Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு உபத்திரவங்களை சகிக்கச் சொல்லவில்லை | கிருபை உபதேசிகளின் அரைவேக்காட்டு கருத்து


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: இயேசு உபத்திரவங்களை சகிக்கச் சொல்லவில்லை | கிருபை உபதேசிகளின் அரைவேக்காட்டு கருத்து
Permalink  
 


Shammoth Betes
சகிப்பதற்கு இயேசுவின் நாமம் தேவையில்லை
உலகத்தானும் சகித்துக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறான்
கிறிஸ்துவின் நிமித்தம் வரும் பாடுகளை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வதும்
இந்த உலகத்தில் சாபங்களை வியாதிகளை வறுமைகளை இயேசுவின் நாமத்தினால் மேற்கொள்வதுமே கிறிஸ்தவ வாழ்வு
 
உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு நான் உபத்திரவத்தில் வாழ்ந்தேன்
என்று இயேசு சொல்லவில்லை
மாறாக உலகத்தை ஜெயித்தேன் என்று சொன்னார்
இயேசு எப்படிப்பட்ட துன்பங்களை இந்த பூமியில் சகித்தாரோ அப்படிப்பட்ட துன்பங்களை மாத்திரம் சகிக்க நான் ஆயத்தமாக இருப்போம்
 
Samuel Churchill
Shammoth Betes லாரிக்கு முன்பாக லாரி டயர் கழண்டு ஓடக் கூடாதுப்பா.. 😁 சரக்கு கவிழ்ந்துடும். 😁
 தாறுமாறாய் ஓடும் லாரியைவிட ப்ரேக் டவுன் ஆகி நிற்கும் லாரியே பாக்கியவான், அதற்கொரு மெக்கானிக் உண்டு.
 
 


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
இயேசு உபத்திரவங்களை சகிக்கச் சொல்லவில்லை | கிருபை உபதேசிகளின் அரைவேக்காட்டு கருத்து
Permalink  
 


Fb Ajay.jpeg

இப்படி அன்றாடம் தான் தோன்றித்தனமாய் சத்தியத்தை சிதைத்து திரித்து புரட்டி பகிருவோர் சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் பெருகிவிட்டார்கள். அவர்களை அடக்குவதோ அல்லது அவர்களோடு வழக்காடுவதோ நம்மால் கூடாது. ஆனால் ஒன்று, எதுவெல்லாம் தவறு எதனால் தவறு என்பதைச் சொல்லி வைக்கிறோம். கேட்போர் கேட்கட்டும், கேளாதவர்கள் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் என்று வேதம் சொல்லுகிறது. அவர்களை கர்த்தரே பொய்யை விசுவாசிக்கும் வஞ்சகத்திற்கு ஒப்புக்கொடுப்பாரென்று சொல்லியிருக்கிறது. 

முதலாவது அவருடைய ஆங்கில வாக்கியத்திலேயே பிழை உள்ளது. அடுத்தது கர்த்தரைப் பற்றியும் அவருடைய நாமத்தைப் பற்றியும் தவறாய் கையாளப்பட்டுள்ளது. The name of Jesus is not intended for you to live a life of tolerance. Fight back. இப்படி இருக்க வேண்டிய வாக்கியம் அது. இந்த கூற்று முழுமையானதா ? விசுவாச வாழ்க்கையானது நெடும்பயணமாகும். அதில் ஒருவர் எதிர்நோக்கும் சவால்களும் துன்பங்களும் வாழ்க்கையின் ஒரு பாகமாகும். அது அனைவருக்கும் பொதுவானதே. அதை மறுத்து நீ சகித்துக்கொண்டிருக்க அவசியமில்லை, இயேசு என்னும் நாமம் அதற்காகக் கொடுக்கப்படவில்லை, திருப்பி அடி எனும் கூற்றானது மேலோட்டமாகப் பார்க்கையில் துன்பத்திலிருக்கும் ஒருவரை உற்சாகப்படுத்துவதாயிருக்கலாம். ஆனால் அது யதார்த்த நிலைக்கு எதிராய் சென்றுவிட்டால் அவிசுவாசமே தலைதூக்கும். மேலும் நம் ஆண்டவரும் உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு ஆனாலும் திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன் என்றுதான் சொல்லியிருக்கிறார். நாம் சந்திக்கும் துன்பங்களில் நமக்கு உதவிசெய்யவே இயேசுவின் நாமம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரை நோக்கிக் கூப்பிட்டால் நமக்கு உதவிசெய்கிறார் என்பது தான் முழுமையான கூற்று ஆகும்.

 


Attachments
__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard