Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவின் இரண்டாம் வருகை தாமதம் ஏன்... Tamil Christian Global Network தளத்தில் ஒரு விவாதம்...


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
RE: இயேசுவின் இரண்டாம் வருகை தாமதம் ஏன்... Tamil Christian Global Network தளத்தில் ஒரு விவாதம்...
Permalink  
 


chillsam wrote:
அன்பான சகோதரரே, மிக எளிமையாக துவங்கிய உங்கள் பயணத்தில் மிக விரைவில் நூறு பதிவுகளைக் கடந்திருக்கிறீர்கள்;நீங்கள் ஒருசில வரிகளில் எழுதியதில்லை;அனைத்துமே முழுமையான கட்டுரையைப் போல இருந்தது;உங்களது வரிகள் உங்களிடமிருக்கக்கூடிய ஆழ்ந்த வேத அறிவை பிரதிபலித்தது;இன்னும் பல நூறு கட்டுரைகளைப் படைக்க‌ வாழ்த்துக்கள்..!

 நன்றி சகோதரரே...!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
இயேசுவின் இரண்டாம் வருகை தாமதம் ஏன்... Tamil Christian Global Network தளத்தில் ஒரு விவாதம்...
Permalink  
 


spetersamuel wrote:
chillsam wrote:
அன்பான சகோதரரே, மிக எளிமையாக துவங்கிய உங்கள் பயணத்தில் மிக விரைவில் நூறு பதிவுகளைக் கடந்திருக்கிறீர்கள்;நீங்கள் ஒருசில வரிகளில் எழுதியதில்லை;அனைத்துமே முழுமையான கட்டுரையைப் போல இருந்தது;உங்களது வரிகள் உங்களிடமிருக்கக்கூடிய ஆழ்ந்த வேத அறிவை பிரதிபலித்தது;இன்னும் பல நூறு கட்டுரைகளைப் படைக்க‌ வாழ்த்துக்கள்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
RE: இயேசுவின் இரண்டாம் வருகை தாமதம் ஏன்... Tamil Christian Global Network தளத்தில் ஒரு விவாதம்...
Permalink  
 


chillsam wrote:

எனவே உங்கள் கருத்துக்களை சிந்தாமல் சிதறாமல் சென்று சேர்க்கவேண்டுமானால் ஒரு கட்டுரைக்கு (Blog Style) கீழே பின்னூட்டமிடுவதைத் தவிர்த்து நம்முடைய தளத்தைப் போன்ற கலந்துரையாடல் தளங்களில் (Forum style) உங்கள் படைப்புகளை சேர்த்தால் அதன் வீச்சு அதிகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்; வாழ்த்துக்கள்.


 நன்றி சகோதரரே...!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நண்பரே, நீங்கள் தொடுத்துள்ள தளமானது (மேசியாவின்) எதிரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது;அவர்களுக்கு நம்மோடு நேரடியாக மோதுவதற்கு தைரியமில்லாததால் இதுபோன்ற தளங்களில் கூட்டணி அமைத்து வேலைசெய்கிறார்கள்;என் மீதே புகார் செய்து அந்த தளத்திலிருந்து எனது ஐபி எண் முதலாக நீக்கி வைத்திருந்தார்கள்;ஆனாலும் அந்த தளமானது அதிக பார்வையாளர்களைக் கொண்டதல்ல என்பதால் நான் கவலைப்படவில்லை.

இதுபோன்ற‌ மாற்று தளங்களில் நம்முடைய கருத்தை சுதந்தரமாக எழுதமுடியாத காரணத்தினாலேயே இந்த யௌவன ஜனம் கலந்துரையாடல் தளத்தை உருவாக்கினேன்; வெறும் ஐயாயிரம் வாசகர்களுடன் துவங்கிய நமது பயணமானது இன்று ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒரு இலட்சம் வாசகர்கள் கவனித்து செல்லும் தளமாக நிலைபெற்றுள்ளது;

எனவே உங்கள் கருத்துக்களை சிந்தாமல் சிதறாமல் சென்று சேர்க்கவேண்டுமானால் ஒரு கட்டுரைக்கு (Blog Style) கீழே பின்னூட்டமிடுவதைத் தவிர்த்து நம்முடைய தளத்தைப் போன்ற கலந்துரையாடல் தளங்களில் (Forum style) உங்கள் படைப்புகளை சேர்த்தால் அதன் வீச்சு அதிகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்; வாழ்த்துக்கள்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
இயேசுவின் இரண்டாம் வருகை தாமதம் ஏன்... Tamil Christian Global Network தளத்தில் ஒரு விவாதம்...
Permalink  
 


Kindly go through the link: 

http://www.tamilchristiannet.com/forum/topics/5221505:Topic:14670?xg_source=msg_com_forum&id=5221505%3ATopic%3A14670&page=3#comments



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
RE: இயேசுவின் இரண்டாம் வருகை தாமதம் ஏன்... Tamil Christian Global Network தளத்தில் ஒரு விவாதம்...
Permalink  
 


нєρнzιвαнPermalink Reply by нєρнzιвαн 2 hours ago

OK...யார் உங்களுக்குச் , சொன்னது இயேசு கிறிஸ்து வந்து விட்டார் என்று ?\

Reply by Peter Samuel S. 2 hours ago

Delete

நண்பரே தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா, தாங்கள் விரும்பினால் நேரடியான பதில் மட்டும் கூறுங்கள்: முடிந்தால் ஆம் அல்லது அல்ல என்று கூற முடியுமா...?

1) இயேசுவை தெய்வமாக தொழலாமா?

2) இயேசு மாமிசத்தில் உயிர்த்தெழுந்தாரா? (அவர் பூமியில் வாழ்ந்த காயப்பட்ட அதே சரீரத்தோடு....இல்லையென்றால் அந்த சரீரம் என்ன ஆனதென்று விளக்கலாம்)

3) இயேசு மிகாவேல் தூதனாக இருந்தவரா

4) மூன்றாம் கேள்விக்கு இல்லை என்பது உங்கள் பதிலானால் வேறு ஏதாவது சிருஷ்டிக்கப்பட்டவரா?

5) நரகம் என்பது என்ன? அக்கினி கடல் என்பது என்ன?

6) அக்கினி கடலில் யார் யார் பங்கடைவார்கள்?

7) பிசாசிற்கு மட்டுமே இறுதித் தண்டனையா?

8) உலகில் நடக்கும் தீமைக்கெல்லாம் யார் காரணம்: பிசாசா, தேவனா

இன்னும் சில கேள்விகள் உண்டு, இதற்கு உங்கள் பதிலைக் கண்டபின் கேட்கிறேன். தங்களோடு எனக்கு தனிப்பட்ட எந்த விரோதமும் வைராக்கியமும் இல்லை நண்பரே... 

SIMON RAJ MENONPermalink Reply by SIMON RAJ MENON 38 minutes ago

1.      ஆம்!!!

2.      ஆவியில் உயிப்பிக்கப்பட்டார். ஏனென்றால் இரத்தமும் மாம்சமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதிலையே என்று பைபிள் சொல்கிறது. அப்படியிருக்க கிறிஸ்து மட்டும் எப்படி மாம்ச நிலையில் பரலோகம் சென்றிருக்க முடியும்.

3.      இயேசு தேவனின் முதற்பேறான குமாரன் என்றல்லவா பைபிள் சொல்கிறது!

4.      தூதர்கள் மூன்று பகுதிகளாக இருக்கின்றனர்! அதாவது கேருபீன்கள், சேராபீன்கள், மற்றும் பிரதான தூதர்வெளிப்படுத்தலில் பார்க்கும் போது பிரதான தூதன் தான், பூமிக்கு முடிவைக் கொண்டு வரப்போவதாகவும் இந்தச் சாத்தானிய ஒழுங்குமுறையைத் துடைத்தழிக்கப்போவதாகவும் பைபிள் சொல்கிறது. அதே பைபிள் தான் பிரதான தூதனின் பெயர் மிகாவேல் என்றும் குறிப்பிடுகின்றது. இது ஏனென்றால்பூமிக்கு முடிவைக் கொண்டு வரப்போவது இயேசு என்று நமக்குத் தெரியும். அப்படியென்றால் அவர்தான் பிரதான தூதனின் இடத்தில் இருக்கின்றார். அவர் வகிக்கும் முக்கிய ஸ்தானத்தையே மிகாவேல்என்று சொல்லப்படுகின்றது. உயிர்தெழுந்த இயேசுவுக்கு சகலத்தின் மேலும், துரைத்தனங்கள் மேலும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருகின்றதே. ஆகவே, மற்று ஆவி சிருஷ்டிகளான தூதர்கள் மேலும் இவருக்கு அதிகாரக் கொடுக்கப்பட்டதினாலேயே இவர் பிரதான தூதனாக வருகின்றார். அதைத் தவிர இவர் ஒரு தூதன் அல்லர்!!!

5.      நரகம் மற்றும் அக்கினிக் கடல் என்பது வாதனையையே குறிப்பிடுகின்றது. பைபிளின் மூலப் பதிப்பில் பார்க்கும் போது, அக்கினிக் கடல் என்ற இடத்தில் எபிரெய மற்றும் கிரேக்க மொழியில் கெஹென்னா என்று எழுதப்பட்டிருக்கின்றது. கெஹென்னா என்பது பூர்வக் கால எருசலேம் ஆலயத்தில் வெளியே குப்பைகளைக் கொட்டுவதற்கும் பலிகளின் மீதியை எரிக்கப் பயன்படுத்தப்பட்ட ஓர் பெரியக் குழி.அதில் எப்போதும் நெருப்பு இருந்துகொண்டேதான் இருக்கும்; கந்தகத்தைக் கொட்டுவர். ஓரு காகிதத்தைப் போட்டால் உள்ளே போய்ச்சேரும் முன்னே, அஃது இல்லாமற் போய்விடும். ஆகவே, அந்தப்படியே பாவிகளும் அநீதிமான்களும் எரிகிற அக்கினிக் கடலிலே தள்ளப்படுவார்கள் என்று வேதம் போதிக்கின்றது. அஃது ஒரு பொருள் முற்றிலுமாக அழிக்கப்படுவதைக் குறிக்கின்றது. தேவன் அன்பாகவே இருக்கின்றார்; அவர் யாரையும் அக்கினியில் போட்டு வாதிப்பதில்லை. தேவன் தீயோர் மேலும் நல்லோர் மேலும் பாரபட்சமின்றி மழையை வருஷிக்கப் பண்ணுகிறாரே!!!

6.      இல்லை!! அவனோடு சேர்ந்த அனைவருக்குமே.

7.      யாக்கோபு 1:13 மற்றும் யோபு 34:10-12-ஐ பாருங்கள். தேவன் காரியங்களை அனுமதிக்கின்றாரே தவிர அவர் காரணம் அல்ல. அனைத்து காரியங்களுக்கும் பிசாசை மட்டுமே காரணம் காட்ட முடியாது! தேவன் தெளிந்த புத்தியைக் கொடுத்திருக்கின்றாரே!!!

SIMON RAJ MENONPermalink Reply by SIMON RAJ MENON 20 minutes ago



பைபிளில் உரிமைக்காரரான இயேசு வருவதற்கு ஏழு காலங்கள் கடந்து போக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அந்தக் காலம் எப்போது ஆரம்பமானது என்றும் குறிக்கப்பட்டிருக்கின்றது. அந்தக் காலமானது 2520 வருடங்களை உட்படுத்துகின்றது. இந்தக் ஏழு காலங்கள் பொ.ச.மு 607-இல் ஆரம்பித்து பொ.ச 1914-இல் முடிவடைந்தது. உங்கள் பார்வைக்கு:

1.      1.   தானியேல் 4:10-16

2.      2.   எசேக்கியேல் 17:22-24 ; 31:2-5

3.      3.   வெளி 12:6,14

4.      4.   எண்ணாகமம் 14:34

5.      5.   சங் 2:1-6

6.      6.   தானியேல் 7:13,14

வேதத்தை உற்று நோக்கி தெளிவடையுங்கள், சகோதரி!

Peter Samuel S.Permalink Reply by Peter Samuel S. 7 minutes ago

Delete

1) நல்லது

2) அப்படியானால் மாமிச சரீரம் என்னவாயிற்று? (நேரடியான விளக்கம் please....)

3) ஒரே பேறான குமாரன் என்றால் என்ன

அ) என்னைக் கண்டவன் பிதாவைக் காண்கிறான்...

ஆ) பிதாவும் நானும் ஒன்றாய் இருக்கிறோம்

இ) அந்த வார்த்தை தேவனாயிருந்தது

ஈ) தேவனுடைய தற்சுரூபமும்

இவைகளை மூல பாஷையை அழைக்காமல் விளக்கமுடியுமா? (சாமானியருக்கு புரியும்வகையில்)

4) பிரதான தூதனின் சத்தம் என்றுதான் வேதம் சொல்கிறது... பிரதான தூதனே வருவார் என்று சொல்லவில்லை...

5) நித்திய காலமாய் வாதிக்கப்படுவார்கள் என்று வேதத்தில் எங்காவது வாசித்த ஞாபகம் உள்ளதா..?

6) நல்லது...

7) நல்லது...

8) ஆவி, ஆத்துமா, சரீரம் ... சிறுகுறிப்பு please....



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

Peter Samuel wrote:

//கிறிஸ்துவின் இரண்டாவது வருகை குறிப்பிட்ட காலத்தில் அதாவது 1914, இளவேனிற் காலத்தில் நடந்தேறி விட்டது//

 

Simon Raj Menon யெகோவாவின் சாட்சிகளின் உபதேசத்தை கொண்டுவருகிறார். யெகோவாவின் சாட்சிகள் இயேசுவை தொழத்தக்க தெய்வமல்ல என்பவர்கள். நான் ஏற்கனவே மேற்பகுதியில் குறிப்பிட்டபடி (இயேசுவை தொழக்கூடாது என்பவர்கள்.

கிறிஸ்துவின் தெய்வத்தன்மையை மறுதலிப்பவர்கள் கிறிஸ்தவர்களே அல்ல. அவர்கள் வஞ்சிக்கப் பட்டதும் அல்லாமல் மற்றவர்களையும் குறிப்பாய் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கிறார்கள். பொய்யையும் உண்மையையும் கலந்து இனிமையாய் கூறினாலும் தயவு செய்து யாரும் அவர்களை நம்ப வேண்டாம். உண்மையாய் இயேசு கிறிஸ்துவின் இரத்ததின் மூலம் மீட்டுக்கொள்ள்ப் பட்டவர்கள் தயவு செய்து இவர்கள் சொல்லும் எதையும் காதில் போட்டுக்கொள்ள வேண்டாம். இவர்கள் உலகில் எப்படி வாழ்ந்தாலும் எவ்வளவு பெரிய பாவியாய் வாழ்ந்தாலும் பரவாயில்லை மனம் திரும்புதலின் அவசியமே இல்லை அனைவருக்கும் மீட்பு உண்டு எனக் கூறி கிறிஸ்துவின் இரத்தத்தை காலின்கீழ் மிதிக்கும் கூட்டத்தார். அப்போஸ்தலர்களின் பலியை அர்ப்பமாய் கூறுபவர்கள். பவுல் முதலான மிஷனரி இரத்தசாட்சிகளின் தியாகத்தை எள்ளி நகையாடுபவர்கள்) இவர்கள் இயேசுவை மிகாவேல் தூதனின் அவதாரம் என்றும் இயேசுவின் மாமிச உயிர்தெழுதல் நடக்காத ஒன்று என்றும் கூறுபவர்கள். இவர்கள் கிறிஸ்தவர்களே அல்ல...!

தயவு செய்து இவர்கள் என்னதான் இனிமையாக எதைக்கூறினாலும் இயேசுவை தெய்வமாக தொழும் யாரும் இவர்களுக்கு செவிகொடுக்கவேண்டாம் என என் இயேசுவை தொழும் என் சகோதரரிடம் வேண்டிக்கொள்கிறேன். 

 

SIMON RAJ MENONPermalink Reply by SIMON RAJ MENON 2 hours ago

இயேசுவை மறுதலிப்பவன் அந்திக்கிறிஸ்து என்று பைபிள் குறிப்பிடுகிறது. இயேசுவை அல்லாமல் யார் நமக்கு இரட்சிப்பைக் கொண்டு வரக்கூடும்? தயவு செய்து இயேசு என்ற ஒருவர் இல்லை என்பதைக் கூறுவதாகத் தாங்கள் கூறுவதை நிறுத்துங்கள். இயேசு அல்லாமல் ஒருவனும் பரலோக ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கவே முடியாது. தயவு செய்து யோவான் 17:3-ஐ பாருங்கள். கிறிஸ்துவை அல்லாமல் ஒருவனும் பிதாவைக் காணமுடியாது. நாம் செய்யும் ஜெபங்களும் இயேசுவின் பெயராலேயே முடிக்கப்பட்டு அவருக்கு மகிமையைச் சேர்க்கிறோம். யெகோவாவின் சாட்சிகளின் போதனைகளை நான் போதிக்கவில்லை; பைபிளின் போதனைகளையே போதிக்கின்றேன். இயேசுவை அல்லாமல் யாருடைய நாமத்தினால் முழுக்காட்டுதல் பெற்றோம்? பைபிளின் மூலக்கருத்தைக் கண்டவுடன் பதிலளியுங்கள் போதகரே... தயவு செய்து இயேசு இல்லை என்று மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று நீங்கள் சொல்லாதீர்கள்; நானும் சொல்லவில்லை!!!

SIMON RAJ MENONPermalink Reply by SIMON RAJ MENON 2 hours ago

பைபிளில் உள்ள பல காரியங்கள் சொல்லர்த்தமாகவே கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இயேசு சொல்லர்த்தமாகத்தான் தாம் சாகும் முன்பு இந்த ஆலயத்தை உடைத்து மூன்றே நாளில் திரும்ப கட்டுவதாகச் சொன்னார். அது உண்மையா? அவர் தம்முடைய ஆவிக்குரிய ஆலயமாகிய சரீரத்தைக் குறித்துப் பேசினார். அதே போல் மூன்றாவது நாள் உயிரோடு எழுந்தார். அவ்வாறே பைபிளின் பல பொருள்கள் சுய தோற்றத்தைக் கொண்டுவராமல், மறைமுகமான கருத்தைக் கொண்டு வருகின்றன. தயவு செய்து பைபிளில் பூமி என்றால் என்ன, ஆகாயம் மற்றும் வானம் என்றால் என்ன, நெருப்பு என்றால் என்ன, பூதங்கள் என்றால் என்ன என்பதைக் கண்டு கொள்ளுங்கள். உதாரணத்திற்கு தானியேல் புத்தகத்தில் அந்த ராஜாவின் நாட்களில் அந்த மரம் வெட்டப்பட்டு, சில காலங்களுக்கு விலங்கிடப்பட்டிருந்து என்று வாசிகின்றோம். உன்மையிலேயே மரம் விலங்கிடப்பட்டிருந்ததா? இல்லை... அந்த மரம் ராஜாவின் அரசாட்சியைக் குறித்தது; அந்த ராஜா குறிப்பிட்ட காலத்திற்கு தன் ராஜ்யத்தை இழந்து பனியிலும் வெயிலிலும் மிருகத்தைப் போன்று மேய்ந்து கொண்டிருந்தார்.. தயவு செய்து வேதத்தின் உட்பார்வையோடு பைபிளை வாசியுங்கள்...!!!! நன்றி.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

திரு.ஆபிரகாம் தேவசகாயம் அவர்களும் திரு. குரு அவர்களும் இயேசுகிறிஸ்துவின் தெய்வத்தன்மையை மறுதலிக்கும் கூட்டத்தினர். இயேசுவை தொழக்கூடாது என்பவர்கள்.

கிறிஸ்துவின் தெய்வத்தன்மையை மறுதலிப்பவர்கள் கிறிஸ்தவர்களே அல்ல. அவர்கள் வஞ்சிக்கப் பட்டதும் அல்லாமல் மற்றவர்களையும் குறிப்பாய் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கிறார்கள். பொய்யையும் உண்மையையும் கலந்து இனிமையாய் கூறினாலும் தயவு செய்து யாரும் அவர்களை நம்ப வேண்டாம். உண்மையாய் இயேசு கிறிஸ்துவின் இரத்ததின் மூலம் மீட்டுக்கொள்ள்ப் பட்டவர்கள் தயவு செய்து இவர்கள் சொல்லும் எதையும் காதில் போட்டுக்கொள்ள வேண்டாம்.

இவர்கள் உலகில் எப்படி வாழ்ந்தாலும் எவ்வளவு பெரிய பாவியாய் வாழ்ந்தாலும் பரவாயில்லை மனம் திரும்புதலின் அவசியமே இல்லை அனைவருக்கும் மீட்பு உண்டு எனக் கூறி கிறிஸ்துவின் இரத்தத்தை காலின்கீழ் மிதிக்கும் கூட்டத்தார். அப்போஸ்தலர்களின் பலியை அர்ப்பமாய் கூறுபவர்கள். பவுல் முதலான மிஷனரி இரத்தசாட்சிகளின் தியாகத்தை எள்ளி நகையாடுபவர்கள்.

அனைவருக்கும் இரட்சிப்பு என்பவர்கள் ஓதும் வேதம் சாத்தான் ஓதும் வேதமாகும். அனைவருக்கும் இரட்சிப்பு என்றால் இவர்கள் எதற்காக இவர்கள் வேதம் ஓதவேண்டும் ஜனங்கள் வாழ்கிறபடி வாழ்ந்துவிட்டு போகட்டுமே என இவர்கள் இருக்கவேண்டியதுதானே. இதிலிருந்தே தெரிகிறதல்லவா சாத்தான் இவர்களை வஞ்சிப்பதற்காகவே அபிஷேகித்திருக்கிறான் என்பது.!!!

தயவு செய்து கிறிஸ்தவர்கள் யாரும் இவர்களோடு விவாதிக்கவோ அல்லது வாழ்த்து சொல்லவோ முயற்சிக்காதீர்கள்.

கிறிஸ்தவர்களில் தவறு செய்யும் போதகர்கள் உண்டு. கள்ள தீர்க்கதரிசிகள் உண்டு. அவர்கள் தங்கள் வயிற்றுக்காக தவறு செய்பவர்கள். ஆனால் அவர்கள் இயேசுவே மெய்யான தெய்வம் என போதிப்பதால் அவர்களை பின்பற்றுகிறவர்கள் இயேசுவே மெய் தெய்வம் அவரே இரட்சகர் எல்லா கனத்துக்கும் பாத்திரர் என விசுவாசிப்பதால் ஆண்டவரை விட்டு வழிதவற சாத்தியமில்லை. வயிற்றுக்காக திருடுபவனைக் குறித்து தெரிந்திருப்பது நல்லதுதான்.

ஆனால் அதை காரணம் காட்டி யாரும் சாத்தானுடைய வஞ்சனையில் அகப்படாதிருக்க உண்மை கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒருமனப்பட்டு இப்படிப்பட்ட வஞ்சகர்களை அடையாளம் காட்டுவோம்.

 

(தொடரும்)

தேவனுடைய வார்த்தையின் படி , தேவனுடைய வருகையின் போது , பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்.  அப்படியானால் , பூமி இப்போதும் , இருக்கிறதே Bro..... நீங்கள் இதை சிந்திக்கவில்லையா ??????

нєρнzιвαнPermalink Reply by нєρнzιвαн 8 hours ago

ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்....மத்தேயு 24 : 4.

G.JeevaPermalink Reply by G.Jeeva 8 hours ago

Simeon, if the second coming is over then what about the anti-christ and that stupid devil is not reveled plainly yet.


Peter Samuel S.
Permalink Reply by Peter Samuel S. 4 hours ago



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 


data-mce-href="http://www.tamilchristiannet.com/xn/detail/5221505:Comment:20012" style='display:inline-block;background-attachment:initial;background-origin: initial; background-clip: initial;background-color:initial;background-repeat:no-repeat; background-position-x:0px;background-position-y:0px' alt=G.Jeeva class=" photo left" data-mce-src="http://api.ning.com/files/TXyx81cTrRTBldsWBjnHs5p6qdv8pzLxXntX5dROPTpnaQaVVUiy*e4CqT1Dw6xv3AoujCMkVgnbONjlxs2rWsgfSKq0ebF3/476127989.jpeg?xgip=450%3A439%3A1340%3A1340%3B%3B&width=48&height=48&crop=1%3A1" data-mce-style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: -58px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; vertical-align: baseline; background-image: initial; background-attachment: initial; background-origin: initial; background-clip: initial; background-color: transparent; font-size: 13px; float: left; max-width: 644px; position: relative; height: auto; padding: 0px;" v:shapes="_x0000_i1025">
Permalink Reply by G.Jeeva yesterday

he is moreeeeee patience with us in order each and everybody have to be saved and his will is nobody should be left

SIMON RAJ MENONPermalink Reply by SIMON RAJ MENON 10 hours ago

 

கிறிஸ்துவின் இரண்டாவது வருகை குறிப்பிட்ட காலத்தில் அதாவது 1914, இளவேனிற் காலத்தில் நடந்தேறி விட்டது. இஃது அவர் பூமியில் இருக்கும் போது தம் வருகையின் அடையாளத்தைத் தமது சீஷர்களோடு சொன்னதோடு ஒத்துப் போகிறது. இயேசு தம்முடைய வருகையின் ஆரம்பத்தில் அதாவது கடைசி நாள்களின் ஆரம்பத்தில் பூமியில் போர் உண்டாகும் என்று சொன்னார். அந்தக் காட்சி 1914-இல் உலகப் போராக மூண்டது. ஆகவே, அந்த வருகையில் பரிசுத்தவான்களாகிய 1,44,000 பேரில் பெரும் பகுதியினர் பரலோகத்திற்குச் சென்று விட்டனர். மீதியானோர் கிறிஸ்துவின் நண்பர்களாக இந்தப் பூமியில் தங்களுடைய பூமிக்குரிய வாழ்க்கையை முடிப்பதற்குக் காத்திருக்கின்றனர். ஆகவே, இன்றைய நாள்மட்டும் அவருடைய வருகைக்காகக் காத்திருப்பது பிரயோஜனமில்லை. நாமெல்லாரும் இந்தப் பூமியில் கிறிஸ்துவின் அரசாட்சியில் வாழப்போகிறோம். இதைத்தான் பைபிள் நமக்குக் கற்பிக்கிறது. சங்கீதம் 37:9-11, 29

SIMON RAJ MENONPermalink Reply by SIMON RAJ MENON 10 hours ago

 

கிறிஸ்துவைத் தவிர ஒருவனும் பரலோகத்திற்கு ஏறி இறங்க முடியாது. அத்தனையும் சுத்த பொய். ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள்!!! நம்பாதீர்கள்!

нєρнzιвαнPermalink Reply by нєρнzιвαн 8 hours ago

@ Bro...Simon Raj Menon ....       

 

கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்.
But the day of the Lord will come as a thief in the night; in the which the heavens shall pass away with a great noise, and the elements shall melt with fervent heat, the earth also and the works that are therein shall be burned up. II பேதுரு ( 11 Peter ) 3 : 10.   

 


abraham deva sahayam
Permalink Reply by abraham deva sahayam on February 19, 2011 at 7:19am

aim of second coming

1கொரி. 15:23 அவருடையவர்களாகிய தன்னுடைய சரீரமாகிய சபையை உயிர்ப்பிக்கிறதற்காகவும், அவர் இருக்கிற இடத்திற்கு மணவாட்டியை கூட்டிக்கொண்டு செல்வதற்காக மட்டுமே. யோவான்.14:1-3.

மணவாட்டி 0r சரீரமாகிய சபை count not fullfil

CVJagan MohanPermalink Reply by CVJagan Mohan on February 20, 2011 at 12:07pm

Still the Gospel is not reached in remote places yet

Jagan

нєρнzιвαнPermalink Reply by нєρнzιвαн on May 25, 2011 at 3:57am

1.   இயேசுவின் 2nd வருகை தாமதம் ஆவது  ஏன்?                                                                       

      தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.  II பேதுரு 3 : 9.

 

2.  இயேசுவின் 2ம்  வருகை எப்போது ?

     அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். மத்தேயு 24 : 36.   

нєρнzιвαнPermalink Reply by нєρнzιвαн on May 25, 2011 at 4:19am

பூமியில் வாழும் நாம் பரலோகத்தை தரிசிக்கலாமே தவிர , அங்கு போய் வர முடியாது.தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். I பேதுரு 5 : 8.  . எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். I தெசலோனிக்கேயர் 5 : 21.

RajaFranklinPermalink Reply by RajaFranklin on June 17, 2011 at 8:02am

Jesus promised, "surely I come quickly." Why has He not fulfilled this promise so far, although almost 2000 years have gone by?

           Even during the first century there were people who seriously doubted the promise of Jesus Coming as He did not come immediately. Realizing the situation, St. Peter gave the right answer: " There shall come in the last days scoffers...saying, Where is the promise of His coming?... But beloved , be not ignorant of this one thing, that one day is with the Lord  as a thousand years, and a thousand years as one day. The Lord is not slack concerning His promise. as some men count slackness" (II-Peter 3:3,4,8,9)

         Accordingly , one thousand years is like one day for the Lord. In the sense, it is only TWO DAYSsince the Lord said, "I am coming soon." Let us expect His coming any moment . " He is faithful that promised" (Heb 10:23).



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
இயேசுவின் இரண்டாம் வருகை தாமதம் ஏன்... Tamil Christian Global Network தளத்தில் ஒரு விவாதம்...
Permalink  
 


இயேசுவின் 2nd வருகை தாமதம் ஆவது  ஏன்?    

2010   ஆண்டுகள்  ஆகியது இயேசு பரத்திற்கு போய்

நாமும் 50 முதல் 60 தலைமுறைகளை கடந்து விட்டோம் ஆனால்,

kaalam காலமாய் இயேசு வருகிறார் என்று நாமும் ஒன்பது பிரிவுகளாக பிரிந்து 
சொல்லி வருகிறோம், 

ஆனால் மக்களின் பார்வையை பொறுத்தவரை  நாம் ஏமாற்றுகிறோம் 

அல்லது ஏமாந்து கொண்டு இருக்கிறோம்.    


அதனால் தான் கேட்கிறேன் இயேசுவின் 2ம்  வருகை எப்போது ,
தாமதம் ஆகிறது என்றால் ஏன் தாமதம் ஆகிறது ?

second coming 
இயேசுவின் இரண்டாம் வருகை

யோவா.14:1-3 கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசமுள்ள அனைவரும் நான் மீண்டும் வருவேன் என்று இயேசு சொன்ன வார்த்தையை விசுவாசிக்கிறோம். ஆனால் அவர் வருகையை குறித்து அவரே பேசிய சில வார்த்தைகளுக்கு தனது சுயவிளக்கங்களை போதனைகளாகவும், சத்தியங்களாகவும் போதித்து அநேக தவறான கருத்துகளை கிறிஸ்துவ மண்டலத்திலே புகுத்தி வருகிறார்கள். தனது சுயவிளக்கங்களுக்கு வேத வசனங்களையே ஆதாரமாக காட்டுவதால் எது சரி என்று பல குழப்பங்கள் நிலவுகிறது. எந்த கருத்துக்கு இணையான பல வசனங்கள் சாட்சி அளிக்கிறதோ அதுவே தேவன் நமக்கு சொல்லும் சத்தியம்.ஏசாயா.34:16;


இவ்வாறு பல குழப்பமான உபதேசங்கள் இரண்டாம் வருகையை குறித்து இருக்கும் என்றும், இந்த தவறான கருத்துகளை கேட்டு உண்மையான தேவபிள்ளைகள் அவர் வருகையின் போது அவரை எதிர் நோக்கி புறப்பட்டு போகாமல் தூங்கிவிடுவார்கள் என்றும் இயேசுவே கூறியிருக்கிறார் . மத்:25:1-3. ஆகையால் தேவ ஜனமே! சற்று விழிப்புள்ளவர்களாக இருந்து இணையான தேவ வசனங்களை சிந்திக்கலாம். ஏசா.34:16;
பொதுவாக இயேசுவின் இரண்டாம் வருகையை குறித்து நாம் சில விஷயங்களை கற்றுஇருந்தாலும் சில கேள்விகளுக்கு சரியான பதில் கிடைப்பதில்லை. நமக்கு சில கேள்விகள் எழலாம்.

1) யாரிடம் நான் வருவேன் என்று இயேசு கூறினார்? 

2) முதல் வருகையின் நோக்கம் என்ன? 

3) இரண்டாம் வருகையின் நோக்கம் என்ன? 

4) எவ்வாறு வருவார்? மாமிச சரீரத்திலேயா? 

5) பூமிக்கு வருவாரா? எந்த இடத்தில்?

6) பரலோகத்தில் இருந்து எப்பொழுது வருவார்? 

7) முதல் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடையில் அவர் பணி என்ன?

8) அவர் வருகையில் பூமியின் ராஜாக்களை வெட்டுவாரா?

9) அவர் வருகை எந்தெந்த விதமாக சொல்லப்பட்டிருக்கிறது?

10) அவர் வருகையை எவ்வாறு அறிந்து கொள்ளுவது?

11) எந்த வருடத்தில் வருவார் என்று வேதம் கூறியிருக்கிறதா?

இந்த கேள்விகளுக்கு பதிலை நாம் தெரிந்து கொள்ளாமல் இயேசுவின் இரண்டாம் வருகைக்குரிய காரியங்களை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. தேவன் வெளிப்படுத்திய இயேசுவின் இரண்டாம் வருகைக்குரிய காரியங்களை நாம் அறிந்து கொள்ள முடியாது. எனவே ஒவ்வொன்றாக நாம் அறியலாம்.

1) யாரிடம் அவர் வருவேன் என்று கூறினார்?
அப்.1:3; 1:9-15 இயேசு மறுபடியும் வருவார் என்று அப்போஸ்தலர்களிடம் தேவதூதர்கள் கூறுகிறார்கள். யோவா.14:1-3; தன்னை பின்பற்றய சீஷர்களிடம் நான் மீண்டும் வருவேன் என்று கூறினார். ஆக நான் மீண்டும் வருவேன் என்றும், நான் இருக்கும் இடத்தில் நீங்களும் இருக்கும்படி கூட்டிக்கொண்டு செல்வேன் என்று கூறியது உலக ஜனங்களிடம் அல்ல. தன்னை பின்பற்றி தன்னை விசுவாசிக்கிற அப்போஸ்தலர்களாகிய 120 பேர்களிடமே என்பது தெளிவு.

2) முதல் வருகையின் நோக்கம் என்ன?
அநேக பதில்கள் இந்த கேள்விக்கு இருந்தாலும், அவர் முதல் வருகையின் பிரதான நோக்கம். தன்னுடைய மணவாட்டியாகிய திருச்சபையை தெரிந்து கொள்ளும் பணிக்காக. ஏனெனில் தேவன் சாத்தானை அழிப்பதற்கு உருவாக வேண்டிய ஸ்திரியின் வித்தை உருவாக்குவதற்கும், உலக ஜனங்களை ஆசீர்வதிக்கிற ஆபிரகாமின் சந்ததியை உருவாக்குவதற்கும் அவர் முதல் வருகை வரவேண்டிய கட்டாயம் இருந்தது. எபி.2:10-18.

3) 2ம் வருகையின் நோக்கம் என்ன?
1கொரி. 15:23 அவருடையவர்களாகிய தன்னுடைய சரீரமாகிய சபையை உயிர்ப்பிக்கிறதற்காகவும், அவர் இருக்கிற இடத்திற்கு மணவாட்டியை கூட்டிக்கொண்டு செல்வதற்காக மட்டுமே. யோவான்.14:1-3.


4) எவ்வாறு வருவார்? மாமிச சரீரத்திலேயா?
1பேது.3:18; அவர் மாமிசத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். அப்.1:3; பிறகு 40 நாளளவும் அப்போஸ்தலருக்கு தரிசனமாகி உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். பிறகு ஆவியின் சரீரத்திலே பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். அப்.1:9; சிந்திக்க--அப்போஸ்தலர்கள் அனைவரும் பார்க்கும்படி மாமிச சரீரத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டால் தேவதூதன் வந்து மறுபடியும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால மாம்ச கண்களிலே பார்த்துக் கொண்டிருக்கும் போது ஆவியின் சரீரத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டார் என்று வேதம் கூறுகிறது. அப்.1:9; அப்.1:11 மீண்டும் ஆவியின் சரீரத்திலே வருவார்.

ஏன் ஆவியின் சரீரத்தில் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்?
1கொரி.15:50; மாமிசமும், இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது. அவர் எவ்வாறு ஆவியின் சரீரத்திலே பரத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டாரோ அவ்விதமாகவே மீண்டும் வரும்போது ஆவியின் சரீரத்திலே வருவார். அப்.1:11; 2கொரி.5:16 நாங்கள் கிறிஸ்துவை மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும் இனி ஒரு போதும் அவரை மாம்சத்தின்படி, அறியோம் என்று அப்.பவுல் கூறுகிறார். இயேசு கிறிஸ்து தன்னுடைய இரண்டாம் வருகையில் உலகத்தார் யாவரும் காணத்தக்கதாய் மாமிச சரீரத்தில் வரப்போவதில்லை. இன்னும் கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது. நீங்களோ என்னைக் காண்பீர்கள். யோவா.14:9


இயேசு கிறிஸ்து தன்னுடைய மகிமையான சரீரத்தில் வரும் போது அவருடைய திருச்சபையார் மாத்திரமே தாங்கள் மறுரூபமாக்கப்படும் சரீரத்தில் அவரைக் காண்பார்கள். 1யோவா.3:2; அவர் வெளிப்படும் போது அவர் இருக்கிற வண்ணமாகவே, நாம் அவரை தரிசிப்பதினால் அவருக்கு ஒப்பாயிருப்போம் என்று அறிந்திருக்கிறோம்.
கொலோ.3:4; நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும் போது நீங்களும் அவரோடு கூட மகிமையிலே வெளிப்படுவீர்கள். பிலி.3:20-21; வெளி.1:7;

கண்கள் யாவும் அவரை காணும், குத்தினவர்களும் அவரை காண்பார்கள். இந்த வசனத்தின் காலம் இரண்டாம் வருகையின் காலம் அல்ல. ஆயிர வருட அரசாட்சியின் காலம். ஏனெனில் குத்தினவர்கள் மரித்து ஏறக்குறைய 2000 ஆண்டுகள் ஆகிறது. அவர்கள் மீண்டும் உயிர்த்து வரும் காலத்தில் அனைவரும் அவரை அறிந்து கொள்வார்கள் (சத்திய வசனத்தின் மூலம் பார்ப்பர்) சங்.17:15;-- நானோ நீதியினால் உமது முகத்தைத் தரிசிப்பேன். நான் விழிக்கும் போது உமது சாயலால் திருப்தியாவேன் என்றபடி நிறைவேறும். 

மத்.16:27;-- மனுஷகுமாரன் தன்னுடைய பிதாவின் மகிமை பொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார். யோவா.5:26;-- பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராய் இருக்கும்படி அருள் செய்திருக்கிறேன்.இயேசு பிதாவின் குணலெட்சனங்களை முக்கியமாக சாகாமை அழியாமை மரித்தபிறகு பெற்றுக் கொண்டதால் அவரை இனி அவர் இருக்கிற வண்ணமாக மாறினால் மட்டுமே மனிதன் பார்க்க முடியும். மாமிச கண்களினால் பார்க்க முடியாது. மத்.24:30-- மனுஷகுமாரன் வல்லமையோடும், மிகுந்த மகிமை (பிதாவின் மகிமை)யோடும்.. பூமியில் உள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள் (அறிந்து கொள்வார்கள்) காணுதல் என்ற வார்த்தை அறிந்து கொள்ளுதலை குறிக்கிறது. 1தெச. 4:16;-- தேவ எக்காளத்தோடும் வருவார் என்னும் போது பிதாவின் மகிமை பொருந்தினவராய் வருவார் என்பதினாலே மாமிச கண்களால் காண இயலாது.


5) பூமிக்கு வருவாரா? எந்த இடத்தில் வருவார்?
பிதாவின் மகிமையாகிய சாகாமை அழியாமை பெற்றதினால் அவர் பூமிக்கு வர முடியாது. ஏனெனில் divine nature – தெய்வீக சுபாவத்தை மரித்த பிறகு பெற்று கொண்டார். இதினால் வேத வசனம் இவ்வாறு சாட்சியிருக்கிறது. 1தெச.4:17; மேகங்கள் மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் (பூமிக்கு வரமாட்டர்) எடுத்துக் கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம்.

6) பரலோகத்தில் இருந்து எப்பொழுது வருவார்?
அப்.3:21; உலகத்தோற்ற முதல் தேவன் தம்முடைய தீர்க்கதரிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீரும் காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும்.


அப்.3:21; பொது மொழிப்பெயர்ப்பு :- விண்ணேற்றமடைந்த இயேசு யாவும் சீர்படுத்தப்படும் காலம் வரை விண்ணுலகில் இருக்க வேண்டும். (யாவும் சீர்படுத்தப்படும் காலம்--------1000 வருட அரசாட்சியின் காலம்) 

1000 வருட அரசாட்சி காலம் வரும் வரை இயேசு பரலோகத்தில் இருக்க வேண்டும். இந்த காலத்தை வேதத்தில் அப்.3:19---இளைப்பாறுதலின் காலம் என்றும்; அப்.3:21--- தீர்க்கதரிசிகள் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறி தீரும் காலம் என்றும்; மத்.19:28--- மறுஜென்ம காலம் என்றும்; அப்.3:21--- பொதுமொழி பெயர்ப்பில் சீர்படுத்தப்படும் காலம் என்றும் கூறப்பட்டுள்ளது.

7) முதல் வருகைக்கும் 2ம் வருகைக்கும் இடையில் அவர் பணி என்ன?
மத்.28:18; சகல அதிகாரமும் பெற்றிருக்கிறார். மத்.28:20 உலகத்தின் முடிவு பரியந்தமும் சகல நாட்களிலும் நான் உங்களோடிருக்கிறேன். அதாவது பரமேறியவுடன் பிதாவின் வலதுபாரிசத்தில் உயர்த்தப்பட்டு, சகல அதிகாரத்துடன் உலகம் முடியுமட்டுமாக நம்மை பாதுகாத்து வழி நடத்துகிறார்.

1. நமக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் செய்யும் வேலை
2. தன் உடன் சகோதரரை தெரிந்தெடுக்கும் வேலை
3. தன் உடன் சகோதரரை பிரித்தெடுக்கும் வேலை
4. தன் உடன் சகோதரரை பரிசுத்தப்படுத்தும் வேலை
5. தன் உடன் சகோதரருக்கு பெலன் தருதல் பணி
6. உடன் சகோதரரின் விசுவாசத்தை பரீசித்து பார்க்கும் பணி
7. விசுவாசத்தை தொடக்கவும், முடிக்கவும் செய்யும் வேலை
8. சகோதரர்கள் பலி செலுத்த செய்து பூரணபடுத்தும் வேலை
இந்த பணியை ஒரு போதகராகவும், ஒரு குருவாகவும், ஒரு மேய்ப்பனாகவும், ஒரு சிநேகிதனாகவும், ஒரு மணவாளனாகவும் இருந்து செய்கிறார். 

எபி.5:9 தாம் பூரணமான பின்பு, தமக்கு கீழ்படிகிற யாவருக்கும் நித்திய இரட்சிப்பை அடைவதற்கு இவரே காணரம். இதினாலே இவரைப்பற்றி வேதம் இவ்வாறு கூறுகிறது.

தலையாயிருந்து சபையாகிய சரீரத்திற்கு கட்டளை கொடுக்கும் பணி கணவனாயிருந்து சபையாகிய மனைவியை அன்பு செய்தல் பணி. பரிந்து பேசும் மத்தியஸ்தராயிருந்து சபைக்கு உதவி செய்தல். மேய்ப்பர் & கண்காணியாயிருந்து கண்காணிப்பு பணி செய்தல். பிரதான ஆசாரியராய் இருந்து ஆசாரியருக்கு உதவி செய்தல். எபி.3:1 எபே.2:20-22----- ஆலயம் கட்டும்பணிசெய்தல். 
மொத்தத்தில் சபையை பலியின் ஜீவியத்தில் நடத்தி வருகிறார்.

8) அவர் வருகையில் ராஜாக்களை வெட்டுவாரா?
1000 வருடம் மட்டுமே அவர் நியாயம் தீர்க்கும் உரிமை கொடுக்கப்பட்டது. அதற்கு முன்போ அல்லது பின்போ கொடுக்கப்படவில்லை.


உலக முடியும் போது ராஜாக்களை சங்கரிப்பது நம்முடைய பிதாவாகிய தேவனே. இதை வேதம் யெகோவாவின் நாள்; யெகோவாவின் கோபத்தின் நாள்; யேகோவா நியாயம் தீர்க்கும் நாள்; யேகோவா தேவன் செய்யும் யாகம்; யேகோவா பாபிலோனை பழிவாங்கும் நாள்; யேகோவா நியாயாதிபதியாக இருந்து யேகோவாவே தேவன் என்று நிரூபிப்பதற்காக யேகோவா ஜாதிகளோடே நடத்தும் யுத்தத்தின் உக்கிரநாள் என்று கூறுகிறது.


ஆதி முதல் அந்தம் வரை யேகோவாவே நியாயாதிபதி 1000 வருடம் மட்டுமே நியாயத்தீர்ப்பு செய்வதற்கு இயேசுவுக்கு தேவன் கொடுத்த காலபகுதி என வேதம் கூறுகிறது.



9) அவர் வருகை எந்தெந்த விதமாக சொல்லப்பட்டு இருக்கிறது?


1) திருடனை போல : 
நாழிகை –-- time (மணி) தெரியாது. மத்.24:42-44
நாள் - -------- day தெரியாது. மத்.25:!3
மத்.24:36------ பிதாவுக்கு தவிர வேறே யாருக்கும் எப்பொழுது வருவார் என்று தெரியாததால் நினையாத நாழிகையிலே அவர் வருவதால் விழித்திருங்கள் என்று கூறுகிறார்.

2) மின்னல் போல : இயேசுவின் இரண்டாம் வருகை நீண்டகாலபகுதியாக இருக்காது. முதல் வருகையின் காலபகுதி 33 ½ வருடம் போல ஒரு காலபகுதி இல்லை. ஏனெனில் மத்.24:26-27 அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களேயானால் நம்பாதேயுங்கள். வருகை மின்னலை போல இமை பொழுதிலே நடக்கும். வானமண்டலத்திலேயே நிகழும். 1 தெச.4:17; 1கொரி. 15:51.

10) அவர் வருகையை எவ்வாறு அறிந்து கொள்வது?
மத்.24ஆம் அதிகாரத்திலும், வேதாகமங்களிலும் வருகைக்கு அடையாளங்களை மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறதேயில்லாமல் நாள்களைப் பற்றி சொல்லப்படவில்லை. only sin prophecy ; not time prophecy

11) எந்த வருடத்தில் வருவார் என்று வேதம் கூறுகிறது?
பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட நாட்களும் வருஷங்களும் ஆதாம் முதல் இயேசு பிறப்பு வரை உள்ள வருஷங்களை தெரிந்து கொள்ளவும், தலைமுறைகளை அறிந்து கொள்ளவே அல்லாமல் வேறே எதற்கும் அல்ல. மத்.1:17; யோவா 5:39

பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட கால கணக்குகளையும் தம்முடைய ஜூலியன் வருஷங்களையும் கூட்டி இயேசுவின் வருகையின் வருஷத்தை கூறிய அனைவரும் பொய்யான வருஷங்களையே கூறினர் என்று நம்முடைய நாட்களில் தெளிவாகிறது. 

ஏனெனில் நாம் கூட்டிய இந்த ஜூலியன் காலண்டர் வருஷம் கிரகோரி போப் என்பவரால் ஏற்படுத்தப்பட்ட வருஷம்.தேவ ஆவியினால் ஏவப்பட்டு ஏற்படுத்திய சரியான வருஷம் அல்ல. வேதம் மட்டுமே தேவ ஆவியினால் அருளப்பட்டது.

இந்த போப்புகளைப் பற்றி வேதம் தானி.7:25-ன் படி காலங்களை மாற்றுவான் என்று கூறுகிறது. எனவே கிரகோரி போப் என்பவர் ஏற்படுத்திய கி.மு. கி.பி வருடங்கள் தேவ ஆவியினால் ஏவப்பட்டு ஏற்படுத்திய சரியான காலண்டர் அல்ல. வேதம் மட்டுமே தேவ ஆவியினால் அருளப்பட்டது. எனவே வேதம் கூறும் காலங்களையும் போப் கூறிய வருஷங்களையும் கூட்டி கணக்கிட்டால் தவறான வருஷங்களே வரும்.


எனவே பிலி.3:20ன் படி நம்முடைய குடியிருப்போ பரலோகத்தில் இருக்கிறது. அங்கிருந்து இரட்சகராகிய கிறிஸ்து வர எதிர்பார்த்து கொண்டிருப்போமாக. ஆமென்!



pls see;http://www.biblegreatmystery.com/bible/index.php?option=com_content...

தங்களின் விளக்கம் எனக்கு தெளிவை தந்தது சகோதரா மேலும் ஒரு கேள்விக்கணை 

(பரத்திலிருந்து IERANGINAVARUM பரத்திற்கு YEAARINAVARUMAGIYA கிறிஸ்துவை தவிர ஒருவனும் 
பரலோகத்திற்கு போனதில்லை )

வசனம் இப்படி இருக்க 
நம்முடைய போதகர்களும் தீர்க்க தரிசிகள் என்று தங்களை அடையாளம் காண்பிக்கும்சிலரும் அடிக்கடி பரலோகம் போய் வருவதாக சொல்வதை நாம் எப்படி  எயற்றுககொள்வது


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard