Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நாம் (மேசியாவின்) எதிரிகளிடம் சரணடைந்துவிட்டோமா ?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: நாம் (மேசியாவின்) எதிரிகளிடம் சரணடைந்துவிட்டோமா ?
Permalink  
 


நாம் சிலருக்கு லைக் போடுவது பெரிய காரியமல்ல. ஆனால் அதிலிருக்கும் விஷயத்தை அறிந்தும் துணிகரமாக லைக் போடுவது நம்மை இன்னார் என்று காட்டிக்கொடுத்து விடுகிறது. biggrin இப்படிப்பட்டவர்களுடன் கள்ள உறவு வைத்திருப்போரே வெட்கப்படவேண்டும். நான் எதற்காக வெட்கப்படவேண்டும் ? முக்கியமாக செல்வா மோசஸ் எனும் சிங்கப் - பூரான் உள்நோக்கத்துடன் இம்மானுவேல் ஆபிரகாம் எனும் பொறுக்கியை ஏவிவிட்டு உசுப்பேற்றுவதன் பின்னணியில் இருப்பது உபதேசமாக இருக்குமானால் விசாரிக்கப்படவேண்டியவர் இன்னார் என்பதை பார்வையாளர்களே தீர்மானிப்பார்கள். கர்த்தர் நல்லவர்... அவரே (இயேசுவே) ஆண்டவர்.

 

Gnana-Likes.JPG



Attachments
__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

1441286_10151958763909367_785194757_n.jpg

 

  •  
     
    தேசவிரோத குற்றத்தையும் வேதவிரோத குற்றத்தையும் ஒருங்கே செய்த இவர் யார்? இயேசுதான் உண்மையான இறைவன் என்றால் அவரது பிதாவாகிய யெகோவா என்பவர் பொய்யான இறைவனா?

இப்படி கேட்கும் இவர் இயேசுவைக் குறித்து என்ன சொல்லுகிறார் ? அவர் சொல்லுவது இயேசு தொழத்தக்கவரல்ல. ஆதாரம் ? அதை அவரே சொல்லிவிட்டார். எங்கே ? இதோ வசனம்.. யாரும் சிரிக்காமல் படிக்கவும். இதுவே இஸ்லாமியருக்கும் பயன்படும் வசனம் என்பது கூடுதல் தகவல் ஆகும்.

மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவேகர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

பிதாவின் சித்தம் என்னவாம் ? அதை அவரிடமே கேளுங்க மக்களே..!!!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


  • Johnson Durai Mavadi · 70 mutual friends
    Samuel Churchill உங்களிடம் சாத்தான் மற்றவர்களை தூசிக்க அனேக உபாயதந்திரங்களை கற்றுக்கொடுத்திருப்பதுப் போல் பகடி பேசுகிறீர் அப்படி மற்றவற்களை அவமானப்படுத்தும் போது அன்று இனிமையாக இருந்தது ஆனால் உங்களை அடையாளம் காட்டியவுடன் எத்தனைப் புலம்பல் பாடுகிறீர் மனந்திரும்புங்கள் தேவனுக்கு விரோதமாய் நில்லாதேயுங்கள்.பெருமை கொண்டவனுக்கு விரோதமாய் மற்றவர்கள் எழும்பும் போது கலங்கி புலம்புவான் ஆனாலும் தன் தவறை உணரமாட்டான் அந்த வரிசையில் நில்லாமல் மனந்திரும்புங்க தயவுசெய்து மழுப்பல் வார்த்தையையும் எதிர்ப்புதெரிவிக்காமல் உங்கள் குறையை முதலில் பார்க்கவும்.
    5 hours ago · Unlike · 1
  • Samuel Churchill Johnson Durai Mavadi முதல் முதலாக என் பக்கத்தில் எழுதும் உன்னை அன்போடு வரவேற்கிறேன். தம்பி உங்களிடம் கடந்த மூன்று நாட்களாகவே மிகவும் பொறுமையாகவே மன்றாடியிருக்கிறேன். உன் ஒருவனையாகிலும் இழந்துபோகாதிருக்கவே போராடுகிறேன். என் பொறுமையை சோதிக்காதே. ஆய்ந்தறியாமல் ஒருவரையும் பகைக்காதே. அனைத்தும் வெளியாகும்வரை பொறுத்திரு. நன்றி.

    /// Samuel Churchill உங்களிடம் சாத்தான் மற்றவர்களை தூசிக்க அனேக உபாயதந்திரங்களை கற்றுக்கொடுத்திருப்பதுப் போல் பகடி பேசுகிறீர் அப்படி மற்றவற்களை அவமானப்படுத்தும் போது அன்று இனிமையாக இருந்தது ஆனால் உங்களை அடையாளம் காட்டியவுடன் எத்தனைப் புலம்பல் பாடுகிறீர் மனந்திரும்புங்கள் தேவனுக்கு விரோதமாய் நில்லாதேயுங்கள்.பெருமை கொண்டவனுக்கு விரோதமாய் மற்றவர்கள் எழும்பும் போது கலங்கி புலம்புவான் ஆனாலும் தன் தவறை உணரமாட்டான் அந்த வரிசையில் நில்லாமல் மனந்திரும்புங்க தயவுசெய்து மழுப்பல் வார்த்தையையும் எதிர்ப்புதெரிவிக்காமல் உங்கள் குறையை முதலில் பார்க்கவும். ///
    5 hours ago · Like · 1
  • Samuel Churchill // இவர் திரித்துவத்தையும் கிறிஸ்துவின் தெய்வத்தன்மையையும் மறுதலித்தாலும் இவரைப் போன்றவர்களிடம் இருந்த கண்ணியம் சில பெந்தெகொஸ்தே பெருச்சாளிகளிடம் காணப்படவில்லை. //

    நான் யாரிடமும் ஒருபோதும் சரணடைந்தவனல்ல என்பதை என் எதிரிகளே அறிவார்கள்.


    சங்கீதம் 28:3 அயலானுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்கள் இருதயங்களில் பொல்லாப்பை வைத்திருக்கிற துன்மார்க்கரோடும் அக்கிரமக்காரரோடும் என்னை வாரிக்கொள்ளாதேயும். (ஆண்டவரே...)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

  • உன்னால நான் கெட்டேன் ... என்னால நீ கெட்டாய் ...

    தற்போது முகநூலில் சில பாஸ்டர்கள் மற்றும் ஊழியர்கள் போடுகிற குழாயடிச் சண்டையைப் பார்க்கும்போது “உன்னால நான் கெட்டேன் ... என்னால நீ கெட்டாய் ...” என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

    எவர்கள் வசனத்தை மதிக்கத் தவறுகிறார்களோ, எவர்கள் வசனத்தின்மீது வைராக்கியம் பாராட்டாமல் மனித கோட்பாடுகளின்மீது வைராக்கியம் பாராட்டுகிறார்களோ, அவர்கள் நிச்சயமாக தங்கள் வசனவிரோதப்போக்கை ஒருநாளில் வெளிச்சம் போட்டுக் காண்பித்துவிடுவார்கள். அதுதான் தற்போதைய குழாயடிச் சண்டை மூலம் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது.

    இவர்கள் மதிக்கத் தவறின மிகமிக எளிமையான ஒரு வசனம்:

    மத்தேயு 23:8 நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.

    கிறிஸ்து ஒருவரே நம் போதகர் எனும் இந்த எளிமையான வசனத்தைக்கூட மதிக்காமல், போதகர் என அர்த்தங்கொள்ளும் பாஸ்டர் எனத் தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக்கொண்டு சற்றும் உறுத்தலில்லாமல் அவ்வாறு அழைக்கப்பட்டும் கொண்டிருக்கின்றனர் இந்தக் குழாயடிச் சண்டை வீரர்கள். ஒருவேளை இவர்களில் சிலர் பாஸ்டராக இல்லாவிட்டாலும், அப்படி மற்றவர்களை அழைப்பதற்கு அவர்கள் சற்றும் தயங்குவதில்லை.

    குழாயடிச் சண்டை போடும் இவர்களில் முன்னணி வீரர்கள்: இம்மானுவேல் ஆபிரகாம், பால் பிரபாகர், சாமுவேல் சர்ச்சில். இவர்களின் பின்னே பல பின்னணி வீரர்களும் உண்டு. மற்றவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்கும்போது எந்த மோசமான அளவுக்கும் இறங்கத் தயங்காதவர்கள் இவர்கள். இவர்களின் தற்போதைய குழாயடிச் சண்டையிலேயே இவர்களின் தரத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.

    இவர்கள் எல்லோருமே ஒரு காலகட்டத்தில் என்னோடு விவாதம் செய்யும்போது என்னைத் தனிப்பட்ட முறையில் தரமிறங்கி தாக்கியவர்கள்தான். குறிப்பாக பால் பிரபாகர் என்பவர் ஒரு விவாதத்தின்போது என்னை மிகமிகப் பரியாசம் செய்தார். அவர் ஒரு பாஸ்டர் என்பது அப்போது எனக்குத் தெரியாது. விவாதத்தில் பல கேள்விகளை மிகுந்த சாதுபோல என்னிடம் கேட்டுவந்தார். அவரது கேள்விகளில் நியாயமான நோக்கம் இல்லை என்பதை நான் அறிந்தபோதிலும், அவரது கேள்விகளுக்கான பதில்களை நான் கூறிவந்தேன். இறுதியில் என் பதில்களைக் கொண்டு என்னைச் சிக்கவைக்க முடியாமல் போனதால், தனது பரியாச வார்த்தைகளால் என்னை மிகவும் மட்டந்தட்டினார். உடனே அவரை நான் block செய்தேன்.

    மற்றவர்களைப் பரியாசம் செய்து மட்டமாகத் தாக்கத் தயங்காத இவர்கள் எப்படி ஒரு சபையை நடத்துகிற பாஸ்டராக இருக்கிறார்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. இவர்களுக்கும் இவர்கள் பின்னணியில் இயங்குவோருக்கும் மற்றும் இவர்களைப் போன்ற தரமுடைய எல்லோருக்கும் இந்த வசனத்தை நினைவூட்டி இவர்களை நான் எச்சரிக்கிறேன்.

    மத்தேயு 12:36 மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

    என்னுடன் மிக நெருக்கமாயிருந்த சில முன்னாள் நண்பர்களுக்கு, நியாயத்தீர்ப்பு ஆக்கினை என்பதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. எல்லாருக்கும் இரட்சிப்பு என நம்பும் இவர்கள், கிரியையைக் குறித்துப் பேசினால் நம்மைக் கடித்துக் குதறிவிடுவார்கள். 

    கிரியைக்குத்தக்க பலன் என்பதில் இவர்களுக்கு நம்பிக்கை கிடையாது என்பதால் பிறரை மோசமாகத் திட்டுதல் பரியாசம் செய்தல் எனும் கிரியைகளைச் செய்ய இவர்கள் சற்றும் தயங்குவதில்லை. குறிப்பாக **** மற்றும் துப்பில்லை எனும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் இவர்களுக்கு அலாதி பிரியம்.

    கிரியைக்குத்தக்க பலனில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லாவிடினும், இவர்களையும் மத்தேயு 12:36-ஐச் சொல்லி எச்சரிப்பது என் கடமையாகும்.

    தற்போது இப்பதிவின் மூலம் பலரை நான் எச்சரித்துள்ளதால், இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து என்மீது பாயக்கூடும் என்பது நான் அறிந்ததே. என் மீது பாய்வதற்காவது இவர்களுக்குள் ஒற்றுமை/சமாதானம் வந்தால் அது எனக்குச் சந்தோஷமே!

    ஆகிலும் என்மீது பாய்கிற அவர்களுக்கு மத்தேயு 12:36-ன் எச்சரிப்பு எப்போதும் உண்டு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.
  • Samuel Churchill சிலர் திடீரென நம்மை ப்ளாக் செய்துவிட்டால் நாம் எழுதிய்வை இல்லாமல் போகிறது. எனவே இந்த ஏற்பாடு. 
    6 hours ago · Like · 3
  • Paul Prabhakar தாங்கள் செய்யும் ஏற்பாடுகளுக்கு நன்றி...
  • Paul Prabhakar Samuel Churchill என்கிற 23 ஆம் புலிகேசி எதிரிப்படைகளிடம் சரணடைந்தது எனக்கு மிகுந்த சந்தோசமே...அவர்களை குறித்து ஆபாசமாக எழுதினதையெல்லாம் மறந்துவிட்டு மேசியாவின் எதிரிகளிடமே மண்டியிடுவது தான் கடைசியில் உன்னைப் போன்ற கேணையர்களின் முடிவு. ஜான்சன் கென்னடி ஞானப்பிரகாசத்துடன் போட்டோ எடுத்ததற்கே குதியாட்டம் போட்ட Samuel Churchill இன்று மானம் கெட்டுபோய் நிற்பதுதான் மிகவும் கேவலம்...
  • Madona Meon There was simple command for every single christian to obey is DO NOT STEAL.....How we are going to face HIM with our dirty hands and minds full of stealing objects
  • Paul Prabhakar @Samuel Churchill, இளங்கோவும் டீசண்டானவர்தான் அவ்ருக்கும் ஒரு வாழ்த்து தெரிவித்துவிடு.
  • Paul Prabhakar @Samuel Churchill, உன் வீட்டில் தொங்குகிற உன்னுடைய ஊழிய காலண்டரில் பாஸ்டர் என்று போடவில்லையா. வேற என்னான்னு எழுதியிருக்கே..
  • Paul Prabhakar அப்ப நீ பிரதரா... சாரி பிரதர்.
  • Madona Meon Paul Prabhakar....sir a humble request for u....please be professional when writting comment in others page....
    6 hours ago via mobile · Like · 2
  • Paul Prabhakar @ Madona Meon, என்னுடைய பதிவுகளில் Samuel Churchill அவர்கள் கமெண்ட்ஸ் எழுதுகிறார். அவருடைய பதிவுகளில் நான் கமெண்ட்ஸ் எழுதுகிறேன். இப்படியே ரெண்டு பேரும் மாத்தி மாத்தி கமெண்ட்ஸ் எழுதிவருகிறோம்.. அவ்வளவு தான். நன்றி.
    6 hours ago · Edited · Like · 1
  • Paul Prabhakar @ Madona Meon, எல்லாவற்றிற்கும் நல்ல சமாதான முடிவு உண்டாகும்படி ஜெபியுங்கள்.
    6 hours ago · Like · 1
  • Madona Meon Paul Prabhakar.....the peace from heaven will fill the broken hearts not to broke hearts.....thank u very much....


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
நாம் (மேசியாவின்) எதிரிகளிடம் சரணடைந்துவிட்டோமா ?
Permalink  
 


பெங்களூரிலிருந்து உலகத்தையே கண்காணித்துக்கொண்டிருக்கும் போஸ்டர் வியாபாரியான திரு. பால் பிரபாகர் பின்வரும் கருத்தை ஃபேஸ்புக் தளத்தில் எழுதியிருக்கிறார்.


plb.gnana.3JPG.JPG

என்னை வெளியே வரச்சொல்லி சவால் விட்டு தூஷித்து ரௌஸு பண்ணிக்கொண்டிருந்தவர்கள் எதிர்பாராமல் நான் வெளியே வந்து நேருக்கு நேர் நின்றதும் உண்டான அதிர்ச்சியில் கண்டபடி எழுதி தூஷித்துக்கொண்டிருக்கிறார்கள்.ஒவ்வொருவருடைய பகைக்கும் ஒரே காரணம் நாம் துருபதேசங்களை எதிர்த்து கடந்த வருடங்களில் செய்த போராட்டங்களே. அதனை சமாளிக்கவே கூடா நட்பு கொண்டு எப்படியாவது என்னை ஒழிக்க முயற்சித்தார்கள். நானும் மனம் சோர்ந்த நிலையில் ஆண்டவர் தாமே என்னைத் தேற்றி இந்த துணிச்சலைக் கொடுத்தார். விலகிப்போயிருந்தால் பல கேள்விகளுக்கும் பழிகளுக்கும் பரிகாரம் செய்யப்படாமலே போயிருக்கும். அது என் பெய்ருக்கு நீங்காத களங்கத்தையே ஏற்படுத்தியிருக்கும்.

இந்நிலையில் கடந்த சுமார் 4 நாட்களாக நடக்கும் இந்த யுத்தத்தைப் பார்த்து கிண்டலடிப்பது போல பெரியவர் ஞானபிரகாசம் எழுதியதொரு கட்டுரையைக் காண நேர்ந்தது. அதில் நாம் கருத்திட இயலாததால் எனது பக்கத்தில் அதனைப் பதித்து எனது கருத்தை எழுதியிருந்தேன் ( உபதேசக் கோளாறுடன் என்னுடன் மோதுவோருடன் நான் நட்புகொள்ளுகிறதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக இயேசுவின் தெய்வத்தன்மையை மறுப்போருடன் எனக்கு (ஃபேஸ்புக் தளத்திலும்..) நட்பு கிடையாது.)

அதன் விவரம்...

திரு.ஞானப்பிரகாசம் அவர்களுக்கு ஒரு விளக்கம்...

இவர் திரித்துவத்தையும் கிறிஸ்துவின் தெய்வத்தன்மையையும் மறுதலித்தாலும் இவரைப் போன்றவர்களிடம் இருந்த கண்ணியம் சில பெந்தெகொஸ்தே பெருச்சாளிகளிடம் காணப்படவில்லை. நான் உனக்கு அண்ணனாக இருந்திருந்தால் நீ என்னை மதித்திருக்கவேண்டும்; அல்லது நான் உன்னைவிட வயதில் இளையவன் என்று நினைத்திருந்தால் என்மீது இரக்கம் காட்டியிருக்கவேண்டும். ஆனால் இவ்விரண்டுக்கும் விரோதகமாக நீ செய்துவைத்த அனைத்தும் உனக்கு முன்பாக நிறுத்தப்படும்போது உனக்கு காடுகளோ மலைகளோ மறைவிடமாக இருக்கப்போவதில்லை, கிறிஸ்துவின் பாதம் ஒன்றே, புகலிடம் என்பதை மறந்துபோகாதே....அங்கே நான் ஏற்கனவே இருக்கிறேன். 

திரு.ஞானப்பிரகாசம் அவர்களுக்கு ஒரு தகவல், பலரும் அறிந்தவண்ணமாக நான் எனது இந்த ஐந்து வருட இணையப் பணியில் எங்காவது என்னைக் குறித்து பாஸ்டர் என்றோ ஒரு குறிப்பிட்ட சபையைச் சார்ந்தவன் என்றோ குறிப்பிட்டிருந்தால் எனக்கு ஆதாரத்தைக் கொடுக்கவும். சில முள்ளம்பன்றிகளே அவ்வாறு குறிப்பிட்டு என்னை ஏசுவதற்கு முயற்சித்தது.ஆனாலும் நான் இதுவரை அந்த வளையத்துக்குள் சிக்கவில்லை. என்னைப் பற்றி நான் சொல்லியிருக்கும் ஒரே ஒரு அறிமுகம், ”வழிப்போக்கன்” என்பது மாத்திரமே.

ஆனால் நான் என்னைக் குறித்து அறிவிக்காதவற்றையும் நான் வெளியிட விரும்பாத என் தோற்றத்தையும் சட்டவிரோதமான முறையில் பதிவிட்டு குழப்பம் விளைவித்தவர்களே சமூக விரோதிகள், கிரிமினல்கள். இன்றைக்கே நான் அவர்கள் எழுதியதும் செய்ததுமான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு சட்ட அமைப்புகளிடம் சென்றால் இவர்களெல்லாருடைய கதியும் என்னவென்று தெரியும். ஆனால் என் திராணியும் திறனும் இன்னதென்று தெரிந்தே என்னை எளியவன் என்று அறிந்தே வலியவர்களுடன் இணைந்துகொண்டு இந்த எல்லா அக்கிரமங்களும் அரங்கேற்றப்படுகிறது.

கர்த்தர் பெரியவர், கர்த்தர் மாத்திரமே... பெரியவர்..!!!

- மேற்காணும் வரிகளில் நான் யெகோவா சாட்சிகளிடம் சரணடைந்தது போல ஏதேனும் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. அதனை வாசக நண்பர்களே தீர்மானிக்கட்டும். இனி இந்த திரியில் பதிக்கப்பட்டிருக்கும் காமெண்டுகள்... சிலர் தங்கள் காமெண்டுகளை அழித்துவிட்டு ஓடுவதால் அல்லது ப்ளாக் பண்ணிவிடுவதால் இப்படி சேமிக்கிறோம்.

 



Attachments
__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard