Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சேவை செய்கிறார்களாம்...!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
சேவை செய்கிறார்களாம்...!
Permalink  
 


254956_176879749036399_100001431251146_464473_5516516_s.jpg

ஏழை ஜனங்கள் போக்கிடமில்லாமல் பொதுஇடங்களை ஆக்கிரமித்து குடிசை போட்டு குடியிருப்பார்கள்; அவர்களை வெளியேற்ற வழியில்லாத அரசாங்கமும் பணமுதலைகளும் சதிசெய்து தீவிபத்தை அரங்கேற்றும்; இதைக் குறித்து அன்றாடம் செய்தி தாள்களிலும் இன்னும் சினிமாக்களிலும் கூட பார்த்திருக்கிறோம்.

இப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தொண்டு நிறுவனங்கள் உதவிசெய்கிறதுண்டு;ஆனாலும் பொதுவாக தமிழர் பண்பாடாக சொல்லுவது என்னவென்றால்  வலதுகை செய்வதை  இடதுகை அறியக்கூடாது என்பதாக.

ஆனால் கௌரவமானவர்கள் என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் மீடியா நாயகர்கள் அவ்வப்போது தங்கள் தயாளத்தை பிரசித்தப்படுத்துவதைக் காண்கிறோம்; இதன்மூலம் ஒரேநேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையும் அவமானப்படுத்தி தாங்கள் ஆராதிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் படைத்த தேவனையும் கேவலப்படுத்துகிறார்கள்; இதைக் குறித்து சக கிறித்தவன் என்ற முறையில் வெட்கப்படுகிறேன்.

250606_176879829036391_100001431251146_464477_6363753_s.jpg

ஏழை மக்களை இதுபோல கேவலப்படுத்தாதீர்கள்... ஏற்கனவே கிறித்தவர்கள் என்றாலே அதையும் இதையும் கொடுத்து மதம் மாற்றுகிறவர்கள் என்ற அவப்பெயர் இருப்பது போதாதா..?

http://www.facebook.com/ajax/share_dialog.php?s=3&appid=2305272732&p%5B0%5D=100001431251146&p%5B1%5D=44768

இப்படிப்பட்ட ஊழியர்களின் சேவை கிறித்துவின் சபைக்கு தேவையில்லை. 100 ரூபாய் வாங்கி 30 ரூபாய் கொடுத்துவிட்டு அதை விளம்பரப்படுத்திக்கொள்ளும் கீழ்த்தரமான ஊழியர்களாலேயே கிறித்தவம் பல தளங்களில் தலைகுனிந்து கொண்டிருக்கிறது;இதைவிட சாயிபாபா, அமிர்தானந்தமயி போன்றவர்களின் சேவை நிறுவனங்கள் சத்தமில்லாமல் நிறைய சாதித்துக்கொண்டிருக்கிறது;

இதனை வாசிக்கும் மோசடி ஊழியர்கள் திருந்துவார்களா...? திருந்தவேண்டும்.

http://www.facebook.com/notes/chill-sam/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/223775020966900



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard