soul: //நீ என்றைக்காவது உன் ஆத்துமா கர்த்தரை ஸ்தோத்திரிப்பதை கவனித்திருக்கிறாயா?//
ஆத்துமா என்பது மனிதனின் data center. இது தனியாக இருக்க முடியாது. சரீரத்தோடு இருக்கும். சரீரம் இல்லாத பட்சத்தில் ஆவியோடு இருக்கும்.
நான் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்களால் கவரப்பட்டு, வழக்கமாய் ஊழியர்கள் கொடுக்கும் bless, heal, prosper போன்று இல்லாமல் செய்திகளும் வித்தியாசமாக இருக்கிறதே, இவர் யார், என்ன செய்கிறார், இவருடைய மற்ற செய்திகளெல்லாம் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ள ஆசைப்பட்டு , இராமநாதபுரத்தில் ஒவ்வொரு மாதமும் உபவாசக் கூட்டம் நடத்துகிறார் என்று அறிந்து சரி போவோம் என்று ஒரு நாள் கிளம்பினேன். I used to be content and happy with the church I attend and the books I read. எங்கும் போக வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருந்ததில்லை. எல்லா சுவிசேஷகர்களும் கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார் என்று தான் சொல்லப் போகிறார்கள். அது நமக்குத் தெரிந்த விஷயம்தானே என்று எங்கும் போவதும் கிடையாது . ஆனால் எதையும் ஆராய்ச்சி செய்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் எனக்கு எப்பொழுதும் உண்டு.
இது கடைசிக் காலம் என்று நான் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆண்டவரே போக வேண்டும் என்ற விருப்பத்தை என் உள்ளத்தில் கொடுத்தார் போல. அப்படி நான் அன்று போகையில், என் ஆவி என்னில் களி கூர்ந்து மகிழ்ந்து பாடிக் கொண்டே வந்ததை என்னால் நன்றாக உணர முடிந்தது. நான் போக வேண்டும் என்று விரும்பியதைவிட என் ஆவி அதிகம் விரும்பியிருக்கிறது என்பது போல் இருந்தது. அங்கு சென்ற பின்பு, புது இடம் என்பதால் நான் கொஞ்சம் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தேன், வி.செ மரணம், அந்திக் கிறிஸ்து பற்றி பேசிக் கொண்டிருந்தார்.அங்கு அந்த இடத்தில் தேவ பிரசன்னம் அதிகமாக இருந்ததால் என் ஆவி களி கூர்ந்து மகிழ்ந்து துள்ளிக் கொண்டிருந்ததை என்னால் நன்றாக உணர முடிந்தது. வெளிப்பிரகாரமான நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என் உள்ளான ஆவியோ மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. அதாவது நான் வேற, என் ஆவி வேற என்று நான் நன்றாக உணர்ந்த நாள் அது. என் ஆத்துமா, என்னையும் என் ஆவியையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கும் என்று நினக்கிறேன்!
Thanks for your patient reading!
பி.கு: இப்ப சில மாதங்களாக அங்கு உபவாச ஜெபக் கூட்டம் நடக்கவில்லை. ஒரு தீர்க்கதரிசன மையம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த மாதம் Oct 7-10 ஒரு தீர்க்கதரிசன மாநாடு அங்கு நடக்கப்போகிறது. அதன் பின் ரெகுலராக உபவாச ஜெபக் கூட்டம் நடக்கும் என்று நினைக்கிறேன்.
//அக்கினி கடலில் கொண்டு போய் போட்டு பாருங்கள், இந்த கேள்வி வராது!! அக்கினி கூட இல்லை, வெப்பமே போதும்!!//
டெஸ்ட் பண்ணி பார்த்திருக்கீங்களா?
//அமெரிக்க இரட்டை கோபுரத்தை பற்றி வாசித்ததே கிடையாதா??//
எல்லாம் சாம்பலாய் மாறியது என்று வாசித்த ஞாபகம் இல்லை.
//யாத்திராகமம் 3:3 அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்துபோகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதகாட்சியைப் பார்ப்பேன் என்றான்.
அதான் அற்புதகாட்சி என்று வேதத்திலேயே சொல்லியிருக்குதே!! கேன்சர் கட்டியை பிடிங்கி எரிகிறார், சர்க்கரை நோயை தூக்கி எரிகிறார் போன்ற "அற்புதங்களை" நம்புவீர்களே, இதை நம்ப மாட்டீர்களா??!!//
அதே போல் தான். அக்கினி இருக்கும். எரிக்கும். வேதனைப்படுத்தும். ஆனால் அழிக்காது. இப்படிப்பட்ட அற்புதம் தான் அக்கினிக்கடல்.
பிந்திய ஆதாமாகத்தானே இயேசு கிறிஸ்து வந்தார். ஏவாளாக அல்லவே! ஏவாள் பழத்தை சாப்பிட்டவுடன் ஒன்றும் நடக்கவில்லை. ஆதாம் சாப்பிட்டபின் தான் இருவரின் கண்களின் திறந்தது என்பதை கவனித்தீர்களா? ஏன் அப்படி?
//II இராஜாக்கள் 2:11 அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.
II நாளாகமம் 21:12 அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலியா எழுதின ஒரு நிருபம் அவனிடத்திற்கு வந்தது; //
வசனத்திற்கு நன்றி.அந்த வசனம் எனக்குத் தெரிந்ததுதான். எலியாவின் கடிதம் எப்படி வந்தது என்று நினைக்கிறீர்கள்? ஆண்டவர் எலியாவை இரதத்தில் தூக்கிட்டுப் போய் காட்டில் போட்டுவிட்டாரோ?
கஷ்டம் பெரேயன்ஸ். உங்களுக்கு என்ன சொல்லியும் புரிய வைக்க முடியாது. ஆண்டவரே நேரடியா காட்சியளித்து, பேசினால் கூட நம்புவீங்களோ இல்லையோ தெரியவில்லை.
//இதே போன்று தான் எலியாவும் "எடுத்துக்கொள்ளப்பட்டதாக" வசனம் இருக்கிறது, ஆனால் அந்த சமபவத்திற்கு பிறகு அவன் எழுதி அனுப்பிய கடிதம் ஒன்று வருகிறது!! எப்படி? பரலோகத்திலிருந்தா//
நல்ல கேள்வி! எங்கிருந்து வந்தது என்று நீங்க நினைக்கிறீங்க??
21:4ல் இனி மரணமுமில்லை என்று தெளிவாகத்தானே கூறுகின்றதே!! அப்படி என்றால் ஒரே தரம் மட்டுமே மரிப்பது என்பது தேவனின் நியமனம் இல்லாமல் பவுலுக்கு தோன்றியதை எழுதியிருக்கிறாரோ!!?? சிந்தித்துப் பாருங்கள்!! 21:4ல் இனி மரணமில்லை என்று எழுதப்பட்டு, 21:8ல் உள்ள மரணம் என்னவென்று ஆறாய வேண்டுமே!!
அந்தப் பக்கம் பள்ளம் இருக்கு என்று நான் சொல்கிறேன். இல்லை என்று நீங்க சொல்றீங்க. இருவரும் அந்தப் பக்கம் போகாததால் இரண்டில் எது வேண்டுமானாலும் சரியாக இருக்கலாம் என்று வைத்துக் கொள்வோம். எதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்? பள்ளத்திற்கா? பள்ளம் இல்லாமைக்கா? எந்த ஆயத்தம் நமக்கு உண்டாகும் சேதத்தைக் குறைக்கும்?
[//நேரடி அர்த்தம் கொள்ளக் கூடாது என்று எதை வைத்து சொல்கிறீர்கள்?//
அப்படி என்றால் மிருகத்தை மிருகமாக வைத்துக்கொள்வோம்!!]
ஆட்டுக்குட்டியானவர் என்றால் அது இயேசு கிறிஸ்து.
அது போல் மிருகம் என்றால் அந்திக்கிறிஸ்து. இது கூடவா புரியாது??
[வெளி 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
இதற்கு முன்னமே உள்ள வசனத்தை வாசிக்காமல் நேரடியாக இங்கே ஜம்ப் செய்து விட்டீர்களா!!??
வெளி 21:4. அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.]
உங்க வியாக்கியானத்தைப் பார்த்து என் கண்களில் வரும் கண்ணீரை யார் துடைப்பார் என்றுதான் தெரியவில்லை!!!
உங்களுக்கு புரியாது. அல்லது புரிய விரும்புகிறதில்லை என்றாலும் சொல்கிறேன்.
பிசாசு, மிருகம், கள்ளத்தீர்க்கதரிசி யாவும் தீமையையும், பொய் உபதேசங்களையுமே குறிக்கும். நேரடி அர்த்தம் அல்ல. ]
நேரடி அர்த்தம் கொள்ளக் கூடாது என்று எதை வைத்து சொல்கிறீர்கள்?
[//15ம் வசனத்தின்படி இன்னும் சிலரும் அக்கினிக் கடலுக்கு போகிறார்கள்//
இவர்கள் யார்?]
ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்படாதவர்கள்!
வெளி 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
[//15. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.//
எல்லாரையும் அக்கினி பட்சித்துப் போட்ட பின் இவன் யார்?]
சரீரத்தைத்தான் அக்கினி பட்சிக்கும். ஆத்துமா/ஆவியை அல்ல என்று இதிலிருந்து புரிந்து கொள்ள வெண்டும்!
//7. அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,
8. பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.
9. அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.
10. மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.//
"அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது." இதில் பட்சித்துப் போட்டது என்றால் என்ன?
அத்துடன் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நியாயத்தீர்ப்பு 1000 வருட முடிவில்தான் நடைபெறும்!
---
வெளி 20
7. அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,
8. பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.
9. அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.
10. மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.
11. பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.
12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
13. சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். --
//மூன்று உயிர்கள் ஒரு முறை தண்டிக்கப்பட்டாகிவிட்டது, மறுபடியும் ஒரு தண்டனையா என்கிறது நான் பார்த்த பார்வை!!//
கனிமொழியும், ராசாவும் இப்ப ஜெயிலில் இருப்பது விசாரணைக்கு முந்திய காவல். விசாரணை முடிந்து தீர்ப்பு சொன்ன பின் உண்மையான தண்டனைக்கு உட்படுவார்கள்.
அதுபோல இறந்தவுடன் அவரவர் ஆவிக்குரிய வளர்ச்சிக்கேற்றபடி பரலோகில் ஏதோ ஒரு வானத்திற்கு போய் சேருவோம். பாவிகளும் கீழ் உலகத்தில் ஏதோவொரு layer க்கு போய் சேர்வார்கள். சூனியக்காரர்கள், சாத்தானை வணங்கியவர்கள், உங்களைப் போல் கள்ள உபதேசக்காரர்கள் நேரா bottom most layer க்கு போய் விடுவீர்கள் (sorry to say this!). அங்கு special treatment ஆரம்பித்து விடும்! இது தற்காலிகமான நிலை. நியாயத்தீர்ப்பின்போது எத்தனை வருடம்(?), எங்கு, என்ன தண்டனை என்று வரையறுக்கப்படும்!
நாம் நேரம் காலத்திற்கு (space, time) உட்பட்ட பூமியில் வசிப்பதால்தான் 6000 வருடங்கள் என்பது நமக்கு நீண்ட காலமாக தெரிகிறது, நித்தியத்தோடு ஒப்பிடுகையில் இது சில வினாடிகள் தான். அதனால் ஏற்கெனவே ஒரு தண்டனை, அப்புறமும் தண்டனையா என்று கவலைப்பட வேண்டாம்.
//பட்சிக்கும் அக்கினியான தேவன் சாத்தானை இல்லாமல் செய்துவிடுவேன் என்று சொல்லியிருக்கிறார்!!//
இதுதான் பிசாசின் முடிவு என்று என் பைபிளில் இருக்கிறது!
வெளி 20:10. மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.
//பால் குடிக்கிற குழந்தை மரித்து போனால் 25 வயது மனுஷனாகவோ மனுஷியாகவோ உயிர்த்தெழாது!! //
ஓ... அப்போ நிறைய குழந்தைகள் குழந்தைகளாகவே இருப்பார்கள் பரலோகிலும், ராஜ்யத்திலும்?? வளரவே மாட்டாங்களா? என்ன கஷ்டம்! உடல் ஊனமுற்றோரும் அப்படியேதான் இருப்பார்களா?
//மிருகங்களுக்கு உயிர்த்தெழுதல் இருக்கிறது என்று வேதத்தில் எங்கேயும் இல்லை!!
ஆனால் புதிய பூமி வந்தவுடன் அவைகளுக்கு ஒரு வேளை மரணம் இல்லாமல் இருக்கலாம்!! ஆதாம் எப்படி மிருகங்களுடன் வாழ்ந்தானோ அப்படியே தான் உயிர்த்தெழுந்தவர்களும் இருப்பார்கள் என்று ஏசாயா எழுதுகிறான்!! தேவனின் நோக்கமும் அது தானே!!//
அப்ப அந்த மிருகங்கள் எங்கிருந்து வந்தவை?
--
ஏசாயா 65:
20. அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான்; நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.
22. அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.
23. அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை, அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.
24. அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவுகொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.
25. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
--
இதுக்கென்ன சொல்றீங்க? குழந்தை, குடும்பம்,பாவம், மரணம் எல்லாம் ராஜ்யத்தில் இருக்கும் போல்தான் தெரிகிறது.
லூக்கா 20:34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வருகிறார்கள். 35. மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண் கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. 36. அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்.
உயிர்த்தெழுதலில் என்ன நடக்கும் என்பதற்கு சாம்பிள் வசனமே இது!!
--
ஏசாயா 11
6. அப்பொழுது ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.
8. பால் குடிக்குங்குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்,
--
கல்யாணம் பண்ண மாட்டாங்கன்னா எப்படி பால் குடிக்குங்குழந்தை, பால் மறந்த பிள்ளை, சிறு பையன் எல்லாம் இருக்காங்க?? அத்துடன் மிருகங்களும் உயிர்த்தெழுந்து ராஜ்ஜியத்தில் அராஜகம் பண்ணாமல் வாழ்வது எப்படி என்று கற்றுக் கொள்கிறது போல் தெரிகிறது!