Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுக்கிறிஸ்து மிகாவேல் தேவதூதரா? (தானியேல் 10:13, 10:21, 12:1)


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இயேசுக்கிறிஸ்து மிகாவேல் தேவதூதரா? (தானியேல் 10:13, 10:21, 12:1)
Permalink  
 


chillsam wrote:

biggrin இயேசுவும் மிகாவேல் தூதனும் ஒன்று என்று உளறுபவர்கள் இதை சிந்திக்கவேண்டும். biggrin


ஏற்கனவே ஜாண்,கோல்வின் போன்றோர் போராடித் தோற்ற அதே மேற்கண்ட‌ கேள்வியை நண்பர் ஜோசப் அவர்களும் எழுப்பியிருந்தார்; "நாமெல்லாம் நேற்று பிறந்தவர்கள்" என்று வேதம் சொல்லுகிறது; பிசாசானவனோ ஆதாம் காலத்துக்கு
ம் முன்னிருந்து வேலை செய்துகொண்டிருப்பதால் அவனுக்கு எல்லாம் தெரியும்; அவன் எல்லாவற்றுக்கும் பதில் வைத்திருப்பான், மாற்று வழிகளையும் காட்டுவான்;


மேற்காணும் பத்தியில்  // ஜாண்,கோல்வின் போன்றோர் போராடித் தோற்ற ..// எனும் வரிகள் குறித்து நண்பர்கள் மிகவும் காயப்பட்டிருக்கிறார்கள் போலும்;இது முடிந்துபோன விஷயம் போலிருந்தாலும் இன்றும் குறிப்பிட்ட நண்பர் ஒருவர் இதுகுறித்து வருந்திய காரணத்தினால் இதோ இதனை தேடியெடுத்து எனது விளக்கத்தை எழுதுகிறேன்;அவர் இதுகுறித்து பலமுறை வருத்தப்பட்டிருந்தாலும் நான் அதனை பொருட்படுத்தாதது அவருடைய நிலையை வலுப்படுத்துவது போலிருந்திருக்கிறது.

அதாவது ஜாண் மற்றும் கோல்வின் ஆகியோர் (மேசியாவின்) எதிரிகளுக்கு எதிரான போராட்டத்தில் தோற்றுவிட்டார்கள் என்று நான் குறிப்பிட்டதாக இந்த வரிகளுக்கு அர்த்தம் கற்பிக்கப்பட்டிருக்கிறது;கொஞ்சம் விசால மனதுடன் சிந்தித்திருந்தால் இது தவறான புரிதல் என்பதும் என்மீது குற்றங்காண இதில் ஒன்றும் இல்லையென்பதும் (மேசியாவின்) எதிரிகளுக்கு எதிரான எனது ஆதங்கமும் அங்கலாய்ப்பும் ஆயாசமுமே இதில் வெளிப்படுகிறது எனப்தும் தெரியவரும்; ஆனால் ஏனோ- எதற்காகவோ என்னை விட்டு விலகிச்செல்ல சிலர் முடிவெடுத்த காரணத்தினால் நான் எழுதியதெல்லாம் தவறாகவே தோன்றுயிருக்கிறது,போகட்டும்.

கோல்வின் போன்றவர்கள் எழுதும் கட்டுரைகளோ ஜாண் போன்றவர்கள் நடத்தும் வலுவான விவாதங்களோ தோற்றுப்போனதாக நான் ஒருபோதும் சொல்ல வாய்ப்பில்லை; இன்னும் இந்த தளத்தை பிரயோஜனமானதாக மாற்றியதே அவர்களுடைய எழுத்துக்கள் தான்; அப்படியானால் தோற்றுப்போன என்ற எனும் வார்த்தையின் பொருள் என்ன..?

நாம் பக்கம் பக்கமாக கட்டுரைகளை வரைந்து தள்ளினாலும் விவாதங்களை நடத்தினாலும் (மேசியாவின்) எதிரிகள் ஒரு சிலதை மட்டுமே கொறித்துவிட்டு தூக்கியெறியும் போக்கை காணும் போது நமக்கு சோர்வு உண்டாவது இயல்பு,அந்த சோர்வையே தோற்றுப்போன எனும் வார்த்தையினால் குறிப்பிட்டிருக்கிறேன், அதற்கு மாற்றாக ஓய்ந்துபோன என்றும் சொல்லலாம்.

ஆனால் நாம் நடத்திய விவாதங்களோ எழுதி பதித்துள்ள கட்டுரைகளோ வீணாகிவிடவில்லை;அது இன்னும் பலருடன் பேசிக்கொண்டு தானிருக்கிறது, அதனை பலமுறை நானே குறிப்பிட்டு சந்தோஷப்பட்டிருக்கிறேன்; நான் இதுபோன்ற தனித்தன்மையான போராட்டத்தைத் துவங்கிய காரணத்தினால் என்னோடு வந்து இணைந்த மெத்த படித்த நண்பர்கள் தத்தமது விலையேறப்பெற்ற ஞானத்தை இங்கே பகிர்ந்துகொண்டார்கள்; இதில் என் பங்கு ஏதும் இல்லை;மேடை அமைத்து கொடுத்ததுடன் சரி, நான் யார் மீதும் ஆதிக்கம் செலுத்தியதும் இல்லை,புகழுக்கோ பாராட்டுக்கோ உரிய எதையும் சாதித்துவிடவுமில்லை.ஆனால் நண்பர் ஜோசப் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவது போல அதிகம் பிரபலமடையாத விஷக் கிருமிகள் போல இருந்த (மேசியாவின்) எதிரிகளை தமிழ் கிறிஸ்தவ உலக இணையத்துக்கு அடையாளங் காட்டி பகிரங்கப்படுத்திய திருப்தி எனக்கு எப்போதும் உண்டு. அவர்களுக்கு எதிரான வலுவான போராட்டத்தை நடத்தும் ஞானம் எனக்கு இருந்ததோ இல்லையோ இவர்கள் மாறுபாடானவர்களே என்பதை நிரூபிக்கும் மனோதிடத்தையும் விடாமுயற்சியையும் நான் கிருபையாக பெற்றிருந்தேன்.

எனவே இனியும் நாங்கள் தான் தோற்றுவிட்டோமே எங்கள் கட்டுரை மட்டும் எதற்கு,அதையெல்லாம் உடனே நீக்கிவிடவும் என்று எந்தவொரு நண்பரும் மிரட்டாமல் என்னை சரியாக புரிந்துகொள்ள முயற்சித்தால் நிம்மதியடைவேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

joseph wrote:

ச‌ர்ச்சைக‌ள் எதுவும் வேண்டாம் என‌ நீங்கள் முடிவு செய்திருப்ப‌து ந‌ல்ல‌து தான் ஆனால் சில‌ர் (மேசியாவிட‌ம்) எதிரியிட‌ம் விலை போய்விட்ட‌தாக‌ எழுதியுள்ள‌தை என்னால் ஏற்றுக்கொள்ள‌முடியாது. நாம் மேசியாவிடம் விலைபோய்விட்டோம் என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம்; ஏனென்றால் நாம் அவரது விலையேறப்பட்ட ரத்தத்தால் மீட்கப்பட்டு கிரையத்துக்கு கொள்ளப்பட்டோமே.  எதை ம‌ன‌தில் வைத்து சொல்கிறீர்க‌ள் என‌ தெரிய‌வில்லை; ஒருவேளை apology... என்றால் விலை போய்விட்ட‌தாக‌ நீங்க‌ள் எண்ணினால் உங்க‌ள‌து எண்ண‌ம் த‌வ‌று என்ப‌து என‌து தாழ்மையான க‌ருத்து. ந‌ண்ப‌ர் என்ற‌ முறையில் உங்க‌ளை க‌ண்ட‌ன‌ம் செய்வ‌த‌ற்கும் என‌க்கு உரிமை இருப்ப‌தாக‌வே க‌ருதுகிறேன். 


 எனதருமை நண்பர் ஜோசப் அவர்களின் கண்டனத்தையும் புத்திமதியையும் சிரந்தாழ்த்தி ஏற்றுக்கொள்ளுகிறேன்; அது வெறும் apology... தானா, நண்பரே; எத்தனை பரிதாபத்தை வரவழைக்கும் வரிகள் அவை..! "நிற்கிறேன்" எனும் ஒரு சொல் கரையாத கல்லையும் கரையவைக்குமே..?

ஐயய்யா,நான் பாவி...என்று பாடுவோமே, அதுபோல பாட்டுப்பாடி, நீ என்னை மன்னிக்காவிட்டால் எனக்கு விமோசனமோ இல்லை என்று தெய்வத்திடம் மன்றாடுவது போன்ற தோரணையல்லவா,அது..?

அதில் தலையிட எனக்கு உரிமையில்லை;அது அவரவர் விருப்பம்;ஆனாலும் ஒருவருடைய இருதயமானது டிஜிஎஸ் பாஷையில் சொல்லுவதானால் சுக்குநூறாக உடைந்து, கேட்ட மன்னிப்பையே நீங்கள் இளகச் செய்வதால் மன்னித்தவரின் மனதைப் புண்படுத்தும் பாவத்தை செய்கிறீர்களோ என்று தோன்றுகிறது.அதே நேரத்தில்...

என்னுடைய விளக்கத்தை விளக்கமாக விளக்கியிருக்கிறேன்;அதனைப் பார்வையிட தயவுசெய்து தொடுப்பைத் தொடரவும்.

http://chillsam.activeboard.com/t43430563/topic-43430563/



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
இயேசுக்கிறிஸ்து மிகாவேல் தேவதூதரா? (தானியேல் 10:13, 10:21, 12:1)
Permalink  
 


chillsam:

//ஜோசப் அவர்களின் கேள்விக்கு இதே பதிலை கிண்டல் கேலியோடு பதிக்கலாம் என்று இருந்தேன்; ஆனாலும் எல்லோரும் சேர்ந்து அடக்கியதாலும் சிலர் (மேசியாவிடம்) எதிரியிடம் விலைபோய் விட்டதாலும் நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாலும்; இனியும் சர்ச்சைகள் எதுவும் வேண்டாம் என்று எனது வழக்கமான பாணியில் பதிலளித்திருக்கவேண்டிய பல காரியங்களைத் தவிர்த்துவிட்டு சந்தோஷமாக இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன்.//

ச‌ர்ச்சைக‌ள் எதுவும் வேண்டாம் என‌ நீங்கள் முடிவு செய்திருப்ப‌து ந‌ல்ல‌து தான் ஆனால் சில‌ர் (மேசியாவிட‌ம்) எதிரியிட‌ம் விலை போய்விட்ட‌தாக‌ எழுதியுள்ள‌தை என்னால் ஏற்றுக்கொள்ள‌முடியாது.நாம் மேசியாவிடம் விலைபோய்விட்டோம் என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம் ஏனென்றால் நாம் அவரது விலையேறப்பட்ட ரத்தத்தால் மீட்கப்பட்டு கிரையத்துக்கு கொள்ளப்பட்டோமே.  எதை ம‌ன‌தில் வைத்து சொல்கிறீர்க‌ள் என‌ தெரிய‌வில்லை ஒருவேளை apology என்றால் விலை போய்விட்ட‌தாக‌ நீங்க‌ள் எண்ணினால் உங்க‌ள‌து எண்ண‌ம் த‌வ‌று என்ப‌து என‌து தாழ்மையான க‌ருத்து. ந‌ண்ப‌ர் என்ற‌ முறையில் உங்க‌ளை க‌ண்ட‌ன‌ம் செய்வ‌த‌ற்கும் என‌க்கு உரிமை இருப்ப‌தாக‌வே க‌ருதுகிறேன். 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இயேசுக்கிறிஸ்து மிகாவேல் தேவதூதரா? (தானியேல் 10:13, 10:21, 12:1)
Permalink  
 


joseph wrote:
 மிகாவேல் தான் மேசியா என்றால் அப்ப காபிரியேல் யார்? 

 ஒருவேளை பவுலடிகளா இருக்குமோ..?!biggrinbiggrinbiggrin



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
இயேசுக்கிறிஸ்து மிகாவேல் தேவதூதரா? (தானியேல் 10:13, 10:21, 12:1)
Permalink  
 


படம் எடுப்பவர்கள் ஒரு புது டிரென்டை பின்பற்றுவார்கள் அஃதாவது சம்பந்தமே இல்லாமல் 3 அல்லது 4 கதைகளை கொண்டு செல்வது அப்புறம் ஏதாவது ஒரு புள்ளியில் அந்த 4 கதைகளியும் இணைத்து ஒரு புது கருத்தை சொல்வது, இதை தான் நமது அருமை நண்பர்களும் அவர்களை வழி நடத்தியவர்களும் செய்துள்ளார்கள் என்பது மிகாவேல் விஷயத்தில் தெளிவாகிறது. இயேசுவின் தெய்வீக தன்மையை மறுப்பவர்களுக்கு அவர் மிகாவேல் தூதன் அல்ல அவனை விட கீழானவராக கூட தெரிவார். ஆதி முதல் இருந்தவர், சிருஷ்டிப்பின் முதற்பெலன் என்றெல்லாம் ஒத்துக்கொள்பவர்கள் அவரது தெய்வீகத்தன்மையை மறுக்க கிடைத்த அருமையான எஸ்கேப் ரூட் இந்த மிகாவேல் தூதன். 

இவ்வளவு உதாரணங்களை அடுக்குபவர்கள் மிகாவேல் தூதன் தான் மேசியாவாக அனுப்பப்பட்டார் என்று எந்த வசனத்தையும் காண்பிக்கவில்லை. நாளை உலகத்தை நியாயம் தீர்க்க வரப்போகிறவர் மிகாவேல் தூதனாக எண்ணப்படுவது அபத்தத்தின் உச்சம். இவர்கள் கூற்றுப்படி பார்த்தால் இப்போது அந்த தூதன் மிகாவேலாக இருக்கிறாரா அல்லது பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறாரா? மிகாவேல் தான் மேசியா என்றால் அப்ப காபிரியேல் யார்? 

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

பிரதான தூதனான மிகாவேல் தூதன் மோசேயின் சரீரத்தைகுறித்துப் பிசாசுடனே தர்க்கித்து பேசினபோது அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்றான் - யூதா 9ம் வசனம்

மேற்கண்ட வசனத்தில் மிகாவேல் பிசாசையே எதிர்த்து தர்க்கித்து பேசினபோதும் அவனை கர்த்தர் கடிந்து கொள்வாராக என்றான் மாறாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிசாசு தன்னை சோதித்த போது 3 முறை அவனை கடிந்துகொண்டார். இதிலிருந்தே இயேசு கிறிஸ்து மற்றும் மிகாவேல் தூதனின் அதிகாரங்கள் நமக்கு விளங்குகின்றன. 

biggrin இயேசுவும் மிகாவேல் தூதனும் ஒன்று என்று உளறுபவர்கள் இதை சிந்திக்கவேண்டும். biggrin


ஏற்கனவே ஜாண்,கோல்வின் போன்றோர் போராடித் தோற்ற அதே மேற்கண்ட‌ கேள்வியை நண்பர் ஜோசப் அவர்களும் எழுப்பியிருந்தார்; "நாமெல்லாம் நேற்று பிறந்தவர்கள்" என்று வேதம் சொல்லுகிறது; பிசாசானவனோ ஆதாம் காலத்துக்கு
ம் முன்னிருந்து வேலை செய்துகொண்டிருப்பதால் அவனுக்கு எல்லாம் தெரியும்; அவன் எல்லாவற்றுக்கும் பதில் வைத்திருப்பான், மாற்று வழிகளையும் காட்டுவான்;

எனவே நம்மைப் போன்றோர் எழும்பி கேட்கும் கேள்விகள் அவனுக்கு சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றும்;அவற்றை ரொம்ப அனாயாசமாகப் புறங்கையால் தள்ளிவிட்டு சென்ற தலைமுறைக்கு சொன்ன அதே தந்திரமான பதிலைச் சொல்லி தடுமாறவைப்பான்; ஆனால் சத்தியம் என்பது இதற்கெல்லாம் அப்பாலுள்ளது; எனவே நண்பர்கள் சலனமடையாமல் எதிர்தரப்பின் விளக்கத்தையும் கருத்தில் கொள்ள அன்போடு வேண்டுகிறேன்.

ஜோசப் எழுதுகிறார்:
//இயேசுவும் மிகாவேல் தூதனும் ஒன்று என்று உளறுபவர்கள் இதை சிந்திக்கவேண்டும்.//

(மேசியாவிடம்) எதிரி எழுதுகிறார்:

இதற்கு அவர் உபயோகப்படுத்தியது யூதா புத்தகத்தின் 9ம் வசனம்!!

  • யூதா 9: பிரதான தூதனான மிகாவேல் தூதன் மோசேயின் சரீரத்தைகுறித்துப் பிசாசுடனே தர்க்கித்து பேசினபோது அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்றான்.

இங்கே சொல்லும் போது கர்த்தர் கடிந்துக்கொள்வார் என்றும், இயேசு கிறிஸ்துவாக பூமிக்கு மாம்சத்தில் வந்த போது, அதே சாத்தானை மூன்று முறை கடிந்துக்கொள்கிறார் என்கிற வாதத்தை வைத்து, இருவரும் ஒருவராக எப்படி இருக்க முடியும் என்று கேட்டிருக்கிறார்!!!

ஜோசப் அவர்களே, இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வந்த பிறகு அவருக்கு அளவில்லாத ஆவியை தேவன் குடுத்தார் என்று வேதம் சொல்லுகிறது!!

  • யோவான் 3:34 தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.

தேவனே வராமல், தேவனால அனுப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளை பேசுகிறார்!! ஆகவே தேவன் சொல்லியப்படியே, கிறிஸ்து சாத்தானை கண்டிக்கிறார்!!

மாம்சத்தில் வரும் முன் மிகாஹேல் தூதன் அவர் நிலையில் பிரதானமாக இருந்தார்!! ஆனால் ஆவிக்குறிய ஜீவியாக இருக்கும் போது எல்லாவற்றுக்கும் பிதாவே நியாயந்தீர்ப்பு தருவார் என்பதால், மோசேயின் சரீரத்தை குறித்து அப்படி ஒன்றை சொல்லியிருக்கிறார்!!

கர்த்தரின் தூதனானவர் பழைய ஏற்பாட்டில் என்னவெல்லாம் செய்திருக்கிறார்!!??

  • ஆதியாகமம் 16:10 பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும் என்றார்.
  • ஆதியாகமம் 22:11 அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான்.
  • ஆதியாகமம் 22:15 கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு:
  • ஆதியாகமம் 24:7 என்னை என் தகப்பனுடைய வீட்டிலும் என் இனத்தார் இருக்கிற தேசத்திலுமிருந்து அழைத்து வந்தவரும், உன் சந்ததிக்கு இந்த தேசத்தைத் தருவேன் என்று எனக்குச் சொல்லி ஆணையிட்டவருமான வானத்துக்குத் தேவனாகிய கர்த்தர், நீ அங்கேயிருந்து என் குமாரனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவரும்படிக்கு, தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார்.
  • ஆதியாகமம் 24:40 அவர்: நான் வழிபடும் கர்த்தர் உன்னோடே தம்முடைய தூதனை அனுப்பி, உன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார்; என் இனத்தாரிடத்திலும், என் தகப்பன் வீட்டிலும் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்வாய்.
  • யாத்திராகமம் 3:2 அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.

இப்படி கர்த்தரின் தூதனானவர் என்பதை தங்களின் வேதத்தில் வாசித்து பாருங்கள்!! மிகாஹேல் என்பது லோகோஸ் போன்றே ஒரு காரணப்பெயர்!! கர்த்தரின் தூதனானவர் என்பவரே அந்த மிகாஹேல், அந்த லோகோஸ்!! ஏனென்றால் மிகாஹேல் என்பவர் தேவனின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து அவர் சொல்லியபடியே பழைய ஏற்பாட்டில் செயல்ப்பட்டார், லோகோஸ் என்று தேவனின் வார்த்தைகளை தீர்க்கதரிசிகள், இராஜாக்களுக்கு சொன்னார்!! கிறிஸ்துவாக பூமிக்கு வந்தும் அவர் சுயமாக வரவில்லை என்றும், தேவனால் அனுப்பபட்டவர் என்றும், தேவன் செய்வதை, சொல்லுவதை செய்கிறேன் சொல்லுகிறேன் என்கிறார்!!

ஆகவே மிகாஹேலாக இருந்தவரே, லோகோஸாக இருந்தவரே, இந்த பூமியில் மாம்சத்தில் கிரிஸ்துவாக வந்தார்!!

ஜோசப் அவர்களின் கேள்விக்கு இதே பதிலை கிண்டல் கேலியோடு பதிக்கலாம் என்று இருந்தேன்; ஆனாலும் எல்லோரும் சேர்ந்து அடக்கியதாலும் சிலர் (மேசியாவிடம்) எதிரியிடம் விலைபோய் விட்டதாலும் நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாலும்; இனியும் சர்ச்சைகள் எதுவும் வேண்டாம் என்று எனது வழக்கமான பாணியில் பதிலளித்திருக்கவேண்டிய பல காரியங்களைத் தவிர்த்துவிட்டு சந்தோஷமாக இளைப்பாறிக்கொண்டிருக்கிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: இயேசுக்கிறிஸ்து மிகாவேல் தேவதூதரா? (தானியேல் 10:13, 10:21, 12:1)
Permalink  
 


சகோ. ரோஷனின் காமடியான பதிலொன்று. இவர் எந்த அளவிற்கு வேதத்தை விளங்கிக வைத்துள்ளார் என்பதற்கு இது ஒரு சான்று

நன்றி சகோதரர் சுந்தர் அவர்களே, தங்களின் பதிவுகளில் உண்மை அல்லாமலும் அல்ல!!!  இதை ஒவ்வொருவரும் அவர்களின் அறிவுக்கும், தேவனின் விருப்பத்துக்கும்  ஏற்றாற்போலவே  சில இரகசியங்களை வெளிப்படுத்துகிறார். அத்துடன் நான் எழுதும் பதிவுகள் கூட 100 % சரியாக இருக்கும்  என்றும் சொல்ல மாட்டேன்.  இதை இன்னும் ஆராய்ந்தால் ஒரு விடை கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

/// தேவன் இயேசுவை சிருஷ்டித்தார் என்று சொல்வது ஏற்புடையது அல்ல! அவர் இயேசுவை ஒரு குறிப்பிட்ட நாளில் ஜெநிப்பித்தார் என்பதை நான் ஏற்கிறேன் ஆனால்:
 ///

வேதப்பதிவுகள்  இயேசுவை  சிருஷ்டித்தார்  என்றே நமக்கு சொல்கின்றது.  வெளிப் 3 :14    கொலேசெயர் 1 :15 -17 
மனிதனாக வருவதற்கு முன்பிருந்ததை விட உயர்ந்த நிலையே பெற்றார்   பிலி 2 :9 ,10 

/// 
தானியேல் 10:13 பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தொரு நாள்மட்டும் என்னோடே எதிர்த்து நின்றான்; ஆனாலும்பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்

 தேவனுக்கு  ஒன்றுக்கு மேற்பபட்ட  பிரதான அதிபதிகள் இருந்தார்கள் என்பதையும் அதில் ஒருவரே மிகாவேல் தூதன் என்பதையும் இந்த வசனம் நமக்கு தெளிவாக்குகிறது.  ///

இங்கு நீங்கள் குறிப்பிட்ட தூதரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. என்றாலும் தானியேல் கண்ட தரிசனத்தை  அவருக்கு விளக்குமாறு கப்ரியேல்யிடம் சொன்னவர் இவரே என தெரிகிறது. ( தானியேல் 8 :2 ,15 ,16 ஐ 12 :7 ,8 வசனங்கோளோடு ஒப்பிட்டு பாருங்கள்)  மேலும் ''பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய'' மிகாவேல் இந்த தூதரின் உதவிக்கு வந்ததாக தானியேல் 10 : 13 சொல்கிறது. ஆகவே பெயரிடப் படாத  இந்தத் தூதர் காபிரிஎலோடும் மீகாவேலோடும் நெருக்கமாக சேவை செய்யும் பாக்கியம் பெற்றவராய் இருக்கவேண்டும். 

மற்றும் இந்த பதிவையும் பாருங்கள் :-
சேனைத் தலைவர். ''மிகாவேலும் அவரைச் சேர்ந்த தூதர்களும் வலுச்சர்ப்பதோடே யுத்தம் பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் யுத்தம் பண்ணினார்கள்'' என்று பைபிள் தெரிவிக்கிறது (வெளிப்படுத்தல் 12 :7). ஆகவே, விசுவாசமிக்க தேவ தூதர்களின் சேனைக்கு மிகாவேல் தலைவராக இருக்கிறார். அதே வெளிப்படுத்தல் புத்தகத்தில், தேவ தூதர்களின் சேனைக்கு இயேசு தலைவராக இருக்கிறார் என்று விவரிக்கப் பட்டிருக்கிறது. (வெளிப்படுத்தல் 19 :14 -16 ) ''கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடு'' வருவதாக அப்போஸ்தலர் பவுலும் தெளிவாய்க் குறிப்பிடுகிறார். (2 தெசலோனிக்கேயர் 1 :8 ) ஆக, மிகாவேல் மற்றும் 'அவரைச் சேர்ந்த தூதர்கள்' பற்றியும் இயேசு மற்றும் 'அவருடைய தூதர்கள்' பற்றியும் பைபிள் சொல்கிறது (மத் 13 :41 /16 :27 /24 :31  ::::: 1 பேதுரு 3 :2 ). பரலோகத்தில், விசுவாசமிக்க தேவதுதர்களான இரண்டு வெவ்வேறு சேனைகள் இருப்பதாக, அதாவது மிகாவேலைத் தலைவனாக கொண்ட ஒரு சேனையும், இயேசுவைத் தலைவராக கொண்ட வேறொரு சேனையும் இருப்பதாக கடவுளுடைய வார்த்தையில் எங்குமே குறிப்பிடப்படவில்லை;எனவே பரலோக இஸ்தானத்தில் உள்ள இயேசு கிறிஸ்துதான் மிகாவேல் என்ற முடிவுக்கு வருவது நியாயமாகவே இருக்கிறது.   

கொல்வினின் விவாதத்தை அடுத்த பதிவில் கொடுக்கிறேன்.




__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
இயேசுக்கிறிஸ்து மிகாவேல் தேவதூதரா? (தானியேல் 10:13, 10:21, 12:1)
Permalink  
 


டிக்கடி நண்பர் கோவைபெரியன் கூறுவது வசன ஆதாரம் இந்த பதிவை வாசிக்கும் யாருக்கும் புரியும். இவர் வசன ஆதாரத்துடன்தானா எழுதுகிறார் என்று. இதில் எங்காவது வசனங்களை மேற்கோள் காட்டியுள்ளாரா 

இயேசு கிறிஸ்து இப்பொழுது ஒரு தேவ தூதர் என்கிற ஸ்தானத்தில் இருக்கிறார் என்று நான் சொல்லவில்லை!! மாம்சத்தில் இயேசுவாக வரும் முன் இருந்த நிலையை மாத்திரமே நான் தேவதூதர், அல்லது "என் தூதனானவர்" அல்லது "பிரதான தூதன்", அல்லது "தூதனானவர்" என்று சொல்லுகிறேன்!! விழுந்து போவதற்கு முன்பு எப்படி லூசிஃபர் என்கிற தேவ தூதன் இருந்தானோ, அதைவிட மேலான ஸ்தானமான பிதாவின் நேரடியான சிருஷ்டிப்பான கிறிஸ்து தேவனின் "தூதனானவர்"ஆக இருந்தார் என்று மாத்திரம் சொல்லுகிறேன்!! ஆகவே தான் அவருக்கு மாத்திரம், லோகோஸ் என்கிற ஒரு பதமும் புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டிருக்கிறது!!

நீங்கள் குறிப்பிட்ட அந்த வசனங்களில் யார் அந்த தூதனானவர், அல்லது என் தூதன் எனப்படுபவர்!?? கிறிஸ்து தான் இருந்த நிலையிலிருந்து மாம்சத்தில் இயேசுவாக பிறந்து தேவன் தனக்கு நியமித்ததை செய்து முடித்து, இப்பொழுதோ இரட்சகராகவும், நமக்கு (கிறிஸ்தவர்களுக்கு) பரிந்துறையாளராகவும் பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்!!

நான் தேவ தூதனாக இருந்தார் என்பது அவர் மாம்சத்தில் இயேசுவாக வருவதற்கு முன் உள்ள நிலையை மாத்திரமே என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்!! இதில் கோபம் கொள்வதற்கோ, அதிர்ச்சி அடைவதற்கோ எதுவும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்!! மற்றபடி அவர் மாம்சத்தில் வரும் முன் என்னவாக இருந்தார் என்று வேதம் வேறு ஏதாவது சொல்லுகிறது என்றால் பதிவில் எழுதுங்கள்!!

லூசிஃபர் என்கிறவன் கொண்டு வந்த மரணத்திலிருந்து இரட்சிக்கும்படியே கிறிஸ்து என்கிற மிக்கேல் (தேவனின் தற்சொருபமானவர்) இரட்சகராக இந்த பூமிக்கு அனுப்பட்டார்!! அவர் சுயமாக வராமல் தேவனின் சித்தம் செய்யவே வந்தார் என்கிறது வேதம்!! அவர் தூதனாக இருந்தார் அதுவும் "என் தூதன்" அல்லது "தூதனானவராக" இருந்தார் என்பதில் என்ன அதிர்ச்சி!??

இப்பொழுதும் அவர் தூதனாக இருக்கிறார் என்று நான் சொல்லவில்லை!! இருந்த ஒரு நிலையிலிருந்து தற்போது உயர்த்தப்பட்ட நிலையில், பிதாவின் வலது பாரிசத்தின் வீற்றிருக்கிறார் என்பதில் எந்த தவறும் இல்லையே!! தொடக்க முதல் பிதாவும் கிறிஸ்துவும் ஒருவரே என்று நினைப்பவர்களுக்கு சத்தியம் எல்லாமே கசப்பாக தான் இருக்கும், அவர்கள் எதையுமே ஏற்ற மனமில்லாதவர்களாக தான் இருப்பார்கள்!!

இயேசு கிறிஸ்து தேவதூதரா? என்கிற தலைப்பிற்கு பதில் இயேசு கிறிஸ்து தேவதூதராக இருந்தவரா? என்பது தான் பொருத்தமாக இருக்கும்!! தலைப்பை படித்துவிட்டு, இப்பொழுதும் இயேசு கிறிஸ்து தேவதூதர் தான் என்று யாருக்கும் இடறல் வேண்டாமே!!



-- Edited by colvin on Thursday 7th of April 2011 09:45:26 AM

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: இயேசுக்கிறிஸ்து மிகாவேல் தேவதூதரா? (தானியேல் 10:13, 10:21, 12:1)
Permalink  
 


சகோ. ரோஷன் அவர்களின் காமடித்தமான பதில்கள்

நண்பர்  சுந்தர் அவர்களே,  கொல்வின் அவர்கள் கேட்ட கேள்வி  வசந்தகுமார் என்ற ஒருவரின் ஆய்வுக் கட்டூரையாகும்.  அதை கொல்வின் அவர்கள் காபி பாஸ்ட் செய்தும், அவரின் தரவுகளே இங்கு பதிந்தும் ஒரு சில கேள்விக்கு பதிலையும்  அறியமுனைவது  அவரின் சுயநலமாக இருக்கு!!!  இங்கு கேள்வியே அவரின் சொந்த கேள்வியாக இருக்கும் பட்சத்தில் நிட்சயமாக பதில்கொடுக்கப்படும். இதில் இன்னும் ஒன்று என்னவென்றால் கேள்வியே  கேட்டு பின்பு இவற்றை தமிழ் கிறிஸ்தவ தளத்துக்கு கொண்டு செல்கிறார். கேட்கும் கேள்வி அவருடையதாக இருக்கும் பட்சத்தில் பதில் கொடுக்கப்படும். வசந்தகுமார் எழுதும் கட்டுரைக்கும் கேள்விக்கும் பதில் கொடுக்க, எமக்கு அவசியம் இல்லை. நன்றி

மீண்டும் சொல்கிறேன். இது Copy & Paste செய்யப்பட்டவை அல்ல.  Typeசெய்யப்பட்டு இங்கு பிரசுரிக்கப்படுகிறது. இத்தகைய ஆய்வுக் கட்டுரையை எழுத வேண்டுமானால் அதிக சிரமும் நாட்களும் எடுக்கும். யெகோவா சாட்சிகளின் நூல்களிலிருந்து நேரடியாக கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு வேதத்தின் வெளிச்சத்தில் ஆராயப்பட்டுள்ளது. 

பதில் இருந்தால்தானே எழுத முடியும். இல்லாத பதிலை எப்படி ஐயா எழுத முடியும். நான் எந்த தளத்திற்கு கொண்டு சென்றால் உங்களுக்கு என்ன? உங்களைப் போல் நான் ஒன்றும் யெகோவா காவற்கோபுர சஞ்சிகைளிலிருந்து நூல்களிலிருந்தும் திருடி பதிந்து விடடு எனது சொந்த ஆக்கம் சொல்லுவன் நான் அல்ல. உங்கள் ஆக்கமும் ஏப்ரல்-ஜூன் 2010 இதழிலிருந்து களவாட்டப்பட்டதுதான் என்பதை நினைவில் கொள்ளு்ங்கள். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நாம் எத்தனையோ முறை வலியுறுத்தியும் பல்வேறு காரணங்களுடன் எடுத்துக்கூறியும்கூட நம்முடைய தளத்திலிருந்து எடுத்துப்போடப்படும் படைப்புகளுக்குரிய தொடுப்பைத் தராமல் உள்நோக்கத்துடன் சிலர் புறக்கணிக்கிறார்கள்;இது நாகரீகமான செயல்தானா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்தால் நல்லது.

கொக்கு தலையில் வெண்ணெயை வைத்து பிடிக்கும் வட்டாரத்தைச் சேர்ந்த இவர்களுக்கு தங்களை சூடேற்றிக்கொள்ள நம்முடைய படைப்புகள் மட்டும்  தேவை போலும்; இந்த தளத்தின் பக்கமே வரக்கூடாது என்று தீர்மானமெல்லாம் போட்டு அறிக்கை விட்டவர்கள் இங்கு வராமல் எப்படி கோல்வின் அவர்களின் கட்டுரையை எடுத்திருக்க முடியும்? ஏன் இந்த வரட்டு பிடிவாதம்? நியாய உணர்வுடனும் நட்புணர்வுடனும் இணைந்து செயல்பட எத்தனையோ வழி இருந்தும், என் தனிவழி என்று விலகிச்சென்றவர்கள் அவ்வப்போது வந்து உரசிச் செல்வது ஏனோ..? இந்த வேண்டுகோளுக்கு உரிய மரியாதை கொடுத்து நம்முடைய தளத்திலிருந்து எடுத்து பதித்த நண்பர் கோல்வின் அவர்களின் கட்டுரைக்குரிய தொடுப்பை தரவேண்டும்;ஒருவேளை அவர்களாக செய்யாவிட்டாலும் அங்கே உறுப்பினராக இருக்கும் நம்முடைய நண்பர்கள் அங்கே சென்று இதற்கான தொடுப்பை அங்கே பதிக்க அன்புடன் வேண்டுகிறேன். நான் அதுபோல தொடுப்பு தராதிருந்தாலும் சுட்டிக்காட்டவும்; ஆனாலும் நீங்களெல்லாம் பெருந்தன்மையின் காரணமாக, உங்கள் படைப்புகளுக்கு தொடுப்பு தரவேண்டிய அவசியமில்லை என்று ஏற்கனவே அறிவித்ததாக ஞாபகம்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
இயேசுக்கிறிஸ்து மிகாவேல் தேவதூதரா? (தானியேல் 10:13, 10:21, 12:1)
Permalink  
 


நூல்: யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்

ஆசிரியர் : சகோ. வசந்தகுமார்

வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி


(இயேசுவை சிருஷடிக்கப்பட்டவராக காட்டுவதற்கும் அவர் தேவன் இல்லை என மறுப்பதற்கும் யெகோவா சாட்சிகளினால் சுட்டிக் காட்டப்படும் விடயங்களில் இதுவும் ஒன்றாகும். சமீபத்தில் வெளிவந்த காவற்கோபுரம் (தமிழ்) ஏப்ரல்-ஜூன் 2010 இதழிலும் இவ்விபரம் காணப்படுகின்றது  இக்கட்டுரையாசிரியர் இதற்கு அப்பாலும் சென்று இது உண்மையானது தானா என வேத வசனங்களுடன்  ஆராய்ந்துள்ளார்)

 

தேவனால் முதலாவதாகச் சிருஷ்டிக்கப்பட்ட தேவதூதனாகக் காண்பிப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் உபயோகிக்கும் வேதவசனம் தானியேல் 10:13 ஆகும். இவ்வசனத்தில் “மிகாவேல்“ எனும் தேவதூதன் “பிரதான அதிபதிகளில் ஒருவன்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளான். இவ்வசனத்தையும் தானியேல் 10:21, 12:1 ஐயும் ஆதாரமாகக் கொண்டு இயேசுக்கிறிஸ்து மனிதனாக வருவற்கு முன்பு. அவர் பிரதான தூதன் மிகாவேலாக இருந்ததாகக் கூறுகின்றனர்.  தானியேல் 12:1 இல் மிகாவேல் எழும்புவதைப் பற்றிய தீர்க்கதரிசனம் 1914 இல் இயேசுக்கிறிஸ்து பரலோக சிங்காகனத்தில் ராஜாவாக முடிசூட்டப்படதைப் பற்றியது(80) என்று கருதும் யெகோவாவின் சாட்சிகள் இவ்வசனத்தில் “எழும்புதல்“ எனும் பதததை.“அதிகாரத்தைக் கைப்பற்றி ராஜாவாய் அரசாளுதல்“ என்று விளக்குகின்றனர். (81) 

தானியேல் 10:13 இல் மிகாவேல் “அதிபதிகளில் ஒருவன்“ என்றே குறிப்பிடப்பட்டுள்ளான் எனவே, மிகாவேலைப் போன்று இன்னும் பல தூதர்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது. ஆனால் தானியேல் 10.21 இல் “உங்கள் அதிபதி“ என்றும் 12:1 இல் “பெரிய அதிபதி“ என்றும் மிகாவேல் குறிப்பிடப்பட்டுள்ளமையாலும் 1 தெசலோனிக்கேயர் 4:16 இல் “பிரதான தூதன்“ எனும் பதம் சுட்டுச் சொல்லுடன் ஒருமையில் இருப்பதனாலும் மிகாவேல் என்பவன் மட்டுமே பிரதான தூதன் என்று யெகாவாவின் சாட்சிகள் கூறுகின்றனர். (82) ஆனால் தெசலேனிக்கேயர் 4:16 இல் சுட்டுச்சொல்லும் ஒருமையும் ஒரேயொரு பிரதான தூதன் மட்டுமே இருக்கிறான் என்பற்கான ஆதாரம் அல்ல. பிரதான தேவதூதர்களில் ஒருவனைக் குறிப்பிட்டுச் சொல்லுவதற்காகவே இவ்விரு இலக்கணக் குறிப்புகளும் உள்ளன. (83) தானியேலின் புத்தகத்தில் முதல் தடவை மிகாவேல் “அதிப்திகளில் ஒருவன்“ என்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளமையால் (தானி 10:13) அதன்பின்னர் அவனைப் பற்றிக் கூறும்போது, பிரதான தூதர்கள் பலர் இருப்பது பற்றிக் குறிப்பிடப்படவில்லை. ஆனால்,  மிகாவேலைப போன்று ஏழு பிரதான தூதர்கள் இருக்கிறார்கள் என்பதே அக்காலத்தைய யூதர்களது நம்பிக்கையாக இருந்த்து(84) எனவே மிகாவேல் தனித்துவமானவனாக இல்லை. ஆனால் இயேசுக்கிறிஸ்துவோ தனித்துவமானவராக என்று யோவான் 3:16 கூறுகிறது. நாம் ஏற்கனவே பார்த்தபடி, இவ்வசனத்தில் “ஒரேபேறான குமாரன்“ என்பதற்கு மூலமொழியில் தனித்துவமானதுமான தன்மையை சுட்டிக் காட்டுகிறது. (85) அதாவது “பலரில் ஒருவர் என்பதல்ல, ஒரேயொருவர்“ என்பது இதன் அர்த்தமாகும். மேலும், இயேசுக்கிறிஸ்து வேதத்தில் “பிரதான அதிபதி“ என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதும் யெகோவாவின் சாட்சிகளின் விளக்கம் தவறானது என்பதற்கான ஆதாரமாகவுள்ளது. இயேசுக்கிறிஸ்து பிரதான அதிபதியாக அல்ல, முழுமையான அதிகாரமும் ஆளுகையும் கொண்ட “ராஜாதிவாகவும் கர்த்தாதி கர்த்தராகவும் இருக்கிறார். (வெளி. 19:16)

உண்மையில் இயேசுக்கிறிஸ்துவை தேவதூதன் என்று கூறுவது முழுமையான வேதப்புரட்டாகும். ஏனென்றால் இயேசுக்கிறிஸ்து தேவதூதர்களை விட மேலானவர் என்பது வேதாகமத்தின் தெளிவான போதனையாக உள்ளது. எபிரேயருக்கு எழுதப்பட்ட நிருபத்தில் முதலாம் அதிகாரம் 4ம் வசனத்திலிருந்து இரண்டாம் அதிகாரம் 18ம் வசனம் வரை தேவதூதர்களைவிட இயேசுக்கிறிஸ்து மேலானவர் எனும் சத்தியம் விளக்கப்பட்டுள்ளது. இப்பகுதியானது, இயேசுக்கிறிஸ்து  இவர் தேவதூதரைப் பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார்.“ என்று ஆரம்பமாகின்றது. (எபி. 1.4) இயேசுக்கிறிஸ்து தேவதூதரை விட மேலானவர்(86) என்பதை இவ்வசனம் உறுதிப்படுத்துகின்றது. (87) மேலும் இவ்வசனத்தில் “நாமம்“ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் மூலமொழியில் பெயர், பட்டம், பதவி, அந்தஸ்து, புகழ், நபர் என்று பலவித அர்த்தங்க்ளைக் கொண்டுள்ளது. ஆரம்பகாலத்தில் தேவனைக் குறிப்பிட உபயோகிக்கப்பட்ட இப்பதம் பிற்காலத்தில் யூத கிறிஸ்தவர்களால் இயேசுக்கிறிஸ்துவினுடைய பெயராகக் கருதப்பட்டது. (88) எனவே 1:4 இல் இயேசுக்கிறிஸ்து “விசேஷித்த நாம்முடையவராய்“ இருக்கிறார் எனும்போது அவர் தேவனாய் இருக்கிறார் எனும் அர்த்த்த்திலேயே உபயோகிக்கப்பட்டுள்ளது. (89) “இயேசுக்கிறிஸ்து தேவதூதரைவிட மேலான அந்தஸ்தும், அதிகாமும், ஆளுமையும் உடையவராய் இருப்பதையே இவ்வசனங்கள் அறியத் தருகின்றன. (90) எனவே அவரைத் தூதன் என்ற கூறுவது மிகப்  பெரிய தவறாகவே உள்ளது.

இயேசுக்கிறிஸ்துவைத் தம் குமாரன் என்று கூறிய தேவதூதரை இவ்வாறு அழைக்கவில்லை என்றும் (எபி 1:5) அவர்கள் தேவனுடைய ஊழியக்கார்ர்களாகவே இருக்கிறார்கள் என்றும் (எபி. 1:7) எபிரேயர் நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இயேசுக்கிறிஸ்து தேவனுடைய குமாரனாய் இருப்பதனாலும், தூதர்களைத் தேவன் தம் குமாரன் என்று அழைக்காதமையினாலும் மிகாவேல் எனும் தேவதூதன் இயேசுக்கிறிஸ்து அல்ல என்பது தெளிவாகின்றது. (91) மிகாவேல் தேவதூதனே இயேசுக்கிறிஸ்து என்றால் இவ்விரு வசனங்களிலும் தேவன் கூறியவை பொய்யாகவே இருக்க வேண்டும். மேலும், தேவதூதர்கள் யாவரும் தம் குமாரனை வழிபட வேண்டும். என்று தேவன் கட்டளையிட்டதாகவும் இப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. (எபி. 1:6) வேதாகமத்தில் தேவனை வழிபடுவதற்கு உபயோகிக்கப்பட்ட பதமே இவ்வசனத்தில் தேவதூதர்கள் இயேசுக்கிறிஸ்துவை வழிபடுவதைப் பற்றிய தேவகட்டளையிலும் உள்ளது. தேவதூதர்கள் மட்டுமல்ல பிசாசுக்களும இயேசுக்கிறிஸ்துவுக்கு முன்பாக விழுந்து அவர் தேவனுடைய குமரன் என்று அறிக்கையிட்டன. (மாற். 3:11) தேவன் மட்டுமே வழிபாட்டுக்கு உரியவராய் இருப்பதனால் (மத். 4:10) தேவதூதர்கள் இயேசுக்கிறிஸ்துவை வழிபடுவதானது அவர் தேவதூதர்களைவிட மேலானவராய இருப்பது மட்டுமல்ல “அவர் தேவனாய் இருப்பதையும் அறியத் தருகிறது. (92) மேலும், பிதாவினுடைய வலது பரிசத்தில் உட்காரும் சிலாக்கியம் இயேசுக்கிறிஸ்துவுக்கு கிடைத்த்து போல தேவதூதர்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் எபிரேயர் நிருப ஆசிரியர் சுட்டிக் காட்டுவதும் (எபி. 1:13) தேவதூதர்களை விட இயேசுக்கிறிஸ்து மேலானவராய் இருப்பதற்கான ஆதாரயமாய் உள்ளது. மலும், தேவதூதர்கள் அனைவரும் இயேசுக்கிறிஸ்துவினால் சிருஷ்டிக்கப்பட்டவர்களாக இருப்பதும் (கொலோ. 1.16)(93) தேதூதர்களைவிடவும் மேலான நிலையில் அவர் இருப்பதை அறியத் தருகிறது. 

மிகாவேலும் இயேசுக்கிறிஸ்துவும் ஒருவர் என்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் சுட்டிக் காட்டும் இன்னொரு வசனம் 1 தெசலோனிக்கேயர் 4:16 ஆகும். இவ்வசனத்தில் இயேசுக்கிறிஸ்து பிரதான தூதனுடைய சத்தத்தோடு வருவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளமையால், இயேசுக்கிறிஸ்துவின் சத்தமே இவ்வசனத்தில் பிரதான தூதனுடைய சத்தமாக வர்ணிக்கப்பட்டுள்ளது(97) கூறுகின்றனர். எனினும் 2 தெசலேனிக்கியேர் 1:8 இன்படி இயேசுக்கிறிஸ்து தமது மறுவருகையில், வல்லமையின் தூதர்களோடு வருவதனால், பிரதான தூதனுடைய சத்தத்தோடு வருவார் என்ற 1 தெசலோனிக்கேயர் 4:16 இல் குறிப்பிடப்பட்டிருப்பது அவரோடு பிரதான தூதன் மிகாவேலும் வருவான் என்பதையே அறியத்தருகின்றது. எனவே இயேசுக்கிறிஸ்து மிகாவேல் தூதன் எனக் கூறுவது தவறாகும். 

இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகத்திற்கு வருவதற்கு முன்பு மட்டுமல்ல மரித்து உயிர்தெழுந்த பின்பும் மிகாவேல் எனும் தேவதூதனாகவே இருக்கிறார் என்றும் யெகோவாவின்  சாட்சிகள் கூறுகின்றனர். மாம்சத்தில் மரித்த இயேசுக்கிறிஸ்து ஆவியாக உயிர்த்தெழுந்தார் என்பதே இவர்களது போதனையாகும. (98) எனவே “உயிர்த்தெழுதலின் பின்னர் அவர் சரீரமற்ற ஆவியாகவே இருந்தார் (99) என்று போதிக்கும் யெகோவாவின்  சாட்சிகள் “மனிதர்களை மீட்பதற்காக்கத் தம் சரீரத்தை மீட்கும் பொருளாக்க் கொடுத்த இயேசுக்கிறிஸ்து மறுபடியும் தன் சரீரத்தை எடுத்துக் கொள்ளவில்லை (100) என்றும் அவரால் அதனைப் பெற்றுக் கொள்ள முடியாதிருந்த்து எனவும் விளக்குகின்றனர்(101) மேலும் கல்லறைக்குள் வைக்கப்பட்டிருந்த அவரது சரீரம் தேவனால் அழிக்கப்பட்டது என்றும் இவர்கள் கூறுகின்றனர். (102)  உயிர்த்தெழுந்த பின்னர் இயேசுக்கிறிஸ்து சரீரம் இல்லாமல் ஆவியாக மட்டுமே இருக்கின்றார்“ எனும் தங்களது வேதப்புரட்டுக்கு யெகோவாவின்  சாட்சிகள் சுட்டிக் காட்டும் வேதவசனம் 1 பேதுரு 3:18 ஆகும். (103) இவ்வசனத்தின் இறுதிப்பகுதியில் “அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அவ்வசனம் யெகோவாவின்  சாட்சிகள் தர்கிப்பது போல இயேசுக்கிறிஸ்து சரீரமற்ற ஆவியாக உயிர்த்தெழுந்தார் என்று கூறவில்லை. மூலமொழியில் இவ்வாக்கியத்தின் இலக்கண அமைப்பு முறையை அடிப்படையாக்க் கொண்டு “ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.“ (104) என்றும் ஆவிக்குரிய நிலைக்கு உயிர்ப்பிக்கப்பட்டார்(105) என்றும் இருவிதமாக மொழிபெயர்க்கலாம். எனினும் யெகோவாவின்  சாட்சிகள் கூறுவதுபோல் “சரீரம் இல்லாமல் வெறும் ஆவியாக உயிர்ப்பிக்கப்பட்டார்(106) என்று இவ்வசனத்தை எவ்வித்த்திலும் மொழிபெயர்க்க முடியாது. 

இயேசுக்கிறிஸ்து ஆவிக்குரிய நிலைக்கு உயிர்ப்பிக்கப்பட்டார் என்று கூறும்போது அவர் சரீரமற்ற நிலையில் ஆவியாக இருந்தார் என்பது அர்த்தமல்ல. உயிர்த்தெழுந்த இயேசுக்கிறிஸ்து தமது சரீரத்தை இழந்தவராக அல்ல, மாறாக மகிமையடைந்த சரீரத்துடனேயே உயிர்தெழுந்தார் தம்மை ஒரு ஆவி என்று நினைத்துப் பயந்த சீடரிடம் “நான் தான் என்ற அறியும்படி  என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள் என்னைத் தொட்டுப் பாருங்கள் நீங்கள் காண்கிறபடி எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறது போல் ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்கு  காண்பித்தார். (லூக். 24:37-40) உயிர்தெழுந்த இயேசுக்கிறிஸ்துவே தாம் ஆவியல்ல என்றும் தமக்கு மாம்சமும் எலும்பும் இருப்பதாகவும் அறியத்தந்துள்ளமையால் யெகோவாவின்  சாட்சிகளின் தர்க்கம் உண்மைக்கு மாறான விளக்கமாகவே உள்ளது. 

உண்மையில் கல்லறையில் வைக்கப்பட்ட இயேசுக்கிறிஸ்துவின் சரீரம் அழிந்து போகவில்லை. “அவருடைய மாம்சம் அழிந்து போகாது என்று தீர்க்கதரிசிகளினால் முன்னறிவிக்கப்பட்டது போலவே அவர் சரீரப்பிரகாரமாக உயிர்த்தெழுந்தார் என்பதை அப்போஸ்தலர் 2:31 அறியத் தருகின்றது (107) இயேசுக்கிறிஸ்துவும் தமது சரீரம் மூன்று நாளைக்குப் பின் உயிர்த்தெழும என்பதை முன்னறிவித்திருந்தார் (யோவா. 2:19-22) (108) சரீரப்பிரகாரமாக உயிர்தெழுந்த இயேசுக்கிறிஸ்துவின் சரீரம் மகிமையடைந்த நிலையில் இருந்தமையால் அவர் சடுதியாகத் தோன்றி மறையக்கூடியவராகவும் பூட்டப்பட்டிருக்கும் அறைக்குள் வந்து போகக்கூடியவராகவும் இருந்தார்(லூக். 24:31, 24:36) உயிர்த்தெழுந்த பின்பு அவர் சரீரத்தில் இருந்ததை அவரது சீடர்கள் தொட்டுப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடியதாகவும் இருந்தது (மத். 28:9, லூக் 24:39, யோவா. 20:17) இயேசுக்கிறிஸ்து மரிக்கும்போது அவரது சரீரத்தில் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் உயிர்த்தெழுந்த பின்பும் இருந்தன. (யோவா 20:25-27)(109).. எனவே உயிர்த்தெழுந்த பின்னர் அவர் சரீரமில்லாமல் ஆவியாக இருந்தார் என்று கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. 

இயேசுக்கிறிஸ்து சரீரப்பிரகாரமாக உயிர்த்தெழுந்த்தை மறுதலிக்க யெகோவாவின்  சாட்சிகள் உபயோகிக்கும் இன்னுமொரு வேதப்பகுதி 1 கொரிந்தியர் 15:44-50 ஆகும். 44ம் வசனத்தில் “ஜென்ம சரீரம் விதைக்கப்படும் ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும். எனும் வாக்கியத்தை சுட்டிக் காட்டும்  இவர்கள் இயேசுக்கிறிஸ்து ஆவியாவே உயர்த்தெழுந்தார் என்று கூறுகின்றனர். மேலும் 50ம் வசனத்தில் “மாம்சமும் இரத்தமும் தேவனுடைய இராஜியத்தை சுதந்தரிக்க மாட்டாது“ என்று குறிப்பிடப்பட்டுள்ளமையால்  இயேசுக்கிறிஸ்து சரீரம் இல்லாத நிலையில் ஆவியாகவே உயிர்தெழுந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர் (110) உண்மையில் யெகோவாவின்  சாட்சிகள் 1 கொரிந்தியர் 15ம் அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ள விடயத்திதைக் கருத்திற் கொள்ளாதவர்களாக தங்களது உபதேசத்துக்கு ஆதாரமாக இவ்வதிகாரம் இருப்பதாக எண்ணுகின்றனர். கொரிந்து சபையில் மரித்தோரின் உயிர்த்தெழுதலை மறுதலித்த ஒரு குழுவினர் இருந்தனர். (111) இதனால் மரித்தோர் சரீரப்பிரகாரமாக உயிர்தெழுவார்கள் என்பதையும் (1 கொரி. 15:12-23) உயிர்தெழுதலில் தற்போதைய மாமிசசரீரம் மகிமையடைந்த நிலையில் இருக்கும் என்பதை ( 1 கொரி. 15.35-50) பவுல் விபரமாக விள்க்கியுள்ளார். உயிர்த்தெழுதலில் மாம்ச சரீரம் “ஆவிக்குரிய சரீரமாக“ இருக்கும். என்று இவ்வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, சரீரம் இல்லாமல் ஆவி மட்டும் இருக்கும் என்று கூறவில்லை (1 கொரி. 15:44-46)  உண்மையில் நாம் இப்போது இருக்கும் சரீரத்தில் அல்ல மாறாக மகிமையடைந்த ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்ப்பிக்கப்பட்டு பரலோகத்தில் இருப்போம் என்பதையே “மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை“ எனும் வாக்கியத்தின் மூலம் பவுல் அறியத் தந்துள்ளார். 

உயிர்தெழுதல் சரீரமற்ற ஆவியில் வருவது என்று 1 கொரி. 15ம் அதிகாரத்தின் எந்த ஒரு வசனத்திலும் குறிப்பிடப்பட்வில்லை. உயிர்த்தெழுந்த நிலையில் நமக்கு ஆவிக்குரிய சரீரம் இருக்கும் என்றே இவ்வதிகாரம் அறியத் தருகிறது. (1 கொரி. 15:44) பவுலினுடைய நிருபங்களில் “சரீரம்“ என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்படப்டுள்ள பதம் (somma) (113) மாம்சபிரகாரமான சரீரத்தையே குறிக்கின்றது. பவுல் இவ்வர்த்தத்திலேயே எல்லா இடங்களிலும் இப்பதத்தை உபயோகித்துள்ளார். (114) எனவே 1 கொரிந்தியர் 15ம் அதிகாரத்தில் உயிர்த்தெழுதலின் பின்னர் உள்ள ஆவிக்குரிய சரீரம் தற்போது தமக்கிருக்கும் மாம்சரீரத்தின் மகிமையடைந்த நிலையில் இருக்கும் என்றே பவுல் அறியத்தந்துள்ளார். இவ்விதமாகவே, உயிர்த்தெழுந்த இயேசுக்கிறிஸ்துவின் சரீரமும் மகிமையடைந்த நிலையில் இருந்ததாக வேதம் கூறுகிறது.  

 

Footnote and References  

(80) Anonymous, Your will be Done Earth, pp 310, 313

(81) Ibid p 311 

(82)  Anonymous, Aid to Bible Understanding, p 1152  ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்வதற்காக உபயோகிக்கப்படுவதே சுட்டுச் சொல்லாகும். “அந்த“, இந்த“ எனும் பதங்கள் தமிழ்மொழியில் உள்ள சுட்டுச் சொற்களாகும். வேதாகமத்தின் மூலமொழிகளில் வசனங்களின் சரியான அர்த்தத்தை அறிந்து கொள்வதற்கு இவை பெரிதும் உதவுகின்றது. 

(83) F. Dickason, Angles : Elect and Evil p68 

(84)  அவர்களது பெயர்கள் யுராயல் (Uriel), ரஃபாயல் (Raphael) ராகூல் (Raguel) , மிகாவேல் (Michael), சாரியஸ் (Sariel), காபிரியல் (Gabriel), ரெமியேல்(Remiel), (தொபித். 12.15) 4எஸ்றா 20.1-7) இல் Remiel எனும் பிரதான தூதனின் பெயரே Jeremiel  என்று உள்ளது. (F.F. Bruce, 1&2 Thessalonians : Word Biblical Commentary Vol 45, p 100) இப்பிரதான தேவதூதர்களே வெளிப்படுத்தல் 8.2 இல் தேவனுக்கு முன்பாக நிற்கின்ற ஏழு தூதர்கள்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்களில் காபிரியல் மிகாவேல் என்போரின் நம் வேதாகமத்தில் உள்ளன. 

(86) இவ்வசனத்தில் “மேலானவர்“ எனும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் க்ரீசன் (Kreisson) புதிய ஏற்பாட்டில் 19 தடவைகள் இடம்பெற்றாலும் எபிரேயர் நிருபத்தில் 13 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, நிருபத்தின் மையக் கருத்தை அறியத் தரும் பதமாயுள்ளது. (1:4, 6:9, 7:7, 7:19, 7:22, 8:6, 9:23, 11:16, 11:35, 11:40, 12:24, 10:34)

(87) இவ்வசனத்தில் “சுதந்தரித்துக் கொண்டார்.““மேன்மையுள்ளவரானார்“ எனும் சொற்பிரயோகங்கள் இயேசுக்கிறிஸ்து தம்மிடம் இல்லா ஒன்றைப் பெற்றுக் கொண்டார் எனும் அர்த்தம் உடையது அல்ல எபிரேயர் நிருப ஆசிரியர், மனிதராக இவ்வுலகிற்கு வந்த இயேசுக்கிறிஸ்து மானிட வாழ்வின் பின் எத்தகைய நிலையை அடைந்தார் என்பதையே இப்பகுதியில் சுட்டிக் காட்டுகிறார் என்பதை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். இதற்கு முன் உள்ள வசனத்தில் இயேசுக்கிறிஸ்து மானிட பாவத்துக்காக என்ன செய்தார் என்பதைப் பற்றி குறிப்பிடப்பட்டதிலிருந்து இதை நாம் அறிந்து கொள்கிறோம். (L. Morris, Hebrew : Expositor’s Commentary, p 15) இயேசுக்கிறிஸ்து மானிட வரையறைக்குள் தம்மை உட்படுத்தி, மனிதராக வந்த போது “தேவதூதரை விட  சிறியவராக்கப்பட்டு (எபி. 2:9) மானிட பாவத்தைப் பரிகரிப்பதற்காகச் செய்யவேண்யவற்றை (எபி. 2.17) செய்து முடித்தபின்னர் அவர் தேவதூதரை விட உயர்வான நிலைக்குச் சென்றுள்ளார் என்பதை அறியத் தருவதற்காகவே எழுதப்பட்டுள்ளது. 

(88) அப்போஸ்தலர் 3:16, 4:7, 4:10, 16:18, 19:13 எபேசியர் 1:20, பிலிப்பியர் 2:9-11 போன்ற வசனங்களில் “நாமம்“ என்பது இயேசுக்கிறிஸ்துவைக் குறிக்கும் பதமாய் இருப்பதைக் காணலாம். 

(89) R. Longenecker, The Christology of Early Jewish Christianity, pp 41-46

(90) G.H. Guthrie, Hebrews : The NIV Application Commentary, p. 50

(91) R.Rhodes, Reasoning from the Scriptures with Jehovah’s Witnesses, p 178

(92) G.H. Guthrie, Hebrews : The NIV Application Commentary, p. 69

(93) கொலோசேயர் 1:16 இல் “சிங்காசனங்கள்“, “கர்த்த்த்துவங்கள், துரைத்தனங்கள், அதிகாரங்கள்“ என்பவை தூதர்களையே குறிக்கின்றன. அக்கால யூத இலக்கியங்களில் இச்சொற்பிரயோகங்கள் தூதர்களைக் குறிப்பிடவே உபயோகிக்கப்பட்டுள்ளன. (2 ஏனோக்கு 20:1, ஜூபிலி 2:2) புதிய ஏற்பாட்டில் ரோமர் 8:38, 1 கொரிந்தியர் 15:24, எபேசியர் 1:20, 6:12, 1 பேதுரு 3:22 இலும் இத்தகைய விபரணத்தை நாம் அவதானிக்கலாம்

(97) Anonymous, Aid to Bible Understanding, p1152

(98) Anonymous, Let God be True, p40

(99) Ibid. p 41

(100) Anonymous, Let your Name be Sanctified, p. 266

(101) Anonymous, You can Live Forever in Paradise on Earth, p 143

(102) Anonymous : Things in which it is Impossible for God to Lie, p. 354. The Watchtower, 1 August 1975, p 479

(103) Anonymous, Rezoning with the Scriptures, p 334

(104) ஆங்கிலத்தில் New International Version மற்றும் Authorized Version மொழிபெயர்ப்புகளில் இவ்விதமாகவே இவ்வாக்கியம் உள்ளது.

(105) பெரும்பாலான வேத ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு மொழிபெயர்ப்பதே சிறந்த்து என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளனர். (W.Grudem, 1 Peter : Tyndale New Testament Commentaries, p 156; A.Blum 1,2 Peter : Expositor’s Bible Commentary Vol 12, p 242) இதன்படி மாம்சபிரகாரமான வாழ்வில் மரித்து, ஆவிக்குரிய நிலைக்கு உயிர்த்தெழுந்தார் என்பதே இவ்வாக்கியத்தின் அர்த்தமாகும். J,R. Michaels, 1 Peter : Word Biblical Commentary Vol 49, pp203-205), அதாவது மானிட வரையறைகளுக்கு உட்பட்டவராக இருக்கும்போது மரித்த இயேசுக்கிறிஸ்து இவ்வரையறையைக் கடந்து ஆவிக்குரிய நிலையில் உயிர்த்தெழுந்தார்

(106) Anonymous, Let God be True, p 272

(107) சங்கீதம் 16:10 இல் முன்னறிவிக்கப்பட்ட இவ்விடயம் இவ்வசனத்திலும் அப்போஸ்தலர் 13 இயேசுக்கிறிஸ்து35 இலும்   இயேசுக்கிறிஸ்துவின் சரீரம் அழியாது என்பதைச் சுட்டி காட்ட உபயோகிக்கப்பட்டுள்ளது. 

(108) யோவான் 2ம் அதிகாரத்தில் இயேசுக்கிறிஸ்து “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள் மூன்று நாளைக்குள்ளெ இதை எழுப்புவேன்“ என்று கூறினார். இது அவர தமது சரீரத்தைப் பற்றி கூறிய தீர்க்கதரிசனம் என்பதை 21ம், 22ம் வசனங்கள் அறியத் தருகின்றன. 

(109) இயேசுக்கிறிஸ்து உயிர்த்தெழுந்த்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு, மரிக்கும்போது அவருக்கு ஏற்பட்ட காயங்களைக் தான் பார்க்க வேண்டும் என்று தோமா கூறியபோது, இதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இயேசுக்கிறிஸ்து தம்முடைய கைகளை அவனுக்குக் காண்பித்தார்

(110) Anonymous : Aid to Bible Understanding p1395: Anonymous : Your Will be Done on Earth, p. 50.

(111) M.L. Sodards, 1 Corinthians : New International Biblical Commentary pp 314-317 ; C. Blomberg, 1 1 Corinthians : The NIV Application Commentary, p 295

(112) L.Morris, 1 Corinthians : Tyndale New Testament Commentary, p 227

(113) சோமா (somma) எனும் கிரேக்க பதம்

(114)  R. Gundry, Soma in Biblical Theology, p 168



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard