Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


//காவலில் உள்ள ஆவிகள் நோவா காலத்தில் தவறு செய்தவர்கள் மாத்திரமே!! அவைகள் நோவா காலத்தில் மனுஷக்குமாரத்திகளுடன் திருமனம் செய்துக்கொண்ட ஆவிகள், நோவாவின் ஜல பிரலயத்தின் போது இந்த பூமியை விட்டு மீண்டும் தங்களின் ஆவிக்குரிய சரீரத்தில் தப்பிக்கும் போது தான் அவர்களை காவலில் (இனியும் அவர்கள் மாம்ச சரீரத்தில் வெளிப்படுத்தமுடியாதபடி) வைத்தார் தேவன்!!//

 

அப்படியா? எந்த வசனத்தில் இதெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது??



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//லாசரு உயிர்த்தெழுந்தபின் என்னவயிற்று, இயேசு கிறிஸ்து உயிரோடு எழுப்பினவர்களுக்கு எங்கிருந்து இந்த ஞாபகங்கள் வந்தது. தூங்கி எழுவதுபோல இருக்கும் என்பதால்தான், "நித்திரையடைந்தவர்கள் நிமித்தம்", "நித்திரையடைந்து" என்று வசனம் சொல்கிறது. என்னத்தத்தான் வேதத்தில் வாசிக்கிறீர்களோ? //

நீங்க சொன்னது - மூளையில்தான் எல்லாம் பதிவாகுது.

நித்திரை பண்ணுகையில் மூளை உயிரோடுதான் இருக்கிறது. எனவே நித்திரை தெளிந்தவுடன் எல்லாம் திரும்ப ஞாபகம் வரும். ஆனால் மரித்து மண்ணுக்கு போனவுடன் மூளையும் இல்லாமல் போய் விடுகிறது. அதாவது ஒரு மனிதனைப் பற்றிய எல்லாம் அழிக்கப்பட்டு விடுகிறது. ஆத்துமா, ஆவி என்று எதுவும் சரீரம் மரித்தபின் இருப்பதில்லை என்றால் உயிர்தெழும்போது எங்கிருந்து ஞாபகங்கள் வரும்? மேஜிக்கா?உங்க லாஜிக்கை நீங்களாவது follow பண்ண வேண்டாமா?

 

//தூதர்களுக்கு 'ப்ரசங்கித்தார்'. செத்துப்போன மனிதர்களுக்கல்ல‌...//

அப்ப நோவா காலத்தில் 8 பேரைத் தவிர உலகத்தில் இருந்த அனைவரும் தூதர்கள்?? இந்த உங்க வெளிப்பாட்டுக்கு முன்னால சாதுவும் விசெ உம் எந்த மூலைக்கு?? நோவா காலத்தில் நடந்தது போல் கடைசிக் காலத்திலும் நடக்கும் என்று ஆண்டவர் சொன்னதற்கு என்ன அர்த்தம் என்று நினைக்கிறீர்கள்?

 

//ஒரே மேப்பனால் அளிக்கப்பட்ட செவ்வையும் சத்தியாமுமானவைகளை மனித தத்துவம் என்று சொன்னால் சத்தியமாக உருப்படவே மாட்டீர்கள்... ஜாக்கிரதை. //

எல்லாம் மாயையும், மனதுக்கு சஞ்சலமாயிருக்கிறது என்று பிரசங்கி சொல்கிறார். ஏன்? வெறும் சூரியனுக்கு கீழே இருக்கும் உலகத்தை மட்டும் பார்த்தால் அப்படித்தான் தெரியும். இந்த வாழ்க்கையோடு ஆண்டவரையும் சேர்த்துப் பார்த்தால்தான் நம்க்கு அமைதியும், நம்பிக்கையும் வரும்.

 

//கிறிஸ்து இயேசு மனித குலத்திற்கு தன்னை ஈடுபலியாக ஒப்புக்கொடுத்ததை அவர்கள் பார்த்து தெரிந்துக்கொண்டது தான், காவலில் உள்ள ஆவிகளுக்கு பிரசங்கம் என்பதின் சுருக்கம்!!//

காவலில் உள்ள ஆவிகளுக்கு பிரசங்கம் பண்ணினார் என்றால் ...... காவலில் உள்ள ஆவிகள் பார்த்து தெரிந்து கொண்டார்கள் என்று அர்த்தமா? இப்படி தமிழை தமிழுக்கு மொழி பெயர்க்கும் கலையை எங்கே படித்தீர்கள்?? எந்த வாக்கியத்தையும் எப்படியும் அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம் ... அப்படித்தானே?. பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு!!

 

//கூறு கெட்டவர்கள் என்று ஏன் கூறுகிறோம் என்பது இப்பவாவது புரிந்ததா?//

இப்ப நல்லாவே புரியுது. அது யாருன்னு !!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

[கோல்டா அவர்களே பரலோகம் செல்ல பவுல் பேதுரு கேட்டகரியில் இருக்க வேண்டும்!! மனசாட்சியுடன் சொல்லுங்கள் நீங்கள் அந்த கேட்டகரியில் இருக்கிறீர்களா, ]

 

பேதுரு போல் அப்பப்ப அவரை மறுதலிக்கிறோம். அப்பப்ப அவருக்கு ஆலோசனை சொல்றோம். அவருக்கு உதவி செய்ய பட்டயத்தை உருவுகிறோம். படகை விட்டு இறங்கப் போகிறேன் என்று உணர்ச்சி வசப்படுகிறோம். மனங் கசந்து அழுகிறோம். பவுல் போல் இல்லையென்றாலும் பேதுரு போல் இருக்கிறோம்.

 

நாம் பரிசுத்தமற்றவர்கள். எனவே பரலோகம் செல்ல முடியாது என்று நினைக்கிறீங்க போல. உண்மைதான் அலை எப்ப ஓய? கடலில் எப்ப குளிக்க? அது போல் சரீரம் இருக்கும் வரை நாம் பாவம் செய்து கொண்டுதான் இருப்போம். செய்த பாவத்தை அவர் உணர்த்தும் போது மனைந்திரும்புகிறோமா, இருதயத்தைக் கடினப்படுத்துகிறோமா என்பதுதான் முக்கியம். அவர் நம் நினைவுகளின் தோற்றத்தையும் அறிகிறவர். உண்மையில் அவரை நேசிக்கிறோமா, அவருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று நினைக்கிறோமா என்றுதான் அவர் பார்க்கிறார்.

 

சில பாவங்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கலாம். அதிலிருந்து நம் சுய பெலத்தால் வெளியே வர முடியாதுதான். அதற்கும் அவரை தேடுகையில் அவர் விடுதலை செய்வார். இது என் அனுபவம். தமிழ் கிறிஸ்தவ தளத்தில் பதித்தது.

--

பெண்ணாய் இருப்பதில் ஒரு(ஒரே?) நன்மை என்னவென்றால், சிகரெட், குடி போன்ற கெட்ட பழக்கங்களுக்கு அடிமைப்பட வாய்ப்பில்லை.

 

ஆனால், எனக்கு ஒரு பழக்கம் இருந்தது. என்னவென்றால் புத்தகம் படிப்பது. நல்ல பழக்கம்தான் என்றாலும், அது எனக்கு ஒரு அடிமைத்தனமாக இருந்தது. ஏதாவது ஒரு புத்தகம் கையில் இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது. குமுதம் படிக்காவிட்டால் தலை வெடித்து விடும். இப்படி இருக்கையில் ஒரு நாள் ஆராதனை வேளையில், ”நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன் நிம்மதி நிம்மதியே” என்ற பாடலை நான் உணர்ந்து ஒன்றிப் பாடுகையில் ஒரு சந்தோஷத்தால் ஆண்டவர் என்னை நிரப்பினார்.மனம் லேசானது. அன்றிலிருந்து குமுதம் படிக்க வேண்டும் என்ற ஆசை என்னை விட்டு போயே போய் விட்டது. நான் குமுதத்தை விட்டது என்னைப் பொறுத்தவரை எட்டாவது உலக அதிசயம்!

இப்பொழுதும் உலக பிரகாரமான புத்தகங்கள்(குமுதமும்) படிக்கத்தான் செய்கிறேன். ஆனால் அது சுவையற்றதாய் இருக்கிறது.

--

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//எங்களுக்கு பொருத்தப்பட்ட ஒரே சிப் இரட்சிப்பு மட்டுமே. கிறிஸ்துவினால் பழைய எல்லா கழிசடைப் போதகங்களும் wash செய்யப்பட்டவர்கள் என்பதில் பூரிப்படைகிறோம்.//

ஷார்ப்பா உங்க மூளை வேலை செய்யுது!வாழ்த்துக்கள்!! ( உபயம்: K link Healthcare products ???) ஆனால் என்ன பிரயோஜனம்? உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும்...

//http://bible-truths.com//

Thanks for the link. பார்க்கிறேன்.

--

உங்க இருவருக்கும் தேவை தேவ தொடுதல். A supernatural touch from God!!

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Q to SoulSolution & Bereans:

பாவம் செய்யும் ஆத்துமாவே சாகும் என்று அழுத்தி அழுத்தி சொல்றீங்க.

சரி மரணத்தின் போது ஆவி என்னாகும்? அதுவும் செத்துடுமா? அல்லது எங்கே போகும்? எங்கே இருக்கும்?

உயிர்தெழுந்தபின் பழசெல்லாம் ஞாபகம் இருக்குமா இருக்காதா? இருக்கும் என்றால் எங்கிருந்து இந்த ஞாபகங்கள் வரும்?

இயேசு கிறிஸ்து மரித்த போது அவர் ஆத்துமா செத்து போச்சா? ஆவி என்ன ஆச்சு?மண்ணோடு மண்ணாய் எல்லாம் போய்விட்டதென்றால், எப்படி அவர் காவலில் இருந்த ஆவிகளுக்கு பிரசங்கித்தார்?

இதுக்காவது சம்பந்தமில்லாத வசனங்களை quote பண்ணாமல் தெளிவான பதில் சொல்லுஙக.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

 

////நான் வசனத்திற்குத்தான் அர்த்தம் கேட்டேன். ஆத்துமா என்றால் என்ன என்று எனக்கு நல்லா தெரியும்!//

என்னத்த நல்லா தெரியுமா!! ஒரு வட்டம் பொட்டுகிட்டு அதையே சுற்றி சுற்றி வருகிற ஒரு பெரிய கூட்டத்தில் இருப்பவர் தான் நீங்களும்!!//

சும்மா புரியல புரியல தப்பு தப்பு என்று கீறல் விழுந்த ரிக்கார்ட் மாதிரி சொல்லக் கூடாது.

ஆத்துமா பற்றி நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்று சொல்லுங்க.திரும்பவும் சொல்றேன்.

--

The real YOU is your soul.

YOU are nothing but your soul.

உங்க எண்ணங்கள், வண்ணங்கள், கருத்துக்கள், கவலைகள், கனவுகள்,சித்தங்கள், திட்டங்கள் அடங்கியதுதான் உங்க ஆத்துமா.

--

//ரொம்ப ஆர்வமென்றால் எங்கள் தளத்தில் இதை குறித்து பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறோம், தேடி பார்த்துக்கொள்ளுங்கள்!! //

ஏன் அதை ஒரு இரண்டு வரியில் திரும்ப சொல்ல முடியாதா?

உங்க முத்துக்களை எங்க தேட? லிங்க்காவது கொடுங்க.

 

//1. மரணம் என்றால் என்னவென்று தெரியாது//

தெளிவாக தெரிந்து கொள்ள படியுங்கள்.

Death in the Bible is always pictured as a separation between two things.

http://www.bible.ca/d-death=separation.htm

முழுவதும் உங்களுக்கு பிடித்த வசனங்கள் மட்டுமே இதில் இருக்கிறது. வாசிக்கக்கூட வேண்டாம். சும்மா பார்க்கவாவது செய்யுங்க!

 

//2. ஆத்துமா சாகுமா சாகாதா என்பதில் குழப்பம்//

இயேசு கிறிஸ்து மரித்த போது என்ன ஆச்சுன்னு தெரியாமல் நீங்க தான் குழம்பிப் போய் இருக்கிறீர்கள்.

 

//3. கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக முடியாது என்கிற சத்தியம்!!//

உங்களயும் அவர் இரட்சிக்க வல்லவர், மனந்திரும்பினால்!

 

////மன்னிக்கவும் உங்ககிட்ட அப்படித்தான் பேச வேண்டியிருக்கு!//

அது உங்கள் சுவபாவம் என்பதையும் புறிந்துக்கொண்டேன்!!//

சாத்தான் வேதம் ஓதுகிறது என்றால் அது இதுதான்!!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

இந்த மூடர்களுக்கு, தங்களுக்கு ஒத்து வரும் வேத வசனங்கள் தவிர மத்ததெல்லாம் உவமையாக மாத்திரம் இருக்கும் அல்லது இது அவுகளுக்கு சொல்லப்பட்டது இவுகளுக்கு சொல்லப்பட்டது என புலம்புவார்கள். நரகத்தை இவ்வளவு தெளிவாக விளக்கிய பிறகும் இவர்கள் தீப்பொறி திருமுகம் கணக்கா நான் எரிமலை குளம்பு என உளறிக்கொண்டிருப்பது வேடிக்கை. நரகக்குழி என்பது இவர்களுக்கு ஆறுக்கு நாலு கல்லறைக்குழியாம். அங்கு அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் எப்படின்னா தெரியாது அது உவமை என்பார்கள். 

//ஒருத்தர் வருகிறார், எல்லாவற்றையும் சுத்திகரித்து, தேவையான சத்தியத்தை கொடுப்பார், அப்பொழுது தெரிந்துக்கொள்ளுங்கள்!!//

ஒருத்தர் வந்தார், ரசல் என்ற பெயரில் வந்து சத்தியத்தை தனக்கு ஏற்ற வழியில் கத்தரித்து கொடுத்துவிட்டு போயிருக்கிறார் அதை இந்த கோமாளிகள் வாந்தியெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

//உங்கள் பதில்கள் பெரும்பாளும் ஏதோ மட்டமான வார இதழில் இருப்பது போல் இருக்கிறது!!//

ஆமாமா நம்ம பலமுறை ரொம்ப டீசன்டா பேசியிருக்கோம் பாருங்க‌...



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

////ஆத்துமாவை மரணத்தில் ஊற்றி என்றால், மரண வேதனை அடைந்தார் என்று அர்த்தம். //

மிகவும் கேவளமான புரிந்துக்கொள்ளுதல்!! மரித்து போனார் என்பதை தான் வசனம் சொல்லுகிறது, வசனத்தை தொடர்ந்து படித்தால் புரியும்!!//

மரித்துப் போனார் என்று தான் எல்லோருக்கும் தெரியுமே!!! என்னதான் சொல்றீங்கன்னு கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

 

//Till someone be it a man or an animal lives with life breath inside he or it is called a SOUL!!//

நான் வசனத்திற்குத்தான் அர்த்தம் கேட்டேன். ஆத்துமா என்றால் என்ன என்று எனக்கு நல்லா தெரியும்!

 

//இயேசு கிறிஸ்து மரித்த போது அவர் ஆத்துமா என்ன ஆயிற்றோ, அதுதான் பதில்.//

 

ரொம்ப தெளிவான பதில் என்கிற நினைப்போ!! //

ஏன், இதுவும் புரியலையா உங்களுக்கு!

 

////பூமியில் வீடு கட்ட வேண்டும். கார் வாங்க வேண்டும் என்று நினைத்திருப்பான். மரித்தவுடன் அந்த பூமிக்குரிய யோசனைகள் நிறைவேற வாய்ப்பில்லாமல் போகும் என்பதுதான் அர்த்தம்.//

 

காமெடிக்காக எழுதியிருக்கிறீர்கள் என்றால் பரவாயில்லை, இல்லாட்டி இது போன்ற மட்டமான ஒரு விளக்கத்தை நான் கேட்டத்தே இல்லை!!//

உங்களு இரட்சிப்பின் திட்டத்திற்கு ஒத்து வராததெல்லாம் மட்டமான விளக்கமாய்தான் இருக்கும்!

 

////நீங்களே சொல்லுங்க. இயேசு கிறிஸ்து இறந்தவுடன் எல்லாம் அவ்ருக்கு மறந்து போச்சா? எல்லாம் மறந்த கோமா நிலையிலா அவர் போய் காவலில் இருந்த ஆவிகளுக்கு பிரசங்கித்தார்?//

 

விடுங்க சகோதரியே, காவல் விஷயம் உங்களுக்கு புரியாது!!//

பரவாயில்லை சொல்லுங்க. உங்களைப் போல தெரிந்து கொள்ளப்பட்ட சிறு மந்தை யாருக்காவது பிரயோஜனமாக இருக்கும் அல்லவா!

 

////Language class ம் எடுக்கணுமா? கஷ்டம்தான்!!//

 

உங்கள் பதில்கள் பெரும்பாளும் ஏதோ மட்டமான வார இதழில் இருப்பது போல் இருக்கிறது!!//

மன்னிக்கவும் உங்ககிட்ட அப்படித்தான் பேச வேண்டியிருக்கு!

 

 

////நாங்களும் நரகம் தான் போவார்கள் என்று சொல்லவில்லை. //

 

எப்படி தான் இப்படி பொய் பேச மனசு இருக்குதோ!!??// 

பொய் எதுக்கு சொல்லணும்? நான் அப்படி சொல்லவில்லை.

 

 

//வெளி. 20:5. மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.

 

ஆயிரம் வருஷம் வரையில் உயிரடையாததை எப்படி "உயிர்த்தெழுதல்" என்று சொல்ல முடியும்!! // 

எனக்கு வாக்கிய அமைப்பில் எந்த தவறும் தெரியவில்லை.

பாட்டுப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர் மாலா. இரண்டாம் பரிசு பெற்றவர் கலா. முதல் பரிசாக வெள்ளிக் கோப்பை வழங்கப்பட்டது.

என்றால் கோப்பை மாலாவிற்கு என்று புரியத்தானே செய்கிறது!

 

//முதலாம் என்பது வரிசை அல்ல மாறாக தரம்!! உயிர்த்தெழுந்து கிறிஸ்துவுடன் ஆளுகை செய்பவர்கள் முதலாம் உயிர்த்தெழுதல் அடைந்தவர்கள் ஆவர்!//

ஓகோ... இப்படி ஒரு அர்த்தம் இருக்கா? சரி மீதி ஆட்கள் 1000 வருடம் கழித்துத்தான் உயிர்தெழுவதாகப் போட்டிருக்கிறது. அப்ப இராஜ்யத்தில் யார் இருப்பார்கள்? இந்த வசனத்தை புராடஸ்டண்ட் சபையார் மாத்தி எழுதிட்டாங்கன்னு சொல்லப் போறீங்க. சரி தானே?

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


//ஆனால் நீங்கள் எதிர் செய்வதால் ஒரு நன்மை உண்டு அஃதாவது இவர்களது மூடத்தனத்தை மற்றவர்கள் காண அம்பலப்படுத்துகிறீர்கள், இணையம் என்ற ஒன்று இருக்கும் வரை தளர்ந்த மனம் உடைய விசுவாசிகளை அது வழி விலகிவிடாமல் காக்கும்//

 சரியாய் சொன்னீர்கள் சகோ. ஜோசப்!   ரசலின் வாந்திதான் இவர்கள் வேதம். இந்த புரட்டர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்ல துப்பு இல்லாத வெற்று காமடியர்கள்! விபச்சாரகாரனான ரசல் பாவத்தில் வாழ்ந்ததால் 'நியாத்தீர்ப்பு' என்பது கற்று கொள்ளுதல் என்று சாத்தானால் வஞ்சிக்கப்பட்டது போல இவர்களும் பாவத்தை விட முடியாத காரணத்தால் அதை ஏற்று கொண்டது போல தோன்றுகிறது!

 இவர்கள்  திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.

 
இவர்கள் மார்ககந்தப்பி அலைகிறவர்கள் கத்தோலிக்கத்தில் இருந்து கிறிஸ்தவம் , கிறிஸ்தவத்தில் இருந்து ரசலிசம் போன்று திரிந்து கொண்டே இருப்பார்கள்.

 யூதா 1:13  தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.

 இந்த மூடர்களுக்கு ஜெபம் என்றால் என்னவென்றே தெரியாது ஏனென்றால் இவர்களுக்கு எல்லாம் தலைவிதி போல நடக்கிற காரியங்கள் . யூதாஸ் கூட நல்லவர் இந்த தேவன்தான் அவரை கெட்டது செய்ய தூண்டியது என்று சொல்லுவார்கள்.

 

 



-- Edited by John on Tuesday 2nd of August 2011 10:51:58 PM



-- Edited by John on Tuesday 2nd of August 2011 10:52:40 PM

__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


எனக்கு வாழைப்பழ காமெடி ஞாபகம் வருகிறது.

 

க: உன்னை என்ன வாங்கிட்டு வரச் சொன்னேன்?

செ: வாழைப்பழம்

க: எத்தனை ரூபாய் கொடுத்தேன்?

செ: ஒரு ரூபாய்

க: ஒரு வாழைப்பழம் எத்தனை காசு?

செ: 50 காசு

க: அப்ப ஒரு ரூபாய்க்கு எத்தனை வாழைப்பழம்?

செ: இரண்டு

க: வாங்கினயா?

செ: வாங்கினேன்.

க: சரி. ஒண்ணு இங்க இருக்கு. இன்னொன்னு எங்க?

செ: அந்த இன்னொன்னு தாண்ணே இது!!

 

 

 

இப்படித்தான் , எல்லாம் பேசி விளக்கி கடைசியில் ஒருவழியா, ஒரு வசனத்தைச் சொன்னவுடன், பதில் தெரியாததால், உடனே அவர்கள் மனப்பாடம் செய்து வைத்திருக்கும் ”பிதாவின் சித்தம்” என்று வரும் 10 வசனங்களை எடுத்துப் போட்டு இதான் அது, அல்லது இதுக்கென்ன பதில் என்று கேட்கிறார்கள். அல்லது ஏதாவது சொல்லி திட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்!!

இதுதானே உங்கள் விவாத முறை! நடத்துங்க!

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//ஆண்டவர் மரித்தோரை எழுப்புங்கள் என்றும் சொன்னார்... இதுவரை யாரையாவது அப்படி எழுப்பியிருக்கிறார்களா?

மாயக்காரராகிய வேத பாரகரே உங்களுக்கு ஐயோ! என்றும் சொன்னார்,

நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினாலுண்டானவர்கள் என்று சொன்னார்...

அக்கிரம செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்றும் சொன்னார்,

உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட‌..... என்றும் சொன்னார்....

காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.

நீங்கள் இந்தப் பண்டிகைக்குப் போங்கள்;

அப்பாலே போ... என்றும் சொன்னார்.

 

வேதத்தில் யார் எப்போது யாருக்குச் சொன்னது என்பது கூடத் தெரியாமல் எல்லாவற்றையும் எனக்கெ சொன்னார் என்று வாதிடுவது எவ்வளவு முட்டாள்தனமானது//

 

யாருக்கு சொல்லப்பட்டிருந்தாலும், தேவைப்படும் போது அது நமக்கும் apply ஆகும். வேதம் நம் தவறுகளை சுட்டிக் காட்டும்.என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும். ஒரு வேளை பிசாசின் தூண்டுதலுக்கு இடம் கொடுத்து, தேவ சித்தத்தை விட்டு விலகிச் செல்வோமானால்... அப்பாலே போ சாத்தானே.. நீ தேவனுக்கேற்றவைகளை சிந்திக்காமல், மனிதருக்கேற்றவைகளை சிந்திக்கிறாய் என்று ஆணடவர் அந்த வசனத்தின் மூலமாய் நம்மோடு பேச முடியும். எனவே எல்லாமே ஒரு வகையில் நமக்கு சொல்லப்பட்டவைகள் தான்!!

 

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//ஒருத்தர் வருகிறார், எல்லாவற்றையும் சுத்திகரித்து, தேவையான சத்தியத்தை கொடுப்பார், அப்பொழுது தெரிந்துக்கொள்ளுங்கள்!!//

ஒருத்தர் வருகிறார், உங்க முதுகில் மொத்த!! கொடுத்த காசை என்ன செய்தாய் , ஏன் காசுக்காரரிடத்திலாகிலும் கொடுத்து வைக்க வில்லை என்று கேள்வி கேட்கப் போகிறார். அப்ப திரு திருன்னு முழிக்கப் போறீங்க.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//மத்தேயு 7:13 இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

யோவான் 16:2 அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்.//

 இப்படியெல்லாம் கஷ்டப்படுறீங்களா!! ஸ் அப்பா... தாங்க முடியலை!!!

 எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!!மூளைக்குள் உங்களுக்குத் தெரியாமல் இப்படிப் பேசும்படி chip ஏதாவது வச்சிட்டாங்களா???

இப்படித்தான் சிப்பை பொருத்தி brainwash பண்ணிடுவாங்க ஒருத்தனை. படம் பாருங்க!

The Manchurian Candidate

http://en.wikipedia.org/wiki/The_Manchurian_Candidate_(2004_film)



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

////ஒரு வார்த்தை பல அர்த்தத்தில் உபயோகப்படுத்த முடியும் என்று தெரியாதா? வசனந்தான் தெரியாது என்றால் மொழியும் அப்படித்தானா???//

 அப்படி என்றால் ஆத்துமாவிற்கு எத்துனை அர்த்தங்கள் இருக்கிறது என்று ஒரு பட்டியல் போடுங்கள், பிறகு அதை விவாதிக்கலாம்!! //

Language class ம் எடுக்கணுமா? கஷ்டம்தான்!!

 

///ஏன் இப்படி அவர்களை நரகத்திற்கு அனுப்புவதிலே குறியா இருக்கீங்க?? எத்தனை தடவைதான் இதே கேள்வியை கேட்பீர்கள்??//

நாங்களா அனுவதர்கு குறியாக இருக்கிறோம்!! நீங்கள் எல்லாரும் சேர்ந்து சொல்லுவதை நான் சொன்னேன்!! நாங்கள் தான் எல்லாருக்கும் இரட்சிப்பு என்று சொல்லி வருகிறோமே!!//

நாங்களும் நரகம் தான் போவார்கள் என்று சொல்லவில்லை.

 

//அந்த வசனத்தை பாருங்கள்!! அந்த வசனம் மாத்திரம் இல்லை, மொழிப்பெயர்க்கப்பட்ட பல வசனங்கள் இப்படி தான் தப்பு தப்பாக இருக்கிறது!!//

அந்த வசனத்தில் என்ன தப்பு? Explain , please!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//ஏசாயா 53:12 அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி,..............

இந்த வசனம் உங்கள் வேதத்தில் இருக்கிறது பாருங்கள்!! இது இயேசு கிறிஸ்து தன் ஆத்துமாவை மரணத்தில் ஊற்றினார் என்கிறது!!//

ஆத்துமாவை மரணத்தில் ஊற்றி என்றால், மரண வேதனை அடைந்தார் என்று அர்த்தம்.

யாக்கோபு 5:20 தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.

இதற்கு என்ன அர்த்தம்??

 

//முதலில் ஆத்துமா சாகுமா சாகாதா? என்ற கேள்விக்கு பதில் தேவை.//

இயேசு கிறிஸ்து மரித்த போது அவர் ஆத்துமா என்ன ஆயிற்றோ, அதுதான் பதில்.

 

//வேதத்தில் யார் எப்போது யாருக்குச் சொன்னது என்பது கூடத் தெரியாமல் எல்லாவற்றையும் எனக்கெ சொன்னார் என்று வாதிடுவது எவ்வளவு முட்டாள்தனமானது.//

இது ராஜ்ஜியத்தில் செய்ய வேண்டிய வேலை என்று சொல்வீர்கள் என்று நினைத்தேன்!!

சரி, எதைத்தான் ஆண்டவர் நமக்கு சொன்னார்?? என்ன தான் நம்மை செய்ய சொல்லியிருக்கிறார்? தயவு செய்து , ஒரு 10 வசனமாவது காட்டுங்க.

 

//அப்போஸ்தலர்களுக்கும், சீடர்களுக்கும் சொன்னதை அவர்கள் செய்தார்கள்.//

அவங்கதான் எப்பவும் கூட இருந்தாங்க. அவர்களிடம்தான் எல்லாவற்றையும் சொல்ல முடியும். உங்க பேர் போட்டு வேதத்தில் ஏதாவது போட்டிருந்தால்தான் கடைப்பிடிப்பீங்களோ??

 

//கோல்டா கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.

ஆதி3:19. நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.//

ஆமா, சரீரம் மண்ணுக்குத்தான்.

 

பிரசங்கி யில் இருந்து பல வசனங்கள் quote பண்ணியிருக்கீங்க. பிரசங்கி “சூரியனுக்கு கீழே (under the sun)” என்ன நடக்கிறது என்று ஆராய்ச்சி செய்து சாலாமோன் ஞானி எழுதியது தத்துவ புத்தகம். நித்தியத்திற்குரிய கண்ணோட்டத்துடன் அல்ல. கடைசியில்தான் தேவனுக்கு பயந்திரு என்று முடிக்கிறார்.

 

//சங்கீதம் 146:4 அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.//

பூமியில் வீடு கட்ட வேண்டும். கார் வாங்க வேண்டும் என்று நினைத்திருப்பான். மரித்தவுடன் அந்த பூமிக்குரிய யோசனைகள் நிறைவேற வாய்ப்பில்லாமல் போகும் என்பதுதான் அர்த்தம்.

 

// நினைவுகள் ஆத்துமாவில் பதிந்துள்ளதாம்//

நீங்களே சொல்லுங்க. இயேசு கிறிஸ்து இறந்தவுடன் எல்லாம் அவ்ருக்கு மறந்து போச்சா? எல்லாம் மறந்த கோமா நிலையிலா அவர் போய் காவலில் இருந்த ஆவிகளுக்கு பிரசங்கித்தார்?

 

//காற்றில் யோசனைகளை பதிக்க முடியாது அம்மணி. //

எல்லா data வும் இப்ப காத்திலதான் பறந்து வருது. Wireless Communication!

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

சரியாக சொன்னீர்கள். என்னதான் உரலில் போட்டுக் குத்தினாலும் ஒரு சிலரின் மூடத்தனம் நீங்குவது போல் தெரியவில்லை!

நீங்கல்லாம் பேசி முடித்து விலகிட்டீங்க. நானும் கொஞ்சம் பேசி பார்த்து விலகுறேன். அவங்களுக்கும் பேச ஆள் வேணும்ல!!

கண் திறக்கப்பட்டு , திருந்தினார்கள் என்றால் மிகவும் சந்தோஷம்!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

//அக்கினிக்கடல் என்பது கல்லறைக்கு கீழே பூமியில் இருக்கும் ஹாட் வாட்டரா???//

 

இல்லை இல்லை அறிவியற்பூர்வமாக பார்க்கவேண்டுமென்றால் Earth is an insulator வெப்பம் வெளியே விடாமால் பூமி தடுக்கும் அப்ப உள்ளே கொஞ்சம் டெம்பரேச்சர் அதிகமாக இருக்கும் அது தான் இவுகளுக்கு அக்கினிக்கடல் போல, அதாவது தினமும் காலையில் ஹாட் வாட்டர் கீசரை ஆன் பண்ணி தண்ணியை பிடிச்சு குளிப்பது என்பது இவுகளை பொறுத்தவரை அக்கினிக்கொழம்பை அள்ளி மேலே ஊத்தி குளிப்பது மாதிரி,,,,, 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

சிஸ்டர் கோல்டா, மூடனை நொய்யோடே நொய்யாக குத்தினாலும் அவன் மூடத்தனம் அவனைவிட்டு நீங்காது என்ற வசனத்திற்கு ஏற்ப நீங்கள் என்னதான் வாதிட்டாலும் இவர்கள் திருந்தப்போவதில்லை, நீங்கள் நம்பும் வேதம் வேறு அவர்கள் நம்பும் வேதம் வேறு, அந்த வேதத்துக்கு ரசல் போன்றவர்கள் ஏராளமான விளக்கவுரைகளையும் ஃபுட் நோட்ஸையும் எழுதியிருப்பார்கள், சான்றாக இவர்கள் கணக்குப்படி மாற்கு 16 ம் அதிகாரத்தில் பிற்சேர்க்கை மனிதனின் கற்பனைகளுக்கு ஏற்ப சேர்க்கப்பட்டது என்பார்கள்.

சுவிஷேஷம் அறிவிப்பது என்பது இவர்களுக்கு எட்டிக்காய் மாதிரி, உங்க பக்கத்து வீட்டில் சுவிஷேஷம் சொல்லியாச்சா என்ற விதண்டாவாதம் வேறு, சரி சொல்லியாச்சுன்னு வச்சிக்கிடுவோம் அப்புறம் என்ன செய்யப்போறாங்களாம். உயிரைக்கொடுத்து ஊழியம் செய்த மிஷனரிகளின் பணியை கொச்சைப்படுத்துவார்கள். மிஷனரிப்பணியின் மூலமாக அன்றைக்கு நம் முன்னோர் ஏன் அவர்களின் முன்னோர் சந்திக்கப்பட்டிருக்காவிட்டால் இப்ப என்ன செய்திட்டிருப்பீங்க என்றால் பதிலே இருக்காது. ஒருவேளை பூட்டிய ரூமில் உக்காந்து தேவாரத்தையும் திருவாசகத்தையும் ஆராய்ச்சி செய்துட்டு இருந்திருப்பாங்க போல‌.

ஆனால் நீங்கள் எதிர் செய்வதால் ஒரு நன்மை உண்டு அஃதாவது இவர்களது மூடத்தனத்தை மற்றவர்கள் காண அம்பலப்படுத்துகிறீர்கள், இணையம் என்ற ஒன்று இருக்கும் வரை தளர்ந்த மனம் உடைய விசுவாசிகளை அது வழி விலகிவிடாமல் காக்கும்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//இவ்வுளவு பேசுகிறீர்களே (எழுதுகிறீர்களே) உங்கள் பக்கத்து வீடு, உங்கள் தெரு, உங்கள் சந்து, உங்கள் வீதி, உங்கள் வட்டாரம் முழுவதிலும், இயேசு கிறிஸ்து சொன்ன சுவிசேஷத்தை சொல்லி முடித்து விட்டீர்களா!!??//

பக்கத்திலிருக்கும் அவர்களுக்கும், தூரத்திலிருக்கும் உங்களுக்கும் ஜெபம் பண்ணியாச்சி. எனவே, எல்லோருக்கும் ஏதோ ஒரு வழியில் சுவிசேஷம் கண்டிப்பாக செல்லும். ஏஞ்சல் டிவி பார்த்தாலே போதுமே!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//"பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்" என்ற வசனத்தில் சரீரத்தில் செய்த பாவத்துக்கு ஆத்துமா சாகுமா? //

இயேசு கிறிஸ்துவுக்கு என்ன நடந்ததோ, அதுதான் நமக்கும் நடக்கும். அவர் மரித்தார். அவர் சரீரம் அடக்கம் பண்ணப்பட்டது. ஆனால் அவர் ஆவி&ஆத்துமா, உயிருடன் தான் இருந்தது. அந்த ஆவியில் அவர் போய் காவலில் இருந்த ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். பின் 3 நாட்களுக்குப் பிறகு மகிமையான சரீரத்தோடு உயிர்த்தெழுந்தார். அதுபோல் தான் நமக்கும் நடக்கும்.

//இது எல்லாம் வாசிக்கவும் பேசவும் நல்லா தான் இருக்கு, ஆனால் வசனம் இல்லையே!! வசனம் இல்லாததை தான் கால காலமாக சொல்லிக்கொண்டு அதில் மகிழ்ந்துக்கொண்டு இருக்கிறீர்களே!! கிளப்புங்க‌!!//

வசனத்தைக் காட்டினாலும், அது ராஜ்ஜியத்தில்தான் நிறைவேறும் என்று சொல்லி தூக்கிப் போடத்தான் போறீங்க! உங்களுக்கு வசனத்தை சொல்றதே வேஸ்ட்.

//பாவம் செய்யும் ஆத்துமா சாகும் என்று தேவனின் வசனம் சொல்லுகிறது, அப்படி என்றால் பாவம் செய்த ஐசுவரியவானின் "ஆத்துமா" எப்படீங்க பிரிந்து போனது!!//

அப்ப ஆண்டவர் மரித்தபோது அவர் ஆத்துமா செத்துப் போச்சா?

//Ok, Ok, that means when your pastor prays to God, "Please fill this church with souls" you understand that something which sits between spirit and body comes to your church!! Do you really understand things or pretend to understand!!?? Your church is filled with invisible "souls" to your understanding!! You don't understand what you are writing!!

Understand!!//

ஒரு வார்த்தை பல அர்த்தத்தில் உபயோகப்படுத்த முடியும் என்று தெரியாதா? வசனந்தான் தெரியாது என்றால் மொழியும் அப்படித்தானா???

//சிஸ்டர் அவர்களே, நீங்கள் மெய்யாலுமே அறிந்துக்கொள்ள கேட்கிறீர்களா!!??//

பிரதர் அவ்ர்களே! வேற எதுக்காக கேட்பார்கள்??!!

//நானே வழியும் ஜீவனும் சத்தியமுமாய் இருக்கிறேன், என்னை அன்றி ஒருவனும் பிதாவிடத்திற்கு (பரலோகம்) வரான் என்று சொன்ன கிறிஸ்து இயேசு வந்தே 2000 ஆண்டுகள் தான் ஆகியிருக்கிறது!! அவருக்கு முன் சுமார் 4000 வருடங்கள், அவர் வந்து சுவிசேஷம் கேட்காமல் மரித்தவர்கள் எல்லாரும், நீங்கள் சொல்லும் சுவிசேஷத்தின்படி பார்த்தோமென்றால் நீங்கள் சொல்லும் நரகத்திற்கு தானே போவார்கள்!!//

ஏன் இப்படி அவர்களை நரகத்திற்கு அனுப்புவதிலே குறியா இருக்கீங்க?? எத்தனை தடவைதான் இதே கேள்வியை கேட்பீர்கள்??

//5. மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.//

கொஞ்சம் யோசியுங்கள், உயிரடையவில்லை என்று சொல்லிவிட்டு அது தான் முதலாம் உயிர்த்தெழுதல் என்று சொல்லுவதில் ஏதாவது லாஜிக் இருக்கிறதா!!?? //

என்ன சொல்றீங்க?? பைபிளில் லாஜிக் இல்லை என்று சொல்றீங்களா??

வெளி 20 முதலில் வாசிங்க, பிளீஸ்.

//அடம் பிடிக்காட்டியும் நீங்களும் நரகத்திற்கு போயே ஆக வேண்டும்!! நரகம் என்றாலே "மரித்தோரின் நிலை" அல்லது சுலபமாக புரிய வேண்டுமென்றால் "கல்லறை"!! நாங்கள் மாத்திரம் அல்ல, எல்லாரும் போய் தான் ஆக வேண்டும்!!//

அக்கினிக்கடல் என்பது கல்லறைக்கு கீழே பூமியில் இருக்கும் ஹாட் வாட்டரா???

//அவர் உலகத்தையே மன்னிக்க சித்தம் கொண்டிருக்கிறார், நீங்கள் தான் வன்கண்ணனாய் இருக்கிறீகள்!!//

சாமி ரெடியாதான் இருக்கார்.இளைய குமாரர்கள் திரும்பி வரணும்ல. பன்றியோடவே இரு. ஒன்றும் பிரச்சினையில்லை என்றல்லவா சொல்றீங்க!

//இது வேதத்தில் சொல்லப்பட்ட வசனமா//

வசனந்தான். ஆனால் உங்க “ராஜ்யக் கண்களுக்கு” தெரியாது!

//ஏன் மூக்கிலாவது, காலிலாவது தரித்துக்கொள்கிறவன் தப்பித்து விடுவானா? அம்மணி, வெளிப்படுத்தல் புத்தகத்தை அறியும் முன் முதலில் ஆத்துமா சாகுமா சாகாதா? என்ற கேள்விக்கு பதில் தேவை.//

ஆத்துமாவிற்கும் வெளி. புத்தகத்திற்கும் என்ன சம்பந்தம்??? உருப்படியா ஒரு பதிலாவது சொல்லத் தெரியாதா???

//கூறுகெட்ட பதிவுகள் என்று நாங்கள் கொடுத்த தலைப்பை இப்படி தினசரி நிரூபிப்பதற்கு நன்றி!//

உண்மைதான் ஐயா. கூறுள்ளவர்கள் உங்களிடம் பேசுவார்களா??

சில்சாம் பேசுறதில்லை. கொல்வின் பேசுறதில்லை. ஜான் பேசுறதில்லை. அன்பு வெளியேறிவிட்டார்.

Good Night!!



__________________
«First  <  1 2 3 4 5  >  Last»  | Page of 5  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard