[உலகக் காரியங்களையெல்லாம் விரல் நுனியில் வைத்திருக்கும் பெண்கள், முக்கியமாக ஆவிக்குரிய சகோதரிகள் தேவ காரியங்களில் இன்னும் பேதைகளாகவே இருக்கிறார்கள் அல்லது பேதைகளாகப் பாவிக்கப்படுகிறார்கள்;காரணம்,ஒருபுறம் நீங்கள் அடிக்கடி சொல்லுவது போல சமுதாயத்தில் மாத்திரமல்ல, சபைகளிலும் காலங்காலமாக நிலவி வரும் ஆணாதிக்க மனப்பான்மையும் மறுபுறம் பெண்களிடையே நிலவிவரும் அடங்கிப்போகும் தன்மை அல்லது எளிதில் வஞ்சிக்கப்படும் தன்மையுமே;அதில் அபூர்வமாக ஒருசிலர் நீங்கள் குறிப்பிட்டது போல இருக்கலாம்;]
அபூர்வம் எல்லாம் இல்லை! CSI சபைகளில் பெண்கள் ஆவிக்குரிய காரியங்களில் சிறந்து விளங்கத்தான் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். So called, ஆவிக்குரிய சபைகளில் தான் நிலைமை கொஞ்சம் மோசம். நம் கண்ணுக்குத் தெரியாத 7000 பெண்களை ஆண்டவர் வைத்திருப்பார்.
[அதிலும் ஆண்களுக்கிடையே புகுந்து ஆக்கப்பூர்வமாகவும் ஆக்ரோஷமாகவும் வாதிடும் பொறுமை பல பெண்களுக்கு இருப்பதில்லை;நீங்கள் மெய்யாகவே ஒரு பெண்ணாக இருந்து இவ்வளவையும் செய்திருந்தால் அது மெய்யாகவே பாராட்டுக்குரியதே;]
?? பாராட்டுக்கு நன்றி! ஏதோ சிங்கம் புலியோடு சண்டை போட்டது போல் சொல்றீங்க!
[இப்போதைக்கு உங்களை எனது பாசத்துக்குரிய சகோதரியாக மனப்பூர்வமாக நம்பி ஏற்றுக்கொள்ளுகிறேன்;அதற்கு ஒரே காரணம்,ஆண்களில் யாரும் இதுவரை ஏஞ்சல் டிவியின் சாது டீமுக்கு ஆதரவாக எழுதியதில்லை;பெண்கள் மாத்திரமே அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவளித்து வருகிறார்கள்;ஏனெனில் பெண்கள் எப்போதும் ஆழ்ந்து சிந்திப்பதில்லை;மேலோட்டமாகவே எதையும் நம்பிவிடுகிறார்கள்;எனவே நீங்கள் நிச்சயமாகவே ஒரு பெண்ணாக இருக்கவேண்டும் இப்போதைக்கு தோன்றுகிறது..!]
சகோ கொல்வின் கல்யாணத்திற்கு எல்லோரும் இலங்கை செல்வோம். இலங்கையை பார்த்த மாதிரியும் இருக்கும். ஒருவரை ஒருவர் பார்த்த மாதிரியும் இருக்கும். உங்க சந்தேகம் தீர்ந்த மாதிரியும் இருக்கும்! சகோ கொல்வின் எல்லாம் உங்க கையிலதான் இருக்கு!
[அவர்கள் இருவருமே பெண்கள் என்று எனது சிறுவயதில் நினைத்துக்கொண்டிருந்தேன்;மீடியாவின் வெளிச்சத்தில் அவர்கள் வந்தபிறகே அவர்கள் இருவருமே ஆண்கள் என்பதை அறியமுடிந்தது;]
சுஜாதா பிடிக்கும். இப்ப அப்படி யாரும் புனை பெயரிலோ, பெண் பெயரிலோ எழுதுவது போல் தெரியவில்லை.
சோல்சொலூசன் :{ 3.யோவான் 8:44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்;4. மத்தேயு 7:6 பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன்போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும். }
3) யோவன் [ 8 : 44 ] ஐநன்றாகபடியுங்கள் , கிறஸ்து எந்தநோக்கத்தில் அவ்வாறு பேசுகிறார் என்று ஆராயுங்கள், பரிசுத்த ஆவியானவரின் துனைவேண்டி அழைத்து அவரின் வழிநடத்துதலோடு படியுங்கள் , வேதவசனம் நமக்கு அருளப்பட்டது இரட்ப்புக்காக, எள்ளிநகையாட அல்ல , " நீங்கள் யாருடைய வழிநடத்துலுக்கு உஙகளை ஒப்புக்கொடுத்துள்ளீர்கள் என்னும் பொருள்படவே அவ்வாறு அழைத்துள்ளார், மேலும் அவர்அதிகாரம் பெற்றவர் ஏனெனில் அவர் பிதாவின் நேசகுமாரர், இந்த உலகை பிதாபடைத்தபோது அவருடனே இருந்த வார்தையானவர். இதெல்லாம் தாங்கள் அறியாதாஎன்ன ?
4 ) மத்தேயு [ 7 : 6 ] ஐ இரண்டொரு வரிகளில் விளக்கமுடியாது , வேண்டுமானால் தனியாக ஒரு திரியை துவக்கி விளக்க முயற்சிக்கலாம் .
-- Edited by josebose on Wednesday 17th of August 2011 03:39:02 PM
அன்பான நண்பர் ஜோஸ்போஸ் அவர்களே,
நான் எழுத்துப்பிழைகளைக் குறித்து அடிக்கடி பல நண்பர்களையும் அறிவுறுத்தியதால் அவர்கள் என்னை எப்போதும் கோபித்துக் கொள்ளுவார்கள்; கடவுள் அதையெல்லாம் பார்ப்பதில்லை, என்பதாக; ஆனாலும் என்னால் இயன்ற மட்டும் எழுத்துப்பிழையோ இலக்கணப் பிழையோ இல்லாதவண்ணம எழுத முயற்சிக்கிறேன்;தங்கள் பின்னூட்டத்திலும் பல எழுத்துப்பிழைகள் இருப்பதைக் காணமுடிகிறது; அதனை நான் இப்போதைக்கு சரிசெய்துவிட்டாலும் எப்போதும் அது இயலாத காரியமாகும்.
எழுத்துப் பிழைக்கு தாங்கள் எழுதும் தமிழ் பலகையே காரணமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்;அப்படியானால் நீங்கள் நமது தளத்தின் வலதுமூலையில் மெனுபாரில் இருக்கும் "தமிழ் பலகை" என்பதை சுட்டி அதில் எழுதி பதிக்கலாமே..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
பெண்கள் இப்பல்லாம் ரொம்ப மாறிட்டாங்க சில்சாம் அவர்களே! எல்லா விஷயமும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எல்லாவற்றிலும் அருமையாக தைரியமாக கருத்து சொல்கிறார்கள். அன்னை சோனியா காந்தி, அம்மா ஜெயலலிதா ஆட்சி செய்யும் நாட்டில் இப்படி நீங்க சந்தேகப் படலாமா? விஜய் டிவியில் நீயா நானா வில் பெண்கள் பேசுவதை பாருங்கள். ஜெயந்தி நடராஜன் போன்றோர் பேசுவதை NDTV யில் பாருங்க! நான் ஒருமுறை கிரிக்கெட் பற்றி ஏதோ சொன்ன போது, கிரிக்கெட் பற்றியெல்லாம் பொதுவா பெண்கள் பேச மாட்டாங்க. நீங்க வித்தியாசமா இருக்கீங்க என்று விமர்சனம் கேட்டிருக்கிறேன். 2 ம் கிளாஸ் படிக்கும் பொடிசே இப்ப கிரிக்கெட் பேசுது. ஆனால், ஒரு பெண் பேசினால் சில ஆண்களுக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.
திரு.கோல்டா அவர்களே,
பெண்கள் பேசுவதைக் குறித்து எந்த ஆச்சர்யமுமில்லை;ஆனால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதே கவனிக்கத்தகுந்தது;உலகக் காரியங்களையெல்லாம் விரல் நுனியில் வைத்திருக்கும் பெண்கள், முக்கியமாக ஆவிக்குரிய சகோதரிகள் தேவ காரியங்களில் இன்னும் பேதைகளாகவே இருக்கிறார்கள் அல்லது பேதைகளாகப் பாவிக்கப்படுகிறார்கள்;காரணம்,ஒருபுறம் நீங்கள் அடிக்கடி சொல்லுவது போல சமுதாயத்தில் மாத்திரமல்ல, சபைகளிலும் காலங்காலமாக நிலவி வரும் ஆணாதிக்க மனப்பான்மையும் மறுபுறம் பெண்களிடையே நிலவிவரும் அடங்கிப்போகும் தன்மை அல்லது எளிதில் வஞ்சிக்கப்படும் தன்மையுமே;அதில் அபூர்வமாக ஒருசிலர் நீங்கள் குறிப்பிட்டது போல இருக்கலாம்;அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்;அதிலும் ஆண்களுக்கிடையே புகுந்து ஆக்கப்பூர்வமாகவும் ஆக்ரோஷமாகவும் வாதிடும் பொறுமை பல பெண்களுக்கு இருப்பதில்லை;நீங்கள் மெய்யாகவே ஒரு பெண்ணாக இருந்து இவ்வளவையும் செய்திருந்தால் அது மெய்யாகவே பாராட்டுக்குரியதே;இப்போதைக்கு உங்களை எனது பாசத்துக்குரிய சகோதரியாக மனப்பூர்வமாக நம்பி ஏற்றுக்கொள்ளுகிறேன்;அதற்கு ஒரே காரணம்,ஆண்களில் யாரும் இதுவரை ஏஞ்சல் டிவியின் சாது டீமுக்கு ஆதரவாக எழுதியதில்லை;பெண்கள் மாத்திரமே அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவளித்து வருகிறார்கள்;ஏனெனில் பெண்கள் எப்போதும் ஆழ்ந்து சிந்திப்பதில்லை;மேலோட்டமாகவே எதையும் நம்பிவிடுகிறார்கள்;எனவே நீங்கள் நிச்சயமாகவே ஒரு பெண்ணாக இருக்கவேண்டும் இப்போதைக்கு தோன்றுகிறது..!
எழுத்தாளர்கள் சுஜாதா மற்றும் புஷ்பா தங்கதுரை ஆகியோரை உங்களுக்கு பிடிக்குமா..? அவர்கள் இருவருமே பெண்கள் என்று எனது சிறுவயதில் நினைத்துக்கொண்டிருந்தேன்;மீடியாவின் வெளிச்சத்தில் அவர்கள் வந்தபிறகே அவர்கள் இருவருமே ஆண்கள் என்பதை அறியமுடிந்தது; அதுபோலவே உங்களையும் நினைத்திருந்தேன்;அது தவறாகிவிட்டதோ..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
[அன்பான தோழி (உங்களிடம் இன்னும் நான் பேசியிராததால் எப்படியும் நீங்கள் ஒரு பெண்மணியல்ல என்பதே என்னுடைய எண்ணம்...அப்புறம் என்றாவது ஒருநாள் திடீரென வெளிப்பட்டு "ஏமாந்த கொக்கு..." என்று என்னைப் பழித்து சிரிப்பீர்களோ என்று அச்சமாகவே இருக்கிறது; ஏனெனில் எப்போதும் நானே புத்திசாலியாகத் தொடரவேண்டும் என்று நினைக்கிறேன்..!? உங்கள் எழுத்துக்களைப் பார்க்கும்போதெல்லாம் நீங்கள் ஏன் "அவ்வை சண்முகி"யாக இருக்கக்கூடாது என்றே தோன்றுகிறது.) கோல்டா அவர்களே,]
ஆஹா! இந்த பிரச்சினை இன்னும் தீர வில்லையா! நானும் கூட அவ்வப்போது நினைப்பதுண்டு. பேசாமல் ஆண் புனை பெயரில் எழுதியிருக்கலாமோ என்று! ஆபாச பேச்சு வந்திருக்காது. நான் வரதட்சணையை எதிர்த்துப் பேசுவதால், காசில்லாமல் கஷ்டப்படுகிறேன், வாழ்வு கொடுப்போம் என்று நினைத்தோ என்னவோ, என் உறவினரை திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்று அங்கு போஸ்ட் பண்ணும் ஒருவர் கேட்டார்!! ஆண் பெயரில் எழுதியிருந்தால் இந்தத் தொல்லையெல்லாம் இருந்திருக்காது அல்லவா!
பெண்கள் இப்பல்லாம் ரொம்ப மாறிட்டாங்க சில்சாம் அவர்களே! எல்லா விஷயமும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எல்லாவற்றிலும் அருமையாக தைரியமாக கருத்து சொல்கிறார்கள். அன்னை சோனியா காந்தி, அம்மா ஜெயலலிதா ஆட்சி செய்யும் நாட்டில் இப்படி நீங்க சந்தேகப் படலாமா? விஜய் டிவியில் நீயா நானா வில் பெண்கள் பேசுவதை பாருங்கள். ஜெயந்தி நடராஜன் போன்றோர் பேசுவதை NDTV யில் பாருங்க! நான் ஒருமுறை கிரிக்கெட் பற்றி ஏதோ சொன்ன போது, கிரிக்கெட் பற்றியெல்லாம் பொதுவா பெண்கள் பேச மாட்டாங்க. நீங்க வித்தியாசமா இருக்கீங்க என்று விமர்சனம் கேட்டிருக்கிறேன். 2 ம் கிளாஸ் படிக்கும் பொடிசே இப்ப கிரிக்கெட் பேசுது. ஆனால், ஒரு பெண் பேசினால் சில ஆண்களுக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.
(ஆனால் சாதுவுக்கு என்மீது கடுங்கோபம் வந்து தனது டிவியில் பகிரங்கமாக சபித்தார் தெரியுமா..?)
அப்படியா ? எதற்காக?
என் கருத்துக்குக் கூட ஏஞ்சல் டிவியில் எதிர்கருத்து சொல்லியிருக்கிறார்!
[எருமை மாட்டு மேலே மழை பெய்தது போல என்பார்களே அதுபோல கொஞ்சமும் உணர்ச்சியைக் காட்டிக்கொள்ளாமல் ....எழுதியே அவனைத் துன்புறுத்தினீர்கள்]
golda wrote:சகோ சில்சாம், காட்டுவாசி சோல்சொல்யூஷன், மாங்கா மடையன் பெரேயன்ஸ் என்று திட்டும் போது ஒரு அற்ப சந்தோஷம் உண்டாகத்தான் செய்கிறது!!!
அன்பான தோழி (உங்களிடம் இன்னும் நான் பேசியிராததால் எப்படியும் நீங்கள் ஒரு பெண்மணியல்ல என்பதே என்னுடைய எண்ணம்...அப்புறம் என்றாவது ஒருநாள் திடீரென வெளிப்பட்டு "ஏமாந்த கொக்கு..." என்று என்னைப் பழித்து சிரிப்பீர்களோ என்று அச்சமாகவே இருக்கிறது; ஏனெனில் எப்போதும் நானே புத்திசாலியாகத் தொடரவேண்டும் என்று நினைக்கிறேன்..!? உங்கள் எழுத்துக்களைப் பார்க்கும்போதெல்லாம் நீங்கள் ஏன் "அவ்வை சண்முகி"யாக இருக்கக்கூடாது என்றே தோன்றுகிறது.) கோல்டா அவர்களே,
சோல்சொல்யூஷன் என்ற பெயரும் சரி,பெரேயன்ஸ் என்ற பெயரும் சரி இன்னும் சில்சாம் என்ற பெயரும் சரி, புனைப் பெயர்களாகும்; எனவே என்னைப் பொறுத்தவரை என்னுடைய புனைப் பெயரைக் குறிப்பிட்டு தூஷிக்கும்போது எனக்குக் கோபம் வருவதில்லை;அதிலும் ஊழியத்துக்கு வந்தபிறகு போதுவாகவே யார் என்னை தூஷித்தாலும் கோபம் வருவதில்லை ; (ஆனால் சாதுவுக்கு என்மீது கடுங்கோபம் வந்து தனது டிவியில் பகிரங்கமாக சபித்தார் தெரியுமா..?) எனது கோபமெல்லாம் சத்தியத்தைத் திரிப்பவர் மீது மட்டுமே; அதன் காரணமாகவே ஏஞ்சல் டிவி போன்ற பெரிய பெரிய மலைகளையெல்லாம் விரோதித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் (மேசியாவின்) எதிரிகளிடம் என்ன பிரச்சினையென்றால் அவர்களுக்கு விமர்சனத்தை எதிர்கொள்ளும் திறனோ சகிப்புத்தன்மையோ சிறிதும் இல்லை; எனவே வரைமுறையில்லாமல் சீறுகிறார்கள்;அதிலும் எனது பாசத்துக்குரிய (மேசியாவின்)எதிரியான-பெரேயன் என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் நண்பருக்கு தன்னை பெரேயன் என்று சொல்லிக்கொள்ளும் உரிமை கொஞ்சமும் இல்லை என்பதை அவர் பிரச்சினைகளை அணுகும் தன்மையே நிரூபிக்கிறது; இந்த விஷயத்தில் அவர் சிறுபிள்ளையைப் போலவே நடந்துகொள்ளுகிறார்; மேலும் அவர்மீது நானே பலமுறை பரிதாபப்பட்டிருக்கிறேன்; ஆனாலும் அவரிடம் ஆணவத்துக்கு மட்டும் குறைச்சலில்லை; சோல்சொல்யூஷன் என்பவனைக் குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை; அவன் முழுக்க முழுக்க காமெடி பீஸ் என்பது உங்களாலேயே பகிரங்கப்படுத்தப்பட்டு விட்டது; நான் ஆக்ரோஷமாக எழுதி அவனைக் கோபப்படுத்தினேன் என்றால் நீங்களோ எருமை மாட்டு மேலே மழை பெய்தது போல என்பார்களே அதுபோல கொஞ்சமும் உணர்ச்சியைக் காட்டிக்கொள்ளாமல் அண்ணே... நொண்ணே என்று ஜோவியலாக எழுதியே அவனைத் துன்புறுத்தினீர்கள்; ஆனாலும் அவர்கள் அடித்த அந்தர் பல்டிகள் அனைத்திலும் சிறப்பானது உங்கள் விஷயத்தில் "பணிவிடை" என்ற வார்த்தைக்கு புது அர்த்தங்கூறி அப்பாவி போல கொடுத்த விளக்கம் தானே..? அதை இன்னும் இன்னும் கிளறிவிட்டு குளிர்காய பார்த்த கொடுமை இன்னும் அசிங்கம்;நமைச்சலுக்கு இதமானது "ரிங்சோலின்" எனும் மருந்து என்பதை ஏற்க மறுத்து சொறிந்து கொள்வதையே சுகமாக நினைப்போரிடம் நாம் எதைச் சொல்லி புரியவைப்பது..? எனவே இவர்களுக்கு அரிபிளவை பார்ட்டிகள் எனும் புதிய நாமகரணத்தையும் சூட்டலாம்.
விடுங்க சின்ன பசங்க...பிழைத்துப் போகட்டும்...நானும் உங்கள் பாணியிலே எகத்தாளமும் பரியாசமும் பண்ணினால் சுத்தமா சத்தமா அழுதுடுவானுங்களேனு பாக்கறேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சோல் மனந்திரும்ப வேண்டும் என்ற ஆவல் உங்களிடமும் மற்றும் இவ்வினைய பக்கத்தில் பதிவிடுவோருக்கும் இருப்பின் நீங்கள் ஒருநாளை உபவாசித்து செபிக்க குறித்து அதை செயல்படுத்தலாமே!
That was done on Aug 15!
சகோ ஜோஸ்போஸ், நீங்க சொன்ன மற்றவைகளும் மிகச் சரி! ரொம்ப மோசமாகத்தான் போய் கொண்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட வார்த்தைகளை இருபக்கமும் பயன்படுத்துவதில்லை என்று வேண்டுமானால் ஒரு உடன்படிக்கை உண்டாக்கிக் கொள்ளலாம்.
என்றாலும், சகோ சில்சாம், காட்டுவாசி சோல்சொல்யூஷன், மாங்கா மடையன் பெரேயன்ஸ் என்று திட்டும் போது ஒரு அற்ப சந்தோஷம் உண்டாகத்தான் செய்கிறது!!!
சோல்சொலூசன் :{ 3.யோவான் 8:44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்;4. மத்தேயு 7:6 பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன்போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும். }
3) யோவன் [ 8 : 44 ] ஐநன்றாகபடியுங்கள் , கிறஸ்து எந்தநோக்கத்தில் அவ்வாறு பேசுகிறார் என்று ஆராயுங்கள், பரிசுத்த ஆவியானவரின் துனைவேண்டி அழைத்து அவரின் வழிநடத்துதலோடு படியுங்கள் , வேதவசனம் நமக்கு அருளப்பட்டது இரட்ப்புக்காக, எள்ளிநகையாட அல்ல , " நீங்கள் யாருடைய வழிநடத்துலுக்கு உஙகளை ஒப்புக்கொடுத்துள்ளீர்கள் என்னும் பொருள்படவே அவ்வாறு அழைத்துள்ளார், மேலும் அவர்அதிகாரம் பெற்றவர் ஏனெனில் அவர் பிதாவின் நேசகுமாரர், இந்த உலகை பிதாபடைத்தபோது அவருடனே இருந்த வார்தையானவர். இதெல்லாம் தாங்கள் அறியாதாஎன்ன ?
4 ) மத்தேயு [ 7 : 6 ] ஐ இரண்டொரு வரிகளில் விளக்கமுடியாது , வேண்டுமானால் தனியாக ஒரு திரியை துவக்கி விளக்க முயற்சிக்கலாம் .
-- Edited by josebose on Wednesday 17th of August 2011 03:39:02 PM
2. அப்போஸ்தலர் 13:10 எல்லா கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம்பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ?
1.மத்தேயு [ 3 : 7 ] ன்படி யோவன் தீர்க்கதரிசி அவ்வாறாக பரிசேய சதுசேய கூட்டத்தாரை அவ்வாறு அழைக்கிறார் , மனந்திரும்பாமல் வெறுமனே வருங்கோபத்துக்கு தப்பித்துக்கொள்ள வருபவர்களை அவ்வாறு அழைத்தாலும் அவரது நோக்கம் அவர்களை பகடி செய்வதோ தீர்ப்பிடுவதாகவோ அல்லாமல் அவர்களின் மனமாற்றத்துக்கு ஏதுவாகவே அவ்வாறு கடிந்து அழைத்தார்.
இதில் யோவான் தீாக்கதரிசியின் சுயபிரஸ்தாபமோ, தீர்ப்பிடுதலோ அடங்கவில்லை
2.அப்போஸ்தலர் [ 13 : 10 ] ன்படி பரி.பவுல் இங்கு பரிசுத்தஆவியினால் ஏவப்பட்டே மந்திரவாதியினை ஏவிய சாத்தானையும் அவனின் மகனாகும் உரிமைபெற்ற மந்திரவாதியையும் கடிந்துகொள்கிறார் , இங்கு யார் மந்திரவாதி ?
-- Edited by josebose on Wednesday 17th of August 2011 03:25:19 PM
சோல் சொலூசன் { சிந்துபாத் கதைபோல நான் திருந்தமாட்டேன் என்றவர் தற்போது இந்தப் பரிசுத்தவான்களை உபவாச ஜெபத்திற்கு அழைக்கிறார் }
நான் இங்கு இவ்வாறு பதிவிட்டதன் நோக்கம், வேதத்திற்கு ஒவ்வாத வகையில் நீங்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் சொற்கள் உண்மை கடவுளையும் அவரது நீதியையும் அறிந்திராத பிற மார்க்கத்தார் கூட பயன்படுத்த தயங்கும் சொற்களாக இருக்கிறது . உன்னை விட நான் மேலானவன், உன்னை விட நான் அதிகம் கெட்ட சொற்களை பயன் படுத்தக்கூடியவன் , தரக்குறைவான வார்தை பிரயோகம் செய்யக்கூடியவன் என்னும் மனப்பான்மையோடு நிறைந்து விவாதிப்பதனால் எழும் சுயநம்பிக்கை ego உங்களை கடவுளை விட்டு அகற்றுவதோடு அல்லாமல் , பிறரையும் ஏன் வாசிக்கும் பிற மார்க்கத்தாரிடமும், இவைகள் ஏளனத்தின் ஆவியை கிரியை செய்யும். எனவே மனிதர்களாகிய உங்களால், கிறிஸ்துவுடன் இனைந்து நின்றிருந்தாலன்றி எதனையும் சாதிக்க இயலாது என்பதனை வலியுறுத்தவே.
-- Edited by josebose on Wednesday 17th of August 2011 02:23:02 PM
This is very interesting! இருவரும் ஊழியக்காரர்களாய் இருந்தீர்களா?? உண்மைதானா? கிறிஸ்துக்கள்தான் கள்ளக் கிறிஸ்துக்கள் ஆவார்கள். தீர்க்கதரிசிகள்தான் கள்ளத் தீர்க்கதரிசிகள் ஆவார்கள். அதுபோல் இங்கும் உழியக்காரர்கள் இப்ப கள்ள ஊழியக்காரர்களாய் மாறி இருக்கிறார்கள்?!
தங்கம்...தங்கம்...அத்தனையும் தங்கம்... கோல்டா கோல்டு கோல்டா எழுதியிருக்கீங்க...கோல்டா என்றால் சும்மாவா என்னே..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சோல் மனந்திரும்ப வேண்டும் என்ற ஆவல் உங்களிடமும் மற்றும் இவ்வினைய பக்கத்தில் பதிவிடுவோருக்கும் இருப்பின் நீங்கள் ஒருநாளை உபவாசித்து செபிக்க குறித்து அதை செயல்படுத்தலாமே! அவரவர் வீட்டிலிருந்தே அதை செயல் படுத்தலாமே, இது போன்ற செயல்பாடுகளை உபவாசத்துடன் இனைந்த செபம் மட்டுமே செய்யும். கெட்ட வார்த்தைகள் பிரயோகிப்பது, நாயையும் பன்றியையும் வம்புக்கு வலிப்பது தேவன் தான் படைத்த தம் சிருஷ்டிப்பாகிய மனிதனை கேவலப்படுத்துவதோடு, தேவனுக்கே உரிய தீர்ப்பிடுதலின் உரிமையில் பங்கேற்பதாகவே மாறிவிடும். விவாதம் ஆரேக்கியமாக அமையும் வரை அது ஆத்துமத்துக்கு நன்மையை பயக்கும். ஆனால் இங்கோ ஆத்ம இரட்சிப்புக்கு இடங்கொடாமல் ஒருவரையொருவர் தூற்றுவது எந்தவகையில் வேதத்துக்கு ஏற்றதாக உள்ளது? இதை நான் எழுதும் போது யார் மனமும் புன் பட்டுவிடக்கூடாது என்று நினைத்தே எழுதுகிறேன்
[நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் உபதேசத்தில்தான் நாங்களும் "ஊழியக்காரர்களாக"த்தான் இருந்தோம், பல வருடங்களாக. சத்தியத்தின் மேல் உள்ள வாஞ்சையும், இந்தக்கிறிஸ்தவம் போதிக்கத்தவறிய (ஆத்துமா, மரணம், உயிர்த்தெழுதல், பிதா, குமாரன், பரிசுத்தாவி குறித்த தெளிவின்மை, அற்புதங்கள், அந்நிய பாஷை, தசம பாகம், உண்மைசபை, ஆயிரம் வருட கிறிஸ்துவின் அரசாட்சி) வேத உண்மைகள் வேதத்தை ஆராயத்தூண்டியது. மேலும் முக்கியமான விஷயம் பெரும்பாலான கிறிஸ்தவ ஊழியர்களுடன் கொண்ட தொடர்பால் அவர்களுடைய உள் நோக்கங்கள், பண விஷயத்தில் அவர்களுடைய உண்மையின்மை, வேதத்தில் தெளிவின்மை போன்றவற்றால் ஒரு கட்டத்தில் குழம்பிப்போய் செய்வதறியாது இருந்த சமயத்தில்தான் தேவ கிருபையால் சத்தியத்தை படிப்படியாகக் கற்றுக்கொள்ள நேர்ந்தது. ]
This is very interesting! இருவரும் ஊழியக்காரர்களாய் இருந்தீர்களா?? உண்மைதானா? கிறிஸ்துக்கள்தான் கள்ளக் கிறிஸ்துக்கள் ஆவார்கள். தீர்க்கதரிசிகள்தான் கள்ளத் தீர்க்கதரிசிகள் ஆவார்கள். அதுபோல் இங்கும் உழியக்காரர்கள் இப்ப கள்ள ஊழியக்காரர்களாய் மாறி இருக்கிறார்கள்?!
ஊழியக்காரர்கள் பிடிக்கவில்லையென்றால், ஊழியக்காரர்களை விட்டு வெளியே வாங்க, சபையை விட்டு வெளிய வாங்க.தப்பில்லை. அதற்காக சின்னப்பிள்ளைத்தனமா உன்னை எனக்குப் பிடிக்கலை. அதனால நீ சொல்ற உபதேசமும் பிடிக்கலை என்று சொல்லி தலை கீழாய் உபதேசத்தை மாற்றுவது நியாயமா?? ஆண்டவரிடம் கேட்டிருந்தீங்க என்றால் அவர் நல்ல ஊழியர்களைத் காட்டியிருப்பார்/ நல்ல சபையை காட்டியிருப்பார்/. உங்களுக்கென்று தனி ஊழியத்தைக் கூட தந்திருப்பார். இப்படி பாதை தவ்றிப் போக வேண்டிய அவசியமில்லையே.
நல்ல ஆசிரியர் பரிசுத்த ஆவியானவர்தான்/ இயேசு கிறிஸ்துதான். அவரிடம் கேட்டிருந்தால் அழகாய் எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்திருப்பாரே. இப்படி ரஸ்ஸல், ரே ஸ்மித் பின்னால் போய் வஞ்சிக்கப்பட்டிருக்க வேண்டாமே??
இளைய குமாரர்கள் திரும்பி வர வேண்டும் என்பதுதான் பிதாவின் விருப்பம். நீங்க இருவரும் திரும்பி வர வேண்டும் என்று அவர் வ்ழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறார்.