Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தியாக தீபங்களான மிஷினரிகளை தூஷிக்கும் காட்டுமிராண்டி சோலுசொலீஷன் (ஆத்தும பிசின்)...


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: தியாக தீபங்களான மிஷினரிகளை தூஷிக்கும் காட்டுமிராண்டி சோலுசொலீஷன் (ஆத்தும பிசின்)...
Permalink  
 


joseph wrote:

உலகப்பிரகாரமான வங்கி அதிகாரி பணிக்கும், ராணுவ வீரர் பணிக்குமே இந்த குதி குதிக்கும் போது, யாரால் நாம் சத்தியத்தை அறிந்துகொண்டோமே அந்த தியாக செம்மல்களை களங்கப்படுத்துவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். அவர்களுக்கு வரும் அதே கோபம் நமக்கும் வரும். அவர்களை பகடி செய்வது அவர்களை அனுப்பியவரை பகடி செய்வதாகும். சி.டி ஸ்டட், டேவிட் லிவிங்ஸ்டன், ஹட்சன் டெய்லர் போன்றோர் அரைகுறை அர்ப்பணிப்போடு போயிருந்தால் இந்தளவுக்கு பெரிய காரியங்களை செய்திருக்கமுடியாது. மனந்திரும்புகிற 1 ஆத்துமாவை குறித்து பரலோகமே  சந்தோஷம் அடைகிறது என சொன்னால் 99 பேரை குறித்து கேட்பார்க. ஒருத்தன் ரட்சிக்கப்பட்டது ஒரு பெரிய விஷயமா என்பார்கள். என்ன சொன்னாலும் சரி, மிஷனரி பணி இவர்களுக்கு பெரிய இடறல் தான்.

நீயெல்லாம் அழிவை குறித்து பிரசங்கித்து 8 பேர் தானே உன்னை சேர்த்து தப்பிச்சாங்க என நோவாவையே நக்கலடிப்பார்கள். இவர்களை சொன்னால் மட்டும் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.

Let this post be here, irrespective of its non  relativity here please.




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

golda wrote:

நமது போராட்டம் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் அல்ல!


 எங்கள் ஊரில் இப்போதெல்லாம் (ஏனோ?) கசாப்பு கடைகளில் தவறாமல் ஒரு அறிவிப்பு பலகை தொங்குகிறது; அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருக்கும்: "ஹலால் செய்யப்பட்டது",என்பதாக; அப்படியானால் சாதாரண கறிக்கடை பாய் கூட தான் வளர்த்த அல்லது வாங்கி வெட்டி விற்கும் ஆட்டின் மாம்சத்தை முதலாவது தனது கடவுளுக்கு (சந்திரக் கடவுளான அல்லாவுக்கு..!?) படைக்காமல் விற்கிறதில்லை; அந்த ஆட்டின் உயிர் துடிப்பையும் சிந்தும் இரத்தத்தையும் தனது தெய்வத்துக்கு அர்ப்பணித்த பிறகே அதன் மாம்சத்தை விற்கிறானாம்; கிறித்தவர்களாகிய நாமும் பாய் பிரியாணியை விரும்பி ஸ்தோத்திரம் செய்யாமல் கூட சாப்பிடுகிறோம், போகட்டும்; இப்படி சாதாரண கசாப்பு கடைக்காரரே இறைவனை முன்னிட்டு தன் தொழிலை செய்யும்போது சர்வ வல்லவருக்காகவே என்னுடைய ஜீவனை அர்ப்பணித்து ஓடிக்கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்கள் மாம்சத்தோடும் இரத்தத்தோடுமா போராடிக்கொண்டிருக்கிறோம் ? அல்லது வெறும் பொழுது போக்குக்காக இங்கே அலப்பிக் கொண்டிருக்கிறோமா? ஒருவேளை யுத்த முறைகளையும் அதன் நுணுக்கங்களையும் நாங்கள் அறியாதிருக்கலாம் ஆனால் ஒருபோதும் மாம்ச யுத்தத்தை செய்யவில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறோம்; இது ஆவிக்குரிய யுத்தம் என்பதையும் இதற்கு உடனே முடிவிராது என்பதையும் அறிந்திருக்கிறோம்.

எனவே எமது போராட்டங்களை வெறும் மாம்ச யுத்தம் என வர்ணித்து யாரும் சிறுமைப்படுத்திவிடவேண்டாம்; இதனை தோழி கோல்டா அவர்களுக்காக மாத்திரம் எழுதவில்லை; இதே சிந்தனையினால் எம்மை சலித்துக்கொள்ளும் ஒவ்வொரு நணபருக்காகவும் எழுதுகிறேன்; நான் தெய்வமாகத் தொழும் ஒருவரை ஒரு கள்ளப் பிசாசு சிறுமைப்படுத்தி அவர் தொழத்தக்கவரல்ல, வெறும் தூதனே என்று கூறி குழப்பம் விளைவித்து பரிசுத்த வேதாகமத்தின் அனைத்து புண்ணியமான வார்த்தைகளையும் துணிகரமாக எடுத்தாளுகிறான்; அவனைத் தடுக்க எம‌க்கு பெலனில்லாவிட்டாலும் எதிர்க்க துணிவுண்டு எனும் காரணத்தினால் கடந்த இரண்டு வருடத்துக்கும் மேலாக எதிர்த்து வருகிறோம்;இதன் விளைவுகளையும் பலாபலன்களையும் உடனே அடைந்திட முடியாது; ஆனால் இதற்கான பலன் நிச்சயம் உண்டென்று விசுவாசிக்கிறோம்.

  • "ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு." (எபேசியர்.6:12)

மேற்கண்ட வசனத்திலிருந்து மேற்கோள் காட்டி தோழி கோல்டா அவர்கள் எழுதியிருக்கிறார்கள்; இந்த குறிப்பிட்ட வசனத்துக்கு மற்றொரு இணை வாக்கியம் உண்டு; அதையும் பவுலடிகளே எழுதியிருக்கிறார்;அது பின்வருமாறு,

  • " நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்."  (2.கொரிந்தியர்.10:3,4,5)

இதன்படி நாமும் (மேசியாவின்) எதிரிகளுடன் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் அல்ல,ஆவிக்குரிய யுத்தமே செய்துகொண்டிருக்கிறோம்; எப்படியெனில் (மேசியாவின்) எதிரிகளுடன் இஸ்லாமியர்களைப் போல வாளெடுத்து சண்டையிடவோ அல்லது இவர்கள் கூடுமிடங்களில் வெடிகுண்டு வைக்கவோ நாம் செல்லவில்லை; நாம் நம்முடைய விசுவாசத்துக்கு எதிராகச் சொல்லப்படும் அவதூறுகளை அவர்கள் வழியிலேயே எதிர்த்து முறியடித்து வருகிறோம்;அவன் ஓயும்வரை நாம் ஓயப்போவதில்லை; (மேசியாவின்) எதிரி அகால மரணமடைந்தாலும் அவனுடைய சந்ததியாருடன் எமது யுத்தம் தொடரும்; அல்லது நான் மரித்தாலும் எமது சந்ததி அவர்களுடன் போராடும்; இதுவே ஆவிக்குரிய யுத்தம்; இது கர்த்தருடைய வருகை பரியந்தம் தொடரும்; இந்த யுத்தத்தை நாங்கள் பவுலடிகள் காலத்திலிருந்து செய்துவருகிறோம்; அவரோடு போராடிய அதே சத்துருக்களே இன்றைக்கும் இங்கே ஊடுறுவியிருக்கிறார்கள்; அவர்களைப் பார்த்து பவுலடிகள் சொன்ன வார்த்தை அச்சுபிசகாமல் இவர்களுக்கும் பொருந்தும்;

  • "எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ? "(அப்போஸ்தலர் 13:10 )

முதன்முதலாக இந்த வசனத்தை மேசியாவின் எதிரியான சோலுசொலீஷன் எனும் ஆத்தும பிசினுக்கு எதிராகப் பயன்படுத்தினேன்;அதை அப்படியே குறித்து வைத்துக்கொண்ட இந்த கள்ளப்பிசாசு கொஞ்ச நாள் கழித்து அதே வசனத்தை சற்றும் வெட்கமில்லாமல் எனக்கு எதிராகப் பதித்தான்; மனசாட்சியில் சூடுண்ட இந்த மாபாதகன் இன்று வரை செய்துவரும் ஒவ்வொரு தூஷணங்களுக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும்; இவன் பரிசுத்தவான்களால் மாம்ச அழிவுக்காக சாத்தானிடம் ஒப்புக்கொடுக்கப்பட்டவன் என்று விசுவாசிக்கிறேன்; இவன் குறிப்பிட்ட இரகசிய பாவத்திலும் சிக்கி தனது மேய்ப்பனால் கண்டிக்கப்பட்டு தனது பாவத்தைத் தொடருவதற்காகவே சத்தியத்தை விட்டு விலகியிருக்கிறான்; ஏனெனில் இவன் ஏற்றுக்கொண்ட சத்தியத்தில் பாவம் என்பது ஒன்றுமேயில்லை; பாவத்துக்கான சம்பளம் என்பது மாம்ச மரணம் மட்டுமே; ஆத்துமா என்பதோ நியாயத்தீர்ப்பு என்பதோ நரகம் என்பதோ இல்லவே இல்லை; சுகம் சுகம் சுகம்...எல்லாம் சுகமே..! எனவே தன் கிரியைகள் கண்டிக்கப்படாதிருக்கவே ஒளியினிடத்திற்கு வராதிருக்கிறான்.

  • "பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்."(யோவான்.3:20)
  • "அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்." (1.கொரிந்தியர்.5:5)

(மேசியாவின்) எதிரிகளை மாத்திரமல்ல, ஆரோக்கிய உபதேசத்துக்கு எதிராக செயல்படும் எந்தவொரு தலைவரையும் பகிரங்கமாக எதிர்த்து வருகிறோம்; ஆனாலும் யாருடனும் தனிப்பட்ட விரோதமோ பகையோ கிடையாது; அதே நேரத்தில் யாருடனும் எதற்காகவும் சமரசம் செய்வதும் நமக்கு வழக்கமல்ல; பணத்துக்காகவோ பேர் புகழுக்காகவோ நாம் செயல்படாததால் நம்மைக் குறித்த விவரங்களையும் வெளியிடுகிறதில்லை; (மேசியாவின்) எதிரிகள் யாராவது நம்மைக் குறித்த தனி விவரங்களை வெளியிடுவார்களானால் அந்த நாளே நமக்கு கொண்டாட்டமான நாளாக இருக்கும்; அந்த பாக்கியமான நாளில் ஒரு புதிய அவதாரம் எடுப்போம்; தெருவில் இறங்கி நேருக்கு நேராகப் போராடி ஒவ்வொரு எதிரியையும் களையெடுப்போம்.

(மேசியாவின்) எதிரிகளான இவர்கள் இரஸல் எனும் கள்ளப் போதகனுடைய கருத்துக்களை மாத்திரமல்ல, சாதாரண மனிதனான என்னுடைய எழுத்துக்களைக் கூட திருடியிருக்கிறார்கள்; ஏனெனில் இவர்களால் சொந்தமாக யோசிக்கத் தெரியாது; எனவே நான் எழுதும் அதே நடை- நான் பயன்படுத்தும் வார்த்தைகள்- நான் வாதத்துக்காகப் பயன்படுத்தும் வேதவசனங்களையே பிறிதொரு சமயத்தில் என்னைத் தாக்குவதற்காகப் பயன்படுத்துகிறார்கள் ;தன் பெற்றோருக்கும் தன்னைக் கற்பித்தோருக்குமே நன்றியாக இல்லாத இந்த ஓநாய்களிடம் நான் நன்றியை எதிர்பார்க்கமுடியுமா..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சகோ ஜோசஃப்:

//Visionary என்றால் தரிசனம் உள்ளவர் என்று பொருள்படும். அஃதாவது கிறிஸ்துவை அறியாதோருக்கு கிறிஸ்துவை அறிவிக்கவேண்டும் என்ற தரிசனம் (Vision) உள்ளவர். எவ்வளவு பெரிய உண்மையை சோல் அண்ணாச்சி சும்மா விளையாட்டுத்தனமா சொல்லியிருக்காரு பாருங்க‌.//

நல்ல விஷனரி யாகத்தான் இருந்திருக்கிறார். இடையில் எப்படியோ விஷம் ஏறி விஷநரி யாக மாறிவிட்டார்!!

 சகோ சில்சாம்:

//இவர்கள் திருந்துவதற்காக ஜெபிக்கிறோம் என்றால் அதையும் பரியாசம் செய்வார்கள்;புத்திசொன்னாலோ எதிர்த்து தூஷிப்பார்கள்;எனவே இயன்றமட்டும் இவர்களை சபிக்கவே விரும்புகிறேன்.//

நமது போராட்டம் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் அல்ல!

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

joseph wrote:
இன்றைய திருச்சபைகள் பிசாசு விதைத்துவிட்டு போகும் இந்த களைகளை குறித்த எச்சரிப்பை தனது விசுவாசிகளுக்கு சொல்லவேண்டும். இந்த களைகளுடன் நட்பு பாராட்டுவது எவ்வளவு ஆபத்தில் போய் முடியும். மந்தையை தப்பவிடாத கொடிய ஓநாய்கள் என வேதமே இவர்களை குறித்து எச்சரிக்கிறது.

 ஆம் நண்பரே, நான் செல்லுமிடங்களிலெல்லாம் (மேசியாவின்) எதிரிகளான இவர்களைக் குறித்து எச்சரிக்கத் தவறுவதில்லை;காந்திஜியின் பேரனும் லால்பகதூர் சாஸ்திரியின் மகனுமான அன்னா ஹாஸாரே (அப்படித்தான் கிராம மக்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்களாம்..!)நம்முடைய பழம்பெரு(ச்சாளிகளான‌)ம் அரசியல்வாதிகளின் கண்களில் விரலைவிட்டு ஆட்டும்போது சிறுகூட்டமான நம்மாலும் முடியும்;சபைத் தலைவர்கள் இந்த காரியத்தில் மந்தமாக இருந்தாலும் தன்னார்வமாக நாம் ஒவ்வொருவரும் கிறித்து சபையின் புல்லுறுவிகளான இவர்களைக் குறித்து எச்சரிப்பது மிகவும் அவசியம்;சபையார் கிறித்துவப் போர்வையில் ஆங்காங்கு உலாவரும் நபர்களை அடையாளங் கண்டு அவர்களை விட்டு விலகவேண்டும்."இயேசுவானவரை தொழத்தக்க தெய்வமாக" ஏற்க மனதில்லாதோரை சபையை விட்டு விலக்கவேண்டும்;பவுலடிகள் சொல்லுவது போல அவர்கள் வாயை அடக்கவேண்டும்.

  • "அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக் குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்."(தீத்து 1:11)

சபையாரின் எச்சரிப்புக்காக சொல்லப்பட்ட இதுபோன்ற வாக்கியங்களை (மேசியாவின்) எதிரிகள் திருடி மேற்கோள் காட்டுவதைத் தடுக்க இதுபோன்ற வசனங்கள் சொல்லப்பட்ட சூழலை எடுத்துக்கூறி இவை (மேசியாவின்) எதிரிகளுக்கெதிரானவையே என்பதையும் நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்; அவன் இந்த வசனங்கள் நமக்கெதிராகவே இந்த வசனங்கள் சொல்லப்பட்டது என்பதை நிரூபிக்கவே முடியாது; ஏனெனில் அதனை ஆராயத் துவங்கினால் முழு காரியமும் வெளியாகி இவர்களுடைய சூழ்ச்சிகளெல்லாம் அம்பலமாகிவிடுமே; எனவே மேலோட்டமாக ச்சும்மாவேனும் நம்மைக் குழப்புவதற்காக இவ்வாறு எடுத்துப்போடுவார்கள் அதைக் குறித்து நாம் கலங்காமல் உனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று சவால் விட்டு மூக்குடைக்கவேண்டும்; இப்படியே சாலமோனின் அவைக்கு ஒரு குழந்தைக்கு இரண்டு தாய்மார் சொந்தங்கொண்டாடிக்கொண்டு வந்தனர்; முடிவு என்ன என்பது அனைவருக்கும் தெரியும்;அதுவே இவர்களுக்கும் சம்பவிக்கும்.இவர்கள் திருந்துவதற்காக ஜெபிக்கிறோம் என்றால் அதையும் பரியாசம் செய்வார்கள்;புத்திசொன்னாலோ எதிர்த்து தூஷிப்பார்கள்;எனவே இயன்றமட்டும் இவர்களை சபிக்கவே விரும்புகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

// அதன்பின் வந்தவர்கள் அனைவருமே ஒநாய்களும், சிலர் நல்லெண்ண‌த்தில் வந்திருந்தாலும் அறைகுறை வேத ஞானத்தோடு வந்தவர்கள் தான்!! இவர்கள் சுவிசேஷத்தை காட்டிலும் களைகளை தான் விதைத்து போனார்கள்!!//

மிஷனரிகள் அரைகுறை ஞானத்தோடு வந்தார்களாம்? ஏன் சார் உங்களுக்கே இது ஓவரா தெரியல. நல்லெண்ணத்தில் வந்தார்கள் என சமாளிப்பு எதற்கு. இன்றைய திருச்சபைகள் பிசாசு விதைத்துவிட்டு போகும் இந்த களைகளை குறித்த எச்சரிப்பை தனது விசுவாசிகளுக்கு சொல்லவேண்டும். இந்த களைகளுடன் நட்பு பாராட்டுவது எவ்வளவு ஆபத்தில் போய் முடியும். மந்தையை தப்பவிடாத கொடிய ஓநாய்கள் என வேதமே இவர்களை குறித்து எச்சரிக்கிறது.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
காட்டுமிராண்டி சோலுசொலீஷன்...
Permalink  
 


அறை என்பது பூட்டிய ஏ.சி ரூமாக இருக்கும். தமிழே இந்த லட்சணத்தில் இருக்கும் போது மூல பாஷையில் என்னத்தை கிழிப்பார்களோ தெரியவில்லை. இதில் ஒருவர் என்னடான்னா சீகன்பால்கையே கிண்டல் அடிக்கிறார். புறஜாதியானவர்கள் கூட கிறிஸ்துவ பள்ளிகளில் படித்தோ அல்லது மிஷனரிகள் நடத்தும் மருத்துவமனைகள் வாயிலாக பயனடந்ததால் மிஷனரிகளையும் அவர்கள் பணிகளையும் பாராட்டுகின்றனர் ஆனால் மேசியாவின் எதிரிகளுக்கு மிஷனரிப்பணி அற்பமாக தெரிகிறது. ஏ.சி போன்ற நாட்டின் தட்பவெப்பத்தை துச்சம் என மதித்து வெப்ப பிரதேசத்தில் தங்கள் வியர்வையையும் ரத்தத்தையும் சிந்தின மிஷனர்களின் தியாகம் ஏ.சி ரூமில் கதவை பூட்டிக்கொண்டிருக்கும் வாய்ச்சொல் வீரர்களுக்கு தெரிவதற்கு நியாயமில்லை. 

சீனம் சென்ற ஹட்சன் டெய்லரின் மிஷனரிப்பணியால் இன்றைக்கு 130 கோடி பேருக்கு மேல் உள்ள அந்த நாட்டில் 20% கிறிஸ்தவர்கள் உள்ளனர், இது பல பெயர்கிறிஸ்தவ நாடுகளின் மொத்த ஜனத்தொகையை விட அதிகம். இன்றைக்கும் 3% தான் கிறிஸ்துவர்கள் இருக்கிறார்கள் என அவ நம்பிக்கையுடன் கருத்து கூறும் மேசியாவின் எதிரிகள் அந்த 3 சதவீதம் என்பது அரசாங்கம் வெளியிடும் கணக்கீடு என்பதை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். சரி அந்த 3 சதவீதத்தை அடைய இவர்கள் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லையே. ஏதோ ஒரு அப்போஸ்தலர் தனக்கு பின் வந்தவர்கள் தலையில் கை வைத்தார், அதற்கப்புறம் தொடர் ஓட்டம் போல ஒவ்வொருவராக சுவிஷேஷத்தை எடுத்து வந்து தமிழகத்தில் உள்ள கோவை வரை வந்து அறிவித்ததால் தான் இன்றைக்கு இவர்கள் வக்கணையாக வெட்டி நியாயம் பேசிக்கொண்டிருக்க முடிகிறது. இதை கருத்தில் கொள்ளாமல் தொடர்ச்சியாக வந்த மிஷனரி பணியை குறை கூறி எழுதுவது இவர்கள் எந்தளவுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. 

த‌ண்ணீரில்லாத‌ மேக‌ங்க‌ளாக‌வும் வீணலுவ‌ற்கார‌ராக‌ இருக்கும் இவ‌ர்க‌ள் காரில், ஜெட்டில் செல்லும் ஊழிய‌க்கார‌ர்க‌ளை குறை கூறித்திரிகிறார்க‌ள், இது என்ன‌மோ உண்மையான‌ அக்க‌றையில் சொல்லாமல் பொறாமையினால் சொல்கிற‌தாதிரி தான் தெரிகிற‌து. ஒவ்வொரு மிஷ‌ன‌ரிக‌ளின் ச‌ரிதையையும் ப‌டித்து பார்க்க‌ட்டும், யார் விஷ‌ செடிக‌ளை விதைத்தார்க‌ள் என‌ தெரியும், அப்ப‌குதியில் அவ‌ர்க‌ள் நிறுவியுள்ள‌ ஸ்தாப‌ன‌ங்க‌ளை பார்க்க‌ட்டும் அப்ப‌ தெரியும் மிஷ‌ன‌ரிக‌ள் யார் என்று. சுவிஷேஷ‌த்திற்காக‌ த‌ன‌து நாட்டையும் உற‌வுக‌ளையும் விட்டுவிட்டு வ‌ந்து இங்கு ம‌டிந்த‌ மிஷ‌ன‌ரிக‌ளின் க‌ல்ல‌றை இந்த‌ நாட்டின் மிக‌ அழ‌கிய‌ க‌ட்டிட‌த்தை விட‌ அழ‌கான‌து என்பேன். ஒரு கால‌த்தில் ந‌ம்ம‌ பெரேய‌ன் அண்ணாச்சி ராணுவ‌த்தை ப‌த்தி ப‌ழித்து பேசி விட்டார்க‌ள் என‌ குதி குதி என‌ குதித்தார், அதே போல‌ இயேசுவை அறியாத‌ ஆத்துமாக்க‌ளை இர‌ட்சிப்புக்குள்ளாக‌ ந‌ட‌த்த‌ பிர‌யாச‌ப்ப‌டும், திற‌ப்பின் வாச‌லில் நின்ற‌ ஜாம‌க்கார‌ராகிய‌ மிஷ‌ன‌ரிக‌ளை ப‌ழித்து பேசுவ‌து எங்க‌ளுக்கு ஆத்திரத்தை தான் வரவழைக்கும்.உல‌க‌ப்பிர‌கார‌மான‌ ப‌ணியை செய்ப‌வ‌ர்க‌ளுக்கே இவர்கள் இன்த‌ வ‌ர‌த்து வ‌ரும் போது ஆத்தும‌ ஆதாய‌ ப‌ணி செய்யும் மிஷ‌ன‌ரிக‌ளை குறைகூறும் இந்த‌ அற்ப‌ர்க‌ளை நாமும் க‌ண்டிக்க‌ தான் வேண்டும்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

VNK International No.1:

// அதன்பின் வந்தவர்கள் அனைவருமே ஒநாய்களும், சிலர் நல்லெண்ண‌த்தில் வந்திருந்தாலும் அறைகுறை வேத ஞானத்தோடு வந்தவர்கள் தான்!! இவர்கள் சுவிசேஷத்தை காட்டிலும் களைகளை தான் விதைத்து போனார்கள்!!//

இவர்களுடைய எழுத்துப்பிழைகளைச் சரிசெய்தே நான் ஓய்ந்துபோனேன்; அரைகுறை என்பதை அறை-குறை என்று எழுதியிருக்கிறார்கள்; மிஷினரிளில் யாரும் குறைவான வேத ஞானத்தோடு வரவில்லை என்பதுடன் அவர்களில் யாரும் இவர்களைப் போல‌ அறைகளில் முடங்கியிருக்கவில்லை என்பதையும் (மேசியாவின்) எதிரிகள் உணர்ந்திட வேண்டும்; உண்மையில் வெளிதேசங்களிலிருந்து இங்கே வந்தவர்கள் தங்களுடைய நிறைவான வேதஞானத்தை இங்கே பிரஸ்தாபிக்காமல் இங்கிருந்த மக்களின் நிலைமையை, தங்கள் நிலைமைக்கு உயர்த்திட பாடுபட்டு, வேத ஞானத்தையோ இன்னும் எளிமைப்படுத்தி தேவையானதை மட்டுமே அறிவித்தார்கள்.

(மேசியாவின்) எதிரி சொல்லுவது போல களைகளை விதைத்தது மிஷினரிகள் அல்ல, இரஸல் எனும் கொடிய சர்ப்பமே;அவன் தான் ஏற்கனவே இருந்தவைகளை மாற்றிப்போட்டு சபைகளைக் குழப்பியவன்; ஆண்டவரும் சாத்தானே களைகளை விதைப்பவன் என்று சொல்லியிருக்கிறார்; அதிலும் இராக்காலத்தில்... ஆம்,இது ஒருவரும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் போலவே இருக்கிறது; பொழுது விடிந்து விடிவெள்ளி உதிக்கும்வரை வசனமாகிய தீபமே துணை. மிஷினரிகள் களைகளை விதைத்தார்கள் என்ற குற்றச்சாட்டு அவர்களுடைய ஆன்மாவுக்கு நாம் செய்யும் துரோகமாகும்; அவர்களில் பலருடைய சடலம் இங்கேயே புதைக்கப்பட்டுள்ளது;(மேசியாவின்) எதிரிகளின் நம்பிக்கையின்படியே அவர்கள தத்தமது கல்லறைக் குழிகளிலிருந்து எழுந்திருக்கும்போது இவர்களுக்கு விரோதமாக மேசியாவிடம் குற்றஞ்சாட்டுவார்கள்;அக்காலத்தில் பற்றியெரியும் மேசியாவின் கோபத்திற்கு முன்பதாக மலைகளே உருகிவிடும் என்பதால் இவர்களுக்கு மறைவிடமே இருக்கப்போவதில்லை; இரஸல் படுத்தும்பாடு என்று இவர்களை வைத்து தனி டாக்குமெண்ட(ல்)ரியே எடுக்கலாம்; இராக்காலத்தில் வந்து- சரியாக நிசான் மாதம் 14- ந்தேதியன்று களைகளை விதைத்ததும் விதைத்துக்கொண்டிருப்பதும் இரஸலின் வழிவந்தோரே தவிர மிஷினரிகள் அல்ல என்பதையும் களைகளை விதைப்பவன் சாத்தானே என்பதையும் (மேசியாவின்) எதிரிகளுக்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

Tag: VNK@ஜோசஃப் பக்கம்



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

நம்ம சோலு அண்ணாச்சி ரொம்ம்ம்ம்ம்ம்ப புத்திசாலித்தனமாக எழுதுவதாக நினைத்து நமக்கு சில சமயம் லட்டு மாதிரி பாயிண்டை எடுத்துக்கொடுக்கிறார். மிஷனரிகளை விஷ நரிகள் என்கிறார். இதை சேர்த்து எழுதும் போது விஷனரிகள் என்று வருகிறது. அஃதாவது visionary என்கிற ஆங்கில வார்த்தை கிடைக்கிறது. Visionary  என்றால் தரிசனம் உள்ளவர் என்று பொருள்படும். அஃதாவது கிறிஸ்துவை அறியாதோருக்கு கிறிஸ்துவை அறிவிக்கவேண்டும் என்ற தரிசனம் (Vision)   உள்ளவர். எவ்வளவு பெரிய உண்மையை சோல் அண்ணாச்சி சும்மா விளையாட்டுத்தனமா சொல்லியிருக்காரு பாருங்க‌.

ரொம்ப டேங்ஸுன்ணே



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//சோல்சோலீஷன் .. தொடர்ந்து செய்துவரும் தூஷணங்களுக்குரிய ...//

 

REAL SERGEANTS - Can cuss for ten minutes without ever repeating a word.

எனவே, பழக்கதோஷமாக இருக்கும்!!

--

மனப்பாட வசனம்

எபேசியர் 4:29 கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

// நண்பர் ஜோசப் அவர்கள் பொறுப்பான உத்யோகமும் சமுதாயத்தில் நன்மதிப்பும் பெற்றவர் ஆவார்; ஆனாலும் அவர் தன்னைத் தாழ்த்திக்கொண்டு ஆரோக்கிய உபதேசத்துக்காக எழுதி வ‌ருகிறார்; ஆனால் அவருடைய நல்லெண்ணத்தையும் கரிசனையையும் வைராக்கியத்தையும் சற்றும் பொருட்படுத்தாது அவரை தேவையில்லாமல் தரக்குறைவாகவும் ஒருமையில் விளித்தும் (மேசியாவின்) எதிரியான சோலு தொடர்ந்து எழுதிவருகிறான்; இதே போக்கில் இவர்கள் தொடர்ந்து எழுதிவருவதால் எந்தவொரு கருத்தையும் ஆய்ந்தறிய வாய்ப்பில்லாத இறுக்கமான சூழல் நிலவுவதை பலமுறை பாரத்துடன் குறிப்பிட்டுள்ளோம்;ஆனால் இதில் என்ன அற்ப சந்தோஷமோ தன்னை எதிர்த்து எழுதுவோரை ஒருமையில் குறிப்பிட்டும் தரக்குறைவாக தூஷித்தும் அவதூறு செய்வதை வழக்கமாகவே வைத்திருக்கின்றனர், (மேசியாவின்) எதிரிகளான முன்னாள் விமானப் படை அதிகாரிகள்;இவர்கள் மற்றவர்களை பேடிகள் என்றும் அலிகள் இகழுவது வழக்கம்;ஆனால் இவர்களுடைய எழுத்துக்களைப் பார்த்தால் இவர்களே பேடிகளைப் போல அறையில் உட்கார்த்துகொண்டு ஓயாமல் அவதூறுகளைப் பரப்புகிறார்கள் என்பதும் இவர்களுடைய தரக்குறைவான எழுத்துக்களுக்குக் காரணமானது இவர்களுடைய பலவீனமான இருதயமும் கீழ்த்தரமான எண்ணங்களுமே என்பது தெளிவாகிறது. 

‌இதோ அண்மையில் மிகவும் யதார்த்தமாகவும் நேர்த்தியாகவும் நண்பர் ஜோசப் அவர்கள் எழுதியுள்ள மேற்கண்ட கருத்துக்களை (மேசியாவின்) எதிரிகள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை வாசக அன்பர்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்;நண்பர் ஜோ அவர்கள் (மேசியாவின்) எதிரிகளின் தளத்தைப் பார்வையிடுவதில்லை என்று தீர்மானித்துள்ள நிலையில் அவரை வரம்புமீறி தூஷித்துள்ள இந்த வரிகளை அவருடைய கவனத்துக்குக் கொண்டு செல்லும் பாவத்தை செய்யவேண்டாமே என்று நானும் தயங்கினேன்;ஆனாலும் மல்டி லெவல் ...யாளனான சோல்சோலீஷன் என்பவன் தொடர்ந்து செய்துவரும் தூஷணங்களுக்குரிய பதிலைத் தரவேண்டும் என்று தோன்றியதால் இதோ அவற்றை இங்கே கொண்டு தருகிறேன்.//

சில்சாம் அண்ணே, அவங்க கோபப்படணும்னே, அப்பதான நிதானமில்லாம எழுதும் போத அவர்களது விஷ உபதேசங்கள் வெளிய வரும். இணைய உலகின் நண்பர்கள் இவர்களின் தராதரத்தையும் உபதேச மாறுபாடுகளையும் பாத்துக்கொண்டு தான்  இருக்காங்க, இணையம் இருக்கும் வரை நம் எழுத்துக்கள் இவர்களுக்கு மண்டையோட்டில் அடிக்கப்பட்ட ஆணி போலவும், கண் விழியில் குத்தின முள்ளைப்போலவும் இருக்கும்.

எனக்கும் இவர்களை மாதிரி எழுத தெரியாதுன்னு இல்லை; ஆனால் நாளை நடுநிலையாளர்கள் பார்க்கும் போது  They stand thoroughly exposed. இவர்கள் ஒருமையில் விளிக்கட்டும் பன்மையில், ஏன் அஃறிணையில் கூட விளிக்கட்டும், இவர்கள் எதனால் உண்டானவர்கள் என்பது வெளியரங்கமாகிறதல்லவா?

அன்றைக்கு கூட அப்போஸ்தலரை பிரதான ஆசாரியன் வைதான் என இருக்கிறது, நாம் கல்லடி பட்டதில்லை சொல்லடியாவது படுவோம், அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும் கடைசியில் தேவன் அவர்களை நியாயத்தில் கொண்டு வந்து நிறுத்துவார். இதை வாசிக்கும் நடுநிலையாளர்களே இவர்களை காறி துப்புவார்கள்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

பா.ஜ கட்சியை விமர்சனம் செய்வோர் பொதுவாக ஒன்றை சொல்லுவார்கள் அது என்னவென்றால் பா.ஜ வில் மிதவாத முகம் வாஜ்பாய் எனவும் தீவிரவாத முகம் அத்வானி என்றும் சொல்வார்கள். அதே போல மேசியாவின் எதிரிகளில் மிதவாத முகம் கொண்டவர் நம்ம பெரேயன்ஸ் அண்ணாச்சி, தீவிரவாத முகம் கொண்டவர் நம்ம சோல் அண்ணாச்சி. இப்ப நம்ம மிதவாத அண்ணாச்சி என்ன சொல்லவர்றாருன்னு பார்ப்போம்.

//சரி, நீங்க ஏன் உங்க தெருவை தாண்டாமல் இருக்கிறீகள்!! போக வேண்டியது தானே உலகமெங்கும்!! யாரிடம் சொன்னாரோ அவர்கள் அதற்கு கீழ்ப்படிந்து உடனே செய்தார்கள்!! தோமையார் இந்தியாவிற்கும் வந்தார்!! இன்றைக்கு கோட் சூட் போட்டுக்கொண்டு எவனோ பணம் கொடுக்கிறான் என்று ஜம்போ ஜெட்டில் பறந்து போய் ஏற்கனவே கிறிஸ்தவ நாடுகள் (!!) என்று சொல்லும் நாடுகளுக்கு தேவன் தங்களிடம் என்ன புதுசா பேசினார் என்று சொல்லி அங்கே இருந்து பணம் பார்த்துவிட்டு வருகிறார்கள்!! இந்தியாவையே இன்னும் முழுசாக மாற்ற முடியவில்லையாம், ஆனால் கனடாவிற்கு போகிறார்களாம்!! சுவிசேஷம் என்றால் சொகுசான பயணம் என்று தான் இவர்களின் பயணங்கள் வெளிப்படுத்துகிறது!!//

நான் என் தெருவை தாண்டவில்லை என்ன நீங்க பார்த்தீங்களா சார். நற்செய்தி அறிவிக்க சொன்னது இயேசுவை பின்பற்றும் எல்லாருக்கும் தான் அப்படின்னா கேக்கமாட்டீங்கறீங்களே. நீங்க சொல்ற வகை ஊழியக்காரர்கள் இருக்காங்கன்னு நான் மறுக்கவில்லை, ஆனால் அறிவிக்கப்படாத இடங்களில் அலைந்து திரிந்து நற்செய்தி அறிவிக்கும் மிஷனரிகளை ஏன் பகடி செய்கிறீர்கள். அப்படிப்பட்டவர்களின் ரத்தத்தையும் வியர்வையையும் மிதிப்பது போல அல்லவா இருக்கிறது நீங்க சொல்றது. அன்றைக்கு எதிரிகளின் கூடாரத்தின் கொள்ளைப்பொருளை கண்ட குஷ்டரோகிகள் அதை மற்ற இஸ்ரவேலரிடம் சொல்லாமல் போனால் பாவம் வந்து சேரும் என்றல்லவா நினைத்தார்கள், இவ்வளவு பெரிய மீட்பை கண்டவர்கள் அதை அறியாதோருக்கு அறிவிப்பது தவறு என சொல்லி எவ்வளவு கீழிறங்குகிறீர்கள் என்பதை அறியீர்களா? அத்தொழு நோய் கொண்டவர்களிடம் இருந்த மனப்பான்மை கூட உங்களுக்கில்லையே.

//தேவன் அவர்களை எங்கெல்லாம் கூட்டி சென்றாரோ, அவர்கள் சென்றார்கள், அதன் பின் அப்போஸ்தலர்கள் நேரடியாக கைகளை வைத்து நியமித்தவர்கள் (திமோத்தேயு, ஆக்கிலா, ப்ரிசில்லா போன்றோர்) சென்றார்கள்!! அதன் பின் வந்தவர்கள் அனைவருமே ஒநாய்களும், சிலர் நல்லென்னத்தில் வந்திருந்தாலும் அறைகுறை வேத ஞானத்தோடு வந்தவர்கள் தான்!! இவர்கள் சுவிசேஷத்தை காட்டிலும் களைகளை தான் விதைத்து போனார்கள்!!//

உலகத்தின் முடிவு பரியந்தமும் உங்களோடிருக்கிறேன் என ஏன் சார் சொன்னார். தீமோத்தேயு ஆக்கில்லா பிரிஸ்கில்லா போன்றோர் மற்றவர்கள் மேல் கை வைத்து இருக்கமாட்டார்களா, நற்செய்தி அறிவிப்பது தொடர் ஓட்டம் தான் சார், ஒருவரது வேலை முடிந்ததும் அடுத்தவர் அதை முன்னெடுக்கவேண்டும். மற்றவர்கள் அறைகுறை என சொல்லுமுன் நீங்க முழுசா முங்கி முத்தெடுத்திட்டீங்களான்னு யோசிங்க. உங்க சகா சீகன் பால்கையே நக்கல் அடிக்கும் போது உங்களுக்கு மற்றவர்களின் தியாகம் அற்பமா தான் தெரியும். அப்ப மர்காஷியஸ், கால்டுவெல், சீகன்பால்கு, ராக்லேண்ட், ஸ்டெயின்ஸ் எல்லாம் அரைகுறைகளும் ஓனாய்களும் என்கிறீர்கள், கலக்கிட்டீங்க போங்க‌.

//தோமா காலத்தில் இருந்த அதே 3% தான் இன்றும் இருக்கிறது!! இந்த பதிலை பல முறை பதித்து விட்டோம்!! சூடு சொரணை இல்லாமல் தெருவில் (அதான் வீட்டில் இருப்பது இவர்களுக்கு பிடிக்காதே, தூங்கினால் கூட ப்ளாட்ஃபாரத்தில் தான் தூங்குவோம் என்று அடம்பிடிப்பவர்கள் இவர்கள்) இருந்து திரும்ப திரும்ப கேட்டாலும் எங்கள் பதில் என்னவென்றால், உங்கள் தெருவில் எத்துனை பேரிடம் நீங்கள் சுவிசேஷம் சொன்னீர்கள் என்பது தான்!!//

நாங்க எத்தனை பேருக்கு சொன்னோம் என்பதை உங்களிடம் காட்டி சர்டிபிக்கேட் வாங்கவேண்டிய அவசியம் இல்லை சார். விதைப்பது தான் எங்கள் பணி, விளையச்செய்கிறவர் தேவன், விதைப்புக்காலத்தில் ஏ.சி ரூமில் உக்காந்து காலாட்டிக்கொண்டிருந்தால் அப்புறம் அறுப்பு காலத்தில் ஒண்ணும் கிடைக்காதுங்கோ. ஒரு குவளை தண்ணீர் கொடுத்தாலும் அதுக்கான பலனை அடைவான் என்று தானே சொல்லியிருக்கிறது. சரி இப்ப ஒருத்தர் வந்து நான் ஒரு 100 பேருக்கு சுவிஷேஷம் சொல்லி ரட்சிப்புக்குள் வழி நடத்தியிருக்கேன்னு சொன்னார்ன்னு வச்சுக்குவோம் அப்புறம் அவரிடம் என்ன கேட்பதாக உத்தேசம், நீங்க அத கூட செய்யலியே. நோவா காலத்திலேயே 8 பேர் தானே காப்பாற்றப்பட்டனர், போதாக்குறைக்கு இடுக்கமான வாசல் வழியே பிரவேசிப்பவர் வெகு சிலர் என்பது தெரியாதா. மனந்திரும்புகிற ஒரு பாவியின் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று சொல்லியிருக்கே, நீங்க ஏன் வன்கண்ணனா யிருக்கீங்க‌.

//ஆமா, இவர் நற்செய்தி (அப்படி என்றால் என்னவென்று இது வரையில் அறியாத இவர்கள்) கேட்டு அப்படியே வீட்டில் சும்மா இருக்க முடியாமல் தெரு தெருவாக ஓடிக்கொண்டே இருக்கிறாராம்!! தேவன் எங்களை எப்போ எப்படி வைத்திருப்பார் என்பதை குறித்து நீங்கள் சற்றும் கவலைப்படாதீர்கள்!! ஏனென்றால் அவர் எல்லார் மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார்!! எங்களை மேலும் அப்படியே இருப்பார்!! ஆனால் உங்களுக்கு இதை எல்லாம் நம்ப நேரம் இருக்காது!! உங்கள் தெருவாசிகளுக்கு சுவிசேஷம் சொல்ல கிளம்பவில்லையா!!??//

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காக இலக்கை நோக்கி ஓடிக்கொண்டு தான் இருக்கோம். போங்க சார் போய் ஏ.சியை ஆன் பண்ணிட்டு நீங்க காலாட்டிக்கிட்டே வேத ஆராய்ச்சி பண்ணுங்க‌..

//உம்மை போன்ற வேத புரட்டர்களிடமிருந்து தப்பிக்க தான்!!//

ஆமாமா வேதத்தை புரட்டி புரட்டி பாக்கும் போது தான் தெரியுது நீங்க எப்படியெல்லாம் களைகளை நட்டு வைக்கிறீங்கன்னு.

//ஆமாம்ப்பா, இவர்கள் மேசியாவின் நண்பர்கள், ஆனால் அதே மேசியாவை (நண்பரை) இவர்கள் பிதா என்பார்கள்!! இது போன்ற கேள்விகளுக்கு மோவாயை சொறிந்துக்கொள்ளும் அளவிற்கு ஒன்றுமே இல்லை!! ஏன் நற்செய்தி அறிவிப்பதை பற்றி பேசும் காப்புறிமை உம்மிடாத்தில் இருக்கிறதோ!! தனி நபர் தாக்குதலை குறித்து அங்கே இருந்துக்கொண்டு சவுண்ட் விட வேண்டாம்!!//

மேசியாவை பிதா என்கிறோம் உங்களுக்கென்ன வந்தது, இதுவும் கூட பிதாவின் சித்தமா இருக்கும் சார். பாத்து...



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

என்ன தீப்பொறி அண்ணாச்சி, ரொம்ப டென்ஷனாகிட்டீங்க போல, போய் ரத்த அழுத்தத்தை செக் பண்ணுங்கண்ணே. அப்புறம் மாத்திரை மருந்துன்னு அலைய வேண்டியிருக்கும் இப்ப நீங்க எழுதினதுக்கு பதில்களை பார்க்கலாமா.

1) மீட்பு அனைவருக்கும் என்றால் இயேசு ஏன் சுவிஷேஷத்தை அறிவிக்க கட்டளையிடவேண்டும், அதுவும் உலகமெங்கும் போய் அறிவிக்க சொன்ன காரணம் என்ன? முதலாவது எது சுவிஷேஷம்?

//மூட மூதேவியே முதலில் நீ சொல்லு எது சுவிசேஷம் என்று.//

சொல்லவந்துருச்சு சீதேவி, நீங்க சுவிஷேஷம்ன்னு எதை நினைக்கிறீங்களோ அது சுவிஷேஷம் இல்லை என்பது மட்டும் நிச்சயம். ஆம் நாங்கள் "மூட" கிறிஸ்தவர்கள் அல்ல, விளக்கை கொளுத்தி அதை மரக்காலில் "மூடா" கிறிஸ்தவர்கள் தான், நற்செய்தி (இது என்னங்கிறெதுக்கே நீங்க வேற விளக்கம் வைத்திருப்பீர்கள்)யை அறிவிப்பது தான் சுவிஷேஷம். ஆனா பாருங்க உங்க சோம்பேரித்தனத்துனால உங்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் பணியினாலே எட்டிக்காய் மாதிரி இருக்குது என்ன செய்ய‌

2) ஆசியா மைனர், இந்தியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பாவின் சில பகுதிகள் மாத்திரமே இயேசுவின் சீடர்களால் போக முடிந்திருக்கையில் இதை அவர் சீடர்களுக்கு மட்டும் தான் அறிவிக்க சொன்னார் என இவர்கள் உளறிவருகிறார்களே இது ஏன்? உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுடன் இருப்பேன் என்பதன் அர்த்தம், உலகத்தின் முடிவு வரைக்கும் சுவிஷேஷம் அறிவிக்க வேண்டும் என்பது தான் அல்லவா.

//முதல் கேள்விக்கு ஆக்கப்பூர்வமான பதில் கொடு முதலில் பின்னர் விவாதிக்காலாம்.//

என்னது விவாதிக்கலாமா, சும்மா காமெடி பண்ணாதீங்க சார். எதிர்க்கருத்தை எடுத்து வைக்கும்போது எப்படி வார்த்தைகளை நாகரீகமா பயன்படுத்தனும்னே தெரியல இதுல உங்க கூட என்னத்தை விவாதித்து, அது சரி நீங்க கொடுத்தது பதில் இல்லையே அப்புறம் என்ன, எதுக்கு சார் மழுப்பறீங்க‌..

3) ஆப்பிரிக்காவின் தென் பகுதி, தென்னமெரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, சீனம் போன்ற இடங்களுக்கு இயேசுவின் சீடர்களா சுவிஷேஷம் அறிவிக்க சென்றார்களா?, தேவனுடைய வார்த்தை சென்றது என்றால் எப்படி, பறந்து சென்றதா, மிஷனரிகள் வாயிலாக தானே சென்றது, அதே மிஷனரி பணியை ஏன் இப்போது பகடி செய்கிறீர்கள், தூற்றுகிறீர்கள்.

//விஷ நரிகள் சாரி மிஷனரிகள் போய் 'சுவிசேஷம்' அறிவித்து நீ சொன்ன இந்த இடங்களில் அப்படியே பரிசுத்தம் பொங்கி வழிகிறது...//

ஆமாமா உங்க‌ எழுத்தில‌ ப‌ரிசுத்த‌ம் அண்டா அண்டாவா பொங்கி வ‌ழியுது பாருங்க‌, பேசாம போய் ஆர்.எஸ்.எஸ் சிலோ அல்ல‌து இ ந்து முண்ண‌னியிலோ போய் சேர் ந்திடுங்க‌ளேன். உங்க‌ளை மாதிரி ஆட்க‌ள் தான் ரொம்ப‌ தேவையாம் அவ‌ங்க‌ளுக்கு. 

4) தோமா காலம் முதல் ஆங்கிலேயெ மிஷனரிகள் காலம் வரை இந்தியாவில் நடைபெற்ற நற்செய்தி அறிவிக்கும் பணியை முற்றும் நிராகரிக்கிறீர்களா? இதற்கு இப்போது வரை இவர்களிடம் இருந்து பதில் இல்லை. ஒருவேளை நிராகரித்தால் இவர்கள் தங்கள் கூடாரத்தை கலைத்து விட்டு போகவேண்டும் (சூடு சொரணை இருந்தால்).

//தோமா அனுப்பப்பட்டார் சரி ஆங்கிலேய மிஷனரிகள் நற்செய்தி அறிவித்து என்னத்த கிழிச்சார்கள். ஏத்துக்கிட்ட உங்களூக்குள்ளேயே குழப்பம், கூச்சல்...//

திரு சோல் அவ‌ர்க‌ளின் புது மொழி " ந‌ன்றி ம‌ற‌ப்ப‌து ந‌ன்று அதை அன்றே ம‌ற‌ப்ப‌து அத‌னினும் ந‌ன்று" 

மிஷ‌ன‌ரிக‌ளால் தென் த‌மிழ‌க‌ம் எவ்வ‌கையான‌ மாற்ற‌ம் அடைன்த‌து என்ப‌தை அப்ப‌குதியில் இருன்து வ‌ ந்திரு ந்தால் தெரி ந்திருக்கும். ஆங்கிலேய‌ மிஷ‌ன‌ரிக‌ளை ப‌ற்றி பேச‌ உம‌க்கு என்ன‌ த‌குதி இருக்குன்னு யோசித்து பாரும். ப‌ல‌ ச‌மூக‌ அவ‌ல‌ங்க‌ளி கிழித்து எறி ந்தார்க‌ள் என்ப‌து என்ன‌வோ உண்மை. எங்க‌ள் ப‌குதியிலேயே ஒரு ஸ்வீடிஷ் மிஷ‌ன‌ரி ஒரு பெண்க‌ள் ப‌ள்ளியை ஆர‌ம்பித்தார்க‌ள், அத‌னால் பின் த‌ங்கிய‌ அப்ப‌குதி முழுவ‌துமே ஏற்ற‌ம் அடை ந்த‌து. நீர் எ ந்த‌ள‌வுக்கு ந‌ன்றி கெட்ட‌வ‌ராயிருக்கிறீர் என்ப‌தை இணைய‌ உல‌க‌த்துக்கு நீரே எடுத்துகாட்டிவிட்டீர்.

5) ஒருவேளை நற்செய்தியை கேள்விப்படாதவர்களாக இருந்திருந்தால் இவர்கள் இப்போது என்ன நம்பிக்கையை கொண்டிருந்திருப்பார்கள்

//ஒரு வேளை நீ பிறக்காமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பாய்?//

இதுக்கு இது ப‌தில் இல்லையே, எ ந்த‌ கோயிலில் சாமியாடிட்டு இரு ந்திருப்பீங்க‌ன்னு சொல்ல‌வேண்டிய‌து தானே அண்ணாச்சி..

6) எதையுமே அறிவிக்க தேவையிராதபோது வேதத்தில் அப்படி என்ன ஆராய்ச்சி வேண்டியிருக்கிறது? 

//எதையுமே அறிவிக்கத்தேவையில்லை என்று சொல்லவில்லை மூதேவி, கடைசிகாலத்தில் உன்போன்ற லூசுகளின் பிசாசுத்தனமான போதனைகளிலிருந்து(வேசி மார்க்கம்) "அவளை விட்டு வெளியேறு" என்ற எச்சரிக்கைக்குக் கட்டுப்படுகிறோம். மற்ற சத்திய விரும்பிகளை எச்சரிக்கிறோம். அவ்வளவே. //

ஆகா ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம்.. யார் லூசுத்த‌ன‌மா எழுதுறாங்க‌ன்ற‌தை த‌மிழ் கூறும் ந‌ல்லுல‌க‌ம் முடிவு செய்ய‌ட்டும். கிறிஸ்துவை ப‌ற்றிய‌ ந‌ற்செய்தி கெட்டுப்போகிற‌வ‌ர்க‌ளுக்கு  பைத்திய‌மாயிருக்கிற‌து.. அப்ப‌ எப்ப‌டி வ‌ச‌தி சார்..

எப்படியும் மேசியாவின் எதிரிகளே இதை வாசிப்பீர்கள், இதற்கு பதில் என்னவாக இருக்கும் என்பதை மோவாயை சொறிந்து கொண்டே யோசியுங்கள், பதில் இல்லை என்றால் நற்செய்தி அறிவிப்பதை பற்றி பேச உங்களுக்கு அருகதையில்லை. சும்மா தனி நபர் தாக்குதல் தொடுப்பதை விடுத்து கொஞ்சம் பொதுப்படையாக நிதானித்து எழுதுங்கள். 

//நீ பெரிய்ய்ய்ய புடுங்கிபோல எழுதுவதை விட்டுவிட்டு முதலில் சுவிசேஷம் என்றால் என்ன என்று எழுது, மரணம் பற்றி அறியாத மூடனுக்கு நித்தியஜீவன் பற்றி பேச அருகதையில்லை. உனக்கு வேதத்தை ஆராய மனமில்லாததால்தான் போனவன், வந்தவன் மிஷனரிக்கூட்டம் செய்த முட்டாள்தன போதனையை அப்படியே நம்பிக்கொண்டிருக்கிறாய்.//

ஆமாமா நான் பெரிய‌ புடுங்கி தான்.. உங்க‌ளை போன்றவர்கள் கிறிஸ்துவின் சபையில் நட்டுவைக்கும் விஷ‌ செடிக‌ளை புடுங்கி எறிவ‌தாக‌த்தான் உத்தேச‌ம். உங்க‌ளுக்கு நித்திய‌ ஜீவ‌ன் ப‌த்தி ரொம்ப‌ தெரியும் பாருங்க‌, முத‌லில் ந‌ர‌க‌ம்ன்னா என்னன்னு தெளிவா ஒரு முடிவிக்கு வாங்க‌...

சோல் அண்ணே, டீஜ‌ண்டா கோட் சூட் போட்டு பேஸ்புக்கில் போஸ் கொடுத்தா ம‌ட்டும் போதாது, டீஜ‌ண்டா பேச‌ க‌த்துக்குங்க‌. நீங்க‌ள் எதினால் உண்டான‌வ‌ர்க‌ள் என்ப‌தை நீங்க‌ளே வெளிச்ச‌ம் போட்டு காட்டிட்டீங்க‌ பாருங்க‌ சூப்ப‌ர்ணே, இப்ப‌டியே மெயின்டெயின் ப‌ண்ணுங்க. உங்கள் அளவுக்கு எனக்கும் கேவலாமா பேச தெரியும், ஆனால் சாக்கடையில் கல்லை எறிந்தால் நம்ம மேல தான் கழிசடை விழும் பாருங்க அதனால் தான் சாக்கடையை விட்டு ஒதுங்கி போகிறேன். நீங்க எனக்கு தனிப்பட்ட எதிரி கிடையாது, உங்க கொள்கைகளும் உங்கள் விஷ கருத்துக்களும் தான் எனக்கு எதிரிகள். தனி நபர் விமர்சனம் செய்யுமுன் ஆண்டவர் நியாயத்தில் உங்களை கொண்டு வந்து நிறுத்துவார் என்பதை யோசிங்க அப்புறம் ராஜ்யத்தில் கத்துக்கும்போது ரெண்டு பேப்பர் எக்ஸ்ட்ரா எழுதவேண்டியிருக்கும்...



-- Edited by joseph on Thursday 25th of August 2011 10:24:32 AM



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

 ஆத்துமாவின் ஆத்ம நண்பர் பெரேயன்ஸின் பதில்:

--

சரி, நீங்க ஏன் உங்க தெருவை தாண்டாமல் இருக்கிறீகள்!! போக வேண்டியது தானே உலகமெங்கும்!! யாரிடம் சொன்னாரோ அவர்கள் அதற்கு கீழ்ப்படிந்து உடனே செய்தார்கள்!! தோமையார் இந்தியாவிற்கும் வந்தார்!! இன்றைக்கு கோட் சூட் போட்டுக்கொண்டு எவனோ பணம் கொடுக்கிறான் என்று ஜம்போ ஜெட்டில் பறந்து போய் ஏற்கனவே கிறிஸ்தவ நாடுகள் (!!) என்று சொல்லும் நாடுகளுக்கு தேவன் தங்களிடம் என்ன புதுசா பேசினார் என்று சொல்லி அங்கே இருந்து பணம் பார்த்துவிட்டு வருகிறார்கள்!! இந்தியாவையே இன்னும் முழுசாக மாற்ற முடியவில்லையாம், ஆனால் கனடாவிற்கு போகிறார்களாம்!! சுவிசேஷம் என்றால் சொகுசான பயணம் என்று தான் இவர்களின் பயணங்கள் வெளிப்படுத்துகிறது!!

சுவிசேஷம் என்றால் அனைவருமே இரட்சிக்கப்படுவது:

சில கேள்விகளுக்கான விடைகளை மேசியாவின் எதிரிகள் யோசிக்கவேண்டும்

 //1) மீட்பு அனைவருக்கும் என்றால் இயேசு ஏன் சுவிஷேஷத்தை அறிவிக்க கட்டளையிடவேண்டும், அதுவும் உலகமெங்கும் போய் அறிவிக்க சொன்ன காரணம் என்ன? முதலாவது எது சுவிஷேஷம்?//

1 தீமோத்தேயு 2:3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. 4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 5. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.

 

2) ஆசியா மைனர், இந்தியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பாவின் சில பகுதிகள் மாத்திரமே இயேசுவின் சீடர்களால் போக முடிந்திருக்கையில் இதை அவர் சீடர்களுக்கு மட்டும் தான் அறிவிக்க சொன்னார் என இவர்கள் உளறிவருகிறார்களே இது ஏன்? உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுடன் இருப்பேன் என்பதன் அர்த்தம், உலகத்தின் முடிவு வரைக்கும் சுவிஷேஷம் அறிவிக்க வேண்டும் என்பது தான் அல்லவா.

3) ஆப்பிரிக்காவின் தென் பகுதி, தென்னமெரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, சீனம் போன்ற இடங்களுக்கு இயேசுவின் சீடர்களா சுவிஷேஷம் அறிவிக்க சென்றார்களா?, தேவனுடைய வார்த்தை சென்றது என்றால் எப்படி, பறந்து சென்றதா, மிஷனரிகள் வாயிலாக தானே சென்றது, அதே மிஷனரி பணியை ஏன் இப்போது பகடி செய்கிறீர்கள், தூற்றுகிறீர்கள்.

 

தேவன் அவர்களை எங்கெல்லாம் கூட்டி சென்றாரோ, அவர்கள் சென்றார்கள், அதன் பின் அப்போஸ்தலர்கள் நேரடியாக கைகளை வைத்து நியமித்தவர்கள் (திமோத்தேயு, ஆக்கிலா, ப்ரிசில்லா போன்றோர்) சென்றார்கள்!! அதன் பின் வந்தவர்கள் அனைவருமே ஒநாய்களும், சிலர் நல்லென்னத்தில் வந்திருந்தாலும் அறைகுறை வேத ஞானத்தோடு வந்தவர்கள் தான்!! இவர்கள் சுவிசேஷத்தை காட்டிலும் களைகளை தான் விதைத்து போனார்கள்!!

 

4) தோமா காலம் முதல் ஆங்கிலேயெ மிஷனரிகள் காலம் வரை இந்தியாவில் நடைபெற்ற நற்செய்தி அறிவிக்கும் பணியை முற்றும் நிராகரிக்கிறீர்களா? இதற்கு இப்போது வரை இவர்களிடம் இருந்து பதில் இல்லை. ஒருவேளை நிராகரித்தால் இவர்கள் தங்கள் கூடாரத்தை கலைத்து விட்டு போகவேண்டும் (சூடு சொரணை இருந்தால்).

 

தோமா காலத்தில் இருந்த அதே 3% தான் இன்றும் இருக்கிறது!! இந்த பதிலை பல முறை பதித்து விட்டோம்!! சூடு சொரணை இல்லாமல் தெருவில் (அதான் வீட்டில் இருப்பது இவர்களுக்கு பிடிக்காதே, தூங்கினால் கூட ப்ளாட்ஃபாரத்தில் தான் தூங்குவோம் என்று அடம்பிடிப்பவர்கள் இவர்கள்) இருந்து திரும்ப திரும்ப கேட்டாலும் எங்கள் பதில் என்னவென்றால், உங்கள் தெருவில் எத்துனை பேரிடம் நீங்கள் சுவிசேஷம் சொன்னீர்கள் என்பது தான்!!

 

5) ஒருவேளை நற்செய்தியை கேள்விப்படாதவர்களாக இருந்திருந்தால் இவர்கள் இப்போது என்ன நம்பிக்கையை கொண்டிருந்திருப்பார்கள் (இதற்கும் இப்போது வரை பதில் இல்லை)

 

ஆமா, இவர் நற்செய்தி (அப்படி என்றால் என்னவென்று இது வரையில் அறியாத இவர்கள்) கேட்டு அப்படியே வீட்டில் சும்மா இருக்க முடியாமல் தெரு தெருவாக ஓடிக்கொண்டே இருக்கிறாராம்!! தேவன் எங்களை எப்போ எப்படி வைத்திருப்பார் என்பதை குறித்து நீங்கள் சற்றும் கவலைப்படாதீர்கள்!! ஏனென்றால் அவர் எல்லார் மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார்!! எங்களை மேலும் அப்படியே இருப்பார்!! ஆனால் உங்களுக்கு இதை எல்லாம் நம்ப நேரம் இருக்காது!! உங்கள் தெருவாசிகளுக்கு சுவிசேஷம் சொல்ல கிளம்பவில்லையா!!??

 

6) எதையுமே அறிவிக்க தேவையிராதபோது வேதத்தில் அப்படி என்ன ஆராய்ச்சி வேண்டியிருக்கிறது?

 

உம்மை போன்ற வேத புரட்டர்களிடமிருந்து தப்பிக்க தான்!!

 

எப்படியும் மேசியாவின் எதிரிகளே இதை வாசிப்பீர்கள், இதற்கு பதில் என்னவாக இருக்கும் என்பதை மோவாயை சொறிந்து கொண்டே யோசியுங்கள், பதில் இல்லை என்றால் நற்செய்தி அறிவிப்பதை பற்றி பேச உங்களுக்கு அருகதையில்லை. சும்மா தனி நபர் தாக்குதல் தொடுப்பதை விடுத்து கொஞ்சம் பொதுப்படையாக நிதானித்து எழுதுங்கள்.

 

ஆமாம்ப்பா, இவர்கள் மேசியாவின் நண்பர்கள், ஆனால் அதே மேசியாவை (நண்பரை) இவர்கள் பிதா என்பார்கள்!! இது போன்ற கேள்விகளுக்கு மோவாயை சொறிந்துக்கொள்ளும் அளவிற்கு ஒன்றுமே இல்லை!! ஏன் நற்செய்தி அறிவிப்பதை பற்றி பேசும் காப்புறிமை உம்மிடாத்தில் இருக்கிறதோ!! தனி நபர் தாக்குதலை குறித்து அங்கே இருந்துக்கொண்டு சவுண்ட் விட வேண்டாம்!!

--



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
தியாக தீபங்களான மிஷினரிகளை தூஷிக்கும் காட்டுமிராண்டி சோலுசொலீஷன் (ஆத்தும பிசின்)...
Permalink  
 


joseph wrote:

இயேசுவினிடத்தில் விசுவாசம் உள்ளோரை குழப்பி இடறல் அடையச்செய்கின்றவர்களுக்கு என்ன செய்யலாம் என்பதை மாற்கு 9:42- ல் தெளிவாக கொடுத்துள்ளார் ஆண்டவர். பொதுவாக இடறல் அடையச்செய்கிறவர்கள் வெளியே இருந்து வர மாட்டார்கள், நாம் நம்புவது போன்ற ஒன்றையே தாங்களும் நம்புவதாக சொல்லிக்கொள்வார்கள் அப்புறம், இயேசுவை யாரும்  தொழவில்லை என்பார்கள், அவர் தொழத்தக்கவர் அல்ல என்பார்கள் கடைசியில் இரட்சிப்பு தேவையில்லை என்பார்கள் அப்புறம் எல்லாருக்கும் மீட்பு என்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வஞ்சக வலையில் சிக்க வைப்பார்கள்.


joseph wrote:

சில கேள்விகளுக்கான விடைகளை மேசியாவின் எதிரிகள் யோசிக்கவேண்டும்

1) மீட்பு அனைவருக்கும் என்றால் இயேசு ஏன் சுவிஷேஷத்தை அறிவிக்க கட்டளையிடவேண்டும், அதுவும் உலகமெங்கும் போய் அறிவிக்க சொன்ன காரணம் என்ன? முதலாவது எது சுவிஷேஷம்?

2) ஆசியா மைனர், இந்தியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பாவின் சில பகுதிகள் மாத்திரமே இயேசுவின் சீடர்களால் போக முடிந்திருக்கையில் இதை அவர் சீடர்களுக்கு மட்டும் தான் அறிவிக்க சொன்னார் என இவர்கள் உளறிவருகிறார்களே இது ஏன்? உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுடன் இருப்பேன் என்பதன் அர்த்தம், உலகத்தின் முடிவு வரைக்கும் சுவிஷேஷம் அறிவிக்க வேண்டும் என்பது தான் அல்லவா.

3) ஆப்பிரிக்காவின் தென் பகுதி, தென்னமெரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, சீனம் போன்ற இடங்களுக்கு இயேசுவின் சீடர்களா சுவிஷேஷம் அறிவிக்க சென்றார்களா?, தேவனுடைய வார்த்தை சென்றது என்றால் எப்படி, பறந்து சென்றதா, மிஷனரிகள் வாயிலாக தானே சென்றது, அதே மிஷனரி பணியை ஏன் இப்போது பகடி செய்கிறீர்கள், தூற்றுகிறீர்கள்.

4) தோமா காலம் முதல் ஆங்கிலேயெ மிஷனரிகள் காலம் வரை இந்தியாவில் நடைபெற்ற நற்செய்தி அறிவிக்கும் பணியை முற்றும் நிராகரிக்கிறீர்களா? இதற்கு இப்போது வரை இவர்களிடம் இருந்து பதில் இல்லை. ஒருவேளை நிராகரித்தால் இவர்கள் தங்கள் கூடாரத்தை கலைத்து விட்டு போகவேண்டும் (சூடு சொரணை இருந்தால்).

5) ஒருவேளை நற்செய்தியை கேள்விப்படாதவர்களாக இருந்திருந்தால் இவர்கள் இப்போது என்ன நம்பிக்கையை கொண்டிருந்திருப்பார்கள் (இதற்கும் இப்போது வரை பதில் இல்லை)

6) எதையுமே அறிவிக்க தேவையிராதபோது வேதத்தில் அப்படி என்ன ஆராய்ச்சி வேண்டியிருக்கிறது? 

எப்படியும் மேசியாவின் எதிரிகளே இதை வாசிப்பீர்கள், இதற்கு பதில் என்னவாக இருக்கும் என்பதை மோவாயை சொறிந்து கொண்டே யோசியுங்கள், பதில் இல்லை என்றால் நற்செய்தி அறிவிப்பதை பற்றி பேச உங்களுக்கு அருகதையில்லை.

சும்மா தனிநபர் தாக்குதல் தொடுப்பதை விடுத்து கொஞ்சம் பொதுப்படையாக நிதானித்து எழுதுங்கள். 


 நண்பர் ஜோசப் அவர்கள் பொறுப்பான உத்யோகமும் சமுதாயத்தில் நன்மதிப்பும் பெற்றவர் ஆவார்;ஆனாலும் அவர் தன்னைத் தாழ்த்திக்கொண்டு ஆரோக்கிய உபதேசத்துக்காக எழுதி வ‌ருகிறார்;ஆனால் அவருடைய நல்லெண்ணத்தையும் கரிசனையையும் வைராக்கியத்தையும் சற்றும் பொருட்படுத்தாது அவரை தேவையில்லாமல் தரக்குறைவாகவும் ஒருமையில் விளித்தும் (மேசியாவின்) எதிரியான சோலு தொடர்ந்து எழுதிவருகிறான்;இதே போக்கில் இவர்கள் தொடர்ந்து எழுதிவருவதால் எந்தவொரு கருத்தையும் ஆய்ந்தறிய வாய்ப்பில்லாத இறுக்கமான சூழல் நிலவுவதை பலமுறை பாரத்துடன் குறிப்பிட்டுள்ளோம்;ஆனால் இதில் என்ன அற்ப சந்தோஷமோ தன்னை எதிர்த்து எழுதுவோரை ஒருமையில் குறிப்பிட்டும் தரக்குறைவாக தூஷித்தும் அவதூறு செய்வதை வழக்கமாகவே வைத்திருக்கின்றனர், (மேசியாவின்) எதிரிகளான முன்னாள் விமானப் படை அதிகாரிகள்;இவர்கள் மற்றவர்களை பேடிகள் என்றும் அலிகள் இகழுவது வழக்கம்;ஆனால் இவர்களுடைய எழுத்துக்களைப் பார்த்தால் இவர்களே பேடிகளைப் போல அறையில் உட்கார்த்துகொண்டு ஓயாமல் அவதூறுகளைப் பரப்புகிறார்கள் என்பதும் இவர்களுடைய தரக்குறைவான எழுத்துக்களுக்குக் காரணமானது இவர்களுடைய பலவீனமான இருதயமும் கீழ்த்தரமான எண்ணங்களுமே என்பது தெளிவாகிறது.

‌இதோ அண்மையில் மிகவும் யதார்த்தமாகவும் நேர்த்தியாகவும் நண்பர் ஜோசப் அவர்கள் எழுதியுள்ள மேற்கண்ட கருத்துக்களை (மேசியாவின்) எதிரிகள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை வாசக அன்பர்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்;நண்பர் ஜோ அவர்கள் (மேசியாவின்) எதிரிகளின் தளத்தைப் பார்வையிடுவதில்லை என்று தீர்மானித்துள்ள நிலையில் அவரை வரம்புமீறி தூஷித்துள்ள இந்த வரிகளை அவருடைய கவனத்துக்குக் கொண்டு செல்லும் பாவத்தை செய்யவேண்டாமே என்று நானும் தயங்கினேன்;ஆனாலும் மல்டி லெவல் ...யாளனான சோல்சோலீஷன் என்பவன் தொடர்ந்து செய்துவரும் தூஷணங்களுக்குரிய பதிலைத் தரவேண்டும் என்று தோன்றியதால் இதோ அவற்றை இங்கே கொண்டு தருகிறேன்.

Soulsolishan:

//சில கேள்விகளுக்கான விடைகளை மேசியாவின் எதிரிகள் யோசிக்கவேண்டும்//

1) மீட்பு அனைவருக்கும் என்றால் இயேசு ஏன் சுவிஷேஷத்தை அறிவிக்க கட்டளையிடவேண்டும், அதுவும் உலகமெங்கும் போய் அறிவிக்க சொன்ன காரணம் என்ன? முதலாவது எது சுவிஷேஷம்?

மூட மூதேவியே முதலில் நீ சொல்லு எது சுவிசேஷம் என்று.

2) ஆசியா மைனர், இந்தியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பாவின் சில பகுதிகள் மாத்திரமே இயேசுவின் சீடர்களால் போக முடிந்திருக்கையில் இதை அவர் சீடர்களுக்கு மட்டும் தான் அறிவிக்க சொன்னார் என இவர்கள் உளறிவருகிறார்களே இது ஏன்? உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுடன் இருப்பேன் என்பதன் அர்த்தம், உலகத்தின் முடிவு வரைக்கும் சுவிஷேஷம் அறிவிக்க வேண்டும் என்பது தான் அல்லவா.

முதல் கேள்விக்கு ஆக்கப்பூர்வமான பதில் கொடு முதலில் பின்னர் விவாதிக்காலாம்.

3) ஆப்பிரிக்காவின் தென் பகுதி, தென்னமெரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, சீனம் போன்ற இடங்களுக்கு இயேசுவின் சீடர்களா சுவிஷேஷம் அறிவிக்க சென்றார்களா?, தேவனுடைய வார்த்தை சென்றது என்றால் எப்படி, பறந்து சென்றதா, மிஷனரிகள் வாயிலாக தானே சென்றது, அதே மிஷனரி பணியை ஏன் இப்போது பகடி செய்கிறீர்கள், தூற்றுகிறீர்கள்.

விஷ நரிகள் சாரி மிஷனரிகள் போய் 'சுவிசேஷம்' அறிவித்து நீ சொன்ன இந்த இடங்களில் அப்படியே பரிசுத்தம் பொங்கி வழிகிறது...

4) தோமா காலம் முதல் ஆங்கிலேயெ மிஷனரிகள் காலம் வரை இந்தியாவில் நடைபெற்ற நற்செய்தி அறிவிக்கும் பணியை முற்றும் நிராகரிக்கிறீர்களா? இதற்கு இப்போது வரை இவர்களிடம் இருந்து பதில் இல்லை. ஒருவேளை நிராகரித்தால் இவர்கள் தங்கள் கூடாரத்தை கலைத்து விட்டு போகவேண்டும் (சூடு சொரணை இருந்தால்).

தோமா அனுப்பப்பட்டார் சரி ஆங்கிலேய மிஷனரிகள் நற்செய்தி அறிவித்து என்னத்த கிழிச்சார்கள். ஏத்துக்கிட்ட உங்களூக்குள்ளேயே குழப்பம், கூச்சல்...

5) ஒருவேளை நற்செய்தியை கேள்விப்படாதவர்களாக இருந்திருந்தால் இவர்கள் இப்போது என்ன நம்பிக்கையை கொண்டிருந்திருப்பார்கள்

ஒரு வேளை நீ பிறக்காமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பாய்?

6) எதையுமே அறிவிக்க தேவையிராதபோது வேதத்தில் அப்படி என்ன ஆராய்ச்சி வேண்டியிருக்கிறது? 

எதையுமே அறிவிக்கத்தேவையில்லை என்று சொல்லவில்லை மூதேவி, கடைசிகாலத்தில் உன்போன்ற லூசுகளின் பிசாசுத்தனமான போதனைகளிலிருந்து(வேசி மார்க்கம்) "அவளை விட்டு வெளியேறு" என்ற எச்சரிக்கைக்குக் கட்டுப்படுகிறோம். மற்ற சத்திய விரும்பிகளை எச்சரிக்கிறோம். அவ்வளவே. 

எப்படியும் மேசியாவின் எதிரிகளே இதை வாசிப்பீர்கள், இதற்கு பதில் என்னவாக இருக்கும் என்பதை மோவாயை சொறிந்து கொண்டே யோசியுங்கள், பதில் இல்லை என்றால் நற்செய்தி அறிவிப்பதை பற்றி பேச உங்களுக்கு அருகதையில்லை. சும்மா தனி நபர் தாக்குதல் தொடுப்பதை விடுத்து கொஞ்சம் பொதுப்படையாக நிதானித்து எழுதுங்கள். 

நீ பெரிய்ய்ய்ய புடுங்கிபோல எழுதுவதை விட்டுவிட்டு முதலில் சுவிசேஷம் என்றால் என்ன என்று எழுது, மரணம் பற்றி அறியாத மூடனுக்கு நித்தியஜீவன் பற்றி பேச அருகதையில்லை. உனக்கு வேதத்தை ஆராய மனமில்லாததால்தான் போனவன், வந்தவன் மிஷனரிக்கூட்டம் செய்த முட்டாள்தன போதனையை அப்படியே நம்பிக்கொண்டிருக்கிறாய்.

Tag: VNK@ஜோசஃப் பக்கம்



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard