Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பைபிளை (வைத்து) பரியாசம் பண்ணும் ப்ளாக் ஷீப் விஜய்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
பைபிளை (வைத்து) பரியாசம் பண்ணும் ப்ளாக் ஷீப் விஜய்
Permalink  
 


"ப்ளாக் ஷீப்" விஜய் நம்மைத் தள்ளிவிட்டாலும் நமக்கு அருமையான நண்பர் அவர்கள் அங்கே நடுநிலையுடன் கருத்திட்டு வருகிறார்.ஆனால் அவரையும் விரைவில் மனமடிவாக்கி பரியாசம் செய்து ஓரங்கட்டுவார்கள். அதன் அறிகுறிகள் இப்போதே தெரிகிறது. எதிர்கருத்தை ஒருத்தன் சொன்னால் அவன் தேவன் என்றாலும் இந்த ”ப்ளாக் ஷீப்” விடமாட்டார்.இதோ நான் அண்மையில் ரசித்த நேர்த்தியானதொரு காமெண்ட்...

John Edwardநல்ல வேலை இந்திய தேசத்திற்கு வந்த ஐரோப்பிய மிஷினரிகள் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் போன்ற மொழிகள் விக்கிரக வழிபாடுகளுக்காகவே உருவாக்கப்பட்டவை ஆகவே வேதத்தை மொழிபெயர்ப்பது தவறு என்று இருந்து விடவில்லை. அப்படி இருந்து இருந்தால் சகோ. விஜய் உட்பட நாமும் விக்கிரகத்தையே வணங்கிக்கொண்டு இருப்போம்

கர்நாடக இசை விக்கிரக ஆராதனைக்கே உருவாக்கப்பட்ட இசை ஆகவே சகோ. விஜய் அவர்கள் karnatic இசையில் இயற்றப்படும் பாடல்களை பாடமாட்டார் அவைகள் பாபிலோனிய அடிமைத்தனத்திற்குள் நம்மை வழிநடத்தும்!

இந்திய பண்பாட்டின் படி இரு சேர்த்து வணக்கம் தெரிவிப்பது (நமஸ்கார் ) என்பது "நான் உனக்குள் இருக்கும் பிரம்மாவை வணங்குகிறேன்" என்ற அடிப்படையில் உள்ள ஒரு விக்கிரக வணக்க முத்திரையாகும். உண்மை கிறிஸ்தவர்கள் வணக்கம் சொல்லி விக்கிரக வணக்கம் செய்வதை சகோ. விஜய் அவர்கள் கடுமையாக எதிர்ப்பார் என்று நம்பலாம்!

2000 வருடங்களுக்கு முன்பு நான் இருந்து இருந்தால் சகோ. விஜய் அவர்கள் எதிர்ப்பது போல நாமும் எதிர்த்து இருக்கலாம் ஆனால் இப்போது கிறிஸ்மஸ் என்பது யோவான் 3:16 ன் நிறைவேறுதலாகவே பார்க்கபடுகிறது. தவறான தேதியாய் இருந்தாலும் குடிகாரனும் டாஸ்மாக் போவதற்கு முன்பு ஒரு பத்து நிமிஷம் ஆலயத்திற்கு போகலாம் என்று வருவான் அந்த நாள் அவனுடைய வாழ்க்கையிலே தமஸ்க்குவிற்கு போகும் வழிபோன்ற ஒரு நாளாய் இருக்கலாம். நீங்கள் இது போன்று எழுதுவதால் "ஓகோ இனி நம்ம நேராய் டாஸ்மாக் போகலாம்" என்றுதான் தோன்றுமே தவிர ஒரு பிரோயோஜனமும் இல்லை மேலும் நாட்க்களை விஷேசித்து கொள்ளுவது வேதத்தின் படி தவறான ஒரு விஷயமும் இல்லை!!

Merry Christmas Bro. Vijay!
//சகோ. ஜான் எட்வர்ட், மேற்கண்ட யாவும் உங்கள் கற்பனைகளேயன்றி என்னுடைய வார்த்தைகள் அல்ல//
Bro. Vijay , நான் சொன்ன முன்று காரியங்களும் உண்மையே தவிர கற்பனை அல்ல! தமிழர் பண்பாடு என்று நாம் என்னும் வணக்கம் என்பது ஒரு விக்கிரக முத்திரையாகும்!. நாம் செய்யும் அன்றாடக காரியங்களில் உள்ள Pagan தொடர்பை ஆராய்ந்தால் நீங்கள் உலக பிரகாரமான வேலை கூட செய்யமுடியாது. தேவன் உள்ளந்திரியங்களை ஆராய்ந்து அறிகிறவர் ஆகவே "கிறிஸ்துமஸ் கொண்டாடுவதில் உள்ள Pagan தொடர்பை குறித்த உங்களுடைய அறிவு மற்றவர்களுக்கு ஒரு தடங்கலாய் இல்லாத படி பார்த்துகொள்ளுங்கள் என்பதே என்னுடைய வேண்டுகோள்"

//ஆனாலும் போட்டீங்களே ஒரு போடு! டாஸ்மாக், சர்ச், தமஸ்குன்னு அதற்கு முன்னாடி இந்தக் கதையுடய கற்பனையெல்லாம் ஒண்ணுமே இல்ல பிரதர்!!!!!!//

இதுவும் கற்பனை அல்ல பிரதர்! சவுல் என்ற கொலைகாரனை கர்த்தர் கொலை செய்ய போகும்வழியில் சந்தித்த கதை. கொலைகாரனை சந்தித்த கர்த்தர் குடிகாரனை சந்திக்க மாட்டாரா?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard