இவர்களையும் தேவன் விட்டு வைத்திருப்பது அறுப்பு காலத்தில் ஒட்டு மொத்தமாக தீயில் போட்டு பொசுக்க தான் (6 க்கு 4 கல்லறை நரகத்தில் அல்ல).
அல்ல,நண்பரே... அவர்களும் கடவுளின் பணியாளர்களாகவே இருக்கவேண்டும்; எப்படியெனில் ஆரோக்கிய உபதேசத்தை மறுப்போரின் அடுத்த சாய்ஸாக ஏன் இவர்கள் இருக்கக்கூடாது? ஏனெனில் பவுலடிகள் கூறுவதுபோல வெளிப்படையான தேவமகிமையைப் புறக்கணிப்போர் தங்கள் சிந்தைகளாலே வீணராகி உணர்வில்லாது போய் இருதயம் இருளடைவதும் அவர்கள் சொல்லுவது போல தேவசித்தம் தானோ..?
அவர்கள் (இயேசுவாகிய...) தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. (Romans.1:21)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
திடீரென அளவுக்கதிகமான கோபம் வரும் ஒரு மிகப்பெரும் குறைபாடு என்னிடம் இருப்பதால் தான் இவர்களது தளங்களுக்கு செல்லவேண்டாம் என முடிவெடுத்திருந்தேன். அந்த கோபமும் கூட தேவன் மேல் இருக்கும் வைராக்கியத்தால் தான் வருகிறது என்பது வேறு விஷயம் இருப்பினும் தேவையில்லாத வார்த்தைகளை பிரயோகப்படுத்த நேரிடுகிறது. யௌவன ஜனம் தளத்தில் மேற்கோள் காட்டப்படும் அவர்களது கருத்துக்கு மட்டும் பதில் எழுதுவது என முடிவு செய்திருந்தேன். இனியும் எனது நிலப்பாடு அப்படியே தொடரும். அவர்கள் என்னை விமர்சித்தாலும் அதை ஆண்டவர் அறிவார். தனிப்பட்ட எதிரிகளாக இவர்களை நான் எண்ணவில்லை மாறாக கிறிஸ்தவத்தில் ஊடாக வளர்ந்திருக்கும் விஷ விருட்சங்கள் இவர்கள், இவர்களுக்கு கிறிஸ்துவின் நோக்கம் புரியாது, சுவிஷேஷப்பணி பிடிக்காது.இவர்களையும் தேவன் விட்டு வைத்திருப்பது அறுப்பு காலத்தில் ஒட்டு மொத்தமாக தீயில் போட்டு பொசுக்க தான் (6 க்கு 4 கல்லறை நரகத்தில் அல்ல).தனிப்பட்ட சில கடமைகள் இருப்பதால் அவற்றை நிறைவு செய்தபின் இவர்களது உபதேசங்களையும் கருத்துக்களையும் முழுமூச்சாக எதிர்ப்பது என முடிவு செய்திருக்கிறேன்.
-- Edited by joseph on Wednesday 24th of August 2011 03:11:50 PM
உண்மைதான், இவர்கள் திருந்துவார்கள் என யாரும் எதிர்பார்ப்பதில்லை இவர்களது நூதன வேத புரட்டுகளுக்கு யாரும் பலியாகிவிட கூடாது என்பது தான் நம் ஆவல். இணையம் எனும் ஒன்று இவ்வுலகில் இருக்கும் வரை இவர்களுக்கு மறுப்பு எழுதவேண்டியது நமது கடமை. அதிகபட்சம் நாராசமாக திட்டுவார்கள், எப்படியாவது பின் வாங்கிவிட மாட்டோமா என. ஆனால் இவர்கள் நம்மை வசைபாடுவதே நமக்கு பெரிய ஆசீர்வாதம் தான்.
தங்கத்தில் பொறிக்கப்படவேண்டிய அருமையான வரிகள் நண்பர் "ஜோ" அவர்களே..!
அவர்கள் நம்மை வசைபாடுவது நமக்கு ஆசீர்வாதம் என்பதுடன் அவர்கள் வசைபாடுவதற்கான காரணத்தையும் அவர்களுடைய எரிச்சலையும் வன்மத்தையும் கவனித்தால் நாம் எந்த அளவுக்கு அவர்களுக்கு தொல்லை கொடுத்திருக்கிறோம் என்பதும் விளங்குகிறது;எனவே அவர்கள் நம்மை வசைபாடுவதே நம்முடைய வெற்றிக்கான அடையாளம் என்றும் சொல்லலாம்.
உதாரணமாக, பிரபல இந்துத்வா வெறியரான திருச்சிக்காரன் அவர்களை நான் எவ்வளவோ கோபப்படுத்தி எழுதியிருக்கிறேன்;ஆனால் அவர் இதுவரை தூஷணமாக ஒரு வார்த்தையும் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதியதில்லை;ஆனால் பூரண சற்குணரான பிதாவாகிய தேவனோடு டைரக்ட் டீலிங்கில் இருக்கும் இரஸலின் சிஷ்யர்களான இவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபமும் எரிச்சலும் பொங்குகிறதோ..?! பிழைப்பில் மண் விழுந்த காரணத்தினால் தானே..?
இவர்களுக்கு புத்தி சொல்வது நம் வேலையல்ல! இவர்கள் தளத்தை பார்த்து இன்னொருவர் வஞ்சிக்கப்படாதிருக்கவே நாம் அவர்கள் வாதங்களுக்கு பதிலளிக்கிறோம்.
எதிர்க்கப்படாத கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு சமமென்பதை மறக்கவேண்டாம் சகோதரர்களே!!!
சகோதரர் பீற்றர் சாமுவேல் அவர்களின் கருத்தை அடியேன் முழுக்க முழுக்க ஆமோதிக்கிறேன்;ஆம்,எனக்கருமையான நண்பர் கிறிஸ்டோபர் அவர்களே,இந்த ஆட்களோடு தொடர்ந்து மோதிக்கொண்டிருப்பதல்ல, நம்முடைய நோக்கம் இவர்களை கிறித்தவ வட்டாரத்துக்கு அடையாளங் காட்டவேண்டும் மற்றும் இவர்களுடைய உண்மைக்கு மாறான உபதேசங்களுக்கு சரியான பதிலடி கொடுத்தாகவேண்டும்;
நம்முடைய முன்னோர்கள் இவர்களை கண்டுங்காணாமல் விட்டு விலகிய காரணத்தினாலேயே இத்தனை கொடூரமாக வளர்ந்திருக்கிறார்கள்; இவர்களுடைய வளர்ச்சி நம்முடைய கணிப்புக்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது; ஒவ்வொரு சின்னஞ்சிறு கிராமங்களிலும் இந்த ஆட்கள் ஊடுறுவியிருக்கிறார்கள்; இவர்களுடைய இலக்கு ஆண்டவரையறியாதோர் அல்ல,கிறித்தவர்களே; அதற்காகவே இவர்கள் பணிக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பதை அநேகர் அறிந்திருக்கவில்லை;
பல சபைகளிலும் இப்படிப்பட்ட ஆட்கள் வந்தால் அவர்களை உள்ளே சேர்க்கவேண்டாம் என்றோ அவர்களோடு பேசவேண்டாம் என்றோ எச்சரிக்கிறார்களே தவிர ஏன் சேர்க்கக்கூடாது என்றோ எப்படி பேசவேண்டும் என்றோ சொல்லித்தருகிறதில்லை;ஆனால் எனது முழுநேரப் பணியே இந்த (ஓ)நாய்களை அடையாளங் காட்டுவதோடு அழித்தொழிப்பதுதான்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
உண்மைதான், இவர்கள் திருந்துவார்கள் என யாரும் எதிர்பார்ப்பதில்லை இவர்களது நூதன வேத புரட்டுகளுக்கு யாரும் பலியாகிவிட கூடாது என்பது தான் நம் ஆவல். இணையம் எனும் ஒன்று இவ்வுலகில் இருக்கும் வரை இவர்களுக்கு மறுப்பு எழுதவேண்டியது நமது கடமை. அதிகபட்சம் நாராசமாக திட்டுவார்கள், எப்படியாவது பின் வாங்கிவிட மாட்டோமா என. ஆனால் இவர்கள் நம்மை வசைபாடுவதே நமக்கு பெரிய ஆசீர்வாதம் தான்.
//அதில் எது நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள கிறிஸ்து எங்களுக்காக வேண்டுதல் செய்திருக்கிறார்!! //
அப்படியா??
II பேதுரு 3:9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
கெட்டுப் போவது என்றால் என்ன? மனந்திரும்புவது என்றால் என்ன? இந்த கருப்பு காக்காவை எப்படி வெள்ளையா காட்டப் போறீங்க?
சகோ அன்பு:
//பெரியன்ஸ் சொல்வதையும் அலட்சியமாக விட்டுவிட முடியாது. ஏனெனில் உண்மையைக் கண்டறியும் நோக்கத்தில் “Truth Seekers" எனும் தளத்தை சில ஆண்டுகளாக நடத்துகிற அவர், நல்லதொரு வேதஆராய்ச்சியாளர் என பலராலும் நம்பப்படுகிறார்.//
கோழி உங்க பேச்சு கேட்க சகிக்காமல் பறந்து போய் விட்டது!!
கோழி தன் குஞ்சுகளைக் கூட்டி சேர்ப்பது போல கூவி அழைக்கிறாரே ஜீவன் தந்த இரட்சகர்
சாக்கு போக்கு சொல்லாமலே ஜல்தியாய் ஓடிவந்து காக்கும் செட்டைகளின் கீழ் கண்டடைவாய் இரட்சிப்பை
தினமும் ஜெபிப்பதாலே வேதம் வாசிப்பதாலே நிச்சயமாய் இயேசுநாதர் செட்டையின்கீழ் நீயிருப்பாய்
கோழி சம்பந்தமாக விவாதம் திசைதிரும்பவும் மேற்காணும் ஞாயிறு பள்ளி பாடல் ஞாபகம் வந்துவிட்டது; சிறுவயதில் கற்றுக்கொண்ட இந்த பாடல் இன்றைக்கும் பெலன் செய்கிறது; அந்த காலத்தில் எல்லா ஆலயத்திலும் ஞாயிறு பள்ளி நடைபெறாது; சிஎஸ்ஐ சபைகளில் மாத்திரமே சிறுவர் ஊழியம் பெரிய அளவில் ஊக்கப்படுத்தப்பட்டது;அன்றைக்கு பசுமரத்து ஆணி போல பாய்ந்து தைத்த சத்தியமே இன்றைக்கும் மனஉறுதியினைத் தருகிறது; மேற்கண்ட பாடலை இன்றைய புரிதலின்படியும்- பெற்றுள்ள வேதஅறிவின்படியும் தியானித்து எத்தனை எளிமையாக நமக்கு சுவிசேஷம் சொல்லப்பட்டுள்ளது என்பதை எண்ணிப்பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது; இதையெல்லாம் கேட்டு வளர்ந்த சிலர், இன்றைக்கு மார்க்கம் தப்பி அலைகிற நட்சத்திரங்களைப் போலவும் உருண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களைப் போலவும் அலைவதைப் பார்க்கும்போது மெய்யாகவே மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.
புதிய ஏற்பாட்டில் இயேசுவானவர் தம்முடைய அன்பை கோழியின் பரிவுடன் ஒப்பிட்டுச் சொன்னதையும் பழைய ஏற்பாட்டில் சங்கீதக்காரன் தனது 91 வது சங்கீதத்தில்சர்வ வல்லவருடைய செட்டைகளுடன் ஒப்பிட்டு சொன்னதையும் இன்னும் தேவனுடைய மனுஷனாகிய மோசே உபாகமம்.1:31- ல் சொன்னதையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே இயேசுவானவரின் தெய்வத்தன்மை தெளிவாக விளங்குகிறது.
ஆனாலும் என்ன, கண்களிருந்தும் காணாதிருக்கவும் காதுகளிருந்தும் கேளாதிருக்கவும் (மேசியாவின்) எதிரிகள் தேவனுடைய பயங்கரத்தால் மூடப்பட்டிருக்கிறார்கள்; "ஐயோ என் ஆண்டவரே.." என்று கதறினாலும் மீண்டும் புதுப்பிக்கப்படுவார்களா என்பது துர்லபமாகவே தோன்றுகிறது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நண்பர் பெரேயனை தூண்டி விட்டு அவர் எழுதுவதை (என்னை திட்டுவதை) படித்தால் உண்மையிலே வாய்விட்டு சிரிக்கலாம் :) ஒரு standup காமடியனுக்கு உள்ள எல்லா தகுதியும் முழுமையாய் அவருக்கு இருக்கிறது.
இதுதான் யௌவன ஜனம் தள நண்பர்களின் சிறப்பியல்பாகும்... தன்னை (மேசியாவின்) எதிரி வைதால்கூட வலியைக் காட்டாமல் சிரிப்பவர்கள் மாத்திரமே இராஜாவின் இராஜ்யத்தில் 'உய்யலாலா..' பாடத்தகுதியானவர்கள்... நண்பர் ஜாண் அவர்கள் அதில் தேர்ச்சி பெற்றிருப்பது குறித்து அதிக மகிழ்ச்சி..!
நாம் இன்றைக்கு நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறித்துவை தூதர்களில் ஒருவராக சித்தரிக்கும் கூட்டத்தாருடன் போராடிக்கொண்டிருக்கிறோம்;இந்த ஒரே அம்சத்தை மையமாகக் கொண்டே இந்த தளம் அமைக்கப்பட்டது;மற்ற போதனைகளையும் உபதேசங்களையும் ஸ்தாபனங்களையும் குறித்து நமக்கு கவையில்லை;இன்றைக்கு நம்மை எதிர்க்கும் (மேசியாவின்) எதிரிகளும் ஒரு பெரிய அறுவடைக்காகக் காத்திருக்கிறார்கள்; அவர்களுக்கோ அறுப்பிலே பிச்சை கேட்டாலும் கிடைக்காது என்று வேதம் சொல்லுகிறது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அவர்களுக்கு வாசித்து புரிந்துகொள்வதில் தான் பிரச்சினை! தங்களுடைய மட்டத்திலேயே யோசிக்கிறார்கள். கீழே காணும் வசனங்கள் நியாயத்தீர்ப்புகள் அதை அனுபவிக்கிறவர்களுக்கு நல்லவை என எழுதப்பட்டவையாம்! இது தான் சூப்பர் காமெடி!!!!!!!!!!
//சங்கீதம் 119:39 நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்//.
என்னை நிந்திக்கிறவர்கள் மேற்கொண்டு அப்படி செய்யாதிருக்க அவர்கள் எனக்கு செய்த அநியாயத்திற்கு பதிலாக எனக்கு சாதகமாக எனக்கு கிடைக்கவேண்டிய நியாயம் கிடைக்கும்படி தீர்ப்பு செய்ததால் அவைகள் நல்லவைகள்!!!
//சங்கீதம் 119:52 கர்த்தாவே, ஆதிமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்.//
ஆதிமுதலாய் நீர் அநியாயம் செய்பவர்கள் கைக்கு நீதிமான்களை தப்புவிக்க அநியாயம் செய்பவர்களுக்கு சரியான தீர்ப்பு செய்துவருகிறீர். என் விஷயத்திலும் அப்படியே செய்வீர் என நினைத்து என்னை தேற்றுகிறேன்!!!
அருமையான், எளிமையான விளக்கங்களை சகோதரர் சொல்லியிருக்கிறார்.
இதற்கு பெரேயன்ஸ் தத்து பித்துன்னு ஏதோ பதில் சொல்லியிருக்கிறார்.
அவர்களுக்கு வாசித்து புரிந்துகொள்வதில் தான் பிரச்சினை! தங்களுடைய மட்டத்திலேயே யோசிக்கிறார்கள். கீழே காணும் வசனங்கள் நியாயத்தீர்ப்புகள் அதை அனுபவிக்கிறவர்களுக்கு நல்லவை என எழுதப்பட்டவையாம்! இது தான் சூப்பர் காமெடி!!!!!!!!!!
சகோ. சில்சாமை திரும்பவும் காண்பதில் மகிழ்ச்சி! எங்கே போனீர் சகோதரரே?
நண்பர் பெரேயனை தூண்டி விட்டு அவர் எழுதுவதை (என்னை திட்டுவதை) படித்தால் உண்மையிலே வாய்விட்டு சிரிக்கலாம் :) ஒரு standup காமடியனுக்கு உள்ள எல்லா தகுதியும் முழுமையாய் அவருக்கு இருக்கிறது.
//ஏசாயா 26:10ல் சொல்ல பட்ட துன்மார்க்கன் என்பவனே சாத்தான் தான் என்று அடிக்கடி ஓடி போகும் இந்த பேடிக்கு சொல்லியாச்சு!! இதை ஏதோ புதிய கண்டுபிடிப்பாக வந்து சொல்லுது!! உம் தகப்பனாகிய சாத்தானை குறித்து தான் துன்மார்க்கன் என்று சொல்லுகிறது வசனம்!! உனக்கு தான் மூல பாஷை என்றால் அலர்ஜி ஆச்சே, இல்லாட்டி போய் பார், ஒருமைக்கும் பன்மைக்கும் வித்தியாசம் தெரியாத சாத்தானின் தூதனே!! பெரிய கண்டுபிடிப்பு என்று எழுதுகிறாயா!!//
கிழே உள்ள வசனத்தில் நிதிமான் என்பது ஒருமையா பன்மையா?
ரோமர் 1:17 "விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது. "
துன்மார்க்கன் என்பது ஒரு Type Not a Person . ஆகையால் அது ஒருமையில் இருந்தாலும் பலரையே குறிக்கும்.
கிழே உள்ள வசனத்தில் சொல்லப்படுகிறவர்கள் ஒருமையா? பன்மையா?
ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர்கள்பேர் கிறுக்கப்பட்டுப்போவதாக; நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக. (சங்கீதம் 69:28)
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (வெளி 21:8)
அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள். (வெளி 20:15)
எல்லாரும் , உலகம் போன்ற வார்த்தைகைள் Context உடன் சேர்த்து வாசித்தால் இந்த காமடியார்களுக்கு வரும் குழப்பம் தேவனுடைய பிள்ளைகளுக்கு வராது.
கிழே உள்ள வசனத்தில் 'உலகமே' என்பது எத்தனை பேரை குறிக்கும்???
யோவான் 12:19 அப்பொழுது பரிசேயர் ஒருவரையொருவர் நோக்கி: நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே என்றார்கள்.
உலகமெங்கும் என்றால் உலகத்தில் உள்ள எல்லா மக்களுமா அல்லது ரோம சாம்ராஜ்யத்தில் உள்ள எல்லா மக்களுமா?
லுக்கா 2:1 அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
கிழே பவுல் தெளிவாய் 'உலகத்தை' என்ற பதத்தை புரஜாதியார்களை குறிக்கும் ஒரு சொல்லாக பயன்படுத்துகிறார். அவர்கள் என்பது யூதர்களையும் , உலகத்தை என்பது புறஜாதியார்களையும் குறிக்கிறது
ம்ம்ம்...மொத்தத்தில் நான் ஆரம்பத்தில் கேட்ட ஒரு வசனத்திற்கு கூட பதில் சொல்லவில்லை. இதையே தான் இவர்கள் குருவான ரே ஸ்மித்தும் செய்கிறான் என்பது ஊரறிந்த உண்மை. பதில் சொல்லுவதை விடுத்து, பாவத்தை மறைக்க Topic ஐ மாற்றுவது (சமாரிய பெண் போல). நண்பர் அன்பு சலித்து போய் விவாதத்தை (காமடியை) நிறுத்தியதற்க்கும் இதுவே காரணம்
அவர்களுக்கு வாசித்து புரிந்துகொள்வதில் தான் பிரச்சினை! தங்களுடைய மட்டத்திலேயே யோசிக்கிறார்கள். கீழே காணும் வசனங்கள் நியாயத்தீர்ப்புகள் அதை அனுபவிக்கிறவர்களுக்கு நல்லவை என எழுதப்பட்டவையாம்! இது தான் சூப்பர் காமெடி!!!!!!!!!!
//சங்கீதம் 119:39 நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்//.
என்னை நிந்திக்கிறவர்கள் மேற்கொண்டு அப்படி செய்யாதிருக்க அவர்கள் எனக்கு செய்த அநியாயத்திற்கு பதிலாக எனக்கு சாதகமாக எனக்கு கிடைக்கவேண்டிய நியாயம் கிடைக்கும்படி தீர்ப்பு செய்ததால் அவைகள் நல்லவைகள்!!!
//சங்கீதம் 119:52 கர்த்தாவே, ஆதிமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்.//
ஆதிமுதலாய் நீர் அநியாயம் செய்பவர்கள் கைக்கு நீதிமான்களை தப்புவிக்க அநியாயம் செய்பவர்களுக்கு சரியான தீர்ப்பு செய்துவருகிறீர். என் விஷயத்திலும் அப்படியே செய்வீர் என நினைத்து என்னை தேற்றுகிறேன்!!!
என்னையும் ஒரு பெரிரிரி...ய மனிதனாக மதித்து என் கருத்துக்களை இவ்வளவு தூரம் அலசி ஆராய்ந்து வரிவரியாக விமர்சித்து தங்கள் தளத்தில் எழுதியிருக்கும் கோவை பெரேயன்ஸ் என்னும் இக்னேஷியஸ் இளங்கோ மற்றும் திரு.சோல் சொல்யூஷன் எனும் ரிச்சர்டு ஃபெல்ஸன் ஆகியவர்களுக்கு மிக்க நன்றி!!!