ஆமா. கரெக்டா சொல்லிட்டீங்களே! ஒருத்தர் அப்படிப்பட்டவங்கதான். ஒரு முறை ஆராதனை வேளையில் ”நானே நல்ல மேய்ப்பன்” என்று ஆண்டவர் என்னுடன் பேசினார். அதே சமயம் அந்தப் பெண் ஆண்டவரை மேய்ப்பனாகவும் , விசுவாசிகள் அனைவ்ரும் அவர் கைக்குள்ளான ஆடுகளாகவும் தரிசனம் பார்த்தார்கள். எப்ப ஜெபம் செய்தாலும் அவங்க ஏதாவது தரிசனம் பார்த்திடுவாங்க!
//ஆமா...... நீங்கள் அப்படியே கற்பூரம் பாருங்க!!//
எனக்கு கொஞ்சம் நினைப்பு ஜாஸ்திதான். இப்படிப்பட்ட தமிழ் தளங்களைக் காணும் வரை, தமிழ் நாட்டில் நான் மட்டும்தான் வித்தியாசமாக சிந்திப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன்!!
சோல்:
//ரொம்ப போரடித்தால் முழுநேர காமெடி சேனலான 'ஆசீர்வாதம்' ஒரு சில நிமிடங்கள் பார்த்துவிட்டு வயிறு குலுங்க சிரிப்பதுண்டு...//
soul: //வி.செ, சாது போன்ற கழைக்கூத்தாடிகளின் நிகழ்ச்சிகளை எப்போதோ பார்த்துக்கொண்டு "கண்ணுங்களா டிவி முன்னாட அப்டியே மொலங்கால் போடுங்க...." என்றபோது மொலங்கால் போட்டவர்கள்தான் நாங்கள்.//
எப்படி இருந்த நீங்க, இப்படி மாறீட்டீங்க??
2007 லில் தான் இப்படி மாறியதாக சொல்லியிருக்கீங்க.(பெரேயன்ஸின் சாட்சி என்னவோ?) அந்த சமயத்தில்தான் ஒரு விழிப்புணர்வு அலை ஆவி மண்டலத்தில் வீசியது என்று நம்புகிறேன். அந்த சமயத்தில்தான் திரை விலகி நானும் சில காரியங்களைப் (சபை, தசம் பாகம், கடைசிக் கால வஞ்சகம்) பற்றி விழிப்புணர்வு அடைந்தேன்! துக்கம் என்னவெனில் உங்களைப் போன்றோர் அடித்த அலையில், கன்மலையாம் கிறிஸ்துவில் நிற்காமல், திசை மாறி சறுக்கலான பாதைக்கு சென்று விட்டீர்கள். இன்னும் பெரிய அலை வந்து கவிழ்க்கும் முன் திரும்ப ஆண்டவரிடம் வந்து விடுங்கள்!
//வேதத்தில் இருக்கும் புத்தகங்களை நாத்தீகன் எழுதினான், விபச்சாரக்காரன் எழுதினான் என்று சொல்லுவோர் நியூ ஏஜ் கொள்கைகளை ஆராய்வதில் எந்த ஆச்சாரியமும் இல்லையே!!//
அன்பான தோழி கோல்டா அவர்களே,
பிரசங்கி புத்தகத்தை நாத்திகன் எழுதியதாக - நீங்கள் கூறியதாக (மேசியாவின்) எதிரிகள் உங்களைக் குறித்து மீண்டும் மீண்டும் பொய்ப் பிரச்சாரம் செய்துவருகிறார்கள்; எனவே தாங்கள் அதுபோன்ற தொனியில் எழுதியதை மேற்கோள் காட்டி தங்கள் விளக்கத்தை எழுதிவிட்டு அந்த குறிப்பிட்ட கருத்துக்கு ஒரு டாக் (Tag) போட்டு வைக்குமாறு வேண்டுகிறேன்; அது பிறிதொரு சமயத்தில் சம்பந்தப்பட்ட கருத்து அமைந்துள்ள வரிகளை தேடியெடுக்க பயன்படும்.
ஒரு உண்மையான வேதமாணவர் அண்மையில் என்னிடம் இவ்வாறு சொன்னார், பழைய ஏற்பாடு இல்லாமல் புதிய ஏற்பாடு விளங்காது;புதிய ஏற்பாடு இல்லாமல் பழைய ஏற்பாடு பயனற்றது; எனவே இங்கிருந்து அங்கே செல்லவேண்டும்; அங்கிருந்து வரவேண்டும்; இதனை அது நிலைநிறுத்தும், அதனை இது நிலைநிறுத்தும், இரண்டும் சர்வ வல்லவருடைய (வாயினினின்று பிறந்த வேதப் பிரமாணம்..) இரண்டு உதடுகளைப் போன்றது என்று சொல்லுவார்கள்; இதனடிப்படையில் பிரசங்கியின் புத்தகத்தில் நிச்சயமாகவே புதிய ஏற்பாட்டுக்கு முரணான கருத்துக்கள் அமைந்துள்ளது உண்மைதான்; அதில் நாத்திகக் கருத்துக்கள் என்று சொல்லப்படுவதைவிட தத்துவஞானி அல்லது அறிவுஜீவியினால் எழுதப்பட்டது போலிருக்கிறது; பவுலடிகளின் கருத்துக்களிலும் தத்துவஞானியான பிளாட்டோவின் பாதிப்பு இருப்பதாகச் சொல்லுகிறார்கள்; அதற்காக பவுலடிகள் அவருக்கு முன்வாழ்ந்தது மறைந்த பிளாட்டோவின் கருத்துக்களையே காப்பியடித்துவிட்டார் என்று சொல்லமுடியுமா..? அதே குற்றச்சாட்டை மோசே வரைந்த பஞ்சாகமத்தின் மீதும் சுமத்துகிறார்கள்;அவர் எகிப்திய ஞானம் மற்றும் பாரம்பரியத்தின் பாதிப்பிலேயே பரிசுத்த வேதாகமத்தின் முதல் ஐந்து ஆகமங்களைப் படைத்தார் என்கிறார்,சிலர்;விசுவாசம் என்பது இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டதல்லவா..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
//நீங்கள் இது போன்ற குப்பைகளை பார்த்து தான் "அதி புத்திசாலி"யாக மாறினீர்களோ!! வேதத்தில் இருக்கும் புத்தகங்களை நாத்தீகன் எழுதினான், விபச்சாரக்காரன் எழுதினான் என்று சொல்லுவோர் நியூ ஏஜ் கொள்கைகளை ஆராய்வதில் எந்த ஆச்சாரியமும் இல்லையே!! நீங்கள் அதி புத்திசாலியாக மாறுவதின் இரகசியத்தை தெரியப்படுத்தியதற்காக நன்றி!! வேதத்தை ஆராயும் எங்களுக்கு நியூ ஏஜ் கொள்கைகளில் எந்த விருப்பமும் இல்லை!!//
உங்களுக்கு எப்பவுமே சொல்ல வரும் பாய்ண்ட் புரியாது அல்லது புரியாத மாதிரி நடிப்பீங்க, அப்படித்தானே! நான் சொல்ல வந்தது உங்களைப் போல தங்களை புத்திசாலிகள் என்று நினைத்துக் கொள்பவர்கள்தான் ரே ஸ்மித் போன்றோரின் வித்தியாசமான் உபதேசத்தால் கவரப்பட்டு வஞ்சிக்கப்படுகிறார்கள். உங்க இரண்டு பேருக்கும் நினைப்பு ஜாஸ்தி, உண்மைதானே??
//மரணத்தை குறித்து நீங்கள் நம்புவதையே தான் அவர்களும் (New Age group) நம்புகிறார்கள் என்பதை விசெ அந்த நிகழ்ச்சியில் சொல்லவில்லையா!!?? //
உங்களைப் போன்ற முட்டாள்கள் உலகத்தில் வேற யார் இருப்பாங்க?
//பி.கு. நல்ல வேளை எங்கள் ஊர் Cable டிவியில் "ஏஞ்சல் டிவி" நிகழ்ச்சி வருவதில்லை!! //
New Age கொள்கைகளால் கவரப்படுபவர்கள் பொதுவாக புத்திசாலிகள்தான் என்று வின்சென்ட் செல்வகுமார் இன்று(11.9.11) வாருங்கள் தொழுவோம் நிகழ்ச்சியில் ஏஞ்சல் டிவியில் சொன்னார். மறு ஒளிபரப்பு இன்று மதியம் 3 மணிக்கு வரும். வஞ்சிக்கும் உபதேசங்கள், வஞ்சிக்கும் ஆவிகள் பற்றிய இந்த செய்தியை பார்க்க தவறாதீர்கள் அதி புத்திசாலிகளான பெரெயன்ஸ் அண்ட் சோல் அவர்களே!
பெரேயன்ஸ்: யாரோ ஜெபிப்பதால் நீங்கள் இரட்சிக்கப்படுகிறீர்கள், ஓஹோ ஆகாவே தான் வசனங்கள் என்றால் உங்களுக்கு அத்துனை அலர்ஜியாக இருக்கிறதோ!! சத்தியம் தான் உங்களை விடுதலையாக்கும் என்று வசனம் சொல்லுகிறதே, அதை என்ன குப்பையில் போட்டு விட்டீர்களோ!!
--
ஐயா, தாங்கள் selective blindness வியாதியால் அவதிப்படுவதால், வேதத்தில் உள்ள சில வசன்ங்கள் மட்டுமே உங்கள் கண்களுக்குத் தெரியும் என்பது அனைவரும் அறிந்ததே!
ஆதியாகமம் 19:29 தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப்போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பி விட்டார்.
//அதாவது, வேதத்தில் எங்குமே "ஆத்தும ஆதாயத்தை" குறித்து இல்லையா? இல்லையே!!//
அதாவது பைபிளை கையில் எடுத்து வாசிக்கணும். இப்படிக் காலில் போட்டு மிதிக்கக்கூடாது.
தூங்குறவங்களை எழுப்பிப் பார்க்க வைக்கலாம். தூங்குற மாதிரி நடிப்பவர்களைக் கூட எழுப்பிப் பார்க்க வைக்கலாம்.ஆனால் தன் விரலை வைத்தே தன் கண்ணைக் குத்திக் குருடாக்கிக் கொள்ளும் குருடர்களைப் பார்க்க வைப்பது கஷ்டம்.
ஏஞ்சல் டிவிசம்பந்தமான விமர்சனங்களுக்காகவே தனி செக்ஷன் இருக்கிறதே... அங்கு இந்த திரியிலிருந்து கோட் பண்ண விரும்புவதை காப்பி பேஸ்ட் செய்து தனி திரியாகப் பதிக்கலாமே... இதனால் வாசகர்களுடைய ஆர்வமும் கூடும். தீர்வு எட்டப்படாத நீண்ட திரிகளால் சலிப்பே மிஞ்சுகிறது. ஆனாலும் எந்த திரியையும் இதுவரை மூடவும் மனம் வரவில்லை. ஒத்துழைப்பீர்களா..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அந்தப் பெண் நல்லா கதை சொல்ற மாதிரிதான் இருக்கிறது. ஆவிக்குரிய அனுபவங்கள் தனக்குப் பிரயோஜனமா இருக்க வெண்டும். கேட்பவர்களுக்கும் பிரயோஜனமா இருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லை. இந்த பெண் சொல்வதில் எந்த ஆவிக்குரிய உணர்வுமே இல்லை! ஏதோ மெஷின் மாதிரி பேசுது!
அந்த பெண்ணின் கண்ணை மறைத்தால் அந்தப் பெண்ணின் அடையாளம் மறைந்து விடுமா? இது MGR படத்தில் மாறு வேடம் போடுவது போல் இருக்கிறது. சின்ன பருவும், சின்ன மீசையும் வைத்துக் கொள்வார். பெத்த அம்மாவிற்குக் கூட அடையாளம் தெரியாது!
ஏன் இப்படி கோட் சூட் போட்டுக் கொண்டு அந்த ஊழியர் பேசுகிறார்?? சாதாரண மனிதர்கள் போல் ஊழியர்கள் உடை அணிந்தால் ஆகாதா? அந்தப் பெண் சொல்லும் தரிசனங்கள் பற்றி அவர் சொல்லும் பல கருத்துக்கள் சரிதான்.
//அங்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனி வீடுகள் என்றால் சற்று கற்பனை செய்துபாருங்களேன், தனிமைச்சிறைபோல அல்லவா இருக்கும்..!!! நம்மை ஒரு பெரிய மாளிகையில் தனிமையாக குடியிருக்கவைத்தால்.... சற்று சிந்தித்துப்பாருங்களேன்.! //
வீடு தான், ஜெயில் இல்லை. வெளியே தாராளமா வரலாம். வீடு வேண்டாமென்றால் வெளியவே இருப்போம் சகோ பீட்டர் அவ்ர்களே! அங்கு சிந்தனை வேகத்தில் பயணம் செய்வோம் என்று சிலர் சொல்கிறார்கள்.
பரலோகம் எப்படி இருக்கும்? அங்கு என்ன இருக்கும்? நாம் என்ன வேலை செய்வோம்? என்பதெல்லாம் இப்ப நமக்கு முழுமையாக தெரியாமல்தான் இருக்கிறது. போய் பார்த்துக் கொள்வோம்!
golda wrote:இவர் அவ்ர்களைக் குறித்து ஜெபித்த போது அவர்களுக்காக கட்டப்படும் மாளிகையை ஆண்டவர் காட்டினாராம். அது விலையேறப்பட்ட கற்களால் கட்டப்பட்டுக் கொண்டிருந்ததாம். அவர்கள் கொடுத்த இந்த 3000 டாலர் காணிக்கையும் ஒரு விலையேறப்பட்ட கல்லாக மாறி அந்த மாளிகையில் இருந்ததாம்.
இதான் அது!
இது சாதுவின் காமெடி...!!!
பரலோகத்தில் மழையாவது வெயிலாவது இல்லை! எனவே மழைக்காகவும் வெயிலுக்காகவும் இயற்கைப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் மனிதன் அமைத்துள்ளதுபோன்ற வீடுகளோ மாளிகைகளோ தேவையில்லை. அங்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனி வீடுகள் என்றால் சற்று கற்பனை செய்துபாருங்களேன், தனிமைச்சிறைபோல அல்லவா இருக்கும்..!!! நம்மை ஒரு பெரிய மாளிகையில் தனிமையாக குடியிருக்கவைத்தால்.... சற்று சிந்தித்துப்பாருங்களேன்.! அங்குதான் கொள்வினையும் கொடுப்பினையும் இல்லை, பின் எதற்று மறைவிடம்..?? வாசஸ்தலம் என்பதை flat range-க்கு கற்பனை செய்வதால் வரும் காட்சிகள் தான் இவை..!!!
பெரியவர்கள் என நம்மப்படுகிறவர்களே இப்படி கூறுவதால்தான் கீழ்காணும் வஞ்சகங்களும் அரங்கேறுகின்றன..!!!
//ஏன், சாது எத்துனையோ முறை போயிட்டு வருகிறார், அட் லீஸ்ட் அவரிடமாவது உங்களுகு ஒரு மாளிகையை பரலோகத்தில் புக் செய்துவிட்டு வர சொல்லவேண்டியது தானே!!//
சாது சொன்னது:
அவர் ஒரு முறை ஊழியத்திற்காக அமெரிக்கா சென்று ஒரு வயதான தம்பதியினரின் வீட்டில் தங்கியிருந்தாராம். அவர்கள் வீட்டில் உள்ள தரைவிரிப்பு (carpet) கிழிந்திருந்தால், அதை மாற்றும்படி ,அவர்கள் மகன் 3000 டாலர் கொடுத்தாராம். அச்சமயத்தில் ஒரு ஆஃப்ரிக்க நாட்டில் உள்ள அனாதை ஆசிரமத்திற்கு ஒரு தேவையிருக்கிறது என்று செய்தி வந்ததால், இத் தம்பதியினர் அந்த பணம் முழுவதும் அங்கு அனுப்பிவிட்டு , கிழிந்த கார்ப்பெட்டுடன் இருந்தார்களாம்.
இவர் அவ்ர்களைக் குறித்து ஜெபித்த போது அவர்களுக்காக கட்டப்படும் மாளிகையை ஆண்டவர் காட்டினாராம். அது விலையேறப்பட்ட கற்களால் கட்டப்பட்டுக் கொண்டிருந்ததாம். அவர்கள் கொடுத்த இந்த 3000 டாலர் காணிக்கையும் ஒரு விலையேறப்பட்ட கல்லாக மாறி அந்த மாளிகையில் இருந்ததாம்.
//இப்பவும் கற்றுக்கொள்வதற்கு பதில் பெற்றுக்கொள்வதை தான் போதிக்கிறீரோ!! இருதயத்தில் உள்ள நினைவுகள் தானே வாய் பேசும்!! பெற்றுக்கொள்வதையே யோசித்தால் இப்படி எல்லாம் தான் தோன்றும், துணை மேய்ப்பனே!!//
நீங்கள் பலுகி பெருகி.. என்பதுதான் தேவனுடைய கட்டளை.! பெற்றுக்கொள்வதை யோசிப்பதொன்றும் தவறில்லை. அப்படி தவறென்று யோசிக்கவைப்பது சாத்தானின் தந்திரம். நம்முடைய தாய்தகப்பன் பெற்றுக்கொள்வது தவறென்று யோசித்திருந்தால் நானும் நீங்களும் இன்று இருந்திருக்கமாட்டோம். தங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை என தெரிகிறது.! வேதத்தின்படி மனிதன் தனிமையாயிருப்பதுதான் நல்லதல்ல.! எனவே ஏற்ற துணையைத்தேடி வேண்டியதை பெற்றுக்கொள்ள வழிபாருங்கள்...!!!
//இது உங்களுக்குள் இருக்கும் தேவ சாயலின் ஒரு பகுதி!! அன்பு!! உங்களுக்கே இப்படி என்றால் அன்பே உருவான தேவன் எப்படிப்பட்டவர் என்று நினைக்க வேண்டாமா!! இதை குறித்து அரசியல்வாதியான டாக்டர் ராம்தாஸ் சொன்னது மிகவும் பொறுத்தமாக இருந்தது!! 21 வருடங்களாக ஒரு தண்டனையை அனுபவித்த அவர்களுக்கு மரணத்தண்டனை கொடுத்தால் அது 2வது தண்டனையாகி விடும் என்றும் அதில் நியாயம் இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்!!//
ராம்தாஸ் ஒரு பச்சோந்தி அரசியல்வாதி. 3 பேரையும் தூக்கில் போட்டால் அன்புமணிக்கு பதவி உண்டு என்று சொன்னால் இவரே போய் தூக்கில் போட்டு விட்டு வந்து விடுவார்!
அன்பே உருவான தேவன் தான். பட்சிக்கும் அக்கினியாகவும் இருக்கிறாரே!
//நீதியுள்ள தேவன் பாவத்தின் ஒரு தண்டனையாக பாவத்தின் சம்பளம் மரணம் என்று வைத்திருக்கிறார், எழுப்பி மீண்டும் இன்னோரு தண்டனையை தருவார் என்று போதிக்கிறீர்களே!!//
அப்படித்தானே வசனம் சொல்கிறது. நம்ப மாட்டேங்கிறீங்களே! இரட்சிக்கப்பட்டால் ஜீவன் என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே!
//எபிரெயர் 9:27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
அந்த நியாயத்தீர்ப்படைவது இன்னோரு மரணத்திற்கு என்று கிறிஸ்தவம் எப்படி தான் போதிக்க தொடங்கியதோ!!//
சரி பெரேயன்ஸ் அவர்களே! எப்படியும் கொஞ்சம் பேர் தான் பரலோகம் போவாங்க. மீதி அனைவரும், ஆதாம் காலத்திலிருந்து வாழ்ந்த அனைவரும், உயிர்த்தெழுந்து, பூமியிலுள்ள இராஜ்யத்தில்தான் பாடம் படிக்க வேண்டும். எப்படி அத்தனை பேருக்கும் பூமியில் இடம் இருக்கும்? 6 க்கு 4 கூட கிடைக்காது போல??
//இவர் பேசுறதயெல்லாம் பேசிவிட்டு கடைசியில் நான் பேசுவதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் அப்படிம்பார். மத்தவங்க இவரை பேசுறது மாத்திரம் ஊசியால் குத்துவது போல் இருக்கும். //
பெரேயன்ஸ்:
அந்த பண்பு இருக்கிறதே!! அதை கூட இல்லாமல் அல்லவா இருக்கிறார்கள் அநேகர்!! நீங்கள் உண்மையில் படித்தவர் தான் என்றால் சகோ சோல் எழுதியதை ஒர் பக்கத்திலும், உங்கள் தலைவர் சில்சாம் எழுதியதை இன்னோர் பக்கத்திலும் வைத்து வாசித்து பாருங்கள்!! அதன் பின் ஒரு முடிவிற்கு வரலாமே!!
//நீர் மேய்ப்பனாம்!! பன்றிகளை தான் மேய்த்து வருகிறீர் என்பது தெரிகிறது!!//
என்னை போதகன் என்று பொருத்தமில்லாமல் அழைப்பதை மாற்றி (தங்களைப் போன்றவர்களை வசனம் என்னும் புல்லுள்ள இடங்களில் மேய்க்க முயற்சிக்கும்) மேய்ப்பன் என ஒத்துக்கொண்டமைக்கு நன்றி பெரேயன்ஸ்!!!
//இனை போதகர் பீட்டர் (அதான் வசனம் தேரியாமலே தன்னை போதகன் என்கிறாரே)//
இவர்களுக்கு வாசித்து புரிந்துகொள்வதில் பிரச்சினை என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இந்த வார்த்தைகள். நான் எங்கேயாவது என்னை போதகன் என்றோ இணை போதகர் என்றோ சொல்லியிருக்கிறேனா? இவர்களால் ஆதாரம் தரமுடியுமா?
இவர்கள் எழுதுவதுபோல் என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளட்டும், எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றுதான் இதுவரை மறுக்காமல் இருந்தேன். ஆனால் இவர்கள் புரிந்துகொள்ளுதலைக்குறித்த ஒரு அறிவு இணையத்தில் சந்திக்கும் அனைவருக்கும் தேவை என்பதால் தான் இதை இங்கே கூறுகிறேன்!!!
இவர்கள் வாசிக்கும் எதிலுமே சரியான புரிந்துகொள்ளுதல் இல்லாமலே உளறுபவர்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்!!!
போதகன் என்பதற்கும் மேய்ப்பன் என்பதற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் மூல பாஷைகளில் விளையாடுகிறார்களாம்! நல்ல காமெடி!!!
Chillsam: அல்ல,நண்பரே... அவர்களும் கடவுளின் பணியாளர்களாகவே இருக்கவேண்டும்; எப்படியெனில் ஆரோக்கிய உபதேசத்தை மறுப்போரின் அடுத்த சாய்ஸாக ஏன் இவர்கள் இருக்கக்கூடாது? ஏனெனில் பவுலடிகள் கூறுவதுபோல வெளிப்படையான தேவமகிமையைப் புறக்கணிப்போர் தங்கள் சிந்தைகளாலே வீணராகி உணர்வில்லாது போய் இருதயம் இருளடைவதும் அவர்கள் சொல்லுவது போல தேவசித்தம் தானோ..?
இருக்கலாம் யார் கண்டது, இவர்களை நாம் எதிர்ப்பது கூட தேவ சித்தமாக தான் இருக்கும், அப்புறம் ஏன் இவ்வளவு டென்ஷனாகிறார்கள் என தெரியவில்லை.