golda wrote:இந்தக் கணக்கு சரிதானா என்று கணக்குப் பார்த்து விட்டு சொல்கிறேன்! அத்துடன், 1000 வருடத்திற்கு அத்தனை பேரையும் இந்த பூமி தாங்குமா என்றும் பார்க்க வேண்டும்!
1000 வருடத்திற்கு தாங்கினால் போதுமா? 1000 வருடத்தில் கற்றுக்கொள்கிறவர்கள் எல்லோரும் பெற்றுக்கொண்டால்...? அதற்குப் பின் எங்கே போவார்களாம், கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன் சகோதரி...!!!
அவர்கள் எப்படியாவது நம்முடைய விசுவாசத்துக்குத் திரும்பினால் குழப்பம் இராது என்றெண்ணுகிறேன்; ஏனெனில் மாம்சத்தில் வாழுவதாலேயே இத்தனை நெருக்கமும் நெரிசலும் உண்டாகிறது;மேலும் பலவிதமான வாகனங்களிலும் வீடுகளிலும் நாம் வசிப்பதாலும் அழுத்தம் உண்டாகிறது; ஆனால் ஆண்டவர் வாக்களித்துள்ள ஆதிநிலைக்கு நாம் திரும்பினால் நாம் தயக்கமின்றி ஒருவருக்குள் ஒரு புகுந்து செல்லமுடியும்;இதன் ஒரு பகுதியை யோசித்து எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் ஓரளவுக்கு பார்த்திருக்கிறோம்; நாம் அதுபோன்ற ஆவி ஜீவிகளாக மாறிவிட்டால் நம்முடைய முழு லைஃப் ஸ்டைலே மாறிவிடுமல்லவா..? மேலும் (மேசியாவின்) எதிரிகள் "இயேசுவானவர் தொழத்தக்க தெய்வமே.." என்பதை மீண்டும் ஏற்றுக்கொண்டால் மற்ற பல மாறுபாடுகளிலும் தீர்வு எட்டப்படும் என்று கருதுகிறேன்; அவர்களுடைய பல கொள்கைகள் நம்முடைய நம்பிக்கைகளிலிருந்தே விரிவடைந்துள்ளதை நாம் அறியமுடியும்.
வாழ்விடத்தையும் வசதிகளையும் பற்றி நாம் எதற்கு கவலைப்படவேண்டும்;அது சிருஷ்டிகர் சம்பந்தமான காரியமல்லவா? அதற்காகவே சொன்னார்,நாளையதினத்தைக்குறித்து கவலைப்படாதே என்பதாக;இவங்களையெல்லாம் எப்படி அக்காமடேட் பண்ணுவது என்று நம்முடைய இரட்சகர் கையைப் பிசைந்துகொண்டு நம்மிடம் யோசனை கேட்டாரா என்ன..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
golda wrote:இந்தக் கணக்கு சரிதானா என்று கணக்குப் பார்த்து விட்டு சொல்கிறேன்!
அத்துடன், 1000 வருடத்திற்கு அத்தனை பேரையும் இந்த பூமி தாங்குமா என்றும் பார்க்க வேண்டும்!
1000 வருடத்திற்கு தாங்கினால் போதுமா? 1000 வருடத்தில் கற்றுக்கொள்கிறவர்கள் எல்லோரும் பெற்றுக்கொண்டால்...? அதற்குப் பின் எங்கே போவார்களாம், கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன் சகோதரி...!!!
[தற்போது உலகத்தில் தரைப்பகுதியில் மட்டும் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 51 பேர்தான் வசிக்கிறார்கள். தற்போதைய மக்கள் தொகை 6,940,646,300. அதாவது 7 பில்லியன். மனிதன் தோன்றி 6000வருடங்களில் மொத்த ஜனத்தொகையே ஏறத்தாழ் 50 பில்லியன். அவர்கள் எல்லாரும் உயிர்தெழுந்து வந்தாலும் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 357 பேர்தான் இருப்பார்கள்.]
அப்படியானா இரஸல் கூட்டத்தார் (மற்ற உலகத்தாரும்) கழுவி ஊத்தனதெல்லாம் எழுந்திருக்காதா..? அதெல்லாம் கணக்குல வராதா..? அப்படின்னா கருக்கலைப்பு ஒரு பிரச்சினையில்லையா..? உங்க ஆளுங்க இரத்த தானம் செய்வது கூட தவறு என்கிறார்களே,அதற்கென்ன அர்த்தம்..?
ட்ரூத் சீக்காளிகள் என்பது சரியாகத் தான் இருக்கிறது;தற்கால கணக்கீடுகளின்படியும் கணிப்புகளின் படியும் மனுக்குலத்தின் எண்ணிக்கையையும் வாழ்நாளையும் கணக்கிடுபவன் படித்த முட்டாளாகவே இருக்கமுடியும். கோல்டாவை ஏறக்குறைய (மேசியாவின்) எதிரிகள் நெருங்கிவிட்டார்கள்; இதுபோன்ற சுவாரசியமான கதைகளில் தான் தற்கால கிறித்தவம் மயங்கிக்கிடக்கிறது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
வேத வசனம் தான். ஆனால் அந்த ஒரு வசனந்தானே உங்க கண்ணுக்குத் தெரிகிறது. அது தான் பரிதாபம்!
[//இதோ குளறுபடி
Body and soul
From the Hebrew nephesh, or soulish creatures, including birds and mammals
அப்பாடி ஒருவழியாக பறவைகளுக்கும் பாலூட்டிகளுக்கும் 'ஆத்துமா' இருக்கிறது என்று ஒத்துக்கொண்டீர்களே.//]
சரி அப்ப மிருகங்களுக்கும் இரட்சிப்பு உண்டா? அவைகளும் மனிதன் செய்த பாவத்தினால் கஷ்டப்பட்டுக் கொண்டுதானே இருக்கிறது. அவைகளும் உயிர்த்தெழுந்து பரலோகம் போகுமா? ராஜ்ஜியத்தில் கற்றுக் கொள்ளுமா?இல்லை என்றால் ஏன் இல்லை?
[தற்போது உலகத்தில் தரைப்பகுதியில் மட்டும் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 51 பேர்தான் வசிக்கிறார்கள். தற்போதைய மக்கள் தொகை 6,940,646,300. அதாவது 7 பில்லியன். மனிதன் தோன்றி 6000வருடங்களில் மொத்த ஜனத்தொகையே ஏறத்தாழ் 50 பில்லியன். அவர்கள் எல்லாரும் உயிர்தெழுந்து வந்தாலும் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு
357 பேர்தான் இருப்பார்கள்.]
இந்தக் கணக்கு சரிதானா என்று கணக்குப் பார்த்து விட்டு சொல்கிறேன்!
அத்துடன், 1000 வருடத்திற்கு அத்தனை பேரையும் இந்த பூமி தாங்குமா என்றும் பார்க்க வேண்டும்!
Besides the rather obvious differences in the way animals process information in their brains, the Bible (and science) confirm that there are major differences in the ways humans make moral judgments (animals don't make such judgments, as we shall see). Part of what is meant by the term "in the image of God" can be found in chapters immediately following its first usage (Genesis 1) in the Bible. Both Adam and Eve had a personal relationship with God in the Garden of Eden. Such a personal relationship is not described, nor seen, for any other animal species. It is the presence of a spirit that was instilled into humans that separates us from the animals. There are three kinds of life that God has created in this universe:
Creature:
Examples:
Body only
Lower life forms, including reptiles, amphibians, fish, and invertebrates
Body and soul
From the Hebrew nephesh, or soulish creatures, including birds and mammals
Body, soul and spirit
Humans and angels
The soul is best described as the characteristics that make up the advanced brain, including mind, will and emotion. Only birds and mammals exhibit these characteristics, which is why humans can form mutual relationships with birds and mammals.
Spirit
The spirit is that part of humans that is able to love and experience God directly. It is found in no other animal species, since no other species can experience God or form a relationship with Him.
எரிகிற நரகம் இவுகளுக்கு அலர்ஜி என்பதால் அதை உவமை என்பார்களாம்(எத்தனை இடத்தில் அதை பற்றி வருகிறது, இருப்பினும் உணர்வில்லையே..), இவர்கள் படுத்த இடத்தில் காலாட்டிக்கொண்டிருக்க, சுவிஷேஷம் அறிவிப்பது சீஷர்களுக்கு மட்டும் இட்ட பணி என்பார்களாம். எதுல போய் முடியுமோ?
இவர்கள் கூற்றுப்படி பாவம் செய்யுற ஆத்துமா எந்திரிக்கவே எந்திரிக்காது, அஃதாவது 6 க்கு 4 நரகத்தில அழிவுறும், அப்ப இவர்கள் பாதி சதுசேயரா??????????????????????
அதே.. அதே.. அதே... பாதி என்ன பாதி முழுசும் தான்...இப்பவாவது தமிழ் கிறித்தவ உலகம் நிமிர்ந்து உட்கார்ந்தால் சரி... மாம்சமும் இரத்தமும் இதை உங்களுக்கு வெளிப்படுத்தல...கர்த்தருடைய ஆவியானவரே வெளிப்படுத்தியிருக்கிறார்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இவர்கள் கூற்றுப்படி பாவம் செய்யுற ஆத்துமா எந்திரிக்கவே எந்திரிக்காது, அஃதாவது 6 க்கு 4 நரகத்தில அழிவுறும், அப்ப இவர்கள் பாதி சதுசேயரா??????????????????????
And he said, My son shall not go down with you; for his brother is dead, and he is left alone: if mischief befall him by the way in the which ye go, then shall ye bring down my gray hairs with sorrow to the grave.
போனதுக்கு அப்புறம் ஹதம் ஹதம், எல்லாம் முடிந்தது என சொல்லும் நண்பர்கள், மேலே உள்ள வசனத்தில் யாக்கோபு நரை மயிரை சஞ்சலத்தோடே பாதாளத்தில் இறங்க பண்ணுவீர்கள் என்கிறாரே. லாஜிக்கலாக பார்த்தாலும் ஒண்ணுமே யில்லாம போனப்புறம் அஃதாவது நம்ம சோல் அண்ணாச்சி சொல்றமாதிரி he cease to exist என ஆனபிறகு எப்படி நரைமயிர் சஞ்சலத்தோடே பாதாளத்தில் இறங்கும். அப்புறம் சவுல் வேண்டிக்கொண்டெ போது சாமுவேலின் ஆவி வந்ததாக வருகிறதே, இப்படி பல ஆச்சரியங்கள் நம் நண்பர்களுக்கு இருக்க இவர்கள் ஹதம் ஹதம் என போன கேசை மங்களம் பாடி முடித்துவைக்கிறார்கள்!!!!!!!!!!!!!!!!!
-- Edited by joseph on Monday 29th of August 2011 12:36:15 PM
அது ஏதாவது ஒரு சிலருக்கு மட்டும் உள்ள அனுபவமாயிருக்கும் என்பார்கள் நம்ம அண்ணாச்சிமார்கள். இவங்க ஐடியாவுக்கு ஒத்துவராத வசனங்கள் எல்லாம் இப்படித்தான் இவர்களால் புரிந்துகொள்ளப்படும்.
//சொன்னா நாங்கள் மூல பாஷையை பார்க்கிறோம் என்பீர்கள், சரி உங்களுக்கு புரியும் ஆங்கிளத்தில் பாருங்கள்!//
ஆங்கிலத்தில் பாத்தாச்சு!
மத்தேயு 17:9 இல் vision என்ற வார்த்தை சில ஆங்கில மொழிபெயர்ப்புகளில் இருக்கிறது. சிலவற்றில் இல்லை. மாற்கு 9:9 , லூக்கா 17:36 இல் vision என்ற வார்த்தை எந்த ஆங்கில மொழிபெயர்ப்பிலும் இல்லை. அத்துடன் பேதுரு இடையில் பேசுகிறார். அப்ப எப்படி அது ஒரு தரிசனமாக இருக்க முடியும்? எல்லோருக்கும் கூடாரம் போடுவோம் என்று சொல்கிறார். Real ஆ இல்லையென்றால் கூடாரத்தைப் பற்றி யோசித்திருப்பாரா?
//எனக்குப் புரியாத இன்னொரு விஷயம், செத்தா சேப்டர் க்ளோஸ் என்று சொல்றாங்களே. எப்படித் தெரியும்? முன்ன பின்ன செத்து பார்த்திருக்காங்களா?? //
இதில் புரிய என்ன இருக்கிறது? செத்தவன் செத்தவன் தான், அவன் இல்லை. அதனால்தான் He is NO MORE என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறோம்.//
செத்துப் போன பெரியப்பாவின் உடல் முன்னாலதான் இருக்கும். ஆனாலும் பெரீப்பா போயிட்டீங்களே என்று சொல்லிதான் அழுகிறார்கள். அப்ப உண்மையில் பெரியப்பா அந்த உடல் அல்ல...உள்ளே இருக்கும் ஆத்துமா தான் என்று தெரிகிறது!
Out Of Body Experiences பலருக்கு உண்டாகியிருக்கிறதே. உயிருடன் இருக்கையிலே பலருக்கு இப்படிப்பட்ட அனுபவங்கள் இருக்கிறது. எசேக்கியேல், யோவான், பவுல் போன்றோருக்கு இப்படிப்பட்ட அனுபவங்கள் உண்டு என்று வேதத்தில் இருக்கிறது. உயிருடன் இருக்க்கையிலே ஆவி வெளியே வந்து ஊர் சுற்றுமானால், உடல் இறந்தபிறகு, ஆவி நல்லா ஃப்ரீயா விரும்பும் இடத்திற்கு போக வேண்டியதுதானே! இப்படிப்பட்ட அனுபவங்கள் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல பிசாசின் பிள்ளைகளுக்கும் உண்டாகி இருக்கிறது. எனவே ஆவி இருக்கிறது என்று நன்றாகத் தெரிகிறது.
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபின் தம் சீஷர்களுக்கு என்ன ஆனார்? தரிசனமானார். சுவரைக் கடந்து வந்தார். பேசினார். மறைந்து போனார். இது நிழலா, நிஜமா?
லூக்கா 24:34 கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானாரென்று அவர்கள் சொல்லக் கேட்டு,
யோவான் 21:14 இயேசு மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு தம்முடைய சீஷருக்கு அருளின தரிசனங்களில் இது மூன்றாவது தரிசனம்.
அப்போஸ்தலர் 1:3 அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.
இது போன்ற ஒரு நிஜ தரிசனம் --real time event -- தான் மறு ரூப மலையின் தரிசனம். மோசேயும் எலியாவும் வந்தார்கள். பேசினார்கள். மறைந்தார்கள்.
[//அதான் புடிச்சீங்கல்ல பாயிண்டை, இதுக்கு ஏதாவது மூல பாஷை விவகாரம் இருக்கும். இந்த ஆத்துமாக்கள் மட்டும் அல்ல, மறுரூப மலையில் இயேசுவோடு தோன்றின அந்த ரெண்டு பேர் யார் என்பதை வேதம் சொல்லியிருக்கிறது, செத்தா அவ்வளவு தான் End of the game என சொல்லும் இவர்களின் வாதம் எந்தளவுக்கு குறைபாடு உள்ளது பார்த்தீர்களா?//
அதான் புடிச்சீங்கல்ல பாயிண்டை, இதுக்கு ஏதாவது மூல பாஷை விவகாரம் இருக்கும். இந்த ஆத்துமாக்கள் மட்டும் அல்ல, மறுரூப மலையில் இயேசுவோடு தோன்றின அந்த ரெண்டு பேர் யார் என்பதை வேதம் சொல்லியிருக்கிறது, செத்தா அவ்வளவு தான் End of the game என சொல்லும் இவர்களின் வாதம் எந்தளவுக்கு குறைபாடு உள்ளது பார்த்தீர்களா?
செத்தா எல்லாம் முடிந்தது என்று சொல்றீங்களே, இந்த ஆசாமிகள் செத்து பரலோகம் போய் கேள்வி கேட்டுக் கொண்டல்லவா இருக்கிறார்கள்?
--
வெளி 7
9. அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன்.
10. அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.
11. அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரையும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
வாழ்ந்து கெட்ட ஞானி சாலமோன், சூரியனுக்கு கீழே உலகத்தில் நடக்கும் காரியங்களை ஆராய்ச்சி செய்து எழுதியதுதான் பிரசங்கி புத்தகம். கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவன் ஆராய்ச்சி செய்து எழுதினாலும் அப்படித்தான் இருக்கும்.
[நாய் பூனை மற்றும் மனிதனுக்கு எந்த வித்தியாசமுமில்லை, ஆறாவது அறிவைத்தவிர, அதற்குக் காரணம் அவனது மூளை அமைப்பு மாத்திரமே. ]
இது நாத்திக வாதம். அவங்க தான் மனிதனை பரிணாம வளர்ச்சியின்படி வந்த ஒரு மிருகம் என்று சொல்வார்கள். ஆறாவது அறிவு என்பது என்ன?
இப்படி சில கேள்விகளை தனக்குத் தானே கேட்டுக் கொள்கிறார் சாலமோன். சிந்திக்கிறார். கடைசியில் சரியான முடிவுக்கு வருகிறார். நீங்கதான் உங்க மூளையை உபயோகிக்காமல் புத்தம் புதிதாய் வைத்திருக்கிறீர்களே! அப்புறம் எப்படி எதுவும் புரியும்??
வசனத்தை மட்டுமே நம்பும் , வசனம் என்ன சொன்னாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் சோல் அவர்கள், இந்த வசனத்திலிருந்து கற்றுக் கொண்டது: மிருகத்தின் ஆவி, மனிதனின் ஆவியை விட எடை கூட இருக்கும், எனவேதான் அது கீழ போகுது. மனித ஆவி மேல போகுது!!
இந்த வசனத்தில் மனிதன் மிருகத்தை விட உயர்ந்தவன். அவன் மிருகம் போல் இல்லை என்பதைத்தான் மனித ஆவி மேல போகுது.மிருக ஆவி கீழ போகுது என்று சொல்லியிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.
இருதயம் என்றால் ஆங்கிலத்தில் heart. அதன் பணி இரத்தத்தை பம்ப் செய்வதே! ஆனால் வேதம் முழுவதும் இருதயம் என்பது அந்த அறிவியல் பூர்வமான அர்த்தத்தில் சொல்லப்படாமல் வேறு அர்த்தத்தில் தான் சொல்லப்பட்டிருக்கிறது. அப்ப வேதம் பொய்யா?
மத்தேயு 13:15 இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.
நீதிமொழிகள் 16:9 மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்;
நீதிமொழிகள் 23:7 அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்;
ஆத்துமா என்று தான் ஒவ்வொரு வசனமும் சொல்லுகிறதே தவிர "உள்ளான" ஆத்துமா என்று இல்லை!!]
எந்த வசனத்திலும், உள்ளான ஆத்துமா என்றும் போட்டிருக்காது, வெளிப் பிரகாரமான நபர் என்றும் போட்டிருக்காது. It's implied, based on context!
வெளிப்பிரகாரமான சாப்பாடுதல், வேலை எதுவும் இந்த ஆத்துமா செய்கிறதில்லை. எனவே இவ்வசனங்கள் எல்லாம் , வெளிப்பிரகாரமான மனிதனை அல்ல, உள்ளான மனிதனைக் குறிப்பது என்று சின்ன பிள்ளைக்குக் கூட புரிந்து விடும். உங்க குரங்குப் புத்திக்கு புரியாதது ஆச்சர்யமில்லை!
[லூக்கா 12:20 தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.
Luke 12:20 "Just then God showed up and said, 'Fool! Tonight you die. And your barnful of goods—who gets it?'
Tonight you die is transformed as your soul will be taken out!! That's the comedy of Tamil translation!!]
மற்ற வசனங்களும் பிழைதானா?
இப்படி கண்ணையும் காதையும் மூடிக் கொண்டால் எப்படி உருப்பட?
[தேடலில் போய் "ஆத்துமா" என்று தேடி பிடித்து செலெக்ட் செய்த வசனங்களை காப்பி பேஸ்ட் செய்து டயலாகா!!??]
நீங்க மரத்தில ஏறி வசனங்களைப் பறிச்சிட்டு வர்றீங்களா??