Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிக்கலான கேள்விகளும் சிலிர்ப்பான பதில்களும் வழங்குபவர் அன்பு சகோதரி கோல்டா..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: சிக்கலான கேள்விகளும் சிலிர்ப்பான பதில்களும் வழங்குபவர் அன்பு சகோதரி கோல்டா..!
Permalink  
 


சகோ.   soulsolution தொடர்பான அவதூறு பதிவுகள் நீக்கப்பட்டன 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா என்று கேட்பான்,ஒருவன்; அதற்கு பாவப்பட்ட கையாலாகாத புலவன் கேள்விகளை நான் தான் கேட்பேன் என்பான்,நெஞ்சை நிமிர்த்தியவாறு...அந்த பரிதாபத்துக்குரிய தருமியைப் போலவே இங்கே மக்கு (வேத) மாணவர்கள் கேள்விகளாக அடுக்குகிறார்கள்...

  • நேரடியான கேள்வி: வேதம் ஒரே தேவன் என்று சொல்கிறதா அல்லது மூன்று தேவர்கள் என்று சொல்கிறதா?
  • வேதம் இயேசுவை 'கிறிஸ்து' என்று சொல்கிறதா? அல்லது இவர்தான் பிதாவாகிய தேவன் என்று சொல்கிறதா?
  • வேதம் பிதா பெரியவர் என்று சொல்கிறதா அல்லது இயேசுகிறிஸ்து பெரியவர் என்று சொல்கிறதா?
  • வேதம் இயேசுவை குமாரன் என்று சொல்கிறதா அல்லது பிதாவாகிய தேவன் என்று சொல்கிறதா?
  • வேதம் இயேசுவை 'அநாதி' தேவன் என்று சொல்கிறதா அல்லது ஆதி(ஒரு ஆரம்பம்)யுள்ளவர் என்று சொல்கிறதா?
  • பிதா கிறிஸ்துவுக்கு கீழ்ப்பட்டிருப்பாரா அல்லது கிறிஸ்து பிதாவுக்குக் கீழ்ப்பட்டிருப்பாரா?
  • நான், நானேதான் நீங்கள் வணங்கும் பிதாவாகிய தேவன் என்று ஒருமுறையாகிலும் கிறிஸ்து 'பகிரங்கமாக' சொல்லியிருக்கிறாரா? இல்லை என்றால் ஏன்?
  • கிறிஸ்து சுயசித்தம் செய்ய வந்தாரா அல்லது பிதாவின் சித்தம் செய்யவந்தாரா?
  • என்னையன்றி பிதாவால் ஒன்றும் கூடாது என்று சொன்னாரா அல்லது பிதாவன்றி என்னால் ஒன்றும் செய்யக்கூடாது என்று சொன்னாரா?
  • தாம் ஒருவரே சாவாமையுள்ளவர் என்று பிதாவைப் பற்றிக்கூறப்பட்டுள்ளது; கிறிஸ்து செத்தாரா இல்லையா?
  • கிறிஸ்துவை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பியது யார்?
  • இயேசுகிறிஸ்துவின் தேவனானவர் யார்?
  • இயேசுகிறிஸ்துவை அனுப்பியவர் யார்?
  • இயேசுகிறிஸ்து தானாக வந்தாரா அல்லது யாருக்காவது 'கீழ்ப்படியும்' நோக்கத்தோடு அனுப்பட்பட்டாரா?

 

தொடரும்....biggrinbiggrinbiggrin

நாம் ஏற்கனவே சொல்லிவிட்டோம், நீ இயேசுவை வெறும் தூதன் என்றும் தொழத்தக்கவர் அல்ல என்றும் சொல்லுபவன், எனவே உன்னுடன் எமக்கு சரிப்பட்டு வராது,வேண்டுமானால் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டோம்; ஒரு கேள்விக்கும் உருப்படியான பதில் கொடுத்த பாடில்லை; கிண்டலும் கேலியும் எகத்தாளமும் செய்து அதெல்லாம் உங்களுக்கு புரியாது, இராஜ்யத்தில் தெரிந்துகொள்ளுவீர்கள்,கண்ணை மறைத்திருக்கிறது போன்ற சால்ஜாப்புகளையே சொல்லிவிட்டு நாங்கள் ஏதோ திசைதிருப்புவதாகவும் குழப்புவதாகவும் பொய்யான குற்றசாட்டுகளை சாட்டிக்கொண்டிருப்பது யாரென்பதை வாசகப் பெருமக்கள் பார்த்துக்கொண்டுதானிருக்கிறார்கள்; ஒருவேளை புரியவில்லையோ என்று மீள்பதிவு செய்தால் அதற்கும் ஒரு கிண்டல்,எகத்தாளம்;இதில் நாங்கள் எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல நடிப்பதாக அங்கலாய்ப்பு வேறு..!

அங்கே சோலுசொலீஷன் என்பவர் நாம் எத்தனை விளக்கங்களையும் வேண்டுகோளையும் விடுத்தும் திருந்தியது போலத் தெரியவில்லை; ஜென்மங்கள் என்றும் மூடர்கள் என்று அறிவீனர்கள் என்றும் தள நண்பர்களை இழிவாக தூஷிக்கும் போக்கு தொடருமானால் அதனை சகித்துக்கொண்டிருக்க முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை மிகுந்த தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

நீங்களெல்லாம் 20 வருடம் விமானப் படையில் சேவைபுரிந்து ஓய்வுபெற்று கௌரவமான முறையில் குடும்ப நடத்துபவர்களாக இருந்தால் யாகாவாராயினும் நாகாக்க வேண்டும்; வேத வசனத்தை உங்களுக்கு எதிராக சொல்லக்கூட எனக்கு விருப்பமில்லை; அந்த அளவுக்கு நீங்கள் வேதத்தை திருத்தி- திரித்து வெகுதூரம் சென்றுவிட்டீர்கள்; இனி நாங்கள் உங்களையோ நீங்கள் எங்களையோ ஆதாயம் செய்யும் முயற்சியோ யார் சரியானவர் என்று காட்டும் முயற்சியோ வீண் என்றாகிவிட்டது; குறைந்தபட்சம் நாலாந்தர பாஷையில் தூஷிக்காமலும் பரியாசம் செய்யாமலும் இருந்தாலாவது நம்மால் இயன்ற பணியை இங்கே நிறைவேற்றலாம்; இல்லாவிட்டால் எனது வழக்கமான அர்ச்சனைப் பணியை நான் துவங்குவேன்; சோலுசொலீஷனும் அவருடைய பணியைத் தொடரும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும்; இன்னும் நான் எழுப்பிய எந்த கேள்விக்கும் தகுந்த விடையை அவர் தரவில்லை என்பதை அவருக்கும் அவருடைய குழுவினருக்கும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்; இதனால் யார் பேடிகள் என்பதும் விளங்குகிறது.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

colvin wrote:

இவனுடன் விவாதத்தை அப்போதே முடித்துவிட்டேன். இவன் பிசாசு என்று எனக்கு தெரியும். இனி விவாதிக்கமாட்டேன்


 நல்லது சகோதரரே,  என்(இயேசுவின்)னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; (மத்தேயு5:11‍,12,) என்று நம்முடைய தேவன் சொல்லியிருக்க நாம் அவர்கள் மீது கோபப்படாமல், பரலோகத்தில் நமக்கு பொக்கிஷத்தை சேர்க்கிறார்கள் என்று களிகூறுவோமாக..



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

chillsam wrote:

வாநோகொ (VNK) கூட்டத்தின் சிக்கலான கேள்விகளுக்கு எளியமுறையில் எந்த மூலபாஷையின் (?!) உதவியும் இல்லாமலே இலாவகமாக பதிலளித்துள்ளார்,நம்முடைய அன்பு சகோதரி கோல்டா அவர்கள்;

அதனை சிறப்பு செய்யும் வண்ணமாக தனிதிரியாக இங்கே பதிக்கிறேன்;மற்ற தள நண்பர்களும் இந்த கேள்விகளுக்கு இதே பாணியில் பதிலளித்து பட்டய கிளப்ப வேண்டுகிறேன்.

1."மாமிசமான யாவர் மேலும் என்ஆவியைஊற்றுவேன், முழங்கால்கள் யாவும் முடங்கும், நாவு யாவும் அறிக்கையிடும், சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்" -ன்றஇந்தவசனங்கள்நிறைவேறுமா? ஆம் எனில் எப்போது நிறைவேறும்?

நிறைவேறிக் கொண்டே இருக்கிறது. ஆவியை ஆண்டவர் ஊற்றிக் கொண்டு இருக்கிறார்.

2." தாவீது பரத்துக்கு ஏறிப்போகவில்லையே" (அப்2:34) என்றால் தாவீது இப்போது எங்கே?

அந்த வசனம் தாவிதைப் பற்றியது அல்ல, இயெசு கிறிஸ்துவைப் பற்றியது.


3. இதுவரை (கிறிஸ்துவுக்குவெளியே) மரித்தவர்கள் ஏற்கனவே நரகத்தில் வேதனைப்படும்போது நியாயத்தீர்ப்புஎதற்கு? வேறு பெரிய நரகத்தில் போடப்படவா?, அல்லது தற்போது சரீரம் இல்லாமல் வேதனை அனுபவிக்கும் அவர்கள் நியாயத்தீர்ப்புக்கு பின்னர் சரீரத்துடன் நரகத்தில் தள்ளப்படுவார்களா?

ஆண்டவரின் திட்டத்தை கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் கிடையாது.


4. இயேசுகிறிஸ்துவின் 1000 வருடபூலோக அரசாட்சியின் நோக்கம்தான் என்ன? யார் அதில் பிரஜைகள்? அதில் மரணம் உண்டா? இரட்சிப்புஉண்டா?

பாவம், சாபம், பிசாசு அற்ற உலகம் எப்படி இருக்கும், என்ன நடக்கும், எப்படி மக்கள் மகிழ்ந்திருப்பார்கள் என்று காட்டப்படும்.

மரணம் உண்டு. இரட்சிப்பும் உண்டு. பிரஜைகள் - உலகில் மீந்திருக்கும் ஜனங்கள்?


5. ஏறத்தாழ 1300 வருடங்கள் வேதம் கிடைக்காத காலத்தில் கோடாகோடி ஜனங்கள் 'சுவிசேஷம்' இல்லாமலேயே மரித்துள்ள பட்சத்தில், இந்தக் கடைசிகாலத்தில் வாழும் மக்கள் மேல் மட்டும் தேவன் அதிக கரிசனை உள்ளவராக இருக்கிறாரா?

ஆண்டவர் காலத்திற்கேற்ற வெளிப்பாடு கொடுப்பார். பிசாசு காலத்திற்கேற்ற கோலம் எடுப்பான். இயேசு கிறிஸ்து தெய்வம் அல்ல என்று எவ்வளவு துணிகரமா பேசுறீங்க.


6. இயேசு உயிர்த்தெழுந்தபின் 40 நாட்களாக பரலோகம் போகவில்லை எனும் பட்சத்தில் கள்ளனிடம் "இன்றைக்கு நீ என்னோடு பரதீசிலிருப்பாய்" என்று ஏன் சொன்னார்?

அவர் சரீரம் தான் போகவில்லை.                


7. பரதீசு என்றால் என்ன? இப்போது அது எங்குள்ளது? வசனஆதாரம்.

பரதீசு தான் பரலோகம். அல்லது பரலோகில் உள்ள ஒரு இடம். அது இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்போர் இருக்கும் இடம்.


8. பாதாளமும் நரகமும் ஒன்றா? பரதீசு, பரலோகம் என்ன வித்தியாசம்?

ஒன்றுதான். ஒன்றுமில்லை.


9. யோவான் 3:13 ன்படி பரலோகத்தில் யாருமில்லை. எலியா, ஏனோக்கு எங்கே?

அவர்கள் ஏற மட்டும் செய்தார்கள். இவர் இறங்கி திரும்ப ஏறினார்.


10. "லாசருவே வெளியேவா" என்று இயேசு சொன்னபோது 'மரித்த' லாசரு எங்கிருந்து வந்தான்?

சரீரம் கல்லறையிலிருந்து, ஆவி பரலோகில் இருந்து.


A) பாதாளம் B) நரகம்C) பரலோகம் D) பரதீசு E) கல்லறை


11.நாம் வாசிக்கும் வேதாகமம் தேவனுடைய வார்த்தையா அல்லது தேவனுடைய வார்த்தையின் மனித முயற்சியின் மொழிபெயர்ப்பா?

எந்த மொழியில் இருந்தாலும், அதில் தேவனுடைய வார்த்தை இருக்கிறது.


12. ஒரு மொழியிலிருப்பதை 100 சதம் சரியாக இன்னோரு மொழிக்கு மொழிபெயர்க்க முடியுமா?

முடியாது.


13. சிறுமந்தை, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், முன்குறிக்கப்பட்டவர்கள், உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவர்கள் என்று சபையைக்குறித்து அது ஒரு சிறிய கூட்டம் என்று வேதம் தெளிவாகக் கூறும்போது ஏன் உலகம் முழுவதையும் சபைக்குள் கொண்டுவர பிரயாசம் நடக்கிறது?

அனைவரும் இரட்சிக்கப்பட அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். உல்கம் முழுவதும் சென்று சுவிஷேசம் சொல்ல சொல்லியிருக்கிறார். ஒவ்வொருவருக்காகவும் இரத்தம் சிந்தியிருக்கிறார்.


14. பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் ஏன் பரலோகம் செல்வதில்லை? (அப்3:34)

ஏனோக்கும் எலியாவும் எங்கே சென்றார்கள்?


15. உயிர்த்தெழுந்த இயேசு பூட்டிய வீட்டுக்குள் பிரவேசித்தார், ஆனால் கல்ல்றையை திறந்துதான் வெளியேறினார். ஏன்?

கல்லறை காலி என்று நாம் காணும்படிதான்.


16. இயேசுகிறிஸ்து எல்லா மனிதரும் இரட்சிக்கப்பட கிரயம் (Ransom for all) செலுத்தியிருந்தாலும் மிகக்குறைவான ஜனங்களே இரட்சிக்கப்படுவார்கள். சரியா?

எண்ணிக்கை நமக்குத் தெரியாதது. கேட்டுக்குப் போகும் வாசல் விரிவாய் இருக்கிறது.


17. இந்தஆதாமின் சந்ததியில் 99 சதம் மக்கள் நரகத்தில் வாதிக்கப்படுவார்கள், 1 சதம் மட்டும் பரலோகம் செல்வார்கள். இதுதான் நற்செய்தியா?

இயேசு இரத்தம் சிந்தியிருக்கிறார். நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, தேவனோடு ஒப்புரவாகி, நாம் பரலோகம் போகலாம் என்பதுதான் நற்செய்தி.


18. "என்னைப் பின்பற்றுங்கள், நான் இயேசுகிறிஸ்துவை பின்பற்றுகிறேன்" என்று கூறிய அப். பவுல் போல வாழும் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? முகவரி அனுப்புக.

அப்படி யாராவது சொன்னார்கள் என்றால் சொல்கிறோம்.


19. அந்நியபாஷை வரம் இல்லாதவர்கள்தான் இன்றும் வேதத்தை மொழிபெயர்க்கிறார்கள் தெரியுமா?

மொழிபெயர்க்க அந்நியபாஷை தேவை இல்லை. மூல பாஷையும், மொழிபெயர்க்கும் பாஷையும் தெரிந்தால் போதும்.


20. கிறிஸ்துவின் சரீரமான சபையில் ஊழியக்காரன், விசுவாசி என்ற பாகுபாடு கிடையாது தெரியுமா?

தெரியும். ஆனாலும் ஆண்டவ்ர் சிலரை விஷெசப் பணிக்காக அழைக்கிறார்.


21. மிகப்பழமையான தோற்சுருள்களில் மாற்கு16:9-20 வசனங்கள் முதலான அனேக வசனங்கள் இலலை. அறிவீர்களா?

அப்படியா? அதனால் என்ன இப்ப?


22. "நீங்கள் சாகவே சாவதில்லை" என்ற பிசாசின் உபதேசம்தான் ('நீங்கள்மரிப்பதில்லை, உங்கள் சரீரம்தான் மரிக்கிறது') காலாகாலமாக எல்லா சபைகளிலும் போதிக்கப்படுகிறது தெரியுமா?

கேள்வி புரியவில்லை!

23. இத்தனை சபைப்பிரிவுகள் ஏன்? ஒரே வேதத்தை வைத்திருக்கும்போது ஏன் இத்தனை உபதேசவேறுபாடுகள், பிரிவினைகள்?

ஒரு சிலர் மாம்சத்திற்கு இடம் கொடுக்கிறார்கள். ஒரு சிலர் உங்களைப் போல் அந்திக் கிறிஸ்துவின் வஞ்சகத்திற்கு இடம் கொடுக்கிறார்கள். எனவே தான்.


24. இவ்வளவு குழப்பத்தையும் வைத்துக்கொண்டு தடுமாறிக்கொண்டிருக்கும் 'சபை' உண்மையிலேயே கிறிஸ்துவின் சபைதானா?

சபை கட்டிடமோ, அமைப்போ அல்ல.

 25. ஏன் ஒரு சிலருக்கு மட்டும் அற்புதங்கள் நடக்கிறது? பவுலுக்கும், எப்பாப்பிரோதீத்துவுக்கும் கிடைக்காத சுகம் இவர்களுக்கு கிடைப்பது எப்படி?

ஆண்டவரிடம் கேட்க வேண்டிய கேள்வி.

....


26. ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயம் செல்லுதல், தசமபாகம் போன்ற காரியங்களில் கவனம் செலுத்தும் கிறிஸ்தவர்கள் சக மனிதர்களிடம் கிறிஸ்துவின் அன்பை விட்டுவிட்டதேன்?  

நாய் என்பது உங்க அகராதியில் அன்பின் வார்த்தையா?


27. பழைய ஏற்பாட்டுக் கட்டளைகள் யூதர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும்போது அதை தனக்கு சாதகமாக மாற்றி சபைகளில் 'தசமபாக வேட்டை' நடப்பது ஏன்?

பண ஆசை. விசுவாச குறைவு.


28. அப்போஸ்தலர் பவுல் பிரசங்கித்த உபத்திரவம் மற்றும் பாடுகள் ஒரங்கட்டப்பட்டு ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் போதிக்கப்படுவது ஏன்?

மாம்சத்திற்கு அதுதான் பிடிக்கும்.


29. அந்நிய பாஷை என்று கூறிக்கொண்டு உபயோகமேயில்லாமல் எவருக்குமே புரியாத ஓசையெழுப்பி பரவசம் கொள்வது (சில சபைகளில் மாத்திரம்) சரியா? ஏன் எல்லா சபைகளிலும் அது வரவேற்க்கப்படுவதில்லை? (வேதத்தை மொழிபெயர்த்தவர்கள் யாருமே ஒரு மொழியைக் கற்றுக் கொண்ட பின்னரே அதை அறிந்தனரேயன்றி அந்நிய பாஷை வரம்பெற்று மொழிபெயர்க்கவில்லை என்று அறிக!)

சரிதான். வரவேற்பு, சபை தலைவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கை, அனுபவத்தைப் பொறுத்தது.


30. ஏன் பழைய ஏற்பாட்டின் ஒரு சில சட்டங்களை மாத்திரம் (ஓய்வுநாள், தசமபாகம்) 'கைக்கொள்ள' அதிகம் அறிவுறுத்தப்படுகிறது?

அப்பதான் சபை என்னும் அமைப்பு இயங்க முடியும்.


31. வேதம் உண்மையில் எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளில் எழுதப்பட்டிருக்க, அதன் பின் அநேக நூற்றாண்டுகளுக்குப்பின் வந்த மொழிபெயர்ப்புகளை சந்தேகத்திற்கு இடமின்றி அப்படியே ஏற்றுக்கொண்டு ஒரே ஒரு மொழிபெயர்ப்பை மட்டும் காலாகாலத்திற்கு உபயோகிப்பது புத்திசாலித்தனமா?

பல ஆங்கில மொழிபெயர்ப்புகள் இருக்கிறதே.


32. பிதாவாகிய தேவன் யார்? அவரது குமாரன் இயேசுகிறிஸ்து யார்? பரிசுத்த ஆவி என்பது யார்? ஏன் இதற்கு வேதத்தின்படி தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்படுவதில்லை?

காணக்கூடாத அன்பு நிறைந்த தேவன். காணக்கூடிய கிருபை நிறைந்த, பலியாய் வந்த தேவன். காணக்கூடாத எப்பொழுதும் உடன் இருந்து வழி நடந்தும் தேவன்.


33. நானே பிதாவாகிய தேவன் என்று இயேசுகிறிஸ்து ஒருமுறையேனும் வேதத்தில் கூறியிருக்கிறாரா? (அவரே அவரிடத்திலேயே வேண்டிக்கொள்வதும், பரிந்துபேசுவதும் வினோதமாக இல்லை?)

ஏன் சொல்லணும்? அவர் பிதா அல்லவே!


34. ஒரு கிறிஸ்தவன் ஜெபிக்காவிட்டால் அநாதி தேவனுடைய மீட்பின் திட்டம் காலதாமதமாகிவிடுமா? அல்லது நிறைவேறாமலேயே போய்விடுமா? தேவன் மனிதனுடைய ஜெபத்தைச்சார்ந்துதான் செயல்படுகிறாரா?

ஜெபம் முக்கியம். ஜெபம் தேவைப்படுகிறது. இயேசு கிறிஸ்து அதிகமாய் ஜெபித்தார். ஜெபிக்க சொல்லியிருக்கிறார்.


35. இன்றைக்கு சபையின் பெயரிலும், ஊழியத்தின் பெயரிலும் நடக்கும் அக்கிரமங்கள் உண்மையிலேயே பக்திவிருத்திக்கு ஏதுவாக உள்ளதா?

என்ன கேள்வி இது?


36. நவீன ஊழியக்காரர்களின் படாடோப ஊழியங்கள், வாரிசு அரசியல் போல வாரிசு ஊழியங்கள் அனைத்தும் அப்போஸ்தலர்கள் ஒருபோதும் செய்ததில்லையே?

நல்ல ஊழியர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.


37. 1யோவான் 5:7 வசனம் ஏன் அடைப்புக்குறிக்குள் [Bracket] ஏன் கொடுக்கப்பட்டுள்ளது? இந்த வசனம் மலையாள வேதாகமத்தில் ஏன் இல்லை?

ஏன்?


38. ஒருவர் மரித்தபின்னர் பரலோகத்திற்கு போவார் என்றால் அவருக்கு 'உயிர்த்தெழுதல்' எதற்கு?

உயிர்த்தெழுதல் சரீரத்திற்கு. சரீரம் இல்லாமல் ஆவி incomplete ஒருவேளைஉணரலாம்.


39. நவீன பிரசங்கிமார்கள் அடிக்கடி பரலோகத்திற்கோ, அல்லது நரகத்திற்கோ சென்று வருகிறார்களே இது யோவான்3:13க்கு எதிராக இருக்கிறதே எது உண்மை? ஆண்டவரின் வார்த்தையா? மனிதர்களின் மாயையா?

பவுல்எங்கேபோனார்அந்தயோவான்தான்எங்கேபோனார்வெளிவிசெஷத்தில்.


40. வியாதியே இல்லாத அல்லது வராத சுகமளிக்கும் வரம் பெற்ற ஒரு ஊழியர் பெயர் கூறுக?

வரத்தை தன் விருப்பதற்கு செயல்படுத்த முடியாது என்று இதிலிருந்து

புரிகிறது அல்லவா?


41. ஆத்துமாவுக்கு வடிவம் உண்டா? இல்லை என்றால் எப்படி அடையாளம் காண்பது?

உண்டு. நம்சரீரம்போல்தான்இருக்கும்.


42. "பாவம் செய்கிற ஆத்துமா சாகும்"

. 'ஆத்துமா' சாகுமா சாகாதா?

சாவதுதான்என்றால்பிரிவுஎன்றுஅர்த்தம்பாவம்செய்யும்ஆத்துமாஆணடவரோடுஐக்கியப்படமுடியாது. இறுதியில்நரகம்செல்லும். நித்தியமாய்அவரைப்பிரியும்.


43. பரலோகத்தில் விலங்குகள் உண்டா? இயேசுகிறிஸ்து ஏறிவரும் வெள்ளைக்குதிரை பறக்குமா, ஓடிவருமா அதற்கு இறக்கைகள் இருக்குமா?

உண்டு. இறக்கைஇருக்குமாதெரியவில்லை. அதுவானத்திலும்ஓடும். பூமியிலும்ஓடும்.


44. எக்காள சத்தம் தொனிக்கும்போது எல்லோருக்கும் கேட்குமா?

ஆயத்தமுள்ளோர்கேட்பார்கள்


45. "பாவத்தின் சம்பளம் மரணம்", "பாவத்தின் சம்பளம் நரகத்தில் நித்திய வாதை" இதில் எது வேதத்தின்படி சரி?

இரண்டும்ஒன்றுதான். தேவனைவிட்டுபிரிவதுதான்மரணம்.


46. பாவத்துக்கு தண்டனை நரகத்தில் முடிவில்லா வாதை என்றால் இயேசு அந்த தண்டனையையல்லவா ஏற்றிருக்க வேண்டும்? ஏற்றாரா?

பாவமும், இரத்தமும் என்ற தலைப்பில் சகோ சந்தோஷ் எழுதியதைப் பாருங்கள்.

http://www.truthspeaks.activeboard.com/t41956378/topic-41956378/?r=357654


47. தேவன் ஒருவரா மூவரா அல்லது மூன்றான ஒருவரா? வசன ஆதாரம்.(அடைப்புக்குறிக்குள் இருக்கும் வசனங்கள் வேண்டாமே).

மூவராய் இருக்கும் ஒருவர்.

 நான்முகம் கொண்ட ஜீவன்கள் பரலோகில் இருப்பதாய் சொல்லப்பட்டிருக்கிறது. உலகில் ஏன் அப்படி ஒரு ஜீவன் இல்லை?


48. இயேசுகிறிஸ்துதான் தேவன் என்று அவரோ அப்போஸ்தலரோ எப்போதாவது கூறியதுண்டா?

ஆமாம். பல இடங்களில்.


49. இயேசு மரித்தாரா?

ஆம்.


50. ஒருவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படாத நிலையில் அவன் உயிர்த்தெழ முடியுமா? அவனுடைய கணக்கில் பாவமிருந்தால் மரணம் அவனை விடுவிக்குமா?

இறுதியில்எல்லோரும்உயிர்த்தெழுவார்கள்.


51. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
நவீன காலத்து பிரசங்கிமார்கள் தொலைக்காட்சி ஊழிய நிகழ்ச்சிகளில் ஜெபிக்கிறார்கள்.
தேவன் அவர்கள் ஜெபத்தை கீழ்கண்ட சமயங்களில் கேட்டு பதில் தருகிறார்.

1. ஊழியர் நிகழ்ச்சியை Record செய்யும்போது.
2. நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது.
3. மறுஒளிபரப்பின்போது.
4. TV ஐப்பார்த்துக்கொண்டே ஒரு விசுவாசி இணைந்து ஜெபிக்கும்போது.
5. மேற்கண்ட நான்கும் சரி.
6. இப்படிப்பட்ட மாய்மால ஜெபங்களை தேவன் ஒருபோதும் கேட்பதில்லை.

 

5.

52. வல்லமையுள்ள ஊழியர் ஒரு பிசாசை ஒருவரிடத்திலிருந்து துரத்தியதும் அது எங்கு போகும்?
1. நரகத்துக்கு 2. வேறெங்காவது சுற்றும் 3.அமைதியாக ஒரிடத்தில் இருக்கும் 4. இன்னொரு மனிதனுக்குள் போகும்

 

2 & 4.



53. மரித்த ஒருவரையாவது உயிரோடெழுப்பும், உயிரோடெழுப்பிய ஊழியர் உண்டா?

உண்டு.


54. 'சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது உங்களை சேதப்படுத்தாது' என்ற வசனத்தை விசுவாசிக்கும் ஊழியர் உண்டா? ஆம் எனில் நிரூபிக்கத்தயாரா?

உன் தேவனாகிய கர்த்தரை பரிட்சை பாராதிருப்பாயாக.

55. கர்த்தருடைய பந்தியை எவ்வாறு ஆசரிக்கலாம்?
1. வருடம் ஒரு முறை 2. வாரம் ஒரு முறை 3. தினமும் ஒரு முறை 4. மணிக்கு ஒரு முறை. 5 எப்போதுவேண்டுமானாலும்

5.


56. இஸ்ரவேலர்கள் பாஸ்காவை வருடம் ஒரு முறைமட்டுமே அனுசரித்தார்கள். நமது
பாஸ்காவாகிய இயேசுகிறிஸ்துவின் பந்தியில் இவ்வளவு குளறுபடிகள் ஏன்?

என்ன குளறுபடிகள்?


57. இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடைகாணாமல் ஒரு இயந்திரம் போல 'சுவிசேஷ' பணி செய்ய பணிக்கப்படும் கிறிஸ்தவனின் நிலை என்ன? ஏன் இது போன்ற மிக மிக அடிப்படைக் காரியங்கள் எந்த சபையிலும் போதிக்கப்படுவதில்லை?

 

மிக மிக அடிப்படையான காரியம். இயேசு கிறிஸ்து தேவன். இரட்சிக்கப்படாத ஆத்துமா ஆக்கினை அடையும் என்பதுதான். இது கூட தெரியாமல், என்ன வேதம் வாசிக்கிறீங்க?

சரியா? தவறா?

1. வேதத்தை ஆராய்ந்து பாருங்கள் என்று வேதமே கூறுகிறது. - படித்து தியானிங்க என்று அர்த்தம்

2. "எல்லாரும் ரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவால் நிரப்பப்படவும் தேவன் சித்தமுள்ளவராக இருக்கிறார்" ஆனால் அவரது இந்த சித்தம் ஒருபோதும் நிறைவேறாது. - நம் சுய சித்தத்தால் தேவ சித்தம் செய்யாமலிருப்பதால்.

3. மனிதன் ஜெபிக்காவிட்டால் தேவனால் ஒன்றும் செய்ய முடியாது. - உலகத்தை அவராகத்தானே படைத்தார்.


4. சாதாரணமாக நினைவு நாள் என்பது வருடம் ஒரு முறைதான் வரும் - ???

 


 நம்முடைய தளத்தில் முதன்முதலாக ஒரு திரியைப் பூட்டும் நிலையை அது எட்டியிருக்கிறது;ஏனெனில் இந்த திரியின் ஆரம்பத்தைப் பார்த்தால் அது சகோதரி கோல்டா அவர்களுக்கு சிறப்பு செய்யும் வண்ணமாக வேறொரு திரியிலிருந்து பிரிந்து வந்ததை அறிகிறோம்;ஆனாலும் இந்த திரியும் திசைமாறி பயணித்து தலைப்பையும் அதன் நோக்கத்தையும் விட்டு வெளியே போய்விட்டது; ஆனாலும் கோல்டா அவர்கள் பதிலளித்துள்ள கேள்விகளுக்கு மற்ற தள நண்பர்களும் பதிலளிக்க முயற்சிக்கலாம் அல்லது இந்த திரியை இப்படியே பூட்டிவிடலாமா என்று நண்பர்களின் கருத்தை வேண்டுகிறேன்; ஆனாலும் எதையும் தணிக்கை செய்வதோ நீக்குவதோ இல்லை என்ற நம்முடைய ஆதாரக் கொள்கை காரணமாக எந்தவொரு வரியையும் நீக்க இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
சிக்கலான கேள்விகளும் சிலிர்ப்பான பதில்களும் வழங்குபவர் அன்பு சகோதரி கோல்டா..!
Permalink  
 


joseph wrote:

கோவை பெரியன்ஸின் நடு (!) நிலைமை புல்லரிக்க வைக்கிறது. யௌவன ஜனம் தளத்தில் கொல்வினை ஒருவர் தவறு என்றாவது சுட்டிக்காட்டுகிறார் ஆனால் பெரியன்ஸ்... சோல் சொலூஷனை தட்டிக்கொடுக்கிறார்... இப்படியே கன்டினியூ பண்ணுங்க‌....


அடியேனும்கூட பலமுறை கோல்வின் அவர்களால் கண்டிக்கப்பட்டு அவர் சொல்லுவதில் உள்ள நியாய உணர்வையறிந்து என்னை மாற்றிக்கொள்ள முயற்சித்திருக்கிறேன்;அதாவது நம்மை நாமே நிதானித்து அறிந்து  நம்முடைய கண்களிலுள்ள தூசிகளை நீக்க ஆயத்தமாக இருக்கிறோம்;

ஆனால் (மேசியாவின்) எதிரிகளோ இதற்கு மாறாக எதிரியின் கண்களில் உத்திரம் இருப்பதாக கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்;மல்டி லெவல் மார்க்கெட்டிங் (MLM) எனும் மோசடி தொழில் செய்யும் நாய்க்கு இவ்வளவு இது இருந்தால் கைப்பாடாய் உழைத்து சாப்பிடும் - பெரியவர்களுக்கு அஞ்சி நடந்து அவர்கள் கற்றுக்கொடுத்த சத்தியத்திலிருந்து தடம் மாறாதிருக்கும் நமக்கு எவ்வளவு வைராக்கியம் இருக்கவேண்டும்..!

விபச்சாரியைப் போல சபை சபையாய் அலைந்த அனுபவங்களை (upto 2007)  அவனே வெட்கங்கெட்டு எழுதியிருக்கிறான்;எங்கோ பங்கு பிரிப்பதில் தகராறு வந்திருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது;ஆனால் நாமோ ஆரம்பத்திலிருந்தே சபைகளையோ பாரம்பரியத்தையோ சார்ந்திருந்திராமல் வேதத்தை மட்டுமே சார்ந்திருக்கிறோம்.

இப்போதும் இந்த நாய்களுக்குள் ஒரு நாய் அடுத்த தெரு நாயைப் பார்த்து குரைக்கும் அளவுக்கு தான் இவர்களுடைய வேத ஆராய்ச்சி (???) இருக்கிறது; இவர்களில் பலர் குடிகாரர்களாகவும் பெண் பித்தர்களாகவும் பணப் பேய்களாகவும் இருப்பதைச் சொன்னால் நமக்கு கொலை மிரட்டல் விடுகிறார்கள்,கேஸ் போடுவதாக மிரட்டுகிறார்கள்;வாதத்தின் மூலம் மேற்கொள்ள இயலாத கொலைவெறியர்கள் இவர்களுடைய குருவான இரசலுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை அறிந்தே ஒதுங்கிப்போகிறோம்;ஆனால் ஈசாக்கின் வழிவந்த வாக்குத்தத்த சந்ததியான நாம் ஒதுங்கிச்செல்வதைப் பார்த்து எள்ளிநகையாடி மீண்டும் கூ(ட்)டத்துக்கு இவர்கள் அழைப்பதிலேயே தெரிகிறது,இவர்கள் எந்த அளவுக்கு நல்லவர்கள் என்பதும்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இந்த நாய்களுடன் நேருக்கு நேர் விவாதத்துக்குச் சென்றால் இரத்தக்களறி, இரணக்களறி ஆகும்;கொசுவைக் கூட "ச்சூ.. ப்போ..." என்றுதான் விரட்டுவேன் என்பார்கள்,அதை நம்பி போய்விட்டால் நம்மை அடித்துவிட்டு நீ எனக்கு கொசு மாதிரி நீ கடித்தாய், நான் அடித்தேன் என்பார்கள்;

இவன் (சொட்டு மூத்திர பார்ட்டிகள்..!)களுடன் நமக்கு விவாதம் என்பது ஓயாத ஒழுக்கு தான்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
RE: சிக்கலான கேள்விகளும் சிலிர்ப்பான பதில்களும் வழங்குபவர் அன்பு சகோதரி கோல்டா..!
Permalink  
 


சோல் சொலூஷன் அடுத்தவர்களை கோபப்படுகிறார் என சொல்லுமுன் தான் இதுவரை வார்த்தைகளை ஒழுங்காக பிரயோகப்படுத்தியிருக்கிறீரா என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். கேட்டால் நான் உன்னை சொல்லவில்லை என பதுங்குவது. இப்படி நாட்டின் தலைவர்களையோ மற்ற மத தலைவர்களையோ எழுத முடியுமா? நல்லா இருக்குது உங்க நாகரீகம், இதைத்தான் வேத ஆராய்ச்சி என்ற பேரில் ரூம் போட்டு யோசிப்பார்கள் போல. மற்ற ஊழியக்காரர்களை நாய், அது இது, ஈனப்பொழப்பு நடத்துபவன் என எழுதுவார்கள் மற்றவர்கள் மட்டும் இவர்களுக்கு தடவிக்கொடுத்தது மாதிரி பேச வேண்டும் அல்லது எழுதவேண்டும். 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

சபை நடத்துவது ஈனத்தொழிலாம். அப்படி அது ஈனத்தொழில் என வேதாகமத்தில் ஏங்காவது இருக்கிறதா? தியாகத்துடன் செய்யப்படும் மிஷனரி ஊழியங்களை பற்றியே கொச்சையாக எழுதுபவர்கள் நீங்கள், தனி மனிதனை பற்றி எழுதுவதை பற்றி கேட்கவே வேண்டாம். பெண்ணை பொட்ட புள்ளை என சொல்வதே கீழ்த்தரமான எண்ண பிரதிபலிப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

மீன் பிடித்துக்கொண்டிருந்த பேதுருவை, "உன் வலைகளை விட்டு" என்னை பின்பற்றி வா என அழைத்தார் ஆண்டவர். ஊழியத்தின் பொருட்டு வேலை முழுவதும் துறந்த எடுத்துக்காட்டுகளும் உண்டு. இதை புரிந்துகொள்ளாமல், முழு நேர ஊழியம் செய்பவர்களை பகடி செய்துகொண்டிருக்கிறீர்கள். ஒருவன் இரு எஜமானுக்கு ஊழியம் செய்ய முடியாது என சொல்லப்பட்டுள்ளது அப்படியானால் உங்கள் நிலைப்பாடு என்ன, வேலையை தொடர்ந்துகொண்டு ஊழியம் செய்வீர்களா?

கோவை பெரியன்ஸின் நடு (!) நிலைமை புல்லரிக்க வைக்கிறது. யௌவன ஜனம் தளத்தில் கொல்வினை ஒருவர் தவறு என்றாவது சுட்டிக்காட்டுகிறார் ஆனால் பெரியன்ஸ்... சோல் சொலூஷனை தட்டிக்கொடுக்கிறார்... இப்படியே கன்டினியூ பண்ணுங்க‌....



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

eloi4u wrote:

கோல்வின் உங்களுக்கு என்ன ஆயிற்று எதற்காக இப்படி இந்த பிசாசுகளுடன் தர்கித்துக் கொண்டிருக்கிறீர்கள், நிச்சயம் இது அனேகருக்கு இடரலாய் இருக்கும் நன்றி


 

நிச்சியமாக சகோரதரே. ஒரு நல்ல கிறிஸ்தவனின் நாவிலிருந்து இந்த மாதிரியான சொல்லாடல்கள் பிறக்காது. ஆயினும் ஒரு கட்டம் தாண்டிய நிலையிலேயே எழுதினேன். வலி என்றால் என்னவென்று இந்த ஆத்தும கோமாளிக்கு தெரிய வேண்டும். சகோ சில்சாமை மிக வேலமான வார்த்தைகளினால் திட்டுகிறான். என்னையும் கூட. இதே வார்த்தைகளை அவனுக்கு பாவித்தவுடன் துள்ளுகிறான். இப்போது கூட நான் பாவிக்கும் வார்த்தை பிழை என்று சொல்ல அவனுக்கு தைரியம் வருகிறதா? ஒருவருக்கு கருமாதி பண்ணமலா? இவன் சகோ. சில்சாமின் ஆத்துசாந்திக்காக பிரார்த்திக்கிறானாம். இதைவிட நான் மோசமாக எழுதவில்லை. இதை அவன் உணர வேண்டும் அதற்காகவே இத்தனை சொல்லாடல்கள். 

ஊழியர்களை தரக்குறைவாக, பணம்பித்து பிடித்தவர்களாகவும், பரலோகம் போய்வருகிறவர்கள் கிண்டல் செய்யும் இவன் அதற்கு மேலாக பண ஆசை பிடித்தவனாக இருக்கிறான். டீலா நோடீலா என பல இலட்சம் ரூபாய்கு சூதாட்டத்திற்கு தயாரா என்கிறான். கி.பி. 3000000000000 பரலோக தரிசனங்களை கண்கண்டதாக எழுதுகிறான் இந்த கோமாளி. பரலோகத்தில் நடக்க இருக்கும் விடயங்களை இந்த கோமாளிக்கு அறிவித்தது நிச்சியமாக அந்த சாத்தான்தான் அந்த சாத்தானின் வெளிப்பாடுகளைத்தான் இந்த பிசாசு அறிவிக்கின்றான். 

எனவே மற்றவர்களைப் பற்றி எழுத இவனுக்கு எந்த தகுதியுமில்லை. சேற்றிலே உழலும் பன்றி சுத்தத்தைப் பற்றிய போதனை மற்றவர்களுக்கு எடுக்க கூடாது.

இவனுடன் விவாதத்தை அப்போதே முடித்துவிட்டேன். இவன் பிசாசு என்று எனக்கு தெரியும். இனி விவாதிக்கமாட்டேன்

உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி நண்பரே!. 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

கோல்வின் உங்களுக்கு என்ன ஆயிற்று எதற்காக இப்படி இந்த பிசாசுகளுடன் தர்கித்துக் கொண்டிருக்கிறீர்கள், நிச்சயம் இது அனேகருக்கு இடரலாய் இருக்கும் நன்றி



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

மூடனின் மற்றொரு பதிவு

புத்தி பேதலித்துவிட்டதா? நான் சபை நடத்துவதை நிரூபி பின்பு மற்றவைகளை பேசிக்கொள்ளலாம்.

உன் போன்று தாந்தோன்றித்தனமாக பதில் சொல்லவில்லை. எங்கோ இருந்துகொண்டு முட்டாள்தனமாக குற்றம் சாட்டக்கூடாது. 

சில்சாம் எங்கள்தளத்தின் சத்தியம் தாங்காமல் ஓடி ஒளிந்துகொண்டது எல்லாருக்கும் தெரியும். அது சில்சாமுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள விஷயம். நீ யார் குறுக்கிட‌?

ஆரம்பத்தில் நான் அமைதியாக இருந்தேன். சும்மா சும்மா என்னை வம்புக்கிழுத்து அசுத்த வார்த்தைகளினால் பேசினாய். இப்போது நான் மன்னிப்புக் கேட்க வேண்டுமாம். என்ன காமி்டி

நீ கேட்ட கேள்விக்கு பதில் தந்தாகிவிட்டது. நீ நேர்மையாளனாக இருந்தால் ஏன் தவறு என்று பதில் தந்திருப்பாய். ஆனால் நீ அப்படியிலலையே! சில்சாமைக்குறித்து சபைப் பணத்தில் சாப்பிடுபவன் என்று எழுத தெரிகிறது. நிருபிக்க சொன்னால் சப்பை கட்டு கட்டுகிறாய். அதுவே உனக்கு சொன்னால் கோபம் வருகிறது. இப்படிதான் மற்றவர்களுக்கும் இருக்கும்.

உனது தளத்தில் கூட உனது சகபாடி என்னை கண்டிக்கமுடியவில்லை. இது ஏன். ஏனென்றால் இதைவிட மோசமான வார்தைகளையெல்லாம் நீ பாவிக்கிறாய். நான் உன்னை சாவ சொன்னதற்கே இவ்வளவு குதிக்கிறாயே சில்சாமிற்கு கருமாதி பண்ணி ஆத்தும சாந்தியடைய வேண்டும் என பிரார்த்தித்த உன்னை உனது சகபாடி கண்டித்தாரா? இல்லைதானே. ஒருவருக்கு கருமாதி பண்ணி எழுத உனக்கு எப்படி மனது வருகிறது. அந்த அடிப்படையில்தான் நான் உனக்கு அதை எழுதினேன். உனக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? 

இப்போது மட்டும் உனக்கு எவ்வளவு வருத்தம் வருகிறது. உனக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்றுதான் எழுதினேன். 

உன் போன்ற பன்றிகளுடன் பேசுவதே பாவம். பன்றி எப்போதும் பன்றிதான். அசுத்தத்தில்தான் உழலும்.  உன்னுடன் பேசினாலே அது பாவம் செய்வதற்கு ஒப்பாகும். இனி உனது பதிவுகளுக்கு பதில் தர மாட்டேன். என்னை பொருத்தவரையில் நீ மரித்து விட்டாய். 

எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள். அதுதான் டீலா நோடீலா என போட்டு உனது கெட்ட (பணஆசையை) வெளிப்படுத்திவிட்டாயே. 

bye

 

 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

golda wrote:

 சகோ கொல்வின் நீங்க மன்னிப்பு கேட்கும் வேளை வந்து விட்டது!


 சகோதரி தயவு செய்து அவசரபபட்டு வார்த்தை விடாதீர்கள். இந்த கோமாளிக்கு நீங்கள் துணை நிற்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. ஊழியர்களை குறித்து மிகவும் தரக் குறைவாக எழுதுபவன்தான் இவன். சகோ. சில்சாமிற்கே கருமாதி பண்ணி பதிவு எழுதியவன். இவன் உயிரோடு இருந்தால் பூமிக்கு பாரம். எனவே நான் எழுதியது சரியே. இவன் சகோ சில்சாமைக் குறித்து கூறியதை இன்னும் நிரூபிக்கவில்லையே. இவனது பதிவுகளை வாசித்துப் பாருங்கள். இவனின் மேல் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்படுகிறதா? அனைவரின் சாபமும் இவன் மேல் இருக்கிறது. 

பணஆசை கொண்டு எப்படி மற்றவரை வஞ்சிக்கலாம் என்ற திட்டத்தோடுதான் டீலா நோடீலா என்றான். இவனின் வஞ்சிக்தனத்தை புரிந்து கொள்ளுங்கள். 

இவனின் கி.பி 30000000 பதிவுகளை வாசித்துப் பாருங்கள். தேவனை என்ன மாதிரி துாஷித்திருக்கிறான் என்று.  அவனுக்கு இந்த தரிசனத்தை கொடுத்தது யார்? இவன் மற்றவர்களை நியாயம் தீர்ப்பதற்கு முன் அவனே அவனை நியாயம் தீர்த்துக் கொள்ளட்டும். 

இதற்கு மேல் நான் உங்களுக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை.



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

colvin wrote:

 வயதுதான் போய்விட்டதே. இன்னும் ஏன் உயிரோடு இருக்கிறாய். 

 


 சகோ கொல்வின் நீங்க மன்னிப்பு கேட்கும் வேளை வந்து விட்டது!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

மூடக்காமிடியன் ஆத்தும கரைசலின் காமிடிகள் 

 

இவன் தீரக்கதரிசனமாக கி.பி 3000000000 நியாயத்தீரப்பு என்கிறான். இவனின் கதையை வாிக்க இங்கு செல்லுங்கள்

இப்ப இந்த மூடன் எழுதிய பதிவை வாசியுங்கள்


இப்பதிவை ஒரு சிலர் ஏதோ நான் கூறிய தீர்க்கதரிசனமாக ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொண்டு விமர்சிக்கிறார்கள்.

 

இது இன்றைய கிறிஸ்தவ மண்டலத்தில் சொல்லிக்கொடுக்கப்படும் உபதேசத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். மரித்தவுடன் ஆத்துமா பாதாளத்திற்கோ (ஐசுவரியவான்) அல்லது பரதீசிற்கோ(சிலுவைக்கள்ளன், லாசரு) போகும் என்றும், வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில் இவர்கள் மீண்டும் 'உயிர்த்தெழுந்து' நரகத்துக்கோ(அக்கினிக்கடல்) அல்லது பரலோகத்திற்கோ போவார்கள் என்ற பேய்த்தனத்துக்கடுத்த உபதேசத்தைத்தான் நையாண்டித்தனமான் கற்பனையுடன் எழுதியுள்ளேன்.


இதன் அபத்தங்கள் ஒருசிலரின் கண்களைத் திறந்திருக்கக்கூடும்.

மற்றவர்கள் பற்றி கவலையில்லை...

 

கிறிஸ்தவ மணடலத்தில் இப்படி சொல்லிக் கொடுப்பதாக இந்த மூடன் எழுதியுள்ளான். டீலான நோடீலா என போட்டு இலட்சக்கணக்கான ரூபா சாவல் விட்டவன்தான் இந்த மூடன். இவனின பல கேள்விகளுக்கும் பதில் அளித்தும் இதுவரை உருபபடியாக ஏன் தவறு என இவன் எழுதவில்லை. பணம் கறப்பதிலேயெ குறியாக இருக்கும் இந்த கோமாளி சொல்லகிறா். இந்த பதிவு கண்களை திறக்குமாம்?

 

எப்பேர்ப்பட்ட கள்ளத் தீரக்கதரிசி இவன். இவன் மற்றவர்களை நியாயம் தீரக்க வந்துண்டா?

 

போ போ இந்த பிழப்பு பிழைக்கிறதுக்கு நாண்டு கொண்டு சாவலாம். வயதுதான் போய்விட்டதே. இன்னும் ஏன் உயிரோடு இருக்கிறாய். 

 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

மூடன் ஆத்துமகரைசலின் பகிடி

விஷயத்துக்கு வராம ஏதேதோ உளறிக்கொட்டிக்கொண்டிருக்கிறாய். மூளை மழுங்கிவிட்டதா?

ஏன் உள்ளுக்குள் பொங்குகிறாய்? இன்நேரம் ஆதாரத்துடன் நிரூபித்திருந்தால் உன் தளத்தில் உன்னை வைத்துக்கொண்டாடி இருப்பார்களே.

 

ஏண்டா உனக்க எவ்வளவு எழுதினாலும் புத்தி வராதா? செருப்பால் அடிக்காத குறை. முதலில் நீ சொன்னதை நிருபி. எனக்கு தேவை நிருபனம் உனது உளரல் அல்ல. சில்சாம் சபைப் பணத்தில்தான் வாழ்கிறார் என்பதை நிருபி. அதை விடுத்து காது கிழிய கத்தாதே. புரிந்ததா? பேடிப் பயலே

வயது போற காலத்துல அடக்கி வாசி. மூடப்பயலே

கோல்டாவின் கேள்விகளுக்கு இவன் பதில எழுதினானாம். உலக மகா காமிடி.  எங்கே எழுதினாய். என்ன தவறு. 

இயேசு மரித்தாரா என கேட்கிறான்  இநத மூடன் இது ஒரு கேள்வியா? இது தெரியாத நீ ஏன் எழுத வந்தாய்?

டீலா நோடீலான என கூறி பணம் கறக்க முயற்சி செய்தவன் நீ. இதுவே உனது மோசடிப் புத்தியை காட்டுகிறது. உனக்கு அடுத்தவன் பணத்தை சூறையாட வெட்கம் இல்லையா? சோற்றில் உப்பு போட்டுதானே சாப்பிடுகிறாய்

நீ ஒழுக்கமானவனாக இருந்தால் இப்படி எழுதமாட்டாய். சபைப் பணத்திலும் கள்ளப் பணத்திலும் தானே ஜீவிக்கிறாய். இந்த பொழப்பு பிழைக்கிறது நாண்டு கொண்டு சாவாலாம். போ போ எவனாவது இழிச்ச வாயன கி்டைப்பான் அவனிடம் போய் உனது கதைகளைச் சொல் பேடிப் பயலே

 

 

 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

வேதத்தில் இருப்பதை இல்லையென்றும், இல்லாததை இருக்குது என்று சாதிக்கும் கோவை காமெடியன்ஸ்க்கு சரியான மற்றொரு பெயர் கோவை உளறுவாயன்ஸ்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

மூடன் ஆத்துமகரைசல் எழுதியது

//கோமாளிநடத்தும் தளத்தில் உன்போல சூப்பர் கோமாளிகள் இருப்பது ஆச்சரியமே அல்ல. 

ஓடுகிறான் பேடி,


உண்மை ஓடவைக்கிறது.

உன் கோபத்தையெல்லாம் //

 

நீதான் பெரிய கோமாளி. தேவன் கி.பி 30000000000 தீர்ப்பு நடத்துவராம். இதை இவன் ஞானக்கண்ணால் பார்க்கிறானாம். போ போ இந்த பிழைப்பு பிழைக்கிறதுக்கு நாண்டு கொண்டு சாவலாம். 

ஓடுகாலி........... 

முதலில் உழைத்து சாப்பிடு. டீலான நோடீலா என பண ஆசை கொண்டு அலையாதே. அடுத்தவன் உழைப்பில் இருந்தால் இப்படிதான்ஆசை பட சொல்லும்

கேள்விகளுக்கு பதில் தர துப்பில்லை. வந்துட்டான்



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

நாகரீகத்தைப் பற்றி  கோவைபெரியனின் தமாசுக்கள்

 

இவரின் எழுத்துக்களைப் பார்த்தாலே தெரியும். நாகரீகம் என்னவென்று. ஆரம்பதி்லிருந்து சொல்லி வருபவனே நான்தான். இந்த ஆத்துகரைசல் என்னும் கோமாளியை கண்டிக்க துப்பில்லை இவர் எனக்கு புத்தி சொல்ல வந்துவிட்டார். சில்சாமி உழைத்து சாப்பிடாத சோம்பேறியாம். இதை நிரூபிக்க சொன்னதால் முடியவில்லை. நான் மட்டும் நிருபிக்க வேண்டுமாம். என்ன கோமாளித்தமான பேச்சு. 

இப்ப டீலா நோ டீலா என குறுக்கு வழியல் பணம் சம்பாதிக்க நினைப்பதை என்ன சொல்லுகிறீர்கள் நண்பரே. வெட்கமாயில்லை. வக்காலத்து வாங்குவதற்கு. எனது நேர்மையை பற்றி பேசுவதற்கு முன்னால் உங்கள் எழுத்துகளை சரி பாருங்கள்

 

 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

உழைத்து சாப்பிடாத சோம்பேறி கோமாளி ஆத்துமகரைசலின் எழுத்து

//டீலா நோடீலா என்பதற்கு டீல் என்றால் நிரூபி நோடீல் என்றால் நான் சொன்னபடி ஓடிப்போய்விடு. இதைவிடுத்து வேறு விஷயம் பேசக்கூடாது.

 


நீதானே குற்றம் சாட்டினாய்? அதான் நீ நிரூபித்தால் நான் நீ சொல்வதையெல்லாம் ஒத்துக்கொண்டு பகிரங்கமாக என் பதிவுகள் அனைத்தும் தவறென்று மன்னிப்பே கேட்கிறேன் என்று சொல்கிறேனே... இது என்னை (கள்ளத்தீர்ககதரிசி)யை துரத்தியடிக்க உனக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பு. ஏன் செய்யக்கூடாது?

 

செய்ய மாட்டாய்.

ஏனென்றால் உனக்கு விவஸ்தைகிடையாது.

நான் மானஸ்தன். சொன்னதைச் செய்வேன்.

நீ.....?//

 

அப்படியா உனது கேள்விகளுக்கு பதில் சகோதரி கோல்டா தந்துள்ளார். நீ மானஸ்தன் தானே. அது உண்மையென்றால் நாண்டு கொண்டு சாவு. போ போ நீ குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க டீலா நோடீலா விளம்பர செய்கிறாய். சன் டீவியின் குப்பை தலைப்புக்களையெல்லாம் உனக்கு தலைப்பாக எடுத்துள்ளாய். மனம் கெட்டவனே. இதில் கூட சுயபுத்தியில்லை உனக்கு. சபைப் பணத்தில் வயிறு வளர்ப்பவன்தானே நீ. அதுதான் இப்படிப்பட குறுக்கு டீல் எல்லாம் பண்ணுகிறாய். உன்னை எல்லாம் செருப்..... அடிக்க வேண்டும். முதலில் உழைத்து சாப்பிட பழகு. பிறகு மற்றவர்களை பற்றி பேசலாம். 


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 6
Date:
Permalink  
 

// நான் மானஸ்தன். சொன்னதைச் செய்வேன்...நீ.....? //

சகோதரரே, நான் புதியவன், ஆனாலும் (கோவை பெரியன் தளத்தில் சோல் சொல்யூஷன்) தங்கள் வரிகளைப் படித்ததும் எனக்குத் தோன்றியதை எழுதுகிறேன்; உலகையே ஆட்டிப் படைத்த ஹிட்லர் கூட மானஸ்தந்தான்; எனவே அவர் தற்கொலை செய்துகொண்டார்;உங்களுக்கும் அந்த நிலை வந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்;நீங்களெல்லாம் ரொம்ப துள்ளுவது போலவே தோன்றுகிறது.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
சிக்கலான கேள்விகளும் சிலிர்ப்பான பதில்களும் வழங்குபவர் அன்பு சகோதரி கோல்டா..!
Permalink  
 


"டீலா நோடீலா.." என போட்டு, உன் பண ஆசையை காட்டி, நீ யார் என்பதை நிரூபித்து விட்டாய். உன் குறுக்கு புத்தி உன்னை விட்டு  எங்கே போகும்? குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசை வந்துவிட்டது. ஏற்கனவே சபை பணத்தில் வாழ்பவன் தானே நீ.  இப்படிதான் கேவலமாக எழுதுவாய். முதலில் உழைத்து சாப்பிடு, அப்பதான் இப்படி குறுக்கு வழியில் சிந்திக்க மாட்டாய். ஏமாற்றிப் பிழைப்பவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். அடுத்தவனை சுரண்டி எப்படி வாழலாம். பெரிய பெரிய பதவியில் இருப்பவர்கள் கூட இன்று மிகப் பெரிய ஊழல், பண மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். ஒருவேளை நீ சொல்வது கூட உண்மையாக இருந்தால் நிச்சயம் நீ நேர்மையாளனாக  இருக்க முடியாது. உனது கூற்றே இதற்கு அத்தாட்சி. இவன் சினிமா பாணியில் பேசுவானாம். இவனது சகாக்கள் இவனுக்கு கைகொட்டுவார்களாம். என்ன கேவலம் கெட்ட பிழைப்பு. இந்தியாவில் தான் யார் யார் எல்லாம் பதவியில் இருக்க வேண்டும் என்ன விவஸ்தையே இல்லையே!. பணமிருந்தால் எல்லாம் ஆகும். இதில் நீயும் ஒருவன். மொத்தத்தில் நீ சேற்றில் உழழும் ஒரு அசுத்தமான பன்றி. 

நான் பதிவு எழுதுதை நிறுத்த வேண்டுமாம். இந்த காமடியன் சொல்கிறான்.  நான் நிரூபித்துக் காட்ட சொன்னதை முதலில் நிரூபித்துக் காட்டு. பிறகு நான் நிரூபித்துக் காட்டுகிறேன்.

பணதாசை பிடித்தவனே!. முதலில் நேர்மையாக உழைத்துச் சாப்பிடு..!



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

1 2  >  Last»  | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard