Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


//என் பதில் உங்களுக்கு பைபிள் புரியாதது போல் புரியாது!! வேதம் எனக்கு சொல்லுகிறது,

  • யோவான் 4:12 தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை.
  • 1 தீமோத்தேய் 6:16.................... மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்.

போன்ற வசனங்கள் உன்மையாக இருக்க வேண்டும், அல்லது நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் ஏசாயா பார்த்தானா, பார்த்தானா, ஆபிரகாம் பார்த்தானா என்பது உண்மையாக இருக்க வேண்டும்!! எனக்கு தெரிந்தது தேவனை ஒருவரும் ஒரு போதும் பார்த்தது இல்லை, அப்படி என்றால் ஏசாயா தேவனை அல்ல, தேவனின் ரூபத்தில் இருந்த தேவ குமாரன் கிறிஸ்துவை தான் பார்த்திருக்க வேண்டும்!! //

  • அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய (YHWH)  ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். (ஏசாயா 6:5)
  • அப்பொழுது கர்த்தர் (YHWH) ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்? கர்த்தரால் ((YHWH)  ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்., (ஆதியாகமம் 18:13-14)
அன்பு நண்பர்கள்  பெரேயன்,அன்பு மற்றும் டினோ  உள்ளிட்ட வேத மாணவர்களே . நீங்க வெளியில்  சொல்ல வேண்டாம்; உங்கள் ஜெபத்தில் நீங்கள் தேவனிடம் கேளுங்கள். வசனம் தெளிவாக சொல்லுகிறது ஏசாயா கர்த்தரை (Not Adonai but யேகோவா , h3068 -  LORD  , יְהוָה ) கண்டான். கர்த்தர் (Not Adonai but யேகோவா , h3068 -  LORD  , יְהוָה )  ஆபிரகாமின் விட்டிற்கு வந்தார் ஆனால் நீங்கள் மேலே குறிப்பிட்ட வசனகளில் தேவனை (பிதாவை) ஒருவரும் கண்டதில்லை என்று தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. இதற்க்கு என்ன விடை என்று கேளுங்கள். மிகாவேலை தேவன் என்று சொல்லலாம் ஆனால் யேகோவா என்று சொல்லலாமா? கேளுங்கள் தேவன் பேசுகிறவர் கட்டாயம் பேசுவார். நீங்கள் ரோமன் கதோலிகத்தில்  (அல்லது வேறு பெயர் கிறிஸ்தவ சபையில்)  இருந்து வெளியேறியது மகிழ்ச்சியே! ஆனால் "இருப்பு ஆயுதத்துக்கு அவன் தப்பியோடினாலும் உருக்குவில் அவனை உருவ எய்யும்." (யோபு 20:24) போல நேராதபடி பார்த்துகொள்ளுங்கள்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink Closed

இயேசு தொழுதுகொள்ளப்படும் தெய்வம் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாதவரை உங்களுக்கு இதெல்லாம் குழப்பமாக தான் இருக்கும். கூப்பிடுகிறவன் தொழுதுகொள்ள கூப்பிடவில்லை என்பது ஏரியனின் கருத்தா, சாரி இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

சுவிஷேஷத்தை அறிவிக்குமுன் மக்களின் அடிப்படை தேவையை சந்திக்க வேண்டும், மிஷனரிகள் தென் தமிழகத்துக்கு வந்த காலத்தில் அப்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி இருந்தது என்பதை நீங்கள் தென் தமிழக மாவட்டங்களை சார்ந்தவராக இருந்திருந்தால் அறிந்திருப்பீர்கள். அடிப்படை கல்வி, மருத்துவ வசதி போன்றவை மறுக்கப்பட்ட நிலையில் இருந்த அம்மக்களை சந்திக்க அடிப்படை வசதிகள் செய்துகொடுப்பது இன்றியமையாததாக இருந்தது, சுவிஷெஷம் அறிவிக்கப்பட இது ஒரு காரணி மாத்திரமேயன்றி இந்த கல்வி, மருத்துவ வசதிகளை மாத்திரம் மிஷனர்கள் செய்துகொண்டிருக்கவில்லை.

நீங்கள் திரித்துவத்தை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் அதை போல திரித்துவம் இல்லை என்ற உங்கள் ஏரியனிஸ்டு கருத்துக்களை நானும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

வைராக்கியமான பிற மத நம்பிக்கைகளை விட்டு இயேசுவை ஏற்றுக்கொண்ட ரகசிய கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து பார்த்திருக்கிறீர்களா? அதில் உள்ள கஷ்டம் தெரியுமா? ரகசிய கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் கடைசி வரை அப்படி வாழ்வதில்லை. கத்திரிக்காய் முற்றினால் கடைக்கு வந்தாகவேண்டும் என்ற வகையில் என்றோ ஒரு நாள் அவர்களது விசுவாசம் அவர்களது குடும்பத்திற்கு, சமுதாயத்துக்கு முன்னால் அவர்களால் அறிக்கை பண்ணப்படும். சில காரணங்க்களுக்காக தாங்கள் கொண்ட விசுவாசத்தை குறிப்பிட்ட காலம் வரைக்கும் மறைத்து வாழ வேண்டிய வாழ்க்கை அவர்களுக்கு. உங்களுக்கு எங்கே அந்த கஷ்டம் தெரியப்போகிறது.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink Closed

//ஆங்கிலேயர்கள் இந்த பெரிதான தேசத்தை சுமார் 350 வருடங்கள் ஆண்டார்கள், அப்போ ஜனத்தொகையும் மிகவும் குறைவு தான், மிஷனரிகள் அந்த நேரத்தில் தான் மிகவும் அதிகமாக இந்த தேசத்தில் இருந்தார்கள், நிறைய கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், சேவை மைய்யங்கள் என்று கிறிஸ்துவின் அன்பை நிச்சயமாக அறிவித்தார்கள், அதிகாரத்தில் இருந்தார்கள், இருந்தாலும் இந்த நாடு ஏன் கிறிஸ்தவ நாடாக மாறவில்லை!? தேவனுக்கு சித்தம் இல்லை என்று தான் சொல்ல முடியும்!! நாம் நம் ஊழியம் மூலம், தேவனுக்கு உதவிசெய்கிறோம் கட்டளையிடுகிறோம் என்றெல்லாம் நினைத்து ஏதேதோ செய்து வருகிறோம், ஆனால் தேவன் அனைவரையும் இரட்சிக்க தீர்மானித்திருக்கிறார், அதுவே அவரின் சித்தமாகவும் இருக்கிறாது என்று மேலே வசனத்தில் காண்பித்தேன், என்றால் தேவனின் சித்தம் நிறைவேறும் என்று நான் விசுவசித்து, அதையே அறிவிக்கிறேன்!! இதில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை!!

இன்று ஊழியங்கள், நற்செய்தி பெருவிழாக்கள், அற்புத கூட்டங்கள் இப்படி நடக்கும் எந்த ஒரு கூட்டத்திற்கும் செல்பவர்களில் 99% ஏற்கனவே சபைகளில் இருப்போர் தான்!! மீதம் உள்ள 1%த்தில் எத்துனை பேர் இந்த நற்செய்தியை கேட்டு, சத்தியத்தை அறிந்து, ஞானஸ்நானம் எடுத்து, ................ என்று இருப்பார்கள்!! யாருக்கு லாபம் இருக்கிறதோ, இல்லையே, கூட்டத்தை நடத்துவோருக்கு காணிக்கையும், கூட்டத்தில் பேசியவருக்கு சூட்கேஸும் நிறம்பும்!! இதற்கு தானே இத்துனை ஆர்ப்பாட்டம்!! இதை நீங்கள் தவறாக எடுத்துக்கொண்டாலும், உண்மை இதுவே!! யாரோ கஷ்ட்டப்பட்டு உழைத்து கொடுக்கும் பணத்தில் யாரோ குடும்பத்துடன் காரில் சுற்றுகிறார்கள், விடுமுறை என்று அமேரிக்கா, ஆஸ்த்ரேலியா சென்று வருகிறார்கள், வியர்வை சிந்தி அனுப்பும் பணத்தில் ஏசியில் குடும்பத்துடன் பதுங்கும் சோஃபாவில் அமர்ந்து வசனம் பேசுகிறோம் என்று சொல்லுகிறார்கள்!! இது தான் நற்செய்தியா!! //


ஊழியங்களை பற்றி புரிந்துகொள்ளாமல் எதையாவது எழுதாதீர்கள். ஆங்கிலேய ஆட்சியின் காலத்தில் மிஷனரிகள் வந்தார்கள். ஆனால் இந்தியாவில் இருந்த ஆங்க்கிலேய ஆட்சியின் பிரதி நிதிகள் எந்த அளவுக்கு மிஷனரிகளுக்கு பாதகமாக இருந்தார்கள் என்பது மிஷனரி வரலாறு தெரிந்தவர்களுக்கு தான் புரியும். மக்கள் தெளிவடைந்து முன்னேறுவது ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு பிடித்தம் இல்லாமல் தான் இருந்தது.
மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள் அமைத்தது அந்த காலத்தில் இந்திய தேசத்தின் தேவையாக இருந்தது, ஆனால் அதன் மூலமாக மாத்திரம் சுவிஷேஷம் அறிவிக்கப்படவில்லை. நீங்கள் நாசரேத் மற்றும் தென் தமிழகத்தின் பகுதிகளில் உள்ள வயதானவர்களிடம் கேளுங்கள், அவர்கள் சொல்வார்கள் மிஷனரிகள் எப்படி ஊழியம் செய்தனர் என்பதை. மக்களின் பிரச்சனைகள் தேவைகள் போன்றவற்றை நேரடியாக சந்தித்தனர். இப்போதும் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து அமைப்புகள் கிறிஸ்தவ மிஷனரிகளை பின்பற்றி கல்விக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள் என வைத்திருக்கிறார்கள் ஆனால் அவை கிறிஸ்தவ மிஷன் போன்று செயல்படவில்லை, பெயர் பெறவும் இல்லை. மிஷனரிகளிடம் கிறிஸ்தவ அன்பு இருந்தது. அதன் மூலமாகவே பல ஆத்துமாக்களை சுதந்தரித்தனர்.
மிஷனரி ஊழியம் தேவ சித்தம் இல்லையா, இதைபோன்ற ஒரு அறிக்கையை என் வாழ் நாளில் கேட்டதேயில்லை. நீங்கள் புறப்பட்டு போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்னானம் கொடுங்கள் என இயேசு இறுதி கட்டளை கொடுத்தாரே, இது மிஷனரி ஊழியத்துக்கான அறை கூவல் இல்லையா? ஒருவேளை பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என சொல்வதால் உங்களுக்கு இந்த வசனம் பிடிக்கலையோ என்னவோ.
அன்றைக்கு மிஷனரிகள் ஊழியம் செய்தது தான் இன்றைக்கு இந்தியாவில் கிறிஸ்தவம் வளர்ந்துவருகிறது. நீங்கள் வெறும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையை மாத்திரம் வைத்து இந்தியாவில் கிறிஸ்தவர்கள் எங்கே வளர்ந்திருக்கிறார்கள் என்கிறீர்கள், எத்தனையோ பேர் வெளிப்படையாக பல்வேறு காரணங்களுக்காக தங்களை கிறிஸ்தவர்கள் என அறிவிக்காமல் ரகசிய கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள் தெரியுமா? ஏதோ ஒரு ஊழியம் மூலமாக, சபையின் மூலமாக தனி நபரின் மூலமாக சத்தியத்தை அறிந்து கொண்டு, பைபிளை மறைத்து வைத்துக்கொண்டு, வெளியே வேற வேலையாக போகிறேன் என சொல்லிக்கொண்டு ஆலயத்துக்கு செல்லும் ரகசிய கிறிஸ்தவர்கள் எத்தனை பேர்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink Closed

///கிறிஸ்துவின் நாமத்தை கூப்பிடுகிறவர்களுக்கு இரட்சிப்பு என்று தான் வசனமே தவிர, கிறிஸ்துவின் நாமத்தை தொழுதுகொள்வோருக்கு இரட்சிப்பு என்று நீங்கள் சொல்ல்லுவதால், அல்லது நம்பிக்கை வைப்பதால் அப்படி ஆகாது!! ஒரு காலத்தில் நிலவில் பாட்டி வடை சுட்டுக்கிட்டு இருந்தாங்க என்று தான் நம்பியிருந்தோம், இன்று அதே நிலவுக்கு மனிதன் வடை (சாரி சமோசா) எடுத்துக்கொண்டு போயிருக்கிறான்!! நம் நம்பிக்கை என்பது உண்மை அறியப்படும் வரை தான்!! அதன் பின் அந்த உண்மை தான் நம் நம்பிக்கையாக இருக்கவேண்டும்!!///

ஆகா, என்ன அருமையான கண்டிபிடிப்பு, பின்னிட்டேள் போங்கோ. கூப்பிடுதல் வேறு, தொழுதுகொள்ளுதல் வேறு..?! தொழுதுகொள்ளும் எண்ணத்தில் இருப்பவன் தான் கூப்பிடுவான், தொழுதுகொள்ள எண்ணாதவன் எப்படி கூப்பிடுவான். கூப்பிட்டால் வருவார் என்பது உண்மை தான், அதற்காக அவரை 108 ஆம்புலன்ஸ் ரேஞ்ச்சுக்கு மாத்திரம் கற்பனை செய்ய வேண்டாம். பல ஆங்கில வேதாகமங்களை காட்டியிருக்கீங்க. அதே வேதாகமத்தில்...

New American Standard Bible (©1995)

'Call to Me and I will answer you, and I will tell you great and mighty things, which you do not know.'

King James Bible

Call unto me, and I will answer thee, and shew thee great and mighty things, which thou knowest not.

American King James Version

Call to me, and I will answer you, and show you great and mighty things, which you know not.

American Standard Version

Call unto me, and I will answer thee, and will show thee great things, and difficult, which thou knowest not.

Douay-Rheims Bible

Cry to me and I will hear thee: and I will shew thee great things, and sure things which thou knowest not.

Darby Bible Translation

Call unto me, and I will answer thee, and I will shew thee great and hidden things, which thou knowest not.

English Revised Version

Call unto me, and I will answer thee, and will shew thee great things, and difficult, which thou knowest not.

Webster's Bible Translation

Call to me, and I will answer thee, and show thee great and mighty things, which thou knowest not.

World English Bible

Call to me, and I will answer you, and will show you great things, and difficult, which you don't know.

Young's Literal Translation

Call unto Me, and I do answer thee, yea, I declare to thee great and fenced things -- thou hast not known them.

-என இருக்கிறதை கவனிச்சியளா. அதுவும் யேகோவா தேவனே கூப்பிட்டால் பதில் அளிப்பார், அதுவும் இஸ்ரவெலின் தொழுகைக்கு பாத்திரமான தேவன். எப்படி இந்த வசனத்தை வெறும் கூப்பிடுதல் என்று மாத்திரம் வைத்துக்கொள்ளலாமா..?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


// மோசேயின் சரீரத்தை தேவனே அடக்கம் செய்தார் என்று இருக்கும் போது, கிறிஸ்துவின் சரீரத்திற்கும் தேவனே நிச்சயமாக ஏற்பாடு செய்திருப்பார் என்பது என் நம்பிக்கை, இது நிச்சயமாக வேதத்தில் இல்லை, வேதத்தில் இல்லாததை யாரும் நம்ப வேண்டும் என்றோ, நம்புங்கள் என்றோ நான் சொல்லுவதில்லை!! இது என் தனிப்பட்ட கருத்து!! //

நல்லா லிங்க்கு கொடுக்கறீங்கய்யா...மனசைக் கெடுத்துக்க‌... நீங்க எதையோ படிச்சுட்டு காமெண்ட் அடிக்க நான் தேவையில்லாமல் வேறு எதையோ படித்து வைக்க மனசெல்லாம் வலிக்கிறது...நீங்களே பாத்து ஏதாவது செய்யுங்க சாமியோவ்..!

இயேசுவின் சரீரம் உயிர்த்தெழுந்ததா என்பது குறித்த கருத்துக்களை இங்கே பதிக்காமல் தரப்பட்டுள்ள தொடுப்பில் சென்று பதிக்கவும்.

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&topicID=42300842&p=3



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


நண்பர் பெறேயனின் மறதி

//கோல்டாவின் கேள்விக்கு நான் விடைக்கொடுத்துவிட்டேன்!! ஒரு மொழிப்பெயர்ப்பை அல்ல, அந்த "பொறம்போக்கு" மரித்த பிறகு பல மொழிப்பெயர்ப்பு வந்து விட்டது!! அதை எல்லாவர்றிலுமிருந்து தான் ஆறாய்ந்து பார்க்கிறோம்!! இன்று வேத பண்டிதர்கள் என்று சொல்லுவோர் அனைவருமே பொறம்போக்குகளை போல் பல மொழிப்பெயர்ப்புகளிலிருந்து தான் ஆறாய்ச்சி நடத்தி விடை காண முயற்சிக்கிறார்கள்!! தேடுவோர் எல்லாரும் பொறம்போக்குகளாகவே இருந்துவிட்டு போகிறோம், ஏனென்றால் தெடுகிறவன் கண்டடைவான்!! மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது, ஆனால் பத்து வயது பிள்ளைக்கு தெரியும் நரகம் நிச்சயமாக எனக்கு தெரியாது!!//

என்னென்னமோ பதில் சொல்லுறீங்க ஆனால் ஏசாயா யாரை பார்த்தார்? ஆபிரகாம் விட்டிற்கு வந்தது யார் என்று மட்டும் சொல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்கள்!  ஆராய்ச்சி செய்து "Cult" உருவாக காரணமாய் இருந்த ரசல் (இரஸலின் யெகோவாவின் சாட்சிகள் மற்றும் பேத மாணவர்கள்) , ஜோசப் ஸ்மித் (மர்மனிசம்)  போன்றவர்களை நாகரிகமாக மட்டும் திட்ட விரும்புவதால் பொறம்போக்கு என்று முடித்து கொள்ளுகிறேன்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink Closed

 
//கிறிஸ்துவின் சரீரம் எங்கே மறைக்கப்பட்டிருக்கிறது என்பது வேதத்தில் வெளிப்படுத்தப்படவில்லை, ஆகவே நான் அதை குறித்து விளக்கம் அளிக்க அவசியம் இல்லை என்கிறேன்!! கானாததில் துனிச்சலாக நுழையும் குணம் உனக்கு வேண்டுமென்றால் இருக்கலாம், ஏனென்றால் நீ பிரசித்தி பெற்ற கள்ள போதகன், ஆனால் அந்த தைரியம் எனக்கு இல்லை!! மறைவானது எல்லாம் கர்த்தருக்கு உரியது என்பதை நான் நம்புகிறேன்!! //
 
இதைத்தான் நான் அசத்துவது என்று சொன்னேன். மறுபடியும்,  மறுபடியும் நீங்கள் அசத்தல் ராஜா என்பதை நிருபிக்கிறீர்கள் நண்பரே. தூதனுக்கு கால் உள்ளது என்று வேதத்தில் இருந்தாலும் அதை தரிசனம் என்று கூறி ஒதுக்கி விட்டீர்கள் (தரிசனத்தில் உள்ள விஷயங்களை எடுக்க கூடாது என்றால் பாதி வேதம் காணாமல் போய் விடும்). சரி அய்யா நாங்கதான் ஞானசூனியங்கள் , வேதம் தெரியாத பாபிலோனிய வேசிகள் என்று வைத்து கொள்ளுவோம் வேதபண்டிதரான நீராவது ஏசாயா என்ன பார்த்தான் என்று விளக்கலாமே? "கானாததில் துனிச்சலாக நுழையும் குணம் இல்லை" என்று சொல்லும் நீங்கள் தூதனுக்கு கால் இல்லை என்று எப்படி சொன்னீர்கள் ரசல் பாசம் தானே?
 
ஏசாயா யேகோவா தேவனை கண்டாரா? ஆதியாகமம் 18 ஆம் அதிகாரத்தில் வருகிற யேகோவா யார்? என்று சொல்லமுடியவில்லை ஆனால் பக்கம், பக்கமாய் துஷித்து எழுதுகிறீர்கள்.
 
இல்லாத சரீரத்தை தொட்டு பார்க்க முடியுமா? இதிலே என்ன குழப்பம் இருக்கிறது என்று தெரியவில்லை.
 
//பூட்டிய கதவுகளில் வழியாக சரீரத்தை கொண்டு யாரும் நுழைய முடியாது!!//
 
சரீரத்தோடு கடலில் நடக்கமுடியுமா? அல்லது அதுவும் ஆவியா?  


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink Closed

 

நண்பர் பெறேயனின் மறதி

 

நான் கேட்ட விஷயங்களை விட்டு விட்டு தேவை இல்லாதது எல்லவற்றையும் சும்மா எழுதுகிறீர்கள். இரண்டே இரண்டு கேள்விகளை வசனத்தின் அடிப்படையில் கேட்டு இருந்தேன். ஒன்றுக்கு கூட நீங்கள் பதில் அளிக்கவில்லை.

////    * அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய (YHWH)  ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். (ஏசாயா 6:5)//

யெகோவா தேவனை கண்கள் கண்டவுடன் ஆதமானான் என்பதையும் இந்த வசனத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளவும்!!

//

யேகோவா தேவனை ஏசாயா கண்டாரா?

தாங்கள் Selective Amnesia வந்து மறந்து விட்ட இன்னொரு கேள்வி

ஆதியாகமம் 18 அதிகாரத்தில் வருகிற கர்த்தர் (YHWH) ஆபிரகாமுடைய கனவில் வந்தாரா அல்லது நேரடியாக (Visible) வந்தாரா?

  • அப்பொழுது கர்த்தர் (YHWH) ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்? கர்த்தரால் ((YHWH)  ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்., (ஆதியாகமம் 18:13-14)


-- Edited by John on Wednesday 13th of April 2011 10:25:48 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink Closed

//யெகோவா தேவன் குத்தப்பட்டிருக்கிறார் என்பதை விட அதிகமான தேவ தூஷனம் ஒன்றும் இருக்க முடியாது!! சாவாமையுள்ள ஒரே தேவனை உங்களின் வார்த்தைகள் கொள்ளுகிறதே!!//

பிதாவாகிய தேவன் குத்தப்பட்டார் என்று நான் சொல்லவில்லை ஆனால் தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், மாம்சத்திலே குத்தப்பட்டார்.

  • அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார். (I தீமோத்தேயு 3:16)

பழைய ஏற்பாட்டின் கால வழக்கப்படி உடன்படிக்கை செய்யும் இருவர் ஒரு மிருகத்தையோ அல்லது பறவையையோ இரண்டாக துண்டித்து அதன் நடுவே நடந்து செல்லவேண்டும். இதன் அர்த்தம் என்னவென்றால், முதலில் உடன்படிக்கையை மீறுகிறவன் அந்த பறவையை போல அல்லது மிருகத்தை போல இரண்டாக துண்டிக்கப்பட வேண்டும்.

  • என் முகத்துக்குமுன் பண்ணின உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றாமல், என் உடன்படிக்கையை மீறின மனுஷரை நான் துண்டங்களின் நடுவாகக் கடந்துபோகும்படி அவர்களை இரண்டாகத் துண்டித்த கன்றுக்குட்டியைப்போல் ஆக்குவேன். (எரேமியா 34:18)

ஆனால் தேவனும் ஆபிரகாமும் உடன்படிக்கை செய்த போது தேவன் மாத்திரம் அதன் நடுவே கடந்து சென்றார் அப்படியென்றால் ஆபிரகாம் (அல்லது அவனுடைய பிள்ளைகளாகிய நாம்) உடன்படிக்கையை மீறினாலும் கொல்லப்பட்டது தேவனே!

  • சூரியன் அஸ்தமித்துக் காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜுவாலையும் தோன்றின. (ஆதியாகமம் 15:17)

-- Edited by John on Wednesday 13th of April 2011 07:00:12 AM



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


தேளைக்குறித்து இரண்டு பழமொழிகள்:

"திருடனுக்கு தேள் கொட்டியது போல‌...." இதுக்கெல்லாம் சத்தமே வராதே..!

"தேள் கொட்டிவிட்டு (இரஸலின்) கழுநீர் பானைக்கடியில் சென்று ஒளிந்துகொள்ளுமாம்..!"

வெத்துவேட்டுகள்...நேரா வந்தானுங்கன்னா...நல்லா ஒரு கை பார்க்கலாம்... பேடிப் பசங்க‌...வரமாட்டானுங்க‌...!

இரஸலின் சீடர்களிடம் மீண்டும் ஒரு பணிவான வேண்டுகோள்:

தயவுசெய்து உங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளுவதை நிறுத்தினால் உங்களுக்குக் கோடி புண்ணியமாகும்; இயேசுவின் இரத்தத்தையும் அவருடைய சிலுவை மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் குறித்து மாறுபாடான கொள்கைகளைக் கொண்ட உங்களுக்கு கிறித்தவர்கள் என்ற பெயர் பொருந்தவே பொருந்தாது.

நீங்கள் இரஸலின் யெகோவா சாட்சிகள்;

நாங்கள் கிறிஸ்துவின் சாட்சிகள், சரியா..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


 
//யெகோவா தேவன் குத்தப்பட்டிருக்கிறார் என்பதை விட அதிகமான தேவ தூஷனம் ஒன்றும் இருக்க முடியாது!! சாவாமையுள்ள ஒரே தேவனை உங்களின் வார்த்தைகள் கொள்ளுகிறதே!!//
 
இயேசு மிகாவேல் என்ற புரட்டை விட கேவலமான புரட்டு ஒன்று இருக்கவே முடியாது. இயேசு தொழத்தக்கவர் அல்ல என்று சொல்லிவிட்டு கிருஸ்தவன் என்று சொல்லுபவனை விட பேயை வணங்கும்  சூனியக்காரனே வாசி. மொத்தம் 100 க்கும் மேற்ப்பட்ட மொழிபெயர்ப்புகள் வேதத்திற்கு உண்டு (சாத்தான் வேதமான NWT உட்பட) ஆகையால் எங்கே எவனாவது இயேசுவை தொழக்கூடாது என்று சொல்லியிருக்கிறானோ அவன் சொல்லுவதை நான் அப்படியே எடுத்துக்கொள்வேன் என்று சொல்லும் உங்களுக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை!  நீங்கள் இயேசு தொழத்தக்கவர் இல்லை என்று முடிவு செய்துவிட்டு எங்கெல்லாம் அதற்க்கு எதிர்மறையாக வேதம் சொல்லுகிறதோ அதையெல்லாம் உங்களுக்கு கேட்டை வருவிக்கும் படி வளைக்கிறீர்கள்.
 
//வல்லமையுள்ளவர், தேவதூதர்கள், தேவன் அனைத்திற்கும் எலோஹிம் பொருந்தும், ஆனால் இவை அனைத்திற்கும் யெகோவா என்கிற நாமத்தை உபயோகிக்க முடியாது!!//
 
யேகோவா என்ற நாமத்தை வேறு யாராவது உபயோகிக்கலாமா? இல்லை என்றால் கிழே உள்ள வசனத்தில் வருகிற கர்த்தர் (யேகோவா) யார்? 
  • உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. (ஏசாயா 6:1)
  • அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய (YHWH)  ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். (ஏசாயா 6:5)

 ஆதியாகமம் 18 அதிகாரத்தில் வருகிற கர்த்தர் (YHWH) ஆபிரகாமுடைய கனவில் வந்தாரா அல்லது நேரடியாக (Visible) வந்தாரா?

  • அப்பொழுது கர்த்தர் (YHWH) ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்? கர்த்தரால் ((YHWH)  ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்., (ஆதியாகமம் 18:13-14)


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
RE: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


பெரேயன்
 
 
//குத்தப்பட்டவர் கிறிஸ்து, குத்தியவர்கள் யூதர்கள், தேவனின் குமாரன் என்று தன்னை கிறிஸ்து சொன்னதை தேவ தூஷனமாக கருதியே அவரை சிலுவையில் அறைந்தனர், வரும் நாட்களில் அவர்களுக்கு கிறிஸ்து யார் என்று ராஜியத்தில் தெரியவரும் போது, சகரியா 12:10 நிறைவேறும்!! புரிகிறதா!!// 
 
கிழே உள்ள வசனத்தில் "குத்தின என்னை நோக்கிப் பார்த்து" ல் வருகிற "என்னை" யார்? கிறிஸ்துவா? எகோவாவா?
 
நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். (சகரியா 12:10)/

//இந்த இடத்தில் அநாதி நாட்கள் என்பதை அநாதியானவர் யார் என்று கேட்டு தன் வேத அறிவீனத்தையே வெளிப்படுத்துகிறார் ஜான்!! கிறிஸ்து என்னும் ராஜா அநாதி நாட்களான தேவ திட்டத்தின்படியே புறப்பட்டு வருவார்.......எது தீர்க்கதரிசனம், எது வசனம், எது கவிதை, யார் தேவன் என்று அறிவு இல்லாத வரை இது போல் இல்லை, இதை விட காமேடியான கேள்விகள் நிச்சயமாக எழும்பி கொண்டே இருக்கும்,//
 
எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. (மிகா 5:2)

But thou, Beth-lehem Ephrathah, which art little to be among the thousands of Judah, out of thee shall one come forth unto me that is to be ruler in Israel; whose goings forth are from of old, from everlasting  (Micah 5:2)

இங்கு அநாதி நாட்கள் தேவனுடைய திட்டத்தை குறிக்கிறதா? அல்லது இயேசு கிறிஸ்துவின் புறப்படுதல் (Origin, Starting)  அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது (from Everlasting) என்று குறிக்கிறதா?  ரசலை மறந்து விட்டு மறுபடியும் வாசியுங்கள்.

 

//ஒரே தேவன் பிதா என்றும் ஒரே கர்த்தர் இயேசு கிறிஸ்து என்று வசனத்தை நான் சொன்னால், அப்படி என்றால் தேவனாகிய கர்த்தர் யார் என்கிறீர்கள்!! உங்களிடம் இதற்கு பதில் இல்லை என்றும் இதற்கு பதில் தந்தால் திரித்துவம் என்கிற குப்பை போதனை பொய் என்றும் விளங்கிவிடும் என்கிற அச்சத்தில் பிசாசானவன் உங்களை கட்டி வைத்திருக்கிறான்!! //

Adonai என்று பழைய ஏற்பாட்டில் அழைக்கப்பட்ட கர்த்தர் யார்? இயேசு கிறிஸ்துவா? யேகோவா தேவனா? இதிலே உங்களுக்கு பதில் அடங்கி இருக்கிறது

 

//ஆதியாகமம் 32:30ல் தேவனை கண்டேன் என்று சொன்ன வசனம் யெகோவா தேவனை கண்டேன் என்று இல்லை!! இங்கே தேவன் என்கிற பதத்திற்கு உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தை ஏலோஹிம்!! யெகோவாவிற்கும் ஏலோஹிமிற்கும் வித்தியாசம் இருக்கிறது!!//

என்ன வித்தியாசம் என்று  விளக்குவீர்களா? யேகோவா என்பவர் ஏலோஹிம் இல்லையா? இங்கே பேசின தேவன் யேகோவா இல்லை என்றால் வேறு யார்?

//இருந்தும் தன்னையே லூசிஃபர் சொன்னது போல், தேவனுக்கு சமமாக சொல்லுவதை அல்லது தேவன் என்கிற அந்த உன்னதமான பதவியை திருட்டுத்தனமாக லூசிஃபரை போன்று பறித்து விட கிறிஸ்து என்னவில்லை என்றே வசனம் சொல்லுகிறது!! //

திரும்ப, திரும்ப ஜோசியம் சொல்லிகிற கிளி மாதிரி உளறிக்கொண்டு இருக்காமல் வசனத்தை படியுங்கள் நண்பரே. இங்கே லூசிபர் வரவே இல்லை. அவன் ஒரு தூதனாக, தேவனுக்கு கிழ் பட்டவனாக இருந்து அவருக்கு மேலாக வேண்டும் என்று நினைத்தான். இங்கே இயேசு கிறிஸ்து தேவனுக்கு சமமாய் (கிழே அல்ல) இருந்து  அடிமையின் ரூபம் (Human Incarnation) எடுத்தை என்று வாசிக்கிறோம். இதிலே என்ன உங்களுக்கு குழப்பம்?

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink Closed

 
//ஜான் அவர்கள் என்னிடம் இருந்து 'அசத்தலான" பதிலை எதிர்ப்பார்த்துக்கொண்டு இருக்கிறார்!! //
 
அசத்திடீங்க போங்க! இதுக்கு மேலே அசத்த என்ன இருக்கு. ரசல் மேல உங்களுக்கு இருக்கிற பாசத்தை பாத்து நாங்க எல்லாம் பூரிச்சு போய்ட்டோம்.
 
 
 
//தேவதூதனுக்கு கால் இருக்கிறது அவன் நடந்து வருவான், தேவதூதனுக்கு இறகு இருக்கிறது, ஆகவே அவன் பறந்து வருவான், போன்ற கதைகளில் மூழ்கியிருங்கள்!! ஏனென்றால் வசனம் வாசிக்க மாத்திரமே உங்களுக்கு தெரியும், அதை வியாக்கியானம் பண்ணும் அறிவு இன்னும் உங்களுக்கு இல்லை!! //
 
 
உங்க வியாக்கியானத்தை படிச்சு புல்லரிச்சு போய்டோம்'ங்கனா. உங்க அபரிமிதமான வேத(?) அறிவை கொண்டு ஏசாயா 6:2 எங்களுக்கு விளக்குனா உங்களுக்கு புண்ணியமா போய்விடும்'ங்கனா. அத்தோடு நீங்க எப்படி வேதத்தில் இருந்த தேவதூதர்களுக்கு கால் இல்லை என்கிற 'ரகசியத்தை' கண்டுபுடுச்சிங்க அப்படின்னு சொன்ன நாங்களும் உங்கள மாதிரி வேத (?) அறிவுல தேரிடுவோம்ல
 
 
 
//வானம் எனக்கு சிங்காசனம் பூமி எனக்கு பாதப்படி என்று இருப்பதால் தேவன் ஏதோ தன் காலை இந்த பூமியின் மேல் வைத்திருக்கிறார் என்று தானே சொல்வீர்கள்!! வசனத்தை அப்படியே வாசித்து அப்படியே அர்த்தம் சொல்லிக்கொண்டு போனால் பாதி வேதத்தில் குழப்பம் மாத்திரமே மிஞ்சும்!!//
 
நீங்கள் தான் நண்பரே ஒரே வசனத்தை (உண்மையில் வசனத்தின் பாதியை) வைத்து பிதா மாத்திரமே தேவன் இயேசு தேவனில்லை என்று சொல்லிக்கொண்டு திரிகிறீர்கள். இது வரை நான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முயற்சிக்க கூட இல்லை.
 
 
//வேதம் உங்களை விட எனக்கு முக்கியமே, அதிலிருந்து தானே கள்ளத்தனமான திரித்துவ உபதேசத்தையும் அதை போதித்து வரும் கள்ள கூட்டத்தையும் காண்பிக்க முடியும்!! வேத புத்தகத்தை விட ஒரு மனிதனின் போதனை என்னை எந்த விதத்திலும் கவர்ந்தது கிடையாது என்பதை என் பதிவுகள் தெளிவு படுத்தும்!!//
 
உங்கள் தெளிவைதான் பார்கிறோமே! ஒருவன் எவ்வளவு 'தெளிவாய்(?) இருந்தால்"சாத்தான் மட்டுமே நித்திய ஆக்கினைக்கு போவான்" , "தூதனுக்கு கால் இல்லை" எல்லாவற்றுக்கும் மேலாய் "இயேசுவை தொழக்கூடாது" என்று அவதுறு செய்வான்.


__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 63
Date:
Permalink Closed

நம்மை பற்றி மற்ற தளத்தில் நடைபெறும் கேவலமான சாட்சி 

அண்ணா நீங்களா இப்படி நம்பவே முடியல ?????????

 

மற்றவர்களை குறை சொல்லும் சில்சாம் சண்டை போட்ட நபர்களின் விவரம்

 

ஜான்சன் கென்னடி , அன்பு , இளங்கோ , சுந்தர் ,ஆபிரகாம் , ஆதாம், தினோ , கருணா , குரு , சகாயம் , நிசி மற்றும் பலர் கிறிஸ்தவத்தின் அன்பை நமது சகோதரர் சில்சாம் அவர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்

 

மேலும் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தில் காட்டு என்பது அவர்புரிந்து கொண்ட வேதம் போல ..................

நல்ல சாட்சி இவரெல்லாம் கிறிஸ்தவராம், அவர்களுக்கு இவர் கொடுத்த பட்டம், வேத புரட்டர்கள் , அந்திகிறிஸ்து , பாவிகள் , இன்னும் பல..................

 

என்ன கொடுமை சார் இது.......

 

http://lord.activeboard.com/forum.spark



__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...


__________________
தேவனிடத்தில் பட்சாபாதமில்லை...
ரோமர் 2;11


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


ஆத்துமாவின் உளறல்

இதில்லாமல் அற்புத ஊழியம், அக்கினி ஊழியம், முழங்கால் யுத்தம், இயேசு விடுவிக்கிறார், அதைச்செய்கிறார்; இதைச்செய்கிறார்  என்று மாய்மாலம் செய்து பிழைப்பு நடத்தும் ஊழியம்... இதையெல்லாம் சரி செய்து "மறுமலர்ச்சி" வர வேண்டுமானால் வைகோவையும் சேர்த்துக்கொள்.

கேள்விகேட்டால ரசலின்போதனைகளை அள்ளித்தெளிக்கும் ஆத்துமா அவனின் போதனை என்றே வாய்திறக்கமாட்டார். அவ்வளவு கூச்சம். ஏதோ தான் பெரிய வேத பண்டிதர் என நினைப்பு. இவரின் கி.பி. 3000000000000000  என்ற பதிவு மிகப் பிரபலமானது. தேவனை இவரை விட யாரும் அதிகமாக தூசித்திருக்க மாட்டார்கள். தலைப்பே இவர் எத்தகையவர் என சொல்லும். இவரிடமிருந்துதான் நாகரீகம் என்னவென்று கற்றக்கொள்ள வேண்டும் அந்த அளவு மரியாதையானவர். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


joseph wrote:

 

தேவ‌தூத‌னின் கால் விஷ‌ய‌த்தில் இப்ப‌ வ‌ரைக்கும் ஒரு ப‌திலையும் காணோம்!!!!!!!!!!!!!!!!


 

 இவர் பரலோகத்திற்கு விசிட் அடித்திருப்பார. அங்கு காலிலாத தேவதூதர்களை கண்டிப்பார. அன்பு அடுத்தவர் தேவன் அனைத்தையும் அறிந்திருந்தும் எல்லாவற்றையும் அறிய முற்படுவதில்லை என்று ஆண்டவரின் மனதையே படிப்பவர். எப்படிப்பட்ட கள்ளக் கூட்டம். போதக்குறைக்கு தன்னை எலியாகவும் யோவானாகவும் சித்திரிக்கிறார் பெரியன்ஸ். ரொம்ப நல்ல கூட்டணி. ரசலையை மிஞ்சிய சீடர்கள். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink Closed

 

தேவ‌தூத‌னின் கால் விஷ‌ய‌த்தில் இப்ப‌ வ‌ரைக்கும் ஒரு ப‌திலையும் காணோம்!!!!!!!!!!!!!!!!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink Closed

 //தாம் ஊழியர்கள் என்கிற போர்வையில் எத்துனை பேரை வஞ்சிக்கிறோம் என்கிற அச்சமே இல்லாமல் இருக்கும் ஒரு பெரிய கூட்டத்தார் மூலமாக தான் வஞ்சகம் உண்மையான சபையை பீறி போட்டதே தவிர, அற்புதம் எழுதுவது போல் ஏதோ ஒரு சிறிய கூட்டம் வஞ்சிக்காது, கிறிஸ்து இயேசு சொல்லுகிறபடி, அநேகர் வந்து அநேகரை வஞ்சிப்பார்கள்!!//

 

பெரியனின் உளறலை பாருங்கள். உங்களது குரு நாதர் ரசலை போன்ற கள்ள கிறிஸ்துகள் எழும்பி அனேகரை வஞ்சிப்பார்கள், என்னடா இது, ரசலை பற்றி மட்டும் சொல்கிறேனே என நினைக்கவேண்டாம், ரசலின் வரிசையில் அனேக கள்ளக்கிறிஸ்துகள் அனேகரை வஞ்சித்துக்கொண்டு தான் இருக்கீறார்கள். 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink Closed

soul solution wrote//குறுக்கீட்டுக்கு மன்னிக்கவும். கோவை பெரேயன்ஸ் என்று சுட்டிக்காட்டப்பட்டதால் வரவேண்டிய அவசியம்.

சபைகளில் தவறு இல்லை என்று சொல்லவில்லை என்று வைகோ ஒப்புக்கொண்டுள்ளார்.

போ போய் அதை முதலில் சரிசெய். எப்பவோ செத்துப்போன ரஸ்ஸல்பற்றி பேச உனக்குத் தகுதியில்லை.

வேசித்தனம் செய்யும் கத்தோலிக்கப் பாதிரிகள்; தசமபாகம் திருடி சொகுசுவாழ்வு வாழும் பெந்தெகொஸ்தே நாய்கள்;

மெயின் லைன் சபை என்று சொல்லிக்கொண்டு ஜாதிவாரி தொழில் நடத்தும் சி எஸ் ஐ, போன்ற அசிங்கங்கள்...

 

இதில்லாமல் அற்புத ஊழியம், அக்கினி ஊழியம், முழங்கால் யுத்தம், இயேசு விடுவிக்கிறார், அதைச்செய்கிறார்; இதைச்செய்கிறார்  என்று மாய்மாலம் செய்து பிழைப்பு நடத்தும் ஊழியம்... இதையெல்லாம் சரி செய்து "மறுமலர்ச்சி" வர வேண்டுமானால் வைகோவையும் சேர்த்துக்கொள்.

நாங்கள் பிளாட்பார்மிலேயே இருந்துவிட்டுப் போகிறோம். ஆள் சேர்க்க நினைப்பது உங்கள் பிச்சைக்கார ஊழியர்களே. ஆள் வந்தால்தானே பணம் வரும்.

மரணம் பற்றி விவாதிக்கத் துப்பில்லை, ரஸ்ஸலை விமரிசிக்கிராராம்

 

நல்ல காமெடி பீஸ். ரசிக்கலாம். சீரியஸாக எடுக்கவேண்டாம்.//

 

ஆத்தும கரைசல் மறுபடியும் ஆத்திரத்தில் பினாத்தியிருக்கிறது. ஆத்துமா இந்த கரைசலில் கரைந்து போகும் என்ற நினைப்பினால் தான் ஆத்தும கரைசல் எனும் பெயரோ? இவர்களது தகப்பனான ரசலை பற்றி பேசினதும் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது பாருங்கள். 

நீ நாய், என திட்டினாலும் பரவாயில்லை, நாயாகவே நாங்கள் இருந்துவிட்டு போகிறோம். நாய்க்கு எஜமான விசுவாசம் உண்டு. நாய் நன்றியுள்ளது. ஆத்தும (அஃதான் இல்லை என சொல்றியே) ரட்சிப்புக்காக தனது ரத்தத்தை சிந்தி தியாகம் செய்த இயேசு எனும் மெய்தேவனின் மீது  எஜமான் மீது பற்றுகொண்ட நாயைப்போன்றே இருந்துவிட்டு போகிறோம். விக்கிரக ஆராதனைக்காரியான யேசபேலது உடலை பீறிப்போடுவதற்கு நாய்களுக்கு தான் தேவன் கட்டளை கொடுத்தார்.

ஆனால் நீங்கள் மந்தயை தப்பவிடாத கொடிதான ஓநாய்கள், ஓநாய்க்கு எஜமான விசுவாசம் கிடையாது, ஓநாய் ரத்த வெறி பிடித்து அலையும் எதிர்ப்படும் அனைத்தையும் கடிக்கும், அதைத்தான் நீ செய்துகொண்டிருக்கிறாய். மூடனே, எரி நரகத்துக்கும் மரணத்துக்கும் அஞ்சி நடுங்கிய உங்களது தகப்பனான ரசலை போன்றே இருக்கிறாயே. அவன் நரகம் இல்லை என நம்பி, ஆத்துமா இல்லை என உன்னை நம்ப வைத்து காவற்கோபுரத்தின் உச்சிக்கு அழைத்து சென்று உங்களை கீழே தள்ளிக்கொண்டிருக்கிறான். 

நீ சொன்ன சபைகளில் எத்தனை எத்தனை மிஷனரிகள் எழும்பி இயேசுவின் அன்பை அறிவிக்க சென்று ரத்த சாட்சியாக மரித்திருக்கிறார்கள் தெரியுமா? உங்களுக்கு தான் அது பற்றி கவலையே இல்லையே. இயேசுவுக்காக உயிர்விடும் அளவுக்கு உங்களுக்கு அந்த மிஷனரிகளை போன்ற தைரியம் இருக்கிறதா? நீ தேவ ஊழியர்களையும் சபைகளையும் பற்றி சாட்டுகிற குற்றத்துக்கு உன்னை ரத்த சாட்சி ஊழியர்களின் ரத்தமே நீயாயந்தீர்க்கும். 

இயேசு விடுவிக்கிறார் தான், யார் இல்லை என மறுப்பது. மரணம் பற்றி அஞ்சி நடுங்கியதால் தான் உங்கள் தகப்பன் நரகம் இல்லை என உங்களை ஏமாற்றி வைத்திருக்கிறான், இதில் எங்களுக்கு துப்பில்லையாம்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink Closed

இப்படியெல்லாம் மடக்கி மடக்கி கேள்வி கேட்கப்படாது, நாங்க தான் கேள்வி கேட்போம், நீங்கள் பதில் சொல்லணும், மற்ற கேள்விக்கெல்லாம் பதில் இராஜ்யத்தில் தான் சொல்லப்படும், இந்த அறிவு முழுவதும் உங்களுக்கு இராஜ்யத்திலே மட்டுந்தான் விளக்கப்படும்; அதுவரை நீங்கள் இதையெல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு சிறுமந்தை(?)யான எங்கள் ஆராய்ச்சி கூட்டத்துக்கு வாருங்கள்; ஏனெனில் நீங்கள் இயேசுவை தெய்வமாகத் தொழும்வரை உங்களை எங்களால் வஞ்சிக்கவே முடியவில்லை; எனவே நீங்கள் உடனே செய்யவேண்டியது அவரை தூதன் என்று அறிக்கையிட்டு எங்கள் இரஸலின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு வந்தீர்களானால் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லுவோம்;

இராஜ்யம் வெளிப்பட்டதும் யாரும் யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டியதே இல்லை; ஏனெனில் அப்போது எல்லாமே வெட்ட வெளிச்சமாகிவிடும் அல்லவா? எப்படியிருக்கிறது நம்ம ஐடியா... போங்கய்யா... போங்க‌...



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

«First  <  1 2 3 4 5  >  Last»  | Page of 5  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard