Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நீ மதவாதியா, மிதவாதியா ?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
RE: நீ மதவாதியா, மிதவாதியா ?
Permalink  
 


பூனைக்குட்டி வெளியே வந்திருக்கிறது........ :) எத்த்னை பெரிய பூதத்தை எதிர்க்கவேண்டுமானாலும் சத்தியத்துக்காக எதிர்க்க ஆயத்தமாக இருக்கிறோம். ஏற்பவர்கள் ஏற்கட்டும், ஏற்காதவர்கள் சூழ்ச்சியின் பின்னே போகட்டும்.

Urs Christian Friend

Respected Brothers, This is a message by Br.Zac Poonen at the Chennai 2010 conference. Theme of the Conference - "Religious? Or Disciple Of The Lord Jesus Christ?" Please hear this messages its very useful to us...




__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
Permalink  
 

21428_416428771807766_1154965701_n.jpg



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
Permalink  
 

1185304_416188025165174_149856274_n.jpg



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
Permalink  
 

கிறிஸ்துவின் சபையை பாபிலோனிய வேசியின் சபை என்று தூஷிக்கும் திருச்சபையின் விரோதிகளான “ப்ளாக் ஷீப்” விஜய் தலைமையிலான காவாங்கறை காவாக்கார கும்பல் அண்மையில் எழுதிய ஒரு குறிப்பிட்ட கட்டுரையானது எல்லோரும் சிலிர்ப்புடன் பாராட்டப்படுகிறது. அதன் மூலத்தை நாம் தேடிக்கொண்டிருந்த நிலையில் இன்று அதன் அசல் பதிப்பு இன்னொரு பக்கத்திலிருந்து கிடைத்துள்ளது. அதற்கேற்றாற்போல அவர்களும் இதனை தங்கள் அனுபவத்திலிருந்து எழுதாமல் தாங்களும் இதனை இப்போது தான் முயற்சிப்பதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இனி......

சீஷன் vs மதவாதி கட்டுரையின் மூலப் பதிப்பு.

 
The following “15 Signs of a Religious Spirit” are derived from the Book of Jude, and from Jack Deere’s teaching Exposing the Religious Spirit.


by Marianne Tioran

Characteristics:

1. RIFT – One with a religious spirit believes he has a mission to tear down error or what he believes is wrong.

2. REBUKE – He has a hard time receiving rebuke from someone less spiritual than he.

3. REBELLIOUS – He will not listen to people, because he can hear from God.

4. REPULSED – He immediately notices what is wrong with people, or the church, rather than looking for what is right.

5. RIGOROUS – He keeps score on his spiritual life and carries guilt when he doesn’t add up to the Lord’s standards.

6. REJECTING – He feels as though he has been appointed to fix everybody else.

7. RIVAL – He may feel as though he is truly closer to God than others, and his life or ministry is more pleasing to God in comparison.

8. RANKS - He takes pride in spiritual discipline or spiritual maturity and ranks himself against others.

9. REPUTATION – He will do things in order to be noticed or affirmed by people.

10. RIGID – Religious spirits are overly repulsed by “emotionalism.”

11. RAUCOUS - Seemingly converse to the prior, a religious spirit will use emotionalism or hype to manipulate people.

12. RESISTANT – He will tend to resist the supernatural or reject spiritual manifestations he cannot understand.

13. REACTIONARY – He will overreact to carnality or immaturity in the body of Christ.

14. RENEGADE – He will not fully commit to a church or lend a hand to help if the group is not “perfect” in their theology.

15. REFRAIN – He will tend to be suspicious of or even oppose new moves of God.

 

எங்கோ வாசித்த ஒரு ஆங்கில கட்டுரையை உல்டா பண்ணி தமிழில் எழுதி அதிலிருந்து ஒரு மலிவான புகழை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவர்களைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் உல்டா பண்ணி பதித்திருக்கும் கட்டுரையானது அவர்களுக்கே வேட்டு வைத்திருப்பதே அதிர்ச்சி. தாங்களே மதவாதிகளுக்குரிய அனைத்து இலட்சணங்களையும் உடையவர்களாயிருக்க மற்றவர்களை இக்ழுகிறோம் என்று நினைத்துக்கொண்டு தங்களைத் தாங்களே அசிங்கப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மேலே பதிக்கப்பட்டிருக்கும் கட்டுரையின் ஒவ்வொரு பாயிண்டும் அவர்களது நிலைமையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இதுபோன்று ஆயிரக்கணக்கான கட்டுரைகளை இணையத்திலிருந்து எடுத்து உல்டா பண்ணி பதிக்க எவராலும் கூடும். ஆனால் சொந்த அனுபவத்திலிருந்து அதை எழுதாவிட்டால் உன்னை விட அந்த காகிதத்தைத் தின்னும் கழுதையே அறிவாளி எனப்படும். நம்முடைய மக்களின் வாசிக்கும் பழக்கம் குறைவாக இருப்பதே இவர்களுக்கெல்லாம் வசதியாகிவிட்டது. ப்ரவலான வாசிப்புக்கும் இவர்களுடைய ஆக்கிரமிப்பு தடையாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
Permalink  
 

சிலர் நம்மை ஏற்கிறார்களோ இல்லையோ, அவர்களுடைய சிந்த்னையைத் தூண்டும் காரியங்களுக்கு நம்முடைய கருத்துக்கள் உதவியாக இருப்பது குறித்து அதிக மகிழ்ச்சி. அவர்கள் இதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் அவர்தம் மனசாட்சிக்கு இது நிச்சயமாகவே தெரிந்திருக்கும். அந்த வகையில் அவர்கள் அண்மையில் வெளியிட்டிருக்கும் கருத்தோவியம் (?) நிரம்பிய் குறிப்பிட்ட கட்டுரையானது அவர்களுடைய மனநிலைக்கும் உபதேசங்களுக்கும் ஒரு அடையாளமாக இருக்கிறது. இதற்கு எதிராக எவரும் எதையும் சொல்ல இயலாது என்பது அவர்களுடைய எண்ணமாகும். இப்படியே பலரை ஈர்த்து வஞ்சித்து சபையைக் குறித்த தாழ்வான அபிப்ராயத்தை தோற்றுவித்து தங்கள் விசுவாசத்தைக் குறித்தும் ஐயத்தைத் தூண்டி எப்படியாகிலும் சில்ரை ஆதாயப்படுத்த எல்லோருக்கும் எல்லாமுமான பவுலடிகளின் எதிரிகளான இவர்கள் ஒரு சிலரையாவது திருச்சபை ஐக்கியத்திலிருந்து பிரித்தெடுத்து தங்கள் பாபிலோனிய வேசிமார்க்க ஐக்கியத்துக்கு தள்ளிக்கொண்டு போக எத்தனிக்கிறார்கள். ஆம், அவர்களே பாபிலோனிய வேசியின் பிடியிலிருக்கும் கள்ளத் தீர்க்கதரிசிகளின் உபதேசத்தினால் மாசுபட்டிருப்பதனாலும் கறைபட்டுவிட்டதாலும் தங்கள் அழுக்காறு எனும் அழுக்கை மறைக்கவும் கீழ்ப்படியாமை எனும் முரட்டாட்டத்தை ஒளிக்கவும் ஐக்கியமில்லாமல் அலைந்துகொண்டிருக்கும் இந்த அபலைகள் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையைக் குறித்து பாபிலோனிய வேசியின் சபைகள் என்று கூறி ஓயாமல் சர்ச்சையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். ( இதைக் குறித்து நாம் ஏற்கனவே அதிகமாகவே கண்டித்திருப்பதால் இப்போது அந்த வார்த்தையைத் தவிர்க்கிறார்கள். ) உதாரணமாக பழைய ஏற்பாட்டையும் அதிலுள்ள வாக்குத்தத்தங்களையும் கட்டளைகளையும் தீர்க்கதரிசனங்களையும் மறுதலித்து சபையானது புதிய ஏற்பாட்டின்படியே அமையும் என்பவர்கள், தங்கள் வசதிக்காக அவ்வப்போது இதுபோல பழைய ஏற்பாட்டின் புருஷர்களோடு தங்களை இணைத்துக்கொண்டு மனதை மயக்க முயற்சிக்கிறார்கள். எப்படியெனில் இவர்களை எதிர்ப்போரை காயீனாகவும் தங்களையோ ஆபேலாகவும் கற்பனை செய்துகொண்டு பொய்ப் போதகத்தைக் கற்பித்து வருகிறார்கள். இதன்படி சீடனை ஆபேலுக்கு ஒப்பாகவும் மதவாதியை காயீனாகவும் வர்ணித்திருக்கிறார்கள். இதிலுள்ள சூட்சமங்களை நாம் விளக்கும் முன்பதாக அந்த கட்டுரையின் முழுவிவரத்தையும் இங்கே தருகிறோம். அதன்பிறகு நாம் கொடுக்கும் பதிலடியானது இப்படியும் இருக்குமோ என்று உங்களை நிச்சயம் உங்களை யோசிக்கவைக்கும்வண்ணமாக இருக்கும் என்பது நிச்சயம். மதவாதியை எங்களுக்கு தெரியும், நீ யார் மதவாதியா, இல்லை மிதவாதியா என்பதே இப்போது எழும் கேள்வியாகும். நீ உன்னை கிறிஸ்துவின் சீஷன் என்று சொல்லிக்கொள்ளும் தைரியம் உனக்கு நிச்சயம் இருக்காது. ஏனெனில் நீ ஒரு ரெண்டுகெட்டான் அலல்வா ? நீ மதவாதியாக இருக்கிறாயோ இல்லையோ நிச்சயம் கிறிஸ்துவின் சீடனாக இல்லையென்பதை இதோ நிரூபிக்கப்போகிறோம்.

இனி..........

 

1186002_10200966366654692_1661546795_n.jpg

இயேசுவை வழிபடுவதோடு நிறுத்திக்கொள்ளுகிறவன் மதவாதி, இயேசுவை வழிபடுவதோடு அவருக்கு கீழ்ப்படிந்து அவரை பின்பற்றுபவன் சீஷன். உலகத்தார் பார்வையில் இவர்கள் இருவருமே கிறிஸ்தவர்கள். தேவன் பார்வையிலே இவர்கள் நேர் எதிரானவர்கள். மதவாதி காயீனின் வம்சத்தான், சீஷன் ஆபேலின் வம்சத்தான். இருவர் மார்க்கமும் எதிரெதிர் துருவங்கள்..நாம் இதில் யாராக இருக்கிறோம்???

 

பல ஆயிரம்பேர் கூடிவந்தாலும் மதவாதிகளின் கூடுகை சபையல்ல, சிலர் கூடினாலும் சீஷர்களின் ஐக்கியமே சபை.

 

மதவாதிகளின் பிரசங்கம் புளித்தமாவு, அது இம்மைக்குரியவைகளைச் சுற்றியே இருக்கும். சீஷர்களின் பிரசங்கம் ஜீவவிருட்சம். அது இயேசுவைச் சுற்றியே இருக்கும்.

 

மதவாதி உலகத்தோடு ஒத்துப்போய் அதன் மேன்மைகளை அநுபவிக்கிறவன், சீஷனோ எல்லோராலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு உபத்திரவப்படுபவன்.

 

இருவர் சேர்ந்திருந்தால்கூட மதவாதிகளிடத்தில் அன்பும் ஐக்கியமும் இருக்காது, இருநூறுபேர் கூடிவாழ்ந்தாலும் சீஷர்களிடத்தில் போட்டிபொறாமையும் மாய்மாலமும் இருக்காது.

 

மதவாதி மற்றவர்களை கட்டுப்படுத்தி அவர்களை வழிநடத்த  முயல்வான், சீஷன் தன்னைத்தானே எல்லோருக்கும் அடிமையாக்கி தொண்டு செய்வான்.

 

மதவாதி ஊருக்கெல்லாம் உபதேசம் செய்வான், சொந்தக் குடும்பத்தில் சாட்சி இருக்காது, சீஷனோ தனது சாட்சியை குடும்பத்திலிருந்து ஆரம்பிக்கிறான்.

 

மதவாதி மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்ட சபைப்பிரிவுகளுக்காக  வைராக்கியம் பாராட்டுவான். சீஷன் கிறிஸ்துவின்  மணவாட்டி சபைக்காக வைராக்கியம் பாராட்டுவான்.

 

மதவாதி தரித்திரரையும் திக்கற்றவர்களையும் தூரத்தில் நிறுத்திவைப்பான், சீஷன் திக்கற்றவர்களுக்கும் தரித்திரருக்கும் செய்யும் சேவையை தேவனுக்கே செய்யும் ஊழியம் என்பான்.

 

மதவாதி ஆசீர்வாதங்களை எதிர்பார்த்து கொடுப்பவன், சீஷன் கொடுப்பதையே ஆசீர்வாதமாக நினைப்பவன்.

 

மதவாதி தனது இச்சைக்கேற்றபடி தேவனை வளைக்க நினைப்பவன், சீஷனோ தேவசித்தத்துக்கு ஏற்றார்போல  தன்னை வளைத்துக் கொள்பவன்.

 

மதவாதி மனிதரிடம் கற்பவன், அவன் செய்யும் பிரசங்கங்களையும் பேச்சுகளையும் வைத்தே அவன் சபைப்பிரிவை கண்டுபிடித்துவிடலாம். சீஷனோ ஆவியானவரிடம் கற்பவன், அவன் பேசுவது எப்போதுமே புதிதாக இருக்கும்.

 

மதவாதி அந்தரங்கத்திலும் வெளியரங்கத்திலும் இரட்டை வாழ்க்கை வாழ்பவன். சீஷனோ எலியாவைப்போல எப்போதும் தேவனுடைய முகத்துக்கு முன்பாக நிற்கிறவன்.

 

மதவாதி பாவத்தை நேசிப்பான் பாவிகளை வெறுப்பான், சீஷன் பாவத்தை வெறுப்பான் பாவிகளையோ கிறிஸ்துவைப்போல நேசிப்பான்.

 

மதவாதிகளுக்கு பக்தி என்பது நிகழ்ச்சிகள்  நடத்துவதும் அவற்றில் பங்கு பெறுவதும், சீஷனுக்கு பக்தி என்பது அனுதின வாழ்வு.

 

மதவாதியின் பக்தி அவனுக்கு மனமேட்டிமையை கொண்டுவரும், சீஷனின் ஞானம் அவனுக்கு மனத்தாழ்மையை கொண்டுவரும்.

 

மதவாதியின் தொழுகை சடங்கு, சீஷனின் தொழுகை ஜீவபலி.

 

மதவாதி தன் மார்க்கத்துக்காக கொலை செய்வான், சீஷன் தன் சகோதரருக்காக ஜீவனைக் கொடுப்பான்.

 

மதவாதி செய்யும் ஊழியம் மதமாற்றமே. இடுக்கமான வாசல் வழியாக நுழைந்த சீஷன் செய்யும் ஊழியமோ "சீஷராக்குதல்".

 

மதவாதி சிலுவையை அணிகிறவன், சீஷன் சிலுவையை சுமக்கிறவன்.

 

மதவாதி இரண்டத்தனையான நரகத்தின் மகன், சீஷனோ இரட்டிப்பான நன்மைக்கு சொந்தக்காரன்.

 

இயேசுவின் சீஷர்களுக்கு இம்மையில் உலகத்தோடு பங்கில்லை, மதவாதிகளுக்கு மறுமையில் இயேசுவோடு பங்கில்லை. நீங்கள் மதவாதியா? சீஷரா?

 

-வாட்ச்மென்

 



-- Edited by Yauwana Janam on Monday 19th of August 2013 12:20:39 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard