Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எபேசுவின் துஷ்ட மிருகங்கள்..!


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
RE: எபேசுவின் துஷ்ட மிருகங்கள்..!
Permalink  
 


colvin wrote:
எல்லாம் சரி இயேசு யார் ? பரித்த ஆவி யார் என்பதை இன்னும் வெளிப்படையாக  சொல்லாமல், இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறீர்களே? அது ஏன் சகோதரரே!.

அதுதானே ஏன் இது பற்றி அந்த அன்பு57 வாய்திறக்க மறுக்கிறது கொஞ்சம் சொல்லச் சொல்லுங்களேன். இறைவன் தளத்தில் அது நம்முடைய நாதரைப்பற்றி ஏதேதோ சொல்ல வந்த கடைசியில் பாதியிலேயே ஓடிவிட்டது. 

அது சொல்ல வந்ததை மாணவன் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் வேறொன்று அவரை மிகாவேல் தூதன் என்று சொல்லலாமா என்று கேட்டு பாசாங்கு செய்தது அப்புறம் இவைகளுக்கு ஏதோ பயம் உண்டாகி
இப்போது திரித்துவம் திரித்துவம் என்று திரித்து திரித்து உளரிக்கொண்டிருக்கின்றன‌...

 



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 


Bro. Anbu Wrote 

மானிட அறிவால் கிரகிக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாத திரித்துவ உபதேசத்தை எந்த மானிடன் உருவாக்கி, அதற்கு “திரித்துவ உபதேசம்” எனப் பெயர் வைத்தான்?

கிரகிக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாத ஓர் உபதேசத்தால் யாருக்கு என்ன பயன்?



பைபிள் புரிந்து கொள்ள முடியாத விடயங்கள் பலஉள்ளது. சிலவற்றை விசுவாசத்தின் அடிப்படையில் ஏற்க வேண்டும். எல்லாவற்றையும் ஆராய்ச்சி, விஞ்ஞான முடிவுகளின் பிரகாரம்தான் ஏற்பேன் என்றால் உங்கள் அறிவு அவ்வளவுதான். தேவனைப் பற்றி முழுமையாக உங்கள் அறிவால் கிரகிக்க முடியுமா? அவ்வாறு இல்லையெனில் தேவனை நீங்கள் வழிபடுவதும் அர்த்தமற்றதே!(உங்கள் வாதத்தின்படி)

மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின் படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள். (உபா 29:29)

வசனம் தெளிவானது தானே!

திரித்துவம் மனித கண்டுபிடிப்பு அல்ல. 3 நபர்கள் ஒரே தேவன். நாம் இச்சத்தியத்தை மானுடமொழிகளில் விளக்குவதற்கு திரித்துவம் என்ற பதத்தை பாவிக்கிறோம். வேதாகமத்தில் திரித்துவம் என்ற பதம் இல்லை என்பது உண்மையாயினும் திரித்துவ சத்தியத்தை மறைக்க முடியாது. இயேசுவைப் பற்றி படிக்கும்போது அவர் ஒரு சாதாரண நபராகவோ அன்றேல் ஒரு தேவதூதராவோ இருக்க வாய்பில்லை என்பது விளங்கும்.

எல்லாம் சரி இயேசு யார் ? பரித்த ஆவி யார் என்பதை இன்னும் வெளிப்படையாக  சொல்லாமல், இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறீர்களே? அது ஏன் சகோதரரே!. உங்களுக்குதான் மூலமொழி பரிட்சயம் அதிகமாயிற்றே!







-- Edited by colvin on Friday 28th of January 2011 03:58:23 PM

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

கொல்வின் அவர்களின் கருத்து, இயேசுவின் தெய்வத்துவத்தை மறுதலிக்கும் யெகோவா சாட்சிகளின் தளமான கோவை பெரியன்ஸ் அவர்களின் குறிப்பிட்ட திரிக்கான பதிலாகும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 


// ஆனாலும் கத்தோலிக்கம் என்பதை ஒரு மதம் என்று  ஒப்புக்கொண்டு பதிவு செய்ததற்கு பாராட்டுக்கள்!! அந்த  மதத்திலிருந்து (ஏனென்றால் அது கிறிஸ்தவ மதம் கிடையாதே)  தோன்றிய திரித்துவம், திரியேகத்துவம், இன்னும் பல மனித கோட்பாடுகளை முக்கியத்துவம் படுத்திய கத்தோலிக்க மதம், பிற பிரிவினர்களுக்கும் அதையே தான்  சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்! வெளி.  புத்தகத்தின் ஒரு  வசனம் இதன் மூலம் நிறைவேறுகிறது என்பதில் எந்த குழப்பமும் கிடையாது!! //

கத்தோலிக்கத்தை நான் மதம் என்று ஒப்புகொள்ளாதுவிட்டால்  அது மதம் அல்ல என்றாகிவிடுமா?. அது கிறிஸ்தவ மதம் அல்ல என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள். என்ன ஆதாரம்  உள்ளது. உங்களிடம்?

இதோ விக்கிபீடியா ஆதாரம்
http://en.wikipedia.org/wiki/Roman_Catholic

எந்த கருத்தை சொன்னாலும் அதற்குரிய சரியான தொடுப்புக்கள் ஆதாரம் தாருங்கள். மொட்டையாக நான் உங்களை துர்உபதேச குழு என்று கூறினால் ஏற்பீர்களா?
திரித்துவம் என்பது கத்தோலிக்க சபையின் கண்டுபிடிப்பல்ல. இதுவும் கூட தவறான கருத்துதான். மரியாளும் பாவமின்றி பிறந்தவள் என்கிறது கத்தோலிக்க திருச்சபை. இயேசுவை இறைவனாக அவர்கள் அறிவித்திருந்திருப்பார்களாயின் மரியாளையும் அவ்வண்ணமே செய்திருப்பார்கள்.
திரித்துவம் என்று நாம் விளங்கிக் கொள்ள பாவிக்கும் சொல். இது வேதத்தில் இல்லை. 3 ஆட்கள் ஒரே தேவன். இதை குறிப்பிடவே இந்த சொல்.
திரித்துவம் குறித்து அறிய இந்த பக்கங்களை பார்வையிடுங்கள்
http://www.answering-islam.org/Trinity/beckwith.html
http://www.answering-islam.org/Trinity/

// வெளி 18:3 அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான். தாம் இருப்பது மகா வேசியான பாபிலோனிய சபை என்று கூட தெரியாமல் பிறரை சொல்லிக்கொண்டு இருக்கிறோம் என்கிற கூச்சம் கொஞ்சம் கூட கிடையாமல் இருப்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது!! அந்த தப்பிதமான மனித கோட்பாடுகளை (உக்கிரமான மதுவை) முதலில் எல்லா ஜாதிகளும் குடித்தார்களாம் (யாரெல்லாம் கிறிஸ்தவர்கள் சாரி கத்தோலிக்கர்கள் ஆனாலும் அவர்களே ஏற்கனவே பின்பற்றிய சடங்காச்சரியங்களுடன் கத்தோலிக்கர்களின் அருவருப்பான கோட்பாடுகளை பின்பற்றினார்கள்)!! இப்படி கத்தோலிக்கம் என்கிற ஒரு மதத்தில் இருந்துக்கொண்டு திரு கொல்வின் அவர்களும்இன்னும் யெகோவா சாட்சிகள் மற்றும் வேதமானவர்களுகு வித்தியாசம் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை!! //

இந்த வௌப்படுத்தல் யாருக்கு பொருந்துகிறதோ  இல்லையோ மிகச் சரியாக உஙகள் அமைப்பிற்குப் பொருந்தும்

எனக்கு வி்த்தியாசம் தெரியாமல் இல்லை. உங்களை எந்த பிரிவிற்குள் அடக்கலாம்? என்னை பொறுத்தவரையில் துர்உபதேசக் குழு. யெகோவா சாட்சிகளின் பாதிப்பு உங்கள் பதிவுகளிலும் இருக்கிறது. சான்றாக இயேசு மிக்காவேல் தூதன் என்பதும் நரகம் இல்லை என்று சாதிப்பதும் இன்னும் அநேக யெகோவா சாட்சிகளின் போதனைகள் உங்கள் பதிவுகளிலும் இருக்கிறது. நான் இப்போதும் கூட உங்கள் பதிவுகள் அனைத்தையும் வாசி்த்துக் கொண்டிருக்கிறேன். நிறைய எழுதுங்கள். பரிசுத்தஆவி யார்? நி்த்தியஜீவன், மோட்சம்., நரகம், ஆத்துமா, ஆவி பற்றி பற்றி எழுதுங்கள். பிறகு இவற்றுக்கு பதில் தருகிறேன்.  வேத மாணவர்கள் யெகோவா சாட்சிகளில் இருந்து பிரிந்து வந்தவர்களே!. சில கோட்பாடுகள்தான் வித்தியாசம் இருக்கின்றன. விரைவில் இதுபற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரையை தருகிறேன். யொகோவா சாட்சிகள் உருவாகிய நாளிலிருந்தே சில கருத்துக்களை மாற்றியும் வந்திருக்கிறார்கள் என்பதை அறிய மாட்டீர்களா?

// தேநீர் பூக்கள் அவர்களின் விசுவாச அறிக்கையை  வாசித்தோமென்றால் அவர் எந்த விதத்திலும் யெகோவா சாட்சி  கிடையாது என்பது நிச்சயம்!! இந்த விசுவாச அறிக்கை வேத மாணவர்களின் விசுவாச அறிக்கை என்பதை அறிவேன்!!  கத்தோலிக்க மதத்தைக்காட்டிலும், பெந்தகோஸ்தே மார்கத்தை  காட்டிலும், இவர்கள் தந்திருக்கும் வசன விளக்கம் சரியாக இருக்கிறது!! விசுவாச அறிக்கையே வசனத்தின் படி தான் இருக்கிறது
http://kovaibereans.activeboard.com/index.spark? aBID=128972&p=3&topicID=40690119 //

இது உட்சபட்ச காமிடி. Facebook இவரின் கணக்கில் நுழைந்து பார்த்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள். அங்கு தன்னை தேநீர் பூக்கள் (றொகான்) என்று அறிமுகப்படுத்தியும். இன்னும் இறைவன் தளத்தில் ஆபிரகாம் என்ற பெயரில் அறிமுகப் பகுதியை வாசித்துவிட்டு சொல்லுங்கள்

http://lord.activeboard.com/index.spark?aBID=134574&p=3&topicID=40478050

நான் சொல்லுவதை கூட முழுமையாக நம்ப வேண்டிய அவசியமில்லை. நீங்கள் ஏன் நேரடியாக இதுபற்றி உங்கள் தளத்திலேயே கேட்க கூடாது?

//வேதத்தை ஆராய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார் ஆயினும் என்ன பயன் சரியான சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லையே.

கத்தோலிக்க மதத்தில் இருந்துக்கொண்டு அந்த மதத்தில் தோன்றிய மனித கோட்பாடுகள் சரியான சத்தியம் என்று இருப்பவர்களுக்கும், அந்த மனித கோட்பாடுகளை அப்படியே தழுவி மார்க்கம் தப்பியவர்களுக்கும், வேதத்தை ஆறாய்ந்துப்பார்ப்பவர்கள் சொல்லும் சத்தியம் இப்படி தான் இருக்கும்!! புரியாது!! புரியவே புரியாது!! //

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=39729174

யாருக்கு புரியும் யாருக்கு புரியாது என்று போகக் போகப் பார்க்கலாம். கத்தோலிக்கனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். ஆயினும் நான் கத்தோலிக்க பாரம்பரியங்களை அல்ல. மாறாக வேதத்தின் படியே ஒழுகிறேன். நான் ஒன்றும், இயேசு தொழத்தக்க தெய்வமல்ல என்று கூறுபவன் அல்லன்.


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// இவரிடம் எனக்கு பிடித்த குணம் இவரின் சாந்தம், மற்றும் பொறுமை. இலகுவில் கோபட மாட்டார். வேதத்தை ஆராய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார் ஆயினும் என்ன பயன் சரியான சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லையே.//

நானும் அதைத் தானே சொல்றேன்,கொல்வின்...தேனீர் பூக்கள் என்பவரைக் குறித்த நேர்த்தியான தகவல்களுக்கு எனது ஸ்பெஷல் நன்றிகள்,நண்பரே..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சகோ. தேநீர் பூக்க்ள் பற்றி சில வார்த்தைகள்

Facebook பக்கம் போனால் தெரியும் இவரைப் பற்றி. கத்தோலிக்க மதத்திலிருந்து 4 மாதங்களுக்கு முன்பாகவே ஜெகோவா சாட்சிகள் சபைக்கு சென்றுவிட்டவர். இலங்கையரான இவர் தற்போது ஜேர்மன் தேசத்தில் வசித்து வருகிறார். கோவை பெரியன்ஸ் தளத்தில் இன்னும் தன்னை கத்தோலிக்கனாகவே காட்டிக்கொள்ளும் இவர் இறைவன் தளத்தில் ஆபிரகாம் என்ற பெயரில் யெகோவா சாட்சிகள் என அறிக்கை இட்டுள்ளார். ஆனால் இஸ்லாமியர்களிடமோ தன்னை யூதபிரிவுகளில் ஒன்றை சேர்ந்தவர் என எழுதுவார்.

இயேசு தேவன் இல்லை என்பதுதான் இவரின் கோட்பாடு. இயேசுவை கழுமரத்தில் (ஒரு நேரான கட்டையில்- சிலுவையில் அல்ல) அறைந்து கொண்டார்கள் என வாதிடும் இவர். இரத்தம் ஏற்றிக் கொள்வதை யெகோவா தேவன் வெறுக்கிறார் என மொழிவார். இவரைப் பொறுத்தைவரை இயேசு மிக்காவேல் என்ற பிரதான தூதர். பரிசுத்த ஆவி என்பது தேவனின்  வல்லமைகளில் ஒன்று.

இஸ்லாமியிர்களிடம் கிறிஸ்தவர்கள் வேதத்தை 38 தடவை மாற்றி எழுதினார்கள் என போதிக்கும் இவர் இஸ்லாமைப் பற்றி விமர்சிக்கும் கட்டுரைகளையும் சகோ. உமர் தளத்திலிருந்து எடுத்துக் கையாளவதற்கு தவறுவதில்லை. அங்கு இயேசு இறைவன் என்று இருக்கும் இடங்களையும் சுயமாக மாற்றி எழுதுவதில் வல்லவர். இஸ்லாமில் காணப்படும் கல்லெறிதல தண்டனையும் இவருக்கு பிடித்தமானதில் ஒன்று.

இவரிடம் எனக்கு பிடித்த குணம் இவரின் சாந்தம், மற்றும் பொறுமை. இலகுவில் கோபட மாட்டார். வேதத்தை ஆராய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார் ஆயினும் என்ன பயன் சரியான சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லையே.


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Theneer Pookal@Kovai on Date: 05:59:34 Jan 21, 2011

1374854?AWSAccessKeyId=1XXJBWHKN0QBQS6TGPG2&Expires=1296691200&Signature=FdDwcs69zxTcaIfHEYHJZW0GJSg%3D&1295154288

//"அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்?" (யோபு.38:2), இது பக்தன் யோபுவிடம் சர்வ வல்லவராகிய தேவாதி தேவன் முழங்கியது;அது எல்லாவகையிலும் பொருந்தத்தக்கதாக ஒரு புதிய எதிரி முளைத்திருக்கிறான்;அவனுக்கு தைரியமிருந்து இங்கே வந்து அவற்றைச் சொன்னால் தக்க பதிலடி கிடைக்கும்.//

திரு, சில்சாம் அவர்களே என்னை ''எதிரியாக'' அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றிகள். இந்த எதிரி உங்களை போன்ற திருதுவத்தையும், பைபளில் இல்லாத சில பிழையான  உபதேசத்தையும் கொண்டிருப்பவர்களை தெளிவடைய வைக்கவே முளைத்த இடிமுழக்கம் தான் நான்.


///தைரியமிருந்து இங்கே வந்து அவற்றைச் சொன்னால் தக்க பதிலடி கிடைக்கும்////

தைரியம் இருப்பதால் தான் நான் சரியான பைபல் போதனைகளை கொண்ட தளத்தில் இருந்து தங்களின் பொய் போதனைகளுக்கு எதிராக கருத்து எழுதுகிறேன். அதாவது இனி என்னிடம் இருத்து பைபளில் எங்கெல்லாம் நீங்கள் திருத்துவதை ஆதாரம் காட்டி பேசுரின்களோ அங்கெல்லாம் இந்த தேனீர் பூக்கள் தோன்றுவான். நன்றி


திரு; கொல்வின் அவர்களில் வார்த்தைக்கான மேலுமான விளக்கம் கிழே:::::

கோய்னி கிரேக்க மொழி திட்டமான சுட்டிடைச்சொல்லைக் (''the '', (அந்த )) கொண்டிருகிறது. ஆனால் அது போதுனிலைச் சுட்டிடைச் சொல்லைச் (''a '' அல்லது ''an '' (ஒரு) )கொண்டில்லை. ஆகையால் ஒரு பயனிலை பெயர்ச்சொல்லுக்கு முன்னாள் திட்டமான சுட்டிடைச்சொல் வராவிடில், சூழமைவை பொருத்து, அது பொதுநிளையானதாக இருக்கலாம்.
''வினைச் சொல்லுக்கு முன்னாள் வரும் சார்படையற்ற (சுட்டிடைச்சொல்லைக் கொண்டிராத) பயனிலையே (கொண்டுள்ள சொற்கள் ) முதன்மையைப் பொருளில் பண்பை எடுத்துக் காட்டுபவை'' என்று பைபிள் இலக்கிய பத்திரிகை என்ற ஆங்கில பிரசுரத்தில் சொல்லிருகிறது: இந்தப் பத்திரிகை குறிப்பிடுகிற  பிரகாரம், லோகாஸ் ஒரு கடவுளுக்கு ஒப்பிடலாம் என இது காட்டுகிறது. யோவான் 1.1 -இப் பற்றி அது மேலும் சொல்வதாவது  இந்தப் பயணிலையின் பன்படிப்படை சக்தி அவ்வளவு மேம்பட்டு நிற்பதால் அந்தப் பெயர்ச் சொல்லைத் (௮தியாஸ் ) என்பதைத் திட்டமானதென கருதமுடியாது:'' ஆகையால் யோவான் 1.1 அந்த வார்த்தையின் பண்பையே, அவர் ''தெய்வீகமான'' வர்; ''கடவுளைப்போன்ற'' வர்; ''ஒரு கடவுள்'' ஆனால் சர்வவல்லமை உள்ள கடவுள் அல்ல என்பதை முனைப்பாய்த் தெரியச் செய்கிறது. இது பைபளின் மீதி பாகத்தோடு ஒத்து இருக்கிறது, அது, கடவுளுடைய பிரதி நிதி பேச்சாளராக வகிக்கும் தம்முடைய பாகத்தில் இங்கே ''அந்த வார்த்தை'' என அழைக்கப் பட்ட இயேசு, தமக்கு மேலானவரான, சர்வவல்லமை உள்ள கடவுளால் அனுப்பப்பட்ட கிழபடிதலுள்ள கில்பணியாளர் என காட்டுகிறது.

இதே வார்த்தை அமைப்புள்ள கிரேக்க வாக்கியத்தை வேறு மொழிகளில் மொழிபெயர்கையில்,ஏறக்குறைய எல்லா மொழிபெயர்ப்பாளரும் நிலையாய் இந்தச் சுட்டிடைச்சொல் ''ஒரு'' (a ) என்பதை இடையில் சேர்த்துஇருக்கும் பைபல்
வசனங்கள் மற்றவை பல உண்டு. உதாரணமாக,மாற்கு 6 :49 -ல், இயேசு தண்ணீரின் மேல் நடப்பபதைச் சீசர்கள் கண்டபோது, ''அது ஒரு ஆவி உருவென அவர்கள் எண்ணினார்கள்;'' என்று ஆங்கில பைபல் கிங் ஜமெஸ் மொழிபெயர்ப்பு சொல்கிறது. கோய்னி கிரேக்கில்; ''ஆவி '' என்பதற்கு முன்னாள் ''ஒரு'' (''a'') இல்லை:ஆனால் ஏறக்குறைய எல்லா மொளிபெயர்புகளிலும் ஆங்கிலத்தில் ''a''(ஒரு) என்பதைச் சேர்கின்றனர். ஏனெனில் ஆங்கிலத்தில் ''அது ஆவி'' என்ற சொள்ளர்தமான மொழிபெயர்ப்பு சூழமைவுக்கு பொருந்தாது: இதே முறையில், யோவான் 1:1 அந்த வார்த்தை கடவுளுடன் இருந்தது (KJ ), என்று காட்டுவதனால் அவர் கடவுளாக இருக்க முடியாது ஆனால் ''ஒரு கடவுள்'' அல்லது தெய்வீக'' மாக இருந்தார்.
ஆங்கில பைபல் அமெரிக்கன் ஸ்டாண்டட் மொழிபெயர்ப்பை இயற்றுவதில் உழைத்த இறையியல் வல்லுனரும் அரிஞ்சருமான ஜோசப் ஹென்றி தாயார்; தெளிவாய் பின்வருமாறு கூறினார்: ''அந்த லூகாஸ் தெய்வீகமாய் இருந்தார், அந்தத் தேவந்தாமேயாக இல்லை## மேலும் ஜசுத்ட் மதகுரு ஜான் L . மெக்கனி தன்னுடைய (ஆங்கில ) பைபல் அகராதியில் பின்வருமாறு எழுதினார்: ''அந்த வார்த்தை ஒரு தேவனாக இருந்தார்' என்று யோவான் 1 : 1 கண்டிப்பாய் மொழிபெயர்க்க வேண்டும். End



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// இந்த தளத்திலிருந்து தன் ப‌திவுகளை நீக்கி தன் பேடித்தனைத்தையும் அறிவீனத்தையும் நிரூபித்த சில்சாம் தன் தளத்திலிருந்து கெர்ச்சிப்பது எங்களுக்கு கேட்கிறது!! //

கோவை பெரியன்ஸ் எனும் கள்ள உபதேசத் தளத்திலிருந்து நாம் வெளியேறியதற்கான காரணத்தை ஏற்கனவே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்; ஆனால் மல்லாந்துக் கொண்டு எச்சில் உமிழ்வதைப் போல அதன் நிர்வாகி கொக்கரித்துக் கொண்டிருக்கிறார்; பேடித் தனம் போன்ற கடுமையான சொற்களைவிட மோசமான வார்த்தைகளால் நம்மை தாக்கி நம்முடைய சுயமரியாதையை அவதூறு செய்யும்வண்ணமாக அவர்கள் எழுதியபோதும் எப்படியெப்படியோ சமாளித்து அங்கே நிற்க எவ்வளவோ முயற்சித்தோம்; ஆனாலும் வேதம் சொல்லுகிறது, சகோதரனாகிய ஒருவனுக்கு ரெண்டொரு தரம் புத்திசொன்ன பிறகு அவனை விட்டு விலகு:உன்னை ஒரு ஊரார் ஏற்றுக்கொள்ளாவிட்டால் உன் காலில் படிந்த தூசியை உதறி விட்டு வெளியேறு, என்று; அப்படியானால் வெளியேறுபவர்களும் விலகுபவர்களும் பேடிகளா என்ன?

அவர்களுடைய அழைப்பின் பேரில் நட்புரீதியில் விவாதிக்கத் துவங்கிய நம்மை எந்த வகையிலும் ஆதாயப்படுத்தமுடியாது என்ற சூழல் வந்ததும் வேறொரு போலி பெயரில் கடுமையாகத் தாக்கி உன்னை யாரும் இங்கே அழைக்கவுமில்லை நீ தாராளமாக நீ வெளியே போகலாம் என்று ஆணவம் பேசியவர்கள் அவர்களே; மேலும் எந்தவொரு பொதுவான உலக நாகரீகம் கூட இல்லாமல் நேரடியாகவே அவன், இவன் என்ற ஏக வசனத்தில் எழுதிய மாண்பு இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறது; நானோ சம வயதுள்ள நண்பர்களை எதிர்கொள்ளும் அளவை மீறாமலே கண்டித்து எழுதியுள்ளேன்; அதுவும் வேதத்தில் எனக்குக் கொடுக்கப்பட்ட வரைமுறைகளை தாண்டாத அளவுக்கே.

இதற்கு மேலும் நீ இங்கே
உன் எழுத்துக்களால் கிறித்துவ உலகை மாசுபடுத்தாமல் நேரில் வந்து உன் கோபம் தீர என்னை அடித்துவிட்டு போ என்று அன்புடன் அழைக்கிறேன் அல்லது எங்கே வரவேண்டும் என்றும் சொல் நான் வருகிறேன்;ஆனாலும் உனக்கு எதிரான இந்த போராட்டத்தில் நான் ஓயமாட்டேன்;உன்னை மாத்திரமல்ல,உனது கூட்டம் முழுவதையும் தேடிப்பிடித்து இந்த சமுதாயத்தில் அடையாளங் காட்டுவேன்;நான் முன்வைத்துள்ள வாதத்துக்கு பதில் சொல்ல வக்கில்லாத உனக்கு என்ன எகத்தாளம் வேண்டியிருக்கிறது? உன் கருத்தைச் சொல்ல உனக்கு இருக்கும் உரிமை எனக்கு இல்லையா? நீ என்னை ஒப்பிட்டு குறிப்பிட்டு எழுதுவது போலவே நானும் எழுதுகிறேன்; நீ என்ன ரொம்ப ஆம்பளத்தனமா இங்கே வந்தா பதில் சொல்லுகிறாய்? வேண்டாம், நிறுத்திரு..!

திரித்துவ போதகரின் அறியாமை - 1 கொரி 8:7


மேற்கண்ட தலைப்புக்கு அருகில் கொடுக்கப்பட்ட வசனக் குறிப்பு, " ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. " (1.கொரிந்தியர்.8:7) என்பதே; எப்போது பார்த்தாலும் இந்த வசனத்தைக் குறிப்பிடும் எதிரிகளுக்கு இங்கே பவுல் என்ன சொல்ல வருகிறார் என்ற அறிவே இல்லை; ஆனால் ஏதோ ஒரு அறிவைக் குறித்து இவர்களாகக் கற்பனை செய்துகொண்டு எதற்குள்ளோ எதையோ நுழைக்க முயற்சிப்பதை நாம் அறிந்திருக்கிறோம்; எனவே நாம் இந்த சூழ்ச்சியான விளக்கங்களைப் பொருட்படுத்துவதில்லை; தேவத்துவத்தின் பன்முகத் தன்மைக்கு ஆதாரமான வசனத்தையே அதற்கெதிராகப் பயன்படுத்தும் சாத்தானின் வித்து உனக்குள்ளிருப்பது எமக்குத் தெரியும்; எனவே நீ வசனத்தைக் குறித்து பேசுவதையோ அதற்கு வியாக்கியானம் கொடுப்பதையோ நிறுத்திவிட்டு, உன் தலைவரிடம் பெற்ற கோதுமையை வியாபாரம் செய்ய முயற்சி செய்வதே நல்லது.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

சம்பந்தமில்லாத ஒரு கட்டுரையில் தேவையில்லாத ஒரு விவாதத்தைத் துவக்கிவிட்டு பெரியவர் அன்பு தவிக்கிறார்; சகோ.விஜய் அவர்கள் கிறித்து சபையின் நிர்விசாரங்களை மையமாகக் கொண்டு எழுதிய கட்டுரையில் இறையியல் கொள்கையை கொண்டு வந்து நுழைத்து மூக்குடைப்பட்டிருக்கிறார்,அவர்;விஜய் போன்ற ஆரோக்கிய சிந்தனையாளர்களை விவாத சகதிக்குள் இழுக்க முயற்சிக்கும் அவரது தந்திரம் பலிக்கப்போவதில்லை..!

இதனை விளக்கி சகோ.விஜய் அவர்கள் கொடுத்த விளக்கமாவது...

// நான் எழுதிய 14 காரியங்களுமே ஜனங்களை மரியாள் வணக்கம், பரிசேயத்தனம், அன்பற்ற மாய்மாலம், சுயம், பொய், உலக சிநேகம் போன்ற காரியங்களிலிருந்து மக்களை மனந்திரும்பச்செய்யும்படி எழுதப்பட்டது. முறைமைகளை மாற்றுவதால் எழுப்புதல் வந்துவிடாது என்பதையும் மனந்திரும்புதலே அவசியம் என்பதையும் தெளிவுபடுத்தி எழுதியிருந்தேன். ஆனால் தங்களது கேள்வியானது கிறிஸ்துவை இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டுள்ள யாராலும் சகிக்க முடியாதது. ஆட்டுக்குட்டியானவர் ஆராதனைக்குரியவர். அவர் கனத்துக்கும் மகிமைக்கும் பாத்திரர். அவர் தேவனுடைய ரூபமானவர், அவரையும் பிதாவையும் ஆவியானவரையும் பிரிக்க முடியாது. அவர்களது தன்மையை ஆராய்வது என்னைப் பொறுத்தவரை அவசியமற்றது. //

இதன் விவரத்தை அறிய தொடுப்பைத் தொடரவும்...
அங்கே எனது பின்னூட்டங்கள்...

நான் மீண்டும் மீண்டும் அலறிக் கொண்டிருக்கிறேன்… எனக்குத் தெரிந்து தமிழ்க் கிறித்தவ தளத்தில் இந்த மும்மூர்த்திகளிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென‌… அதாவது கோவை பெரியன்ஸ், அன்பு57, மற்றும் சுந்தர்… இவர்கள் மூவருக்குள் சிற்சில வேற்றுமைகளும் பற்பல ஒற்றுமைகளும் இருக்கிறது; என்னைக் கண்டாலோ… அப்பப்பா சொல்லவே வேண்டாம்…ஆகவே ஆகாது; எனவே எல்லா ஆவிகளையும் நம்பாமல்… என்று அன்பின் அப்போஸ்தலன் எச்சரிக்கிறார்..!

என்னுடைய தளத்தில் இவர்களுடன் நடக்கும் அனைத்து விவாதங்களையும் சேமித்து வருகிறேன்.

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&subForumID=499712&p=2

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&subForumID=498687&p=2

மணவாட்டியாகிய சபையையும் அதன் தலைவரான கிறித்துவையும் பிரிக்க முடியுமானால் பிதாவையும் கிறித்துவையும் வெவ்வேறானவர்களாக்க பார்க்கமுடியும்.

"இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்."(எபேசியர். Eph 5:32)

"அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்."(1.தீமோத்தேயு.Ti 3:16)

யார் யாரை "பாபிலோனிய சபை" என்று சொல்வது என்று விவஸ்தையில்லையா..? இவர்களெல்லாம் எப்படி எதை உண்டு இத்தனை வருடம் வளர்ந்தார்களோ..?

"ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்,

அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும் பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி,

கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு."(1Ti 6:3,4,5)

மேற்காணும் வசனத்தின்படி அன்பு சகோதரர் விஜய் அவர்கள் எச்சரிக்கையுடனிருப்பதை எண்ணி வியக்கின்றேன்; அதாவது இவர்களுடன் வாதத்தினைத் தவிர்த்து ஓட எத்தனிக்கும் அவருடைய மனநிலையைப் பார்க்கிறேன்; ஆனால் நாம் ஓடினால் அவர்கள் பரியாசம் செய்வார்கள்; ஓடாவிட்டால் பரலோகத்திலிருக்கிற தேவனுக்கு முன்பாக நமக்கு அவமானம் உண்டாகும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

bereans wrote:
//முடிந்தால் வ‌ச‌ன‌த்தைக் கொண்டு வாதாடும்//

Anbu57:
// வசனம் இல்லாததால்தானே இத்தனை ஆத்திரமும் வேகமும் //

தமிழ் வேதாகமத்தில் பிழைகள் இருப்பதாகக் கூறும் உங்களுக்கு அதிலிருந்து வசனத்தைக் குறிப்பிட வேண்டிய அவசியமென்ன?

இஸ்லாமியனும் இதையே செய்கிறான், அவனுக்கும் உங்களுக்கும் என்னய்யா வித்தியாசம்?

'என் கையை வைத்து என் கண்ணையே குத்த ' வரும் உங்களைப் போன்ற துஷ்டர்களிடம் பரிசுத்த வேதத்தையும் பரிசுத்தமான தேவ பக்திக்குரிய இரகசியத்தையும் குறித்து விவாதிப்பதையே அவமானமாகக் கருதுகிறேன்;உங்களிடம் வசனத்தைக் கூறி விளக்கவோ விளக்கம் கேட்கவோ அவசியமில்லை.

நீங்கள் மெய்யாகவே நீதிமான்களாக இருந்தால் எனது எழுத்துக்களைக் குறிப்பிட்டு விமர்சிப்பதை விட்டு விட்டு அவரவர் வேலையைப் பாருங்கள்; உங்கள் முழு சுயரூபத்தையும் வெளிக்கொணரவே என்னை கறைபடுத்திக் கொண்டிருக்கிறேன்;உங்களை எதிர்க்க இன்னும் எனது பணத்தையும் நேரத்தையும் செலவிடுவேன்.

நான் சிருஷ்டிகரிடமிருந்து பெறும் ஒவ்வொரு பைசாவையும் உங்களைப் போன்ற சாத்தானின் மார்க்கத்தாரை அழிப்பதற்காக செலவிடுவதை பாக்கியமாக எண்ணுகிறேன்.நான் உங்களைக் குறித்து சொன்ன ஒவ்வொரு சாப வார்த்தையும் விரைவில் பலிக்கும் நாள் வருகிறது;அப்போது நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள்;துஷ்ட காரியத்துக்கு ஒன்றுபடும் வேசித்தன மார்க்கத்தாருக்கு முன்பாக எந்த நிலையிலும் தாழ்ந்துபோகமாட்டோம்.

பிழையான ஒரு மொழி பெயர்ப்பை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு சரியாக இருப்பதாகத் தோன்றும் நல்ல வேதத்தை பயன்படுத்துவதுடன் அதை எடுத்துக்கொண்டுச் சென்று இதைக் குறித்து எதுவுமே தெரியாத புறவினத்தாரிடம் சென்றால் புது ஆட்கள் கிடைக்க வாய்ப்புண்டு; இங்கே 'குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதைப் போல ' சரியாக ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் கிறித்தவர்கள் தாம் ஏற்றுக்கொண்ட இயேசுவை தெய்வமாகத் தொழுவதைத் தடுக்க வீடுவிடாகச் செல்லவேண்டாமே?

// நாய்களுடன் போராடும் தெருக்காரனுடன் போராடி நமக்கு தான் நேரம் விரியம்!! சாக்கடைக்குள் காலை விட்டால் நமக்கு தான் நாற்றம்!! //

ஒரு உதாரணத்தைக் கூறினால் கொஞ்சமும் அறிவில்லாமல் குறுக்கே ஓடக்கூடாது;நான் தெருக்காரன் என்றால் உங்கள் கூட்டத்தார் நாய்களே; இதை ஒப்புக்கொண்டதற்காக நன்றி; நீங்களெல்லாம் அழைக்கப்பட்ட ஆதிநிலையை இழந்துவிட்டு பின்வாங்கிச் சென்றதால் பின்வரும் வசனம் உங்களுக்கு மட்டுமே பொருந்து;"ஐயய்யே,அது உங்களுக்காகவே எழுதப்பட்டது " என்று சின்னப்புள்ள மாதிரி அடம் பிடிக்கக்கூடாது;ஒழுங்கா திருந்தற வழியப் பாரும்.

"அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்."

நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது." (2.பேதுரு.2:21,22)

மேற்கண்ட வசனத்தை ஆதாரமாகக் கொண்டே உங்களைப் பன்றிக்கும் நாய்க்கும் ஒப்பிட்டு எழுதிவருகிறேன்;இதில் எந்தவித சந்தேகமுமில்லை;பேதுரு குறிப்பிட்ட அனைத்து அடையாளங்களும் உங்களை நடத்திய போதகர்களுக்கே பொருந்
தி வருகிறது; மற்றபடி யாரையும் தரங்கெட்ட விதத்தில் விமர்சிப்பதில் நமக்கு நம்பிக்கையில்லை;மூடனை நொய்யோடு நொய்யாகப் போட்டு குத்தினால் அவன் மூடத்தனம் அவனை விட்டுப் போகாது என்பது நாம் அறிந்ததே.

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நம்முடைய தளத்தைக் குறித்து எழுதியே தங்கள் தளத்தின் வாசகர்களை இழுக்கும் தந்திரத்தை எனது நண்பர்கள் பயன்படுத்தி வருகின்றனர்; இன்றைக்கு "சில்சாமைக் குறித்து இவர் என்ன எழுதியிருக்கிறார் " என்று பார்க்கவே சில தளங்களில் கூட்டம் கூடுகிறது; நம்மைப் பற்றி எழுதுவதை நிறுத்தினால் இவர்களுடைய தளங்கள் காய்ந்து போகும்; போதாக்குறைக்கு நாம் வேறு இவர்களுடைய மோசடிகளை பகிரங்கப்படுத்தி இவர்களுக்கு விளம்பரம் தேடிக் கொடுக்கிறோம்;ஏதோ பிழைத்து போகட்டும்..!

10,12 என்ற அளவில் பார்வையாளர் எண்ணிக்கையை வைத்திருந்த இந்த கனவான்கள் அதிலேயே திருப்தியடைந்து கழுகு குஞ்சுகளுக்கு இது போதும் என்று தோளை குலுக்கிக் கொண்டிருந்தனர்;இப்போதோ நான் அவர்கள் தளத்தில் எழுதுவதை நிறுத்திய பிறகும் நேரடி விவாதத்துக்கு வர முதுகெலும்பில்லாத கோவணாண்டிகள் நம்மையும் நம்முடைய விசுவாசத்தையும் குறித்து பரியாசம் செய்யும் வண்ணமாக எழுதி வருகின்றனர்;இவர்கள் மெய்யாகவே பூரண சற்குணர்களாகவும் -கழுகு குஞ்சுகளாகவும் - மரணமில்லா பெருவாழ்வுக்காக பத்துக் கற்பனையை மாய்ந்து மாய்ந்து நிறைவேற்றுபவர்களாக
இருந்தால் நம்மைக் குறித்து எழுதுவதை நிறுத்தட்டும்; அல்லது திருந்தி வந்தால் நல்லதை சொல்லிக் கொடுத்து ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருக்கிறோம்.

// மிருகங்களையே வனங்கி வந்த நபர் பார்ப்பவர்களையெல்லாம் மிருகமாக தான் பார்ப்பார் போல்!! பல தெய்வங்களை வனங்கி இருந்தவருக்கு இங்கேயும் அதையே தான் தேடுகிறது!! //

முதல்ல தமிழை கொலை பண்றத நிறுத்தற வழிய பாருங்கய்யா... யௌவன ஜனம் (
ஆங்கிலத்தில் 'yau' ஆகிய எழுத்துக்களை unicode- இல் தட்டினால் வரக்கூடியது "யௌ" எனும் எழுத்து) என்ற அழகான பெயரை கொத்தி குதறும் நீங்களா மொழி பெயர்ப்பைக் குறித்து பேசுவது..?

ஏன் நீங்கள் செலவு பண்ணி ... இப்ப தான் நெறய வெளிநாட்டு பன்னிங்களோட 'லிங்க்' இருக்குல்ல புது பைபிள் எழுதலாமே, அதான் ஆங்கிலத்தில கொண்டு வந்துட்டீங்களே..?

"மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான்; மூடன் அதை உணரான்."(சங்கீதம்.92:6)

வசனம் கேட்கிறீர்களே என்று ஆசையா வசனத்தைக் குறிப்பிட்டா திருப்பித் தாக்குவது நியாயமா,ஸார்?

// ஆகவே ஒன்றான மெய் தேவன் என்று சொல்லுவதையே தூக்கி சாப்பிட்டு அவர் திரியேக தேவன் என்று சொல்லி திரிந்து ரவுடித்தனம் செய்வது அசிங்கமாக இருக்கிறது!! //

"பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்." (யோவான்.17:2)

ஐயய்யே...இந்த மாமாவுக்கு ஒண்ணுமே தெரியல, இங்க இருந்த இயேசப்பா அங்க போனபிறகும் ஏன் தனியா இருக்கணும், அவரு அவருடைய பிதாவுடன் கலந்துவாருதானே...அப்புறம் எப்படி ரெண்டு சாமி வரும் என்று எங்க வீட்டு நாய்க்குட்டி கேக்குது..!

அவரு தாங்க இவரு... ஐய்யோ உங்களுக்கு வெளக்கஞ்சொல்லியே ஓஞ்சு போனேன்...! கோயம்புத்தூர் காரவுங்க ரெம்ப மரியாதையானவங்க,வெவரமானவங்க என்று சொல்லுவாங்க,இது வித்தியாசமா இருக்கு,வேற ஏதோ ஆவி வந்துருக்கும் போல‌..!

// தமிழ் பரிசுத்தவான்களுக்கு ஆவியானவர் சொல்லி கொடுத்திருக்கிறார்!! மளையாலத்திலோ, தெலுங்கிளோ, கன்னடத்திலேயோ அவர் மறந்துவிட்டார் போல் ஆகவே தான் அங்கே அவர்கள் "தமிழ் வேதாகமத்தில்" சொறுகியது போல் சொறுகவில்லை!! //

தமிழில் சொறுகிட்டாங்க,ஒமக்கென்னய்யா பிரச்சினை, கட்சிக்காரனே தான் விட்டு வந்த கட்சியப் பத்தி பேசறதில்லை,ஒமக்கு உதவாததை எதுக்கு ஒம்ம வீட்டுல வெச்சுருக்கணும்? வெளிய தூக்கி போடுய்யா..!

// இத்தோடு அநாகரிகமாக எழுதுவதை நிறுத்திக்கொள்ளும், இனியும் சாக்கடைக்குள் கால் விட நாங்கள் விரும்பவில்லை!! //

நான் அநாகரீகமா எழுதறதா சொன்னா எருமை மாடு கூட சிரிக்க காசு கேக்கும்..! நவரசத்தோடு எனது அனைத்து மானம் மரியாதையையும் அடகு வெச்சுட்டு மந்தையில் அடங்காத பொறம்போக்குகளுடன் கடந்த ரெண்டு வருடமா போராடிக்கிட்டிருக்கிறேன்;

என் குடும்பத்தைப் பற்றியும் என் பிழைப்பைப் பற்றியும் இப்ப என் ஜாதியப் பத்தியும் தனிப்பட்ட முறையில் நீங்களும் உங்கள் போலி பெயர் பினாமியும் எழுதுவதையெல்லாம் பொறுத்துக்கொண்டு இன்னும் இருப்பதே பெரிய காரியமாக்கும்.

நான் உங்களைக் குறித்தோ உங்கள் தளத்தைக் குறித்தோ எதுவும் எழுதுவதில்லை;நீங்கள் யாரென்று தெரிந்தபிறகு விலகிவிட்டேன்;எனது தளத்துக்கு வரும் வாசகர்களை எச்சரிக்கும் பணியை மட்டுமே செய்துவருகிறேன்.

மற்றபடி மும்மூர்த்திகளின் கும்மியாட்டத்துக்கு நான் வராத எரிச்சலில் நீங்கள் தான் உங்கள் வேலையையெல்லாம் விட்டு விட்டு என்னுடைய சிறிய அளவிலான பணிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறீர்கள்; இதனால் உங்கள் மேலான சத்தியத்தையறிய வரிசையில் நிற்பவர்களுக்கு எல்லாம் துரோகம் செய்கிறீர்கள்;

சுவிசேஷப் பணியே அவசியமில்லை என்று சொல்பவர் சொந்த வேலைகளைப் பார்த்துக்கொண்டு ஆயிரம் வருட அரசாட்சிக்காகக் காத்திருக்கவேண்டியது தானே எல்லாத்தையும் மொத்தமாகப் பாத்துண்டா போறது..!

// உம‌க்கு தான் 300 வ‌ருட‌ம் முன் வ‌ந்த‌ வேத‌ம் மாத்திர‌ம் தானே தெரியும், இத‌ற்கு உம‌க்கும் ச‌ம்ப‌ந்த‌மே கிடையாது!! உமக்கு புரியாது!! உம‌க்கு தெரியாத‌ விஷ‌ய‌த்தில் ஏன் த‌லையிட‌வேண்டும்!! //

உம்மைப் போன்ற துரோகிகளால் தான் இன்றைக்கும் இந்தியாவில் கிறித்துவின் சுவிசேஷம் பரவாமலிருக்கிறது;ஒரு ஆகான் மொத்த சேனையையும் கவிழ்த்தானே, அந்த பரம்பரைதானே உங்கள் போதகர்கள்..?

நானாவது 300 வருட அனுபவத்தை வைத்து பேசுகிறேன்,உங்க ஆட்களுக்கு இன்னும் 10 வயதே ஆகலயே..?

தாய் மொழிய விற்று அயல் மொழி ரொட்டிக்காரனுடைய வார்த்தைய பெரிதாகப் பேசும் நீரா எம்மைச் சொல்வது?

உங்களுக்கு ஞானம் வானத்திலிருந்து வந்ததா என்ன, காஞ்சு போன ரொட்டிக்காக எஜமானைப் பார்த்து குரைக்கும் குள்ளநரிகள் கிறித்தவத்துக்கே சாபக்கேடு..!

கல்யாண வீட்டில் குறுக்கும் நெடுக்குமா ஓடிக்கொண்டிருக்கும் தெரு நாய்களைவிட கேவலமான ஜென்மங்கள் இங்கே இந்தியாவில் சாதித்துக் கொண்டிருக்கும் தியாகச் சுடர்களை இனியும் விமர்சிக்கக்கூடாது;

உங்க ஆட்களுக்கு இஸ்லாம் தான் பெஸ்ட் சாய்ஸ்...பேசாம அங்க ஓடிடுங்க‌...உங்க ஆளுங்க தானே பல்டியடிச்சு ஜெருசலேமையே வித்துட்டு ஓடினது..? இதுல வேற சிறுமந்தை என்று ஒரு பீத்தல்..!

அன்றைக்கு அதே சிறுமந்தையின் ஊழியத்தில் அற்புதங்களும் அடையாளங்களும் நடந்து சபையானது காட்டுத்தீயைப் போலப் பரவினது;அதன் ஜுவாலையிலிருந்து தோன்றினவர்களே நாங்கள்.

மற்றபடி ஆதிசபையின் அடையாளம் ஒன்றும் உங்களிடம் இல்லை;எனவே நீங்கள் சிறுமந்தையாக இருப்பது மட்டுமல்ல, ஆதிசபையில் சிறுமந்தையிடம் விளங்கிய மகிமை விளங்க வேண்டும்;அது இல்லாத நீங்கள் எந்த வகையிலும் உங்களை குறித்து நல்லதாக நினைத்துக்கொள்ள வேண்டாம்;புத்த மதம் கூட சிறுமந்தை தான்;அதாவது அது சிறுத்துப்போனது;சிறுமந்தையானால் அது பெருகும் வாய்ப்பு இருக்கவேண்டும்;அது மலடாக இருக்கக்கூடாது.

// கிறிஸ்த‌வனாக‌ இருந்தால் ஆரோக்கிய்மான‌ வ‌ச‌ன‌னத்தை கொண்டு வாதாடும் சும்மா‌ தெருக்கார‌னை போல் எழுத‌வேன்டாம்!! //

பன்றிக்கு முன்னால முத்தைப் போடும் வழக்கம் எனக்கில்லை;நான் தெருக்காரன் தான்,எனக்கு நாய்களுடன் எப்போதும்  போராட்டம் உண்டு.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

«First  <  1 2 3 | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard