கரம் பிடித்தென்னை வழிநடத்தும் கண்மணி போல காத்துக்கொள்ளும் கறைதிரையில்லா வாழ்வளித்து பரிசுத்த பாதையில் நடத்திச்செல்லும்
(1)
மேய்ப்பனே உம் மந்தை ஆடு நானே மேய்த்திடும் மேய்ப்பன் உம் பின்னே செல்லுவேன் புல்வெளி மேய்ச்சல் காணச் செய்து அமர்ந்த தண்ணீரண்டை வழிநடத்தும் உம் கோலினைக் கொண்டு என் பாதை மாற்றும்
(2)
செட்டையில் உயர்த்தியே தூக்கிச் செல்லும் கழுகினைப் போல என் பயங்கள் மாற்றும் வானிலும் பூவிலும் நிலைநிறுத்தும் வரங்களினாலே என்னை நிரப்பும் உம் வார்த்தையைக் கொண்டு என் வாழ்வை மாற்றும்
(3)
ஜீவனைத் தந்து என் ஜீவன் மீட்டீர் ஜீவிக்கும் நாளெல்லாம் உம்மில் வாழ்வேன் தோள்களில் என்னை சுமந்து செல்லும் தோழரைப் போலே அன்புசெய்யும் உம் அணைத்திடும் கரங் கொண்டென் கண்ணீர் மாற்றும்