Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கல்பனா ப்ரியா ( எ ) பால் பிரபாகர் ???


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
கல்பனா ப்ரியா ( எ ) பால் பிரபாகர் ???
Permalink  
 


பெங்களூரிலிருந்து உலகத்தையே கண்காணிக்கும் வல்லமை பெற்ற ஒரு போஸ்டரை நான் திடீரென அபாண்டமாகக் குற்றஞ்சாட்டிவிடமுடியாது. ஆனால் இப்பல்லாம் குற்றஞ்சாட்டினாலே உள்ளே தள்ளிடுவாங்க போலிருக்கு ?! ஆனாலும் நான் இதுவரை சேகரித்த - ஆய்ந்தறிந்த தகவல்களின் அடிப்படையில் திரு.பால் பிரபாகர் அவர்கள் ( ஃபேஸ்புக் தளத்தில் ) குறைந்தது 20 க்கும் மேற்பட்ட ஐடிக்களுக்கும் மேலாக ஒரே நேரத்தில் இயக்கும் வசதியுள்ள ஒரு மொபைல் போன் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அவருக்கு இருக்கும் - அவரால் இயக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட ஐடிக்களின் ஆதாரமும் என்னிடம் உண்டு. அதுபற்றி எனக்கு கவலையில்லை. ஆனாலும் இந்த நபர் என்னிடம் வலிய வந்து - என்னிடமே ஒரு குறிப்பிட்ட பெண் ஐடியைக் குறித்து விசாரிக்கும்போது தலைசுற்றவில்லை, மயக்கம் வரவில்லை, சிரிப்பு கூட வரவில்லை, கோபமும் வரவில்லை, ஏனெனில் இவர்கள் யார் என்றும் எத்தனை கொடூரமானவர்கள் என்பதும் எனக்கு ஏற்கனவே தெரியும் என்பதே.

இதோ அவர் நம்மிடம் விளக்கம் கேட்டு அனுப்பிய குறிப்பு...


Paul Prabhakar @ Samuel Churchill என்கிற Yauwana Janam, உங்களை விட்டு ஒதுங்கி இருக்கவே முயற்சி செய்கிறேன். உங்களுடைய வாதத்திறமைக்கு முன்னால் என்னால் நிற்கமுடியாது என்பதை பலபேருக்கு முன்பாக ஒப்புக்கொள்கிறேன். கடைசியாக ஒரே ஒரு கேள்வி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன், Kalpana Priya என்கிற போலி பெண் பெயரில் ஃபேஸ்புக் கணக்கில் வந்து மிக கேவலமாக காமெண்ட்ஸ் எழுதியது நீங்கள் தான் என்று ஒப்புக்கொள்கிறீர்களா?இல்லை, நான் அவனில்லை என்று சொல்லுகிறீரா? பதிலை சுருக்கமாக தரவும். ஒப்பாரிப் பாட்டு எனக்குத் தேவையில்லை. உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன். நம்மிருவருக்கும் நடுவில் ஜீவனுள்ள தேவன் நியாதிபதியாக நிற்கிறார். நம்மிருவருடைய மனசாட்சியும் தேவனுக்கு முன்பாக இருக்கிறது.

அவருக்கு நான் கொடுத்திருக்கும் பதில்...


நான் நியாயம் கேட்கவே மானத்தைவிட்டு வெளியே வந்திருக்கிறேன். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற இதுபோன்ற வார்த்தைகள் மெய்யாகவே அதிர்ச்சியாக இருக்கிறது. ஆவியைப் பெற்ற புருஷன் ஒருவரும் உங்களோடு இல்லையோ ? எல்லோரும் அதை ப்ளாக் பண்ணிவிட்டு ரிப்போர்ட் செய்தாலே போதும். அதை செய்யாமல் அதைவைத்து இங்கே நியாயம் பேசுகிறார்கள்.

https://www.facebook.com/kalpana.priya.967


உலக அளவில் பிரசித்தமான ஒரு பெண்ணின் படத்தைத் திருடியெடுத்தவர்கள் குறித்து அவருடைய லிங்கிலும் சென்று ரிப்போர்ட் செய்யலாம்.

http://www.facebook.com/l.php...

இத்தனை நேர்மையுடன் எனது நான் கொடுத்த பதிலுக்கு ( கொஞ்சமும் மனசாட்சியில்லாமல்..) அவருடைய ரியாக்‌ஷன் என்ன ?

சரி. உங்கள் விளக்கம் எனக்கு கிடைத்தாயிற்று. நன்றி ... தேவன் பார்த்துக் கொள்வார்.

வேதனையை அடைக்கிக்கொண்டு மீண்டும் எழுதுகிறேன், பின்வருமாறு...

அது மாத்திரம் போதாது. எல்லாரிடமும் இதேபோன்று கேட்டு எனக்கும் ஒரு நியாயம் பெற்றுத்தரவும். முக்கியமாக சோமீ ஸ்ரீ செல்வா எங்கே ? ஏன் அவன் என்னை ப்ளாக் பண்ணினான். இந்த கல்பனா ப்ரியா ஏன் ஜாண்சன் கென்னடி அவர்களையும் ஷண்முகம் அங்கிளையும் மிரட்டியது. இது என்ன விளையாட்டா ? பெங்களூரிலிருக்கும் உங்களால் முடியாதது எதுவும் உண்டா என்ன ? முயற்சித்தால் பலன் நிச்சயம்.


இதை எழுதி இதோ மூன்று நேரமாகிறது ஒரு பதிலும் இல்லை. இதற்கிடையே நான் ஏற்கனவே சேகரித்த விவரங்களோடு ஒப்பிடுகையில் எல்லாம் தெரிந்துவிட்டது. முக்கியமான விவரங்களையும் ஆதாரங்களையும் இந்த திரியில் பகிர்ந்துகொள்ளுவேன். இதன் நோக்கம் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் பெயரால் இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபட்டு இன்னொருவருடைய நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வண்ணம் நடந்துகொள்ளக்கூடாது என்பதே.

நேற்று முன்தினம் எனது ஐபி நம்பர் கண்காணிக்கப்படுவதாக சொல்லி அச்சுறுத்தியவருக்கு இந்த ஐடியின் ஐபி நம்பரைக் கண்காணிக்க தெரியாமற் போனதென்ன ? ஏன் இந்த வஞ்சகம் ? எங்கிருந்து வந்தது இந்த பகை ? காலமெல்லாம் என்னையே தூஷித்து இங்குமங்கும் கலகம் செய்தவர் இப்படி நான் வெளியே வந்து நியாயம் கேட்கும்போது ஏன் இப்படி ஓடி ஒளிகிறார் ?

இங்கே கல்பனா ப்ரியா என்ற பெயர் மூலம் எழுதப்பட்டவைகளும் பதிவுசெய்யப்படும். இப்படி எத்தனையோ ஐடிக்கள் இருக்கலாம். ஆனாலும் அவை நம்மோடு பேசும் காரியத்திலேயே அந்த நபர் யார் என்பதும் தெரிந்துவிடுகிறது. மேலும் இந்த சமூக விரோதிகள் ஒருவரைப் பற்றி, ஒருவருடன் தந்திரமாகப் பழகி சில தகவல்களை சேகரித்துக்கொண்டு அதன்மூலம் இங்குமங்கும் ஊடுறுவி குழப்பம் ஏற்படுத்தி வருகிறார்கள். இப்படிப்பட்டவர்களோடு பழகுவோரும் இவர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இவர்களிடம் நீங்கள் சொல்லும் விஷயங்கள் மற்ற ஐடிக்கள் மூலம் வெளிவரும். உதாரணமாக ஒரு ஃபேக் ஐடியின் எழுத்து நடை என்னைப் போன்றதாகவே இருந்து அதன்மூலம் நானே குற்றவாளியைப் போல சித்தரிக்கப்படுவேன். இவர்களுடைய குழுவுக்குள்ளிருக்கும் ஷண்முகம் வீரக்குட்டி எனும் பெரியவர் ஸ்டைலிலேயே அந்த கல்பனா ப்ரியா எனும் ஐடி எழுதி அவர்மீது சந்தேகம் வரும்படி செய்தது. அதேபோல எனக்கு விரோதமாக இருக்கும் ஜான்ஸன் கென்னடி என்பவரையும் இந்த கல்பனா ப்ரியா எனும் ஐடி தொல்லை செய்ய அவருக்கு என்மீது சந்தேகம் வந்து என்னை ப்ளாக் செய்திருக்கிறார். இந்த எல்லா சட்டவிரோத செயல்களுக்கும் பின்னால் ஒரு நபரே இருக்கிறார். அவர் இப்போது என்னை தீவிரமாக எதிர்த்து தூஷித்து வரும் பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாம் ஆக இருக்கமுடியாது. ஏனெனில் நான் பால் பிரபாகருடன் பேசியவை பால் பிரபாகருடன் எனக்கு மோதல் ஏற்பட்ட சூழ்நிலைகளையெல்லாம் இந்த கல்பனா ப்ரியா டீல் பண்ணியிருக்கிறது. ஆக இதுபோன்ற கீழ்த்தரமான இழிசெயல்களில் இனியும் ஈடுபட்டு கிறிஸ்துவுக்கு அவப்பெயரை உண்டாக்கும் செயல்களில் ஊழியர்கள் ஈடுபடவேண்டாம் என்றே வேண்டுகிறேன். என்மீது தனிப்பட்ட விரோதம் இருக்குமானால் என்னோடு நேருக்கு நேர் சந்தித்து பழகிய நீங்கள் என்னை தண்டிக்கலாம். அதை சமுதாயப் பிரச்சினையாக்குவது என்பது நீங்கள் ஆரோக்கிய உபதேசத்தை சாராதவர் எனும் என் ஐயத்தை இன்னும் பல மடங்கு கூட்டுகிறது. உங்களுக்கு மெயின் லைன் கிறிஸ்தவ சபைகளின் மீது மதிப்பு இல்லாததால் அதன் பிரதிநிதிகள் இப்படி போரிட்டு அசிங்கப்பட்டு அழியவேண்டும் என்ற தீய எண்ணத்துடனே இதையெல்லாம் செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்களிடம் உபதேசக் கோளாறு இருக்குமானால் அதையும் கூட வெளிப்படையாகப் பேசி தீர்த்துக்கொண்டு உங்கள் வழியே போவதில் எந்த பிரச்சினையும் இல்லை. அதைவிடுத்து சூழ்ச்சியினால் ஒரு சமுதாயத்தில் குழப்பம் ஏற்படுத்துவது என்பது சாத்தனானின் குணாதிசயமாகும். வேண்டாம் இனி இந்த ஃபேக் ஐடி விளையாட்டு. இதையே மதிப்பிற்குரிய பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாம் அவர்களுக்கும் சொல்லிக்கொள்ளுகிறேன். உங்களுக்கென்று இருக்கும் ஃபேக் ஐடிக்கள் மூலம் தூஷித்து அவதூறு செய்யும் துர்க்கிரியைகளை இனியாகிலும் நிறுத்திவிடுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard