Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வசனமா, மனதின் பிரமாணமா?


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
வசனமா, மனதின் பிரமாணமா?
Permalink  
 


Context என்று ஒரு வார்த்தை இருக்கிறது , Mr.Soul! வேத வசன வியாக்கியானத்தின் போது அதை பயன் படுத்த வேண்டும்.

  • "அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்."(மத்தேயு 24:23)

இது எந்த context இல் சொல்லப்பட்டிருக்கிறது என்று அறிய முன் பின் உள்ள வசனங்களை வாசிக்க வேண்டும். வாசித்தால் தெரிவது என்ன? இது இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறித்து சொல்லப்பட்ட வசனம் என்று புரிகிறது. அவர் வருகை எப்படி இருக்கும்? அனைவரும் காணும் படி இருக்கும். யாரும் மிஸ் பண்ண முடியாத நிகழ்வாக இருக்கும்.

  • "மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்." ("27)

எனவே யாராவது இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நடந்து முடிந்து விட்டது, அவர் வந்து விட்டார், அவர் இங்கு இருக்கிறார், அங்கு இருக்கிறார், பூட்டிய அறை வீட்டிற்குள் (!?) இருக்கிறார், வனாந்திரத்தில் இருக்கிறார் என்று சொன்னால் நம்பவேண்டாம் என்பது அந்த வசனத்தின் உண்மை அர்த்தமாகும்

மற்றபடி ஆண்டவர் அவர் பிள்ளைகளை சந்திப்பதை பற்றியோ, பேசுவதை பற்றியோ இங்கு சொல்லப்படவில்லை,சொல்லப்படவேயில்லை!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

(மேசியாவின்) எதிரிகளுடனான விவாதத்தில் இயேசுகிறித்துவை தொழத்தக்க தெய்வமாக ஏற்றுக்கொள்ளும் யௌவன ஜனம் தளத்தின் நண்பர்கள் முதிர்ச்சியுடனும் நிதானத்துடன் பங்கேற்றுவருவது குறித்து அதிக மகிழ்ச்சி;(மேசியாவின்) எதிரிகள் எவ்வளவு தான் கோபப்படுத்தினாலும் உணர்ச்சிவயப்படாமல் சத்தியத்தை மாத்திரம் எடுத்துரைக்க முயற்சிப்பதன் மூலம் தாங்கள் ஒவ்வொருவரும் தத்தமது மாண்பை வெளிப்படுத்துகிறீர்கள்; இந்நிலையில் நீண்டு கொண்டே போகும் சில திரிகளிலிருந்து சில கருத்துக்களைப் பிரித்தெடுத்து தனி திரியாக அமைப்பதில் தோழி கோல்டா அவர்கள் சிறப்பாக பங்காற்றி வருகிறார்கள்;ஏனைய நண்பர்களும் இதே வழிமுறையினைப் பின்பற்றிடவும் நமது தளத்தின் முகப்பிலுள்ள பல்வேறு தரப்பட்ட பகுதிகளிலும் பங்காற்றிடவும் பணிவன்புடன் வேண்டுகிறேன். அவர்களால் துவக்கப்பட்ட இந்த திரியில் தள நண்பர்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல்:

//ஆண்டவர் என்னோடு பேசினார் என்று சொல்லும் ... நாங்கள் நம்புவதில்லை. நீங்கள் வேண்டுமானால் நம்புங்கள். எழுதியதற்கு மிஞ்சி எண்ணவேண்டாம். உமது வசனமே சத்தியம். அப்படி ஒவ்வொருவருடனும் அவர் பேசுவதாக இருந்தால் எதற்கு சுவிசேஷம்? அவரே நேரடியாக எல்லாருடனும் பேசலாமே? //

என்ன சொல்றது? இடக்கு மடக்காவே பேசுறீங்க!

//உங்களுடன் என்ன பேசுகிறார்? சும்மா ஆவியில் உணர்த்தப்பட்டேன், உள்ளத்தில் பேசினார் என்றெல்லாம் கதை விடக்கூடாது. எவ்வளவு துணிவிருந்தால் இயேசுகிறிஸ்துவை முகமுகமாய்க் கண்டேன், என்னோடு அளவளாவினார் என்றெல்லாம் அளக்கிறீர்கள்... //

நான் இதுவரை ஒரு தரிசனமும் பார்த்ததில்லை!

//பொய்யும் பொய்க்குப்பிதாவுமான பிசாசினாலுண்டாவர்கள். போதாததற்கு 'பரிசுத்த ஆவி' என்ற ஒரு மூன்றாவது நபர் வேறு.... //

நீங்க கம்ப்ளீட்டா வேற frequency யில் இருக்கீங்க. அதாவது மந்தைக்கு வெளியே இருக்கீங்க.

 

 

 



-- Edited by golda on Wednesday 24th of August 2011 09:12:32 PM

__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சோல்:

//அப்ப எல்லாத்துக்கும் ஜெபித்து ஆண்டவரிடமே கேட்டுக்கொள்ளலாமெ. வேதம் எதற்கு? //

(உங்களைப் போன்ற ஆட்கள் புரட்டத்தான்!)

பழைய ஏற்பாடோ, புதிய ஏற்பாடோ வசனத்தை அப்படியே எழுத்தின்படி இம்மி பிசகாமல் கைக் கொண்டால் போதும் என்று நினைத்தால் நீங்க ஒரு பரிசேயர். எப்போழுதும் பரிசேயர்களை ஆண்டவருக்குப் பிடிப்பதில்லை!!

பழைய ஏற்பாட்டில் ஆவியானவர் கொடுக்கப்படவில்லை. எனவே எல்லா விஷயத்திற்கும் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்களை ஆண்டவர் மோசே மூலமாக வெளிப்படுத்திக் கொடுத்தார். இப்ப நாம் தேவனின் பிள்ளை என்றால் தேவ ஆவியானவரால் நடத்தப்பட வேண்டும். எல்லா வசனங்களும் logos. அந்தந்த சூழ்நிலைக்கு சொல்லப்படும் வார்த்தை rhema.

ரோமர் 8:14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.

//ஆண்டவர் என்னிடம் பேசினார் என்று எவன் சொன்னாலும் அவன் பிசாசின் வஞ்சனையில் இருக்கிறான் என்றுதான் அர்த்தம்.//

ஏன் அவர் என்ன ஊமையா? எப்படி இப்படி துணிகரமா சொல்ல முடியுது??

//தகுதியானவர்களுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் நமக்கு தேவன் எதையுமே கொடுப்பதற்கில்லை.//

இது என்னவோ உண்மைதான்!

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

வசனமா, மனதின் பிரமாணமா?

இது அங்கே சகோ சந்தோஷ் கேட்ட கேள்விகளுக்கு என் பதில்கள்:

 

****

சகோதரர் ராஜ்குமார் அவர்களே,

என்னுடைய சில சந்தேகங்கள் : (தனி திரியில் வேண்டுமானால் பதிலளியுங்கள்)

நான் உங்கள் சொந்த சகோதரர் என வைத்துக் கொள்ளுங்கள்.

1.இப்போது நான் ஒயின் அருந்தி விட்டு வந்திருக்கிறேன். ஏன் அருந்தினாய் என்பதற்க்கு இயேசுவும் அருந்தினாரே அது எப்படி தவறாகும்? என கேட்கிறேன். இதற்கு என்ன பதில் சொல்வீர்கள். வேதம் சொல்வது போல வெறி ஏறும் வரை குடிக்காமல் லிமிட்டாக குடிக்கலாம் என சொல்வீர்களா?

 

வசனத்தின்படி ஆராய்ச்சி செய்து பதில் கண்டு பிடித்தால் - அளவா குடிக்கலாம் என்று வரும். நம் கலாச்சாரம் சார்ந்த மனதின் பிரமாணம் தவறு என்று சொல்லும்.

 

2. பன்றி கறியை ஒரு நாள் தின்று விட்டு வருகிறேன். அதை தின்பது சரி என்று வசனமும் காண்பிக்கிறேன். (அப்.11.7) நான் செய்ததை சரி என ஒப்புக் கொள்வீர்களா?

 

Pork(காய்கறி சாப்பிடும் வெள்ளைப் பன்றி), Beef - பலர் சாப்பிடத்தான் செய்கிறார்கள். நான் சாப்பிடுவதில்லை என்றாலும் இது தவறென்று வசனத்தின்படியோ, மனதின் பிரமாணத்தின்படியோ எனக்குத் தெரியவில்லை. கருப்புப் பன்றி சாப்பிடுவது வேதப் பிரமாணத்திபடி தவறா என்று தெரியவில்லை. ஆனால் என் மனதின் பிரமாணத்தின்படி தவறு்தான் !

 

3. வேதம் ஒரு பால் உறவுகளை ஆதரிக்கவில்லை என ஆதாரத்தோடு சொல்லும் நீங்களே அது ஹார்மோன் கோளாறு என அறிவியல் சொல்வதை ஆதரிக்கிறீர்கள். அப்படியானால் இயற்கையான நிகழ்வுக்கு அவன் எப்படி குற்றவாளி ஆக முடியும்.?

 

ஹார்மோன் காரணமாக இச்சையோடு ஒரு பெண்ணைப்/ஆணைப் பார்த்தால் சரியா தவறா? இது மனதின் பிரமாணத்தின்படியும், வேத பிரமாணத்தின்படியும் தவறுதான்! ஹார்மோன் மேல் பழி போட முடியாது!

 

*****

என் கருத்து: எனவேதான் நமக்கு தேவ நடத்துதல், ஆவியானவரின் உதவி தேவைப்படுகிறது. பரிசேயர்கள் எழுத்தின்படி நியாயப்பிரமாணத்தை இம்மி பிசகாமல் கைக்கொண்டார்கள். ஆனால், இயேசு கிறிஸ்து அவர்களைத்தான் அதிகமாக கடிந்து கொண்டார். ஏனென்றால் வெளிப்பாடு இல்லாமல் , இரக்கம்,நீதி இல்லாமல் வசனத்தைக் கைக்கொண்டார்கள்.

எனவே நாம் செய்ய வேண்டியது முழுவதும் மனதின் பிரமாணத்தின்படி நடப்பதோ, பரிசேயர்கள் போல் வசனத்தைக் கைக் கொள்வதோ அல்ல. தேவ ஆவியானவர் மூலமாக வெளிப்பாடு பெற்று அதன்படி நடப்பது. ஆவியானவர் இயேசு கிறிஸ்துவைத்தான்(அதாவது வசனத்தைத்தான்) உயர்த்திப் பேசுவார். வசனத்தை பரிசேயர்கள் போல் அல்லாமல், சரியாகப் புரிந்து கொண்டு கைக்கொள்ள உதவி செய்வார்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard