Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சர்ச்சுக்கு போலாமா ?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
சர்ச்சுக்கு போலாமா ?
Permalink  
 


எந்த சபையும் சரியில்லை என்று கூறி ஆராதனைக்குச் செல்லாமல் சிலர் வீட்டிலேயே இருக்கின்றன்ர். அப்படியே இன்று ஒரு வாலிபனுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் தனது இளம்வயதிலேயே ச்ந்தித்த பல்வேறு அனுபவங்கள் காரணமாக எந்த சபைக்கும் போகாமலிருப்பதாக சொன்னார். அப்படியானால் மாசுமருவற்ற தூய்மையான சபையை நானே அமைக்கும்வரை எந்த சபைக்கும் போகமுடியாது போகலாம். ஏனெனில் என்னைப் பொறுத்தவரை எந்த சபையுமே சரியில்லையே... எல்லா த்லைவர்களுமே மோசமானவர்களே. சரி, ஏதாவது ஒரு சிஎஸ்ஐ சபைக்கு செல்லலாமே என்று கேட்டால் அந்த தம்பி சொல்லுகிறார், புதிய இடத்துக்கு எப்படி செல்லுவது,அங்கு யாரும் பழக்கமில்லையே என்பதாக. நான் கேட்கிறேன், கிறிஸ்தவனாகிய நீயே புதிய இடத்துக்குச் செல்லாவிட்டால் வேற்று மார்க்கத்தவர் எப்படி வருவர்? அவர்களை உன்னுடைய சபைக்கு வா என்று அழைக்கும் உரிமை எப்படி உனக்கு கிடைக்கும் ?

எனவே நாம் செய்யவேண்டியது என்ன ? சபையைக் குறித்த நம்முடைய பார்வையை சற்று விசாலமாக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட ச்பையில் ஐக்கியங் கொண்டு அதன் ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்பது மிக மிக முக்கியமானதாகும். ஆனாலும் இதுபோன்ற வேறுபட்ட சூழல்களில் எந்த சபைக்குமே செல்லாதிருப்பதைவிட ஆண்டவருடைய பிரசன்னத்தை மட்டுமே மனதிற் கொண்டு ஆண்டவருக்காகவே ஏக்கத்துடன் ஏதேனும் ஒரு சபைக்கு அவசியம் செல்லவேண்டும்.

நாம் தேவனை வீட்டிலேயே ஆராதிக்கலாம், தவறில்லை. ஆனால் சபை கூடிவருதல் எனும் காரியத்தின்படி ஆராதனைக் கூடம் அல்லது ஐக்கியம் என்பது ஒரு தனி மனிதனுக்கு சொந்தமானதாக இல்லாமல் அது ஒரு பொதுவான இடமாக இருத்தல் வேண்டும். சபை என்பது சபையாருக்கு சொந்தமானதாகவே இருக்கவேண்டும். அது ஒரு குறிப்பிட்ட தலைவருக்கு சொந்தமாக இருக்கக்கூடாது. அங்கே தேவனை மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஆராதித்து வரலாம். ஆனால் ஏதேனும் ஒரு கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட ஐக்கியத்துடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு அதனை பராமரிக்கவும் வேண்டும். மனிதருக்காக தேவ பிரசன்னத்தை இழக்கும் மதியீனத்தை நாம் செய்யாதிருக்கவும் வேண்டும்,

  • எபிரெயர் 11:40 அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.
  • எபிரெயர் 4:9 ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனிவருகிறதாயிருக்கிறது.


- மேற்காணும் வசனங்களின்படி நமக்கு இளைப்பாறுதலும் சரி, பரிபூரணமும் சரி இனி வருகிற காரியமானபடியினால் நாம் ஒருவரையும் நியாயந்தீர்க்காமல் ஐக்கியத்தைப் பேணும் வண்ணமாக சபைகூடி வருதலை பராமரிப்போமாக. குறைந்தபட்சம் சிஎஸ்ஐ சபையிலிருந்து எந்த சபைக்கு வேண்டுமானாலும் நாம் எளிமையாக - குடும்பத்துடன்  சென்று ஆராதித்து வ்ரவேண்டும். அதற்குரிய ஆசீர்வாதம் நிச்சயம் உண்டு.

எங்கே சர்ச்சுக்கு புறப்பட்டாச்சா...சீக்கிரம் கிளம்புங்க.

  • சங்கீதம் 122:1 கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.

@Karthi

https://www.facebook.com/yauwanaj/posts/300900886693889



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard