Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மெயின் லைன் சபைகளில்...போதிப்பதே இல்லை..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
மெயின் லைன் சபைகளில்...போதிப்பதே இல்லை..?
Permalink  
 


by Chill Sam on Tuesday, 01 November 2011 at 18:24

என்னுடைய பின்னூட்டங்களே கட்டுரை அளவுக்கு நீண்டு விடுவதால் (8000 எழுத்துக்கு மேல் பின்னூட்டம் இருக்கக்கூடாது...) வதனநூல் (Facebook) அதனை அனுமதிக்கிறதில்லை; எனவே தனி கட்டுரையாகப் பதிக்கிறேன்... இது "ஆலயம் தொழுதல்..." (by Vijay Kumar on Thursday, 27 October 2011 at 23:07 ) என்ற தலைப்பில் பதிக்கப்பட்டிருக்கும் கட்டுரையில் காணும் நண்பர் ஜாண் அவர்களின் கருத்தின் விளைவால் தோன்றியது.நான் எழுதுவதில் ஏதேனும் சங்கடமோ சர்ச்சையோ எழும்புமானால் நண்பர்கள் அதைக் குறித்து முந்தி என்னிடம் விசாரிக்குமாறு அன்போடு வேண்டுகிறேன். மற்றபடி பொடிவைத்து தாக்குவது- மறைமுகமாக குத்துவது இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை, ஒருவர் இப்படியே நடக்கவேண்டும் என்று நான் போதிப்பதுமில்லை; யாருடைய நல்லெண்ணத்துக்காவும் யாரையோ திருப்திபடுத்தவும் நான் எழுதுவதுமில்லை.

இனி...

ஜாண் எட்வர்ட்:- // மெயின் லைன் சபைகளில் உள்ள ஒரே அறுதல் அவர்கள் தவறான உபதேசங்களை போதிப்பது இல்லை, சரியாக சொல்லவேண்டும் என்றால் போதிப்பதே இல்லை //

”போதிப்பதில்லை” என்று சொல்லுவதைவிட கேட்க யாரும் ஆயத்தமாக இல்லை என்றே சொல்லவேண்டும்.சிஎஸ்ஐ என்ற அமைப்பு அமைக்கப்பட்டதோ இல்லையோ ஒரு சில வருடங்களிலேயே அது ஆவியில்லாத சபை என்று சொல்லிக்கொண்டு இன்னொரு அமைப்பு எழும்பியது; அதிலிருந்து இன்னொன்று... அதிலிருந்து இன்னொன்று என்று புற்றீசலைப் போல பெருகிக்கொண்டே போக இதனிடையே ஆவியின் அபிஷேகத்தை நம்பாத - எந்தவொரு அமைப்புக்கும் கட்டுப்படாத அறிவுஜீவிகள் கூட்டம் எழும்பியது; இவற்றுக்கிடையே தேவையை உணர்ந்த ஜெபசேனையும் மிஷினரி இயக்கங்களும் எழும்பியது; இவை ஒவ்வொரு சபை அமைப்பையும் இசைந்து செல்ல வேண்டியதானது. மிஷினரி பணிக்கு ஆவியின் நிறைவும் இயக்க செலவுக்கு ஸ்தாபனங்களின் ஆதரவும் தேவைப்பட்டது;எனவே இரண்டு அமைப்புகளும் பொருந்தாத இணையாகக் கலந்தது; இங்கேயிருந்தவர்கள் அங்கே ஈர்க்கப்பட்டார்கள், அங்கேயிருந்தவர்கள் இங்கே ஈர்க்கப்பட்டார்கள்... வேதம் சொல்லுவது போல உத்தமர் இன்னாரென்று விளங்குவதற்காக மார்க்க பேதங்களை ஆவியானவரே அனுமதித்திருக்கிறார்.

இதனிடையே நண்பர் ஜாண் சொல்லுவது போல திருச்சபையானது போதிக்காதிருந்தால் இன்றைக்கு இத்தனை தலைவர்கள் எங்கிருந்து தோன்றினார்கள் என்று கேட்கிறேன்;அங்கே தனி ஆவர்த்தனம செல்லாது என்று வெளியேறி வந்தோரே இன்றைய பெந்தெகொஸ்தே (ஏஜி, ஏஸிஏ, ஐபிஸி, ஐபிஏ...இன்னபிற ) இயக்கத் தலைவர்கள் என்கிறேன். மற்றவை அவ்வப்போது வந்துசெல்லும் வெள்ளை காகங்களால் அமைக்கப்பட்டு ஆதரிக்கப்படுபவை.

நண்பர் சொல்லுவது போல /// அவர்கள் தவறான உபதேசங்களை போதிப்பது இல்லை... /// என்றால் இதுவே சரியானது என்ற உபதேசத்தார் எங்கிருந்து வருகிறார்கள் ? தவறானதை சரி என்போர் மற்றும் சரியானதை தவறு என்போர் ஆகிய இருவருமே சரியானது எது என்பதை அறியாமலே சொல்லுகிறார்கள் அல்லவா..?

மெயின் லைன் சபையார் இதுவரை போதிக்கவேயில்லை அல்லது தவறாக போதிக்கவில்லை எனும் இருவேறு கருத்தில் போதிக்காவிட்டால் அதே அமைப்பிலிருந்து எவ்வாறு இத்தனை தலைவர்களும் (தாந்தோன்றி அமைப்புகள்...) சபைகளும் வந்தன என்று கேட்டேன்;மற்றும் தவறாக போதிக்காவிட்டால் இதுவே சரியானது என்று சொல்லி போதிப்போர் எங்கிருந்து வந்தார்கள் என்று கேட்டேன். எதையுமே போதிக்காத ஒரு அமைப்பில் ஊருக்காகவும் உலகத்துக்காகவும் சென்று சந்தா கட்டி பெண்ணுக்காகவும் மண்ணுக்காகவும் வேடமிடும் நபர்களை என்னவென்று சொல்ல..?

டாஸ்மாக் பாரில் இருப்பவன் அனைவருமே குடிகாரன் என்று தெரிகிற்தே, நல்ல குடும்பஸ்தன என்ன செய்யவேண்டும், அங்கிருந்து வெளியேற வேண்டுமல்லவா..?

ஆலயமே இல்லாத ஒரு ஆலயத்தில் ஆலயமான ஒருத்தன சென்று எதைத் தேடுகிறான்... புரியவில்லையே..?  ஆலயங்களெல்லாம் ஆலயமில்லாத ஆலயத்துக்குள் சென்று ஆலயங்களைத் தேடிக்கொண்டிருக்கிறதோ..?எதுவுமே சரியில்லாத நிலையில் சரியில்லாதிலிருந்து சரியானதைத் தேர்ந்தெடுக்கவேண்டிய நிலையிலேயே சாமான்ய மனிதன் இருக்கிறான்.

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணி அங்குமிங்கும் அலைந்து கண்டதையும் தின்றுவிட்டு வந்து வீட்டில் வாந்தியெடுத்து வைப்பதுபோலவே நானே ராஜா நானே மந்திரி என்று சுயத்தையும் சுயநீதியையும் சுயபெருமையையும் சுயாதீனத்தையும் சார்ந்திருப்பவனும் செயல்படுகிறான்.நாம் சுயாதீனரானாலும் கிறிஸ்துவுக்கு அடிமைகளாக அழைக்கப்பட்டிருக்கிறோம்.கிறிஸ்துவுக்கு அடிமையானவன் கிறிஸ்துவைக் காட்டிலும் மேலான பணிவைக் காட்ட அழைக்கப்பட்டிருக்கிறான். தேவாலய பீடத்துக்கு எதிராக தன் கரத்தை நீட்ட அவனுக்கு எந்த உரிமையும் இல்லை.

மனதில் வஞ்சத்தையும் எதிரான எண்ணத்தையும் வைத்துக்கொண்டு முகமலர்ந்து “தோத்திரமய்யா..”  பாவாடை நாயக்கரைப் பார்த்து கும்பிடு போடுவதும் அவர் "காட் ப்ளஸ் யூ மை ஸன்" என்று நெற்றியில் சிலுவை போட்டுவிடுவதும் அப்பட்டமான துஷ்டத்தனமல்லவா..? ”உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறது..” எனக்கு உகந்தது என்று தேவாலயத்தில் வாசம்பண்ணுபவர் சொல்லவில்லையா..?  குருவை மனதில் நிந்தனை செய்துவிட்டு நான் தேவனுடைய ஆலயம் என்போருக்குள் எப்படி அவர் வாசம் பண்ணமுடியும்? அவரும் நம்மைப் போல மனிதரே என்றால் சுபகாரியங்களுக்கு மாத்திரம் அவர் மகான் ஆகிவிடுவாரா..? ஆலயமான நாமே பெரியார் பாணியில் சீர்திருத்தமுறையில் திருமணம் செய்துகொள்ளலாமே..? செத்துப்போனால் புதைக்க வெட்டியான் போதுமே..?

நண்பர் ஜாண் அவர்கள் மெயின் லைன் திருச்சபையில் போதிக்கிறதில்லை என்று சொன்னார், வேதமே தெளிவாகச் சொல்லுகிறவண்ணமாக எல்லாரும் எல்லாவற்றையும் செய்யமுடியாது,தூய ஆவியரே அதனைச் செய்கிறார்,எனவே திருச்சபையில் ஒரு வழக்கம் என்னவென்றால் ஒவ்வொரு ஐந்து வருடமும் குருவானவரை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்; அதனால் வெவ்வேறு திறமைகள் உடைய போதகர்கள் திருச்சபைக்கு கிடைக்கிறார்கள்.மேலும் சபையார் சலித்துப் போகாதிருக்க அவ்வப்போது வெளியிலிருந்தும் பிரசங்கியார்கள் வருகிறார்கள்; இன்னும் தற்காலத்தில் அதற்கும் அவசியமில்லாதது போல மீடியாவில் (நாயும் நரியுமான...) ஏகப்பட்ட ஆட்கள் பிரசங்கிககிறார்கள்.

திருச்சபையின் குருவானவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விசேஷித்த திறமை பெற்றவராக இருப்பார்; உதாரணமாக சென்னையில் அருட்திரு பிரேமையா அவர்கள் ஒரு சிறந்த போதகர் என்று சபையார் சாட்சி சொல்லுகிறார்கள்; இன்னொருவர் அருட்திரு சார்லஸ் எட்வின் எனக்கு நண்பர், அவர் புல்லாங்குழல் வாசிப்பவர்; மற்றொருவர் மிஷினரி பாரம் கொண்ட எளிமையான போதகர் ப்ராம்வெல் ஐயா அவர்கள்... இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்; நான் சேலத்தில் சந்தித்த ஒரு குருவானவர் ஜிப்ஸி  எனப்படும் நரிக்குறவர் இனமக்கள் மீது பாரம்கொண்டவர்; அவரால் இயன்றது, அந்த மக்களின் சிக்கலான பாஷையைக் கற்றுக்கொண்டு அவர்கள் மொழியில் தமிழ் எழுத்துக்களால் புதிய ஏற்பாடு ஒன்றை எழுதியிருக்கிறார். இவ்வாறு திருச்சபைக்கான அனைத்து அம்சங்களுடனும் இயங்குவது ஒழுங்குபடுத்தப்பட்ட திருச்சபைகள் மாத்திரமே.இன்னும் கிராமத்திலுள்ள சபைகள் ஆவியின் சபைகளைவிட நேர்த்தியாக இயங்குகிறது.அங்கு யாரும் தனி ஆவர்த்தனம் செய்யவே முடியாது;ஆராதனையை நடத்தும் ஊழியருக்கு சம்பளமும் கிடையாது;அது ஒரு தன்னார்வ பணியானதால் அவர் முழு ஈடுபாட்டுடன் ஆராதனையை நடத்துகிறார்; பாடகர் குழு, இசைக்கருவிகளுக்கான பயிற்சி முதலான ஒழுங்குகளும் அங்கே தானே வழங்கப்படுகிறது; ஒன்றுக்கும் உதவாத ஒரு சபையை அமைத்து அதற்கு தலைவராக கிறிஸ்து அமர்ந்திருக்கிறாரா என்ன..?

”நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.” (1.யோவான்.2:27)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard