனை கண்கள் கண்டவுடன் ஆதமானான் என்பதையும் இந்த வசனத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளவும்!!//
 
நீங்கள் ரெண்டாவது சொன்னது (கிறிஸ்து தேவனை கண்டான்):
//எனக்கு தெரிந்தது தேவனை ஒருவரும் ஒரு போதும் பார்த்தது இல்லை, அப்படி என்றால் ஏசாயா தேவனை அல்ல, தேவனின் ரூபத்தில் இருந்த தேவ குமாரன் கிறிஸ்துவை தான் பார்த்திருக்க வேண்டும்!! //
 
நீங்கள் மூன்றாவது சொன்னது (யேகோவா தேவனை கண்டான்):
//ஒன்று தேவனை ஒருவரும் காண முடியாது என்பதை நம்ப வேண்டும், அல்லது இவர்கள் கண்டார்கள் என்பது உண்மையாக இருக்க வேண்டும்!! தேவனை ஒருவரும் ஒருபோதும் காணமுடியாது என்பதால் தான் ஒருவன் கண்டு அதமாகிறான் என்று வசனம் சொல்லுகிறது, அப்படி என்றால் தேவனை ஒருவரும் கண்டதில்லை என்பதே உண்மை!!//
 
நீங்களே இன்னும் ஆலோசித்து ஒரு முடிவு செய்து இவர்கள் கண்ட யேகோவா தேவன் யார் என்று சொன்னால் நாம் தொடரலாம்.

நீங்கள் முன்று தடவை மாற்றியதில் பெரும்பான்மையை யேகோவா தேவன் பெறுவதால். யேகோவா தேவன் என்று அனுமானித்து கொண்டு தொடருகிறேன்.

காண முடியாது என்றால் எப்படி "கண்டு" அதமாக முடியும்? சரி அப்படியே பிதாவை பார்த்தாலும் ஏசாயாவும், ஆபிரகாமும் மரித்து போகவில்லையே? ஆனால் பிதா ஒருவனும் காணக்கூடாதவராக, அதரிசனமானவராக அல்லவா இருக்கிறார்?
 

//மிகாவேல் அல்லது மிக்கேல் என்பது மிக் மற்றும் ஏல் என்பதின் கூட்டு வார்த்தை!! மிக் என்றால் தற்சொரூபம், ஏல் என்றால் தேவன்!! ஆக தேவனின் தற்சொரூபமானவர் மிக்கேல் (மிகாவேல்)!! //

ஏசாயாவும், ஆபிரகாமும் கண்ட யேகோவா யார் என்று முடிவு செய்யாமல் இந்த விவாதங்களுக்குள் நான் இப்போது போக விரும்பவில்லை என்றாலும் மிகாவேல் என்ற பெயரை வைத்து இயேசு தான் மிகாவேல் என்று முடிவு செய்தால் மிகா தீர்க்கதரிஷிதான் யேகோவா தேவன் என்று முடிவு செய்யவேண்டும் ஏனெறால் Micah என்றால் Who is Like Jehova (YHWH).

-- Edited by John on Monday 18th of April 2011 06:06:13 AM


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink Closed

kovai bereans wrote

//எப்படி, இயேசு கிற்ஸ்து தன் அப்போஸ்தலர்களிடம், நீங்கள் போய் சர்வ ஜாதிகளுக்கும் சுவிசேஷம் சொல்லும் முன், அவர்களுக்கு மருத்துவ வசதிகள் இருக்கிறதா, அவர்கள் பிள்ளைகள் படிக்க வசதிகள் இருக்கிறதா போன்றவற்றை பார்த்து, அது இல்லாவிட்டால் அதற்கு முதலில் மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள் திறந்து அதன் பின் அதன் மூலமாக தான் கிறிஸ்துவின் போதனைகளை தரச்சொன்னாரோ!! 

சர்வ ஜாதிகளுக்கும் போய் சுவிசேஷம் அறிவிக்க சொன்ன கிறிஸ்துவின் கட்டளையை ஏற்று, ஏன் உங்கள் ஆடம்பர ஊழியர்கள் ஆஃப்ரிக்கா கண்டத்திற்கு போக பயப்படுகிறார்கள்!! நீங்கள் சொன்ன தென் தமிழகத்திலிருந்து மாத்திரமே ஊழியர்கள் என்று சொல்லும் ஒரு கூட்டம் இந்தியா முழுவதும் பரவியிருக்கிறார்கள்!! அப்படி இந்திய முழுவதும் இன்று மிஷனரிகள், ஊழியர்கள் என்று இருந்தாலும் இந்தியாவின் கிறிஸ்தவ ஜனத்தொகையை சொல்ல முடியுமா!! இத்துனை ஊழியர்கள் மிஷனரிகள் இருந்தாலும் ஒரே விசுவசத்தில் இருக்கிறார்களா?? இத்துனை ஊழியர்களும் மிஷனரிகள் இருந்தாலும் இந்தியா கிறிஸ்தவ நாடாக இல்லையே, அப்படி என்றால் இது தானே தேவனின் சித்தம்!! மனுஷ குமாரன் வரும் போது விசுவாசத்தை கான்பாரோ என்கிற வசனத்திற்கு அர்த்தம் தெரியுமா!??

முதலாவது ஊழியர்களையும் மிஷனரிகளையும் மக்களுக்கு முன்பாக சாட்சியாக வாழ சொல்லுங்கள், கிறிஸ்தவம் தானாகவே வளரும்!! இவர்களை ஒருவரும் பாடு பட சொல்லவில்லை!! இவர்கள் வேலை செய்துக்கொண்டே ஊழியம் செய்தால் அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பார்கள்!! டீவி ஊழியம், பத்திரிக்கை ஊழியம், தீர்க்கதரிசின ஊழியம், என்று ஒவ்வொரு பெயராக வைத்துக்கொண்டு அதற்கு பணம் கேட்பதை நிறுத்தினாலே கிறிஸ்தவம் தானாகவே வளரும்!! முதலில் ஒவ்வொரு ஊழியனும், தன் தெருவில் இருப்பவர்களை பரலோகம் கூட்டி போக முடியுமா என்று பார்க்கட்டும், பிறகு நாட்டையோ, உலகத்தையோ பார்க்கலாம்!! தென் தமிழகத்தில் நடக்கும் ஒரு விஷயம் மாத்திரமே கிறிஸ்தவமாகாது!! கீழே இருக்கும் இத்துனை சபைகள் (பதிவு செய்யப்பட்டவைகள் மாத்திரமே) இருந்தும் கிறிஸ்தவ சதவிகிதம் 2.3% மாத்திரமே என்பது உங்களுக்கு தெரியுமா!! நீங்கள் சொல்லும் இரகசிய கிறிஸ்தவர்களை சேர்த்தால் 3% வரும்!! இவர்களை வேதத்தின்படி கிறிஸ்தவர்கள் என்று சொல்லக்கூடாது!! அப்படி என்றால் 350 வருடங்களாக மிஷனரிகளினாலும், நம் ஆடம்பர ஊழியர்களின் கூட்டு முயற்சினாலும் 3% தான் கிறிஸ்தவர்கள் இருந்துக்கொண்டு இருப்பதே, இப்படி பட்ட ஊழியமோ மிஷனரிகளோ தேவனின் சித்தம் தானா என்று யோசித்து பாருங்கள்!! ஒரே பிரசங்கத்தில் 3000 பேர், 5000 பேர், அனுதினமும் சபைக்குள் வந்துக்கொண்டு இருந்த அப்போஸ்தலர்களின் ஊழியம் எங்கே, இன்று நீங்கள் பேசும் ஊழியமும் ஊழியர்களும் எங்கே!!??//

 

உனக்கு நன்மை செய்ய திராணி இருக்கும் போது அதை செய்யாமல் இராதே என்கிறது வேதம். இன்றைக்கும் மிஷனரிகள் ஆரம்பித்து வைத்த பள்ளிகள், கல்லூரிகள் வைத்திய சாலைகள் பலரது வாழ்க்கைக்கு கலங்கரை விளக்கமாக இருந்திருக்கின்றன. இந்த சிறியரில் ஒருவனுக்கு எதை செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்றார் இயேசு. நல்ல சமாரியன் கூட அடிபட்டு கிடந்தவனை காயம் கட்டி அவனது சிகிச்சைக்கு ஏற்பாடு தான் முதலில் செய்தான். ஒரு இடத்தில் நற்செய்தி அறிவிக்குமுன் அதற்கான பாதையை செவ்வைபண்ண வேண்டும். 

ஆனானப்பட்ட பவுலே, பொறாமையினாலாவது, என்னத்தினாலாவது சுவிஷேஷம் அறிவிக்கப்பட்டால் சரி என்கிறார். பொறாமையினால் அறிவிக்கப்படும் சுவிஷேஷத்தையே பவுல் சகித்துக்கொள்கிறார், ஏற்றுக்கொள்கிறார், நீங்கள் நல்ல நோக்கத்தினால் செய்யப்படும் மிஷனரி பணியையே குறை சொல்கிறீர்கள். எண்ணிக்கையை மாத்திரம் வைத்து கிறிஸ்தவ சபை எங்கே வளர்ந்திருக்கிறது என்கிறீர்கள், அன்றைக்கு பெருவெள்ளம் வந்த போது நோவாவின் குடும்பத்தினர் மாத்திரம் தானே தப்பித்தனர், சோதோம் பட்டணத்தில் 10 நீதிமாங்களாவது தேறுவார்களா என்றுதானே ஆண்டவர் பார்த்தார். எண்ணிக்கையை விட மனமாற்றத்தின் தன்மையை தானே தேவன் பார்க்கிறார். மனந்திரும்புகின்ற ஒரு பாவியின் நிமித்தம் பரலோகமே சந்தோஷப்படும் என்கிற வசனம் உங்களுக்கு தெரியவில்லையா, இன்றைக்கு இந்திய நாட்டிற்கு வெள்ளை மிஷனரிகள் வந்திராவிட்டால் நீங்கள் ரட்சிப்பை குறித்து அறிந்திருப்பீர்களா? இல்லை இப்படி விவாதம் செய்யவாவது நமக்கு சந்தர்ப்பம் இருந்திருக்குமா, தயவு செய்து மிஷனரிப்பணியை மட்டுப்படுத்தி பேசாதீர்கள். உங்காளுக்கு வேண்டுமானால் மிஷனரிப்பணியில் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம், அதற்கான ஈடேற்றத்தில் இருப்பவர்களை சந்தேகத்திற்குள்ளாக்காதீர்கள்.

நான் பேசிக்கொண்டிருப்பது நற்செய்தி அறிவிக்கும் மிஷனரிப்பணியை, ஆடம்பர ஊழியர்களை பற்றி அல்ல, அவர்களது ஆடம்பர வாழ்க்கையை நான் ஆதரிப்பவன் அல்ல. ஊழியத்தில் ஆடம்பரம் தேவையில்லை என்ற கருத்துடையவன் தான் நானும். இந்த ஒரு விஷயத்தில் உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.

இந்தியா கிறிஸ்தவ நாடாக இல்லை என அங்கலாய்க்கிறீர்கள், உலகத்தின் எத்தனையோ கிறிஸ்தவ நாடுகளின் ஜனத்தொகையை விட இந்திய கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என அறிவீர்களா. நற்செய்தி பணியினால் ரட்சிப்படைந்தோர் உங்கள் கோவை பெரெயன்ஸ் அலுவலகத்திற்கு வந்து தங்கள் பெயரை பதிவு செய்தால் தான் சுவிஷேஷப்பணியின் நம்பகத்தன்மையை அங்கீகரிப்பீர்களோ? தேவன் விரும்புவது மனமாற்றமேயன்றி கெசட்டில் போய் கிறிஸ்தவர்கள் என பதிவு செய்வதை அல்ல. எனவே தான் சொல்கிறேன் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை எடை போடாதீர்கள் என.

ஆப்பிரிக்கா போகவேண்டியது தானே என்கிறீர்கள், நாம் கேள்விப்பட்டதை அறியாத எத்தனையோ இனங்கள் ஜாதிகள் இந்தியாவில் இருக்கின்றனவே. இந்தியாவில் ஊழியம் செய்வது எளிது என தப்புக்கணக்கு போடாதீர்கள், அதுவும் சுவிஷேஷப்பணிக்கு எதிரான மன நிலையில் இருக்கும் இடங்களில் மிஷனரிகள் எப்படி உயிரை பணயம் வைத்து ஊழியம் செய்கிறார்கள் தெரியுமா?

மிஷனரி ஊழியம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் ஜெம்ஸ் ஊழியத்தை எப்படி அகஸ்டின் ஜெபக்குமார் ஆரம்பித்தார் என விசாரித்து பாருங்கள். பின் தங்கிய, மிஷனரிகளின் கல்லறை தோட்டம் என்றழைக்கப்பட்ட பீகாரில் ஜெம்ஸ் ஊழியம் கொண்டுவந்துள்ள மாற்றத்தை வாசித்து பாருங்கள் தெரியும். அவரை போன்ற மிஷனரிகள் பென்ஸ் காரில் போகிறவர்கள் அல்லர், அல்லது அமெரிக்காவுக்கோ ஆஸ்திரேலியாவுக்கோ விடுமுறைக்கு செல்கிறவர்கள் அல்ல , ஒரு நாளின் ஒவ்வொரு மணித்துளியையும் எப்படி கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கவேண்டும் என யோசிப்பவர்கள். எனவே தயவு செய்து மிஷனரி பணியை தேவசித்தம் உள்ள ஊழியம் அல்ல என மட்டுப்படுத்தவேண்டாம். உங்களால் முடிந்தால் அகஸ்டின் ஜெபக்குமார் எழுதிய "நீ இல்லாவிட்டால்" என்ற புத்தகத்தை வாசித்து பாருங்கள் தெரியும், தேவன் எப்படி அவரது சித்தத்தை நிறைவேற்ற அவரை அழைத்தார் என. நானெல்லாம் அவரை பற்றி வாசிப்பதற்கு அவர் என்ன பெரிய ஆளா என்றால் சாரி, இதற்கு மேல் ஒன்னும் சொல்வதற்கில்லை

இப்போதும் இதையெல்லாம் பெரிதாக நீங்கள் நினைப்பவர் அல்ல என்று தான் எண்ணுகிறேன், ஒருவேளை என் எண்ணம் தவறானால் மிஷனரிப்ணியை பற்றி சிறிதேனும் அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். உலகப்பிரகாரமான நாட்டின் ராணுவத்தைற்கே இவ்வளவு உணர்ச்சி பெருக்கிட்ட நீங்கள், திறப்பின் வாசலில் நின்று அந்தகார வ்ல்லமைகளோடும் எதிர்ப்புகளோடும் போராடும் மிஷனரிகளை பற்றியும் கரிசனையுடன் சற்று சிந்தியுங்கள். மிஷனரி பணியை பற்றி இவ்வளவு எழுத காரணம். அது முழுமையான தேவ சித்தத்தின் படி நடைபெறும் பணி என்பதை நான் முழுமையாக நம்புவதால் தான். பல மிஷனரிகளை எங்கள் உறவினர்களின் குடும்பத்தினர் களப்பணிக்கு அனுப்பியதால் எனக்கு தெரியும் அது எப்படிப்பட்ட பணி என.



-- Edited by joseph on Sunday 17th of April 2011 11:47:30 PM



__________________
«First  <  1 2 3 4 5  >  Last»  | Page of 5  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard