Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உம் பாதம் பணிந்தேன்
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
உம் பாதம் பணிந்தேன்
Permalink  
 


 உம் பாதம் பணிந்தேன் பாடல் பிறந்த சூழலை அன்னை சாராள் நவரோஜி அவர்கள் விளக்குகிறார்கள். அவர்கள் HMV இசைக்கூடத்தில் ஒலிப்பதிவில் இருந்தபோது அவர்களது இனிய குரலைக் கேட்ட சினிமாக்காரர்கள் அவரை சினிமாவுக்கு பாட அழைத்திருக்கிறார்கள். அந்த வாய்ப்பை மறுத்து ஆவியில் நிறைந்து எழுதிய பாடலே பின்வரும் பாடலாம் இது. அப்போது தாயாருக்கு சுமார் 35 வயதிருக்கலாம். அந்த இளம்வயதில் அவர்களுக்குள்ளிருந்த வைராக்கியத்தையும் விசுவாசத்தையும் நினைத்தால் - தற்காலத்துடன் ஒப்பிடுகையில் உள்ளபடியே ஏக்கமாக இருக்கிறது. அதே அர்ப்பணம் எனக்கும் வேண்டுமே..!

 உம் பாதம் பணிந்தேன்

பல்லவி

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப்பாடுவேன் - ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே

சரணங்கள்

1. பரிசுத்தமே பரவசமே
பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் --- உம்பாதம்

2. புது எண்ணெய்யால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர் --- உம்பாதம்

3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் --- உம்பாதம்

4. என் முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே --- உம்பாதம்

5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கினை நறுக்கிக் கிளை பிடுங்கி
கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் --- உம்பாதம்

6. என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்று கண்டிடுவேன் --- உம்பாதம்

7. சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் --- உம்பாதம்

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard