Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யெகோவா சாட்சிகளின் கள்ளத் தீர்க்கதரிசனங்கள்.


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
யெகோவா சாட்சிகளின் கள்ளத் தீர்க்கதரிசனங்கள்.
Permalink  
 


காமிடியன் ஆத்துமகோமாளியின் பதிவு விளக்கம்

//யேகோவா சாட்சிக்காரர்களுக்கும் வேதமாணவர்களுக்கும் சம்பந்தமில்லை; நமக்கும் வேதமாணவர்களுக்கும் சம்பந்தமில்லை என்று ஆயிரம் முறை விளக்கியாகிவிட்டது. நீ ரஸ்ஸலை எப்படி வேண்டுமானாலும் எழுது, எங்களுக்குக் கவலை இல்லை. நீயும்தான் வருடக்கணக்கில் வேதம் வாசிக்கிறாய் உன் லட்சணம்தான் தெரிகிறதே. அவர்தான் இவர், இவர்தான் அவர் என்று ஆண்டான்டுகாலமாக நம்பிக்கொண்டிருக்கும் மூடக்கிறிஸ்தவன் நம்புவதைத்தானே நீயும் நம்பிக்கொண்டிருக்கிறாய். //

சம்பந்தம் இல்லாமலையா? அவர்களின் கொள்கைள், போதனைகளை பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். தனியே பிரிந்துவந்து சபை நடத்தினால் நம்பிவிட வேண்டுமா? உனக்கு கவலை இல்லாதுவிட்டால் ஏன் இந்த பதிவுக்கு பதில் தருகிறாய்.  ரசலை பற்றி எழுதினால் உனக்கென்ன அவ்வளவு அக்கறை?

நீதான் வேதமே பிழை என்று சொல்லும் நபராச்சே. உனது இலட்சணம் உனது எழுத்தில் தெரிவது போதாதா? மீண்டும் உன்னை எச்சரிக்கிறேன் வார்தையை கவனமாக பாவி. மூடன் என்பவன் நீதான் உனக்கு நீயே ஆத்துமதீர்வு என பெயர் வைத்து தேவனின் இடத்தை எடுத்துள்ளாய். வெட்கமாக இல்லையா உனக்கு? கள்ளத்தீர்க்கதரிசியே

//உண்மையில் உங்களையெல்லாம்விட யெகோவா சாட்சிக்காரர்கள் எவ்வளவோ மேல்.//

ஆமாயா உனக்கு நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவன், மனைவியால் தூக்கியெறியப்பட்டவன், கற்பழிப்பு, வியாபார மோசடி செய்பவன் உனக்கு உசத்தியாதான் இருப்பான். ஏன்னா நீயும் அந்த கூட்டத்தை சேர்ந்தவன்தானே. 

//யேகோவா சாட்சிகளின் கள்ளத்தீர்க்க தரிசனங்களைக் குறித்து அவர்களிடமே கேள். ரஸ்ஸலின் விவகாரம் குறித்து வேதமாணாக்கரிடம் கேள். //

எனக்கு அவர்களிடம் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை திருடனிடமே சான்றிதழ் யாராவது கேட்பார்களா? கொஞ்சம் மூளையை யோசி. கடவுள் நல்லாதானே உன்னை படைத்திருக்கிறார். காமடித்தனமாக எழுதிக்கிட்டிருக்காதே. 

//கி.பி.300000000000 ல் நியாயத்தீர்ப்பு என்று நான் சொன்னேனா? இதிலிருந்தே ஒரு விஷயத்தை அரைகுறையாகத் தெரிந்துகொண்டு// 

இப்படின்னா அங்கு என்ன நடக்குது? விபச்சாரமா நடக்குது. நீ நேரடியாக அந்த வசனத்தை பாவிக்கா விட்டாலும் இலகுவில் நியாயத்தீ்ர்ப்பதான் நடக்குது என ஊகிக்கலாம். சும்மா வார்தையால் அளம்பாதே. நீதான் கள்ளத்தீர்க்கதரிசியாற்றே. எங்கே ஒப்புக்கொள்ள போகிறாய். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

நண்பர் பெரியன் எழுகிறார்...

// தங்கசாவி, எண்ணெய் பாட்டில் விற்பனை, அபிஷேக கர்சீப் போன்றதை விற்றவர்கள் சில்சாம் மற்றும் அவரின் சகாக்களின் பார்வையில் உன்னதமான ஊழியர்களாம்!!\\

இப்படிப்பட்ட ஊழியர்களின் செயல்களை கண்டம் செய்துதான் வருகிறோம். இவை வேதத்திற்கு புறம்பானது மூடநம்பிக்கையை சார்ந்தது. கர்த்தருக்கு பிரியமில்லாதது. எனவே இப்படிப்பட்ட காரியத்தில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் கண்டிக்கத்தக்கவர்களே என்பதில் ஐயமில்லை. நான் கூட பல தடவை போல் தினகரனின் இத்தகைய செயல் குறித்து கண்டித்து எழுதியுள்ளேன். ஆனால் உங்களுக்கு ரசலை கண்டிக்க மனது வருகிறதா? நண்பரே!

\\ சில்சாம் எங்கேயோ இருந்து ஏதோ அறைகுறையாக ரஸ்ஸல் என்பவரின் எதிரிகளால் எழுதப்பட்ட சில பக்கங்களை வாசித்து என்ன ஏது என்று கூட விளக்காமல் தன் அறிவீனத்தை நிறுபிக்கிறார்!!!\\

இவை அரைகுறையானவை என்று எப்படி சொல்லுகிறீர்கள் இவற்றை மறுப்பதற்குரிய சரியான ஆதாரம் உள்ளதா? நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்பை (நிரூபிக்கப்பட்டதை) யாராலும் மாற்ற முடியாது. வழங்கப்பட்டது வழங்கப்பட்தே. அதற்குரிய ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அக்காலக்கடத்தில் அவர் எழுதிய பல நூல்கள், சஞ்சிகைகள் இன்னும் பாதுகாப்பாக அமெரிக்காவிலுள்ள Library of Congress இல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இது Legal Deposit அடிப்படையிலும், உள்நாட்டில் வெளிவரும் ஆவணங்களை பாதுகாக்கும் ஏற்பாட்டிலும் செய்யப்படும். எனவே உங்களுக்கு சந்தேகமிருந்தால் சிறப்பு அனுமதி பெற்று அவற்றினை பார்வையிடலாம். Softcopy இற்கு மட்டுமே அனுமதி தருவார்கள். தாராளமாக சோதனையிட்டுப் பாருங்கள். உண்மை புரியும். நான் எப்போதுமே அதற்குரிய குறிப்புகளை அடியில் குறிப்பிட்டிருப்பேன். ஆதாரமில்லாமல் எழுதுவது நீங்கள்தான் நான் அல்ல. அந்த அடிப்படையில்தான் சகோ. சில்சாம் கருத்து கூறுகிறார். புரிந்ததா நண்பரே!

\\  ரஸ்ஸலை விபச்சாரி என்றும், கோதுமை வியாபாரி என்றும் இவன் அடிக்கடி எழுதுவது உண்டு!! ஆனால் அது எல்லாம் என்ன, என்பது கூட இவனுக்கு தெரியுமா என்பதில் சந்தேகம் தான்!! இதோ இந்த தளத்தில் வாசகர்களுக்கு சார்லஸ் தேச் ரஸ்ஸல் என்பவரை குறித்தான சில பக்கங்களை இங்கே தருகிறேன்!! இவன் செலுத்தும் குற்றசாட்டுகள் எப்படிப்பட்டது என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்!!\\

நீங்கள் கொடுத்த தொடுப்பை ஒருமுறை நீங்களே வாசித்துப் பாருங்கள். இது உங்கள் கண்ணில் படவில்லை. உண்மையிலேயே உங்களுக்கு ஆங்கிலம் வாசித்து சரியாக விளங்கிக் கொள்ள முடிகிறதா?

இந்த பத்திகளை வாசிக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

Christ's Second Coming. Russell believe that Christ had returned invisibly in 1874, and that he had been ruling from the heavens since that date. He predicted that a period known as the "Gentile Times" would end in 1914, and that Christ would take power of Earth's affairs at that time. He interpreted the outbreak of World War I as the beginning of Armageddon, which he viewed to be both a gradual deterioration of civilized society, and a climactic multi-national attack on a restored Israel accompanied by worldwide anarchy.

In June 1903, Mrs. Russell filed a suit for legal separation in the Court of Common Pleas at Pittsburgh, Pennsylvania. In 1906, she filed for divorce under the claim of mental cruelty[22]and was granted a divorce from bed and board, with alimony, in 1908.[21]

a shrewd businessman who appeared eager to collect funds from the selling of the Millennial Dawnbooks, that he had cheated one of them out of financial gains, and that he issued thousands ofMillennial Dawn books under a female pseudonym. 

அதுதான் சொல்லுகிறேன். முதலில் நிறைய வாசியுங்கள். அப்புறமா பேச வாருங்கள்.



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//ஆமாம் உலகம் அழிந்து விட்டதுதான். என்ன ஒரு பைத்தியக்காரததனமான தீரக்கதரிசனம். இவனை வெல்ல உலகில் யாராலும் முடியாது. இனி பிறந்து வரவும் முடியாது. இவனது கொள்கையைப் பின்பவற்றுபவர்களும். இப்படிதான் கி.பி 300000000000 நியாயத்தீர்ப்பு என்பதும் தேவதூதனுக்கு பாதம் உண்டு கால் இல்லை என்பதும், தேவன் அனைத்தையும் அறிந்தும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முயற்சிப்பது இல்லை எ்னபதும் மொத்தத்தில் யெகோவா சாட்சிகளின் வழிவந்தவர்கள் தானே. இப்படித்தான் இருப்பார்கள். //

சூப்பர் சகோ. கொல்வின். இந்த லட்சணத்தில் இவர்கள் மற்றவர்களை விமர்சிக்கிறார்கள். இவர்களுக்கு ரசல் கொடுத்த பதில் தவிர வேறு எதுவும் தெரியாத "மக்குகள்" தான். வேறு ஏதாவது கேட்டால் "Out Of Sylabus " என்று பதில் கொடுக்க மறுக்கிறார்கள். இந்த கோவை காமடியன்ஸ் நடத்தும் வேத (?) ஆராச்சி(!!) கூட்டத்திற்கு சென்றால் வாய்விட்டு சிரிக்கலாம் என்று நினைக்கிறேன் biggrin



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: யெகோவா சாட்சிகளின் கள்ளத் தீர்க்கதரிசனங்கள்.
Permalink  
 


இவ்வளவு மோசமான பின்னணியைக் கொண்ட உபதேசத்திலா நம்மிடமிருந்து பிரிந்துசென்ற சகோதரர்கள் சிக்கிக்கொண்டார்கள்..? இவர்களுக்கு இடறலாக இருந்து இவர்களை நம்மிடமிருந்து பிரித்த மோசடி ஊழியர்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்,சகோதரரே;எனவே இரண்டு பணியையும் ஒரே சமயத்தில் சிரமேற்று செய்துவருகிறேன்.இன்னும் மேலதிக தகவல்களையும் எதிர்பார்க்கிறேன்,நண்பரே..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
யெகோவா சாட்சிகளின் கள்ளத் தீர்க்கதரிசனங்கள்.
Permalink  
 


கள்ளத் தீர்க்கதரிசிகளிலேயே உலகில் மிகச் சிறந்தவர்கள் யெகோவா சாட்சிகள்தாம். இவர்களின் கள்ளத் தீர்க்கதரிசனங்கள் பல அதிர்ச்சியூட்டபவை. பல வயிறுகுலுங்க சிரிக்க வைப்பவை. இதோ மீண்டும் உங்களுக்காக....... 

யெகோவா சாட்சித் தலைவன் ரசல் எனும் கள்ளத் தீர்க்கதரிசியின் கோமாளித்தனமான தீர்க்கதர்சனங்கள்

1870: ரசல் 6 பேருடன் தன் வீட்டில் இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாவது வருகையைப் பற்றியும் யெகோவாவின் இராட்சியத்தைப் பற்றியும் வேதப்பாடங்களை நடத்தத் தொடங்கினார். இயேசு 1914-இல் இவ்வுலகில் தமது ஆயிரம்வருட அரசாட்சியை ஸ்தாபிப்பார் என்றும் அதற்கு முன்னர் 40 வருட ஆயத்த காலம் இருக்கும் என்று போதித்தார்.(Souce : J.K. VanBaalen, The Chaos of cults p 257)

1873-இல் இயேசுகிறிஸ்துவின் வருகையின் நோக்கத்தையும் தன்மையையும் பற்றி The Object and Manner of the Lord's Return என்னும் தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டார். இயேசுகிறிஸ்துவின் வருகை மானிடக் கண்களுக்குத் தெரியாததாய் இருக்கும் என்பதே இப்புத்தகத்தின் தர்க்கமாய் இருந்தது. (Source : D.Harris, Awake to the Watch Tower p19)

பிரமிடுக்களின் அளவுகளை அடிப்படையாகக் கொண்டு உலகில் நடைபெறவிருக்கும் முக்கிய சம்பவங்கள் எப்போது சம்பவிக்கும் என இவர்கள் ஆரம்பத்தில் கூறிவந்தனர். 1928 வரை ஆண்டு வரை பிரமிட் வேதாகம உபதேசம் யெகோவா சாட்சிகளினால் பிரசுரிக்கப்பட்டு வந்தது. (Souce : The Watchtower 15 May 1925, p148) 

 

ரசலின் இன்னொரு பைத்தியக்காரத்தனமான கருத்து/கொள்கை

ரசல் எழுதிய வேதபாடம் 6 தொகுப்பு(6 Volume) நூல்களும் வேதத்தின் விமர்சனம் அல்ல. அது வேதமேதான். வேதப் புத்தகத்தை மாத்திரமே படித்தால் தேவனது திட்டங்களை அறிந்து கொள்ள இயலாது. வேதபாடம் என்ற இந்த 6 நூல்களையும் படித்தாக வேண்டும். இந்த 6 வேதப் பாட நூல்களை 10 ஆண்டுகள் நன்றாகப் படித்துப் பழக்கப்பட்டு, பரிட்சயமான ஒருவர் அந்நூல்களைத் தள்ளி வைத்து விட்டு வேதாகமத்தை மாத்திரம் படிக்க ஆரம்பிப்பார்களானால் அவர் வேதத்தில் எவ்வளவு பழக்கமுடையவராக இருந்தாலும் இரு ஆண்டுகளுககுள் இருளுக்குள் போவது உறுதி. மாறாக வேதத்தின் ஒரு பக்கத்தைக் கூடப் படிக்காமல் இந்த வேதபாடத்தை 2 ஆண்டுகள் தொடர்ச்சியாக படிப்பாராயின் அவர் வெளிச்சத்துக்குள் மீண்டும் கடந்து வருவது உறுதி. (Charles Russell, The Watch Tower, September 15, 1910, P298)

 

இவர் உரைத்த  கள்ள தீர்க்கதரிசனங்கள்

1914 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திருச்சபைகளும், பள்ளிகளும் வங்கிகளும் அரசாங்கங்களும் அழிந்துவிடும்

1915 இல் பெயர்க் கிறிஸ்தவம் முழுமையாக அழிந்துவிடும்

உலக அழிவு 1925 இல்

 

ஆமாம் உலகம் அழிந்து விட்டதுதான். என்ன ஒரு பைத்தியக்காரததனமான தீரக்கதரிசனம். இவனை வெல்ல உலகில் யாராலும் முடியாது. இனி பிறந்து வரவும் முடியாது. இவனது கொள்கையைப் பின்பவற்றுபவர்களும். இப்படிதான் கி.பி 300000000000 நியாயத்தீர்ப்பு என்பதும் தேவதூதனுக்கு பாதம் உண்டு கால் இல்லை என்பதும், தேவன் அனைத்தையும் அறிந்தும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முயற்சிப்பது இல்லை எ்னபதும் மொத்தத்தில் யெகோவா சாட்சிகளின் வழிவந்தவர்கள் தானே. இப்படித்தான் இருப்பார்கள்.  

 

 

Rutherford இன் சில அபத்தமான போதனைகள்

தேசிய கொடிக்கு மரியாதை செலுத்துவது தவறு 

(Source : D. Harris, Awake to the Watch Tower p. 21)

தானே யெகோவாவின் வாயாக இருப்பதாகவும், தன்னிடமே தற்காலத்திற்காக தேவவார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

(Source : J.F. Rutherford, Why Serve Jehovah? p. 62)

 

ஆமாம் தேசபற்று உனக்கு ஒரு கேடா. தேவனின் வாயாக இருப்பதாகதானே இன்றைய கள்ளக்கூட்டம் யெகோவா சாட்சிகள், வேதமாணாக்கர்கள் கூட்டம்போதிக்கிறது. 

 

Nathan Homer Knoor (1905-197)

1975 ஆம் ஆண்டுடன் ஆதாமும் ஏவாளும் சிருஷ்டிக்கப்பட்டு 6000 ஆண்டுகள் பூர்த்தியாகிவிடும் அவ்வாண்டே உலகமுடிவின் ஆண்டாக இருக்கும் என்றும் அத்தோடு அர்மகெதோன் யுத்தம் ஆரம்மாகும் எனவும் கூறப்பட்டது. இதனை நம்பிய பல அங்கத்தினர்கள் தங்கள் சொத்துக்களை விற்று முழுநேர ஊழியப்பணியில் ஈடுபட்டனர். ஆனால் 1975 அப்படியேதும் நடைபெறாததால் பலர் யெகோவாவின் சாட்சிகள் சங்கத்திலிருந்து விலகினர்.

 

Joseph Franklin Rutherford

இவர் உரைத்த  (கள்ள)தீர்க்கதரிசனங்கள்

1920 இல் வெளிவந்த Millions Now Living will Never Die எனும் நூல்

1925இல் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்போர் உயிர்த்தெழுவார்கள்.

1941 Childrens எனும் நூலில்

அர்மகெதோன் யுத்தம் நடைபெறும் அது முடியும்வரை திருமணம் முடிக்கவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். (Source : D. Harris Awake to the Watch Tower p21)

இவர்களை விட கள்ள தீர்க்கதரிசனம் உரைப்போர் உள்ளனரா? இவர்களைப் பார்த்துத் தான் இன்றைய கள்ளப்போதக கூட்டம் அழைகிறது. இன்றைய கள்ளப்போதக தீர்க்கதரிசிகளுக்கு வழிகாட்டியே இந்த யெகோவா சாட்சிகள்தான் என்றால் மிகையாகாது. 

 

 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard