இந்த தொடர்கட்டுரை, நமது இந்திய துணைக்கண்டத்தில் பெரும்பான்மையான மக்களும், இப்போது மேலைநாடுகளில் பரவிவரும் கலாச்சாரமான இந்துத்துவத்தை பற்றி எனக்கு தோன்றும் கேள்விகளின் தொகுப்பாகும். ஏற்கனவே, நமது தளத்தில் வெளிவந்த கட்டுரையான இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா?? பெரும் பரபரப்பை உண்டு பண்ணியது. அதில் கேட்கப்பட்ட கேள்விகளை ஆழமாக இந்துக்கள் யோசித்திருந்தாலே பலர் அதன் உண்மை முகத்தை உணர்ந்திருப்பர்.
இந்த தொடர் கட்டுரை என்னுடையதாக மட்டுமில்லாமல், நண்பர்கள் அனைவரும் பங்களித்து, உலகிற்கு உண்மையை விளங்கசெய்வோமாக. வாரத்திற்கு ஒரு புதிய செய்தியாகிலும் இதில் வெளியாகும்.
தொன்மையான மதம், வேத மதமென்று வேடமிட்டு வந்த இந்த மதத்தின் முகத்திரை இனி நிறைய கிழிக்கப்படும். நண்பர்கள், இந்த தலைப்பை அடிக்கடி பார்வையிட ஊக்குவிக்க படுகிறார்கள். ஏனெனில் காமெடிக்கும் இந்துத்துவத்தில் பஞ்சம் கிடையாது. மாயமானகிய இந்துத்துவத்தின் பின்னால் ஓடும் இந்த ராமன்களையும், சீதைகளையும் வழிநடத்த உங்களுக்கு இந்த தொடர் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையுடன், அவர்கள் கருத்துக்களை குறித்து சிந்திக்கவும் (சிலசமயம் சிரிக்கவும்) வைக்க முயல்கிறேன்.
இந்துத்துவம், கருட புராணம் போன்ற நூல்களின் மூலம் சொர்க்கம், நரகம் போன்றவைகளை சொல்லுகிறது, பாவம் செய்தவன் நரகத்தை அடைவான், நல்லவன் எல்லாம் சொர்க்கத்தை அடைவான் என. ஆனால், இதில் சுவாரசியமான பல விஷயங்கள் உள்ளது. சொர்க்கத்தை பற்றிய இந்துத்துவ கருத்து இவ்வாறு இருக்கிறது:
சொர்க்கத்தின் தலைவன் உடலெல்லாம் கண்கள்(???) கொண்ட இந்திரன். (இந்திரனை பற்றிய கதைகளை படித்தவர்கள், உண்மையில் இவர் எப்படி சொர்க்கத்தின் அதிபதி ஆனார் என்று ஆச்சர்யபடுவார்கள்).
ரம்பா, ஊர்வசி, மேனகை, போன்ற அழகிய நங்கையரின் நாட்டியங்கள் நடைபெறும் இடம் அந்த சொர்க்கம். இவர்களை பற்றிய கதைகளும் குழந்தைகளுக்கு சொல்ல முடியாதவையாக இருக்கிறது. (ஆனால், இவர்கள் இஸ்லாமியரின் "சொர்க்கத்தின் எழுபது கண்ணிகள்" குறித்து கேலி பேசுகின்றனர்).
சொர்க்கத்தில் பருகப்படும் ஒரு பானம் "சோமபானம்". அந்த பானத்தின் அருமை பெருமைகளை நாம் நமது இந்திய "குடி"மக்களுக்கு சொல்லிதர தேவையில்லை.
தேவலோகமாகிய சொர்க்கத்திலும் பல குழப்பங்கள், பிரச்சனைகள், சண்டைகள் நிகழலாம். (ஆதாரம், இந்து நூல்களே, முக்கிய சூத்திரதாரி: நாரதர்).
மேலும், அங்கேயே காதல் செய்யலாம், கல்யாணம் செய்யலாம், குழந்தை பெற்றுக்கொள்ளலாம் (அடுத்தவன் மனைவியை இச்சிப்பவந்தான் தலைவனாக இருக்கிறான், அதனால் கவனம் தேவை).
மேலே நாம் கண்ட (இந்துக்களின்) சொர்க்கத்திற்கும், கேளிக்கை விடுதிகளுக்கும் எனக்கு எதுவும் வித்தியாசம் தெரிவதில்லை. இதில் புனிதம், பரிசுத்தம், போன்றவைகளுக்கு ஏதாவது இடமுண்ட என்று பார்த்தால், எதுவுமே இல்லை. அவர்களை பொறுத்தவரை, சொர்க்கம் என்பது ஒரு "உல்லாசபுரி".
ஒரு மண்டலம் (நாற்பத்தி எட்டு நாட்கள்) விரதம் இருந்துவிட்டு, பிறகு மாலையை கழட்டியவுடன், டாஸ்மாக் தேடிச்செல்பவன் போல. வாழ்க்கையில் கொஞ்சம் கட்டுகோப்பாய் இருந்தால், உல்லாசபுரியாகிய சொர்க்கத்தில், பூவுலகில் விட்டு வைத்ததை எல்லாம் அனுபவிக்கலாம் என்று பலர் வாழ்கிறார்கள்.
நரகத்தை பற்றி அதிகம் ஒன்றும் இல்லை, அங்கே பாவம் செய்தவர்கள் கஷ்ட்டப்படுவார்கள், அங்கே அரக்கர்கள் மனிதர்களை கொதிக்கும் எண்ணெய்க்கொப்பறை, புழுக்கள், பூச்சிகள், போன்றவற்றால் கொடுமைப்படுத்துவார்கள், என்றெல்லாம் எழுதியுள்ளார்கள்.(ஆனால், கிறிஸ்துவர்கள் நரகத்தை பற்றி பேசினால் இவர்களுக்கெல்லாம் கோவம் பொத்துக்கொண்டு வருகிறது.)
ஆனால், போதுமான காலம் வரை தடிக்கப்பட்டு, பிறகு விடுதளையடைவார்கள் என்று ஒரு சாரார் நம்புகிறார்கள்.
இதில் இன்னொரு கூட்டத்தை பற்றி அடுத்த பதிப்பில் பார்ப்போம்.
பொதுவாக யாரையும் குற்றம் சொல்ல அஞ்சும் நான், இப்போது ஏன் இவ்வளவு பகிரங்கமாக இந்துத்துவத்தை குற்றம் சொல்கிறேன்? கிறிஸ்த்துவத்தின், கிறிஸ்துவின் மேன்மையை மாத்திரம் அறிவித்து கொண்டு இருக்கலாமே?
முதலாவதாக, நல்ல உணவின் மகத்துவத்தை சொல்வது போலவே, விஷத்தின் அபாயத்தையும் சொல்வது முக்கியம். தந்திரக்காரனாகிய சாத்தான், நம்மை நேரடியாக தாக்காமல் பல சமயம், மறைமுகமாக தாக்குவான். அவனுடைய இப்போதைய தந்திரம் என்னவென்றால், கிரிஸ்த்துவமும் நல்ல வழிதான், ஆனால் இந்துத்துவத்தால் யாருக்கும் பாதகம் இல்லை. அதனால், அதனையும் அனுசரிப்பதில் தவறில்லை (வேண்டுமானால், இந்துக்களும் இயேசுவை(யும்) வழிபடுவார்கள்), இதனால் உலகம் சமாதானமாயிருக்கும் என்று நயம் காட்டுவார்கள். இதனால், சாத்தான் அடையும் நன்மை என்னவென்றால், இரண்டு எஜமானனுக்கு ஊழியம் செய்யமுடியாமல், விசுவாசிகள் சோர்வுருவார்கள், சுவிசேஷம் அறிவிக்கும் பணி முடக்கப்படும். இதனால் பெருவாரியான ஜனங்களை நரகத்திற்கு வாரிக்கொள்ளலாம் என்று கணக்கு போடுகிறார்கள். கிறிஸ்துவை தவிர, அனைத்து வழிகளும் நரகத்திற்கே அழைத்து செல்லும். அதனால், அதன் கொடுமைகளை தைரியமாக சொல்லுவோம்.
இந்துத்துவத்தில், பிறப்பு, மற்றும் மறுபிறப்பு கொள்கைகள் இன்னும் காமெடி ஆனது.ஒருவனது பிறப்புக்கு காரணம்,அவனது முன்பிறவியில் செய்த கருமங்களே காரணமாம் (என்ன கருமமோ).
ஒருவது அடுத்த பிறவியில் வரும் நன்மைக்கும் தீமைக்கும், அவன் இந்த பிறவியில் செய்யும் நன்மை தீமைகளே காரணமாம். இந்த பிறவியில் நடக்கும் விஷயங்களுக்கு கடந்த பிறவியின் கருமங்களே காரணமாம். அது சரிடா,ஒருவன் பிறவிக்கு, அவன் முற்பிறவி பலனே காரணமென்றால், முதல் முதல் பிறந்ததற்கு என்ன காரணமென்றால், அப்படி முதல் பிறவி என்று ஒன்று இல்லவே இல்லை, எல்லா பிறவிக்கும் முன்னாள் இன்னொரு முற்பிறவி இருக்குமென மொக்கையான,அறிவியல்(???) ரீதியில் (இவர்கள் அனைத்தையும் அறிவியல் ரீதியாக அனுகுபவர்கலாமே), பதில் வருகிறது.
சரி, இப்படி தொடர்ச்சியாக பிறவிகளாக போய்கொண்டிருந்தால் எங்கேயடா உங்கள் சொர்க்கமும் நரகமுமேன்றால், சரியான பதிலில்லை. தங்களுக்கு சொர்க்கமேன்றோ, நரகமேன்றோ ஒன்று இருக்கிறதா? அல்லது இந்த பிறவி சுழற்ச்சிதானா, என்று நித்தியத்தை குறித்த எந்த அறிவுமில்லாமல் இருக்கிறார்கள். தெளிவாக எந்த ஒரு சித்தாந்தமும் இல்லாமல், தான்தோன்றித்தனமாக இருப்பதே இன்றைய இந்துத்துவமாக இருக்கிறது.
இப்படி தான்தோன்றியாய், மாய வலையில் உள்ள இந்த மக்கள் இரட்சிக்கப்பட, மிகுந்த ஜெபத்தோடு, நாம் நமக்கு தெரிந்த உண்மைகளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஆமாம்,பல வேளைகளில் இதனால் நாம் அவமானப்படுத்தப்படலாம், அடிக்கப்படலாம், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், வேறு வழியில்லை. பின்னாளில், அவர்கள், நம்மை நோக்கி "உண்மை தெரிந்த நீ என்னிடம் சொல்லி இருக்கலாமே" என்று கேட்டால் நாம் என்ன சொல்ல முடியும்?
சகோ.அசோக் அழகான கேள்விகளோடு அவர்களின் குழறுபடிகளை சொல்லியிருக்கிறீர்கள். இது அனேக இந்து மக்கள் உண்மையை அறிய ஒரு வாய்ப்பாக இருக்கும். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
இந்து சமயத்தைப் பற்றிய நல்ல குறிப்புகள் தந்துள்ளீர்கள். இன்னும் சற்று ஆழமாக செல்லாம். பொதுவாக இந்து சமயத்தினருக்கே அவர்களின் மதம் குறித்த விபரங்கள் தெரிவதில்லை. முறையான வேதநூல்கள் இல்லாதிருப்பதும். முரண்பாடுகள் கொண்டிருப்பதும் எது சரியான விபரம், எது தவறான விடயம் என்று தீர்மானிப்பதில் கூட இந்து சமயத்தவரிடையே கருத்துவேறுபாடுகள் இருப்பதை அவதானிக்கலாம்.
இந்துக்களிடத்தில் திருமணமும் ஒரு சிக்கலான விஷயம்.ஒருவன் எத்தனை பெண்களை மணக்கலாம், ஒருபெண் எத்தனை ஆண்களை மணக்கலாம், என்று வரைமுரைஎல்லாம் இங்கில்லை. எந்த வயதில் மணக்கலாம்
என்றும் விளக்கமில்லை. ஓரினசேர்க்கையும் சில புராணங்கள் மூலமாக
ஊக்குவிக்கப்படுகிறது. இதனால் ஒரு சராசரி இந்து தன் திருமனவாழ்விற்கு,
இந்துத்துவத்தில் எந்த ஒரு அறிவுரையோ விளக்கமோ பெற முடிவதில்லை.
மாறாக தாங்கள் திருமணத்தில் செய்யும் தவறுகளை நியாயபடுத்தவே,
இந்துத்துவத்தில் நிறைய வழிமுறைகள் உள்ளது.
"ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்"
இது பொதுவாக இந்துக்கள் மத்தியில் உள்ள ஒரு வழக்குச்சொல். இதை நம்
தமிழ் திரையுலகம் முதல்கொண்டு அனைவரும் வழிமொழிகிறார்கள். இப்படி
பொய் சொல்லலாம் என்று கூறுபவர்கள், தனக்கு வேலை இல்லாததை
மறைத்து ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்தால் ஒத்துக்கொள்வார்களா?
நான் கூறிய இந்த உவமை மிக சாதாரணமானது, இதைவிட பல பெரிய பொய்களை
சொல்லி கல்யாணம் பண்ணி, பின்னர் தாங்கள் செய்ததை நியாயப்படுத்துபவர்கள்
உண்டு. இதற்க்கு வசதியாகவே இவர்கள் தெய்வங்களும், பொய்களை கூறி காதல்
கல்யாணம் செய்துள்ளனர்.
ஒருவனுக்கு ஒருத்தியா?
ஒருவனுக்கு ஒருத்தி என்று ராமாயணம் கூறுவதாக கதையளப்பார்கள். ஆனால்
ராமாயணம் "ஒருவனுகொருத்தி" என்பதை கட்டாயப்படுத்தி அழுத்தம் திருத்தமாக
கூறியதா? அதே ராமன், கிருஷ்ணாவதாரத்தில் பலதார மணத்தையும்,
ஆயிரம் முறை போய் சொல்லி, என்பதுதான் ஆயிரம் பொய் சொல்லி யாகி விட்டதாம்!
பல தார மணங்கள் - நம்ம சாலமோன் ராஜாவை யார் ஜெயிக்க முடியும் இதில்? ஆபிரகாம், தாவீதும் அப்படித்தான்.
நான் நினைத்ததுண்டு - பத்து கட்டளைகளில் ஒரு கட்டளையாக - You Shall Not Have More Than One Wife - என்று ஆண்டவர் சொல்லியிருந்திருக்கலாம் என்று.
நம் வேதம் போல் நம் இந்து சகோதர சகோதரிகளுக்கு ஒரு புத்தகம் இல்லை. அவர்கள் பல வேதங்கள், புராணங்கள், குருமார்கள் சொல்வதை கேட்டு ஒரு வழியாகி விடுகிறார்கள்.
//பல தார மணங்கள் - நம்ம சாலமோன் ராஜாவை யார் ஜெயிக்க முடியும் இதில்? ஆபிரகாம், தாவீதும் அப்படித்தான்//
என்ன கோல்டா இப்படி சொல்லிட்டீங்க!! இங்கு சகோ.அசோக் அவர்கள் கடவுள் என்று சொல்லப்படுகிறவர்களின் நிலையை அல்லவா சொல்லியிருக்கிறார். சாலமோன், தாவீது போன்றோர்கள் மனிதர்களல்லவா?
//பல தார மணங்கள் - நம்ம சாலமோன் ராஜாவை யார் ஜெயிக்க முடியும் இதில்? ஆபிரகாம், தாவீதும் அப்படித்தான்//
என்ன கோல்டா இப்படி சொல்லிட்டீங்க!! இங்கு சகோ.அசோக் அவர்கள் கடவுள் என்று சொல்லப்படுகிறவர்களின் நிலையை அல்லவா சொல்லியிருக்கிறார். சாலமோன், தாவீது போன்றோர்கள் மனிதர்களல்லவா?
அது அப்படியா? சரியாக கவனிக்க வில்லை. மன்னிக்கவும். :)
மதுரை பாண்டி கோயில் சாமி ரொம்ப துடியான் சாமி என்று ஒருவர் சொன்னதற்கு, படைத்தது ஒரே கடவுள் என்றால், ஏன் அவர் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார் என்று கேட்டேன். பாவம் கொஞ்சம் முழிச்சாங்க.
கொஞசம் யோசித்தார்கள் என்றால் போதும். வெளியே வந்து விடுவார்கள். கொஞ்சம் படித்தவர்கள் வேறு மாதிரி பாதையில், யோகா, மெடிடேஷன் என்று போகிறார்கள். எத்தனை எத்தனை வஞ்சக வலைகளை சாத்தான் விரித்து வைத்திருக்கிறான்.
இந்து மதம் என்பது பல்வேறு இனக்குழுக்களின் பழங்குடி புராண கதைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் எடுத்து ஒட்ட வைத்து உருவாக்கப்பட்டுள்ளதால் அனேக குழப்பங்கள் காணப்படுகின்றன.
பொதுவான கண்ணோட்டத்தில் பார்ப்போமானால் இந்து மதமானது பழைய உடன்படிக்கை கால கோட்பாடுகளை ஆதாரமாகக் கொண்டது என்று அறியலாம் உதாரணமாக
ஆசாரிய முறைமையின் படியான கற்ப கிரக பிரவேசம்(பிராமனர்கள் மட்டும் இங்கே லேவியர்கள் மட்டும்),
இரண்டாவது பூஜையின் போது மணி அடிப்பது, பழைய உடன் படிக்கை காலத்தில் மகா பரிசுத்த ஸ்தலத்தில் திரைக்கு மறுபக்கம் செல்லும் ஆசாரியன் உயிரோடு இருப்பதற்கு அடையாளமாக இந்த மனி அடிக்கப்படுமாம், அந்த மனிச் சத்தம் கேட்பது நின்று போனால் அவனுடைய இருப்பில் கட்டியிருக்கும் கயிரை (இன்றைய சபை ஆயர்கள் இடுப்பில் இருப்பது போல ஆனால் நீளமாக) பிடித்து இழுப்பார்களாம்,
அடுத்தது பலி செலுத்துதல், இன்றும் அனேக கோவில் திருவிழாக்களில் மிருகங்கள் பலியாகச் செலுத்தப்படுகிறது, அதில் இரத்தம் தெளித்தல், குடித்தல், என்று இரத்தத்திற்கு பிரதான இடம் (அதற்கு பின்னால் விருந்துண்டு குடித்து வெரிப்பது வேறு) உண்டு.
அடுத்ததாக இந்து மதத்தில் ஆரிய திராவிட வித்தியாசங்கள் உண்டு ஆரிய முறைமையானது முழுக்க முழுக்க பழைய உடன்படிக்கை அடிப்படையிலேயே கட்டப்பட்டுள்ளது
திராவிட முறையானது இனக்குழு தலைவர்களையும் இயற்கையையும் அடிப்படையாகக் கொண்டது, உதாரணமாக முருகன், இவன் ஒரு குறவர் இனத் தலைவனாக மதிக்கப்படுகிறான், இவன் திருமனம் செய்தவர்களுல் ஒருத்தி குறத்தி, மேலும் மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்தில் தலைவனாகவும் அறியப்படுகிறான். அப்பகுதியின் பூர்வ குடிகள் குறவர்கள்.
ஆகவே தான் மலை கண்ட பக்கமெல்லாம் முருகன் கோவில்கள் உள்ளன,
அதே போல மாரியம்மன் கோவில் இன்று கோடை காலத்தில் பார்த்தால் எல்லா மாரியம்மன் கோவில்களும் சாட்டப்படுகின்றன, காரணம் மாரி என்றால் மழை என்று பொருள், அந்த மழையை ஒரு பெண்ணாக உருவகம் செய்து அந்த பெண்ணை மகிழ்விக்க அவளுக்கு திருமணம் செய்து வைத்து (கணவனால வருவது பாலை மர கம்பம்), அவளை மகிழ்வித்து இந்த பூமிக்கு அழைத்து கோடையின் உக்கிரத்தை தணிக்க மக்கள் எடுக்கும் முயற்சிகளை நாம் இன்றும் பார்க்கலாம்.
ஆனால் ஆரிய முறை இந்து கொள்கைகளின் படி வருண பகவான் தான் மழை தரும் கடவுள் என்று சொல்லப்படுகிறது.
இன்றைய இந்து மதம் சொர்க்கம் நரகம் ஆகியவைகளை மறந்து விட்டது, அல்லது நிரூபிக்க முடியாததால் மறைக்கப்பட்டு விட்டது, இன்று இந்து மதம் பிரதானமாக நம்புவது யோகா தியானம் ஆகியவைகள் மூலம் எப்படியாவது மன அமைதி தேடுவது என்ற ஒற்றை வரியில் அடக்கி விடக்கூடியதாக மாறிவிட்டது.
இந்த யோகாவும் தியானமும் இன்று மனதை அமைதிப் படுத்தி எப்படி இன்னும் அதிகமாக டென்ஷன் இல்லாமல் பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்திலேயே கற்கப்படுகிறது அல்லது கற்பிக்கப்படுகிறது,
ஆனால் உலகம் தரக்கூடாத சமாதாணம் ஒன்று உள்ளது அது ஒரு குழந்தை தாயின் மார்பில் படுத்து உறங்கும் நிம்மதியான நிலை இதைத்தான் நம்முடைய இரட்சகர் வைத்து விட்டுப் போயிருக்கிறார்.
இதுவும் ஒரு மதம் என்ற அடிப்படையில் மேலோட்டமாக (பெயர் கிறிஸ்தவர்கள் உட்பட) பார்ப்பதால் அந்த சமாதாணத்தை ருசிக்க முடியாமையாலும் தவறான பிரச்சாரத்தாலும் ( சமாதாணத்தை அனுபவிக்க கொடுக்க முயலாததைக் குறித்து சொல்கிறேன்),
நிச்சயமாக ஒவ்வொரு ஆத்துமாவும் வாஞ்சிப்பது கிறிஸ்துவின் அன்பையும் சமாதாணத்தையுமே, ஆனால் தெரிந்து கொள்ளப்பட்ட சிலர் மாத்திரமே அதை கண்டுபிடிக்க கண்கள் திறக்கப்பட்டிருப்பதும் உண்மையே...............
//இன்று இந்து மதம் பிரதானமாக நம்புவது யோகா தியானம் ஆகியவைகள் மூலம் எப்படியாவது மன அமைதி தேடுவது என்ற ஒற்றை வரியில் அடக்கி விடக்கூடியதாக மாறிவிட்டது.
இந்த யோகாவும் தியானமும் இன்று மனதை அமைதிப் படுத்தி எப்படி இன்னும் அதிகமாக டென்ஷன் இல்லாமல் பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்திலேயே கற்கப்படுகிறது அல்லது கற்பிக்கப்படுகிறது, //
போன வாரம் மதுரையில் நடந்த ஈஷா யோகா தியான வகுப்பில் கலந்து கொண்டவர்கள் 10,040 பேராம்.
யோகா, தியானம் போன்றவற்றின் ஆபத்து குறித்தும் யாராவது எழுதலாம். பல கிறிஸ்தவர்கள் கூட யோகா செய்கிறார்கள்.
யோகா, தியானம் போன்றவற்றின் ஆபத்து குறித்தும் யாராவது எழுதலாம். பல கிறிஸ்தவர்கள் கூட யோகா செய்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் நம்முடைய டாக்டர் அண்ணா எழுதிய யோகாவைக் குறித்த கட்டுரை, அப்போது பெறும் வரவேற்பையும், அதே சமயம் எதிர்த்தரப்பிலிருந்து கடுமையான தாக்குதலையும் சந்தித்தது அந்த கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்
யோகா, தியானம் போன்றவற்றின் ஆபத்து குறித்தும் யாராவது எழுதலாம். பல கிறிஸ்தவர்கள் கூட யோகா செய்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் நம்முடைய டாக்டர் அண்ணா எழுதிய யோகாவைக் குறித்த கட்டுரை, அப்போது பெறும் வரவேற்பையும், அதே சமயம் எதிர்த்தரப்பிலிருந்து கடுமையான தாக்குதலையும் சந்தித்தது அந்த கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்
மிக தைரியமாக உண்மையை உள்ளபடி நன்றாக எழுதியிருக்கிறார். கட்டுரை காட்டிய உஙகளுக்கு நன்றி! கட்டுரை எழுதிய அவ்ருக்கு என் பாராட்டுக்கள்!
//பல தார மணங்கள் - நம்ம சாலமோன் ராஜாவை யார் ஜெயிக்க முடியும் இதில்? ஆபிரகாம், தாவீதும் அப்படித்தான்.//
சகோ.கோல்டா அவர்களே, வேதத்தில் பலதார மணத்தை எப்போதும் பரிந்துரைத்ததில்லை. அதனால் வரும் தொல்லைகளையே சொல்லியுள்ளது. எந்த ஒரு தேவமனுஷனாயிருந்தாலும் (ஆபிரஹாம், தாவீது, சாலமன்) பலதார மணத்தால் கஷ்ட்டமே அனுபவித்தனர். ஆனால், இந்துத்துவத்தில் சொல்லப்படவில்லை. நம் நண்பர் EBI குறிப்பிட்டது போல், அவர்கள் தெய்வங்களே அதை செய்து அதை பெருமையாக்கினர். அசோக்
ராமாயணத்தையும், ராமனையும் குறித்து நான் எழுதிய கட்டுரையை "ராமாயணம்" என்ற தலைப்பில் பாருங்கள். தேவையில்லாத hype கொடுக்கப்பட்ட ராமன் என்ற கதாபாத்திரத்தை உண்மையின் வெளிச்சத்தில் பாருங்கள்.
சகோதரி. கோல்டவின் வேண்டுகோள் மிக நியாயமானது. பலர் இந்த யோகம், தியானம் இன்று சென்று தங்கள் ஆன்மீக வாழ்க்கையை கெடுத்து கொள்கிறார்கள். என் கிறிஸ்துவ வாழ்க்கைக்கு முன். என் ஆன்மீக தேடுதலின் நிமித்தம், நான் பல யோகங்கள், தியான முறைகள் கற்றதுண்டு. ஒரு பத்து வருடங்களுக்கு மேல், இந்த யோகங்களை கற்றறிய அலைந்து திரிந்தேன். அவை:
ராஜயோகம் (பிரம்ம குமாரிகள் எனப்படும் குழுவினரால் கற்றுதரப்படுவது)