Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நடிகர் செந்தில் மனந்திரும்பிவிட்டது உண்மையா ?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
RE: நடிகர் செந்தில் மனந்திரும்பிவிட்டது உண்மையா ?
Permalink  
 


இதுபோன்ற அவலட்சணமும் அசிரத்தையுமான அபிஷேகங்கள் தேவையா ? இதுகுறித்து ஏதேனும் பேசினால் தேவ சாபம் வரும் என்று மிரட்டுகிறார்களே..?!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
Permalink  
 

ஏற்கனவே பல்வேறு மோசடிகளில் சிக்கி சீரழிந்துகொண்டிருக்கும் ஆந்திர மாநில ஊழியர்களுக்கும் வலை வீசப்பட்டிருக்கிறது.

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
Permalink  
 

~|| ஒரு பேராயர் உருவாக்கப்படுகிறார்... ||~

( முதலில் வாக்குமூலம் பெறப்படுகிறது.. இதனை குற்றவாளியிடம் விசாரணை அதிகாரி பெறுவதைப் போலவோ திடீர் பேராயர் கழுத்தில் அரைநாணில் கட்டப்பட்ட சிலுவை அணிவிக்கப்படும்போது அது மணமகள் கழுத்தில் கட்டப்பட்டும் தாலியைப் போன்றது எனவோ யாரும் தயவுசெய்து நினைத்திடவேண்டாம்... இது ச்சும்மா வெளாட்டுக்கு அவ்ளோ தான்... சுற்றிலும் இருக்கும் மூஞ்சிகளில் வடியும் அருளைப் பார்க்கணுமே.... ஜெபிக்கும்போது திறந்திருக்கும் முழிகளைப் பார்க்கணுமே..!!!)

கேள்வியும் பதிலும் :

கேள்வி :
பேராயர் ஆக விரும்புகிறீர்களா ?

பதில் :
ஆம், ரொம்ப நாளாகவே விரும்புகிறேன்.

கேள்வி :
பேராயர் ஆயி இன்னா பண்ணப்போறீங்க ?

பதில் :
நீ இன்னா பண்றியோ அதான் பண்ணணும்.

கேள்வி :
உனுக்கு திமிர் கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கு... சரி, பேராயர்னா இன்னா தெரியுமா ?

பதில் :
அது தெரிஞ்சா உன்கிட்ட நான் எதுக்கு வரேன் ?

கேள்வி :
இத மாறி எடக்கு மடக்கு பண்ணக்கூடாது நைனா, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு... நம்ம பேராயத்துக்கு விசுவாசமா இருப்பியா, அதாவது ஆள் செட் பண்ணி குடுப்பியா ?

பதில் :
முடிஞ்ச அளவுக்கு செய்றேன். கமிஷன் கரீட்டா வந்துரணும், சரியா, இல்லேன்னா, உங்க பேரை சொல்லி நானே கலெக்‌ஷன் பண்ணிக்குவேன்.

கேள்வி :
ஓகே. அது உன் இஷ்டம். இப்போ ஆபீஸ்ல பணம் கட்டினியா ?

பதில் :
ஆம், பணம் கட்டி ரசீது இதோ பாக்கெட்டிலேயே வெச்சுருக்கேன். இல்லேன்னா நீ ச்சும்மா விடுவியா ? நீ தான் மொடா முழுங்கியாச்சே...

கேள்வி :
யோவ் ச்சும்மா வாயாடாத. சிடி ஆர்டர் குடுப்பியா ?

பதில் :
முடிஞ்ச அளவுக்கு ஏற்பாடு பண்றேன், ஐயா. என்னால முடியாட்டாலும் அதுக்கும் ஆள் செட் பண்ணி தரேன்.

கேள்வி :
ஓகே. இப்ப உனக்கு பேராயர் ஆவுற தகுதி வந்துடுச்சி. காசு போனா போவுட்டம்னு கொஞ்சம் செலவு பண்ணி பேராயர் ஆக நினைச்ச போதே நீ பேராயர் ஆயிட்டே... என்னைவிட நீ கில்லாடியா ச்சும்மா கில்லி மாதிரி ஒரு ரவுண்டு வரணும் சரியா..?!

ஹலோ பொது ஜனமே, எனிக்கு அவ்ளோவா இங்கிலீஸ் வராது...கொஞ்சம் அஜஸ் பண்ணிக்கோங்க....இதோ இந்த பேப்பாலே இருக்கறத அப்டியே படிக்கிறேன்... ஃபெல்லிங் மிஷ்டேக் இருந்தா அதுக்கும் அஜாஸ் பண்ணிக்கோங்க... எபிஸ்கொப்பில் இதுல இந்த ஆளை பிஸப்பா அப்பாயிண்ட பண்றேன். இதுக்கு மேல எனக்கு ஒரு கண்றாவியும் தெரியாது, அவ்ளோ தான்.

பதில் :

நன்றி ஐயா..!

(இது முழுவதும் கற்பனை உரையாடலாகும். இது குற்றவாளிகளைத் தவிர வேறு யாருடைய மனதையும் புண்படுத்தாது என்று உறுதியளிக்கிறேன்.)

தொடருவது பேராயர் பட்டமளிப்பு விழா ஒன்றின் மாதிரி தொகுப்பு ஆகும்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
Permalink  
 

அச்சிட்ட காகிதமோ அட்டையோ ஊழியத்துக்கான அங்கீகாரமாகுமோ ?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
Permalink  
 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
நடிகர் செந்தில் மனந்திரும்பிவிட்டது உண்மையா ?
Permalink  
 


Dr.Rt.Rev.S.M.Jayakumar, MBS,DD,L.L.D,Ph.D

 

Bishop
       Apostolic Church of India Diocese


 

Cardinal

President
        Apostolic International University

 

Apostolic International University

 http://www.acidiocese.in/

 

 



-- Edited by Yauwana Janam on Sunday 8th of December 2013 05:09:44 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
Permalink  
 

Pethuru Devadason @ Jerald Prasanna
 
Comedian Senthil at Apostolic University . Comedian Senthil was the chief guest at Apostolic International University event.
 
 
ஒரு அரசியல் காமெடியனுக்கு (விஜயகாந்த் ? ) டாக்டர் பட்டமே வழங்கிய ஒரு கிறிஸ்தவ இறையியல் பல்கலைக்கழகத்துக்கு இது பரவாயில்லை.
 
 
when people are gullible, these people will fleece anything from them. This Bishop was in the cine field and his son Harris Jeyaraj is still in the field; hence they will bring cinema into the Church.
 
 
இந்த படத்தில் தோன்றும் முதல் நபர் திரு.எஸ் எம் ஜெயக்குமார். அவர் ஒரு முன்னாள் சினிமாக்காரர் மற்றும் அவருடைய சினிமா வட்டாரத்தில் அவருடைய செல்லப் பெயர், ஸ்டார் நைட் ஜெயக்குமார் என்பதாம். அவர் சரியாக மனந்திரும்பாமலே வேறு சில செல்வாக்குகளால் கிறிஸ்தவ வட்டாரத்தில் புகழ்பெற்றார்.

ஊழியர்களை துச்சமாக மதித்து அவர்தம் ஏழ்மையை தரித்திரம் என்று பரியாசம் செய்பவர். அவருடைய மகன் முன்னணி சினிமா இசையமைப்பாளர் திரு.ஹாரீஸ் ஜெயராஜ் என்பவர் ஆவார்.

திரு.ஜெயக்குமார் சில ஏழை அப்பாவி கிராம ஊழியர்களை சேர்த்துக்கொண்டு தன்னை பேராயர் என்று அறிவித்துக்கொண்டு அலம்பல் பண்ணி வருகிறார். அவருக்கு இப்போதும் சினிமா வட்டாரத்தில் இருக்கும் செல்வாக்கு காரணமாக சினிமாக்காரர்களை இப்படி சுயலாபத்துக்காகவும் விளம்பரத்துக்காகவும் பயன்படுத்திவருகிறார்.

இரட்டை குவளை முறை ஒழிக்கப்பட்டதோ இல்லையோ, இந்த இரட்டை வாழ்க்கை முறை கிறிஸ்தவத்தை முன்னெடுத்து செல்லுவோர் இவரைப் போன்றவர்களே என்றால் அது மிகையல்ல.

அவருடைய அமைப்பில் நான் உறுப்பினராகிவிட்டால் ஜஸ்ட் 2000 ரூபாயிலிருந்து 5000 செலவு செய்தால் போதும் டாக்டர் பட்டம் முதல் எதைவேண்டுமானாலும் இன்றே பெற்றுக்கொள்ளலாம். என்ன, நான் ஊசிபோடும் டாக்டராக முடியாது அவ்வளவு தான். biggrin


-- Edited by Yauwana Janam on Sunday 8th of December 2013 04:56:02 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நடிகர் செந்தில் மனந்திரும்பிவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த செய்தி உண்மையல்ல என்பது இன்றைய நாளிதழ் செய்தியிலிருந்து அறியப்படுகிறது. இதுபோன்ற மலிவான விளம்பரங்களைப் பார்த்து கிறிஸ்தவ மக்கள் மயங்கிவிடக்கூடாது என்ற நல்ல நோக்கத்துடனே இந்த செய்தி பதிவுசெய்ய்யப்படுகிறது. இதற்காக நடிகர் செந்தில் நமக்கு வக்கீல் நோட்டீஸ் விடுவாரோ என்ற அச்சம் நமக்கில்லை. biggrin இதேபோல சத்தியத்தைத் தேடி எனும் சத்தியப் புரட்டு குறும்(பு)படத்தில் நடித்த நடிகர் சாருஹாசன் கூட மனந்திரும்பிவிட்டதாக புரளி கிளம்பியது. இவையெல்லாம் சிலருடைய சுயநல பிரச்சாரமாகும். இவற்றில் ஏதும் உண்மையில்லை என்பதை அனைவரும் அறியவும்.

இனி...

 

போலிகளை கண்டு ஏமாறாதீர், குமரி முத்து, செந்தில், ஜீனியர் பாலையா ஆர்த்தி கணேஷ். பிரபு சாலமன். இது போன்ற சினிமா காரர்கள் கிறிஸ்துவுக்குள் வந்து விட்டார்கள் என்று நம்பி, உடனே அவர்களுக்கு பிரசங்க பீடத்தை கொடுக்காதீர்கள்.

அவர்கள் கிறிஸ்துவுக்குள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை கவனித்து, அவர்கள் எந்த சபைக்கு செல்கிறார்கள் என்பதை விசாரித்து. அவர்கள் ஜீவியத்தில் உண்மையாவே மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

இது மட்டும் அல்ல அவர்கள் எவவளவு பிரபலமாக இருந்தாலும் சரி ஒருவரும் கிறிஸ்துவுக்கு தூரமானவர்கள் அல்ல, இரட்சிப்புக்கு தூரமானவர்கள் அல்ல. ஆனால் பிரசங்க பீடம் எல்லோருக்கும் இல்லை.

அந்நிய அக்கினியை கொண்டு வராதீர். தேவனுடைய கோபத்திற்கு ஆளாகாதீர். பிரசங்க பீடம் சாதாரண மேடை அல்ல, புரிந்து செயல்படுவது நல்லது.

கிறிஸ்துவின் இரட்சிப்பை கேலி கூத்தாக்காதீர்கள்.

சினிமாகாரர்கள் பின்னாலே போய் பல ஆயிரங்களை & பல லட்சங்களை செலவு செய்து, உண்மையான ஆத்துமாக்காளை இப்படிப்பட்ட ஓநாய்களுக்கு முன்பாக நிறுத்தின ஊழியகாரர்களுக்கெல்லாம் இது ஒரு பாடம் இனியாவது இப்படிப்பட்டவர்களை வைத்து கூட்டம் வைக்காமல் திருந்துங்கள்.

 

ஆதார செய்தி : இன்றைய தினகரன் நாளிதழ்.

< மகா தீப தரிசன நிகழ்ச்சியில் திருச்சி மண்டல ஐஜி ராமசுப்பிரமணியம், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவ், ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம், ஓய்வுபெற்ற அரசு செயலர் கற்பூரசுந்தர பாண்டியன், மகா சித்தர்கள் அறக்கட்டளையை சேர்ந்த ஜெகத்ராம்ஜி, சிங்கப்பூர் ரெத்தினவேலு, திரைப்பட நடிகர் செந்தில், திரைப்பட இயக்குனர் யார் கண்ணன், செங்குந்தர் மகாஜனசங்க மாநிலத் தலைவர் ராஜவேல், திருச்சி சுபசோமு, உறையூர் தமிழ்ச்செல்வன், பெரம்பலூர் எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன், ஊராட்சி மன்றத் தலைவர் ராமசாமி, திட்டக்குடி ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை இணை நிறுவனரான ரோகிணி ராஜ்குமார், சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். >



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard