Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வே(பே)தமாணவர்களை ஏன் (அல்லது) எப்படி எதிர்க்கவேண்டும்..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
வே(பே)தமாணவர்களை ஏன் (அல்லது) எப்படி எதிர்க்கவேண்டும்..?
Permalink  
 


இந்த திரியானது மீண்டும் ஏதேன் எனும் திரியிலுள்ளவற்றின் பாதிப்பில் உருவானது.

யெகோவா சாட்சிகள் மற்றும் வேதமாணவர் என்ற போர்வையில் உலா வரும தொடர்ந்து போராடி வருகிறோம்; வேறு வேலையே இல்லையா என்று நண்பர்கள் (என்னை நானே..?) சலித்துக்கொள்ளும் அளவுக்கு காலையிலிருந்து மாலைவரை இதையே சிந்தித்து இரவெல்லாம் யோசித்து நம்மால் இயன்றதையெல்லாம் செய்து வருகிறோம்; நாம் கண்டும் காணாமல் விட்டுவிட்டால் தானே அடங்கிவிடும் என்று நினைத்துக்கொண்டு இதற்கு மேலும் ஒதுங்கிப்போனால் நம் ஒவ்வொருவரையும் நரித்தனமாகப் பழகிப் பாழாக்கிப்போடுவார்கள்.

நெருப்புகூட ஆரம்பத்தில் இப்படியே சிறுபுகையாக எழும்பி பெருந்தீயாக மாறி தானாகவே அணைந்தும் போகும்;ஆனாலும் அதனால் உண்டாகும்; பாதிப்புகளை அறிந்தவர்களாக அதனை ஆரம்பத்திலேயே அணைக்கிறோமல்லவா? அதுபோலவே இவர்களையும் ஆரம்பத்திலேயே நசுக்கவேண்டும்;

இந்த வரிகளை எழுதிவிட்டு (On11.03.2011@11am) சென்று செய்தியைப் பார்த்தால் ஜப்பானில் கொடூரமான நிலநடுக்கமும் அதனைத் தொடர்ந்து சுனாமி -ஆழிபேரலையும் ஏற்பட்டு கடலோர நகரங்கள் மூழ்கின; எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தீப்பற்றி எரிகிறது; இந்த திரியைப் பதிக்க இயலாமல் இணையத்தொடர்பு தடைபட்டு இரவுதான் (On11.03.2011@11pm) பதிக்கிறேன்;ஆனால் அடியேன் இந்த வரிகளை எழுதியதன் நேரடி காட்சியைத் தொலைக்காட்சியைப் பார்த்து (On11.03.2011@2pm) அதிர்ச்சியில் உறைந்து போனேன்; ஒருபுறம் (மேசியாவின்) எதிரிகள் அழிவு என்பதே இல்லை, இறைவன் மிகவும் கருணையுள்ளவன் என்ற ரேஞ்சுக்குப் பிதற்றிக்கொண்டிருக்க மறுபுறமோ தேவ பயங்கரம் இறங்கி உலகமே திகைத்து நிற்கிறது; அவருடைய பார்வையில் அனைத்தும் குப்பை என்பது அந்த சுனாமியின் நகர்வலத்தைப் பார்த்து அறிந்துகொண்டேன்..!

சிறுமந்தை என்று சொல்லிக்கொண்டு தானே எழும்புகிறார்கள், எனவே எளிதில் எதிர்கொள்ளலாம்; விசுவாசிகளை ஆடுகள் என்று சொல்லுவதை கிண்டலடிக்கும் இவர்கள் தங்களை எந்த அர்த்தத்தில் சிறுமந்தை என்று சொல்லிக்கொள்கிறார்களோ..?

இப்படியே நம்முடைய மூல உபதேசத்தின் ஒவ்வொரு ஷரத்துக்கும் விரோதமாக திருச்சபையின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் விஷக் கிருமிகளாக இவர்கள் விளங்குகிறார்கள்.இதனை நாம் உடனே தடுத்தாக வேண்டும்; நாம் என்ன செய்யலாம் என்று நீங்கள் யோசிக்கலாம்; நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுமில்லை, இதனை எதிர்க்கவேண்டும் மனநிலை உங்களுக்கு உண்டாகவேண்டும்; ஒரு குறிப்பிட்ட காரியத்தில் தீர்மானமான எண்ணமும்அதைக் குறித்த வைராக்கியமும் இருந்தால் மட்டுமே எதிர்க்கவேண்டும் என்ற மனநிலை உண்டாகும்.

நம்முடைய எதிர்ப்பை எவ்வாறு ஜனநாயக முறையில் நம்முடைய இந்திய தேசத்தின் சட்டதிட்டத்துக்குட்பட்டு தெரிவிக்கலாம் என்பதைக் குறித்து யோசிக்கவேண்டும்; கையில் கொஞ்சம் காசு இருந்தால் இதற்காக நீங்கள் செலவுசெய்யலாம் அல்லது செலவில்லாமலும் எதிர்க்கலாம்; நிச்சயமாக நேரத்தை செலவு செய்தாகவேண்டும்.

எப்படியெனில் இவர்கள் அறிவிக்கும் கூட்டங்களுக்குச் சென்று அமைதியாக அவர்களுடைய நடவடிக்கைகளை கவனிக்கவேண்டும்; தற்கால நவீன வசதிகளின்படி நம்மிடம் இருக்கும் மொபைல் போனின் காமிரா உதவியுடன் அவர்களுடைய போதனைகளை பதிவுசெய்து கொள்ளவேண்டும்.

அந்த ஆதாரத்தின்படி நாம் இவர்கள் மீது சட்டப்பூர்வ‌ நடவடிக்கை எடுக்கமுடியும்; எப்படியெனில் நம்முடைய பொதுவான கிறித்தவ‌ நம்பிக்கைக்கு விரோதமாகப் பேசுவதும் எழுதுவதும் சட்ட விரோதமானதாகும்; எனவே காவல்துறையின் அனுமதியுடன் வீடுவீடாக வரும் இவர்கள் மீது தைரியமாக நடவடிக்கை எடுக்கலாம்; எப்படி இயேசுவை அறிவிக்கச் செல்லும்போது இந்துக்கள் நம்மை எதிரிகளாக பாவிக்கிறார்களோ அதுபோலவே நாமும் இவர்களைப் பாவித்து அதற்கேற்ற மரியாதை(?) கொடுக்கவேண்டும்; தெருப்பொறுக்கிகள் சந்தையில் புகுந்து கலகம் விளைவிக்கத் தூண்டுவதற்கொப்பான முயற்சியாக இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும்; அடுத்து கைப்பிரதிகள் மூலமும் சபையாரை எச்சரிக்கலாம்; மேலும் இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்னஞ்சல் செய்யவேண்டும்; தொலைபேசி மூலமும் எச்சரிக்கவேண்டும்.மற்றபடி இவர்களுடன் நேரடி விவாதம் செய்வதில் எந்த பயனும் இல்லை; முடிந்தால் அவர்களுடைய கூடுகைக்குச் சென்று அங்கு வஞ்சிக்கப்படும் நிலையிலுள்ளவர்களுடன் அப்பாவிகளைப் போலப் பேசிப்பழகி நட்பை வளர்த்து அவர்களுடைய சூழ்ச்சிகளை அம்பலமாக்கவேண்டும்.

நம்முடைய வீடுகளில் நடக்கும் சாதாரண ஜெபக்கூடுகைகளை வேத ஆராய்ச்சி கூட்டமாக மாற்றியமைத்து அதில் இதுபோன்ற கள்ள உபதேசங்களைக் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கவேண்டும்; அதுபோன்ற கூடுகைகளுக்கு இவர்களுடைய உபதேசத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அழைத்து வந்து பரிசோதித்து சிகிச்சையளிக்கவேண்டும்;.

ஆம், நோயாளிகளை இன்னொரு நோயாளியோ சாதாரணமானவர்களோ பரிசோதிக்கவோ நோயின் தீவிரத்தையறிவோ சிகிச்சையளிக்கவோ முடியாதது போலவே எல்லோரும் இதனைச் செய்யமுடியாது; பயிற்சி பெற்றவர்களே இதனை செய்யமுடியும்; எனவே நிதானமாக வேதத்தைக் கற்கும் ஆரோக்கிய உபதேசக் குழுக்களை உருவாக்கி பயிற்றுவித்து ஊக்குவிக்கவேண்டும்.

இதற்குத் தடையாக அமையக்கூடியது, உள்ளூர் தலைவர்களின் அச்சமே; ஏனெனில் வேத ஆராய்ச்சிக்குழுக்கள் போட்டி சபையாகிவிடுமோ என்ற அச்சமும் சிறுகுழுத்தலைவர் எங்கே பாஸ்டராகி விடுவாரோ என்ற கலக்கமுமே வேதத்தை ஆராய்வதற்குத் தடையாக இருக்கிறது; இதுவே (மேசியாவின்) எதிரிக்கும் கொண்டாட்டமாகி விட்டது.

அவன் தன் மனதில் என்ன எண்ணங் கொண்டிருக்கிறான் என்றால், இவர்கள் எப்படியிருந்தாலும் பணம் பதவி புகழ் என்றே ஓடுவார்கள்; இந்த குட்டையை நாம் குழப்பி மீன்பிடித்துவிடலாம் என்பதே; ஆனால் வீடுகள் தோறும் தன்னார்வ முறையில் ஒரு குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய தலைப்பில் நாம் வேதத்தை ஆராய்ந்து படிக்கத் துவங்கிவிட்டால் (மேசியாவின்) எதிரி நிச்சயமாகவே தடுமாறிப்போவான்; தள நண்பர்களும் எனதருமை வாசகர்களும் இங்கே எழுதப்பட்டுள்ளவற்றின் அடிநாதத்தை உணர்ந்து உடனே செயலில் இறங்கவேண்டும் என்பதே நமது ஆழ்மனதின் ஏக்கமாகும்; இனிமேலும் மூடிமறைத்து மேலோட்டமாகப் பேசி நாமும் அறியாமல் அறியவேண்டியவர்களையும் அறியச்செய்யாமல் மந்தமாக இருப்போமானால் வரும் சந்ததியினரின் தடுமாற்றத்துக்கு நாமே காரணமாவோம்; அவர்தம் இரத்தப்பழி நம்மீதே சுமரும்.

மேற்கண்ட காரியங்கள் (மேசியாவின்) எதிரிகளுக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பு கள்ள உபதேசிகளுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் பொருந்தும்; யார் வேண்டுமானாலும் இதுசம்பந்தமாகக் கேள்விஎழுப்பட்டும், விளக்கம் கேட்கட்டும்; நேரிலோ தொலைபேசியின் மூலமோ விவரம் சொல்ல ஆயத்தமாக இருக்கிறோம்.

முன்னாள் யெகோவா சாட்சிகள் மற்றும் வே(பே)தமாணவர்கள் அதாவது இயேசு மிகாவேல் தூதனின் அவதாரம் எனும் பொய்ப் போதகத்திலிருந்து மீட்கப்பட்டவர்களைக் குறித்து நண்பர்கள் அறிய விரும்பினால் பின்வரும் எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

திரு.M.குணசேகரன்:9840692181 -/- 9710305363



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard