Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜெபம்: இயேசுவை நோக்கி...(அல்லது) இயேசுவின் நாமத்தில்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
RE: ஜெபம்: இயேசுவை நோக்கி...(அல்லது) இயேசுவின் நாமத்தில்..!
Permalink  
 


அன்பு சகோ. சில்சாம். மன்னிக்கவேண்டும் நேரமின்மை காரணமாக எழுத முடியவில்லை. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

sjchristopher wrote:
John wrote:
 
 மனிதன் துங்கும் போது அவன் இருதயம் தூங்காது அவன் சாகும்போது துங்கும். சாவதும்,துங்குவதும் ஒன்றா? தூங்கியது  
போதும் சிக்கிரம் எந்திரிங்கப்பா!!
வசனம் சாகும் என்று சொன்னால் சாகும். நீங்க இரட்சிக்கப்படுவது ரொம்ப கஷ்டம் என்று நான் சொல்லமாட்டேன். கடைசிவரை இதை தொடர்ந்தால் நீங்கள் இரட்சிக்கபடவே மாட்டீர்கள் !

 இந்த பதில்கள் நன்றாக ஆணி அடித்தாற்போல் இருக்கிறது...........


 அன்(ம்)பான நண்பர் ஜாண் அவர்களை ஆனந்த கண்ணீருடன் வரவேற்கிறேன்;எங்கே போனீர்களோ, ஆனால் நான் மிகவும் சோர்ந்துபோனேன், ஐயா..!

(ஆணி) த் (தரமான) உங்கள் வரிகளுக்காக மனமார்ந்த நன்றிகள்;ஆனால் நீங்கள் இதனை தயவுசெய்து தனி திரியில் தொகுத்து வழங்கினால் உபயோகமாக இருக்கும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
Permalink  
 

John wrote:
 
 மனிதன் துங்கும் போது அவன் இருதயம் தூங்காது அவன் சாகும்போது துங்கும். சாவதும், துங்குவதும் ஒன்றா? தூங்கியது  போதும் சிக்கிரம் எந்திரிங்கப்பா!!
வசனம் சாகும் என்று சொன்னால் சாகும். நீங்க இரட்சிக்கப்படுவது ரொம்ப கஷ்டம் என்று நான் சொல்லமாட்டேன். கடைசிவரை இதை தொடர்ந்தால் நீங்கள் இரட்சிக்கபடவே மாட்டீர்கள் !
 
 

 இந்த பதில்கள் நன்றாக ஆணி அடித்தாற்போல் இருக்கிறது...........



__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//1.ஒரேதேவன் ஆனால் மூன்று தேவர்கள்.(இரகசியம்) //
 
முன்று தேவர்கள் அல்ல மூன்று ஆள்ததுவங்கள்எங்க நீங்க சொல்லுங்க மொத்தம் எத்தனை தேவர்கள்? What is God? என்றால் ஒன்று (அதாவது Essence  மற்றும் substance )  Who is God என்றால் மூன்று ஏனென்றால் அது ஆள்தத்துவம்.
 
 
//இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு 'விசுவாசித்தால்' பரலோகம் இல்லாவிட்டால் நரகத்தில் நித்திய வாதை.(இதுவரை கிறிஸ்துவை கேள்விப்படாதவர்கள் மற்றும் கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்து மடிந்த கோடாகோடிப்பேர் என்னாவார்கள்?... //
 
இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு 'விசுவாசித்தால்' பரலோகம் இல்லாவிட்டால் நரகத்தில் நித்திய வாதை என்பது உண்மையென்றால் கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்து அவரை அறியாமல் மடிந்த கோடாகோடிப்பேர் நரகம் போவார்கள் இதில் என்ன குழப்பம்? யோபுவுக்கு கிருஸ்துவை தெரியும் அவன் ஆபிரகாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவன். 
 
//விசுவாசித்தால் மட்டும் போதுமா பரலோகம் கேரண்டியா? ஹி ஹி தெரியாது, பரிசுத்தமாக (கூடுமானவரை???) கடைசிவரை வாழ வேண்டும்.//
 
விசுவாசித்தால் மட்டும் போதும். பரிசுத்த வாழ்கை அல்லது வாழ முயற்சிப்பது என்பது விசுவாசத்தின் அடிப்படையில் நடக்கும் கிரியை. ரோமர் 6 அதிகாரத்தை வாசித்தால் பவுல் இதற்கு தெளிவாய் பதில் சொல்லுகிறார். கிருபை பெருகும் படி பாவத்தில் நிலை நிற்கிறேன் என்று உண்மையிலே கிருபையை பெற்றவன் சொல்லமாட்டான் ஏனென்றால் அது அவன் தரித்துக்கொண்ட புதிய சுபாவத்திற்கு எதிரானது.
 
//மனிதன் சாவானா? இல்லை! மரித்தபின்(?) அவன் பாதாளத்திலோ, பரதீசிலோ. ஆபிரகாம் மடியிலோ, பரலோகத்திலோ இருப்பான். நியாயத்தீர்ப்புவரை. அதன்பின் மறுபடியும் பரலோகத்துக்கோ, பாதாளத்துக்கோ(நரகம்) போவான். (மீண்டுமா.....?)//
 
மனிதன் மரித்தபின் அவனுடைய ஆவி தேவனிடத்திலும்  சரிரம் மண்ணுக்கும் திரும்பும். பின்பு இறுதி நியாயத்தீர்ப்பில் நரகமோ (இரண்டாவது மரணமோ, நித்திய ஆக்கினை ) அல்லது நித்திய ஜீவனோ பெறுவான்
 
//எல்லா கிறிஸ்தவ சபைகளும் உண்மையான சபைகளா? நோ நோ கத்தோலிக்கம் கிறிஸ்தவமே அல்ல, பாரம்பரிய புரோட்டஸ்டான்டு சபைகள் ஆவியில்லாத சபை; பெந்தெகொஸ்த் சபைகள் எல்லாமே சரி என்று சொல்ல முடியாது...//
 
சபை எனபது denomination கிடையாது. சபை என்பது கண்ணுக்கு புலப்படாத கிறிஸ்துவின் சரிரம். யார் அதில் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கும் , தேவனுக்கும் மட்டுமே தெரியும். ஒருவனுடைய  கனிகளை வைத்து சற்று நிதானிக்கலாம். நிச்சயமாக ரசலின் சிஷர்கள் சபையில் இல்லை என்று என்னால் உறுதியாய் கூறமுடியும்
 
 
//மனிதன் தூங்கும்போது அவன் ஆத்துமா என்ன செய்யும்? தூங்கும்.
மனிதன் சாகும்போது அவன் ஆத்துமா என்ன செய்யும்? சாகாது.//
 
????? மனிதன் துங்கும் போது அவன் இருதயம் தூங்காது அவன் சாகும்போது துங்கும். சாவதும், துங்குவதும் ஒன்றா? தூங்கியது  போதும் சிக்கிரம் எந்திரிங்கப்பா!!
 
//விசுவாசிகள் பரலோகத்துக்கும் அவிசுவாசிகள் நரகத்துக்கும் போவார்கள். வெகு சிலர் மட்டுமே பரலோகம் போவார்கள் மற்ற எல்லாருமே நித்திய நரகத்துக்குத்தான்//
சரி அதுனாலே என்ன? எல்லாரும் பரலோகம் (அல்லது பரதிசு..கொடுமை) போவர்கள் என்று சொல்லிவிடலாமா?
 
//பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தாரா? ஆமா. ஒருசில பாவிகளையா எல்லா பாவிகளையுமா? எல்லா பாவிகளுக்காகவும்தான்.//
ஒரு சில பாவிகளைத்தான். அதே நேரத்தில் எல்லா  பாவிகளுக்கும் அழைப்பு இருக்கிறது.  "அழைக்கப்பட்டவர்கள் அநேகர் ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் சிலர்."  வாசித்தது இல்லையா?  எந்த பாவியும் தேவன் என்னை அழைக்கவில்லை என்று சொல்ல முடியாது. ரோமர் 1 ஆம் அதிகாரத்தை வாசிக்கவும்.
 
 
//இரட்சிக்கக் கூடாதபடிக்கு அவர் கை குறுகிவிட்டதா? ஆமா பிரதர் இரட்சிப்பு தேவன் கையில் இல்லை அது மனிதன் கையில்தான் இருக்கிறது.//
மனிதன் கையில் மண்ணுதான் இருக்கிறது. இரட்சிப்பும், நித்திய ஆக்கினையும் தேவன் கையில் மட்டுமே இருக்கிறது
 
 
//அது சரி ஏற்றுக்கொண்ட எல்லா கிறிஸ்தவர்களுமாவது பரலோகம் போவார்களா? அதெப்புடீ, சான்ஸ் கம்மி பிரதர். எந்தக் கிறிஸ்தவன் முழுமையான பரிசுத்த ஜீவியம் செய்கிறான்? கஷ்டம்தான்....//
இயேசு கிருஸ்துவை ஏற்று கொண்ட எல்லாரும் பரிசுத்தவான்கள்தான். விபச்சார பாவத்தில் சிக்கியிருந்த கொரிந்து சபை விசுவாசிகளை பவுல் பரிசுத்தவான்கள் என்று அழைக்கவில்லையா?
 
//ஆமா அப்ப பெரும்பாலோர் நரகத்துக்குப் போனால் மெஜாரிடியை நரகத்துக்குத் தள்ளிய சாத்தான் பெரியவனா? அவர்களை அவனிடமிருந்து காப்பாற்ற முடியாமல் போன தேவன் பெரியவரா? //
 
சாத்தான் யாரையும் நரகத்தில் தள்ளுவது இல்லை மறுபடி மறுபடி ஏன் நாங்கள் சொல்லாததை உளறிக்கொண்டு திரிகிறீர்கள்? நரகத்தில் தள்ளுவது தேவனே!
 
 
//'பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்' என்று வசனம் சொல்கிறதே ஆத்துமா உண்மையில் சாகுமா? அது வந்து..... ஹி ஹி... போங்க பிரதர் நீங்க் கொழப்புரீங்க‌... நீங்க இரட்சிக்கப்படுவது ரொம்ப கஷ்டம்...//
 
வசனம் சாகும் என்று சொன்னால் சாகும். நீங்க இரட்சிக்கப்படுவது ரொம்ப கஷ்டம் என்று நான் சொல்லமாட்டேன். கடைசிவரை இதை தொடர்ந்தால் நீங்கள் இரட்சிக்கபடவே மாட்டீர்கள் !
 
 
 
 
 
 


__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

SS: எல்லாருக்கும் பரலோகம் என்று நாங்களும் சொல்லவில்லை, வேதமும் சொல்லவில்லை. 'உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக' என்பதை தெளிவாக விளங்கிக்கொண்டிருக்கிறோம். வருவதாக என்றால் பூமிக்கு வருவதாக என்றுதான் அர்த்தம். பூமிக்கு வரும் அவரது ராஜ்ஜியத்துக்கு முடிவிராது. மனிதன் பூமியில் வாழும் வண்ணமே படைக்கப்பட்டுள்ளான். அவரது ராஜ்ஜியத்தில் பூமி முழுவதும் ஏதேன் தோட்டமாக 'பரதீஸாக' மாறும்.

-

இந்த வசனங்களுக்கு என்ன அர்த்தம்?

யோவான் 14:2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.

யோவான் 14:3 நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

SS: ஏன் அறியாமையால் முருகனை, விநாயகரை, ஆதிபராசக்தியை நோக்கி ஜெபித்தாலும் கேட்பாரோ?

அவர் பக்தியுள்ளவனை தமக்கென தெரிந்து கொள்கிறார் என்ற வசனத்தின்படி உண்மையாய் கடவுளைத் தேடும் ஆத்துமாவை தன் பக்கம் இழுத்துக் கொள்வார்.

உங்க வேதத்தின்படி யாரை நோக்கி ஜெபித்தாலும் பரலோகம் தானே??



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

அண்ணன் SS: இயேசுகிறிஸ்துவைத் தொழுதுகொள்வதில் எந்தவிதத் தயக்கமும் காட்டாதவர்கள், இயேசுகிறிஸ்துவிடம் ஜெபிக்கலாம், அதில் எந்தவிதத் தவறும் இல்லை, அது வேதத்துக்கு இசைவானதே என்று சொல்லி இந்த வாதத்துக்கே முற்றுப்புள்ளி வைக்கலாமே...

செய்வார்களா.....?

--

இந்த பாட்டெல்லாம் பாட மாட்டீங்களா?

--

இயேசுவின்நாமம்இனிதானநாமம்
இணையில்லாநாமம்இன்பநாமம்

சரணங்கள

1. பாவத்தைப்போக்கும்பயமதைநீக்கும்
பரமசந்தோஷம்பக்தருக்களிக்கும் --- இயேசுவின்


2. பரிமளதைலமாம்இயேசுவின்நாமம்
பார்எங்கும்வாசனைவீசிடும்நாமம் --- இயேசுவின்


3. வானிலும்பூவிலும்மேலானநாமம்
வானாதிவானவர்இயேசுவின்நாமம் --- இயேசுவின்

4. நேற்றும்இன்றும்என்றும்மாறிடாநாமம்
நம்பினோரைஎன்றும்கைவிடாநாமம் --- இயேசுவின்

5. முழங்கால்யாவும்முடக்கிடும்நாமம்
மூன்றில்ஒன்றாகஜொலிப்பவர்நாமம் --- இயேசுவின்

6. சாத்தானின்சேனையைஜெயித்திட்டநாமம்
சாபப்பிசாசைதுரத்திட்டநாமம் --- இயேசுவின்

 

--

தேன்இனிமையிலும்இயேசுவின்நாமம்

திவ்வியமதுரமாமே - அதைத்
தேடியேநாடிஓடியேவருவாய், தினமும்நீமனமே

1. காசினிதனிலேநேசமதாகக்
கஷ்டத்தைஉத்தரித்தே - பாவக்
கசடதைஅறுத்துச்சாபத்தைத்தொலைத்தார்

2. பாவியைமீட்கத்தாவியேஉயிரைத்
தாமேஈந்தவராம் - பின்னும்
நேமியாம்கருணைநிலைவரமுண்டு
நிதம்துதிமனமே

3. காலையில்பனிபோல்மாயமாய்உலகம்
உபாயமாய்நீங்கிவிடும் - என்றும்
கர்த்தரின்பாதம்நிச்சயம்நம்பு
கருத்தாய்நீமனமே

4. துன்பத்தில்இன்பம்தொல்லையில்நல்ல
துணைவராம்நேசரிடம் - நீயும்
அன்பதாய்ச்சேர்த்தால்அணைத்துனைக்காப்பார்
ஆசைகொள்நீமனமே.

5.
பூலோகத்தாரும்மேலோகத்தாரும்

புகழ்ந்துபோற்றுநாமம் - அதைப்
பூண்டுகொண்டால்தான்பொன்னகர்வாழ்வில்
புகுவாய்நீமனமே

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

 

How Not To Pray

http://stanleyonbible.com/%20

--

Do not forget the Father.

 

Whom to address in prayer has not been properly taught to Christians today. Most of the modern Christians address their prayers to Jesus, because that’s how many preachers pray. But the Bible consistently teaches that in prayer we must primarily address the “Father” in Heaven. Look at what the Lord Jesus has taught us in His great Sermon on the Mount: “When you pray ... pray to your Father who is in the secret place; and your Father who sees in secret will reward you openly” (Mt 6:6). He added, “In this manner, therefore pray: Our Father in Heaven,...” (v 9). Can words be clearer? Elsewhere Jesus has given us a doctrinal teaching on this matter. John 16:23,24, “In that day you will ask Me nothing. Whatever you ask the Father in My Name, He will give you. Until now you have asked nothing in My Name. Ask and you will receive, that your joy may be full.” What does this mean? During the 3½ years when the Lord Jesus walked and worked with the disciples and taught them, whatever they wanted they asked Him directly. But in this passage He was talking about another dispensation, another era, that would usher in. “In that day you will ask Me nothing.” He amplifies it further in the next verse: “Until now you have asked nothing in My Name.” This is a dispensational change. When you come down in the same Chapter, the Lord reasons about this teaching. Verses 25-27, “These things I’ve spoken to you in figurative language, but the time is coming when I will no longer speak to you in figurative language, but I will tell you plainly about the Father. In that day you will ask in My Name, and I do not say to you that I shall pray the Father for you, for the Father Himself loves you, because you have loved Me and have believed that I came forth from God. I came forth from the Father and have come into the world. Again, I leave the world and go to the Father.”

 

This teaching is in line with what Jesus in the Garden Tomb told Mary Magdalane, when He appeared to her after resurrection: “I am ascending to My Father and your Father, and to My God and your God” (Jn 20:17). He was just saying, “You go and tell My brothers that the Father to whom I’m ascending is your Father too!” A new relationship! Hallelujah! Who baptizes us with the Holy Spirit? It’s the Lord Jesus Christ. That’s what John the Baptist told his disciples: “I baptize you with water; one mightier than I is coming, whose sandals I am not worthy even to bear. He shall baptize you with the Holy Spirit” (Mt 3:11). Yes, Jesus Christ is the Baptizer with the Holy Spirit. Even then the Lord has taught us to ask the Father for the Holy Spirit: “If you then being evil know how to give good gifts to your children, how much more will your Heavenly Father give the Holy Spirit to those who ask Him?” (Lk 11:13). 

 

Are you able to see the pattern? This is a progressive revelation for this dispensation. It’s thrilling to know that the early disciples very quickly grasped this change. Here’s an example: The apostles were threatened that they should not speak in the Name of Jesus any longer. So they went back to their companions and reported the matter to them. Look at the prayer they raised to God: “Lord, You are God, who made heaven and earth ... Now, Lord, look on their threats, and grant to Your servants that with all boldness they may speak Your word ... and that signs and wonders may be done in the Name of Your holy Servant Jesus” (Acts 4:24-30). See how clearly they were addressing the Father and referring to Jesus as “Your Holy Servant.” Friends, study this prayer again and again. We should pattern our prayer according to the Biblical prescription.

 

Apostle Paul was consistent in this practice of addressing the Father in prayer—

Ephesians 2:18, “Through Christ we have access by one Spirit TO the Father.” We pray thro’ Christ to the Father by the Spirit.

 

Ephesians 3:14, “I bow my knees TO the Father of our Lord Jesus Christ.” Beautiful, isn’t it?

These are not isolated texts. This practice runs consistently throughout the New Testament-

 

Romans 8:15, “You did not receive the spirit of bondage again to fear but you received the Spirit of adoption by whom we cry out, Abba Father!” By the Spirit of God we cry out, “Abba, Father!”

 

The present Heavenly ministry of Christ is best understood and realised only when we address “God the Father” in our prayer. As the very “Son of God” He has become our “High Priest” to present our needs before the Father. Here’s a passage which pictorially explains this truth: Hebrew 4:14-16, “Seeing then that we have a great High Priest who has passed through the heavens, Jesus the Son of God, let us hold fast our confession. For we do not have a High Priest who cannot sympathise with our weaknesses, but was in all points tempted as we are, yet without sin. Let us therefore come boldly to the Throne of Grace, that we may obtain mercy and find grace to help in time of need.”

 

Not only as the High Priest but also as an Advocate the Lord Jesus Christ pleads to the Father on our behalf when we go to the Father. Apostle John puts it this way: “If anyone sins, we have an Advocate with the Father, Jesus Christ the righteous” (1 Jn 2:1). When we confess our sins to God the Father, the righteousness of Christ covers us to make us acceptable before the thrice-holy God who cannot wink at sin!

 

Christ is not only our Advocate, but He is also our non-stop Intercessor to complete our salvation. The Bible says, “He is also able to save to the uttermost those who come to God through Him, since He ever lives to make intercession for them” (Heb 7:24,25).

 

Thus, the Trinity of Godhead is best understood when we follow the Scriptural teaching of praying to the Father, in the Name of Jesus, by the power of the Holy Spirit.

 

Does it mean that we cannot ever address Jesus in prayer? Addressing Jesus in prayer can be an exception. It cannot be a general rule. Folks quote Stephen’s prayer at his martyrdom. When Stephen was being stoned by the persecutors, he was bleeding to death and he saw the heavens open and said, “I see the heavens opened and the Son of Man standing at the right hand of God!” (Acts 7:55). He saw Jesus, the One who had been seated, now standing up! Encouraged by that vision, as a prayer of commitment and dedication, he said “Lord Jesus, receive my spirit” (v 60). This is not a model prayer. We should deduce doctrine from the consistent teaching that runs through the Bible and not from such an isolated incident.

 

We may teach children to pray, “Jesus, bless me, keep me, come with me and so on.” But when we grow out of childhood, we should embrace the Biblical pattern. We must teach likewise the non-Christian converts as they learn to pray. This change is not easy and cannot happen overnight, because for so many years we have been praying that way. However we must take a conscious effort to correct all our spiritual exercises to fall in line with the Biblical pattern.

 

The Father, the Son and the Holy Spirit are coequal. But they maintain an order. We must recognize it in all our spiritual exercises, especially in prayer. Do not forget the Father!

 

--

 

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
ஜெபம்: இயேசுவை நோக்கி...(அல்லது) இயேசுவின் நாமத்தில்..!
Permalink  
 


chillsam Wrote on 03-07-2011 00:06:04:

அவரவர் ஒவ்வொரு தியரியைப் பிடித்துக்கொண்டு தன்னுடையதே சரியானது என்று சாதிப்பதா ஆரோக்கிய உபதேசம்..? இது ஆரோக்கியத்தையே கெடுத்துவிடும் போலிருக்கிறதே..?

arputham Wrote@Tcs on 03-07-2011 00:57:45:

வேதாகமத்தில் எந்தக் குழப்பமும் இல்லை. சில குழப்பவாதிகளால்தான் குழப்பமே. வேறு என்ன சொல்ல. வேதாகமம் சொல்லும் முறைக்கு எதிராகச் சென்று வாக்குவாதம் செய்ய நான் விரும்பவில்லை. அவை ஒருவேளை எழுத எழுத இண்ட்ரெஸ்டிங்கானதாக் இருக்கலாம். ஆனால் கடைசியில் அவை தனி மனித் தாக்குதலில்தான் வந்து முடியும். இதற்கு உங்களின் பல விவாதங்களே சாட்சி.

உங்களைக் குறித்த அதீத நம்பிக்கை உங்களை இப்படி எழுத வைக்கிறது. தயவு செய்து சமநிலையைக் குலைக்கும் வண்ணம் எழுதாதீர்கள். பக்திவிருத்திக் கேதுவானவைகளைப் பேசாமல், எப்போது பார்த்தாலும் தடாலடியாக நிற்பது நீங்களே முன்பொருமுறை சொன்னது போல சலிப்பாக இருக்கிறது.


// வேதாகமத்தில் எந்தக் குழப்பமும் இல்லை. சில குழப்பவாதிகளால்தான் குழப்பமே. வேறு என்ன சொல்ல.//

அப்படியானால் நீங்கள் குழப்பவில்லை என்கிறீர்களா..?

// வேதாகமம் சொல்லும் முறைக்கு எதிராகச் சென்று வாக்குவாதம் செய்ய நான் விரும்பவில்லை.//

அப்படியானால் நான் வேதத்துக்கு விரோதமாக செயல்படுவதாக சொல்லுகிறீர்களா..?

// அவை ஒருவேளை எழுத எழுத இண்ட்ரெஸ்டிங்கானதாக் இருக்கலாம். ஆனால் கடைசியில் அவை தனி மனித் தாக்குதலில்தான் வந்து முடியும். இதற்கு உங்களின் பல விவாதங்களே சாட்சி. //

இயேசுவானவர் சிலுவை சுமந்து செல்லுவதைப் பார்த்துக்கொண்டிருந்த எருசலேம் நகரவாசிகளின் சந்ததியில் வந்தவரா நீங்கள்..? உங்கள் தெய்வத்தை தூஷிப்பவர்க்கு இதுதான் பதிலா..? நான் வருடக்கணக்கில் மணிக்கணக்காக வியர்க்க வியர்க்க‌ எழுதியவையனைத்தும் இண்டரெஸ்டிங்குக்காகவும் தனிமனித தாக்குதலிலும் முடிந்துவிட்டதா..? இதனால் எனக்கு என்ன இலாபம்..? நல்ல சர்டிபிகேட் கொடுத்தீர்களே..!

இந்த மார்க்க (பேத) வாதிகளுக்கு ஆமாஞ்சாமி போடாமல்- எதிர்த்து -குறுக்குக் கேள்வி கேட்டால் என்ன கோபம் வருமோ அதே கோபம் உங்களிடம் காணப்படுவது ஆச்சரியம்; அவர்கள் ஸ்டைலில் நான் கொஞ்சம் எடக்கு மடக்காக எழுதியதற்கு இவ்வளவாக விமர்சனம் செய்கிறீர்களே, நான் இத்தனை காலம் தனியாக அங்கு போராடினேனே எனக்கு எப்படி இருக்கும், இது தனி மனித தாக்குதல் இல்லையா..? இதுபோலவே அவர்கள் எழுதியபோது நான் ரியாக்ட் செய்தது மட்டும் எப்படி தவறாக இருக்கும்..?


// உங்களைக் குறித்த அதீத நம்பிக்கை உங்களை இப்படி எழுத வைக்கிறது. //

என்னைக் குறித்து எனக்கு அதீத நம்பிக்கையா,நல்ல தமாஷ்..சபாஷ்..! என்மீது எனக்கு நம்பிக்கையிருந்தால் உங்களிடம் எனக்கு என்ன வேலை..?

// தயவுசெய்து சமநிலையைக் குலைக்கும் வண்ணம் எழுதாதீர்கள். //

(தெய்வத்துவத்தைக் கூறுபோட்டு..)சமநிலையைக் குலைப்பது நீங்களா, நானா..?

// பக்திவிருத்திக்கேதுவானவைகளைப் பேசாமல், எப்போது பார்த்தாலும் தடாலடியாக நிற்பது நீங்களே முன்பொருமுறை சொன்னது போல சலிப்பாக இருக்கிறது. //

உங்கள் எழுத்துக்களால்‍ அதாவது இந்த திரியில் தனக்கு இயேசுவின் மீதான பக்தியானது விருத்தியாகிவிட்டது என்று ஒரு நண்பரையாவது சொல்லச் சொல்லுங்களேன்..!

பிதா என்றாலே குமாரனையுடையவராக இருக்க - அவரும் என்னுடைய நாமத்தினால் நீங்கள் கேட்பதை குமாரனில் பிதா மகிமையடையும் வண்ணமாக தானே செய்து தருவேன் அவரும் வாக்களித்திருக்க - மேலும் ஆயிரக்கணக்கான பாடல்கள் இயேசுவானவரை மையப்படுத்தியே இருக்க - அவரை நோக்கி ஜெபிக்கக் கூடாது என்றும் ஆவியானவரை ஆராதிக்கக் கூடாது என்றும் அறிவிக்கும் நண்பர்களை விட்டு விட்டு நான் ஏதோ தடாலடி பேர்வழி என்று பழிகூறலாமா..?

நான் ஒரு கேள்வி எழுப்பினால் அதற்கு உங்களுக்கு பதில் தெரியாவிட்டால் என்னிடம் அதற்கான விளக்கம் இருக்குமானால் எனக்கும் ஒரு வாய்ப்பு தரலாமல்லவா, அல்லது எதிர் கேள்வி எழுப்பலாமே... அதைவிட்டு ரொம்ப பழம் போல பக்திவிருத்தி அது இது என்று பேசுவோர் எதற்கு இங்கே நேரத்தை வீணடிக்கிறார்கள்..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

pgolda:

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் என்று நம் எல்லா ஜெபத்தையும் முடிக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிப்பது, என்றால் என்ன அர்த்தம்?

I சாமுவேல் 25

4. நாபால் தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கிற செய்தியை வனாந்தரத்தில் இருக்கிற தாவீது கேட்டபோது,

5. தாவீது பத்து வாலிபரை அழைத்து: நீங்கள் கர்மேலுக்குப் போய், நாபாலிடத்தில் சென்று, என் பேரைச்சொல்லி, அவன் சுகசெய்தியை விசாரித்து,

6. அவனை நோக்கி: நீர் வாழ்க, உமக்குச் சமாதானமும், உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும், உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானமும் உண்டாவதாக என்று அவனை வாழ்த்தி,

7. இப்பொழுது ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்கள் உம்மிடத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்; உம்முடைய மேய்ப்பர் எங்களோடேகூட இருந்தார்கள்; அவர்கள் கர்மேலில் இருந்த நாளெல்லாம் நாங்கள் அவர்களை வருத்தப்படுத்தவில்லை; அவர்களுடைய பொருள் ஒன்றும் காணாமற்போனதும் இல்லை.

8. உம்முடைய வேலைக்காரரைக் கேளும்; அவர்கள் உமக்குச் சொல்லுவார்கள்; ஆதலால் இந்த வாலிபருக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கவேண்டும்; நல்ல நாளில் வந்தோம்; உம்முடைய கைக்கு உதவுவதை உம்முடைய ஊழியக்காரருக்கும், உம்முடைய குமாரனாகிய தாவீதுக்கும் கொடுக்கும்படி வேண்டுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான்.

9. தாவீதின் வாலிபர் போய், இந்த வார்த்தைகளையெல்லாம் தாவீதின் நாமத்தினாலே நாபாலிடத்தில் சொல்லி, பின்னொன்றும் பேசாதிருந்தார்கள்.

---
இந்த வேதபகுதியைப் பார்த்தால் தாவிதின் நாமத்தினால் கேட்பது என்பது தாவீதே கேட்பது போல் என்று பொருளாகிறது. எனவே இயேசுவின் நாமத்தில் கேட்பது என்பது இயேசுவே கேட்பது என்பது போலாகிறது. இயேசு கிறிஸ்து என்ன கேட்பார், எப்படி ஜெபிப்பார்? தேவ சித்தத்தைத் தான் கேட்பார். தேவ சித்தத்தின்படிதான் ஜெபிப்பார். நாமும் தேவனின் சித்தத்தை அறிந்து , அப்படி ஜெபித்தால், அது இயேசு கிறிஸ்துவின் ஜெபம் போல் இருக்கும். அதுவே பிதாவிற்கு பிரியமாக இருக்கும்.அப்படி ஜெபிக்கும்போது நாம் தைரியமாக இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே என்று சொல்லலாம்.

வேறு கருத்துக்கள் ??

உன் நண்பன் யாரென்றுச் சொல், நீ யாரென்று சொல்கிறேன் என்பது போல ஒருவரை ஜெபிக்கச் சொல்லி அவருடைய ஆவிக்குரிய தரம் இன்னதென்று நாம் அறிந்து கொள்ள முடியும். சரி விசயத்துக்கு வருகிறேன்.

arputham:

இயேசுவின் நாமத்தினால் நாம் ஏன் ஜெபிக்கிறோம்?

ஏனெனில் நம் கர்த்தராகிய இயேசுதாமே நமக்கு அவ்வாறு கற்றுக்கொடுத்திருக்கிறார். என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் உங்களுக்குத் தருவேன் (யோவான் 14:14) என்று இயேசு சொன்னார்.

நாம் நமக்குத் தெரியாத, அல்லது புதிய அல்லது மிகப்பெரிய மனிதர்களைச் சந்திக்கும்போது அவர்களைப் பற்றித் தெரிந்த நபர்கள் என் பேரைச் சொல்லு என்று சொல்லுவார்கள் அல்லது பரிந்துரைக் கடிதம் தருவார்கள். இது போன்ற ஒன்றுதான் இயேசுவின் நாமத்தில் கேட்பது என்பது. மகா பெரிய தேவனுக்கு முன்பாக வரும்போது நாம் நம்பிக்கையுடன் சொல்லத்தக்க ஒரு பரிந்துரைப் பெயர் இயேசுவின் பெயரே.

பிதாவாகிய தேவன் நமக்கு அந்நியர் அல்ல என்றாலும் நாம் ஏன் இயேசுவின் நாமத்தில் அவரிடம் வரவேண்டியதிருக்கிறது எனில், நாம் பாவம் செய்து அவருக்கு அந்நியராகப் போனதினாலும், பிதாவிடம் சேர ஒரே வழி இயேசுகிறிஸ்துவே என்பதினாலும் நாம் அவரது பெயரில் ஜெபிக்கிறோம்.

மிகவும் முக்கியமாக நான் கவனிக்கவேண்டிய ஒரு காரியம் என்னவெனில், இயேசுவின் நாமத்தில் நாம் வேண்டிக் கொள்கிறோம். இயேசுவின் நாமத்தில் ஜெபத்தில் தேவனுக்கு கட்டளை கொடுக்கக் கூடாது. அது இயேசுவை அவமதிப்பதாகும். இயேசுவின் நாமத்தில் நாம் பிசாசுகளுக்குக் கட்டளையிடலாம். (இன்னும் வரும்)

pgolda Wrote on 30-06-2011 15:04:57:

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் என்று நம் எல்லா ஜெபத்தையும் முடிக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிப்பது, என்றால் என்ன அர்த்தம்?

Chillsam:

சகோதரி கோல்டா அவர்களின் கேள்வி என்னவெனில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிப்பது, என்றால் என்ன அர்த்தம், என்பதே.

"அவருடைய ஆசாரியரில் மோசேயும் ஆரோனும், அவர் நாமத்தைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்கு மறு உத்தரவு அருளினார்." (சங்கீதம் 99:6)

மேற்கண்ட வசனத்தின்படி நான் எழுப்பக்கூடிய கேள்வி என்னவென்றால் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் எந்த நாமத்தில் கூப்பிட்டு விண்ணப்பித்தார்கள்,என்பதே.இதிலிருந்தே சரியானதொரு பதிலை நாம் பெறமுடியும் என்று நினைக்கிறேன்.

rawangjohnson:

சகோ.அற்புதம் சரியான நேரத்தில் ஒரு சர்ச்சையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்.

இறைவனைப் பற்றிய மனித ஞானம் எப்போதும் பூரணம் அடையாத நிலையில் நமது விசுவாச வாழ்ககையில் பல தவறுகளை நிகழ்த்தி விடுகிறோம்.

குறிப்பாக, புதிதாக இரட்சிக்கப்பட்டவர்கள் ஜெபிக்கும் போது இந்தத் தவறுகளைச் செய்து விடுவதுண்டு. அவர்கள் விண்ணப்பங்களை ஊன்றி கவனித்தால், அவர்கள் யாரிடம் ஜெபிக்கிறார்கள் என்ற கேள்வி எழக்கூடும்.

உதாரணமாக, ‘இயேசுவே, எங்களுக்கு இறங்கும்’, இயேசுவே, எங்கள் பயத்தைப் போக்கும்’, ‘இயேசுவே, எங்களைக் காப்பாற்றும்’ என்று அவர்கள் விண்ணப்பிக்கும் போது அவர்கள் யாரைதான் நோக்கி ஜெபிக்கிறார்கள் என்ற சந்தேகம் வரும்.

அதுவும் இந்து பிண்ணனியில் இருந்து வந்த சகோதரர்கள், முருகன், விநாயகர் போன்ற ‘கடவுள்‘களை வழிபட்டு வந்ததால், அவர்களுக்கு இயேசுவும் அப்படிப்பட்ட ‘கடவுள்’களில் ஒருவர் என்ற மாயை உண்டாயிருக்கக் கூடும். இது ஆண்டவருக்கு அரோசிகத்தை உண்டு பண்ணும்.

எனவே, விசுவாசிகள் ஆண்டவரிடத்தில்தான் ஜெபிக்க வேண்டும். ‘இன்னார்‘தான் ஆண்டவர் ’ என்று நாங்கள் விசுவாசிக்கிறோம் என்பதைப் புலப்படுத்த, ‘இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம், எங்கள் நல்ல பிதாவே’ என்ற வாசகங்களோடு முடிக்க வேண்டும்.

இதன் மூலம் நாம் ஆண்டவரிடத்தில் பிரியத்தை உண்டாக்குவதோடு, மற்றவர்களை பூரண விசுவாசத்திற்கு வழிநடத்திச் செல்கிறோம்.

(நான் இறையியல் கற்ற ஊழியன் அல்லன். என்னுடைய விளக்கத்திலும் தவறு இருக்கலாம். அப்படிக் காணப்பட்டால் கனிவோடு விளக்கவும்).

chillsam Wrote on 02-07-2011 13:57:19:

"அவருடைய ஆசாரியரில் மோசேயும் ஆரோனும், அவர் நாமத்தைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்கு மறு உத்தரவு அருளினார்." (சங்கீதம் 99:6)

மேற்கண்ட வசனத்தின்படி நான் எழுப்பக்கூடிய கேள்வி என்னவென்றால் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் எந்த நாமத்தில் கூப்பிட்டு விண்ணப்பித்தார்கள்,என்பதே.இதிலிருந்தே சரியானதொரு பதிலை நாம் பெறமுடியும் என்று நினைக்கிறேன்.

நாமத்தைக் கூப்பிடுவதும், நாமத்திலே கேட்பதும் வெவ்வேறு அல்லவா?

--

நாம் பிதாவை நோக்கி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்க வேண்டும் என்பதுதான் சரியான வழிமுறை. ஆனாலும் அன்பின் மிகுதியாலோ/அறியாமையாலோ நாம் இயேசுவை நோக்கி ஜெபித்தாலும், ஆவியானவரை நோக்கி ஜெபித்தாலும் பிதாவாகிய தேவன் ஜெபத்தைக் கேட்கிறார்.இக்காலங்களில் அனேக ஜெபங்கள் (பாடல்களும் கூட) ஆவியானரை நோக்கித்தான் இருக்கிறது.

chillsam Wrote on 02-07-2011 13:57:19:

"அவருடைய ஆசாரியரில் மோசேயும் ஆரோனும், அவர் நாமத்தைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்கு மறு உத்தரவு அருளினார்." (சங்கீதம் 99:6)

மேற்கண்ட வசனத்தின்படி நான் எழுப்பக்கூடிய கேள்வி என்னவென்றால் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் எந்த நாமத்தில் கூப்பிட்டு விண்ணப்பித்தார்கள்,என்பதே.இதிலிருந்தே சரியானதொரு பதிலை நாம் பெறமுடியும் என்று நினைக்கிறேன்.

pgolda Wrote on 02-07-2011 15:25:30:

நாமத்தைக் கூப்பிடுவதும், நாமத்திலே கேட்பதும் வெவ்வேறு அல்லவா?
--
நாம் பிதாவை நோக்கி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்க வேண்டும் என்பதுதான் சரியான வழிமுறை. ஆனாலும் அன்பின் மிகுதியாலோ/அறியாமையாலோ நாம் இயேசுவை நோக்கி ஜெபித்தாலும், ஆவியானவரை நோக்கி ஜெபித்தாலும் பிதாவாகிய தேவன் ஜெபத்தைக் கேட்கிறார்.இக்காலங்களில் அனேக ஜெபங்கள் (பாடல்களும் கூட) ஆவியானரை நோக்கித்தான் இருக்கிறது.


இந்த வாதம் தெய்வத்துவத்தைக் கூறுபோடும் மற்றொரு முயற்சியாகவே தோன்றுகிறது; பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் ஒரு குறிப்பிட்ட நாமத்தைச் சொல்லி கூப்பிட்டு தங்கள் தேவைகளைச் சொன்னார்களாம்; புதிய ஏற்பாட்டில் அந்த நாமத்தைச் சொல்லி கூப்பிட கூடாது என்று இயேசுவானவர் சொன்னாரா என்ன, என் நாமத்திலே கேளுங்கள் என்று சொன்னார் அல்லவா, மேலும் நானும் அந்த நாமத்துக்குரியவரும் ஒருவராகவே இருக்கிறோம் என்றும் சொல்லவில்லையா..?

அப்படியானால் // நாமத்தைக் கூப்பிடுவதும், நாமத்திலே கேட்பதும் வெவ்வேறு அல்லவா? // என்று கூறும் கோல்டா அவர்களே இரண்டுக்குமுள்ள வித்தியாசத்தை விளக்கிட வேண்டும்.

ஜாண்சன் அவர்களுக்கு ஒரு வார்த்தை:உங்கள் கூற்று இறையியல் நம்பிக்கைகளுக்கு விரோதமானது அல்ல என்பதை நீங்களே நீருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்;மேலும் எந்த கட்டத்திலும் நீங்கள் இங்கே முன்வைத்துள்ள உங்கள் கருத்துக்களைத் திரும்பப் பெறாதிருக்கவும் வேண்டுகிறேன்; ஏனெனில் அதை முன்னிட்டு நீங்கள் விளக்கவேண்டிய காரியங்கள் உண்டு;அப்படியே அந்த கருத்தினைத் திரும்பப்பெறவிரும்பினாலும் குறைந்தது 24 மணி நேரத்துக்குள் திரும்பப்பெறவும் சம்மதிக்கிறேன்.

குறிப்பாக
// உதாரணமாக, ‘இயேசுவே, எங்களுக்கு இறங்கும்’, இயேசுவே, எங்கள் பயத்தைப் போக்கும்’, ‘இயேசுவே, எங்களைக் காப்பாற்றும்’ என்று அவர்கள் விண்ணப்பிக்கும் போது அவர்கள் யாரைதான் நோக்கி ஜெபிக்கிறார்கள் என்ற சந்தேகம் வரும். // ‍

எனும் இந்த கருத்துக்கு நீங்கள் விளக்கம் அளித்தாகவேண்டிவரும்.

சகோ.அற்புதம் அவர்கள் இரஸல் வெறியர்களுடனான எனது (போராட்டத்தில்..)விவாதத்தில் ஏன் அமைதி காத்தார் என்பதற்கான காரணம் இப்போது தான் லேசாக தெரியவருகிறது.

 

chillsam Wrote on 02-07-2011 15:46:26:

அப்படியானால் // நாமத்தைக் கூப்பிடுவதும், நாமத்திலே கேட்பதும் வெவ்வேறு அல்லவா? // என்று கூறும் கோல்டா அவர்களே இரண்டுக்குமுள்ள வித்தியாசத்தை விளக்கிட வேண்டும்.


நாமத்தைக் கூப்பிடுவது - ஹலோ ராஜ்குமார், எப்படி இருக்கீங்க? இந்த உதவி செய்ய முடியுமா? - என்று நேரடியாகக் கேட்பது.

அதற்கு அவர் அது என்னால் முடியாது. சகோ.அற்புதம்தான் செய்ய முடியும். அவரிடம் நான் சொன்னேன் என்று சொல்லிக் கேளுங்கள். கண்டிப்பாக செய்வார் என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

நாமத்தில் கேட்பது: அற்புதம் அவர்களே! சகோ ராஜ்குமார் இந்த உதவியை உங்களிடம் கேட்கச் சொன்னார். செய்ய முடியுமா? - என்று ராஜ்குமாரின் பெயரை பயன் படுத்திக் கேட்பது. இது ஒரு விளக்கம்.


பழைய ஏற்பாட்டில் அவர்கள் யெகோவா தேவனை மட்டும்தான் அறிந்திருந்தார்கள். எனவே யாரை கூப்பிடுவது என்ற குழப்பம் அவர்களுக்கு இருந்திருக்காது.

இயேசுவை கிறிஸ்துவை கூப்பிட்டு ஜெபித்தாலும் தவறல்ல என்றுதான் நான் நினைக்கிறேன்.நான் அடிக்கடி அப்படித்தான் ஜெபிக்கிறேன்!!

chillsam Wrote on 02-07-2011 15:46:26:

அப்படியானால் // நாமத்தைக் கூப்பிடுவதும், நாமத்திலே கேட்பதும் வெவ்வேறு அல்லவா? // என்று கூறும் கோல்டா அவர்களே இரண்டுக்குமுள்ள வித்தியாசத்தை விளக்கிட வேண்டும்.


நாமத்தைக் கூப்பிடுவது - ஹலோ ராஜ்குமார், எப்படி இருக்கீங்க? இந்த உதவி செய்ய முடியுமா? - என்று நேரடியாகக் கேட்பது.

அதற்கு அவர் அது என்னால் முடியாது. சகோ.அற்புதம்தான் செய்ய முடியும். அவரிடம் நான் சொன்னேன் என்று சொல்லிக் கேளுங்கள். கண்டிப்பாக செய்வார் என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

நாமத்தில் கேட்பது: அற்புதம் அவர்களே! சகோ ராஜ்குமார் இந்த உதவியை உங்களிடம் கேட்கச் சொன்னார். செய்ய முடியுமா? - என்று ராஜ்குமாரின் பெயரை பயன் படுத்திக் கேட்பது. இது ஒரு விளக்கம்.

பழைய ஏற்பாட்டில் அவர்கள் யெகோவா தேவனை மட்டும்தான் அறிந்திருந்தார்கள். எனவே யாரை கூப்பிடுவது என்ற குழப்பம் அவர்களுக்கு இருந்திருக்காது.

இயேசுவை கிறிஸ்துவை கூப்பிட்டு ஜெபித்தாலும் தவறல்ல என்றுதான் நான் நினைக்கிறேன்.நான் அடிக்கடி அப்படித்தான் ஜெபிக்கிறேன்!!

 

chillsam Wrote on 02-07-2011 15:46:26:
அப்படியானால் // நாமத்தைக் கூப்பிடுவதும், நாமத்திலே கேட்பதும் வெவ்வேறு அல்லவா? // என்று கூறும் கோல்டா அவர்களே இரண்டுக்குமுள்ள வித்தியாசத்தை விளக்கிட வேண்டும்.


நாமத்தைக் கூப்பிடுவது - ஹலோ ராஜ்குமார், எப்படி இருக்கீங்க? இந்த உதவி செய்ய முடியுமா? - என்று நேரடியாகக் கேட்பது.

அதற்கு அவர் அது என்னால் முடியாது. சகோ.அற்புதம்தான் செய்ய முடியும். அவரிடம் நான் சொன்னேன் என்று சொல்லிக் கேளுங்கள். கண்டிப்பாக செய்வார் என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

நாமத்தில் கேட்பது: அற்புதம் அவர்களே! சகோ ராஜ்குமார் இந்த உதவியை உங்களிடம் கேட்கச் சொன்னார். செய்ய முடியுமா? - என்று ராஜ்குமாரின் பெயரை பயன் படுத்திக் கேட்பது. இது ஒரு விளக்கம்.


பழைய ஏற்பாட்டில் அவர்கள் யெகோவா தேவனை மட்டும்தான் அறிந்திருந்தார்கள். எனவே யாரை கூப்பிடுவது என்ற குழப்பம் அவர்களுக்கு இருந்திருக்காது.

இயேசுவை கிறிஸ்துவை கூப்பிட்டு ஜெபித்தாலும் தவறல்ல என்றுதான் நான் நினைக்கிறேன்.நான் அடிக்கடி அப்படித்தான் ஜெபிக்கிறேன்!!

chillsam Wrote on 02-07-2011 15:46:26:

// சகோ.அற்புதம் அவர்கள் இரஸல் வெறியர்களுடனான எனது (போராட்டத்தில்..)விவாதத்தில் ஏன் அமைதி காத்தார் என்பதற்கான காரணம் இப்போது தான் லேசாக தெரியவருகிறது. //


arputham:

சகோ.சில்சாம் ஏன் இந்த சந்தேகம்? கோவை பெரியன்ஸ் உடன் நீங்கள் பண்ணின விவாதங்கள் எங்கே போய் முடிந்தது? ஒருவரையொருவர் மாறி மாறி தூற்றிக் கொள்வது விவாதம் அல்லவே. சாந்தத்தோடும் வணக்கத்தோடும் பதில் சொல்வதும் பின்பு இரண்டொருதரம் புத்தி சொன்ன பின்பு விலகிவிடுவதுமே வேதம் காட்டும் வழி. உங்களின் வைராக்கியம் பாராட்டபடவேண்டியது. ஆனால் உங்களின் சக்தி விரயமாக்கப்படுகிறது என்ற கருத்து எனக்குள் அடிக்கடி எழுவதுண்டு. யெகோவா சாட்சிகள் வேதாகம மாணாக்கர்கள் போன்ற புரட்டர்களின் வஞ்சகங்களுக்கு தப்பும் படி கட்டுரைகள் தொடர்ந்து வெளிவரும். இரு நாட்களுக்கு முன்பு கூட யெகோவா சாட்சிகள் மற்றும் வேதாகம மாணாக்கர்களுக்கு பரிசுத்த வேதாகமம் தரும் பதில்கள் என்ற கட்டுரையைப் பதித்தேன். இன்னும் பதிப்பேன்.

உங்களைப் பற்றிய தவறான் புரிதல் எனக்கு ஒரு போதும் ஏற்படாது.

சிறு புள்ளியும் கூட சமயத்தில் முழுப் பொருளையும் மாற்றிவிடும். அது போன்ற ஒன்று தான் நாமத்தினாலே என்பதும் நாமத்தில் என்பதும்

பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுப்பது
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுப்பது

இவ்விரண்டுக்கும் வேறுபாடு உண்டு. இது தெரியாமல் தான் ஒன்லி ஜீசஸ்காரர்கள் இன்னமும் குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.


இயேசுவானவர், பிதாவாகிய ஆண்டவரிடத்தில் ஜெபிக்க நமக்குக் கற்பித்தார்

  • மலைப் பிரசங்கத்தில், இயேசுவானவர் பிதாவினிடத்தில் ஜெபிக்குமாறு தமது சீஷர்களுக்குக் கட்டளையிட்டார். – (மத்தேயு 6.5-13, லூக்கா 11.1-4)
  • இயேசுவானவர் ஜெபிக்கும் போதெல்லாம் பரலோக பிதாவை நோக்கியே ஜெபித்தார்.
  • சிலுவையில் அரையப்படுவதற்கு முன் கெத்சமெனே தோட்டத்திற்கு சென்ற இயேசு, ‘இந்தப் பாத்திரம் தம்மை விட்டு அகல வேண்டும்’ என்று பிதாவினிடத்தில் ஜெபித்தார். (மத்தேயு 26.36-39, 42,44)



இயேசுவின் நாமத்தில் பிதாவை நோக்கி ஜெபிக்க வேண்டும்.

  • இயேசுவானவர் நமது மத்தியஸ்தரும் வாதாடுபவருமாய் இருப்பதால், அவர் (இயேசுவானவர்) மூலமே பிதாவினிடத்தில் ஜெபிக்க வேண்டும். (1தீமத்தேயு 2.5, 1யோவான் 2.1)
  • நாம் எதைச் செய்தாலும் அதை இயேசுவின் அதிகாரத்திற்குட்பட்டு செய்ய வேண்டும். (கொலோசேயர் 3.17)
  • இயேசுவோடு பங்காளித்துவ உறவோடு அவர் நாமத்தில் பிதாவிடத்தில் ஜெபிப்போமாக (யோவான் 15.14-16)

 

chillsam Wrote on 02-07-2011 15:46:26:

அப்படியானால் // நாமத்தைக் கூப்பிடுவதும், நாமத்திலே கேட்பதும் வெவ்வேறு அல்லவா? // என்று கூறும் கோல்டா அவர்களே இரண்டுக்குமுள்ள வித்தியாசத்தை விளக்கிட வேண்டும்.

pgolda Wrote on 02-07-2011 16:43:01:

நாமத்தைக் கூப்பிடுவது - ஹலோ ராஜ்குமார், எப்படி இருக்கீங்க? இந்த உதவி செய்ய முடியுமா? - என்று நேரடியாகக் கேட்பது.

அதற்கு அவர் அது என்னால் முடியாது. சகோ.அற்புதம்தான் செய்ய முடியும். அவரிடம் நான் சொன்னேன் என்று சொல்லிக் கேளுங்கள். கண்டிப்பாக செய்வார் என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

நாமத்தில் கேட்பது: அற்புதம் அவர்களே! சகோ ராஜ்குமார் இந்த உதவியை உங்களிடம் கேட்கச் சொன்னார். செய்ய முடியுமா? - என்று ராஜ்குமாரின் பெயரை பயன் படுத்திக் கேட்பது. இது ஒரு விளக்கம்.


பழைய ஏற்பாட்டில் அவர்கள் யெகோவா தேவனை மட்டும்தான் அறிந்திருந்தார்கள். எனவே யாரை கூப்பிடுவது என்ற குழப்பம் அவர்களுக்கு இருந்திருக்காது.

இயேசுவை கிறிஸ்துவை கூப்பிட்டு ஜெபித்தாலும் தவறல்ல என்றுதான் நான் நினைக்கிறேன்.நான் அடிக்கடி அப்படித்தான் ஜெபிக்கிறேன்!!


சகோதரி கோல்டா அவர்களே, மனிதர்களுக்கிடையான வாதத்தில் உங்கள் கூற்று ஏற்புடையதாக இருக்கும்; ஆனால் தேவத்துவத்தில் இது சரியாக வருமா..? ராஜ்குமார் என்பாரும் அற்புதம் என்பாரும் முற்றிலும் வெவ்வேறான நபர்களாச்சுதே,அதை எப்படி இங்கே ஒப்பிடுவீர்கள்..? உங்களை விளக்கங் கேட்டால் இப்படி குழப்பலாமா..? தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்று வேதம் சொல்லுகிறதே, அப்படியானால் அவரால் கூடாது என்றும் இன்னொருவர் சொன்னாலே செய்வேன் என்றும் சர்வ வல்லவர் சொல்லுவாரா..? பழைய ஏற்பாட்டில் குழப்பம் இல்லை,புதிய ஏற்பாட்டில் குழப்பம் இருக்கிறது என்றால் அதற்கு யார் காரணம்..?

அன்பு சகோதரர் அற்புதம் அவர்களே,நீங்கள் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் பேசினால் மட்டும் அவர்கள் உங்களைப் புரிந்துகொள்ளுவார்களா என்ன,நீங்கள் சொல்லுவதில் பாதியை வைத்தே அவர்களுடைய வாதமும் அமைந்திருக்கிறது;நமக்கு அருமையான சகோதரர் ஜாண்சன் அவர்களும் ஏறக்குறைய அவர்களையே எதிரொலிக்கிறார்;இயேசுவானவர் தொழத்தக்கவரல்ல எனும் அவர்கள் கூற்றுக்கும் இயேசுவானவரிடம் (மரியாளிடம்..?) ஜெபிக்கலாமா என்பது குறித்த உங்கள் கூற்றுக்கும் ஆறு வித்தியாசங்களைக் கூறுங்களேன்..!

என் நாமத்தினாலே என்று இயேசுவானவர் சொன்ன நாமம் எது..? இயேசு என்பது அவருடைய சுய நாமமா..? அப்படியானால் பிதாவின் நாமத்தினால் வந்த அவரை ஏற்காதவர்களைக் குறித்து ஆண்டவர் (வேறொருவன் தன் சுய நாமத்தினால்..) சொன்னது என்ன..? அப்படியானால் நித்திய பிதா என்பார் யார்..? (மேசியாவின்) எதிரி சொல்லுவது போல அவர் நித்தியத்துக்கு மட்டும் பிதாவா..? சர்வ வல்லவர் வேறு, வல்லமையுள்ள தேவன் வேறா..? உயிர்த்தெழுந்த இயேசுவானர் தமது சீடர்களை பிள்ளைகளே என்று ஏன் அழைத்தார்..?

அவரவர் ஒவ்வொரு தியரியைப் பிடித்துக்கொண்டு தன்னுடையதே சரியானது என்று சாதிப்பதா ஆரோக்கிய உபதேசம்..? இது ஆரோக்கியத்தையே கெடுத்துவிடும் போலிருக்கிறதே..?

இன்னும் சில நாட்களில் இந்த விவாதத்தின் எதி(ரி)ரொலியை (மேசியாவின்) எதிரிகளின் தளத்தில் நீங்கள் காணலாம்; அவர்கள் செய்யப்போகும் பரியாசத்துக்கு பதிலளிக்காமல் அமைதியாக இருந்து நல்ல கிறிஸ்தவனாகக் காண்பிக்கலாம் அல்லது தடாலடியாக மன்னிப்பு கேட்டு உங்கள் தரத்தை உயர்த்திக்கொள்ளலாம்; ஆனால் அவர்களால் இடறலடைந்த ஆத்துமாக்களின் இரத்தபழி யாரை சுமரும், என்பதை சொல்லுவீர்களா..?

chillsam Wrote on 03-07-2011 00:06:04:
// அவரவர் ஒவ்வொரு தியரியைப் பிடித்துக்கொண்டு தன்னுடையதே சரியானது என்று சாதிப்பதா ஆரோக்கிய உபதேசம்..? இது ஆரோக்கியத்தையே கெடுத்துவிடும் போலிருக்கிறதே..? //


arputham:

வேதாகமத்தில் எந்தக் குழப்பமும் இல்லை. சில குழப்பவாதிகளால்தான் குழப்பமே. வேறு என்ன சொல்ல.


வேதாகமம் சொல்லும் முறைக்கு எதிராகச் சென்று வாக்குவாதம் செய்ய நான் விரும்பவில்லை. அவை ஒருவேளை எழுத எழுத இண்ட்ரெஸ்டிங்கானதாக் இருக்கலாம். ஆனால் கடைசியில் அவை தனி மனித் தாக்குதலில்தான் வந்து முடியும். இதற்கு உங்களின் பல விவாதங்களே சாட்சி.

உங்களைக் குறித்த அதீத நம்பிக்கை உங்களை இப்படி எழுத வைக்கிறது. தயவு செய்து சமநிலையைக் குலைக்கும் வண்ணம் எழுதாதீர்கள். பக்திவிருத்திக் கேதுவானவைகளைப் பேசாமல், எப்போது பார்த்தாலும் தடாலடியாக நிற்பது நீங்களே முன்பொருமுறை சொன்னது போல சலிப்பாக இருக்கிறது.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard