Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "இயேசு உயிர்த்தெழவில்லை"- கோவை வெறியன் அறிவிப்பு


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
RE: "இயேசு உயிர்த்தெழவில்லை"- கோவை வெறியன் அறிவிப்பு
Permalink  
 


golda wrote:

யோவான் தம்பட்டம் அடித்திருக்கிறாரே! பழைய ஏற்பாட்டில் பல தீர்க்கதரிசிகள் எசேக்கியேல் போன்றோர் பார்த்த காட்சிகளை எழுதி வைத்திருக்கிறார்களே!


 யோவானுக்கு ஆண்டவர் வெளிப்படுத்தி அதை எழுதிவைக்கவேண்டுமென்று கூறினார். ஆனால் அதன்பின் அதிலிருந்து ஒன்றையும் கூட்டவோ குறைக்கவோ கூடாதென கூறினார். ஆவியானவரின் தூண்டுதலின்படி எழுதப்பட்ட வேததில் இனி ஒரு பகுதியும் கூட்டப்படமாட்டாது. அப்படி ஒரு சான்ஸ் இருந்திருந்தால் வேதம் இதற்குமுன்பாக பலவாறாக உருமாறிப் போயிருக்கும். 

பவுல், தீர்க்கத்தரிசனம் உரைக்கிறவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றவிதமாய் உரைக்கவேண்டுமென கூறவில்லையா..? 

ஒவ்வொருவர் காணும் காட்சிகளையும் யோவான், எசேக்கியேல் காட்சிகளுக்கு இணையாய் ஏற்றுக்கொண்டால், 1914 - ல் இயேசு இராஜ்யபாரம் பெற்றுக்கொண்டதையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிவரும். நகையணிந்தவர்கள் பரலோகத்திலிருந்து சறுக்குமரம் வழியாக சறுக்கி நரகத்தில் விழும்போது, அதைப் பார்த்து இயேசப்பாட்ட கேள்வி கேட்ட சின்னப்பெண் சொல்வதையும் நம்பவேண்டியிருக்கும் (வெள்ளியும் பொன்னும் என்னுடையது, அதை நீங்க வச்சிருந்தா அது சாபத்தீடானது அதனால நக போட்டவங்க பரலோகத்துக்கு வரமுடியாது அப்டீன்னு ஏசப்பா சொன்னாங்க..! இயேசப்பா இத எங்கிட்ட சொன்னப்ப நானும் நக போட்டிருந்தேன். ha ha haa...)



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Bro PeterSamuel :

//பவுல் கூட தாம் கண்ட பரலோக தரிசனங்களை தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கவில்லை.! //

 

யோவான் தம்பட்டம் அடித்திருக்கிறாரே! பழைய ஏற்பாட்டில் பல தீர்க்கதரிசிகள் எசேக்கியேல் போன்றோர் பார்த்த காட்சிகளை எழுதி வைத்திருக்கிறார்களே!

 

//தீர்க்கதரிசனங்களை நிதானிக்கவேண்டும் என்று பவுல் கூறியிருப்பது இதனால் தான். எப்படி நிதானிப்பது? வசனத்தைக் கொண்டுதான். வசனத்தில் இல்லாததானால் அது உண்மையாயிருந்தால்கூட தவிர்த்துவிடலாம் என்பதுதான் இதன் அர்த்தம்...!!!//

 

அப்படிப் பார்த்தால் பவுலுக்கு பழைய ஏற்பாடுதான் வேத வசனம். நாமும் அதை வைத்துத்தான் நிதானிக்க வேண்டுமா?

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல்:

உயிர்த்தெழுதலின்போது எல்லா சரீரங்களூக்கும் மீண்டும் ஆவியூட்டப்பட்டு அனைவரும் உயிரடைவார்கள். வேதம் கூறும் சத்தியம் இதுவே.

--

அப்ப பழைய சரீரம்தான் உயிர்த்தெழும் என்று நம்புகிறீர்களா?

நீங்களும் குழம்பி எங்களையும் குழப்புறீங்களே!

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரேயன்ஸ்:

//கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு தான் இவர்கள் கல்லறைகளிலிருந்து உயிர்த்தெழுந்தார்கள் என்கிற கூற்றை வேதத்திலிருந்து பார்த்தீர்களா அல்லது வழக்கம் போல் உங்கள் சாதுவோ அல்லது வேறு ஒரு சபை போதகரோ சொல்லி தந்தாரா!!//

என்னைப் பார்த்தால் யார் பேச்சையும் கேட்கிற டைப் மாதிரியா தெரியுது??!! ம்த் 27:53. அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்.

உயிர்த்தெழுந்தபின்பு 3 நாள் கல்லறைக்குள்ளேயே உட்கார்ந்திருந்தார்களா??

 //இதில் இயேசு கிறிஸ்து பொய் சொன்னார் என்றோ, அவர் அப்படி தரிசனமாகாமலே அப்படி சொன்னார் என்றோ நான் சொல்லவில்லை!! //

 இயேசு கிறிஸ்து எனக்கு சரீரம் இருக்குது...தொட்டுப் பார் என்று சொன்னார். நீங்க அவருக்கு சரீரம் இல்லை, ஆவியாக இருக்கிறார் என்றல்லவா சொல்கிறீர்கள். இதுக்கு பேர் பொய் இல்லையென்றால் , வேறு எதுதான் பொய்??

 

சோல்:

 

//மரணத்தைப் பற்றியே தெரியாதவர்களுக்கு,//

ஆமா, இவருக்கு எல்லாம் ரொம்ப தெரிஞ்சிருக்கு!

//தன்னை வழிபோக்கனாக, தோட்டக்காரனாக காண்பித்தார். தன்னுடைய பழைய மாம்ச சரீரத்திலும் காண்பித்தார் அதுவும் காயங்களூடனே... ஏன் உயிர்த்தெழும் சரீரம் காயங்களோடும் வடுக்களோடுமா இருக்கும். குழப்பமான மனநிலையிலுள்ள சீடர்கள் தன்னை அடையாளம் காணவேண்டுமென்றே தன்னை பழைய உருவத்தில் காண்பித்தார்.//

என்னதான் குழப்பமான நிலையானாலும் இயேசு கிறிஸ்து பொய் சொல்ல மாட்டார். எனக்கிருப்பது போல் ஒரு ஆவிக்கு இராதே என்றெல்லாம் (பொய்) சொல்லியிருக்க மாட்டார்.

//ஏன் உயிர்த்தெழும் சரீரம் காயங்களோடும் வடுக்களோடுமா இருக்கும்//

பவுல் கூட பட்ட காயங்களுடன்தான் பரலோகில் காணப்படுகிறாராம். ஒவ்வொரு காயமும் நட்சத்திரம் போல் மின்னுமாம்!

//இவர்கள் நினைப்பதைப்போல ஆவிரூபிகள் நம்மைப்போல மானுட சரீரத்தில் இருந்தால் பரலோகத்தில் டாய்லெட் கூட தேவைப்படும். //

அங்கு எல்லாமே பாசிட்டிவ் தான் என்பதால், வியர்வை போன்ற எந்த கழிவு வெளியேறுவதும் அங்கு தேவைப்படாது. சாப்பிடும் சாப்பாடு முற்றிலும் ஜீரணமாகி உடலோடு சேர்ந்து விடும்.

பரலோகில் சாப்பாடு உண்டு.

1.தூதர்களின் அப்பமான மன்னாவைத்தான் இஸ்ரவேல் ஜனங்கள் சாப்பிட்டார்கள்.

2. மாற்கு 14:25 நான் தேவனுடைய ராஜ்யத்தில் நவமான ரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரைக்கும் திராட்சப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

தேவனுடைய ராஜ்யத்தில் புசிப்பும் குடிப்பும் உண்டு.

3. வெளி 2:7 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.

 பரலோகிலும் கனி புசிக்கலாம்.

வெளி 22:2 நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.

4. வெளி 19:9 பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.

விருந்து என்றால் சாப்பாடுதான்!


ராஜ்யத்தில்(பூமியில்) எல்லோரும் தேவ தூதர்களைப் போல இருப்பார்கள், எனவே கல்யாணமெல்லாம் நடக்காது என்று பெரேயன்ஸ் சொன்னார். தேவ தூதர்கள் சாப்பிடவும் மாட்டார்கள் என்றால், அங்கு சாப்பாடும் இருக்காதோ?? ராஜ்யத்தில் உள்ளவர்கள் பூமிக்குரிய சரீரத்தோடு இருப்பார்கள் என்றும் சொல்கிறீர்கள். அப்ப சாப்பாடு எல்லாம் தேவைப்படாதா? முரண்பாடே உன் பெயர்தான் கோவைபெரேயன்ஸா??

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

golda wrote:

வேதத்தில் இல்லாத வெளிப்பாடுகள் உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம்.இந்த உயிர்த்தெழுந்தபின் 40 நாள் பூமியில் இருக்கும் வெளிப்பாடு வேதத்தில் இல்லை என்றாலும், உண்மையாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.


 தவறு சகோதரி..!! இன்று இருக்கும் தவறான கொள்கைகள், உபதேசங்களில் பெரும்பான்மையானவை தனிமனிதனுடைய தரிசனங்கள், மற்றும் வியாக்கியானங்கள் அடிப்படையில் அமைந்தவைதான். தனிமனிதனுக்கு வெளிப்படுத்தப்படுபவை, யார் அதை பெற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் மட்டில், வேதத்தின் ஏற்கனவே உள்ள வசனத்தின்படி அர்த்தப்படுத்திக்கொண்டு தன்மட்டில் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளட்டும். அதை மற்றவர்களுக்கு போதிப்பதால்தான் தவறு நேருகிறது. பவுல் கூட தாம் கண்ட பரலோக தரிசனங்களை தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கவில்லை.! மற்றவர்களுக்கு போதிக்கும்போது வசனத்தில் உள்ளதை மட்டுமே போதித்தால் போதுமே.! வேதத்தில் வசனங்களுக்கா பஞ்சம்...!!! தீர்க்கதரிசனங்களை நிதானிக்கவேண்டும் என்று பவுல் கூறியிருப்பது இதனால் தான். எப்படி நிதானிப்பது? வசனத்தைக் கொண்டுதான். வசனத்தில் இல்லாததானால் அது உண்மையாயிருந்தால்கூட தவிர்த்துவிடலாம் என்பதுதான் இதன் அர்த்தம்...!!!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

bereans:

[எங்கே இருக்குது இதற்கு வசனம்!! ஆவி திரும்ப உள்ளே நுழைந்தது என்று எங்கே இருக்கு வசனம்!!?? இருக்கலாம் என்பதற்கு எல்லையில்லா அர்த்தங்கள் இருக்கிறது!!]

இயேசு கிறிஸ்துவே சொல்லிட்டார். அவருக்கு எல்லாம் இருக்கிறது என்று. எனவே ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டார் என்றால் என்ன அர்த்தம் என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, புதுசா ஒன்றைக் கண்டுபிடித்து இயேசு கிறிஸ்துவைப் பொய்யராக்கக் கூடாது.

[அப்படி என்றால் அவர் ஆவியாக இருக்கிறார் என்கிறா எல்லா வசனங்களும் தப்பு என்கிற அறிக்கை கொடுங்கள்!! ]

நாம் அனைவரும் ஆவிக்குரியவர்கள் தான். நம் சரீரம் ஒரு மாதிரி. மிருகங்களின் சரீரம் இன்னொரு மாதிரி. தூதர்களின் சரீரம் வேறு மாதிரி. தூதர்களிலும் நான் முகம் கொண்டவர்கள், சிறகுகள் உடைய தூதர்கள் என்று பிரிவு இருக்கிறதே.உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் சரீரம் இன்னும் வேறு மாதிரி. அவர் இப்பொழுது ஆவிக்குரிய சரீரத்தோடு இருக்கிறார்.

[ஆவியில் இருப்போர் மாம்சமாக தன்னை வெளிப்படுத்த அதிகாரம் இருக்கிறது!! ]

உண்மைதான். இல்லை என்று யாரும் சொல்லவில்லையே.

[இயேசு கிறிஸ்துவும் பயந்து மறைவாக இருந்த சீஷர்களிடத்தில் தன்னை அப்படியே வெளிப்படுத்தினார்!!]

அப்படித் தன்னை வெளிப்படுத்துகையில் பொய் சொல்வாரா?

[மற்றபடி மாம்சமும் எலும்பும் கொண்ட ஒருவர் எப்படி பூட்டிய அறைக்குள் திடீர் என்று தரிசனமாக முடியும்??]

star trek, star wars போன்ற படங்களில் மனிதர்களை teleport பண்ணுவாங்க! Terminator படத்தில் கூட ,எதை தொடுகிறானோ அந்தப் பொருள் போல் தன்னை மாற்றிக் கொள்வான் வில்லன். ஒரு மனிதனால் இப்படியெல்லாம் கற்பனை செய்யும் போது படைத்த ஆண்டவரால் சரீரத்தை சுவரைக் கடக்கும்படி உருமாற்ற முடியாதா?

 

[ஆனால் அவர் மாம்சத்தில் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு வசனமே இல்லை!!]

அவர் மாம்சம் உயிர்த்தெழுந்தது(உருமாறியது) என்று சரியா சொல்லுங்க! ஞானஸ்நானம் என்ற வார்த்தைக்கு நீரில் மூழ்கி எழுவது என்பதுதான் அர்த்தம் என்பதால், முங்கிதான் எடுக்கணும் என்று எந்த கட்டளையும் வேதத்தில் இல்லை. அது போல் தான் உயிர்த்தெழுதல் என்ற வார்த்தையும். இறந்து போன அழிந்து போன சரீரம் திரும்ப எழும்பும் என்பதுதான் அந்த வார்த்தையின் அர்த்தம்.

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

கொரிந்தியர் 5:16 ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.

 --

ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம். அது போல் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறியோம் என்று பவுல் சொல்கிறார். அதாவது எல்லோரையும் ஆவிக்குரிய கண்ணோட்டத்துடன் இனிமேல் பார்ப்போம் என்று சொல்கிறார். இந்த வசனத்திற்கும் , உயிர்த்தெழுதலுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை!

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

எதிரிகள் வேதத்தில் இல்லாத, மனிதர்களின் கருத்துக்களை கூறும்போது வன்மையாய் எதிற்கும் நாமே மனித கருத்துக்களை சிலாகிப்பது நியாயமா? மேலும் எதிர்பேசுகிறவர்களுக்கு நாமே கருத்துக்களை எடுத்துக் கொடுக்கிறவர்களாய் மாறிவிடுகிறோமே..!

--

 

அவர்கள் வேதத்தை நம்ப முடியாத கோணத்திலெல்லாம் புரட்டுகிறார்கள்!!

வேதத்தில் இல்லாத வெளிப்பாடுகள் உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம்.இந்த உயிர்த்தெழுந்தபின் 40 நாள் பூமியில் இருக்கும் வெளிப்பாடு வேதத்தில் இல்லை என்றாலும், உண்மையாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

golda wrote:
இது போலவே இரண்டாம் வருகையின்(ரகசிய வருகை) போதும் நடக்கும் என்று சிலர் சொல்கிறார்கள்! அதாவது உயித்தெழுந்தவுடன், மறுரூபமடைந்தவுடன் மேலே ஏறிச் செல்லாமல் சில நாட்கள் இங்கிருந்து பலருக்கும் காணப்பட்டு, கைவிடப் பட்ட பலரையும் திடப்படுத்தி பின் தான் மேலே செல்வார்களாம்.

 வேதத்தில் சொல்லப்படாத எந்த கருத்தையும் நாம் ஊக்குவிக்க வேண்டாமே சகோதரி..! மனிதர்களுடைய தரிசனங்கள், வியாக்கியானங்களை ஊக்குவிப்பதால் தான் அனேக தவறான கொள்கைகளும், போதனைகளும் நுழைந்துவிடுகிறது...! ஒருவேளை இப்போது நாம் சொல்வது யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனினும், அப்படி நீங்கள் சொல்வதுபோல இல்லாதிருந்தால் நாம் பொய்சொன்னவர்கள் ஆகிவிடுவோமே...!!!

எதிரிகள் வேதத்தில் இல்லாத, மனிதர்களின் கருத்துக்களை கூறும்போது வன்மையாய் எதிற்கும் நாமே மனித கருத்துக்களை சிலாகிப்பது நியாயமா? மேலும் எதிர்பேசுகிறவர்களுக்கு நாமே கருத்துக்களை எடுத்துக் கொடுக்கிறவர்களாய் மாறிவிடுகிறோமே..!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரேயன்ஸ்:

//கிறிஸ்து தான் மரித்தோரிலிருந்து முதலாவது உயிர்த்தெழுந்திருக்கிறார்!! மத்தேயு 27:52,53ல் நடந்தது உயிர்த்தெழுதல் அல்லவே அல்ல!! நான் முன்பு ஒரு முறை இதை குறித்த விளக்கம் தந்திருக்கிறேன்!! உங்களுக்கு நேரம் கிடைத்தால் அவசியம் வாசித்து பாருங்கள்!! மத்தேயு 27:52,53 தான் உயிர்த்தெழுதல் என்கிற போதனை சரி என்றால் 1 கொரிந்தியர் 15:20 பவுல் எழுதிய ஒரு பெரிய பொய்யாகி விடும்!!//

உங்க விளக்கத்தை வாசித்து எனக்கு வழக்கம் போல் கொஞ்ச நேரம் தலை சுற்றியது!!

சுந்தர் நல்ல கேள்விகளை கேட்டிருக்கிறாரே.

மத்தேயு 27:53 அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு தான் இவர்களும் கல்லறைகளிலிருந்து உயிர்த்தெழுந்தார்கள். எனவே முதற்பலன் இயேசு கிறிஸ்துதான்.

உயிர்தெழுந்த இந்த பரிசுத்தவான்கள் உயிர்தெழுந்த இயேசுகிறிஸ்துவை மிகவும் சந்தோஷமாக மரியாதை செலுத்தி வாழ்த்திய நிகழ்ச்சியை ஒரு தீர்க்கதரிசி பார்த்ததாக சாது சொன்னது ஞாபகம் வருகிறது. முதலில் ஒரு தூதன் வந்து , இவர்களை எல்லாம் நீங்க இங்க நில்லுங்க, நீங்க அங்க என்று யார் யார் எங்கே நிற்க வேண்டும் என்று சொல்லி அனைவரையும் ஒரு ஒழுங்கின்படி நிற்க வைத்த பின் ராஜாதி ராஜா இயேசு கிறிஸ்து வந்து அவர்களையெல்லாம் சந்தித்தாராம். இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த உடன் பரமேறிச் செல்லவில்லை. 40 நாள் பலருக்கும் காணப்ப்ட்டுதான் மேலேறிச் சென்றார். அது போல் இந்தப் பரிசுத்தவான்களும் பலருக்கும் காணப்பட்டு பின் மேலேறிச் சென்றார்களாம்.

இது போலவே இரண்டாம் வருகையின்(ரகசிய வருகை) போதும் நடக்கும் என்று சிலர் சொல்கிறார்கள்! அதாவது உயித்தெழுந்தவுடன், மறுரூபமடைந்தவுடன் மேலே ஏறிச் செல்லாமல் சில நாட்கள் இங்கிருந்து பலருக்கும் காணப்பட்டு, கைவிடப் பட்ட பலரையும் திடப்படுத்தி பின் தான் மேலே செல்வார்களாம்.

ஏதாவது நான் ஆராய்ச்சி செய்து கண்டு பிடிப்பதையெல்லாம் சாதுவுக்கும், விசெ க்கும் மெயில் அனுப்பி வைப்பது வழக்கம்!! இதைப் பற்றி அனுப்பிய மெயில்!

--

I read a very interesting revelation on rapture. It says, all the dead in Christ will be resurrected and all living in Christ will be transformed in a twinkling of the eye,but, they won’t immediately disappear. They will stay in the earth and appear to many for for 40 days just as Jesus appeared to many for 40 days after his resurrection. They will do great things for God and encourage the left behind to endure persecution during antichrist’s rule.

http://www.etpv.org/2003/apdr.html

http://www.etpv.org/2006/hisapp.html

You once said that you saw a vision in which you were hit by bullets but they just dropped from your body. May be what you saw was your transformed immortal body ?

--



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரேயன்ஸ்:

//ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டார்!! ஆவியில் உயிர்த்தெழுந்தார்!! மாம்சத்தில் கிடையாது!!//

ஆவி திரும்ப உள்ளே நுழைந்து உயிர்ப்பிக்கபட்டார் என்று அர்த்தமாக இருக்கலாம்!

 லூக்கா 24:39. நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,

 அவர் உயிர்த்தெழுந்தபின்பு, அவருக்கு (மகிமையான, மரணத்தை ஜெயித்த, பூமியின் அறிவியல் விதிகளுக்குட்படாத, திட) சரீரம் இருக்கிறது என்று அவரே சொல்லியிருக்கிறார். அப்ப இயேசு பொய் சொன்னாரா?

//சரீரம் என்று குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்!!//

 ஒரு குழப்பமும் இல்லை!. சரீரம் கல்லறையில் இல்லை. உடைதான் இருந்தது. ஏன்? அந்த சரீரம்தான் மறுரூபமடைந்தது.

//இங்கே தர்க்கமே ஆவியா, மாம்சமா என்பதற்கு தான்!! கிறிஸ்துவின் சரீரம் உயிர்த்தெழுந்தது என்று வசனம் இருந்தால் எழுத வேண்டியது தானே!! //

 உயிர்த்தெழுந்தபின் எனக்கு சரீரம் இருக்கிறது என்று இயேசு கிறிஸ்துவே சொல்லியிருக்கிறார். அதுவே போதும் அவர் சரீரம் உயிர்த்தெழுந்தது என்பதற்கு. அத்துடன் அவர் சரீரத்தைத் தேடி சென்றவர்கள் உடலை சுற்றி வைத்திருந்த துணியைத்தான் பார்த்தார்கள். உடல் அங்கு இல்லை. 1 + 1 = 2. உங்க மூளையை நீங்க சர்ப்பத்திடம் அடகு வைத்து விட்டதால் இது புரியாதது ஆச்சர்யமில்லை!

//ஆவியில் உயிர்த்தெழுவோர் கிறிஸ்துவின் சாயலில் பரலோகத்திற்கும், மாம்சத்தில் உயிர்த்தெழுவோர் பூமிக்குரியவர்களாக இருப்பார்கள்!! பூமிக்குரிய உயிர்த்தெழுதல் நடந்த பிறகு நடப்பவை தான் ஏசாயா 35ம் அதிகாரத்தில் இருக்கிறது!!//

ஆனால் ராஜ்யத்தில் கல்யாணம் மட்டும் பண்ண மாட்டாங்கன்னு சொல்றீங்க! என்னதான் விளக்கமோ, என்ன தான் வியாக்கியானமோ??

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பெரேயன்ஸ்:

//ஆவிக்குரிய சரீரத்தில் தான் கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா!!//

 

நம் அழிந்து போன சரீரம் அழியாமையைத் தரித்துக் கொள்கிறது. இரண்டாம் வருகையின் போது உயிருடன் இருப்பவர்களின் சரீரம் மறு ரூபமடைகிறது. அதே போல் இறந்த சரீரமும் மறுரூபமடைகிறது. இப்ப பூமியில் நமக்கிருக்கும் சரீரம் வேற. உயிர்த்தெழுந்தபின் நமக்கிருக்கும் சரீரம் வேற.

 

// என்னமோ ஒரு வசனத்தை காட்டி, பயமா? என்று கேட்க்கிறீர்களே, ஆவிக்குரிய அத்துனை வசனங்களை பார்த்து நடுங்கி விட்டீர்களோ!!//

 

ஆமாமா. ஒரே நடுக்கமாதான் இருக்குது!!

 

//இதை தான் பூமியில் மாம்சாத்தில் உயிர்த்தெழுவோர் பெறுவார்கள்!! ஆனால் கிறிஸ்துவின் சாயலில் உயிர்த்தெழுவோர் ஆவிக்குரிய உயிர்த்தெழுதல் பெறுவார்கள்!!//

 ஒரே வகையான உயிர்த்தெழுதல்தான். இரண்டெல்லாம் கிடையாது. உங்களைப் போல இரண்டு கண்ணாடி போட்டு வாசித்தால்தான் எல்லாம் இரண்டு இரண்டாய்த் தெரியும்.

 

//இயேசு பொய் சொன்னார் என்று யார் சொன்னார்!! இயேசு சீஷர்களுக்கு தன்னை அப்படி வெளிப்படுத்தவேண்டியதாக இருந்தது!! //

 

என்க்கு இருப்பதைப் போல் ஒரு ஆவிக்கு இருக்காதே என்று சொன்னால் நான் ஆவி இல்லை. எனக்கு திட சரீரம் இருக்கிறது என்று சொல்லிப் புரிய வைக்கிறார் என்றுதான் அர்த்தம். அதனால்தான் தொட்டுப் பாருங்கள் என்று சொல்கிறார்.இதை மாற்றி ஏதாவது சொன்னால் இயேசுவை பொய்யராக்குகிறீர்கள்.

//தயவு செய்து வெளிப்படுத்தின விசேஷத்தை தப்பாக புரிந்துக்கொண்டு வியாக்கியானம் செய்யாதீர்கள்!!//

சாதாரண எளிமையான சுவிசேஷமே உங்களுக்கு புரிய மாட்டேங்குது. வெளி. விசேஷம் நீங்க வாசிக்காமல் இருப்பது நல்லதுதான்

//அப்படி ஒன்றும் அங்கே எழுதப்படவில்லையே!! எழுந்தார்கள் என்பதற்கும் உயிர்த்தெழுதலுக்கும் வித்தியாசம் இருக்கிறது!!//

 நான் பாழுங்கிணத்தில தான் விழுவேன் என்றால் போய் நல்லா விழுங்க.

 

// கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்று நான் எங்கே எழுதியிருக்கிறேன் என்று இது வரை உங்களில் ஒருவராலும் காட்ட முடியவில்லை, இருந்தால் தானே!! //

 

கிறிஸ்துவின் சரீரம் உயிர்த்தெழவில்லை என்றால் அவர் உயிர்த்தெழவில்லை என்று சொல்வதாகத்தான் ஒரு வகையில் அர்த்தம் வருகிறது!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

லூக்கா 24:39. நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,

பெரேயன்ஸ், இந்த வசனத்தை ஏன் உங்க தளத்தில் போட மாட்டேங்கிறீங்க? பயமா???



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

I பேதுரு 3:18 ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.

இதான் பதில்! இயேசு பொய் சொன்னாரா?

லூக்கா 24:39. நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,

--

உயிர்த்தெழுதல் demo இங்கு இருக்கிறது.

வெளி 11:11 மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.

12. இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள், அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்.

--

இதுதான் உயிர்த்தெழுதல்!

மத்தேயு 27:52 கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.

மத்தேயு 27:53 அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்.

--

அத்துடன் எலியாவும், ஏனோக்கும் வேறு சரீரத்தில் பரலோகம் போயிருக்கிறார்கள்!

----------

1 கொரிந்தியர் 15:44. ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு. 45. அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது, பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.

ஆவிக்குரிய சரீரமுண்டு - சரீரமுண்டு என்பது தெளிவாகிறதில்லையா?

நாம் உயிர் வாழும் போதே நம் சரீரம் மாறுகிறது. 5 வயதில் இருந்தது போல் 20 வயதில் இல்லை. 20 வயதில் போல் 40 லில் இல்லை. 40 லில் போல் 70லில் இல்லை. உயிர்த்தெழுகையில் இன்னும் (நல்ல)உருமாற்றம் அடையும் நம் சரீரம். எல்லோரும் 30 வயதில் எவ்வளவு கம்பீரமா இளமையா இருந்தாங்களோ அப்படியே நித்திய காலமாக உயிர்த்தெழுந்தபின் இருப்பாங்களாம்!! Be Happy!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

spetersamuel wrote:
இந்த வசனங்களை அவர்கள் வாசித்திருக்கமாட்டார்கள் என்று எண்ணுகிறீர்களா சகோதரி!  

 அது மூல பாஷையில் இல்லை, மூல வேதத்தில் இல்லை என்று ஏதாவது விளக்கம் வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நிஜமாகவே இப்படி ஒருவர் வஞ்சிக்கப்பட முடியுமா என்று நினைத்தால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
"இயேசு உயிர்த்தெழவில்லை"- கோவை வெறியன் அறிவிப்பு
Permalink  
 


வசனம் தெளிவாக இருக்கும் போது பைத்தியகாரத்தனமாக அதை வளைக்க முயலும் அவர் என்னவென்று சொல்லுவது? அவர் சொல்லுவது போல லோத்துவின் வீட்டுக்கு வந்தவர்கள் ஆவி என்றால், சோதோம் கொமாரா மக்கள் ஆவியுடன் சயனிக்க முனைந்தார்களா? ஒரு கடைந்தெடுத்தமுட்டாளால் தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியும், கோவை வெறியன் ஒரு கடைந்தெடுத்த முட்டாள் என்பதை மற்றொருமுறை நிரூபித்து விட்டார்



-- Edited by eloi4u on Saturday 3rd of September 2011 01:29:50 PM

__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
RE: "இயேசு உயிர்த்தெழவில்லை"- கோவை வெறியன் அறிவிப்பு
Permalink  
 


golda wrote:

இயேசு பொய் சொன்னார் - பெரேயன்ஸ்.

தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் பெரெயன்ஸ் திரும்ப என்னமோ சொல்லியிருக்கிறார்.


 மத்தேயு 28:6 அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை (கர்த்தருடைய சரீரத்தை) வைத்த இடத்தை வந்து பாருங்கள்

மத்தேயு 28:12 இவர்கள் (பிரதான ஆசாரியர்) மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து: 13 நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள் (உயிர்த்தெழுந்தார் என்பதை மறைத்துவிடுங்கள்).

மாற்கு 16:6 அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்
 லூக்கா 24:5 அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? 6 அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். 7 மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம் நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள்.
 யோவான் 20:2 உடனே அவள் ஓடி, சீமோன்பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.
யோவான் 20: 7 சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான். 8 முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த மற்றச் சீஷனும் அப்பொழுது உள்ளே பிரவேசித்து, கண்டு விசுவாசித்தான்.
இந்த வசனங்களை அவர்கள் வாசித்திருக்கமாட்டார்கள் என்று எண்ணுகிறீர்களா சகோதரி! 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

இயேசு பொய் சொன்னார் - பெரேயன்ஸ்.

தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் பெரெயன்ஸ் திரும்ப என்னமோ சொல்லியிருக்கிறார்.

லூக்கா 24:39. நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,

ஒரு ஆவிக்கு இராதே என்று மகிமைப்படுத்தப்பட்ட சரீரத்தில் உயிர்த்தெழுந்த நம் ஆண்டவரான இயேசு கிறிஸ்து சொன்ன பிறகும் , அவர் ஆவிதான் என்று சொல்பவர்கள் பொய் சொல்லும் பாவிகள் அன்றி வேறு என்ன?

அவர் உயிர்தெழும் முன்பே தண்ணீரில் நடந்தார். அப்ப அப்பவே ஆவியாதான் இருந்தாரா?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
"இயேசு உயிர்த்தெழவில்லை"- கோவை வெறியன் அறிவிப்பு
Permalink  
 


(மேசியாவின்) எதிரியான கோவை வெறியன் ஒரு புதிய பரபரப்பைக் கிளப்பியிருக்கிறான்; இவன் என்னவோ ஏற்கனவே எடுத்துக்கொண்ட அனைத்து சர்ச்சைக்குரிய உபதேசங்களுக்கும் தீர்வை எட்டிவிட்டது போல தற்போது வேதம் என்றாலே என்ன என்று தெரியாதவர்களுக்கு மிகுந்த அக்கறையுடன் உபதேசிக்கும் பாவனையுடன் ஒரு புது பிரச்சினை கையில் எடுத்திருக்கிறான்...

lib_avtr_210.gif

Moderator

orangestar.giforangestar.giforangestar.gif

Status: Online

 
Posts: 1561
Date: 07:57:52 Sep 3, 2011
கிறிஸ்து ஆவியில் உயிர்த்தெழுந்தார்
 


இயேசு கிறிஸ்து ஆவியில் உயிர்த்தெழுந்தாரா அல்லது மாம்சத்திலா?

I கொரிந்தியர் 15:45 அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது, பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.

1 Corinthians 15:45 So it is also written, The first human, Adam, became a living person,[a] and the last Adam became a spirit that gives life. [Common English Bible (CEB)]

பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்!! அதாவது எல்லாருக்கும் ஜீவனை கொடுக்கிற ஆவியானார் என்கிறது வேதம்!! ஆனால் வேத புரட்டர்கள் கிறிஸ்து இயேசு மாம்சக்த்தில் தான் உயிர்த்தெழுந்தார் என்கிற ஒரு பொய் உபதேசத்தை பிரசங்கித்து வருகிறார்கள்!!

அவர்கள் இதற்காக பயன்படுத்தக்கூடிய வசனம்:

லூக்கா 24:41. ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். 42. அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். 43. அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து,

ஆவியாக இருந்து புசித்தார் என்பதற்கு பழை ஏற்பாட்டு காலத்தில் ஆபிரகாம் வீட்டிற்கு வந்த ஆவி ஜீவிகளும், லோத்தின் வீட்டுற்கு சென்ற ஆவி ஜீவிகளும் புசித்தார்கள் என்பதற்கு வசனங்கள் உண்டு!! கிறிஸ்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்று பயந்திருந்த தம் சீஷர்களுக்கு உறுதிப்படுத்தவே இந்த நிகழ்வு!! ஆகவே புசித்தார் என்பதால் அவர் மாமிசத்தில் தான் இருந்தார் என்று இருக்க வேண்டியதில்லை!!

அடுத்து,

லூக்கா 24:39. நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,

கிறிஸ்து இயேசு தன் சீஷர்களிடம் "தரிசனம்" ஆனது அவர்களின் பயத்தை போக்கி, உயிர்த்தெழுதலுக்கான விசுவாசத்தையும் சுவிசேஷத்தையும் அவர்கள் புரிந்துக்கொள்ளும்படியாகவே!! இப்படி தன் சீஷர்களையும் அப்போஸ்தலர்களையும் திடப்படுத்த அவர் மாமிசத்தில் தரிசனமானதில் ஒரு ஆச்சரியமும் இல்லை!! மாம்சத்தில் இருக்கும் நாட்களில் தான் மறுரூபமாகும் நிலையை அப்போஸ்தலர்களுக்கு தரிசனமாக காண்பித்த கிறிஸ்து இயேசு இப்பொழுது பயந்திருந்த தன் சீஷர்களை திடப்படுத்தவே இப்படி தரிசனமானார்!! அவர் மாம்சத்தில் தான் உயிர்த்தெழுந்தார் என்று வாதிடுவோர் வேதம் சொல்லும் மற்ற வசனங்களை பொய்யாக்குவதாகும்!!

யோவான் 20:19 வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

மாம்ச சரீரம் பூட்டிய அறைகளுக்கு கதவை திறவாமல் நுழைய முடியாது!!

I பேதுரு 3:18 ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.

மாம்சத்தில் கொலையுண்டு (மரித்து) ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்!! கிறிஸ்து ஆவியில் தான் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு நேரடியான ஒரு வசனத்தை வைத்துக்கொண்டு அவர் மாம்சத்தில் தான் உயிர்த்தெழுந்தார் என்கிறார்கள் வேத புரட்டர்கள்!!

I கொரிந்தியர் 15:50 சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.

பரலோக ஜீவிகள் இரத்தத்தோடும் மாம்சத்தோடும் இருக்க முடியாது!! தேவனுடைய ராஜ்யத்தில் மாம்சமும் இரத்தமும் பிரவேசிக்க முடியாதாம்!! இத்துனை தெளிவான வசனங்களை வைத்துக்கொண்டு அவர் தந்த தரிசனத்தை வைத்துக்கொண்டு கிறிஸ்து மாம்சத்தில் உயிர்த்தெழுந்தார் என்கிற போதனை கள்ள போதனையாகும்!!

தொடரும்.......

எதையெதையோ எழுதிவிட்டு கடைசியில் தொடரும் என்று போட்டிருக்கிறான்; அடேய்,மானங்கெட்டவனே நீ தொடரக்கூடாது என்பதற்காகவே எனது முக்கியமான வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு சொந்த சுகதுக்கங்களையெல்லாம் பொருட்படுத்தாது உன்னோடு போராடிக்கொண்டிருக்கிறேன்; உன்னோடு சரிசமமாக உட்கார்ந்து விவாதித்து உனக்கு புத்திபுகட்டுமளவுக்கு நீ சொஸ்த புத்தியுள்ளவன் அல்ல என்பதாலேயே நீ வாயை மூடு என்கிறேன்;உனக்கு எங்கள் தெய்வத்தைப் பற்றி பேச எந்த அருகதையுமில்லை;நீ ஒரு சோரம்போன பச்சை துரோகி;ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நிலைமாற்றிக்கொண்டு இங்குமங்கும் நிலையில்லாமல் திரிந்ததை ஏற்கனவே ஒப்புகொண்டு எழுதியிருக்கிறாய்;இந்நிலையில் நீ ஒருபோதும் கற்றறிந்திராத தேவ புண்ணியங்களைக் குறித்து எதையாவது பிதற்றி தமிழ் கிறிஸ்தவ இணையத்தை மாசுபடுத்தாதே;

ஆங்கிலத்தில் ஆணோடு ஆணோடு படுப்பதற்காக உபதேசிப்பவனும் பெண்ணோடு பெண் உறவு கொள்ளுவதற்காக பிரசங்கிப்பவனும் மிருகங்களைப் புணர இச்சித்து பேசுபவனும் இன்னும் பல்வேறு போதை வஸ்துக்களில் அடிமைப்பட்டவனும் இணைந்து ஸ்தாபித்த இதுபோன்ற கொள்கைகளை இனியும் தமிழ் கிறிஸ்தவத்துக்கு கடத்தி கடைவிரிக்கும் விபச்சார மாமா வேலைபார்க்கத் துணிவாயானால் உன் மீது மப்பும் மந்தாரமும் விழும்;உன் கண்கள் இருண்டு போகும்;தேவ இரகசியங்களைக் குறித்து எழுத துணிகரங் கொள்ளாதே;உனக்கு அந்த தகுதியும் ஞானமும் கிடையாது;உன் ரூமுக்குள் மாத்திரம் ஒக்காந்துகிட்டு தெருவிலே அலையற சொறி நாய்களையெல்லாம் பிடிச்சி சிறைச்சிகிட்டு இரு;

ஆனால் உலகமே பார்க்கிற தமிழ் இணையத்தில் இதுபோன்ற சர்ச்சைக்குரியதும் விசுவாசத்தைவிட்டு தடுமாறப் பண்ணுகிறதுமான எச்சில்களை சிந்துவாயானால் நீ விரைவில் துடைத்தெறியப்படுவாய் என்பதையும் தேவனுடைய அக்கினி உன்மீது விழுந்தால் நீ மாத்திரமல்ல உன் பட்டணமே நாசமாய் போகும் என்பதையும் இறுதி எச்சரிக்கையாக சொல்லிக்கொள்ளுகிறேன்;நீ உபதேசம் செய்வது மாத்திரமல்ல,அதுவே சத்தியம் என்றும் மற்றதெல்லாம் புரட்டு என்றும் சொல்லுகிறாய்;அப்படி சொல்லுவதற்கு உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது? கர்த்தரே தம்முடைய வார்த்தைக்கு முத்திரையாக இருக்கிறார் எனில் உன் எழுத்துக்களுக்கு இரஸல் தானே முத்திரை..? அவனுடைய திருட்டுத் தண்ணீரைப் பருகிவிட்டு அந்தரங்கத்தில் புசித்த திருட்டு மன்னாவில் இன்பம் பெற்று உன்னை விற்றுப்போட்டது போல இன்னும் பலரையும் வஞ்சிக்க எழும்புகிறாயோ..?

உனக்கு என்ன தைரியமிருந்தால் இயேசு உயிர்த்தெழவில்லை என்று எழுதுவாய்..? யாரடா அந்த தைரியத்தைக் கொடுத்தது..? அறிவுடையவர்களுடன் மாத்திரமே நாங்கள் விவாதிக்கமுடியும்;உன்னைப் போன்ற ஞானசூன்யங்களுடன் சமமாக நின்று விவாதிக்கமுடியாது;உனக்கு சத்தியத்தில் ஏதேனும் ஐயமிருந்தால் உன்னுடைய முன்னாள் நண்பர் சுந்தர்
போல‌ எழுதுவது அடக்கத்துடன் கற்றுக்கொள்ளும் பாவனையுடன் எழுதினால் மாற்று கருத்தை எழுதுவோம்;உனக்கு சத்தியத்தை சொல்லிக்கொடுப்போம்; ஆனால் நீ ஓடிப்போன பொறம்போக்கானதால் நீ உட்கார்ந்து கேட்க மாட்டாய் என்பதும் எங்களுக்குத் தெரியும்;நீ இதுவரை எந்த சபைக்கும் சபைத் தலைவருக்கும் அடங்கியிருந்ததில்லை என்பதும் உன்னை நீயே மேய்த்துக்கொள்ளும் பன்றி கூட்டத்தைச் சேர்ந்தவன் என்பதாலேயே உனக்கு மரியாதை கொடுத்து விவாதிக்க எனக்கு விருப்பமில்லை;மேலும் நீ மிருகத்தைப் போன்றவன் என்பதை உன் கொள்கையே அறிவிக்கிறதே..! மிருகங்களுக்கு தேவனுடைய பிள்ளைகளாகிற அதிகாரத்தை ஆண்டவர் தரவில்லையே நான் என்ன செய்வேன்..?


எனது பேரன்புக்கும் மரியாதைக்குமுரிய வாசகர்கள் தயவுசெய்து என்னை மன்னிக்கவும்; (மேசியாவின்) எதிரிகள் தொடர்ந்து செய்துவரும் வேதப் புரட்டுகளை என்னால் சகிக்கவே முடியவில்லை;சபைத் தலைவர்களோ, இவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டாலே போதும் என்கிறார்கள்; ஆனால் நான் அன்றாடம் சந்திக்கும் எண்ணற்ற இளைஞர்கள் இவர்களால் மாசுபட்டு மிரட்சியுடன் வருகிறார்கள்;அவர்கள் கண்களில் தெரியும் விரக்தியும் வேதனையும் ஏமாற்றமும் எந்த சபைத் தலைவருக்கும் தெரியாது;மேலும் சபைத்தலைவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் காணப்படும் சாட்சிக்கேடான காரியங்களும் இளைஞர்களை தடுமாறப் பண்ணுகிறது; இந்த இடைவெளியினையே (மேசியாவின்) எதிரிகள் பயன்படுத்திக்கொண்டு அவர்களுடைய இள நெஞ்சில் நஞ்சை விதைக்கிறார்கள்;

எப்படியெனில் இயேசுவானவர் மாம்சத்தில் வந்து ஆவியில் உயிர்ப்பிப்பட்டார் என்பது வெளிப்படையாக விளங்கும் சத்தியமாகும்;ஒரு குழந்தை கன்னியின் வயிற்றில் புருஷ சம்பந்தமில்லாமல் கருவாகி உருவாகி பிறப்பதும் மரித்த ஒருவன் மீண்டும் உயிரோடு எழுவதும் மனுக்குலம் கண்டிராத அதிசயமாகும்;எனவே இவற்றை இன்றுவரை மனிதனால் விளங்கிக்கொள்ள முடியவில்லை;ஆனால் ஆவியானவர் அவரைப் பற்றிய விசுவாசங்கொண்டோருக்கு இதனை வெளிப்படுத்தி விளங்க வைத்திருக்கிறார்; அதனை ஏற்றுக்கொள்ளும் ஞான இருதயமில்லாத அறிவுஜீவிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி புதுப்புது கொள்கைகளை ஸ்தாபித்தார்கள்;

இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும் அவருடைய மீட்பின் திட்டமும் மிக எளிமையானது,நேர்த்தியானது, நேர்மையானது;அதனைப் போதிக்க எந்தவொரு பல்கலைக்கழகமும் ஆராய்ச்சி கட்டுரைகளும் பட்டம் பதவிகளும் தேவையில்லை;ஏற்கனவே ரூபிக்கப்பட்ட ஒரு காரியத்தை சத்துரு தோண்டியெடுத்து விகர்ப்பமானவற்றை உபதேசம் -வேத ஆராய்ச்சி என்ற பெயரில் போதிப்பானானால் அவற்றை கிறிஸ்துவின் சீடர்களாகிய நாம் பொறுத்துக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை; சோரம்போன அந்த நாய் இரஸலின் யெகோவாவுக்கு கவனிக்க இரஸலின் யெகோவாவுக்கு சாட்சியாக இருக்கட்டும்;யெகோவாவின் சாட்சி என்பவன் யெகோவாக் குறிதது மட்டுமே பேசவேண்டும்;கிறிஸ்துவின் உபதேசத்தைக் குறித்து பேசுவதற்கு (மேசியாவின்) எதிரியான‌ அவனுக்கு எந்த அதிகாரமும் இல்லையென்பதை வலியுறுத்த விரும்புகிறேன்;

இதனை வாசிக்கும் வாசகர்கள் இதைக் குறித்து எச்சரிப்படைந்து நாம் ஏன் இவர்களுடன் மோதிக்கொண்டே இருக்கிறோம் என்பதற்கான காரணத்தையும் அறிந்து இதுபோன்ற உபதேசங்களோடு உங்களுடைய பகுதிகளுக்கு எந்த நாயாவது வருமானால் விரட்டியடிக்குமாறும் மற்றவரையும் எச்சரிக்குமாறும் பட்சமாய் கேட்டுக்கொள்கிறேன்;சிலர் பொழுதுபோக்குக்காகவும் விளையாட்டுக்காகவும் இவர்களை ஏற்றுக்கொண்டு உபசரித்து இவர்கள் சொல்லுவதையெலலாம் கேட்டுக்கொண்டிருக்கிறார்களாம்;ஆனால் வேதம் தெளிவாக இவர்களைக் குறித்து எச்சரிக்கிறது,இவர்களை ஏற்றுக்கொண்டு வாழ்த்துதல் சொல்லுபவன் இவர்களுடைய கிரியைகளுக்கு உடன்பட்டிருக்கிறான்,அதற்கு பங்காளியாக இருக்கிறான்;ஏனெனில் இயேசுவானவர் மீண்டும் உயிர்த்தெழுவதையோ அவர் உன்னதத்துக்கு மீண்டும் உயர்த்தப்படுவதையோ ஜீரணிக்கமுடியாத (மேசியாவின்) எதிரிகள் அப்போதே அவரைக் குறித்த இதுபோன்ற பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டு சீடர்களைக் குழப்பினார்கள்;அதன் காரணமாகவே 1.கொரிந்தியர்.15 எனும் அதிகாரமே பிறந்தது;எனவே கிறிஸ்துவின் அடியவர்கள் மென்மையாக இருப்பது மாத்திரமல்ல, இதுபோன்ற (மேசியாவின்) எதிரிகளை வன்மையாக எதிர்க்கவேண்டும் என்று கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்ளுகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard