துதிகீதம் பாடி உம்மை போற்றுதே இந்த சின்ன இதயம் உம்மை பாடுதே
விலகாத தெய்வமே விலையேறப்பெற்றவரே ஆராதனை (3)*2 உமக்கே
கருவினில் உருவான நாள்முதலே கணமும் பிரியாம காத்தீங்க காணாம போனபோது தேடிவந்து கண்ணே மணியேன்னு அணைச்சீங்க
கண்ணீரைக் கண்டாலே துடிச்சீங்க காரணம் தேடி துடைச்சீங்க காலமும் உன் கூட இருக்கேன் உன்னை கைவிடவே மாட்டேன்னு சொன்னீங்க