Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யார் இந்த யெகோவா சாட்சிகள்?


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
யார் இந்த யெகோவா சாட்சிகள்?
Permalink  
 


யெளவன ஜனம் சொன்னது,

//அதிலும் உங்களைப் போல தவறானவற்றைக் கற்றுக்கொண்டு கலகம் செய்வோர் இன்னும் ஆபத்தானவர்கள்.//

என்ன தவறானவற்றை கற்று கொண்டு விட்டோம். நீர் என்ன சரியானதை கற்று கொண்டு விட்டீர். விவரமாக எழுதவும்.

//தேவத்துவத்துக்கு விரோதமாக ஒரு மனிதன் பேசுவதே தவறு என்கிறேன்.//

தேவத்துவத்துக்கு விரோதமாக பேசுவது என்றால் என்ன? எது தேவத்துவம்?



-- Edited by SANDOSH on Monday 2nd of December 2013 06:07:58 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
Permalink  
 

SANDOSH wrote:

இவர்கள் மற்ற கிருஸ்துவ மக்களிடம் சென்று அவர்களை மாற்றுகிறார்கள் எனில், அந்த அளவுக்கு  வேத ஞானமில்லாதவர்களாக விசுவாசிகளை  போதகர்களும், ஆடு மேய்ப்பவர்களும் வைத்திருப்பது ஏன்?


 தேவத்துவத்துக்கு விரோதமாக ஒரு மனிதன் பேசுவதே தவறு என்கிறேன். நீ எந்த அளவுக்கு அறிந்திருக்கிறாயோ அந்த அளவில் பேசுகிறாய். ஆனால் சத்தியம் என்பது விவரிக்க இயலாதது. அறிந்துள்ளவை யாவும் மனித அறிவுக்கும் புரிதலுக்கும் உட்பட்டவையே. தம் ஜனத்தை மேய்க்க மேய்ப்பர்களை நியமித்த தேவன், அவர்கள் பொறுப்பில்லாமல் நடந்தபோது அவர்களையும் கண்டிக்கிறார், தாம் நியமித்த மேய்ப்பர்களுக்கு விரோதமாக எழும்பும் ஜனத்தை தண்டிக்கிறார். எனவே மேய்ப்பர்கள் விவரமறியாதவர்களாக இருப்பினும் கற்றுக்கொள்ள விரும்பாத ஜனமும் பிரச்சினைக்குரியவர்களே. அதிலும் உங்களைப் போல தவறானவற்றைக் கற்றுக்கொண்டு கலகம் செய்வோர் இன்னும் ஆபத்தானவர்கள். biggrin

 



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

சகோதரர் சில்சாம் அவர்களே,

யோகாவா சாட்சியினர் என்ற பிரிவும், வேத மாணாக்கர் என்ற பிரிவும் மற்ற கிருஸ்துவ பிரிவு மக்களிடையே சென்று அவர்களை குழப்புகின்றனர் என்றும் அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும் சொல்கிறீர்கள்.

இவர்கள் மற்ற கிருஸ்துவ மக்களிடம் சென்று அவர்களை மாற்றுகிறார்கள் எனில், அந்த அளவுக்கு  வேத ஞானமில்லாதவர்களாக விசுவாசிகளை  போதகர்களும், ஆடு மேய்ப்பவர்களும் வைத்திருப்பது ஏன்?

வேத மாணாக்கரும், யோகாவா சாட்சியினரும் தங்கள் கருத்துக்கு ஆதரவாக தெளிவான வேத வசனங்களை காண்பிக்கும் போது, திரித்துவ போதனை செய்பவர்கள் மட்டும் திரித்துவத்தை புரிந்து கொள்ள முடியாது என சொல்வது ஏன்? சொல்லப் போனால் திரித்துவ போதனை செய்பவர்கள்தான் வேத ஆதாரத்தை தெளிவாக காட்டுவதில்லை. அது பற்றின விவாதத்தில் முழுமையாக பங்கேற்பதில்லை.

உதாரணமாக, இந்த கட்டுரையை எழுதியவரே, வசனத்தை எப்படி மறைத்து சொல்லியிருக்கிறார் என்பதை பார்ப்போம். இவர் சொல்வது உண்மை என நம்பினால் வசனத்தை மறைக்க வேண்டிய அவசியம் இவருக்கு ஏன் வந்தது? இனி வசனங்களை பார்ப்போம்.

1. யோவான்.5.26. ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார். - சரியானது

யோவான் 5:26 பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவர். குமாரனும் தம்மில் தாமே ஜீவனுடையவர். அதாவது இயேசுவை யாரும் சிருஷ்டிக்கவில்லை என்பது தான் பொருள். - இந்த வசனத்தில் அருள் செய்திருக்கிறார் என்பதை மறைத்துள்ளனர்.

2. யோவான் 14.6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். - சரியானது

யோவான் 14:6 நானே ஜீவன். - இயேசு கிருஸ்து வழி என்பதை மறைத்திருக்கின்றனர்.

3. யோவான் 1:4 அவருக்குள் ஜீவன் இருந்தது அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. - இதை மட்டும் சரியாக சொல்லியுள்ளார்.

4. யோவான்.10.18. ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார். - சரியானது

யோவான் 10:18 என் ஜீவனைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு. அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. - இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் இதை மறைத்துள்ளனர்

5. மத் 28:18 வானத்திலும் பூமியிலும் சர்வ அதிகாரம் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதன் விளக்கம்,

1.கொரி.15.27. சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும் போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது.

28. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.

6. வெளி.1.18. மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.- சரியானது

 வெளி 1:18 இயேசு கிறிஸ்துவே சர்வ வல்லமையுள்ள தேவன். - வசனமே தவறாக உள்ளது

7. யோவா 1:48 நாத்தான்வேலைப் பார்த்து நீ அத்திமரத்தின் கீழிறங்கும் போது என்னைக் கண்டேன் என்றார்.
யோவா 2:25 மனுஷருடைய எண்ணங்களையெல்லாம் அவர் அறிந்திருக்கிறார்.

அவர் தனது இரண்டாம் வருகை எப்போது என அறிந்திருக்கவில்லை - இது எதிர் வாதம்

8. இயேசு கிறிஸ்து எங்கும், எப்போதும் இருக்கக்கூடியவர்.- தேவத்துவத்தின் இந்த தன்மை எந்த பொருளில் சொல்லப்பட்டுள்ளது என்பது விவாதத்திற்குரியது - ஏனெனில் இயேசு கிருஸ்து இந்து ஆலயங்களில் இல்லை என்று கிருஸ்துவர்கள் சொல்கின்றனர்

9.  இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். - தேவத்துவத்தின் இந்த தன்மையும் விவாதத்திற்குரியது,

10. மாற்கு 2:5-12 உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது. - சரியானது

11. கீழ்கண்ட வசனங்கள் சரியானவையே

யோவா 1:3,10 சகலமும் அவர் (இயேசு கிறிஸ்து) மூலமாய் உண்டாயிற்று.
கொலோ 1:16 அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது.சகலமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.

(எபே 3:9. எபி 1:2,10)

இயேசு கிறிஸ்துவை தொழுது கொண்டனர்.

மத் 8:2 குஷ்டரோகி இயேசுவை பணிந்து கொண்டான்.
மத் 9:18 தலைவன் இயேசுவை பணிந்து கொண்டான்.
மத் 14:33 படகிலிருந்தவர்கள் அவரைப் பணிந்து கொண்டார்கள்.
மத் 15:25 ஒரு பெண் இயேசுவை பணிந்து கொண்டாள்.
மத் 20:20 செபதேயுவின் குமாரனுடைய தாய் அவரை பணிந்து அகாண்டாள்.
மத் 28:9,17 சீஷர்கள் அவர் பாதங்களைத் தழுவி அவரை பணிந்து கொண்டார்கள்.

யோகாவா சாட்சியனர் சொல்வது தவறாக இருக்கலாம். ஆனால் இந்த கட்டுரையை எழுதினவர் அனேக வசனத்தை திரித்து, மறைத்து எழுத வேண்டிய காரணம் என்ன? அதனால் இதை எழுதியவரும் நம்பத்தகுந்தவர் அல்ல.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
Permalink  
 

யெகோவாவின் சாட்சிகள் யார்?

 

யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி நீங்கள் அவசியம் எழுத வேண்டும், அவர்களுடைய தொல்லை தாங்க முடியவில்லை என்று பலர் கேட்டிருந்தனர். இக்கூட்டத்தைக் குறித்து இப்பகுதியில் விளக்கமாகப் பார்ப்போம். முதலில் இது எவ்வாறு ஆரம்பித்தது என்று பார்ப்பது அவசியம். இவர்கள் பொதுவாக வாட்ச் டவர் வேத, துண்டுப்பிரசுர நிறுவனம் (Watch Tower Bible and Tract Society) என்ற பெயரில் உலவுகிறார்கள். சார்ள்ஸ் டேஸ் ரசல் (Charles Taze Russell) என்ற மனிதனின் போதனைகளையே இக்கூட்டம் சத்தியமாகப் பின்பற்றுகிறது. 1852 இல் பிறந்த ரசல் 1870 இல் தனது பதினெட்டாம் வயதில் ஒரு கூட்டத்தின் போதகராக அமைந்து சயனின் வாட்ச் டவர் (Zion’s Watch Tower) என்ற பத்திரிகையை ஆரம்பித்து அப்பத்திரிகை மூலம் தனது போதனைகளைப் பரப்பினார். இப்பத்திரிகையில் வேதத்திற்கு தன்னுடைய சொந்தக் கருத்துக்களை அளித்து வந்தார் ரசல். 1916 இல் இறந்த ரசலின் வாழ்க்கை ஒழுங்காக அமைந்திருக்கவில்லை. அவரது மனைவி, ரசல் ஆணவம் பி‍டித்த மனிதன் என்றும் எந்தவொரு பெண்ணோடும் வாழ்க்கை நடத்தத் தகுதியில்லாதவரென்றும் குற்றம் சாட்டி அவரை விவாகரத்து செய்தார். தன்னுடைய சபையில் நோயுற்றிருந்தவர்கள் தங்கள் சொத்துக்களை தனக்குக் கொடுத்து விடவேண்டுமென்று ரசல் சொன்னார். மற்றவர்களின் பணவிஷயத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ரசல் நீதி மன்றம் முன்பும் கொண்டுவரப்பட்டார். ரசல் இறந்த பின் ஜோசப் பிராங்ளின் ரதர்பர்ட் (Joseph Franklin Rutherford) இந்நிறுவனத்தின் தலைவராக வந்தார். அவரது இறப்பிற்குப்பின் நேதன் ‍ஹோமர் நோர் (Nathan Homer Knorr) என்பவர் இதன் பிரசிடன்ட் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரதர்பர்டின் காலத்திலேயே இந்நிறுவனத்திற்கு “யெகோவாவின் சாட்சிகள்” என்ற பெயர் கொடுக்கப்பட்டது. நோரின் காலத்தில் 1961 இல் வேதத்தின் “புதிய உலக மொழி பெயர்ப்பு” வெளியிடப்பட்டது. இன்று யெகோவாவின் சாட்சிகள் வாட்ச் டவர் பத்திரிகை மூலம் தனது போதனைகளைத் தொடர்ந்து பரப்பி வருகின்றது.

 

 

 

இவர்கள் போதிப்பதென்ன?

 

யெகோவாவின் சாட்சிகளின் போதனைகளின் முக்கிய அம்சங்களை நாம் கிறிஸ்தவ வேதத்துடன் இனி ஒப்பிட்டுப் பார்ப்போம்.

 

1. காலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவரான கடவுள் கண்ணால் காண முடிந்தவைகளையும், கண்ணால் காண முடியாதவற்றையும் உருவாக்கினார் என்று போதிக்கும் இக்கூட்டம் வேதம் போதிக்கும் திரித்துவப் போதனையை முற்றாக நிராகரிக்கிறது. திரித்துவப் ‍போதனை கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனை.

 

2. கிறிஸ்து கடவுளால் ஆரம்பத்தில் படைக்கப்பட்டவர். இயேசு கிறிஸ்து நித்தியத்திலிருந்து கடவுளின் குமாரன் அல்ல என்று இக்கூட்டம் விசுவாசிக்கின்றது. கிறிஸ்து வார்த்தையாகப் படைக்கப்பட்டு கடவுளின் சிருஷ்டியில் பங்கு கொண்டிருந்தார் என்றும், அவரே மைக்கல் என்ற தலைமைத் தேவதூதனாகவும் இருந்தார் என்றும் இவர்கள் போதிக்கிறார்கள். கிறிஸ்து ஒருவிதத்தில் கடவுள்தான் ஆனால், யெகோவா போன்ற கடவுள் இல்லை என்பது இவர்களின் விசுவாசம். கிறிஸ்து தேவ குமாரனே‍யொழிய கடவுள் இல்லை. கிறிஸ்து மனிதனாக உலகில் தோன்றியபோது அவரில் எந்தத் தெய்வீகத் தன்மையும் இருக்கவில்லை என்றும் ஆனால் முழு மனிதனாக மட்டும் இருந்தார் என்றும் இவர்கள் கூறுகிறார்கள். கிறிஸ்து மனிதனின் பாவ நிவாரணத்திற்காக கொடூரமான மரணத்தை சந்தித்தார் என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.

 

இதிலிருந்து யெகோவாவின் சாட்சிகளுக்கும் வேதம் போதிக்கும் கர்த்தருக்கும் எத்தனை வேறுபாடு இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்து, கடவுள் என்பதை மறுக்கும் எவரும் வேதத்தை நம்புவதில்லை. கிறிஸ்து கடவுளால் படைக்கப்படவில்லை. அவர் ஆதியாகமம் முதல் அதிகாரம் கூறுவதுபோல் திரித்துவத் தேவனாய் பிதா, ஆவியோடு இருந்து படைக்கும் செயலில் ஈடுபட்டிருந்தார். கிறிஸ்து நித்தியத்திலிருந்து தேவகுமாரனாக இருக்கிறார் (Christ was eternally the Son of God) என்று வேதம் தெளிவாகப் ‍போதிக்கின்றது. கிறிஸ்து இவ்வுலகில் பிறந்தபோது முழு மனிதனாக இருந்ததோடு தனது ‍தெய்வீகத் தன்மையில் எதையும் இழக்கவில்லை. யெகோவாவின் சாட்சிகளின் கூற்றுப்படி கிறிஸ்து கடவுளல்ல.

 

3. பரிசுத்த ஆவியானவர் கடவுள் பயன்படுத்தும் வெறும் வல்லமையே தவிர அவர் கடவுளல்ல. அவர் ஒரு நபருமல்ல என்று யெகோவாவின் சாட்சிகள் போதிக்கின்றது. தனது ஊழியர்கள் தன்னுடைய சித்தத்தைச் செய்ய வைப்பதற்காக யெகோவா பயன்படுத்தும் கண்ணுக்குத் தெரியாத ஒரு வல்ல‍மையே பரிசுத்த ஆவி என்று இவர்கள் கூறுகிறார்கள். பரிசுத்த ஆவி இவர்களைப் பொறுத்தவரையில் தெய்வீகத் தன்மை பொருந்தியவரோ அல்லது திரித்துவத்தின் ஓர் அங்கத்தவரோ இல்லை.

 

இது வேதத்திற்கு முரணான போதனை. பரிசுத்த ஆவியானவர் திரித்துவத்தின் மூன்றாம் அங்கத்தவராக, ஓர் நபராக இருக்கிறார் என்றும் அவர் கடவுள் என்றும் வேதம் போதிக்கின்றது.

 

4.மனிதனுக்கு அழிவற்ற நித்திய ஆத்துமா (Immortal soul) இல்லை. ஆகவே அவன் இறந்தபின் காற்றோடு கலந்து இல்லாமல் போகிறான் என்று யெகோவாவின் சாட்சிகள் போதிக்கின்றது. ஆனால் மனிதன் அழிவற்ற நித்திய ஆத்துமாவைக் கொண்டுள்ளான் என்று வேதம் போதிக்கின்றது.

 

5. நித்திய நரகம் என்று ஒன்றில்லை என்றும், நித்திய தண்டனை (Eternal Punishment) என்பதும் இல்லை என்றும் இவர்கள் போதிக்கிறார்கள். இறந்தபின் மனிதன் நித்திய தண்டனை அடையாமல் ஒன்றுமே இல்லாமல் போகிறான் என்பது இவர்களுடைய போதனை. வேதமோ இதற்கு மாறாக பாவியான மனிதன் இறந்தபின் நித்திய தண்டனையை நரகத்தில் நித்தியத்திற்கும் அனுபவிக்கிறான் என்று தெளிவாகப் போதிக்கின்றது.

 

6. கிறிஸ்துவின் மரணத்தின்போது அவரது சரீரம் அழிக்கப்பட்டதால் அது மீண்டும் உயிர்த்தெழ முடியாதென்றும், கிறிஸ்து ஆவியாக மட்டுமே உயிர்த்தெழுந்தார் என்றும் இக்கூட்டம் போதிக்கின்றது. இதுவும் கிறிஸ்துவின் உயிர்தெழுதல் பற்றிய வேத போதனைகளுக்கு முரணானது.

 

7. மனிதனுடைய நற்கிரியைகளின் மூலமே இரட்சிப்பு என்று இக்கூட்டம் நம்புகிறது. யெகோவாவிற்கு விசுவாசமாக இருந்து கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் யெகோவாவின் இராஜ்யத்தை அடைவார்கள் என்று இவர்கள் போதிக்கிறார்கள். மனந்திரும்புதல், பாவ மன்னிப்பு என்பதெல்லாம் இவர்களுடைய அகராதியில் கிடையாது.

 

இது ஒரு போலிப்போதனை

 

கிறிஸ்தவ வேதத்திற்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்பதை மேலே நாம் பார்த்த யெகோவாவின் சாட்சிகளின் போதனைகளின் முக்கிய அம்சங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம். இது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு போலிப்போதனை. இதன் போதனைகள் வேதத்திற்கு முரணானது மட்டுமல்லாது இக்கூட்டத்தாரின் வழிமுறைகளும் மனித சுதந்திரத்திற்கு முரணானது. தமது கூட்டத்தைச் சேர்ந்தவர்களை அடிமைப்படுத்தும் வழிமுறைகளையும் இவர்கள் கடைப்பிடிக்கிறார்கள்.

 

தமது கூட்டத்தில் சேரும் தனி மனிதர்களும், குடும்பங்களும் அநேக விதிகளைக் கடைப்பிடிக்கும்படி வற்புறுத்திக் குடும்பங்களில் இருக்கும் சமாதானத்தைக் குலைத்து பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள். கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலும் குழப்பத்தை உருவாக்குகிறார்கள். இக்கூட்டத்தில் சேர்ந்து இதன் அடிமைத்தனத்திற்கு தம்மைப் பலி கொடுத்தவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு பெரும் பாடுபட வேண்டியிருக்கிறது. இதில் சேர்ந்து தமது வாழ்வைப் பலி கொடுத்தவர்கள் அநேகர்.

 

தமது கூட்டத்துடன் சேர்ந்து விடுபவர்களுக்கு வேத போதனை என்ற பெயரில் மனதைக் குழப்பும் வேதத்திற்கு முரணான போதனைகளைக் கொடுத்து தமது கூட்டத்திலிருந்து போக முடியாத ஒரு மனநிலையை இவர்கள் உருவாக்கிவிடுகிறார்கள். யெகோவாவின் சாட்சிகளுடன் இணைந்தவர்களால் சுயமாக சிந்திக்க முடியாமல் போய்விடுகிறது. அவர்கள் தமது இயக்கத்திற்கு மாறாக எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது, அதன் போதனைக்கு எதிராக சிந்திக்கக் கூடாது, செயல்படக்கூடாது என்ற மனநிலையை உருவாக்கிக் கொள்கிறார்கள். இதற்கான Brain washing பணியை இக்கூட்டம் நடத்துகின்றது.

 

இவர்களைத் தவிர்ப்பதெப்படி?

 

வேத ஞானமில்லாதவர்கள் யெகோவாவின் சாட்சிகள் வீட்டிற்கு வரும்போது அவர்களை வெளியிலேயே வைத்து திருப்பி அனுப்பிவிடுவது நல்லது. அவர்களோடு பேச்சுக் கொடுத்து அவர்கள் போதனைக்கு இரையாகாமல் இருக்க இது உதவும். இவர்கள் நம் வீட்டிற்கு வரும்போது நேரடியாக விஷயத்திற்கு வராமல் உலக நடப்புகளைப் பற்றிப் பேசி நமது அபிப்பிராயத்தை அறிய முற்படுவது போல் நடித்து தமது போதனைகளை நம்மில் திணிக்கப் பார்ப்பார்கள். ஆகவே இவர்களுடன் பேசுவதைத் தவிர்த்துக்கொள்வது நல்லது.

 

இக்கூட்டத்திற்குத் தம்மைப் பலி கொடுத்தவர்களை எப்படிக் காப்பது?

 

யெகோவாவின் சாட்சிகள் சிந்திக்க முடியாத ஒரு மனநிலையை வளர்த்துக் கொண்டுள்ளதால் அவர்களுடன் பேசும்போது நாம் கிறிஸ்துவைப் பற்றியும், உயிர்த்தெழுதல் பற்றியும், திரித்துவத்தைப் பற்றியும், இரட்சிப்பைப் பற்றியும் தெளிவாக வேதத்தைத் திறந்து வைத்துப் பேச வேண்டும். இப்போதனைகளுக்கு ஆதாரமான வேத வசனங்களை எடுத்துக் காட்டி விளக்க வேண்டும். அவர்கள் இவ்வசனங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கேட்க வேண்டும். அவர்கள் ஒரு விஷயத்திலிருந்து இன்னொன்றிற்குத் தாவ முயற்சிப்பார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் மீண்டும் அவர்களை நாம் பேசும் ‍பொருளைக் குறித்து சிந்திக்கும்படிச் செய்ய வேண்டும். முதல் நாளிலேயே அவர்கள் நாம் கூறுவதைக் கேட்டு விடுவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது. இக்கூட்டத்தில் சேர்ந்து சிந்தித்து ஆராயும் பக்குவத்தை இழந்து மற்றவர்களை சந்தேகக்கண்ணுடன் பார்க்கும் மன நிலையை இவர்கள் பெற்றுக் கொண்டிருப்பதால் நாம் தொடர்ந்து அவர்களுடன் பேசி வேத போதனைகளைக் குறித்து சிந்திக்கும்படிச் செய்யவேண்டும். இவர்களுடன் பேச முயல்பவர்களுக்கு நல்ல வேத அறிவு இருப்பதோடு சுருக்கமாகவும், தெளிவாகவும் சத்தியத்தை எடுத்துச் சொல்லக் கூடிய பக்குவமும் இருக்க வேண்டும்.

 

இவற்றோடு நமது ஞானத்திலும், வல்லமையிலும், திறமையிலும் தங்கியிருக்காமல் நாம் கூறும் வேத வசனங்களைப் பயன்படுத்தி பரிசுத்த ஆவியானவர் இவர்கள் மனந்திரும்பும்படிச் செய்யுமாறு நாம் ‍‍ஜெபத்துடன் இப்பணியில் ஈடுபட வேண்டும். கர்த்தர் மட்டுமே இக்கூட்டத்தில் அகப்பட்டுக் கொண்டவர்களுக்கும் விடுதலை கொடுக்க முடியும். கிறிஸ்துவை விசுவாசிக்கும்படிச் செய்யமுடியும்.

நன்றி :



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
Permalink  
 

ஏகோவா சாட்சிகளை குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் -2

யார் இந்த யெகோவாவின் சாட்சிகள்?


முதலில் இது எவ்வாறு ஆரம்பித்தது என்று பார்ப்பது அவசியம். இவர்கள் பொதுவாக வாட்ச் டவர் வேத, துண்டுப்பிரசுர நிறுவனம (Watch Tower Bible and Tract Society) என்ற பெயரில் உலவுகிறார்கள். சார்ள்ஸ் டேஸ்ரசல் (Charles Taze Russell) என்ற மனிதனின் போதனைகளை யே இக்கூட்டம் சத்தியமாக பின்பற்றுகிறது. 1852 இல் பிறந்த ரசல் 1870 இல் தனது பதினெட்டாம் வயதில் ஒரு கூட்டத்தின் போதகராக அமைந்து சயனின் வாட்ச் டவர் (Zion’s Watch Tower) என்ற பத்திரிகையை ஆரம்பித்து அப்பத்திரிகை மூலம் தனது போதனைகளைப்
பரப்பினார்.இப்பத்திரிகையில் வேதத்திற்கு தன்னுடைய சொந்தக் கருத்துக்களை அளித்து வந்தார் ரசல். 1916 இல் இறந்த ரசலின் வாழ்க்கை ஒழுங்காக அமைந்திருக்கவில்லை.

அவரது மனைவி, ரசல் ஆணவம் பிடித்த மனிதன் என்றும் எந்தவொரு பெண்ணோடும் வாழ்க்கை நடத்தத் தகுதியில்லாதவரென்றும் குற்றம் சாட்டி அவரை விவாகரத்து செய்தார். தன்னுடைய சபையில் நோயுற்றிருந்தவர்கள் தங்கள் சொத்து க்களை தனக்குக் கொடுத்து விடவேண்டுமென்று ரசல் சொன்னார். மற்றவர்களின் பணவிஷயத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ரசல் நீதிமன்றம் முன்பும் கொண்டுவரப்பட்டார்.

ரசல் இறந்த பின் ஜோசப் பிராங்ளின் ரதர்பர்ட் (Joseph Franklin Rutherford) இந்நிறுவனத்தின் தலைவராக வந்தார். அவரது இறப்பிற்குப்பின் நேதன்ஹோமர் நோர் (Nathan Homer Knorr) என்பவர் இதன் பிரசிடன்ட் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரதர்பர்டின் காலத்திலேயே இந்நிறுவனத்திற்குயெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் கொடுக்கப்பட்டது.

நோரின் காலத்தில் 1961 இல் வேதத்தின்புதிய உலக மொழி பெயர்ப்பு வெளியிடப்பட்டது. இன்று யெகோவாவின் சாட்சிகள் வாட்ச் டவர் பத்திரிகை மூலம் தனது போதனைகளைத் தொடர்ந்து பரப்பி வருகின்றது.

இவர்கள் போதிப்பதென்ன?

யெகோவாவின் சாட்சிகளின் போதனைகளின் முக்கிய அம்சங்களை நாம் கிறிஸ்தவ வேதத்துடன் இனி ஒப்பிட்டுப் பார்ப்போம்.

1. காலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவரான கடவுள் கண்ணால் காண முடிந்தவைகளையும், கண்ணால் காண முடியாதவற்றையும் உருவாக்கினார் என்று போதிக்கும் இக்கூட்டம் வேதம் போதிக்கும் திரித்துவப் போதனையை முற்றாக நிராகரிக்கிறது. திரித்துவப்போதனை கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனை.

2. கிறிஸ்து கடவுளால் ஆரம்பத்தில் படைக்க ப்பட்டவர். இயேசு கிறிஸ்து நித்தியத்திலிருந்து கடவுளின் குமாரன் அல்ல என்று இக்கூட்டம் விசுவாசிக்கின்றது. கிறிஸ்து வார்த்தையாகப் படைக்கப்பட்டு கடவுளின் சிருஷ்டியில் பங்கு கொண்டிருந்தார் என்றும், அவரே மைக்கல் என்ற தலைமைத் தேவதூதனாகவும் இருந்தார் என்றும் இவர்கள் போதிக்கிறார்கள். கிறிஸ்து ஒருவிதத்தில் கடவுள்தான் ஆனால், யெகோவா போன்ற கடவுள் இல்லை என்பது இவர்களின் விசுவாசம். கிறிஸ்து தேவ குமாரனேயொழிய கடவுள் இல்லை. கிறிஸ்து மனிதனாக உலகில் தோன்றியபோது அவரில் எந்தத் தெய்வீகத் தன்மையும் இருக்கவில்லை என்றும் ஆனால் முழு மனிதனாக மட்டும் இருந்தார் என்றும் இவர்கள் கூறுகிறார்கள். கிறிஸ்து மனிதனின் பாவநிவாரணத்திற்காக கொடூரமான மரணத்தை சந்தித்தார் என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.

இதிலிருந்து யெகோவாவின் சாட்சிகளுக்கும் வேதம் போதிக்கும் கர்த்தருக்கும் எத்தனை வேறுபாடு இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்து, கடவுள் என்பதை மறுக்கும் எவரும் வேதத்தை நம்புவதில்லை. கிறிஸ்து கடவுளால் படைக்கப்படவில்லை. அவர் ஆதியாகமம் முதல் அதிகாரம் கூறுவதுபோல் திரித்துவத் தேவனாய் பிதா, ஆவியோடு இருந்து படைக்கும் செயலில் ஈடுபட்டிருந்தார். கிறிஸ்து நித்தியத்திலிருந்து தேவகுமாரனாக இருக்கிறார் (Christ was eternally the Son of God) என்று வேதம் தெளிவாகப்போதிக்கின்றது. கிறிஸ்து இவ்வுலகில் பிறந்தபோது முழு மனிதனாக இருந்ததோடு தனதுதெய்வீகத்தன்மையில் எதையும் இழக்கவில்லை.

3. பரிசுத்த ஆவியானவர் கடவுள் பயன்படுத்தும் வெறும் வல்லமையே தவிர அவர் கடவுளல்ல. அவர் ஒரு நபருமல்ல என்று யெகோவாவின் சாட்சிகள் போதிக்கின்றது. தனது ஊழியர்கள் தன்னுடைய சித்தத்தைச் செய்ய வைப்பதற்காக யெகோவா பயன்படுத்தும் கண்ணுக்குத் தெரியாத ஒரு வல்லமையே பரிசுத்த ஆவி என்று இவர்கள் கூறுகிறார்கள். பரிசுத்த ஆவி இவர்களைப் பொறுத்தவரையில் தெய்வீகத்தன்மை பொருந்தியவரோ அல்லது திரித்துவத்தின் ஓர் அங்கத்தவரோ இல்லை.

இது வேதத்திற்கு முரணான போதனை. பரிசுத்த ஆவியானவர் திரித்துவத்தின் மூன்றாம் அங்கத்தவராக, ஓர் நபராக இருக்கிறார் என்றும் அவர் கடவுள் என்றும் வேதம் போதிக்கின்றது.

4. மனிதனுக்கு அழிவற்ற நித்திய ஆத்துமா(Immortal soul) இல்லை. ஆகவே அவன் இறந்தபின் காற்றோடு கலந்து
இல்லாமல் போகிறான் என்று யெகோவாவின் சாட்சிகள் போதிக்கின்றது. ஆனால் மனிதன் அழிவற்ற நித்திய ஆத்துமாவைக் கொண்டுள்ளான் என்று வேதம் போதிக்கின்றது.

5. நித்தியநரகம் என்று ஒன்றில்லை என்றும், நித்திய தண்டனை (Eternal Punishment) என்பதும் இல்லை என்றும் இவர்கள் போதிக்கிறார்கள். இறந்தபின் மனிதன் நித்திய தண்டனை அடையாமல் ஒன்றுமே இல்லாமல் போகிறான்
என்பது இவர்களுடைய போதனை. வேதமோ இதற்கு மாறாக பாவியான மனிதன் இறந்தபின் நித்திய தண்டனையை நரகத்தில் நித்தியத்திற்கும் அனுபவிக்கிறான்என்றுதெளிவாகப்போதிக்கின்றது.


நன்றி: hichristians



-- Edited by Yauwana Janam on Sunday 1st of December 2013 04:33:08 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
Permalink  
 

ஏகோவா சாட்சிகளை குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்

இவர்கள் ஏகோவா மட்டும் தான் தெய்வம், இயேசு கிறிஸ்து ஓர் மனிதன், பரிசுத்த ஆவியானவரும் தெய்வம் இல்லை என்று கூவிவரும் இவர்கள் குறிபார்ப்பது கிறிஸ்தவர்களை மட்டும் தான். அதுவும் CSI , லுத்தரன், methodist சபைக்கு போகும் கிறிஸ்தவர்களை குறிபார்ப்பது தான் இவர்கள் வேலை. இவர்கள் கிராமபுரங்களில் அதிகமாக பெருகி வருகிறார்கள். குறிப்பாக கோவை மாவட்டம், ஊட்டி, கொடைகானல், மதுரை, சென்னை போன்ற பகுதிகளில் அதிகமாக வளர்ந்துவருகிறார்கள். நான் ஓர் CSI சபையில் தேவனுடைய வார்த்தையை பகிர்ந்து விட்டு கடைசியாக ஏகோவா சாட்சிகளை குறித்து எச்சரிக்கையாய் இருக்க சொன்னேன். ஆலயம் முடிந்ததும் பலர் என்னிடம் வந்து ஏன் அப்படி சொன்னீர்கள் என்று கேட்டார்கள். அதிர்ந்து விட்டேன். பிறகு சபை
ஆயரோடு அவர்களின் இல்லங்களுக்கு அன்றே சென்று அவர்களுக்கு விளக்கினோம்.

அன்றில் இருந்து இன்று வரை அவர்கள் ஏகோவா சாட்சிகளை வீட்டில் அனுமதிப்பதில்லை.

நீங்கள் எப்படி?

1 யோவான் 4:1. பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.

எப்படி சோதித்தறிவது?

இங்கே தான் கிறிஸ்தவர்கள் தவறுகிறார்கள். எங்கே? வேதத்தை படிப்பதோடு மட்டுமல்ல... ஒருவர் கடவுளை
பற்றி கூறும்போது அதை மனதில் எடுத்துகொள்ளும் முன்பாக வேதத்தோடு ஒப்பிட்டு பாருங்கள். சிலர் வேதவசங்களை சொல்லமலேயே செய்தியை முடித்துவிடுகிறார்கள். அல்லது ஆரம்பித்தில் ஒன்றை ஆரம்பித்து முடிவில் ஒன்றை சொல்லுவார்கள். சிலர் நம் உணர்வை தூண்டும் விதமாக மனதை பாதிக்கும் விஷயத்தை சொல்லி கவனத்தை ஈர்க்க பார்பார்கள். சிலர் சம்பந்தமில்லாத வேதவசனத்தை கோர்த்துவிடுவார்கள்.

நீங்கள் வேதவசனத்தை ஆராய அழைக்கிறேன். அதற்கு உங்கள் சபை போதகரை வேத ஆராய்ச்சி கூடங்களை உங்கள் இல்லத்திலோ, ஆலயத்திலோ நடத்த சொல்லுங்கள். அவரிடம் உங்கள் மனதில் ஏற்படும் சந்தேகங்களை கேளுங்கள். தெளிவடையுங்கள். இல்லையென்றால் இப்படிப்பட்ட கும்பல்களிடம் ஒரு வேலை நீங்கள் தப்பிக்கலாம். ஆனால் உங்கள் பிள்ளைகள் தப்பிபார்களா?

இப்படிப்பட்டவர்கள் உங்களிடம் கேள்வி கேட்டுகொண்டே இருப்பார்கள். உங்களை தர்க்கம் பேச வைத்து உங்கள் வேத அறிவை தெரிந்து கொள்வார்கள். பிறகு உங்கள் அறிவிற்கேற்ப குழப்ப பார்பார்கள். வேதத்தை முழுவதும் புரிந்து கொள்ளாதவர்கள் இவர்கள் பேச்சில் மயங்கி விடுவர். 1 திமோத்தேயு 6:5 கெட்ட சிந்தையுள்ளவர்களும்
சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.

1 திமோத்தேயு 6:1
ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.

- என்று வேதம் எச்சரிக்கிறது.
ஜாக்கிரதையாய் இருங்கள். உங்கள் ஆலயங்களிலோ, போதனைகளிலோ வேதவசனம் சரியாய்  கோர்க்கப்படவில்லை என்றால் அதை விட்டு விலகுங்கள். பரிசுத்த வேதாகமத்தில் சொல்லபட்டிருக்கிற எல்லாவற்றிக்கும் பதில் பரிசுத்த வேதாகமத்தில் உண்டு.  உங்கள் சபை ஆயரை, போதகரை அணுகி விடை வேதத்தின் அடிப்படையில் விடைதேடுங்கள். அல்லது மிஷனரி ஸ்தாபனங்கள் மூலமாக நடக்கும் முகாமில் கலந்து கொள்ளுங்கள். (நண்பர் சுவிஷேச ஜெபக்குழு, விஸ்வவாணி, IMS , இந்திய நற்செய்தி மாணவர் மன்றம் (UESI _TN ), Scripture Union , என்று பல நல்ல ஊழிய ஸ்தாபனங்கள் உண்டு. அணுகவும்.

தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
Permalink  
 

யார் இந்த யெகோவா சாட்சிகள்?


இவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல. என்னுடைய கருத்து முடிவானதல்ல. வேதமே முடிவானது. முழுமையானது. வசனத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். எளிதில் தவறிப் போகமாட்டீர்கள் நவீன காலத்தல் உருவான, உருவாகி வருகின்ற சில கொள்கைகளைப் பற்றியும் கற்றுக்கொள்வோம்.

யெகோவா சாட்சி:

உலகமெங்கும் பரவிவரும் இந்தக் கொள்கையைப் பற்றி நாம் அறிந்து கொள்வது நல்லது. இந்த இயக்கத்தின் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மூவர்

1).   சார்லஸ் டாஸ் ரசல் - Charles Taze Russell (1852-1916)   இவர் 1852 பிப்ரவரி 16ல் அமெரிக்காவில் பிறந்தார். இவருடைய தகப்பன் துணிக்கடை நடத்தி வந்தார். இவர் ஈடிகாங்ரிகேஷனல் சபையைச் சேர்ந்தவர். சபையில் பின்பற்றப்பட்ட விசுவாசப் பிரமாணங்கள் சிலவற்றைக் குறித்து ரசலுக்கு சந்தேகங்கள் வந்தது. குறிப்பாக நித்திய நரகம் போன்ற உபதேசங்கள் இதனால் மற்ற மார்க்க கொள்கைகளை கற்க ஆரம்பித்தார். பின்பு வேதத்தைக் கற்க ஆரம்பித்தார். குறிப்பாக தானியேல் வெளிப்படுத்தல் புத்தகங்களை ஆராய்ச்சி செய்தார். வில்லியம் மில்லர் என்பவரின் எழுத்துக்களால் கவரப்பட்டார். தனது 18ம் வயதில் பென்சில்வேனயா மாநிலத்திலுள்ள பிட்ஸ்பர்க் என்ற ஊரில் ஒரு வேதபாட வகுப்பை ஆரம்பித்தார். பின்பு அந்தக் குழுவுக்கு பேய்ப்பரானார்.

கி.பி 1879ல் வாச்டவர் பைபிள் & ட்ராக்ட் சொசைட்டி என்ற நிறுவனம் ஆரம்பமானது. ரசல் பல இடங்களுக்கும் பிரயாணம் செய்து தன் கொள்கைகளைப் பரப்பினார். அனேக புத்தகங்களை எழுதினார். 60 ஆண்டுகளில் சுமார் 2 கோடி புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. இவர் சபையிலுள் பெண்களுடன் தவறான உறவு கொண்டிருக்கிறார் என்று இவரது மனைவி 1909ல் நீதிமன்றத்தில் 5 முறை வழக்கு தொடர்ந்தார் கடைசியில் விவாகரத்துப் பெற்றார். 1916ல் ரசல் மரித்தார்.

2).   ஜோசப் பிராங்ளின் ரத்தப்போர்ட் - Joseph Franklin Rutherford (1869 1942) ரசலுக்குப் பின் 1917ல் இவர் இந்த இயக்கத்தின் தலைவரானார். இவர் ஒரு வழக்கறிஞர். பின் நீதிபதியானார். 1906-ல் இவர் இந்த இயக்கத்தில் சேர்ந்தார். 1931-ல் இந்த இயக்கத்தின் பெயர் யெகோவா சாட்சிகள் என்று மாற்றப்பட்டது. இவர்களுடைய தலைமை ஸ்தாபனம் நியூயோர்க்கில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் புத்தகங்கள் கோடிக்கணக்கில் வெளியிடப்படுகின்றன. ருத்தர்போர்ட்டின் புத்தகங்கள் சுமார் 80 மொழிகளுக்கு மேல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சுமார் 8000 மிஷினரிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார்கள் என்பது பழைய கணக்கு. 1942-ல் ருத்தர்போர்ட்டு கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சாண்டுயாக்கோ பட்டணத்தில் மரித்தார்.

3).    நேர்த்தன் நோர் - Nathan Knorr 1905-ல் பிறந்தார். ருத்தர்போர்டுக்குப் பின் இதன் தலைவரானார். வீடு வீடாக சென்று சாட்சி பகர வேண்டுமென்பதை வலியுறுத்தியவர் இவர்தான். இவருடைய நாட்களில் தான் இந்த இயக்கம் அதிவேகமாக வளர்ந்துள்ளது.

யார் இந்த யெகோவா சாட்சிகள்?

இவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்பதை முதலாவது விளங்கிக் கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் என்பதை நம்புகிறவர்களே கிறிஸ்தவர்கள். இவர்கள் இதை ஏற்றுக் கொள்வதில்லை. இவர்களுடைய உபதேசங்களை சுருக்கமாகப் பார்ப்போம். யெகோவா சாட்சிகளின் முக்கிய கொள்கைகள். யெகோவாவே தேவன். இயேசு கிறிஸ்து யெகோவாவால் சிருஷ்டிக்கப்பட்டவர். இப்படிச் செய்வதன் மூலம் இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தை மறுதலிக்கிறார்கள். இவர்கள் தவறாகப் பயன்படுத்தும் வேதாகம வசனங்கள் ஆறு.

1).யோவான் 14:28 என் பிதா எங்கிருந்தாலும் பெரியவராயிருக்கிறார்.

2).லூக்கா 18:18,19 நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவர் ஒருவனும் இல்லையே.

3).1கொரி 11:3 கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறார்.

4).1கொரி 15:18 குமாரன் தேவனுக்குக் கீழ்ப்படிந்திருப்பார்.

5).வெளி 3:14 தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியானவர் இயேசு.

6).கொலோ 1:15 சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவர் இயேசு.

இந்த வசனங்களின்படி இயேசுகிறிஸ்து தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர். தேவனுக்குக் கீழானவர் என்று நம்புகிறார். இது தவறான போதனை என்பது நம் கொள்கை.

இதற்கு நாம் பதிலளிப்போம். இயேசு கிறிஸ்துவைப் பற்றி வேதம் கூறுவதென்ன?

1).ஏசாயா 7:14 கன்னிகையின் மைந்தன் இம்மானுவேல் என்றழைக்கப்படுவார்.

ஏசாயா 9:6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். அவர் நாம் வல்லமையுள்ள தேவன் நித்திய பிதா. சமாதான பிரபு.

2).மத்தேயு 1:23 இம்மானுவேல் என்றால் தேவன் நம்முடனிருக்கிறார்.

3).யோவான் 1:1,2,14 அந்த வார்த்தை தேவனாயிருக்கிறது. அந்த வார்த்தை மாம்சமாகி. நமக்குள்ளே வாசம் பண்ணினார்.

4).யோவான் 5:17,18 இயேசு தன்னை தேவனுக்கு சமமாக்கினார் என்று மக்கள் கூறினர்.

5).யோவான் 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்.

6).யோவான் 10:33 உன்னை தேவன் என்று சொல்லுகிறாயே என்று மக்கள் கூறினர்.

7).யோவான் 14:9,11 ஒன்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்.

8).யோவான் 20:28 தோமா இயேசுவை நோக்கி."என் ஆண்டவரே,என் தேவனே" என்றான்.

9).கொலோ 1:15 அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம்.

10).கொலோ 2:9 தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.

11).1 தீமோ 3:16 தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்.

12).எபி 1:8 குமாரனை நோக்கி "தேவனே உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கு முள்ளது"

13).1 யோவான் 5:20 இயேசு கிறிஸ்து மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார்.

புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து கர்த்தர் என்று 663 இடங்களில் வருகிறது. கர்த்தர் என்பதற்கு கிரேக்க மொழியில் குரியோஸ் (Kurios) என்று வருகிறது. புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. பழைய ஏற்பாடு எபிரேய மொழியில் எழுதப்பட்டது. எபிரேய மொழியில் வரும் யெகோவா என்பதும் கிரேக்க மெழியில் வரும் குரியோஸ் என்பதும் ஒரே கருத்தில் தான் கர்த்தர் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தை விளக்கும் சில வசனங்கள்.

யோவான் 5:26 பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவர். குமாரனும் தம்மில் தாமே ஜீவனுடையவர். அதாவது இயேசுவை யாரும் சிருஷ்டிக்கவில்லை என்பது தான் பொருள்.

யோவான் 14:6 நானே ஜீவன்.

யோவான் 1:4 அவருக்குள் ஜீவன் இருந்தது அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.

யோவான் 10:18 என் ஜீவனைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு. அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு.

தேவன் சர்வ வல்லவர், சகலத்தையும் அறிந்தவர், எங்கும் எப்போதும் இருக்கக்கூடியவர், மாறாதவர், பாவத்தை மன்னிக்கிறவர்,

சிருஷ்டிக்கிறவர், இத்தனை தெய்வீக தன்மைகளையும் இயேசு கிறிஸ்துவிடம் காண்கிறோம்.

இயேசு கிறிஸ்து சர்வ வல்லவர்.

மத் 28:18 வானத்திலும் பூமியிலும் சர்வ அதிகாரம் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வெளி 1:18 இயேசு கிறிஸ்துவே சர்வ வல்லமையுள்ள தேவன்.

இயேசு கிறிஸ்து சகலத்தையும் அறிந்தவர்.

யோவா 1:48 நாத்தான்வேலைப் பார்த்து நீ அத்திமரத்தின் கீழிறங்கும் போது என்னைக் கண்டேன் என்றார்.

யோவா 2:25 மனுஷருடைய எண்ணங்களையெல்லாம் அவர் அறிந்திருக்கிறார்.

இயேசு கிறிஸ்து எங்கும், எப்போதும் இருக்கக்கூடியவர்.

மத் 18:20 இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்.

மத் 28:20 இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்.

இயேசு கிறிஸ்து மாறாதவர்.

எபி 13:8 இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர்.

இயேசு கிறிஸ்து பாவத்தை மன்னிக்கிறார்.

மாற்கு 2:5-12 உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது.

இயேசு கிறிஸ்து சிருஷ்டி கர்த்தர்.

யோவா 1:3,10 சகலமும் அவர் (இயேசு கிறிஸ்து) மூலமாய் உண்டாயிற்று.
கொலோ 1:16 அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது.சகலமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.

(எபே 3:9. எபி 1:2,10)

இயேசு கிறிஸ்துவை தொழுது கொண்டனர்.

மத் 8:2 குஷ்டரோகி இயேசுவை பணிந்து கொண்டான்.
மத் 9:18 தலைவன் இயேசுவை பணிந்து கொண்டான்.
மத் 14:33 படகிலிருந்தவர்கள் அவரைப் பணிந்து கொண்டார்கள்.
மத் 15:25 ஒரு பெண் இயேசுவை பணிந்து கொண்டாள்.
மத் 20:20 செபதேயுவின் குமாரனுடைய தாய் அவரை பணிந்து அகாண்டாள்.
மத் 28:9,17 சீஷர்கள் அவர் பாதங்களைத் தழுவி அவரை பணிந்து கொண்டார்கள்.

நமது ஊரில் கல்லையும், மண்ணையும், மனிதர்களையும் தொழுது கொள்கிறவர்களுக்கு இது புதிதாகத் தெரியாது. யூதர்கள் உயிரை விடுவார்களேயல்லாமல் தேவனைத்தவிர வேறு எதையும் பணிந்து கொள்ளவோ, வணங்கவோ மாட்டார்கள் என்பதை நாம் அறிய வேண்டும்.

மேற்கூறிய வசனங்களின் ஆதாரத்துடன் இயேசு கிறிஸ்துவே மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் என்பதை தெளிவாக அறிந்து கொள்ள இயலும்.

நன்றி :

http://www.meenumaxx.com/jehovah.php



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard