Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆராதனைக் கொ(கு)ண்டாட்டம் >Freedom''09


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
ஆராதனைக் கொ(கு)ண்டாட்டம் >Freedom''09
Permalink  
 


எச்சரிக்கை: இது ஒரு மீள்பதிவு; தமிழ்க் கிறித்தவ தளத்தில் பதியப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த கட்டுரையை மீண்டும் பதிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்; காலம் போனாலும் எதையும் திருத்த வேண்டாத அளவுக்கு - அதாவது நான் எழுதிய எதையும் திருத்த வேண்டாத அளவுக்கு எல்லாம் இருப்பது ஆச்சர்யமே..!

27-01-2009 05:04:51

அண்மையில் சென்னையில் (தானா எல்லா அநியாயமும்..?) பிரபல ஆராதனை வீரரின்(???) ஆராதனைக் கொ(கு)ண்டாட்டம் >Freedom''09< நடைபெற்றது;


பிரச்சினையில்லை;நல்ல கலெக்ஷந்தான்..! பட் கனெக்ஷன்..?யாருடன்..?

மனதைக் கெடுத்த விஷயம் என்னவென்றால் "அக்கினி,அக்கினி" என்றதும் ஆணும் பெண்ணுமாக தரையில் விழுகிறார்கள்;உச்சக்கட்ட இசை (உணர்ச்சி)வயப்பட்டு அவர்கள் விழுந்தாலும் இசை மட்டும் நிற்கவில்லை; அவ்வ‌ளவு பேரும் இளைஞர்கள் மற்றும் வாலிபப் பெண்கள்..!

எங்கிருந்தது வந்தது இந்த கலாச்சாரம்?
இதையா எழுப்புதல் என்கிறார்கள்?
எதிலிருந்து எழுப்புதல்?
எதற்காக?
வேதம் இதை அனுமதிக்கிறதா?


அருவருப்பான ஆடை வடிவமைப்புடன் அந்த "ஆராதனை வீரர்" ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்; "பயங்கரமாக" டான்ஸ் ஆடுகிறார்;

இவர்கள் யாரைத் துதிக்கிறார்க‌ள்?

இத்தனையும் "இயேசுவின் இரண்டாம் வருகைக்கு நம்மையெல்லாம் ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கும்" பிரபல கிறிஸ்தவ சானலில்தான்..!


இதைப் பார்க்கும் மாற்று மதத்தவர் என்ன நினைப்பார்கள்?

எல்லாவற்றுக்கும் மேலான உச்சக்கட்ட மோசடி...
இதை "days of prophecy" என்ற பேனரில் நடத்துகிறார்கள்;


prophecy என்றால் எது?
அதை எப்படி, யாருக்கு, எங்கே சொல்லவேண்டும்?


"prophecy" என்பதற்கு "ஞானமாய் உபதேசிப்பது" என்றொரு பொருளை சமீபத்தில் அறிந்துகொண்டேன்.(Proverbs.30:1)

யோவேல்.2:28 ஐயும் அப்போஸ்தலர்.2:17 ஐயும் இவர்கள் ஆதாரமாகக் காட்டினாலும் இதுவா "அவர்களால்" முன்னுரைக்கப்பட்டது?

தேவக் காரியங்களில் துணிகர‌ங்கொண்டு செயல்படும் சிலரால் ஆண்டவரிடம் வரவேண்டிய ஒரு கூட்டம் ஜனம் வஞ்சிக்கப்படுவது போலிருக்கிறது;

"ஆராதனை" திறந்தவெளியில் ஆட்டம் பாட்டத்துடன் நடந்தபோது தேவமனுஷனான மோசே சீனாய் மலையுச்சியில் இருந்தான்;
அழைக்கப்பட்ட ஆசாரியனோ "ஆட்டத்தில் கலந்திருந்தான்..."


இன்றைக்கும் அதே கதைதான்..சபை மேய்ப்பர்களின் முழு ஒத்துழைப்புடந்தான் இது நடக்கிறது;

ஆனால் சடுதியில் பிரதான மேய்ப்பரும் சாவாமையுள்ள ஆசாரியருமான இயேசு(வானவர்) வெளிப்படப் போகிறார்;அப்போது "வெந்தது எவ்வளவு, வேகாதது எவ்வள‌வு " என்பது நிச்சயம் தெரிந்துவிடும்;காரணம் இந்தமுறை இறங்கப் போவது உண்மையான அக்கினி..!

"Worship" என்ற வார்த்தையின் புனிதமான பொருள் எங்கோ போய்க் கொண்டிருக்கிறது;அது ஆலயத்தில் எல்லாவித பயபக்தியுடன் நடைபெற வேண்டும்;

திர‌ள்கூட்ட "ஆராதனை " வீர‌ர்கள் விளம்பர‌ங்கள் செய்து- திற‌ந்த‌வெளியில் ஆட்ட‌ம் பாட்டம் கொண்டாட்ட‌ம் ந‌ட‌த்தி "வியாபார‌ம்" செய்ய‌ட்டும்;ஆனால் அதை "ஆராதனை" என்றோ "தீர்க்க‌த‌ரிச‌ன‌ பெருவிழா" என்றோ சொல்ல‌வேண்டாமே...!


நீ சீயோன் குமாரத்தியா,பாபிலோன் குமாரத்தியா..?
எனும் தலைப்பில் ஒரு செய்தியினை பதிப்பதாக ஏற்கனவே சொல்லியும் செய்வதற்கு அவகாசம் இல்லை;ஆனாலும் இப்போது சொல்கிறேன்,உங்கள் பதில்தான் எனது பதிவுக்கு ஆதாரம்.,


மனித பார்வையில் வெவ்வேறு கருத்துக்கள் வரலாம்;ஆனால் தேவ ஆவியானவர் அல்லது தேவ ஆவியினைப் பெற்றவர்கள் ஒன்று போலவே சிந்திக்கிறார்கள்;
ஒரு மனுஷனைப் பார்த்தவுடனே உங்க‌ளுக்குள் இருக்கும் தூயாவிய‌ர் உங்க‌ளை எச்ச‌ரிப்பார் அல்ல‌து ஆமோதிப்பார்;ஒருவ‌னும் உங்க‌ளுக்குப் போதிக்க‌வேண்டுவ‌தில்லை(1.யோவான்.2:25 ‍-27)



பிர‌ச்சினை 1:-

த‌குதியான‌ ஆடையினைப் பற்றி வேத‌ம் ஒன்றும் சொல்ல‌வில்லையா..?
அதில் த‌வ‌று இருக்கிற‌தா அல்ல‌து இல்லையா என்ப‌தை தீர்மானிக்க‌ நாம் நிய‌மிக்க‌ப்ப‌ட‌வில்லை;வேதத்தின் வெளிச்ச‌த்தில்தான் ச‌ரி பார்க்கிறோம்; வேத‌ம் த‌ற்கால‌த்துக்கு உத‌வாது,யார் தான் ஒழுங்கு,நியாய‌ந்தீர்க்க‌ நீ யார் என்பதெல்லாம் "பாபிலோன் புத்திர‌ரின்" வ‌ழ‌க்க‌மான‌ வெற்று வாத‌ம்..!


பிர‌ச்சினை 2:‍-

அங்கே கிடைக்கும் "ப்ரீட‌ம்" எவ்வ‌ள‌வு நேர‌த்துக்கு என்ப‌து தான் கேள்வி,இதே ம‌ன‌க்க‌ட்டுக‌ள் அக‌லவே "டிஸ்கொதெ க்ள‌ப்" செல்கிறார்க‌ள்;அங்கே பாதுகாப்பு குறைவு; கெடுபிடியும் செல‌வும் அதிக‌ம்;அதே திருப்தி குறைந்த‌ செல‌வில் கிடைப்ப‌தால் தான் இங்கே வருகிறார்க‌ள்.


பிர‌ச்சினை 3:-

அங்கே கூடிவ‌ரும் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளில் பெரும்பாலோருட‌ன் த‌னிப்ப‌ட்ட‌ முறையில் பேசியுள்ள‌தாலும் இன்றைய‌ ச‌முதாய‌த்தின் பொதுவான‌ பிர‌ச்சினைக‌ளை அறிந்து வைத்திருப்பதாலும் ம‌னோத‌த்துவ‌ ரீதியில் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொருவ‌ரையும் த‌னிப்ப‌ட்ட‌ முறையில் பாதிக்கும்,தொடும்,அழ‌ச் செய்யும்;அது தீர்க்க‌த‌ரிச‌ன‌ம‌ல்ல‌;

க‌ண்ணீருக்கு தேவ‌ப்பிர‌ஸ‌ன்ன‌ம் மாத்திர‌ம் காரணமல்ல;அதில் சிலர் காதல் தோல்வியால் அழுகிறார்கள்;கற்பை பறிகொடுத்தோரும் அழுகிறார்கள்;கடன் பிரச்சினையினால் தற்கொலை செய்யப் போனவர்களும் அழுகிறார்கள்;

யாரும் ஆத்தும பாரத்தினாலோ,ஆண்டவருடைய வருகைக்காகவோ அழவில்லை;இவையிரண்டும் தரும் மன அழுத்தத்தைத் தீர்க்கும் இடம் இதுவல்ல;"பிரதான கட்டளையில்" இது இடம் பெறவில்லை;

நான் சொல்வது என்னவென்றால் இசையில் ''ஃப்யூஷ‌ன்'' என்றும் ''மிக்ஸிங்'' என்றும் சொல்கிறார்களே, அதை தேவக்காரியத்தில் முயற்சிக்கக்கூடாது;
மக்கள் விடுதலை பெற்றால் அது தேவ இரக்கம்,அவருடைய சுத்தக் கிருபை;
நிச்சயம் இவர்களுடைய இசையினால் அல்ல‌;


பிரச்சினை 4:-

மிரியாம் ஆடிய‌து இன்றைய‌ சினிமா ந‌ட‌ன‌ம‌ல்ல‌;தாவீது ஆடிய‌து ஆல‌ய‌த்திலோ தேவ‌ப் பிர‌ஸ‌ன்ன‌த்திலோ அல்ல‌.

இவ்வுல‌க‌த்தின் வேஷ‌ம் வேண்டாமென்றுதான் "ஆட்டுத் தோலைப்" போர்த்துக் கொண்டு ம‌லைக‌ளிலும் குகைக‌ளிலும் சித‌றுண்டு அலைந்தார்க‌ள்;(வாசிக்க எபிரெயர்.11)இவ‌ர்க‌ளும் "ஆட்டுத் தோலைத்" தான் போர்த்துக் கொண்டு வ‌ருகிறார்க‌ள்;ஆனால் உள்ள‌த்திலோ..?


என‌து விம‌ர்ச‌ன‌ம் த‌வ‌றான‌தென்றால் வேத‌ம் த‌வ‌றானதாக‌ இருக்கும் அல்ல‌து இன்னும் நான் வேதத்தை சரியாக அறியாத‌வ‌னாக‌ இருப்பேன்;
நான் தோற்றாலும் வேத‌ம் தோற்க‌க்கூடாது..!

இதை அறிந்து கொள்ள‌வே "ஓட்டு" கேட்டுள்ளேன்;இந்த‌ ஓட்டு போட‌க் கூட‌வா "அதைத்" த‌ர‌வேண்டும்..?!


எனது இந்த பதி (ல்)வு நண்பர் ஜோ அவர்களுக்கு முன்பதாக வந்திருக்கவேண்டும்.(29/01//2009 அதிகாலை 2:30 மணிக்கு) ஆனாலும் "Band width exeeded" என தடைப்பட்டு விட்டது; எனவே பொருந்தா கருத்துக்களைப் பொருத்துக் கொள்ளவும்... இதோ ந‌ண்பர் SundarP அவ‌ர்க‌ளை நோக்கி...

நான் ரசிக மன்றம் ஆரம்பிக்கப் போவதில்லை;இங்கே ஒவ்வொருவரும் என்னை ஆதரித்தோர் எதிர்த்தும் எதிர்த்தோர் ஆதரித்தும் எழுதியதுண்டு;அதற்காகவே நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்;

நாமெல்லோரும் ஒரு நாள் சந்திக்கப் போவதையும் எனது ஆவியில் உணர்கிறேன்;நமது தளம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்;அதையும் நமது தொலைக்காட்சிகளில் காண்போம்;இதுதான் ஆரோக்ய‌மான‌ ந‌ட்புண‌ர்வு;

"வேற்றுமையில் ஒற்றுமை" என்ப‌து தானே இந்திய‌னின் அழ‌கு..!
"Argument wins the situation but loses the person" -William words worth. So never argue with others.
-இது இன்று என‌து ந‌ண்பன் அனுப்பி நான் ரசித்த SMS


எனவே நாம் நமக்காக எதையும் பேசாமல் நம்மை க‌வ‌னிக்கிற‌வ‌ருக்காக‌வே (நேயரும் ஆயரும்...!) செய்வோம்; "அவ‌ரே" அனைத்தையும் முடிவு செய்வார்;ந‌ம‌க்கு வெற்றியும் தோல்வியும் இல்லை;

தொலைக்காட்சி பேட்டியில் இரு த‌ர‌ப்பு வீராவேச‌மாக‌ மோதிக்கொள்வ‌ர்; முடிவில் அதை ஒருங்கிணைத்து ந‌ட‌த்துப‌வ‌ர் எந்த‌ முடிவையும் எடுக்காமாலே "நேரம்" க‌ருதி முடித்துவைப்பார்;இதில் யாருக்கு லாப‌ம்?அதை க‌வ‌னித்த‌வ‌ருக்கே..அவ‌ருடைய‌ க‌ருத்தில் தெளிவும் ''இன்னார் இப்ப‌டியா'' என்ற‌ தெளிவும் பிற‌க்கும்;

அதுபோல‌வே நாம் யாருக்காக‌வோ (ஞானத்தெளிவுக்காக‌..) ப்ர‌யாச‌ப்ப‌டுகிறோம்;என‌வே வ‌ருத்த‌ம் கொள்ள‌வேண்டாம்;நானும் கூட‌ யாராவ‌து ப‌தில‌ளித்திருந்தால் ப‌ய‌த்துட‌னே ப‌டிக்க‌த் துவ‌ங்குகிறேன்;

என‌து மிக‌ மிக‌ தாழ்மையான வேண்டுகோள்..,
வேத‌ வார்த்தைக‌ளின் இட‌ம் பொருள் ஏவ‌ல் (context) அறிந்து ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து மாத்திர‌மே அது சொல்ல‌ப்ப‌ட்ட‌ நோக்க‌த்தை நிறைவேற்றும்;


ந‌ம‌து பெந்தெகொஸ்தே பாஸ்ட‌ர்க‌ளைப் போல‌ ஒரு பொருளை விள‌க்க‌ ஆண்ட‌வர் சொன்னதொரு உவ‌மைக்கு "புது ரூட்" போட‌க்கூடாது;


உதார‌ண‌மாக‌ "ந‌ல்ல‌ சமாரிய‌ன்" உவ‌மை;அத‌ன் பொருளும் சொல்ல‌ப்ப‌ட்ட‌ கார‌ண‌மும் ஆண்ட‌வ‌ராலேயே விள‌க்க‌ப்ப‌ட்டுவிட்ட‌து;ஆனால் சத்திரக்காரன் யார்? திருடன் யார்? அடிபட்டவன் யார்? என ஆராய்ந்து "ஞான அர்த்தம்" தேடிப் பிடித்து போதிப்பார்க‌ள்;

இதையாவ‌து ''ப‌க்திவிருத்தியானால் ச‌ரி'' என‌ விட்டுவிட‌லாம்;ஆனால் சம்பந்தா ச‌ம்ப‌ந்த‌மில்லாம‌ல் வ‌ச‌ன‌ங்க‌ளை எடுத்து வீசுவ‌து க‌ல்லெறிவ‌து போலாகும்;நானாகிலும் இருபுற‌மும் க‌ருக்கான‌தை கையில் வைத்துப் போராடுகிறேன்;நிச்ச‌ய‌ம் காய‌ம் ஏற்ப‌டும்;ஆம்,அந்த‌ கால‌த்தில் ப‌ட்ட‌ய‌த்துக்கு கைப்பிடி கிடையாதாம்;

அப்ப‌டியானால் "மார்ட்டீன் லூத‌ர்" முதலாக சீர்திருத்தவாதிகள் எல்லோருமே த‌வ‌றான‌வ‌ர்க‌ளா?
அவ‌ர்க‌ள் கால‌ம் முடிந்திருக்க‌லாம்;அவ‌ர்க‌ள‌து யுக‌ம் இன்னும் முடிய‌வில்லை;அவ‌ர்க‌ள் மாம்ச‌த்திலில்லா விட்டாலும் எம‌து சிந்தையில் க‌ருத்தாக்க‌ம் உண்டாக்கி வாழுகிறார்க‌ள்;

அவ‌ர்கள்தான் ப‌ரிசுத்த‌ வேதாகம‌த்தை சிறை மீட்ட‌வ‌ர்க‌ள்;ந‌ம‌து தாய்மொழியில் {மொழிக‌ற்று} மொழிபெய‌ர்த்துத் த‌ந்த‌வ‌ர்க‌ள்;(என‌வே தான் நாம் இத்த‌னைப் பிரிவாக‌ப் பிரிந்தோம் என்ப‌து த‌னி க‌தை..!)அதை வைத்து தான் நாம் ச‌ண்டையிடுகிறோம்;

சீர்திருத்த‌வாதிக்கும் குற்ற‌ஞ்சாட்டுகிற‌வ‌னுக்கும் வித்தியாச‌மில்லையா?


ம‌ந்தை பெருகினால் ஆடுகளில் ஒழுங்கீன‌மும் மேய்ப்ப‌னில் சோம்ப‌லும் சோர‌ம் போத‌லும் இய‌ல்பு;என‌வே தான் பிர‌தான‌ மேய்ப்ப‌னைப் ப‌ற்றிய‌ அச்ச‌த்தினை க‌ண்காணியான‌வ‌ன் உடைய‌வ‌னாக‌ இருக்க‌வேண்டும் என‌வும் அதை அருகிலிருந்து க‌வ‌னிப்ப‌வன் அவனை எச்ச‌ரிக்க‌வேண்டுமென‌வும் வேத‌ம் சொல்லுகிற‌து.(அப்போஸ்த‌ல‌ர்.20 ம‌ற்றும் 1.பேதுரு.3)
எசேக்கியேல் 34 வேற்று கிர‌க‌ வாசிக்கா எழுத‌ப்ப‌ட்ட‌து?


என‌வே தாங்க‌ள் குறிப்பிட்டுள்ள‌ வ‌ச‌ன‌ங்க‌ளுக்கும் என‌து க‌ருத்துக்க‌ளுக்கும் ச‌ம்ப‌ந்த‌மில்லை என‌ அறிய‌ வேண்டுகிறேன்;என‌து எழுத்து ச‌ற்று தீவிர‌மாக‌ தோன்றினாலும் அது வைராக்கிய‌த்தினாலும் உள‌க் கொதிப்பினாலும் வெளிப்ப‌ட்ட‌தேய‌ன்றி வெறியினாலும் பொறாமையினாலும் வெளிப்ப‌ட்ட‌த‌ன்று.

vincentmca:
// சகோதரர் சில்சாம் சொல்வதில் சில என்னை பொறுத்தவரை சரியானதாக இல்லை. தங்களது பதிப்பை படிக்கும் போது வந்தவர்கள் அணைவரும் உண்மையாக ஆராதிக்க வரவில்லை என்ற எண்ணம் தோன்றுகிறது. //

நான் சொல்வது எல்லாம் சரியானதாக எனக்கே தோன்றுகிறதில்லை;ஆனால் வேதம் சரியானதாகவே இருக்கிறது;

நான் இசைக் கலைஞ‌ன்;ரசிகன்;நானும் அவர்களுடைய பாடல்களில் சிலதை உணர்ந்து பாடி (ஆனந்த‌)கண்ணீரோடு ஆண்டவரை ஆராதித்துக் கொண்டிருக்கிறேன்;எனவே தான் மக்கள் ரசனைக்கேற்ப "ஃப்யூஷன்" பண்ணவேண்டாமென்கிறேன்;அதனால்தான் "கன்ஃப்யூஷன்" ஆகிறது;


எனது "எங்கே கிறிஸ்தவ தமிழிசை" எனும் பதிவை கவனிக்க வேண்டுகிறேன்.

அங்கே ஆராதிக்க வருகிறவர்களைக் குறித்து நான் எதையும் சொல்லவில்லை;அவர்கள் ஆவலுடன் தான் வ‌ருகிறார்க‌ள்;ஆனால் உண‌ர்வைத்தூண்டுவ‌தில் வெற்றி பெறும் த‌லைவ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளை
"ஆண்ட‌ருடைய‌ அடிச்சுவ‌டுக‌ளின் வ‌ழியில்" ந‌ட‌த்தாம‌ல்(சங்கீதம்.85:13) த‌ங்க‌ளை முன்னிலைப்ப‌டுத்துவ‌தால் ஒருக‌ட்ட‌த்தில் அந்த‌ த‌லைவ‌ர்க‌ள் ம‌க்க‌ளின் ர‌ச‌னைக்கேற்ப‌ செய‌ல்ப‌ட்டு தேவ‌ன‌ற்ற‌ மாய‌மான ஆராதனை வீர‌ர்க‌ளாகிறார்க‌ள்;


ஆவியான‌வ‌ர் சொல்வ‌தையோ வேத‌ம் சொல்வ‌தையோ அவ‌ர்க‌ள்(த‌லைவ‌ர்க‌ள்) செய‌ல் ப‌டுத்தும் நாளில் அவ‌ர்க‌ள் செல்வாக்கு இழ‌ந்து புக‌ழ் ம‌ங்கும்;அத‌ற்குள் "ச‌ம்பாதித்துவிட்டால்" ப்ர‌ச்சினையில்லை;"செட்டில்" ஆகிவிட‌லாம்;இதை ச‌மாளிக்க‌வே "வாரிசுக‌ளை" முன்னிலைப்ப‌டுத்துவார்க‌ள்;அவ‌ர் வ‌ந்து "புதுமையாக‌" எதையாவ‌து செய்வார்;இது உண்மையான‌ சீஷ‌த்துவ‌ம் அல்ல‌.

SundarP Wrote :
// கடைசி கால சபையை சீர்திருத்தும் ஒரு பிரதான மேய்ப்பனாக உங்களை தேவன் தேர்ந்தெடுத்திருந்தால்...//

கர்த்தர் ஒருவரே பிரதான மேய்ப்பர்..! (1.பேதுரு.5:4)
அவர் ஒருவரே நல்ல மேய்ப்பர்..! (யோவான்.10:11)
எல்லோருக்கும் பெரிய மேய்ப்பரும் அவரே..! (எபிரெயர்.13:20)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

«First  <  1 2 | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard