soul: //பணம் பாவம் என்று வேதம் சொல்லவில்லை. பணத்துக்கு அடிமையாவதே பாவம். //
போதுமென்ற மனதுடன் கூடிய தேவபக்தியே மிகவும் ஆதாயம் என்று இருக்காமல், நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பதே ஒரு வகை அடிமைத்தனம் தானே?
//கொடுமை என்னவென்றால் பணம் தேவையில்லை என்று சொல்பவர்கள்தான் அதே பணத்தை சம்பாதிப்பதற்காக தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதி நேரத்தை செலவிடுகிறார்கள் அதுவும் கணவன், மனைவி சகிதமாக... //
This I agree. இந்த உலகம் வேலை வேலை என்று பார்வோனைப் போல கிறிஸ்தவ மற்றும் கிறிஸ்தவரல்லாத ஜனங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. ஒரு புத்தகம் படிக்கவோ, பாட்டு கேட்கவோ(சினிமா பாட்டு இல்லை), செய்தி கேட்கவோ கூட நேரமில்லாமல் வேலை பார்ப்பவர்கள், சுய தொழில் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
//ஒரு தொழிலை விருப்பத்தின் பேரில் செய்வது வேறு பணத்துக்காக செய்வது வேறு. டெண்டுல்கருக்கு விருப்பம், கமல் ரஜினிக்கு விருப்பம் சம்பாதிக்கிறார்கள்...//
பலர் ஏன் கிரிக்கெட் விளையாட ஆசைப்படுகிறார்கள்? பணமும் புகழும் தான் காரணம். விளையாட்டு விளையாட்டாக இல்லாமல் பணம் சம்பாதிக்கும் தொழிலாய் போனது காலத்தின் கோலம்.
நடிப்பது, பாடுவது போன்ற திறமைகள் அனைவ்ருக்கும் இருப்பதில்லை. அப்படி திறமையுள்ளவர்கள் சினிமா துறைக்கு படையெடுப்பது கலைக்கு சேவை செய்ய அல்ல, பணத்துக்கும், புகழுக்கும் மட்டுமே! சூப்பர் ஸ்டார் என்பவர் தன் பேத்தி போன்ற பெண்ணுடன் டூயட் பாடுவது எதற்காக? கிடைக்கும் கோடிகளுக்காகத்தான். அத்துடன் நல்ல வேலை செய்து சம்பாதிக்க நினைக்க வேண்டும். தமிழ் சினிமா நல்ல profession கிடையாது, என்னைப் பொறுத்த வரையில்
//ஆனால் சாமானியர்கள், உலகத்தின் பெருவாரி ஜனங்கள் தங்கள் நிறுவனங்களை மேம்படுத்த, உழையாய் உழைக்கிறார்கள் சொற்ப வருமானத்துக்காக... மனிதனுக்கு அடிமையாக மனிதன் இருப்பது ராஜ்ஜியத்தில் நடைபெறாது...//
என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல என்று ஆண்டவர் சொல்லியிருப்பதால், நாமும் என்ன வேலை பார்த்தாலும் அதே சிந்தையோடு இருந்தால் வருத்தப்பட மாட்டோம் என்று நினைக்கிறேன்.