Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மெல்லினம் வல்லினமாகும் வரை ஓயாது இந்த இடையினம்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
மெல்லினம் வல்லினமாகும் வரை ஓயாது இந்த இடையினம்..!
Permalink  
 


 

 
 
எங்கே போவேன்?
 
அப்பான்னு நினச்சேன்
அசிங்கமாய்த் தொட்டான்
 
சகோதரன்னு பழகினேன்
சங்கடப்படுதினான்..
 
மாமான்னு பேசினேன்
மட்டமாய் நடந்தான்...
 
உறவுகள் அனைத்தும்
உறவாடவே அழைக்கின்றது..
 
பாதுகாப்பை நாடி
பள்ளிக்குச் சென்றேன்
 
ஆசிரியனும் அரவணைத்து
மறுக்காதே மதிப்பெண்
குறையுமென்றான்..
 
நட்புக் கரமொன்று
நண்பனாய்த் தலைகோதி
தூங்கென்றான்
 
மரத்த மனம்
மருண்டு சுருண்டு
மயங்கித் தூங்கையில்
கைபேசியில் படமெடுத்தான்..
அவனும் ஆண்தானே!
 
கதறி அழ
கடவுளைச் சரணடைந்தேன்
ஆறுதலாய்த் தொட்டுத்தடவி
ஆண்டவன் துணையென்றான்
சாமியாரும்...!
 
அலறி அடித்து ஓடுகின்றேன்
எங்கே போவேன்?
 
சமத்துவம் வந்ததென
சத்தமாய்க் கூவுகின்றனர்.
 
பெண்ணை
பெண்ணாய் பாராமல்
மனிதராய் பார்க்கும் நாள்
எந்நாளோ?
 
பாவிகளின் பாலியல்
வன்முறை எப்போது ஓயுமோ?
 
(மெல்லினம், வல்லினமாகும் வரை ஓயாது இந்த இடையினம்..!) biggrin


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard