பின்வரும் செய்தியைக் குறித்து நம்முடைய கருத்தை நடுநிலையுடன் எடுத்து வைப்பதற்கு முன்பாக ஒரே ஒரு வசனத்தின் மூலம் இவர்களுடைய நிலைமையை அறிந்துகொள்ள வேண்டுகிறோம்.
யோவான் 8:44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
நண்பர்களே, இது பதவிப் போட்டியோ சாதி சண்டையோ அல்லவென்பதையும் இவர்கள் பேசியும் எழுதியும் வரும் காரியங்களின் பின்னணி இன்னதென்பதையும் ஏற்கனவே எழுதியிருக்கிறோம். விரைவில் அவை தனி பக்கத்தில் தொகுக்கப்படும்போது அனைத்து நண்பர்களுக்கும் இவர்களைக் குறித்த காரியங்களை நிதானிக்கவும் தங்கள் பாதை இன்னதென்று தீர்மானிக்கவும் எளிதாக இருக்கும். அதுவரை பொறுமை காக்க வேண்டுகிறேன்.
மேற்காணும் வசனத்தின்படி சகஜமாகவும் சந்தோஷமாகவும் போகவேண்டிய இந்த தமிழ் கிறிஸ்தவ இணையத்தை ரசாபாசமாக்கி நண்பர்களுக்கும் மோதல்களை உருவாக்கி நண்பர்களை சிதறடித்து பகைத்து தூஷிக்கும் வேலையை மாத்திரம் இந்த ஜந்துக்கள் செய்துவருகின்றன. எனவே இவர்கள் மனுஷ கொலைபாதகர் எனும் வசனம் இவர்களுக்கு பொருந்துகிறது. ஏனெனில் அப்.யோவான் எழுதும்போது,
I யோவான் 3:15 தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.
என்கிறார். மேலும்
I யோவான் 3:18 என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.
என்றும் சொல்லியிருக்கிறார். இவர்களோ வாயினால் சகோதரரே என்று சொன்னாலும் அத்ல் ஒரு வஞ்சகமும் சூழ்ச்சியும் இருப்பதை அனைவரும் அறிவோம். இவர்கள் இவ்விரு வசனங்களுக்கும் விரோதமாக இந்த கால்ங்களில் செயல்பட்டு வருவதை அனைவரும் அறிவோம். மேலும் இவர்களுடைய உபதேசமானது இவர்களே உட்கார்ந்து ஆராய்ச்சி செய்தவை அல்ல, அதற்குரிய வயதும் அனுபவமும் இவர்களுக்குக் கிடையவே கிடையாது. இவர்களுடைய எல்லா அலப்பறைகளுக்கும் பின்னணியில் வேறு சில துருபதேசவாதிகள் இருக்கிறார்கள். முக்கியமாக திருச்சபை சம்பந்தமாக இவர்கள் எடுத்துரைக்கும் காரியங்களின் பின்னணியில் ஏழாம் நாள்காரர்களின் வாதமும் யெகோவா சாட்சிகளின் பிதாமகனான ரசலின் உபதேசமும் இன்னும் தன்னையே ஒரு வேதப் புருஷனாக அறிவித்துக்கொண்ட கள்ளத் தீர்க்கதரிசியான ப்ரன்ஹாமும் இருக்கிறார்கள். இவர்களுக்கு அவர்களுடன் நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும் அவர்களுடைய உபதேசத்தில் ஊறியவர்களின் தொடர்பு நிச்சயமாக இருந்திருக்கிறது. அவர்களில் தற்காலத்தில் மேட்டுக்குடியான அறிவுஜீவிகளால் பெரிதும் மதிக்கப்படும் சாக் பூணன் அவர்களும் அடங்குவார். இதைப் பற்றியெல்லாம் விரிவான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கிறது.எங்கெல்லாம் பிரிவினையுண்டாகிறதோ அங்கெல்லாம் தேவ ஆவியானவரும் சாத்தானின் ஆவியும் மாத்திரமே கிரியை செய்யும். நான் எடுத்துசொல்லுவதெல்லாம் கிறிஸ்துவின் உபதேசத்தைக்குறித்த விழிப்புணர்வை உண்டாக்குவதன் அடிப்படையில் இருப்பதாலும் எனக்கென்று தனி இயக்கமோ சுயநல நோக்கமோ தற்பெருமையோ பேர் புகழோ இல்லாததால் என்னைக் குறித்து யாரும் கவலைப்படாமல் நான் சொல்லுவதை மாத்திரம் சிந்தித்து பார்க்கவும். இந்த காவாங்கறை காவாக்காரர்களின் கேவலமான கூட்டணி விரைவில் முடிவுக்கு வந்துவிடும். ஏனெனில் அவர்கள் நான் அவர்களைக் குறித்து எடுத்து சொல்லும் காரியங்களுக்கு பதில் சொல்லாமல் என்னைக் குறித்து ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். எங்க பாட்டி சொல்லுவாங்க, குழந்தை செல்லம் தான், அதோட மலத்தை வீட்டிலே வெச்சுக்க முடியுமா ? என்று. நாங்கள் வறிய நிலையில் வாழ்ந்த காலத்தில் வெளியே இருக்க போவதை மைதானத்துக்கு போறது என்று சொல்லுவோம்... இந்த பிரகஸ்பதிகள் நான் மைதானத்தில் இருந்துவிட்டதை ஆராய்ச்சி செய்து அதை நுகர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்கிறேன். நீங்களெல்லாம் உண்மையிலேயே இயேசு எனும் அற்புதரைத் தொழுவோராக இருந்தால் என்னை வெறுத்திருக்கவே மாட்டீர்கள்... அந்த ஒரு அடையாளமே போதும் நீங்களும் (மேசியாவின்) எதிரிகளே....(என் கணக்கு இதுவரை மிஸ்’ ஆனதே இல்லையென்று அந்த கேடுகெட்ட அடிப்பொடியான் முந்தி அறியட்டும்.)
தீத்து 1:16 அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.
இனி............”ப்ளாக் ஷீப்” விஜய் பேசுகிறார், நாம் கேட்போமாக. :)
நான் கண்ணியமானவனாக இருந்தால் எனது பக்கத்தில் ஒருவர் இதுபோன்ற அருவருப்பான கருத்தைப் பதிக்கும்போது அதை உடனுக்குடன் கண்டித்து அதுபோன்ற கருத்தை நீக்கி கிறிஸ்துவின் சுபாவத்தை வெளிப்படுத்தவேண்டும். இவர்களோ அலங்கத்தை கட்ட அல்ல, அதை தரைமட்டமாக்கவே புறப்பட்டிருப்பதால் ஆகாதவனை ஆள்வைத்து அடிப்பதைப் போல இதுபோன்ற இழிவான கருத்துக்களை எழுதுவோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பைக் கொடுக்கிறார்கள். இது தெரியாமல் நானும் ஒரு காலத்தில் இவர்களுடைய சூழ்ச்சிக்கு பலியாகினேன். விழித்துக்கொண்டபோதோ காலால் எத்தி உதைத்து துரத்தினார்கள். இவர்கள் ஜாமக்காரர்களா என்று தமிழ் கிறிஸ்தவ உலகம் சிந்திக்கட்டும்.