Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சோஃபா ஊழியர் பெரேயன்ஸ்!


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: சோஃபா ஊழியர் பெரேயன்ஸ்!
Permalink  
 


>> ரசகுல்லா என்று தமிழில் அழைத்தாலும் அதன் உன்மையான உச்சரிப்பு ரொஷ்கொல்லா!! உங்களுக்கு தெரியுமா தெரியாதா என்பது எனக்கு தெரியாது!! மேலும் இது தோன்றிய இடம் கொல்கொத்தா!! இது சுத்தமான வெள்ளை நிறம் கிடையாது!! தமிழ்நாட்டில் கிடைப்பது போல் ரசகுல்லாவே அன்றி உண்மையான ரொஷ்கொல்லா கிடையாது!! இனிப்பாக இருக்கிறது என்பதால் ஜாங்கிரியும் மைசூர்ப்பாகும் ஒன்று தான் என்பது போல் இருக்கிறது உங்களின் வாதம்!!

--

பாத்தீங்களா பெரேயன்ஸ் அவர்களே! உங்களுக்கு நேரடி அனுபவம் இருப்பதால்தானே ரசகுல்லா பற்றிய எல்லா விபரமும் தெளிவாக சொல்ல முடிகிறது? இதைத்தான் நானும் சொல்கிறேன். நிஜத்துடன் நேரடி அனுபவம் தேவை. அதுவே நம்மை தெளிவு படுத்தும்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

ரசகுல்லாவைப் பார்க்காதவர்கள் அது கருப்பா, காரமா இருக்கும் என்று கூட ஏதாவது தலை அறிவினால் சொல்லலாம்.ஆனால் பார்த்தவுடன் ரசகுல்லா வெள்ளை என்று தெரியும். ருசித்தவுடன் இனிப்பு என்று புரியும். அது போலவே பலருக்கும் இப்ப தேவை வெளிப்பாட்டு அறிவு. பார்த்து ருசித்து உணரும் அறிவு. இது இல்லாததினால்தான் பல தவறான புரிந்து கொள்ளுதல்கள் உண்டாகி இருக்கிறது .இந்த பிரச்சினை கிறிஸ்தவர்கள் என்று சொல்லப்படுபவர்களுக்கும் இருக்கிறது. எனவேதான் கண்மூடித்தனமாக சாது, வின்செண்ட் போன்றோரை எதிர்க்கிறார்கள்.

எனவே பெரேயன்ஸ் அவர்களே, உங்களுக்கும் இப்ப தேவை வெளிப்பாட்டு அறிவு மற்றும் நிஜ ஆவிக்குரிய அனுபவங்கள். அது இருந்தால் ஆவியானவரை அது இது என்று சொல்ல மாட்டீங்க.

--

எங்களைப் போல உறுப்பினர் ஆகாமலே பங்களிப்பவர்களை என்ன செய்வீங்க பெரேயன்ஸ் அவர்களே?

மாற்றான் தோட்டத்தில் ஏதோ மல்லிகை தெரிகின்றதே! பாத்து சில்சாம் அவர்களே. சோல்சொல்யூஷனின் ஃபேஸ்புக் முகத்தைப் பார்த்து ஏமாந்துடாதீங்க!!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

bereans:

 

>> A fool is really one who answers for a question not posed to him/ her!!

 

Really?? That is what you do all the time! A fool is a fool is a fool !!

 

 

>> கூடிய விரைவில் இந்த தளம் மூடப்பட்டு இதே பெயரில் ஒரு புதிய தளம் ஆனால் இது போன்ற இலவசமானதாக இல்லாமல், எங்களின் உழைப்பினால் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்!!

 

மீன் பிடிக்க நேரமில்லை, மீன் சாப்பிட நேரமில்லை என்றெல்லாம் சொன்னீர்கள். இதுக்கு மட்டும் நேரம் இருக்குதாக்கும்? ஏன் இப்படி உங்க நேரத்தையும் பெலனையும் பிசாசுக்காக செலவழிக்கிறீர்கள்??

 

 

ஞாபகத்திற்கு வரும் சில பழமொழிகள்

 

நுணலும் தன் வாயால் கெடும்

 

வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு.

 

தன் வினை தன்னைச் சுடும்

 

பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தானே வரும்.

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

bereans:

>> ALL means ALL!! Nothing less, not even one less!!

 

Fool means Fool. You are a fool. You alone are a fool!

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

வேதத்தில் உள்ள விஷயங்களை ஆராய்ச்சி செய்து அது என்ன, இது என்ன என்று தெரிந்து கொள்ள நினைப்பது தவறில்லையே. அப்படி நாம் செய்வதை ஆண்டவர் விரும்பத்தான் செய்கிறார்.

ஏஞ்சல் டிவியின் ”நெஞ்சினிலே ” ஒரு கலந்துரையாடல் நிகழ்சி. அவர் கற்றுக் கொண்ட, ஆண்டவ்ர் வெளிப்படுத்திய, அவர் சிந்திக்கிற பல விஷயங்களை அதில் பகிர்ந்து கொள்கிறார். இந்த மாதிரி விஷயங்கள் நம் இரட்சிப்புக்கு எந்த வகையிலும் பிரயோஜனதோ/அதி முக்கியமானதோ இல்லை ...இதை ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பாதகமில்லை ... இதெல்லாம் extra information என்று சொல்லிதான் பேசுவார்.

குற்றம் கண்டு பிடிக்கும் மனப்பான்மையோடே எல்லாவற்றையும் பார்த்தால் ஒன்றும் செய்ய முடியாது.

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

golda wrote:

நோவாவை மகன் “பார்த்தது” பெரிய பாவமாக இருக்க முடியாது. வேறு ஏதாவது நடந்திருக்க வேண்டும் என்று சாது மட்டுமல்ல பலரும் நம்புகிறார்கள். தூதர்கள்-மனிதர்கள் கலப்பில் உருவானதுதான் Nephilim என்ற ஜாதி என்றும் சாது மட்டுமல்ல, பலரும் நம்புகிறார்கள்.


 நோவாவை மகன் “பார்த்தது” பெரிய பாவமாக இருக்க முடியாது. வேறு ஏதாவது நடந்திருக்க வேண்டும் என்று சாது மட்டுமல்ல வக்கிர புத்தியுள்ள், கர்ப்பனையுலகில் சஞ்சரிக்கும் பலரும் நம்புகிறார்கள் என்பது உண்மைதான்.... ஆனால் வேதத்தில் அப்படி எங்கும் இல்லை. பலர் பார்க்கும் ஒரு கிறிஸ்தவ ஊடகம் இப்படிப்பட்ட கற்பனை கதைகளை கட்டவிழ்த்து விடுவது ஆபத்தானது. வேதத்தில் இல்லாததை, வேதம் சொல்லாததை கற்பனை கலந்து எடுத்துவிட இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்...? இந்த டி.வி. சானலை வேதத்தில் கற்க வேண்டிய எல்லாம் கற்று தேர்ந்து இருப்பவர்கள் பார்க்கவில்லை... வேதத்தையே டி.வி. யில் மாத்திரம் அறிந்தவர்கள் பெரும்பாலானோர் பார்க்கிறார்கள். அவர்கள் வேதத்தில் இதைத்தான் அறிவார்கள்...

தூதர்-மனிதர் கலப்பில் உருவானவர்கள் அனைவரும் ஜலப்பிரளயத்தில் அழிக்கப்பட்டனர். அதற்குப்பின் தூதர்கள் பூமியில் இறங்கி மனிதரோடு உறவாடும் தன்மையை இழந்திருக்கவேண்டும். ஏனெனில் அதற்குப்பின் வேதாகமத்தின் இறுதி புத்தகம் வரை அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக வேதத்தில் எங்கேயும் எழுதப்படவில்லை. அப்படிப்பட்ட சந்ததி உருவாகும் வாய்ப்பு இருந்திருந்தால் இன்று உலகில் அந்த சந்ததிதான் முழுமையாக இருந்திருக்கும். மனித இனமே இருந்திருக்காது. காரணம் தூதர்கள் மனிதர்களைவிட அதிக சக்திவாய்ந்தவர்கள். 

சும்மா எல்லோரையும் குழப்ப ஏதாவது கருத்து சொல்லக்கூடாது.. வேதத்தில் சொல்லப்படாத ஒரு காரியத்தை வேதத்தோடு இணைத்துச் சொல்லவேண்டுமென்றால் சரியான உறுதியான சான்று வேண்டும்... genitic கோளாறுகளால் இன்றும் கூட சாதாரண பெற்றோருக்கு அசாதாரண உயரமான அல்லது குள்ளமான பிள்ளைகள் பிறக்கின்றன...



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//சகலும் வெளியரங்கமும் நிர்வாணமுமாகும், தேவன் சகலத்தையும் நியாயத்தில் கொண்டு வந்து நிறுத்துவார், நியாயத்தீர்ப்புக்கு முன்பாகவே... பென்னிஹின் என்ற மிருகம் விழுந்தது உண்மையானால் இந்த மிருகங்களும் இன்னும் சில வருடங்களிலேயே வீழும்,என்பது நிச்சயம்..!//

 

அப்படி எதுவும் நடக்கவில்லையென்றால் என்ன செய்வீர்கள் என்றும் சொல்லிவிடுங்கள். சில வருடங்கள் கழித்து ஞாபகப்படுத்துகிறேன். ஏன் ஊழியக்காரர்கள் பாவத்தில் விழ வேண்டும் என்று இப்படி ஆசைப்படுகிறீர்கள்?

 

//சாதுவுக்கும் விசெவுக்கும் அப்படியென்ன உறவு...அந்த இரகசியத்தையும் கொஞ்சம் சொல்லிடுங்களேன்...//

 

இதில் என்ன இரகசியம் இருக்கு?? ஆண்டவரே இணைந்து ஊழியம் செய்ய வைத்திருக்கிறார்.

 

நோவாவை மகன் “பார்த்தது” பெரிய பாவமாக இருக்க முடியாது. வேறு ஏதாவது நடந்திருக்க வேண்டும் என்று சாது மட்டுமல்ல பலரும் நம்புகிறார்கள். தூதர்கள்-மனிதர்கள் கலப்பில் உருவானதுதான் Nephilim என்ற ஜாதி என்றும் சாது மட்டுமல்ல, பலரும் நம்புகிறார்கள்.

தூதர்கள் 50 அடி உயரமாக இருந்தாலும், மனிதர்களை சந்திக்க வருகையில், மனிதர்கள் போல் தான் வருகிறார்கள். மற்ற படி நீங்க சொல்வது போன்று மோசமாக அவர் எதுவும் பேசவில்லை. உங்க நோக்கம் அவர் சொல்லாததைச் சொல்லி அவர் பேரைக் கெடுப்பதுதான் என்று தெளிவாகத் தெரிகிறது. இப்படியெல்லாம் பேசி, உங்க தரத்தைத்தான் நீங்க தாழ்த்திக் கொள்கிறீர்கள்.

Very disappointing brother Chillsam.

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

golda wrote:
இப்படி பேசி அவங்க பெயரைக் கெடுக்க நினைக்கும் உங்கள் மீது கூட யாராவது வழக்குப் போடலாம்..

 என்ன மிரட்டலா... ஏஞ்சல் டிவி முதலாளிகளுக்கு வழக்கு போட மட்டும் காசு இருக்கிறதா..? அடுத்த வேளை சோத்துக்கே வழியில்லாமல் கஷ்டப்படறாங்கன்னு சொன்னீங்களே..?

  • 1. கண்காணிப்பை விரும்புகிறவன் நல்லவேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.

    2. ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.

    3. அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து,

    4. தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.

    5. ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?

    6. அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது.

    7. அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும்."(1.தீமோத்தேயு.3:1 7)

மேற்கண்ட வசனத்துக்கு அவங்க என்ன சபையா நடத்தறாங்கன்னு எதிர்கேள்வி கேட்டதா ஞாபகம்;அப்படியானால் எதற்கு சபைகளின் தசமபாகத்தை வாங்கறானுங்கன்னு கேட்டிருந்தேன்; முக்கியமானவற்றுக்கு பதிலளிக்காமல் பதுங்குவதே சிலருக்கு வா(வே)டிக்கையாகிவிட்டது;(மேசியாவின்) எதிரிகளுக்கு இதே வேலை போலும்;

நோவாவின் மகன் தன் தகப்பனை ஹோமொசெக்ஸ் பண்ணினான்.., 50 அடி நீளமுள்ள ஸாரி உயரமுள்ள தூதன் ஒரு சிறுபெண்ணை பலாத்காரம் செய்யமுடியும் என்பது போன்ற அதிமுக்கியமான வெளிப்பாடுகளைப் பெறுவதற்கு என் கண்களில் வெளிச்சம் இல்லையே நான் என்ன செய்வது இதுபோன்ற அதிமுக்கியமான மேட்டரையெல்லாம் டீல் பண்றதுக்கு சாமர்த்தியமும் அனுபவமும் வேண்டுமே, அது எனக்கில்லை என்பது உண்மைதான்..!

சாதுவுக்கும் விசெவுக்கும் அப்படியென்ன உறவு...அந்த இரகசியத்தையும் கொஞ்சம் சொல்லிடுங்களேன்... கூட்டுக் களவாணிப் பயலுகளுக்கு வக்காலத்து வாங்க சிலருக்கு சொல்லியா கொடுக்கணும்..?

சகலும் வெளியரங்கமும் நிர்வாணமுமாகும், தேவன் சகலத்தையும் நியாயத்தில் கொண்டு வந்து நிறுத்துவார், நியாயத்தீர்ப்புக்கு முன்பாகவே... பென்னிஹின் என்ற மிருகம் விழுந்தது உண்மையானால் இந்த மிருகங்களும் இன்னும் சில வருடங்களிலேயே வீழும்,என்பது நிச்சயம்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரேயன்ஸ்: //அப்போஸ்தலர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள், யூத பாரம்பரியத்தை விட்டு வந்தவர்கள்!! //

 

அவர்கள் யூத கிறிஸ்தவர்களாகத்தான் இருந்தார்கள்.எல்லா யூத பாரம்பர்யத்தையும் அவர்கள் விட்டது போல் வேதத்தில் இல்லை.இப்பக் கூட சிலர் சீட்டுப் போட்டுப் பார்க்கிறார்கள்!

 

//சீட்டு போட்டு அல்ல கிறிஸ்துவினால் அனுப்பப்படுபவனே அப்போஸ்தலன்!!//

 

கிறிஸ்துதான் மத்தியாவை அனுப்பினார்.

 

////சபையும் இருந்து கொண்டே இருக்கும் என்று எங்கே சொல்லப்பட்டிருக்கிறது?//

 

இது மாதிரி கேவலத்தை உங்களிடத்தில் தான் தெரிந்துக்கொள்ள வேண்டும்!!//

 

இதையெல்லாம் உங்களிடம் இருந்துதான் கற்றுக் கொள்கிறேன்.

12 அப்போதலர் தவிர வேறு அப்போஸ்தலர் வேதத்தில் இல்லை என்று சொல்வதை விட அபத்தம் உலகில் உண்டோ!

 

//அதாவது ஆட்டுக்குட்டியானவரின் (இயேசு கிறிஸ்துவின்) 12 அப்போஸ்தலர்கள் உங்களுக்கு ஒட்ட வைக்கப்பட்ட புற ஜாதிகளா?? இப்படியே போதியிங்கள், நிறைய கூட்டம் சேரும்!!//

 

சரி சபையைக் குறிக்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். ஒன்று பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலர்கள். இன்னொன்று புதிய ஏற்பாட்டு சபை.

 

//பிதற்றல் மேல் பிதற்றல்!!//

 

அதைத்தான் நீஙக சிறப்பா செய்றீங்க பிதற்றல் பெரேயன்ஸ்!

 

//மூப்பர் என்று ஒருவர் இருந்தால் ஒரு சில கட்டுக்கோப்புடன் சபையின் காரியங்கள் நடக்க தான்!!//

 

எல்லாம் எழுதியாச்சு...இக் காலத்தில் சபை சீர் பொருந்த யாரும் தேவையில்லை என்று சொல்லிவிட்டு ஏன் மூப்பர்கள் தேவை என்று பல்டி அடிக்கிறீங்க? எதையுமே honest ஆ வியாக்கியானம் செய்ய மாட்டீங்களா?

 

//ஏன், பெயரை இங்கே எழுதினால் உங்களால் என்ன தான் செய்ய முடியும்!!//

 

அந்த மாதிரி ஆட்கள் பக்கத்தில் போகாமல் இருக்கலாம் அல்லவா. அத்துடன் நீங்க உண்மைதான் சொல்றீங்களா, அடிச்சு விடறீங்களா என்பதும் தெரியும்!

 

//விட்டு வந்தவர் இப்ப எப்படி இருக்கிறாராம்!! விட்டவராக இருக்கிறாரா!!??//

 

அப்படித்தான் இருக்கிறார்.

 

//ஆலன் பால் கூட தான் ஏதோ ஒரு வீடியோ எடிட்டராக இருந்தாராம், இப்ப‌!!??//

 

ஆண்டவர் வேலையை விட்டு விட்டு முழு நேர ஊழியப்பணிக்கு வ்ரும்படி அழைக்க, இவர் வேலை பார்த்துக் கொண்டே செய்வோம் என்று நினைத்துக் கொண்டு வண்டியில் போகையில் விபத்து நேரிட்டு, இரண்டு மணிக்கட்டும் நொறுங்கிய பின்புதான், மனந்திரும்பி வேலையை விட்டிருக்கிறார்.

 

//சாது கூட தான் காடு மேடு எல்லாம் சுற்றிக்கொண்டிருந்தாராம், இப்ப‌!!??//

 

சோஃபாவில் சுகமாக இருக்கிறார்!

 

//உங்களால் ஒரு ஆளையும் காட்ட முடியாது!!//

 

காட்டினாலும் உங்களுக்கு கண்ணு தெரியாது.

 

//அதான் உங்க தோஸ்த் இவர்களை குறித்து எழுதியிருக்காரே, இதற்கு மேல் நாங்கள் என்ன எழுத‌!!//

 

நம்ம ரெண்டு பேர் தோஸ்த்தும் சரியில்லை!!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

வழக்குப் போடுவதா கஷ்டம் இந்தக் காலத்தில்?

 

இப்படி பேசி அவங்க பெயரைக் கெடுக்க நினைக்கும் உங்கள் மீது கூட யாராவது வழக்குப் போடலாம்.

 

//இந்நிலையில் சத்தியத்துக்காக நிற்கவேண்டிய நீங்கள் மோசடியாளர்களுக்கும் கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கும் ஆதரவாக நிற்பது சற்று அதிர்ச்சியாக இருக்கிறது.ஒன்று நீங்கள் ரொம்ப ரொம்ப அப்பாவியாக இருக்கவேண்டும் அல்லது நீங்களும் அவர்களில் ஒருவராக இருக்கவேண்டும்..!//

 

அல்லது அவர்கள் நல்ல தீர்க்கதரிசிகளாக இருக்க வேண்டும். நீங்கள் புரியாமல் தேவனுக்கு விரோதமாகவும் , அவ்ருடைய தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாகவும் பேசுபவராக இருக்க வேண்டும். இக்காலத்தில் அவர்கள் மூலமாக ஆண்டவர் பேசுவதையும், செய்வதையும், கேட்கவும் காணவும் கூடாதபடி உங்கள் செவிகளும்,கண்களும் இருளடைந்திருக்க வேண்டும்.அவர்களை ஆண்டவர் பயன்படுத்துவது உங்களுக்கு பொறாமையாக இருக்க வேண்டும்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

golda wrote:

அந்த காலத்தில் அவர் சம்பாதித்தது இலட்சங்களுக்கு சமம். அதையெல்லாம் விட்டு விட்டு, இப்ப ஒன்றும் இல்லாமல்தான் இருக்கிறார். அவர் பேங்க பாஸ்புக் வேண்டுமானால் உங்களிடம் காட்டச் சொல்லுவோம்!


 கோல்டா அவர்களே,

அளவுக்கு மீறி மோசடியாளர்களுக்கு வக்காலத்து வாங்காதீர்கள்; அவர்கள் (சாது மற்றும் விசெ..) மீது பாலியல் தொடர்பான வழக்குகள் முதலாக பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்லுகிறது; இவர்கள் இருவரும் திருமணமாகாதவர்கள் என்பதால் அவர்கள் "அறியாதவர்கள்" என்று அர்த்தமல்ல; நாகரீகம் கருதி சிலர் கண்டுங்காணாமல் இருப்பதனால் அவர்கள் யோக்கியராகிவிடமுடியாது; இன்றைக்கு ஒரு டிவி சானலை நடத்துவோர் ஓட்டாண்டிகளாக இருக்கிறார்கள் என்பது கொஞ்சமும் நம்பத்தகுந்தது அல்ல; மேலும் இவர்களுடைய நிகழ்ச்சிகளில் தவறாது இவர்களுடைய வங்கி கணக்கு எண் விளம்பரப்படுத்தப்படுகிறது; இன்னும் சர்வதேச வங்கிகளிலும் கணக்கு இருக்கிறது; இந்நிலையில் சத்தியத்துக்காக நிற்கவேண்டிய நீங்கள் மோசடியாளர்களுக்கும் கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கும் ஆதரவாக நிற்பது சற்று அதிர்ச்சியாக இருக்கிறது.ஒன்று நீங்கள் ரொம்ப ரொம்ப அப்பாவியாக இருக்கவேண்டும் அல்லது நீங்களும் அவர்களில் ஒருவராக இருக்கவேண்டும்..!

http://voiceofjesus.org.in/donation.php?reloaded=true

http://www.jesusministries.org/jmwebstore/donation.php



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

/ஒரு உதாரணம் வின்செண்ட் செல்வகுமார். அவர் artist ஆ இருந்து நல்லா சம்பாதித்துக் கொண்டிருந்தாராம். அப்பவே, மாதம் 20,000 வரையிலும் சம்பாதிப்பாராம். ஆண்டவர் அழைத்தவுடன் விட்டுவிட்டு வந்தார் அல்லவா?//

 

 

லட்சங்களுக்காக சில ஆயிரங்களை இழப்பதில் தவறேதுமில்லை.

--

 

அந்த காலத்தில் அவர் சம்பாதித்தது இலட்சங்களுக்கு சமம். அதையெல்லாம் விட்டு விட்டு, இப்ப ஒன்றும் இல்லாமல்தான் இருக்கிறார். அவர் பேங்க பாஸ்புக் வேண்டுமானால் உங்களிடம் காட்டச் சொல்லுவோம்!

 

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

/படிப்பு, குலம், கோத்திரம், அந்தஸ்து, பெருமை, வேலை, பணம், சொத்து, உறவினர் எல்லாம் விட்டு வந்தவர்கள் அநேகர் இருக்கத்தான் செய்கிறார்கள். //

 

காட்டுங்களேன்!!//

 

--

 

ஒரு உதாரணம் வின்செண்ட் செல்வகுமார். அவர் artist ஆ இருந்து நல்லா சம்பாதித்துக் கொண்டிருந்தாராம். அப்பவே, மாதம் 20,000 வரையிலும் சம்பாதிப்பாராம். ஆண்டவர் அழைத்தவுடன் விட்டுவிட்டு வந்தார் அல்லவா?

 

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரேயன்ஸ்: //ஆமா, சாது பேசும் போது பக்கத்தில் பய பக்தியுடன், நடுக்கத்துடனும் ஒருவர் "ஆமாஞ்சாமி" மட்டுமே போடுவாரே, அது என்ன நீங்களோ!!//

 

எப்படி, ஆவிக்குரிய கண்ணால் பார்த்தீர்களா?

 

//இவர்கள் மூலமாகவே தேவன் தன் வார்த்தைகளை வெளிப்படுத்தி முடித்துவிட்டார்!!

 

உங்கள் சோஃபா ஆட்கள் வந்து புதிதாக இப்பவும் இவர்களோடு பேசிக்கொண்டிருக்கிறார் தேவன் என்று ரீல் மன்னர்களாக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார்கள்!! //

 

காதேஸ் வனாந்திரத்தை அதிரப்பண்ணும் சத்தம் கொண்டவரை சைலண்ட் மோடில் போட்டு விட முடியுமா?

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரேயன்ஸ்: //ஒரு மணி நேரத்திற்கு என்று ரேட் ஃபிக்ஸ் பண்ணி ஊழியம் செய்யும் ஓநாய்கள்!! //

 

இப்படி யார் இருக்கிறார்கள்??



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

கிறிஸ்துவின் மீட்பின் செய்தியை அறிவிக்க தேவையில்லை அது முதல் நூற்றாண்டில் வாழ்ந்து ஊழியம் செய்த சீடர்களுக்கு மட்டுமேயானது என சொல்லிவருகின்றனர் சிலர். இதை குறித்து கடந்த ஞாயிறன்று மகாபலிபுரத்தில் உள்ள வேதாகம ஐக்கிய சங்க தரிசன முகாமில் சிந்தித்து கொண்டிருந்தபோது ஆண்டவர் சமாரிய ஸ்திரீயுடனான இயேசுவின் உரையாடலை நினைவுபடுத்தினார். 

அந்த நிகழ்வில் சமாரிய ஸ்திரீயிடம் இயேசு ஜீவ தண்ணீரை பற்றி விளக்கம் அளித்தார் அதை கேள்விப்பட்ட அந்த ஸ்திரி தனது குடத்தை வைத்துவிட்டு அப்படியே ஓடிப்போய் தன் ஊரில் உள்ளவர்களிடம் சொன்னாள். இயேசு சொல்ல சொன்னாரா, அவள் சொன்னது அவளது சொந்த initiative . அதை இயேசு தடுக்கவும் இல்லை. தான் கண்ட ரட்சிப்பை தனது அயலகத்தாரிடம் சொல்வது வீண் என்கின்றனர். இது கடைந்தெடுத்த சுய நலம் தானேயென்றி வேறென்ன‌?

வேத ஆராய்ச்சி செய்கிறேன் பேர்வழி என்பவர்கள் யாரையும் வாருங்கள் என அழைக்கமாட்டார்களா? அப்படி அழைப்போம் என்றால் தாங்கள் ஆராயும் வேதத்தில் ஏதோ ஒன்று விஷேச‌மாக இருப்பதால் தானே. அந்த விஷேசம் என்ன? இயேசுவின் மீட்பு தானே, அதைத்தானே மிஷனரிகள் வட இந்திய மா நிலங்களில் உயிரையும் துச்சமாக நினைத்து அறிவிக்கிறார்கள், இது உங்களுக்கு தவறாக தெரிகிறதா?

ஒருவேளை நாங்கள் யாரையும் அழைப்பதில்லை என்பவர்கள் எதற்கய்யா ஆராய்ச்சி செய்யவேண்டும், கரண்ட் பில் செலவாவது தான் மிச்சம். நாலு பேர் கூடி வேதத்தை ஆராய்ந்து விட்டு கலைந்து செல்வது தான் நோக்கம் என்றால்.. அது என்ன ராஜேஷ் குமார் நாவலா? இல்லை க்ரூப் ஸ்டடி செய்யும் கடினமான பாடமா? இப்படி முதல் நூற்றாண்டில் இருந்து சீடர்கள் க்ரூப் ஸ்டடி மட்டும் செய்திருந்தால் ஒரேயடியாக கிறிஸ்துவின் செய்தி ஆசியா மைனரிலேயே முடங்கியிருக்கும். முன்னொருமுறை பெரியன்ஸ்.. சீடர்கள் போகாத இடங்களில் வார்த்தை சென்றது என்றார், வார்த்தை எப்படி ஐயா சென்றது கால் முளைத்தா சென்றது. வார்த்தையையும் மிஷனரிகள் தானே கொண்டு சென்றனர்.

இயேசுவின் மீட்பின் செய்தியை (அவரை தொழத்தக்கவராக ஏற்றுக்கொள்ளாவது வேறு விஷயம்) முக்கியமாக நினைக்காததால் தான் அதை அறிவிக்கும் தாகம் இல்லை, இருக்கிறவர்களையும் நக்கல் அடிக்கிறார்கள்.மிஷனரிகளின் தியாகத்தை அற்பமாக நினைப்பது அவர்கள் சிந்திய ரத்தத்தையும் வியர்வையையும் மிதிப்பதற்கு சமம்.

நான் கலந்து கொண்ட தரிசன முகாமில் மதிய வேளை செய்தியில் பேசியவர் நான காலையில் சிந்தித்துகொண்டிருந்த சமாரிய ஸ்திரீயின் அனுபவத்தை பேசியதை கண்டு ஆச்சரியத்தில் திகைத்துப்போனேன், தேவன் மறுபடியும் அதை நினைவுபடுத்தியதாகவே எனக்கு தோன்றியது. இதுக்கும் ஏதாவது நக்கலடிப்பார்கள்...ம்ம்ம். நடக்கட்டும்



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

 

சம்பந்தமில்லாமல் சிரிப்பவர்களுக்கு:

 

பிரசங்கி 2:2 நகைப்பைக்குறித்து, அது பைத்தியம் என்றும் சந்தோஷத்தைக்குறித்து, அது என்ன செய்யும்? என்றும் சொன்னேன்.

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரேயன்ஸ்: //கிறிஸ்துவிற்காக எல்லாவற்றையும் குப்பையாக எண்ணுகிறார் என்று, ஆனால் எங்களை நேரடியாக வந்து ஊழியம் செய்ய சொன்னார் கிறிஸ்து என்கிற இன்றையவர்கள் அப்படியா எல்லாவற்றையும் விட்டு வர தையாரா?//

 

படிப்பு, குலம், கோத்திரம், அந்தஸ்து, பெருமை, வேலை, பணம், சொத்து, உறவினர் எல்லாம் விட்டு வந்தவர்கள் அநேகர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

 

//ஒரே வேதத்தை கைகளில் வைத்திருக்கும் சிலருக்கு புரியவைக்கிறார், அநேகருக்கு அது என்னவென்று புரிகிறதில்லை!!//

 

நிஜமாகவே எனக்குப் புரியவில்லை. உங்க கையில் இருக்கும் வேதத்தை வைத்து நீங்க என்னதான் செய்கிறீர்கள்? அது எந்த வகையில் உங்களுக்கு, உங்கள் வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருக்கிறது?

 

//ஆமா, பரலோகத்தில் பிதாவிடம் கேட்டு தான் ஆள் எடுத்தார்!!//

 

You are 100% correct. அதைத்தான் இயேசு செய்தார்.

 

//தெரிந்துக்கொள்வது என்றால் என்னவென்று தெரியுமா!! ஏதோ ஒரு புகைப்படத்தை காட்டி இவனை தெரியுமா என்பதிலிருந்து கணவன் மனைவியின் தெரிந்துக்கொள்ளுதல் வரை!!//

 

தமிழ் அருமையான மொழிதான். ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டுதான். இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க? நான் என்ன அர்த்தத்தில் சொல்கிறேன் என்று உங்களுக்கு புரியுதா இல்லையா?

//நிறைவேற்றுவதும் நிறைவேற்றாததும் "நம்" கையில் இருக்கிறது என்றால் தேவன் நகம் கடித்துக்கொண்டு, அடுத்து என்ன நடக்க போகுது என்று உட்கார்ந்திருப்பார் என்கிறீர்களா!!??//

 

தேவனுக்கு உணர்ச்சிகள் உண்டு. ஆனால் நம்மைப் போல அசட்டு sentiment எல்லாம் அவருக்கு கிடையாது என்பதால் அவர் நகத்தை எல்லாம் கடிக்க மாட்டார். நாம் நிறைவேற்றாவிட்டால், அது நிறைவேறாத லிஸ்ட்டில் சேர்ந்து கொள்ளும். அவ்வளவுதான்!

 

ஆண்டவர் சாதுவை ஏஞ்சல் டிவி ஊழியம் செய்ய அழைத்தபோது, இவருக்கு நேபாள், திபெத்து ஊழியத்தை விட மனமில்லாமல் தயங்கிக் கொண்டே இருந்தாராம். அப்படி இருக்கையில் , நீ இதை செய்யவில்லையென்றால், இந்த ஊழியம் வேறு யார் கையிலாவது கொடுக்கப்படும் என்று ஒருமுறை கடிந்து கொள்ளப்பட்ட பின் தான், முழுமையாக இந்த ஊழியத்திற்கு தன்னை ஒப்புக் கொடுத்தாராம்.

 

எனவே செய்ய வேண்டியதை நீங்க செய்யாமல் விட்டாலும் ஆண்டவருக்கு ஒரு நஷ்டமும் இல்லை.

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரெயன்ஸ்: //பவுலுக்கு பிறகு யாரை தான் அவர் "வந்து" அழைத்தார்!!//

 

இது என்னங்க லாஜிக்? ஏன் பவுலோட அழைப்பதை நிப்பாட்டணும்?

 

 //12 பேர் (யூதாஸிற்கு பதில் பவுல்) மாத்திரமே கிறிஸ்துவினால் நேரடியாக அப்போஸ்தலர்களாக அழைக்கப்பட்டார்கள்!!//

 

யுதாஸுக்குப் பதில் பவுல் கிடையாது. மத்தியா. மொழிபெயர்ப்பில் இதெல்லாமா மாறும்?

 

அப் 1

20. சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது.

 

21. ஆதலால், யோவான் ஞானஸ்நானங்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும்,

 

22. அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனேகூட இருந்த மனுஷர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான்.

 

23. அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பும், மத்தியாவும் ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி:

 

24. எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்குபெறுவதற்காக,

 

25. இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;

 

26. பின்பு, அவர்களைக் குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//// 12 பேர் வேலையை விட்டு தான் வந்தார்கள் இல்லை என்று சொல்லவில்லை!! அவை ஒரு காலத்திற்கு மட்டுமே!!//

 

???. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்தானே.//

 

நான் எழுதியது 12 பேரை குறித்து!!

 

--

 

புரியாத மாதிரியே பேசுவதில் உங்களை யாரும் மிஞ்ச முடியாது பெரேயன்ஸ் அவர்களே! நான் இயேசு கிறிஸ்துவைப் பற்றிதான் பேசுகிறேன். அவர் அன்று வேலையை விட்டு விட்டு தன் பின்னே வரும்படி மனிதர்களை அழைத்தார் என்றால், ஏன் இன்றும் அழைக்க மாட்டார்?



__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard