//ஜெபியாய் ஜெபித்து உலகத்தை ரட்சிக்கப்போகிறோம் என்பது லாஜிக்./
ஜெபம் பண்ணி உலகம் இரட்சிக்கப்படுதோ இல்லையோ, குறைந்தபட்சம் ஜெபிப்பவர்கள் காப்பாற்றப்படுவார்கள்.
லூக்கா 21: 36. ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
இரட்சிப்பது மனிதன் அல்ல, தேவன் என்பதை கூட புரிந்துகொள்ள முடியல. ஜெபியாய் ஜெபித்து... (ஜெபியாய்-புதுசா இருக்கே)
//வெளிப்படுத்தல் முழுவதும் சங்கேத வார்த்தைகள் என்பதை அறிக. 24 மூப்பரும், 4 ஜீவன்களும் உள்ள படியே ஜீவன்கள் அல்ல. 4 ஜீவன்கள் தேவனுடைய தன்மையைக் குறிக்கும், 24 மூப்பர்கள் வேதத்தின் 24 தீர்க்க தரிசன புத்தகங்களைக் குறிக்கும்.//
யார் உங்களுக்கு இப்படி வியாக்கியானம் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது?
soul: //நெருப்பில் போட்டாலும் அழியாமல் இருப்பது ரொம்ப லாஜிக்.//
நெருப்பே இல்லாமல் Microwave Oven சமைக்குது. இது என்ன லாஜிக்?
//யேசு வந்து பேசினார் என்று சாது சொல்வது ரொம்ப லாஜிக்.//
சாதுவிடம் மட்டுமல்ல, சோலிடமும் ஆண்டவர் பேசுவார்.
//ஜெபியாய் ஜெபித்து உலகத்தை ரட்சிக்கப்போகிறோம் என்பது லாஜிக்./
ஜெபம் பண்ணி உலகம் இரட்சிக்கப்படுதோ இல்லையோ, குறைந்தபட்சம் ஜெபிப்பவர்கள் காப்பாற்றப்படுவார்கள்.
லூக்கா 21: 36. ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
//வெளிப்படுத்தல் முழுவதும் சங்கேத வார்த்தைகள் என்பதை அறிக. 24 மூப்பரும், 4 ஜீவன்களும் உள்ள படியே ஜீவன்கள் அல்ல. 4 ஜீவன்கள் தேவனுடைய தன்மையைக் குறிக்கும், 24 மூப்பர்கள் வேதத்தின் 24 தீர்க்க தரிசன புத்தகங்களைக் குறிக்கும்.//
யார் உங்களுக்கு இப்படி வியாக்கியானம் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது?
வெளி 5 இல் உள்ள இந்த வசனங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இது உண்மையோ, காட்சியோ, உவமையோ, கதையோ, கற்பனையோ, விடுகதையோ எதுவாக இருந்தாலும் ஆட்டுக்குட்டியானவரை(இயேசு கிறிஸ்துவை) தொழுது கொள்வதாகத்தானே எழுதப்பட்டிருக்கிறது. முந்திய அதிகாரத்தில் இதே கோஷ்டி பிதாவையும் இப்படித்தான் சாஷ்டாங்கமாக விழுந்து பணிந்து கொள்கிறது.
--
5. அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
6. அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக்கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.
7. அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.
8. அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாக வணக்கமாய் விழுந்து:
9. தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,
10. எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோமென்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
11. பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது.
12. அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.
14. அதற்கு நான்கு ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின. இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.
ஆதாம் பாவம் செய்தவுடன் உடனே பாவம் மனுக்குலத்திற்குள் பிரவேசித்தது. அது போல் ஏன் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தவுடன், அந்த நீதி அனைவர் மேலும் வரவில்லை? அதாவது, ஏன் அதன்பின் பிறந்த அனைவரும் மரிக்க வேண்டும்?? அதாவது ஏன் நீங்க சொல்லும் இரட்சிப்பு(மரணமின்மை, நித்திய ஜீவன்) உடனே பலிக்கவில்லை? எவ்வளவு பெரிய ஓட்டை இருக்குன்னு பாருங்க உங்க தியரியில்!
(மேசியாவின்) எதிரிகள், சகோதரி கோல்டா அவர்களின் நியாயமான இந்த கேள்விக்கு பதிலளித்து அதன் மூலம் தங்கள் நேர்மையை நிரூபிக்கும் அற்புதமான வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// இப்பொழுது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் யாருக்கேனும் எங்கள் தளம் பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகிறோம்.//
நாம் தான் வருகையைக் காணப்போகும் கடைசி சந்ததி. உங்களைப் போன்ற வேத புரட்டர்கள், கள்ள உபதேசக்காரர்கள் எழும்பிய பின் வருகை தாமதிக்காது.
பெரேயன்ஸ்:
[ஆதி 2:17. ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
நீ சாகவே சாவாய என்கிற சாபத்தை பெற்ற ஆதாம் மரிப்பதற்கு 930 வருடங்கள் ஆயிற்று!!]
அந்த நாளில் சாகவே சாவாய் என்று சொன்னார். ஆனால் ஆதாம் சாகவில்லையே. அப்ப ஆண்டவர் பொய் சொன்னாரா? சில விஷயங்களை அப்படியே எழுத்தின்படி அர்த்தம் கொள்ளக் கூடாது என்பதற்கு இது நல்ல உதாரணம்.
[நீங்கள் பதிந்தவுடன் உங்களுக்கு பதில் பதியவேண்டும் என்கிற எந்த ஒப்பந்தமும் இல்லை அம்மையாரே (!!)!! ]
நான் எதிர்காலத்தையும் பார்த்து சொன்னேன். உருப்படியா எதற்கும் பதில் சொல்லாமல், ஏதாவது சொல்லி சமாளிக்கத்தானே செய்றீங்க!
ஆதாம் பாவம் செய்தவுடன் உடனே பாவம் மனுக்குலத்திற்குள் பிரவேசித்தது. அது போல் ஏன் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தவுடன், அந்த நீதி அனைவர் மேலும் வரவில்லை? அதாவது, ஏன் அதன்பின் பிறந்த அனைவரும் மரிக்க வேண்டும்?? அதாவது ஏன் நீங்க சொல்லும் இரட்சிப்பு(மரணமின்மை, நித்திய ஜீவன்) உடனே பலிக்கவில்லை? எவ்வளவு பெரிய ஓட்டை இருக்குன்னு பாருங்க உங்க தியரியில்!