தைரியம் காட்டுவதற்கும் துணிந்து செயல்படுவதற்கும் தலைசிறந்த உதாரணம் இயேசு கிறிஸ்துவே. என்றாலும், மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்து உலகெங்கிலும் உள்ள தேவ ஊழியர்கள் எல்லாருக்குமே தைரியம் தேவைப்பட்டிருகிறது. ஏன்? தம்மைச் சேவிபபவர்களுக்கும் சாத்தானைச் செவிப்பவர்களுக்கும் இடையே பகை இருக்குமென்று ஏதேனில் கலகம் வெடித்த சமயத்திலே கர்த்தர் முன்னறிவித்திருந்தார். நீதிமானாய் இருந்த ஆபேலை அவருடைய சகோதரன் கொலை செய்தபோதே அந்தப் பகை வெட்டவெளிச்சமானது!! பெருவெள்ளம் வருவதற்கு முன் வாழ்ந்த மற்றொரு உண்மையுள்ள மனிதனான ஏனோக்கும்கூட மக்களின் பகைக்கு ஆளானார். தேவபக்தியற்றவர்களை நியாயம் தீர்ப்பதட்க்காக கடவுள் லட்சக்கணக்கான பரிசுத்த தூதர்களோடு வருவார் என்று ஏனோக்கு தீர்க்கதரிசனம் சொன்னார். யூதா 14 ,15 , ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.
ஆனால், அவர் சொன்ன செய்தி அநேகருக்குப் பிடிக்கவில்லை. கர்த்தர் மட்டும் தலையிட்டு ஏனோக்கின் வாழ்நாளைக் குறைக்காவிட்டால், மக்களின் கையில் சிக்கி அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பார். ஏனோக்கிட்கு எப்பேர்ப்பட்ட தைரியம்!!! ஆதி 5 :21 :24 21. ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றான். 22. ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். 23. ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம். 24. ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார். ஆக்கம் ரோஹான்.
__________________
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.