//ஆத்தும ஆதாயத்தைப் பற்றி வரும் ஒரே ஒரு வசனமும் ஒரு நாத்திகனால் எழுதப்பட்டது. பாவம் கோல்டா.... திருடனுக்கு தேள் கொட்டியது போல இருக்கும்.//
ஆத்தும ஆதாயம் பற்றிய உங்க வேத ஆராய்ச்சி பயங்கர காமெடியாக, சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது!! உங்களை நினைத்தால் எனக்கு ரொம்பப் பாவமாக இருக்கிறது!
//சபை என்பது ஒரு Organisation அல்ல அது ஒரு Organism. அது முழுவதும் தலையாகிய கிறிஸ்துவின் control க்குள் உள்ளது. தலை சொல்வதை மட்டுமே கேட்டு செயல்படும் அங்கங்கள் நிறைந்த சரீரமே பரலோகத்துக்கு தேவனால் முன்குறிக்கப்பட்டு ஆயத்தப்படுத்தப்படும் சபையாகும்.//
சரிதான். ஆனால், சுவிசேஷம் சொல்லாமல், ஆத்தும ஆதாயம் செய்யாமல் எப்படி சபை உருவாகும்?
//எழுதியதற்கு அதிகமாக எண்ண வேண்டாம் என்று அப்போஸ்தலர் சொல்லியிருக்கிறார்!!
I கொரிந்தியர் 4:6 சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து, இவைகளை எழுதினேன்.//
மறந்திட்டீங்களா! அது உங்களுக்கு எழுதப்பட்டது அல்ல! கொரிந்திய சபைக்கு எழுதப்பட்டது!
//அவரவரை யார் பிடித்து வைத்திருக்கிறார்களோ அவர்களை பற்றி தான் பேச முடியும்!! எங்களை தேவன் பிடித்துவைத்திருப்பதால் அவரை பற்றி நாங்கள் எழுதுவது உங்களுக்கு கண்டிப்பாக எரிச்சலாக தான் இருக்கும்!! இதுவே உங்களை யார் பிடித்து வைத்திருக்கிறான் என்பதை நாங்கள் புரிந்துக்கொண்டோம்!! 4 வசனம் என்றாலும் உங்கள் சாது தொடங்கி விசெ இன்னும் ஒரு லிஸ்ட் கொடுத்திருந்தேனே, அவர்களை போல் ரீல் விடுவது கிடையாது!! அந்த 4 வசனங்களும் சாத்தானின் போதகர்களுக்கும் அவர்களை பின்பற்றுபவர்களுக்கும் கேட்க கஷ்டமாக தானே இருக்கும்!!//
இது என்ன பிதற்றல்?? நான் வசனத்தைப் பற்றிதான் சொன்னேன். நீங்க சில வசனங்களை மட்டுமே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இது சம்பந்தமான பிற வ்சனங்கள் கண்ணில் பட வில்லையா என்று தான் கேட்டேன்.
உண்மையிலேயே உங்களுக்கு உண்மை தெரிந்து கொள்ள வேண்டும், எதையும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இல்லையா??
இது வரையில் இதற்காக ஒரு வசனத்தையும் பதிய முடியவில்லையே, இன்னும் தேடி கண்டுபிடிக்க முடியவில்லையா!!
--
நான் ஒரு நல்ல ஆலோசனை சொல்கிறேன். ”ஆத்தும ஆதாயம்” செய்ய வேண்டும் என்று ஒரே வசனம் தான் இருக்கிறது என்று ஆதாரத்துடன் நிருபித்திருக்கிறீர்கள். ’Winning souls for Jesus’, ’இயேசுவுக்காக ஆத்தும ஆதாயம்’ என்று தேடிப் பாருங்க. ஒரு வசனம் கூடக் கிடைக்காது. உங்க case இன்னும் ஸ்ட்ராங்காகி விடும்!
//மரணம் என்றால் என்னவென்று விளக்கும் பிரசங்கியின் புத்தகம்தான் பிசாசின் போதனையாயிற்றே."எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது" என்ற ஒரு வார்த்தைபோதும் வேசி உபதேசக் கூட்டத்தை துரத்தியடிக்க....//
அந்த ஒரு வார்த்தையைத்தான் நீங்க முழு வேதத்திலும் வாசிக்கிறீங்க போலத் தெரியுது.
//வேத வசனத்தை நாத்திகன் எழுதியது என்று சொல்ல வேண்டுமானால் எந்த அளவு துர் உபதேசத்தில் ஊறிப்போய் அரற்றிக்கொண்டிருக்கிறீர்கள். //
எல்லாம் நேரம். துர் உபதேசம் பற்றி நீங்க பேசுறீங்க!
//நாங்கள் ஆராய்வது வேத வசனத்தையும் அதன் உபதேசத்தையும்தான். அந்தகால டெக்னாலஜிகளை அல்ல. //
உங்க ஆராய்ச்ச்சியைத்தான் தினமும் பார்க்கிறம்ல. அப்ப்டி ஆராய்ச்சி பண்ணி தான் “ஆத்தும ஆதாயம்” என்ற வார்த்தை வேதத்தில் இல்லை. எனவே ஆத்தும ஆதாயம் என்பது பிசாசின் உபதேசம் என்று கண்டுபிடித்திருக்கிறீர்கள். இது மகுடத்திலும் மகுடமான கண்டுபிடிப்பு!
//ஒருவனும் பரலோகத்துக்கு ஏறவில்லை, தாவீது முதற்கொண்டு என்று வேதம் சொன்னால் பரலோகத்துக்கு விசிட் செய்து அவனைப் பார்த்தேன் இவனைப்பார்த்ததேன் என்று கதை கட்டி காசு சம்பாதிப்பது நீங்களே.//
ஒரு வசனத்தை வைத்து கள்ள உபதேசங்களை ஸ்தாபிப்பது நீங்களே!
//முழுக்க முழுக்க வேதம் சார்ந்துதான் அவர்களூடைய எழுத்துக்கள். உங்கள் போன்ற காமெடி பீஸ்களுக்கு அது விளங்காதது ஆச்சரியமே இல்லை. விள்ங்க வேண்டிய அவசியமும் இல்லை. உங்கள் அறியாமையிலேயே சங்காரமாவீர்கள். //
விளங்கத்தான் மாட்டேங்குது. !
//அபத்தமான கேள்விகளைப் பதித்து உங்கள் அறியாமையை இன்னும் அதிகமாக நிரூபித்து வருகிறீர்கள்.//
அறிவு இருப்பவர்கள் தான் அறியாமை பற்றி பேச வேண்டும்.!
//பிரசங்கி ஒரு நாத்திகன் என்று பிசாசு மட்டுமே சொல்வான். //
பிரசங்கி மட்டும் படி, போதும், என்று பிசாசு மட்டுமே சொல்வான்.
I கொரிந்தியர் 14:34 சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.
I கொரிந்தியர் 14:35 அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.
புருஷனுக்கு தெரியாவிட்டால் சாது, வி.செ, சில்சாம், யவ்வன ஜனம் போன்ற தளங்களிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். இந்த மூடர்களிடம் கற்றுக்கொண்டுதான் பிரசங்கி ஒரு நாத்திகன் என்று கண்டுபிடித்தீர்களாக்கும். உண்மையில் அயோக்கியம்தான்.
--------
இந்தக் காலத்தில் பெண்கள் நல்லாப் படித்து வேலைக்குப் போய் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே ஏதாவது தெரியவில்லையென்றால், புருஷர்கள் தங்கள் மனைவியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
சபையில் பெண்கள் என்று அல்ல, யார் இடையில் பேசினாலும் அயோக்கியத்தனமாகத்தான் இருக்கும்!
அத்துடன் சபை பற்றி தாங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? நீங்கதான் எங்கும் போவதில்லையே. யார் இடையில் பேசினால் என்ன, பேசாவிட்டால் உங்களுக்கு என்ன??
1. இட்லி, தோசை சாப்பிடுவது கிடையாது. ஏன் ? வேதத்தை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இட்லி, தோசை சாப்பிடலாம் என்று வேதத்தில் எங்கும் இல்லை என்று கண்டு பிடித்ததால்.
2. உடை எப்பவும் அங்கிதான். அதுதான் இயேசு அணிந்திருந்தார். பேண்ட், வேஷ்டி போன்ற பெயர்கள் வேதத்தில் இல்லை.
3. பிரயாணம் கழுதை, குதிரையில் மட்டும்தான். அல்லது நடந்துதான். ஏன்? அதேதான்...கார், பஸ், பைக் போன்றவைகள் பெயர் கூட வேதத்தில் காணப்படவில்லை.
4. டிவி,கம்ப்யூட்டர், அலைபேசி, தொலைபேசி எல்லாம் உபயோகப்படுத்தமாட்டோம். ஏனென்றால் இயேசு கிறிஸ்துவே இவைகளை உபயோகப்படுத்தவில்லை. அத்துடன் பிரசங்கியிலும் இவை பற்றி சிறு குறிப்பு கூட இல்லை.
5.ஆத்தும ஆதாயம் என்பது கெட்ட வார்த்தை. அப்படி ஒரு வார்த்தை பைபிளில் லென்ஸ் வைத்து தேடிப் பார்த்தும், தலை கீழாய் நின்று ஆராய்ச்சி செய்தும் காணவில்லை. காணப்படவேயில்லை.
6. வீட்டின் வாசல் இடுக்கமாக அமைத்திருக்கிறோம். ஏனென்றால் அதன் வழியாகத்தான் பரலோகராஜ்யம் செல்ல வேண்டும்.உள்ள நுழைந்து வெளியில் வர தினந்தோறும் கஷ்டப்படுகிறோம்.
7. வீட்டில் மண்ணெண்ணை விளக்குதான். மின்சாரம் என்ற வார்த்தைதான் வேதத்தில் இல்லையே.
8. ராஜ்யத்தில் பூமிக்குரிய உடலோடுதான் உயிர்த்தெழுவோம். ஆனால் சாப்பிடவும் மாட்டோம், தூங்கவும் மாட்டோம்.
9. மரணத்திலும், ஆத்துமாவிலும் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கிறோம்.
10. ரே ஸ்மித் தவிர யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்.