எனது உள்ளம் யாருக்கு தெரியும் இயேசைய்யா எனது நினைவு யாருக்கு புரியும் என்னை நீர் அறிவீரே உம்மை நான் அறிவேனே என்னைப் புரிந்துகொண்ட தெய்வம் நீரே - இயேசைய்யா என்னைப் புரிந்துகொண்ட தெய்வம் நீர் ஐயா.
(1)
அன்னை தந்தை அறியவில்லையே -என் உள்ளம் தன்னை புரிந்துகொள்ளமுடியவில்லையே என்னை அறிந்த தெய்வம் ஐயா என் உள்ளம் புரிந்த அன்னை நீர் ஐயா
(2)
மனிதனோ முகத்தைப் பார்க்கிறான் நீரோ என் உள்ளமதை அறிந்து பார்க்கிறீர் நொறுங்கிப்போன எனது உள்ளத்தை அரவணைத்து காயமாற்றினீர்
(3)
ஊரும் உறவும் என்னை வெறுத்தது என் உள்ளம் நொந்து சோகமானது என் உள்ளமறிந்து ஓடிவந்தீரே ஆற்றி தேற்றி அணைத்துக்கொண்டீரே