Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பொய்யோடு கலக்கப்பட்ட அக்மார்க் உண்மைகள்...!!!


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: பொய்யோடு கலக்கப்பட்ட அக்மார்க் உண்மைகள்...!!!
Permalink  
 


spetersamuel wrote:
எல்லாம் சரி ஆனால் சபை எது என்கிற அவர்களுடைய விளக்கம்தான் பிரச்சினை...


சபை எப்படி உருவானது? எப்படி உருவாகும்?


சுவிசேஷம் சொன்னால்தானே ஜனங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு சபையாக மாற முடியும்? அறிவிக்காவிட்டால் எப்படி கேள்விப்படுவார்கள்? கேள்விப்படாவிட்டால் எப்படி விசுவாசிப்பார்கள்?

கோழியில்லாமல் எப்படி முட்டை வரும்? முட்டையில்லாமல் எப்படி ஆம்லெட் போட முடியும்??

சோல் இப்படிக் கூட அங்கு எங்கோ எழுதியிருந்தார்!

//ஆனானப்பட்ட பவுலே அக்காலத்து மெட்ரோசிட்டிகளில் ஏற்கனவே உள்ள சபைகளின் தரத்தை உயர்த்தத்தான் அத்தனை கடிதங்களை எழுதி அந்தந்த சபைகளைதான் விஸிட் செய்துகொண்டிருந்தான்.//

அப்ப பவுல் சுவிசேஷம் சொல்லி சபைகளை நிறுவவே இல்லையா? அந்த சபைகளை உண்டாக்கியது யார்?




__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
பொய்யோடு கலக்கப்பட்ட அக்மார்க் உண்மைகள்...!!!
Permalink  
 


Soul Wrote:

// "மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்கள்" எல்லாம் மனுக்குலத்திற்குரியது அல்ல, சபைக்கு மட்டுமே உரியது. எனவே அப்.பவுல், "சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்: (ரோம 8:18) என்கிறார். இது திருச்சபையாருக்குத்தான் பொருந்துமேயல்லாமல், உலகத்தாருக்குப் பொருந்தாது. இந்த சுவிசேஷ யுகத்தில் திருச்சபையாருக்கு மாத்திரமே விசேஷ அழைப்பு கொடுக்கப்படுகிறது. இந்த அழைப்பு சகல மனுக்குலத்திற்கும் என்று தவறாக சிலர் வாதிடுகின்றனர்.//

//தேவகிருபையினால் விசுவாதஹ்தினால் (விசுவாசத்தினால் என்று வாசிக்கவும்) நீதிமான்களாக்கப்பட்டவர்கள் அந்த நிலைமைக்கு வந்தவுடனேயே அவர்கள் மரண சாபத்திலிருந்து மீட்கப்பட்டவர்களாக கருதப்படுவார்கள். சாவுக்கினமான தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்து தங்களையே ஜீவபலியாக த்த்தம் செய்பவர்களாகக் கருதப்படுவார்கள். இந்த பூமிக்குரிய விஷயங்களில் அவர்கள் தங்களை மரித்தவர்களாகக் கருதிக் கொள்வார்கள். இப்படிப்பட்டவர்கள் இனிமேல் மாம்சத்துக்குரியவர்கள் அல்ல, தேவனுடைய வாக்குத்தத்தங்களின் அடிப்படையில் புதிய சிருஷ்டியாக ஜெநிப்பிக்கப்பட்டவர்களாகிறார்கள். இப்படிப்பட்டவர்கள், கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதனாலும், அவர்மேல் வைத்திருக்கிற விசுவாசத்தினாலும் நீதிமான்களாககப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்ட விசுவாசிகள்(திருச்சபை) தெய்வீக நிலைப்பாட்டில் புதிய ஆவிக்குரிய ஜீவனைப் பெற்றுக்கொண்டவர்களாகிறார்கள்//

//இங்கு திருச்சபையாரை மட்டுமே பொக்கிஷமாகிய சிந்தையை, புதிய சுபாவத்தை உடையவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது. பொக்கிஷமாகிய இந்த புதிய சுபாவத்தை சாவுக்கேதுவான இந்த சாமான்ய மனித சரீரத்திலேயே பெற்றிருப்பதால் மண்பாண்டம் என்று குறிப்பிடுகிற விளக்கம் பொருத்தமானதே. இந்த விளக்கம் சபையாருக்கு மிகவும் பொருத்தமானது.//

//இதுபோலவே புதிய ஏற்பாட்டில் அநேக வசனங்கள் உலக ஜனங்களுக்கு பொருந்தாமல், புதிய ஆவிக்குரிய சுபாவத்திற்கு பரிசுத்த ஆவியானால் ஜெநிப்பிக்கப்பட்ட, அர்ப்பணம் செய்த திருச்சபையாருக்கு (ஆமா.! அற்பணம் செய்வதென்றால் என்ன, நாம் தான் நம்மை அற்பணம் செய்யவேண்டுமா அல்லது.........) மட்டுமே பொருத்தமாயிருக்கிறது என்பதை அறியலாம். அப்போஸ்தலர்கள் ஒவ்வொரு நிருபத்திலும் ஒவ்வொரு விதமாக வாழ்த்துரை சொல்வதில் உள்ள கருத்தாழமான சொல்லாட்சியை ஆராய்ந்து பார்ப்பது அவசியம்.//

 

//தேவனால் அழைக்கப்பட்டு தெரிந்துகொள்ளப்பட்டு, ஏற்கனவே ஆவியினால் ஜெனிப்பிக்கப்பட்ட, கிறிஸ்துவுக்குள்ளான புதிய சிருஷ்டிகள் இறுதிவரை உறுதியாய் விசுவாசத்தில் நிலைத்திருந்து (அய்யய்யோ..! உறுதியாய் நிலைத்திருக்க வேண்டுமாமே... நாம் தான் நிலைத்திருக்கவேண்டுமோ அல்லது ........) முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கு பெறப் போகிறவர்களாகிய இவர்களைப் பற்றி//

_________________________________________________________________

எல்லாம் சரி ஆனால் சபை எது என்கிற அவர்களுடைய விளக்கம்தான் பிரச்சினை...



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard