Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


இந்த திரியானது எந்த பொருளும் இல்லாமல் நீண்டுகொண்டே போவதைத் தடுக்கும் எண்ணத்துடன் மூடப்படுகிறது; ஆனாலும் இந்த திரியின் உள்ளே சென்று வாசிக்கும் நண்பர்கள் இது சம்பந்தமாக சொல்ல விரும்பும் கருத்துக்களை பொருத்தமான மற்ற திரிகளிலோ அல்லது புதிய திரியை துவக்கியோ பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்; இன்னும் ஏதேனும் கருத்துகூற விரும்பும் நண்பர்கள் தனி மடல் அனுப்பலாம் அல்லது மின்னஞ்சல் அனுப்பலாம்; நன்றி.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
Permalink Closed

joseph wrote:
 ஒரு சிறு உதாரணம், ஒரு வெட்டவெளியில் மழை பெய்துகொண்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம் அப்போது ஒரு கோப்பையை தலை கீழாக கவிழ்த்து வைத்தால் அதில் ஒரு சொட்டு கூட நிறையாது, மழை பெய்வதென்னமோ உண்மை தான் அந்த கோப்பை வெளிப்புறமாக நனைவதென்னமோ உண்மைதான் ஆனால் கவிழ்க்கப்பட்ட அந்த கோப்பையானது உள்ளே உள்ள வெற்றிடமாக அப்படியே நிலைத்திருக்கும். நிரம்ப என்ன செய்யவேண்டும் அதை மழையை நோக்கி திருப்பவேண்டும், இப்போது கோப்பை நிறையும். இதே போல தான் மேசியாவின் எதிரிகள் வசனத்தால் தங்களை வெளிப்புறமாக நனைத்தாலும் உள்ளே வெறுமையோடு இருக்கின்றனர், அந்த மழை உள்ளே விழுந்து நிறைத்தால் தான் பாத்திரம் அல்லது கோப்பை நிரம்பும். ரட்சிப்பை பற்றி ஏட்டளவில் உணர்ந்துள்ள இவர்கள், இயேசுவை நோக்கி தங்களை திருப்பினால் மாத்திரமே ரட்சிப்பை உணர்வுபூர்வமாக அறிய முடியும்

 மிக சரியான உதாரணம்... ஆணி அடித்தாற்போல சொல்லி இருகிறீர்கள்.........



__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


பவுலும் சீலாவும் சிறையில் இருந்த போது துதித்து பாடினார்கள் கடைசியில் பூமியதிர்ச்சி வந்து சிறைக்கதவுகள் திறந்தது அப்போது தன்னைத்தானே மாய்த்துக்கொள்ள நினைத்த போது அவனை தடுத்தார்கள். அந்த நிகழ்வுகளால் தொடப்பட்ட அக்காவலன் ரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என கேட்டான். 

இதில் கவனிக்கவேண்டிய விஷயங்கள் சில உள்ளன‌

1) அந்த சிறைக்காவலன் ஒரு புறஜாதியான், அவனையும் பவுல், சீலாவின் சாட்சி தொட்டது

2) அவன் எப்படி சத்தியத்தை கேள்விப்பட்டான். பவுலும் சீலாவும் பாடல்களை பாடினார்கள், அப்பாடல்கள் நிச்சயம் இயேசுவின் சிலுவை பரிகார பலியை எடுத்துச்சொல்லியிருக்கும். சுவிஷேஷத்தை எந்த ரூபத்திலும் பிரஸ்தாபப்படுத்த தேவையில்லை என்ற கருத்து இதில் அடிபட்டு போகிறது

3) ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள ஆத்தும தாகம் அந்த காவலனின் கேள்வியாக வெளிப்படுகிறது, ரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும். இக்கேள்வியில் வாயிலாக ஒரு உண்மை புலப்படுகிறது, ரட்சிப்பு என்றால் பாவத்தில் இருந்து விடுதலை என்பதை அக்காவலன் உணர்ந்தான், தனது வாழ்க்கையை சீர்தூக்கி பார்த்த அவன் தான் மன்னித்து ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய நிலையில் இரு ந்ததை உணர்ந்தான். அதானால் கேட்ட கேள்வியே மேற்கண்டது.

4) இயேசு கிறிஸ்துவை விசுவாசி அப்போது நீயும் உன் வீட்டாரும் ரட்சிக்கப்படுவீர்கள் என்றனர் அப்போஸ்தலர்கள். இயேசுவை விசுவாசிக்கவேண்டும் என்ன விசுவாசிக்கவேண்டும், அவர் நமது பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார் என்பதை ஒருவன் விசுவாசிக்கவேண்டும் அவர் மூலமாகவே மீட்பு என்பதை விசுவாசிக்கவேண்டும், இந்த உணர்த்துதல் இல்லாமல் ஒருவன் ரட்சிப்படைய முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

ஆனால் மேசியாவின் எதிரிகள் சொல்வது என்ன, உலகத்தில் பிறந்த யாரும் இயேசுவை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதெல்லாம் இல்லை, அவரை விசுவாசிக்காமலே ரட்சிப்பு என்ற வேத புரட்டை எடுத்து வைக்கின்றனர். யோவான் 3:16 ல் ரட்சிப்புக்கான வழியை சொன்னபின்பும், இயேசுவை தெய்வமாக ஏற்கும் மனப்பான்மை இல்லாததால் அவரது மீட்பை அலட்சியப்படுத்துகிறார்கள். ஒவ்வொன்றுக்கும் மூல பாஷையை தேடியாகவேண்டும், அது என்ன மூல பாஷை என்பது இவர்கள் மட்டுமே அறிந்த ரகசியம், ஒருவேளை அப்போஸ்தலர்கள் எழுதியவை நேரடியாக இவர்கள் கையில் இருக்கிறதா என தெரியவில்லை.

இந்த ரட்சிப்பை குறித்த அசட்டையே இவர்களை பூட்டிய அறைக்குள் வேத ஆராய்ச்சி மட்டும் செய்ய ஏழுகிறது, அஃதாவது எவன் எந்த நிலையில் வாழ்ந்தாலும் அவனுக்கு ரட்சிப்பு கேரண்டியாம். ஒரு சிறு உதாரணம், ஒரு வெட்டவெளியில் மழை பெய்துகொண்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம் அப்போது ஒரு கோப்பையை தலை கீழாக கவிழ்த்து வைத்தால் அதில் ஒரு சொட்டு கூட நிறையாது, மழை பெய்வதென்னமோ உண்மை தான் அந்த கோப்பை வெளிப்புறமாக நனைவதென்னமோ உண்மைதான் ஆனால் கவிழ்க்கப்பட்ட அந்த கோப்பையானது உள்ளே உள்ள வெற்றிடமாக அப்படியே நிலைத்திருக்கும். நிரம்ப என்ன செய்யவேண்டும் அதை மழையை நோக்கி திருப்பவேண்டும், இப்போது கோப்பை நிறையும். இதே போல தான் மேசியாவின் எதிரிகள் வசனத்தால் தங்களை வெளிப்புறமாக நனைத்தாலும் உள்ளே வெறுமையோடு இருக்கின்றனர், அந்த மழை உள்ளே விழுந்து நிறைத்தால் தான் பாத்திரம் அல்லது கோப்பை நிரம்பும். ரட்சிப்பை பற்றி ஏட்டளவில் உணர்ந்துள்ள இவர்கள், இயேசுவை நோக்கி தங்களை திருப்பினால் மாத்திரமே ரட்சிப்பை உணர்வுபூர்வமாக அறிய முடியும் மாறாக இயேசு அனுப்பப்பட்டவர், மிகாவேல் தூதன், அவர் தொழத்தக்கவர் அல்ல என வசனங்களை தேடிக்கொண்டிருந்தால்......



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink Closed

பிரதான தூதனான மிகாவேல் தூதன் மோசேயின் சரீரத்தைகுறித்துப் பிசாசுடனே தர்க்கித்து பேசினபோது அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்றான் - யூதா 9ம் வசனம்

மேற்கண்ட வசனத்தில் மிகாவேல் பிசாசையே எதிர்த்து தர்க்கித்து பேசினபோதும் அவனை கர்த்தர் கடிந்து கொள்வாராக என்றான் மாறாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிசாசு தன்னை சோதித்த போது 3 முறை அவனை கடிந்துகொண்டார். இதிலிருந்தே இயேசு கிறிஸ்து மற்றும் மிகாவேல் தூதனின் அதிகாரங்கள் நமக்கு விளங்குகின்றன. 

biggrin இயேசுவும் மிகாவேல் தூதனும் ஒன்று என்று உளறுபவர்கள் இதை சிந்திக்கவேண்டும். biggrin



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
RE: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


 இல்ல பின்னாலே ரட்சிப்புக்குள்ள எப்படியும் போகப்போகிற ஒரு ஆத்துமாவை ஏன் ஆதாயம் செய்யவேண்டும்???



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink Closed

Soul solution//மறுபடியும் ஏ...யப்பா? ஆத்துமாக்கள் என்றால் என்னவென்றே தெரியாது, ஆதாயம் செய்கிறார்களாம். நாங்கள் ஒன்றும் பரிசுத்தவான் வேஷம் போட்டு அடுத்தவனைக் குழப்பி லோக்கல் சபைகளுக்கு ஆள் சேர்க்கும் மிஷனரிக் கூட்டம் அல்ல. அந்த அவசியமும் எங்களுக்கு இல்லை.//

ஆமாங்க செத்தவுடன் நேரே குழிக்கு (உங்க பாஷையில சொன்னா நரகத்துக்கு) போகும் ஆத்துமா பத்தி எங்களுக்கு ஒன்னும் தெரியாது, செத்துப்போன ஆபிரகாமின் தேவன், செத்துப்போன ஈசாக்கின் தேவன் செத்துப்போன யாக்கோபின் தேவன் என தேவன் செத்துப்போனவர்களுக்கு தேவனாய் இராமல் ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவன் என இறந்த பின்பும் இருக்கும் இஸ்ரவேலரின் முதுபெரும் முற்பிதாக்களின் தேவனாய் இருக்கிறார்.

ஆத்துமாக்களை ஆதாயம் செய்பவன் ஞானவான் என நீதிமொழிகளில் வருதே, குழிக்குள்ள போற ஒன்றை யாருக்காக எதற்காக ஆதாயம் செய்யவேண்டும்?

நீங்கள் லோக்கல் சபைகளுக்கு போயிட்டு இருக்கிற ஆட்களை உங்க நூதன உபதேசத்தால் கெடுத்திட்டிருக்கிறது காணாதாக்கும். 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink Closed

மேசியாவின் எதிரிகளுக்கும் நமக்கும் எப்போதுமே ஒத்துப்போகாது ஆனாலும் ஒரு அடிப்படை கேள்வி

ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது அந்த வார்த்தை தேவனாய் இருந்தது.. அப்புறம் கொஞ்சம் தள்ளி, வார்த்தை மாம்சமாகி என யோவான் எழுதின சுவிஷேஷத்தில் வருகிறது. தேவனிடத்தில் இருந்த வார்த்தை தேவனாய் இருந்து அப்புறம் மாம்சமாகி வெளிப்பட்டது. அப்புறம் எப்படி சார் இயேசுவை தெய்வம் அல்ல என்கிறீர்கள்?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink Closed

அண்ணாச்சி, ஏன் வீணா டென்ஸன் ஆகறீங்க‌...இதுங்க ராப்சரையே (rapture) நம்பாத ரப்சர் (rupture) பார்ட்டிங்க‌... இதுங்கள பொறுத்தவரைக்கும் இரண்டாவது வருகை (நடந்துவிட்டது...) என்பதே இவர்களுடைய உபதேசத்தை ஏற்றுக்கொள்ளுவது தான்; அதை நீங்கள் ஏற்றுக்கொண்டவுடன் மீண்டும் உயிர்த்தெழப்போகும் ஸ்பெஷல் லிஸ்ட்டில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுவிடும்;

ஆதாம் என்ற ஒரே ஒரு மனிதனுக்காக இயேசு எனப்பட்ட‌ ஒரே (தூதனாகிய மிகாவேல் மாம்சத்தில்...) மனுஷன் மரித்தார்;இதனால் ஆளாளுக்கு இயேசுவின் இரத்தத்துக்காக அலைபாயக்கூடாது; ஏனெனில் அது ஆதாமுக்காக சிந்தப்பட்ட இரத்தம் அல்லவா...இதுதான் மேட்டர்...

பீட்டர் இப்போ இருந்தா...போங்கடா நீங்களும் உங்க மார்க்கமும் என்று மீன்பிடிக்கப் போயிருப்பார்; அவர் வேற பாவம் தலைகீழா சிலுவையில் அறையப்பட்டு மரித்துவிட்டார்;

இந்த (ஓ)நாய்களுக்கு தூக்கு மாட்டிகிட்டு செத்த யூதாஸும் ஒண்ணு, இரத்த சாட்சியாக மரித்த பரிசுத்தவான்களும் ஒண்ணு;ஏன்னா, இரஸல் போதித்த யெகோவா அவ்வளவு பெரிய நியாயாதிபதியாம்..!

(அருமையான வாதம் உங்களுடையது ஆனாலும் இது அவர்களைப் பொறுத்தவரை செவிடன் காதில் ஊதின சங்காகும்;ஆனால் எந்த உரிமையில் காதுள்ளவன்  (எதை..?) கேட்கக்கடவன் என்று சொல்லுகிறார்களோ..?)

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


பதில் தெரியாத கேள்விகள்

தேவன் இஸ்ரவேல் ஜனத்தை கூட்டிக்கொண்டு எகிப்தில் இருந்து கானான் நோக்கி மோசேயை வரச்சொன்னார், அதுபோக ஒரு தகப்பன் தன் பிள்ளையை சுமந்து கொண்டு வருவது போல கொண்டு வந்தேன் என்றார். 6 லட்சத்திற்கும் அதிகமான ஜனங்களை அடிமைத்தன நுகத்தில் இருந்து கானான் நோக்கி நடத்தி வர தேவன் சித்தமாய் தான் இருந்தார். ஏன் ஆபிரகாமுக்கு வாக்குப்பண்ணின தேவன் என்ன சொன்னார் உன் சந்ததியார் அன்னிய தேசத்திலே அடிமைத்தனத்தில் கிடப்பார்கள் மறுபடியும் திரும்ப வருவார்கள் என்று சொன்னார்.

எல்லாரும் வந்தார்களா?

கடைசியில் தேறினது இரண்டே பேர் தான்... அப்ப தேவன் சொன்னது என்ன ஆச்சு, அனைவருக்கும் ரட்சிப்பு என்பவர்கள் இதை யோசிக்கவேண்டும். தேவன் எதிர்பார்க்கும் தன்மைகள் நமக்கு இருக்கவேண்டும்,  கனிகொடாத மரத்தை அக்கினியில் சுட்டெரிப்பேன் என்கிறார் ஆண்டவர். 

தனது சுய சித்தத்தால் பாவத்தை ருசித்த ஆதி மனிதனான ஆதாமும் ஆதி மனுஷியான ஏவாளும் உலகத்துக்குள் பாவத்தை நுழையச்செய்தனர், தேவன் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை; மாறாக அந்த கனியை குறித்து எச்சரிப்பு தான் செய்தார், அதே போல தனது குமாரனான இயேசுவின் மூலமாக மீட்பின் திட்டத்தை வைத்துள்ள ஆண்டவர் அந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் உரிமையை மனிதனிடமே கொடுத்துள்ளார்.

இடுக்கமான வாசல் வழியாக பிரவேசிப்பவர்கள் சிலர் என்கிறது வேதம். மாறாக அனைவருக்காகவும், ஏன் பாவத்திலேயே விழுந்து கிடந்து செத்தவனுக்கும் ரட்சிப்பு என்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது, யார் யார் பரலோக ராஜியத்தில் பிரவேசிக்க மாட்டார்கள் என்ற லிஸ்டையே பைபிளில் ஆண்டவர் கொடுத்துள்ளார் ஆனால் (மேசியாவின்) எதிரிகள் எந்த மொள்ளமாறியும் கேப்மாறியும் அப்படியே மொள்ளமாறித்தனத்திலேயே செத்துப்போனாலும் அவர்களுக்கும் மீட்பு உண்டு என்கின்றனர். செத்ததுக்கு அப்புறம் என்ன மீட்பு என்று தான் தெரியவில்லை.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink Closed

Soulsolution:

//"விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களை சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள் அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்" மாற்கு16:17,18.

மாற்கு 16ல் 9ம்வசனம் முதல் 20 வரையுள்ள வசனங்கள் மிகவும் பழமையான மூலப்பிரதிகளில் இல்லை. ஆக இது மனிதனால் சேர்க்கப்பட்ட வசனங்கள் ஆகும்.

இதை சேர்த்து எழுதிய நபர் அப் பவுலுக்கு நடந்த சம்பவங்களைக் கேள்விப்பட்டிருக்க வேண்டும் (அப் 28:4,5,6). இன்னும் கொஞ்சம் 'பில்டப்' கொடுத்து சுவாரசியமானதாக முடிக்க முடிவு செய்திருப்பார் போலும். 

வேதத்தை ஆராய்ச்சி செய்ய விரும்பாத அறிவிலிகள் இதையும் 'வேதவாக்காக' எடுத்துக்கொண்டு அரையும் குறையுமாக இவ்வசனங்களைக் கையாளுவார்கள்.

இவ்வசனங்களை அப்படியே நம்பும்பட்சம், இதில் ஒன்றையாவது செய்யாதவன் அவிசுவாசி என்று முடிவு செய்யலாமா? பிசாசுகளை நம்மூர் பூசாரி துரத்துகிறான், நவமான பாஷைகளை பேசுகிறேன் என்று பிதற்றும் கூட்டம் ஏராளம், சர்ப்பங்களை இடும்பர் என்ற சாதியில் ஒரு தொழிலாகவே எடுக்கிறார்கள், சாவுக்கேதுவானவைகளைக் (கோக், பெப்ஸி, மதுபானங்கள், ஏன் விஷத்தையே) குடித்தும் தப்புகிறார்கள். வியாதியஸ்தர் மேல் கைவைத்து சுகமாக்கும் முறைதான் தொடு வர்மம். அக்கு பிரஷர் வைத்தியம்.... ஆக இவர்களெல்லாரும் விசுவாசிளோ?

என்ன முட்டாள்தனம். இந்த வசனங்களுக்கு இந்தக் கிறிஸ்தவம் என்ன விளக்கம் கொடுக்கிறது? இந்த சம்பவங்கள் இன்று யாருக்காவது அப்படியே நடக்கிறதா? இவைகளை நடப்பிக்காதவர்களை அவிசுவாசி என்று முடிவு செய்யலாமா?

யோசி கிறிஸ்தவமூட ஜனமே.... யோசி.//

எப்ப‌டி உங்க‌ வேதாக‌ம‌த்தில‌ மாற்கு க‌டைசி அதிகார‌த்தை அப்ப‌டியே பாதியா க‌ட் ப‌ண்ணிட்டிய‌ளா இல்ல‌ ஒயிட்ன‌ர் போட்டு அழிச்சிட்டிய‌ளா? பார்வோனின் மந்திர‌வாதிக‌ளும் கோல்க‌ளை கொண்டு ச‌ர்ப்ப‌ங்க‌ளை உருவாக்கினார்க‌ள், அவ‌ர்க‌ளும் ந‌தியை ர‌த்த‌மாக்கினார்க‌ள் ஆனால் க‌டைசியில் என்ன‌ ஆன‌து, போயும் போயும் மந்திர‌வாதிக‌ளுக்கு கிறிஸ்த‌வ‌ர்க‌ளை ஒப்பிடுகிறாய் என்ன‌ ம‌தியீன‌ம் என்ன‌ மூட‌த்த‌ன‌ம், இது போன்ற‌ துன்ப‌ங்க‌ளுக்கு ஆளாகி பிழைக்கும் கிறிஸ்த‌வ‌ர்க‌ள் உன‌க்கு நேரா வ‌ந்து ரிப்போர்ட் பண்ணனுமா?

ப‌வுல் அப்போஸ்த‌ல‌னை சாவுக்கேதுவான‌ பூச்சி ஒன்று க‌டித்தும் அதை உத‌றிப்போட்டுக்கொண்டு போயிட்டே இருந்தார், திவ்ய‌ வாச‌க‌னான‌ யோவானை எண்ணெய் கொப்ப‌ரையில் போட்ட‌ப்புற‌மும் அவ‌ர் சாக‌வில்லை, ஏன் நீங்க‌ ஆராய்ச்சி செய்யிற‌ பைபிளிலெ தானே சிங்க‌கெபியில் போட‌ப்ப‌ட்ட‌ தானியேல் வ‌ர‌லாறும் வ‌ருது, சூளையில‌ போட‌ப்ப‌ட்ட‌ வாலிப‌ர் மூவ‌ர் க‌தையும் வ‌ருது, அப்போ த‌ப்புவிக்க‌வ‌ல்ல‌ தேவ‌னால‌ இப்ப‌வும் த‌ப்புவிக்க‌ முடியாதா? 

அன்று ந‌ட‌ ந்த‌து இப்போ ந‌ட‌க்க‌ல‌ன்னு சொன்னா அப்ப‌டியே பைபிளை தூக்கி போட்டுட்டு போயிட்டே இரு, எதுக்கு ஆராய்ச்சி ப‌ண்ணுர‌. எப்ப‌வோ ந‌ட‌ ந்த‌தை குறிப்பாக‌ வைத்திருக்கும் புத்த‌க‌த்தை இனிமே ஆராய்ச்சி ப‌ண்ணாதே, ஒருவேளை அப்ப‌டியெல்லாம் ந‌ட‌க்கும் என‌ ந‌ம்பினால் பேசாம‌ வாய‌ மூடிட்டு இரு.

சுவிஷேஷ‌த்தை ந‌ம்பிய‌தால‌ த‌ன் த‌க‌ப்ப‌னாரால் சாப்பாட்டில் விஷ‌ம் வைக்க‌ப்ப‌ட்டும் உயிரோடு பிழைத்த‌ சாது சுந்த‌ர் சிங், அனைவ‌ரும் அறி ந்த‌ ஒரு உதார‌ண‌மே (இத‌ எப்ப‌டியும் நீ ந‌ம்ப‌மாட்ட‌, ஆனா சொல்வ‌து என் க‌ட‌மை)


-- Edited by joseph on Friday 10th of June 2011 04:19:07 PM



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


joseph wrote:

Soul's Blessing//பிதாவாகிய தேவனுடைய அன்பும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையும், சத்திய ஆவியினாலுண்டாகும் சமாதானமும் நம் அனைவரோடும் இருப்பதாக‌!//

பிதாவாகிய தேவனுடைய அன்பு


இன்னும் கொஞ்ச‌ம் கீழே

.

.

.

.

இயேசுகிறிஸ்துவின் கிருபை


அப்புற‌ம்


கீழே

கீழே....


ச‌த்திய‌ ஆவியினாலுண்டாகும் ச‌மாதான‌ம் 


இப்ப‌டி தான் இருக்கும் இவ‌ர்க‌ளின் ஆசீர்வாத‌ம். இவுக‌ கொள்கைப்ப‌டி பாத்தா அன்பு, கிருபை, ச‌மாதான‌ம் என்ற‌ மூன்று த‌ன்மைக‌ளும் வெவ்வேறு ஊற்றுக‌ளில் இருன்து வ‌ருவ‌தால் இம்மூன்றும் ஒன்றாயிருக்க‌வே முடியாது. என்னே விசித்திர‌ம்

 


 அண்ணாச்சி நீங்க எங்கயோ போயிட்டீங்க‌...இந்த விளையாட்டுக்கு நான் வரலை..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


Soul's Blessing//பிதாவாகிய தேவனுடைய அன்பும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையும், சத்திய ஆவியினாலுண்டாகும் சமாதானமும் நம் அனைவரோடும் இருப்பதாக‌!//

பிதாவாகிய தேவனுடைய அன்பு


இன்னும் கொஞ்ச‌ம் கீழே

.

.

.

.

இயேசுகிறிஸ்துவின் கிருபை


அப்புற‌ம்


கீழே

கீழே....


ச‌த்திய‌ ஆவியினாலுண்டாகும் ச‌மாதான‌ம் 


இப்ப‌டி தான் இருக்கும் இவ‌ர்க‌ளின் ஆசீர்வாத‌ம். இவுக‌ கொள்கைப்ப‌டி பாத்தா அன்பு, கிருபை, ச‌மாதான‌ம் என்ற‌ மூன்று த‌ன்மைக‌ளும் வெவ்வேறு ஊற்றுக‌ளில் இருன்து வ‌ருவ‌தால் இம்மூன்றும் ஒன்றாயிருக்க‌வே முடியாது. என்னே விசித்திர‌ம்

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


joseph wrote:

Soul solution //ஏன் தமிழில் வேதம் வரும்முன்னும், வந்தபின்னரும் அதைப்பற்றித் தெரியாமலேயே செத்துப்போன உன் சொந்த பாட்டன், பூட்டனெல்லாமே அலகு குத்தி, விக்ரக கோயிலில் ஆடவே இல்லை என்று சொல்ல தைரியம் இருக்கா... 

வந்தபின்னும் இன்னும்தானே ஆடிக்கிட்டு இருக்காங்க, நீ என்னத்த செஞ்சு கிழிச்சு அத நிப்பாட்டப்போறே?

 

நீங்க வேதம் படித்து சுவிசேஷம் சொல்லி பரலோகத்துக்கு எத்தனை பேரைத் தகுதியாக்கிட்டு வர்ரீங்கன்னு தேவனுக்குத் தெரியும். 

அந்தக் கோவில் வாசலில்வரும் நாய்களை அதே செருப்பால் அடித்து விரட்டியுமிருப்பார்.

நாய் என்று சொன்னது உங்களை அல்ல‌...//

 

என் பாட்டன் பூட்டன் எல்லாம் இந்த சத்தியம் தெரியாம போய் சேர்ந்தவங்க என்பதை சொல்றதுக்கு எனக்கு தயக்கம் இல்லை. வந்தபின்னும் ஆடிட்டு இருக்குறாங்க என்பதை பக்கத்தில் இருந்து பாத்தியா? ரொம்ப பேசாத‌

ஏன் பூட்டிய வீட்டில் வேத ஆராய்ச்சீசீசீ பண்ணி எத்தனை பேரை நீங்க தகுதியாக்கிட்டு இருக்கிறீங்க (ஓ சாரி, உங்க கணக்குப்படி யாரையும் ஆதாயப்படுத்த தேவையில்லை ல்ல, இங்க பிறந்தாலே பரலோக ராஜ்யத்துக்கு தகுதியானவங்க ஆயிடுவாங்க‍, அஃதாவது திறந்த வீட்டில நாய் நுழையிறமாதிரி, ‍ நானும் நாய்ன்னு உங்களை சொல்லல‌)

 

 


இந்த மூடனுடன் பேசாதிருப்பதே நல்லது. தனக்குதானே ஆத்துமதீர்வு என வைத்து தன்னை தேவன் அளவுக்கு உயர்த்தும்  இந்த மூடனுடன் பேசினால் நாம் தாம் தரம் தாழ்ந்து போவோம்.  இவனைப் பொறுத்தவரை வியாபார மோசடி, செக்ஸ் குற்றாட்டுகள், கள்ளத்தீர்க்கதரிசனங்கள் உரைக்கும் யெகோவா சாட்சிகள் உயர்ந்தவர்கள். ஏனென்றால் இவனும் அப்படித்தான் பன்றி பன்றியுடன்தானே சேரும். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink Closed

வேத புரட்டர்களை அடித்து நொறுக்கிகொண்டிருக்கும் வீரர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.

அசோக்



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink Closed

Soul solution //ஏன் தமிழில் வேதம் வரும்முன்னும், வந்தபின்னரும் அதைப்பற்றித் தெரியாமலேயே செத்துப்போன உன் சொந்த பாட்டன், பூட்டனெல்லாமே அலகு குத்தி, விக்ரக கோயிலில் ஆடவே இல்லை என்று சொல்ல தைரியம் இருக்கா... 

வந்தபின்னும் இன்னும்தானே ஆடிக்கிட்டு இருக்காங்க, நீ என்னத்த செஞ்சு கிழிச்சு அத நிப்பாட்டப்போறே?

 

நீங்க வேதம் படித்து சுவிசேஷம் சொல்லி பரலோகத்துக்கு எத்தனை பேரைத் தகுதியாக்கிட்டு வர்ரீங்கன்னு தேவனுக்குத் தெரியும். 

அந்தக் கோவில் வாசலில்வரும் நாய்களை அதே செருப்பால் அடித்து விரட்டியுமிருப்பார்.

நாய் என்று சொன்னது உங்களை அல்ல‌...//

 

என் பாட்டன் பூட்டன் எல்லாம் இந்த சத்தியம் தெரியாம போய் சேர்ந்தவங்க என்பதை சொல்றதுக்கு எனக்கு தயக்கம் இல்லை. வந்தபின்னும் ஆடிட்டு இருக்குறாங்க என்பதை பக்கத்தில் இருந்து பாத்தியா? ரொம்ப பேசாத‌

ஏன் பூட்டிய வீட்டில் வேத ஆராய்ச்சீசீசீ பண்ணி எத்தனை பேரை நீங்க தகுதியாக்கிட்டு இருக்கிறீங்க (ஓ சாரி, உங்க கணக்குப்படி யாரையும் ஆதாயப்படுத்த தேவையில்லை ல்ல, இங்க பிறந்தாலே பரலோக ராஜ்யத்துக்கு தகுதியானவங்க ஆயிடுவாங்க‍, அஃதாவது திறந்த வீட்டில நாய் நுழையிறமாதிரி, ‍ நானும் நாய்ன்னு உங்களை சொல்லல‌)

 

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


// அங்க சுத்தி இங்க சுத்தி இயேசுவை ரட்சிக்க திராணி இல்லாதவர் என்ற சொல்லும் ரேஞ்ச்சுக்கு உங்கள் ஏரியன் பித்து எல்லை மீறி போயிருக்கிறது. //

அடப்பாவிகளா? உங்களுக்கே இது அடுக்குமா? எங்கள் தளத்தின் பதிவுகளனைத்திலும் இயேசுகிறிஸ்துவின் மூலமாக முழு மனுக்குலமும் (ஒரு ஆள் பாக்கியில்லாமல்) இரட்சிக்கப்படுவார்கள், எல்லாரும் உயிர்த்தெழுந்து நித்திய ஜீவனை அடைவார்கள் என்றுதானே ஆதிமுதல் சொல்லிவருகிறோம்.//மாறாக நீங்கள்தான் அவரால் எல்லாரையும் இரட்சிக்கவேமுடியாது. இரட்சிப்பு தேவன் கையிலோ, கிறிஸ்துவின் கையிலோ கிடையாது அது தனி மனிதன் கையில் உள்ளது. ஆகவேதான் கொஞ்ம்பேர் மட்டும் பரலோகத்துக்கும் மற்றவர்கள் எல்லாருமே நரகத்துக்குப் போவார்கள் என்று சொல்லி தேவனையும் கிறிஸ்துவையும் இரட்சிக்கத் திராணியற்றவர்களாகக் காண்பித்துக்கொண்டு,

தேவதூஷணம் சொல்வது நீங்களா நாங்களா?

ஒரு விஷயம் பதிக்கும்முன் யோசிக்கவே மாட்டீர்களா? அல்லது

தளத்துக்கு வருபவர்களை முழு முட்டாள்கள் என்று எண்ணுகிறீர்களா.....

இப்படி மூடத்தனமாய் எழுத ஒரு ஆள் அதைப் பாராட்ட ஒரு பன்னாடை.... திட்டாம என்ன செய்றது?//

கோட் சூட் ம‌ட்டும் போட்டுக்கிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தா ம‌ட்டும் ப‌த்தாது, ஒழுங்கா நாக‌ரீக‌மா விவாத‌ம் ப‌ண்ண‌ தெரிய‌னும் தெரிந்துகொள்ளுங்கள். என‌து க‌ணிணியிலும் இதே மாதிரி டைப் ப‌ண்ண‌ முடியும் இல்லை உன்ன‌ள‌வுக்கு ம‌ட்ட‌மா எழுத‌வும் முடியும், கூடிய‌ ம‌ட்டும் உன்னிட‌ம் விவாத‌ம் ப‌ண்ண‌ அடிப்ப‌டை ம‌ரியாதையை தான் கொடுத்திட்டு வ‌ர்றேன். தேவையில்லாம‌ ம‌ரியாதையை கெடுத்துக்காதே. திட்டுவ‌த‌ற்கு என‌க்கும் தெரியும். 

உங்க‌ளை பொறுத்த‌வரை, இந்த‌ உல‌க‌த்தில் பிற‌ந்தாலே இர‌ட்சிக்க‌ப்ப‌ட்டு விடுவார்க‌ள், அவ‌ர்க‌ள் எப்ப‌டி இருந்தாலும் ப‌ர‌வாயில்லை, சூப்ப‌ர‌ப்பு. இப்படியே மெயின்டைய்ன் பண்ணுங்க, அப்ப கிறிஸ்துவின் ரத்தம் சிந்துதலுக்கு என்ன மதிப்பு வைத்திருக்கிறீர்கள். 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink Closed

என்னுடைய கடைசி பதிவுக்கும் சில கேள்விகளுக்கும் நேர்த்தியாக,நேரடியான பதில் கொடுத்த நபர் பெரேயனுக்கும்.  சோல்சொல்யுசன் அவர்களுக்கும் நன்றி!!

 இதே பானியில் தொடர்ந்தால் இரு தரப்புக்கும் நலமாகவும் , சத்தியத்தை யாருடைய பாதிப்பும் இல்லாமல் அறிந்து கொள்ள எதுவாக இருக்கும்.

தேவனுடைய நியமனம் என்பது உண்மைதான் ஆனால் தேவன் யாரை நித்திய ஆக்கினைக்கும் , யாரை நித்திய ஜீவனுக்கும் நியமித்து இருக்கிறார் என்பது நமக்கு தெரியாததால் எல்லாருக்கும் சுவிசேஷம் சொல்லுதல் அவசியம். Please Keep it up...



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


அண்ணாச்சி இந்த திரி இப்படி நீண்டுகொண்டே போகிறதே... நீங்களாவது இதை கட் பண்ணி தனி திரி துவங்கக்கூடாதா..? குறிப்பாக இந்த பின்னூட்டத்தை மட்டுமாவது மல்டி லெவல் மோசடியாளன் திரியில் பதிக்கலாமே..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


//ஆனால் இந்த முட்டாள் 'மிஷனரி'கள் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்து மலைவாழ் பழங்குடியினரிடம் பழகி, (பாஷையே தெரியாது) அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பை விளக்கிச்சொல்லி, பவுல் ரேஞ்சுக்கு அவர்களை உருவாக்கி அவர்களை பரலோகத்துக்குத் தகுதியாக்குவார்கள். அவன் பாட்டன், முப்பாட்டன், பூட்டனெல்லாம் விஷயமே தெரியாமல் செத்துட்டான்களே அவர்கள் கதி என்ன என்று கேட்டால்...//

மிஷனரிகளின் தியாகத்தை மறுபடியும் மறுபடியும் கொச்சை படுத்தி வருகிறீர். சரி நான் அப்போது கேட்ட கேள்வியையே திரும்பவும் கேட்கிறேன், மிஷனரிகள் வராமல் போயிருந்தால் இப்படி வக்கனையாக கேள்வி கேட்டுக்கொண்டிருந்திருப்பீரா, மிஷனரிகள் முட்டாள்களாம் என்ன நன்றிகெட்டதனமான பேச்சு. இயேசு கிறிஸ்துவின் அன்பை அறிவிப்பது உங்களை போன்றோருக்கு கசப்பாக தான் இருக்கும். அவர்களது பாட்டன் முப்பாட்டன் பத்தியெல்லாம் ரொம்ப கவலையாக்கும், சரி அவர்கள் என்னவாகியிருப்பார்கள்?

வசனங்கள் அந்தந்த காலகட்டத்தில் சொல்லப்பட்டது என்பதால் அது இப்போது வீணானதா? இதைபோல பெரிய தூஷணம் வேறு இருக்க முடியாது. மிஷனரி ஊழியம் பைபிளில் இல்லை (?) என்கிறீர், அப்போ மல்டி லெவல் மார்க்கெட்டிங் வேலை மட்டும் பைபிளில் இருக்குதோ?

மிஷனரி வேலை மதிகேடான செயல் என மதிகேடன் தான் சொல்லுவான்.

ரோமர் 10: 14,15 வசனங்களை வாசித்து பாரும், இல்லை இதற்கும் வேறு விளக்கம் தானே வைத்திருப்பீர்கள்

 //மிஷனரி ஊழியம் அத்தனை உயர்வானதாகத் தெரிந்தால் போகவேண்டியதுதானே, யாராவது தடுத்தார்களா? இல்லை 'அழைப்பு' வரவில்லையா? எங்களைப் பொறுத்தவரை எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

 மூளைச் சலவை செய்து அனுப்புவதுதான் மிஷனரி ஊழியம். பெரும்பாலும் பரிதாபத்துக்குரிய, பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியுள்ளவர்களைத்தான் இப்படி ஊர் விட்டு ஊர் அனுப்புவார்கள்.//

இது அடுத்த பகடியாளர், உங்களுக்கெல்லாம் பூட்டிய ரூமில் உட்கார்ந்து வேத ஆராய்ச்சி (?) செய்தால் மட்டும் போதும் மிஷனரி ஊழியம் உயர்வானது தான், எல்லாம் ஒரே குளத்தில் ஊறிய மட்டைகள் என சர்டிபிகேட் தர நீர் ஒன்னும் அகில உலக கிறிஸ்தவ அதாரிட்டி அல்ல. மூளைச்சலவை உங்களை விட அதிகமாக யாரும் செய்வதில்லை. சலவை செய்து விசுவாசிகளை கேட்டின் மகனாக்குகிறீர்கள். நல்ல நிலையில் இருந்தும் மிஷனரி ஊழியம் சென்ற உதாரணங்களை காட்டட்டுமா? சும்மா ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது. பரிதாபத்துக்குரியவர்கள் தான் ஆம், உலக பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்களுக்கு மிஷனரி தாகம் அற்பமானதாகத்தான் தெரியும். 

மறுபடியும் கேட்கிறேன், அன்றைக்கு பாரத பூமிக்கு மிஷனரிகள் வராமல் போயிருந்தால் என்னவாகியிருப்பீர்கள், கொஞ்சமாவது நன்றியுணர்ச்சி வேண்டுமய்யா. இதை பற்றி நினைப்பவன் மிஷனரி ஊழியம் பற்றி பகடி செய்யமாட்டான்.

உங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்- காரனுக்கும் இந்த வகையில் பெரிய வித்தியாசம் இல்லை.

 //படிப்பறிவில்லாதவர்களுக்கும், பாஷையே இல்லாத பழங்குடியினருக்கும், கிராமங்களுக்கும்போய் யாரும் சுவிசேஷம் சொல்லவில்லை. ஏனென்றால் வேதம் வாக்கியங்களை வாசித்தறியாமல் ஒருவனும் தேவதிட்டங்களை புரிந்துகொள்ளவே முடியாது என்பது அப்போஸ்தலருக்குத் தெரியும்.//

 இது என்ன புது கண்டுபிடிப்பு. நீங்க ரொம்ப சரியா தான் தேவ திட்டங்களை புரிந்து வச்சுருக்கீங்க போல. அன்னைக்கு வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியாத (படிப்பறிவு இருந்திருக்குமா?) நினிவே மக்களுக்காக பழைய ஏற்பாட்டு காலத்திலேயே பரிதாபப்பட்டார் ஆண்டவர். உங்களுக்கு தான் பரிதாப உணர்ச்சி வரவில்லை போலும்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


யௌவன ஜனம் ஒரே வருடத்தில் (மேசியாவின்) எதிரிகளை எவ்வளவு தெளிவாகப் பேசவைத்திருக்கிறோம் பார்த்தீர்களா, இவிங்க இதுக்கு முன்னே இவ்வளவு விலாவாரியாகப் பேசியதேயில்லை, ஒருத்தனை வீழ்த்தற வரைக்கும், மூடிமறைத்து மர்மமாகவே பேசுவாங்க...கேள்விகளாகவே கேட்பாங்க‌...இப்ப நாங்க அவங்கள பதில் சொல்லவைத்திருக்கிறோம்... விசாரணை நடக்கிறது... விரைவில் விலங்கு மாட்டுவோம்... இதுவே யௌவன ஜனம் தளத்தின் சாதனையாகும்; நாங்கள் இவர்களுக்கு விளம்பரம் கொடுக்கவில்லை, இவர்களுடைய முகத்திரையை கிழித்திருக்கிறோம் என்பதை தமிழ் கிறித்தவர்கள் விரைவில் உணர்ந்துகொள்ளுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்..!

 

lib_avtr_210.gif

 

Moderator
orangestar.giforangestar.giforangestar.gif

 

Status: Offline
Posts: 1224
Date: 22:29:10 Jun 8, 2011
  

ஜான்:
//இதை..இதை..இதைதான் எதிர்பார்த்தேன்! அது விபச்சாரம் இல்லையா? இப்போ சொல்லுங்க சபையின் மணவாளன் கிறிஸ்துவா (மிகாவேல் தூதனா) அல்லது பிதாவா? ஒழுங்கா சொல்லணும் மழுப்பக்கூடாது ஒகே வா?//

சபை, கிறிஸ்து பூமிக்கு மாம்சத்தில் வரும் முன் வரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை!! மாம்சத்தில் வந்தவுடனோ அல்லது மாம்சத்தில் வருவதற்கு முன்போ கிறிஸ்து சபைக்கு மணவாளனாக இருந்ததில்லை!! மணவாளன் என்பதும் ஒரு பதவி இல்லை ஒரு ஒப்பீடு!! யாரும் கிறிஸ்துவை போய் திருமனம் செய்துக்கொள்ள போவதில்லை!!

தேவனின் முதன் சிருஷ்டியான கிறிஸ்து இருந்த நிலை ஆவிக்குறிய ஜீவியான தேவனின் லோகாஸ்ஸாக!! அவருக்கு உண்டான பெயர் தான் "மிகாஹேல்"!! மிகாஹேல் என்றால் "தேவனின் தற்சொரூபமானவர்"!! Who is like God!! that's it!! It doesn't mean Who is God!! God in the sense of Supreme God and not god!!

கிறிஸ்துவை குறித்தும் இதுவே தான் சொல்லப்பட்டிருக்கிறது:

கொலோசெயர் 1:15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும்,

அவர் அதரிசனமான தேவன் கிடையாது, மாறாக அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம்!! தேவன் என்பதற்கு அர்த்தங்கள் பல உறை சொல்லியாயிற்று!! இந்த அர்த்தத்தில் மாத்திரமே அவர் மிகாஹேல் என்று சொல்லுகிறோம்!! நேரடியாக எங்கேயும் தேவனின் முதற் சிருஷ்டி மிகாஹேல் தூதன் என்று இல்லை!! அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம் என்பதால் தான் கிறிஸ்து மாம்சத்தில் வரும் முன் ஆவி ரூபியாக இருக்கும் போது இருந்த நிலை அல்லது பெயர் தான் மிகாஹேல்!! பழைய ஏற்பாட்டில் கிறிஸ்து மாம்சத்தில் இல்லை, ஆனால் கர்த்தரின் தூதனானவர் என்கிற நபரை குறித்து பல இடங்களில் உள்ளது!! யார் அந்த தூதனானவர்!! கிறிஸ்துவே மாம்சத்தில் வரும் முன் கர்த்தரின் தூதனானவர்!! இது கிறிஸ்து மாம்சத்தில் வரும் முன் உள்ள நிலை!!

அவர் மாம்சத்தில் "இயேசுவாக" அனுப்பப்படார்!! அவர் சுயமாக வரவில்லை, பிதாவிற்கு கீழ்ப்படிந்து இருந்ததினால் பூமிக்கு வந்தார்!!

எபிரெயர் 10:5 ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்;

கிறிஸ்து தன் ஆவிக்குறிய நிலையினை விட்டு விட்டு, பிதாவிற்கு கீழ்ப்படிந்தவராக அவரிடம் ஒரு சரீரத்தை ஆயத்தம் செய்து இயேசு என்கிறா நாமத்தில் உன்னதமானவரின் குமாரன் (கவனிக்கவும், உன்னதமானவர் என்று இல்லை) என்று மரியாளிடம் பிறந்தார்!!

அதன் பின் மாம்சாத்தில் தன்னை ஜீவப்பலியாக தேவனின் சித்தத்தின்படியே ஒப்புக்கொடுத்தார், உயர்த்தப்பட்டார், சகல அதிகாரங்களையும் பெற்றார், ஆனாலும் தேவனிடத்தில் தான் எந்த நிலையில் இருந்தாரோ, அதே நிலையில் அவருக்கு கீழ்ப்பட்டவராக இருக்கிறார்!!

அவர் சபையை தன் சாயலில் உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்!! 1000 வருட அரசட்சியில் அவருடன் சேர்ந்து ஆளுகை செய்து இந்த உலகத்தில் மரித்து உயிர்த்தெழுந்த, கிறிஸ்துவை அறியாதவர்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள், மறுதலித்தவர்கள் அனைவரைக்கும் நீதியை கற்றுகொடுக்கவும், சத்தியத்தை தெரியப்படுத்தவும் வருவார்!!

கிறிஸ்து மூன்றாக இல்லை!! அவர் ஒரு நிலையிலிருந்து, மாம்சத்தில் வந்து, இப்பொழுது சகலத்துக்கும் (சகலம் என்றால் பிதாவிற்கும் மேல் அல்ல) மேலாக உயர்த்தப்பட்ட நிலையில் இருக்கிறார்!!

இத்துனையிலும் ஒரு நைய்யாண்டியோ, மழுப்பலோ கிடையாது!! நிஜ்ஜம்மா!! ஆனால் நீங்கள் கண்டிப்பாக இதையும் நக்கலாக தான் எழுதுவீர்கள் என்பதும் தெரியும்!!

கிறிஸ்துவை நாங்கள் ஒரு போதும் பிதா என்று சொன்னதில்லை, மாறாக அப்படி சொல்லுவோரை எதிர்த்து எழுதுகிறோம்!! ஆனால் எங்களிடத்திலேயே நீங்கள் கேட்ட கேள்வி தமாசாக தான் இருக்கிறது:
இப்போ சொல்லுங்க சபையின் மணவாளன் கிறிஸ்துவா (மிகாவேல் தூதனா) அல்லது பிதாவா?

கிறிஸ்து இப்ப மிகாஹேல் தூதன் கிடையாது!! தன்னை ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்த பிறகு பிதாவிடத்திலிருந்து அனைவருக்கும் நித்திய ஜீவனை தரும் அதிகாரத்தை, நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரம், பெற்றுக்கொண்டார்!! அவர் இனி சாவாமையை பெற்றுக்கொண்டார்!! எப்படி பிதா தன்னில்தானே ஜீவன் உள்ளவராக இருக்கிறாரோ, அதே நிலையில் இருக்கிறார்!! ஆனால் பிதாவிற்கு கீழ்ப்பட்டவராக, ஏனென்றால் அவர் அனைத்தையும் பிதாவிடத்திலிருந்து பெற்ருக்கொண்டவர்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

1 2 35  >  Last»  | Page of 5  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard