Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆவி, ஆத்துமா....மரணம்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
ஆவி, ஆத்துமா....மரணம்
Permalink  
 


மனிதனிடம் அழியாத ஆவி ஒன்று இருக்கிறது. இரட்சிக்கப்படுகையில் உயிர்ப்பிக்கப்படுகிறது. ஆண்டவரோடு தொடர்பு கொள்கிறது.ஆத்துமா இந்த உலகத்தில் நாம் வாழும் நாட்களெல்லாம் develop ஆகும். மரணத்தின் போது ஆவியோடு சேர்ந்து வெளியேறும். எனவேதான் ஆத்துமாவை காத்துக் கொள்ள வெண்டும் என்று வேதம் சொல்கிறது

உள்ளான ஆத்துமா பற்றிய வசனங்கள்.

லூக்கா 12:20 தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.

லூக்கா 2:35 உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்.

மத்தேயு 10:28 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

லூக்கா 10:27 அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழுஆத்துமாவோடும், உன் முழுப்பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.

மத்தேயு 11:29 நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்

உள்ளிருக்கும் ஆவி பற்றிய வசனங்கள்.

யோபு 32: 8. ஆனாலும் மனுஷரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லவருடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்.

யோபு 32: 18. வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது.

எண் 16: 22. அப்பொழுது அவர்கள் முகங்குப்புறவிழுந்து: தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபங்கொள்வீரோ என்றார்கள்.

எபி 12: 9. அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?

ரோமர் 1: 9. நான் ஜெபம்பண்ணும்போதெல்லாம் இடைவிடாமல் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறதைக்குறித்துத் தமது குமாரனுடைய சுவிசேஷத்தினாலே என் ஆவியோடு நான் சேவிக்கிற தேவன் எனக்குச் சாட்சியாயிருக்கிறார்.

யோவான் 4: 24. தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்

லூக்கா 10:21 அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து

மத்தேயு 5:3 ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது

மத்தேயு 26:41 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.

மத்தேயு 27:50 இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.

மாற்கு 2:8 அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படி சிந்திக்கிறதென்ன?

மாற்கு 8:12 அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார் அடையாளம் தேடுகிறதென்ன? இந்தச் சந்ததியாருக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,

லூக்கா 1:80 அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான்.

யோவான் 11:33 அவள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து:

--

இத்தனை வசனம் கொடுத்தாச்சு.இப்ப என்ன செய்யப் போறீங்க??



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

நம்ப மாட்டீங்க. நேற்று(7.8.11) ஆலன் பால் சொன்னது :

Soul is your data center!!

ஒரு மனிதனின் data எல்லாம் ஆத்துமாவில்தான் பதிக்கப்பட்டு இருக்கிறது. எந்த ஒரு நிறுவனத்துக்கும் data center தான் முக்கியம். அதை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பார்க்ள். அது போல் தான் நாமும் நம் ஆத்துமாவை பிசாசு கறைபடுத்தாதபடி, திருடி விடாதபடி காத்துக் கொள்ள வேண்டும். உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும், ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று சொன்னார்!

 

//தரிசனம் (Vision) என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்!!//

தரிசனம் என்றால் காட்சி என்று அர்த்தம்.

இயேசு கிறிஸ்துவும், சீஷர்களும் ஒரே தரிசனத்தை ஒரே நேரத்தில் பார்த்தார்களா?? என்ன அதிசயம்!!

ஆண்டவர் மோசேயுடனும் எலியாவுடனும் பேசுகிறார், தரிசனத்தில்.

ஆனால் சீஷர்கள் ஆண்டவர் மோசேயுடனும் எலியாவுடனும் பேசுவதைப் பார்கிறார்கள், தரிசனத்தில்.

ஒரே தரிசனத்தை ஆண்டவ்ர் ஒரு கோணத்தில் பார்க்கிறார். சீஷர்கள் வேறோரு கோணத்தில் பார்க்கிறார்கள்.இதுவும் அதிசயமே! ஒரு வேளை ஆண்டவர் தரிசனத்துக்குள்ள போயிட்டார் போல தெரியுது!

ஒரு வேளை இயேசு கிறிஸ்துவும் உலகத்தில் தரிசனமாகத் தான் நடமாடினார் என்று நினைக்கிறேன்.

பேதுரு ஆண்டவரே உமக்கு ஒரு கூடாரம், மோசே எலியாவிற்கு ஒரு கூடாரம் போடுவோம் என்று சொன்னாரே. தரிசனத்திற்குள் உள்ளேயிருந்து சொன்னாரா, வெளியே இருந்து சொன்னாரா?

யோசிங்க. ஒரு ஆவிக்குரிய தரிசனத்தில் இப்படிப்பட்ட interaction இருக்குமா??

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//பிரசங்கித்தார் என்றவுடன், அவர் அங்கே போய் அவர்களுக்கு முன் நின்றோ, உட்கார்ந்தோ பேசினார் என்பது கிடையாது!! தேவ தூதர்களின் நிலையிலிருந்து பாருங்கள்!! அவைகள் மனிதர்களை விட உயர் ரகம்!! அவர்களுக்கு பேசி தான் ஒரு விஷயத்தை புரிய வைக்க வேண்டும் என்பது கிடையாது, அவர்கள் கிறிஸ்துவின் செயல்களை பார்த்தே அனைத்தையும் புரிந்துக்கொள்ளும் தன்மையுடையவைகள்!! //

சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்த நிலைமையிலும் அவர்கள் பூமியில் நடப்பதை பார்த்துக் கொண்டே இருந்தார்களாம். எப்படி ஏதாவது live telecast அங்க ஜெயிலில் பார்த்தார்களா? அல்லது , அவர்களும் ஆண்டவர் போல் சர்வ ஞானம் உடையவர்களா?

போய் காவலிருக்கும் ஆவிகளுக்கு பிரசங்கித்தார் என்பதுதான் வசன்ம். “போய்” என்ற வார்த்தை அடைப்புக்குறி, ஆச்சர்யக் குறிக்குள் எல்லாம் போடப்பட வில்லை. ஆவியில் போனார். பிரசங்கித்தார் என்பதை வேற எப்படியும் விளக்க முடியாது. 

--

தேவ தூதர்கள் ஒன்றும் ஆவியாக நோவா காலத்தில் சுற்றி வரவில்லை, மாறாக மனுஷகுமாரிகளை திருமனம் செய்துக்கொண்டு பிள்ளைகள் பெற்றார்களாம்!! தெரியுமா!!?? இவர்கள் தான் பாவஞ்செய்த தூதர்கள்!! ஜலப்பிரலயம் வந்தவுடன் தங்களின் உண்மையான நிலைக்கு திரும்பிய தூதர்கள் தான் அந்தகாரச் சங்கிலிகளினால் கட்டி வைக்கப்பட்டிருப்பவர்கள், நியாயத்தீர்ப்புக்கென்று!! நியாயத்தீர்ப்பு என்பது ஒரு தனி சப்ஜெக்ட்!!

--

அந்த பாவம் செய்த தூதர்கள் இவர்களாகவும் இருக்கலாம். அல்லது ஆதியில் லூசிபருடன் சேர்ந்து கலகம் செய்தவர்களாகவும் இருக்கலாம். ஆனால் காவலில் உள்ள ஆவிகள் தூதர்கள் அல்ல என்பது உறுதி! தெளிவு! சத்தியம்! நிச்சயம்!

II பேதுரு 2:4 க்கும் I பேதுரு 3:20 க்கும் சம்பந்தமே கிடையாது.

 

அத்துடன், சம்பந்தமேயில்லாமல் சாதுவையும், வி.செல்வகுமாரையும் பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்று தெரியவில்லை. அவங்க ஒவ்வொரு வருடமும் கோயம்புத்தூர் வருகிறார்கள். அவங்க கூட்டத்திற்கு ஒரு தடவை போய்த்தான் பாருங்களேன்.

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//Genesis 2:7

And the LORD God formed man of the dust of the ground, and breathed into his nostrils the breath of life; and man became a living soul.//

 

ஆவி உள்ளே வந்தவுடன் ஜீவாத்துமாவானான்(eternally living soul). அதற்கு முன்னால் நாய், பூனை போல் வெறும் ஆத்துமாவாக இருந்திருப்பான்.ஆவி போகும்போது ஆத்துமாவும் போகும்.

 

விலங்குகளுக்கு ஆத்துமா உண்டா இல்லையா? இல்லை என்றுதான் சொல்வீர்கள். ஏன்னா விலங்குகளுக்கு ஆத்துமா இருக்கு என்று வசனம் இல்லையே!!

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Soul Talk for Bereans.

மூலபாஷை வைத்துதான் “ஆத்துமா” பல விதங்களில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆத்துமா என்ற வார்த்தை ஆத்துமாவையும்(உள்ளான மனிதன்) குறிக்கும். மனிதனையும் குறிக்கும், பிணத்தையும்(செத்த மனிதன்) குறிக்குமாம்.

http://biblicalresearch.gc.adventist.org/Biblequestions/soultalk.htm

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//அதாவது இப்ப ஆத்துமாவும் ஆவியும் ஒன்றாக போகும்!! எங்கே, ஒரே ஒரு வசனத்தை காட்டுங்களே!! //

 

ஆவியோடு ஆத்துமா இல்லை என்று ஒரு வ்சனமாவது காட்டுங்க.

அல்லது ஆவி செத்துப் போகும் என்று ஒரு வசனமாவது காட்டுங்க.

ஐஸ்வர்யவானின் ஆவி, ஆத்துமாவோடு உணர்வோடு, நினைவோடு இருந்தது.

மறுரூப மலையில் இயேசுவோடு கூட மோசேயும், எலியாவும் பேசினார்கள். அவர்கள் ஆவி(ஆத்துமாவுடன்) உயிரோடு இருப்பதால்தான் அது சாத்தியமாயிற்று?

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

ஆத்துமா எனும் வார்த்தை மனிதனையும் குறிக்கும்.உள்ளான மனிதனையும் குறிக்கும்.Context பார்த்து பொருள் கொள்ள வேண்டும்.

இங்கு ஆத்துமா என்ற வார்த்தை மனிதர்களைக் குறிக்கிறது.

II கொரிந்தியர் 12:15 ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்.

 

அதுபோல் பாவம் செய்யும் ஆத்துமா சாகும் என்று சொன்னால் அது பாவம் செய்யும் மனிதன் சாவான் என்றுதான் அர்த்தம் வருகிறது.

 

ஆனாலும் இவர்கள் ஆத்துமாவை அழுத்துவதைப் பார்த்தால் வேறு உள் நோக்கம் இருப்பது போல் தெரிகிறது!

 

ஆத்துமா என்ற வார்த்தை இறந்து போன பிணத்தையும் குறிக்கும்.

 

லேவி 21:11. பிரேதம் கிடக்கும் இடத்தில் போகாமலும், தன் தகப்பனுக்காகவும் தன் தாய்க்காகவும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமலும்,

 

Neither shall he go in to any dead body, nor defile himself for his father, or for his mother;



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//லாசரு செத்து நாலு நாள் கழித்துதான் எழுப்பப்பட்டான். அவன் மூளை சாகவில்லையா?//

மூளை செத்தது. சாகாதது ஆவியும். அதனுள் கொண்டு செல்லப்பட்ட் ஆத்துமாவும்தாம். ஆவி செத்துப் போகும் என்று எந்த வசனமும் இல்லை. எனவே லாசருவே வெளியே வா என்று சொன்னவுடன் ஆவி உள்ளே பிரவேசித்து அவன் லாசருவாக வெளியே வந்தான்.

//அப்ப நோவா காலத்தில் 8 பேரைத் தவிர உலகத்தில் இருந்த அனைவரும் தூதர்கள்??//

இப்படி நாங்க சொன்னமா? சில்சாம் திட்டியது சரிதான்போல‌...//

நீங்க எதைத்தான் ஒழுங்கா சொல்றீங்க? சில்சாமை கடத்திட்டு போய்ட்டீங்களா??

////அது போல் சரீரம் இருக்கும் வரை நாம் பாவம் செய்து கொண்டுதான் இருப்போம். //

உருப்படியா நீங்கள் பதித்த ஒரே விஷயம் இதுதான். //

அப்ப ஏதோ தப்பா சொல்லிட்டேன் என்று நினைக்கிறேன்!

நான் பரிசுத்தராயிருப்பது போல நீங்களும் பரிசுத்தமாயிருங்கள் என்று அவர் சொல்லியிருக்கிறார். பழைய ஏற்பாடு காலத்தில் கட்டளைகளைக் கைக் கொண்டால் பரிசுத்தம். புதிய ஏற்பாட்டில் தேவ ஆவியானவரால் நடத்தப்பட்டால் தான் பரிசுத்தம்.

நாம் மாம்சத்தின்படி பிழைக்க மாம்சத்திற்கு கடனாளிகள் அல்ல. ஆவியினால் சரீரத்தை மேற்கொண்டு வாழும் வாழ்க்கை முற்றிலும் சாத்தியமே! மறுருபத்தின்மேல் மறுரூபமடைந்து அவரைப் போல் மாறிக் கொண்டே இருக்கிறோம்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//நீங்கள் உண்மையிலே தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் நிச்சயமாக பதிவிடுகிறோம்!!//

 

From where you are coming from, உங்க நம்பிக்கை என்ன என்று தெரிந்து கொள்ள மட்டுமே கேட்கிறேன்.யேகோவா சாட்சிகள் போல,இயேசு கிறிஸ்து தெய்வம் அல்ல என்று சொல்ற கோஷ்டி என்று தெரியும். மற்றபடி நடக்கும் விவாதங்களை சீரியஸா கவனித்ததில்லை.

 

பிறர் சொல்வதை ஒப்பிக்காமல், நீங்களா யோசித்து பதில் சொன்னீர்கள் என்றால், யாருக்குத் தெரியும், ஏதாவது அதிசயம் நடந்தாலும் நடக்கலாம்!!

 

ஆவி, தேவனிடத்திற்குப் போகிறது என்றால் காற்றோடு கலந்து விடுவது என்று தெளிவு படுத்தியதற்கு நன்றி ஐயா!!!

 

//தேவன் அதை ஒன்றும் தனியாக இது இன்னாருடைய ஜீவ சுவாசம் (ஆவி) என்று வைப்பதில்லை, அதற்கு வேதத்தில் எந்த வசனமும் இல்லை!!//

 

ஆமாமா எந்த வசனமும் இல்லை. காலையில் இட்லி சாப்பிடலாம் என்பதற்கு ஏதாவது வசனம் இருக்கா???

(சாரி உங்க காமெடி நிஜமாவே தாங்க முடியலை!!! Thanks for the laugh :) )

 

//லூக்கா 23:46 இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.

 

நீங்கள் நினைத்தும் போதித்தும் கொண்டு இருக்கிற மாதிரி ஏதோ ஆத்துமா தான் பிரிந்து போகிறது என்றால், கிறிஸ்துவும் அதையே சொல்லியிருப்பார், பிதாவே உம்முடைய கைகளில் என் "ஆத்துமா"வை ஒப்புவிக்கிறேன்!! இல்லை, ஏனென்றால் மரித்ததே ஆத்துமா தான்!! //

 

ஆனால், ஆவி செத்த மாதிரியோ, காற்றில் கரைவது போலவோ வசனத்தில் இல்லையே. பத்திரமா உங்க கையில் ஒப்படைக்கிறேன் என்றல்லவா சொல்கிறார். ஒரு colourless, odourless, tasteless காற்றாய் இருக்கும் ஆவியை எதற்காக பிதாவின் கையில் ஒப்புவிக்கணும்??

 

எதைப் பற்றி எழுதவென்று எனக்குத் தெரியவில்லை!மெதுவா ஒவ்வொன்றாக எழுதுறேன்!

 

 



__________________
«First  <  1 2 3 | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard