Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யார் கர்த்தர்... யார் பெரியவர்..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
யார் கர்த்தர்... யார் பெரியவர்..?
Permalink  
 


சங்கீதம்.46:1 - 14
  • கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
  • வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்.
  • அதின் அரமனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார்.
  • இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள்.
  • அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள்.
  • அங்கே நடுக்கங்கொண்டு, பிரசவ வேதனைப்படுகிற ஸ்திரீயைப்போல வேதனைப்பட்டார்கள்.
  • கீழ்காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர்.
  • நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். (சேலா.)
  • தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
  • தேவனே, உமது நாமம் விளங்குகிறதுபோல உமது புகழ்ச்சியும் பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தமும் விளங்குகிறது; உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது.
  • உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக.
  • சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கொத்தளங்களை எண்ணுங்கள்.
  • பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் அலங்கத்தைக் கவனித்து, அதின் அரமனைகளை உற்றுப்பாருங்கள்.
  • இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.
இன்று  ஒரு துக்கவீட்டில் மேற்கண்ட சங்கீதப் பகுதியை வாசித்து ஜெபித்து வந்தேன்;இந்த சங்கீதத்தின் அடிப்படையில் பாடப்படும் ஒரு பிரபலமான பாடலே இந்த சங்கீதத்தையே வாசிக்கத்தூண்டியது;அந்த குறிப்பிட்ட பாடலின் ஆரம்ப வரிகள் தியானிக்கத் தூண்டியது;அது நிச்சயமாகவே (மேசியாவின்) எதிரிகளுக்கு அதிர்ச்சியைத் தரக்கூடியதாகவும் இருக்கும்.

பாடல்கள் மூலமே விசுவாசத்தை வளர்க்கும் சந்ததியில் பிறந்த அடியேனுக்குப் பிடித்தமான அந்த பழைய பாடல்:

கர்த்தர் பெரியவர் அவர்
நமது தேவனுடைய நகரத்தி
லும்
தமது பரிசுத்த பர்வதத்திலும்
மிகத் துதிக்கப்படத் தக்கவர்

-இது காலஞ்சென்ற பக்தசிங் ஐயா அவர்களின் "யெகோவா ஷம்மா" எனும் ஸ்தாபனத்திலிருந்து வெளிவந்த பாடலாகும்.

முதலில் இந்த சங்கீதத்திலிருந்து எனக்குள் எழுந்த சிந்தனைகளை இங்கே பகிர்ந்துகொள்ளுகிறேன்;முன்பதாக தள நண்பர்கள் தத்தமது கருத்தை முன்வைக்கட்டும்;அதன்மூலம் யார் திருந்துகிறார்களோ இல்லையோ நமக்கு பக்திவிருத்தியுண்டாகும் என்பது உறுதி..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard