Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருச்சபைத் தலைவர்களே, அக்கினி வருகுது சந்திக்க ஆயத்தமா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
திருச்சபைத் தலைவர்களே, அக்கினி வருகுது சந்திக்க ஆயத்தமா..?
Permalink  
 


by Chill Sam on Tuesday, 11 October 2011 at 00:05

#I. கிறிஸ்து சபையின் மறுமலர்ச்சியைக் குறித்தும் எழுப்புதலைக் குறித்தும் தாகங்கொண்டோர் பிரச்சினைக்குரியவர்கள் போலத் தோற்றமளித்தாலும் அவர்களால் அதிகம் பாதிக்கப்பட்டது சாத்தானே.

#II. அவனுடைய இராஜ்யம் இன்றைக்கு இணையத்தைப் பொறுத்தவரை தடுமாறிக்கொண்டிருக்கிறது; அவன் கர்த்தருடைய பீடத்தில் துணிகரமாக நுழைந்து அவருடைய ஆசாரியர்களையே வசப்படுத்திக்கொண்டு செய்துவந்த சூழ்ச்சிகள் இன்று வெளியரங்கமாகிவிட்டது.

#III. இப்போது எதிர்ப்பதும் பதுங்குவதும் போல வேடமிடுவது ஊழியர்களல்ல,சாத்தானே..!

#IV. இனி அவன் ஜம்பங்கள் இங்கே பலிக்காது; ஒவ்வொரு சபையிலும் இளைஞர்களே தேவ வைராக்கியத்துடன் எழும்பி ஆவன செய்வார்கள்.

#V. தரிசனம் வெல்லும்,பகையைக் கொல்லும்,தேவஜனம் சுத்தமும் பிரகாசமுமாக ஜொலிக்கும்;அன்று தங்கம் பித்தளையைப் போலவும் வெள்ளி ஈயத்தைப் போலவும் எண்ணப்படும்.

#VI. ஜனங்கள் மனிதனின் முகம் பாராது தேவபிரசன்னத்துக்காக தாகங்கொண்டு ஏங்கி நிற்பார்கள்.இராஜ்யம் வசப்படும்.

#VII. ஆவி என்ற பெயரில் ஆலின ஆலிங்கனம் செய்து வஞ்சித்த கள்ள சாத்தான் ஆணியடிக்கப்பட்டுவிட்டான்; இனி சபைகளில் வேதத்தைக் குறித்த தாகமே ஓங்கி நிற்கும்; ஆவிகளின் கொட்டம் அடக்கப்படும். குண்டலினிகள் வழிந்தோடி கழிவாகிப்போகும்.

"ஆகையால் சேனைகளின் ஆண்டவராகிய கர்த்தர், அவனைச் சேர்ந்த கொழுத்தவர்களுக்குள்ளே இளைப்பை அனுப்புவார்; பட்சிக்கும் அக்கினியைப்போலும் ஒரு அக்கினியை அவன் மகிமையின்கீழ் கொளுத்துவார்.

இஸ்ரவேலின் ஒளியானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினிஜுவாலையுமாகி, ஒரேநாளிலே அவனுடைய முட்செடிகளையும், நெரிஞ்சில்களையும் தகித்துப் பட்சித்து,

அவனுடைய வனத்தின் மகிமையையும், அவனுடைய பயிர்நிலத்தின் மகிமையையும், உள்ளும் புறம்புமாய் அழியப்பண்ணுவார்; கொடிபிடிக்கிறவன் களைத்து விழுவதுபோலாகும்." 

>(ஏசாயா 10:16,17,18)

திருச்சபைத் தலைவர்களே, நீங்கள் இதுவரை சந்தித்திராத அக்கினி வருகுது சந்திக்க ஆயத்தமா..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard