Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு அழைக்கிறார் சொத்து தனியாருக்கு விற்பனை..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இயேசு அழைக்கிறார் சொத்து தனியாருக்கு விற்பனை..!
Permalink  
 


Ashokkumar wrote:

//ஆனானப்பட்ட இயேசுராஜாவைக் குறித்து திரைப்படமே எடுத்து வெளியிட்டு கோடிகோடியாக சம்பாதித்தார்கள் எனில் தினகரன் மட்டும் விதிவிலக்கா என்ன‌..?//

Are you talking about the "Passion of Christ" Movie, Brother???


 நண்பர் அசோக் அவர்களே,

நான் டாவின்ஸி கோட் புத்தகத்தையும் அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட திரைப்படத்தையும் மனதில் வைத்தே அவ்வாறு சொன்னேன்;மேலும் காலஞ்சென்ற ஊழியர் தினகரன் அவர்கள் மீது கிறித்தவ வட்டாரத்தில் கூறப்படும் பல்வேறு குற்றச்சாட்டுளுக்கு ஏதோ ஒரு முகாந்தரம் இருக்கிறது; ஆனாலும் ஒரு சில காரணங்களுக்காக நான் அவரை ஜாமக்காரன் புஷ்பராஜ் அளவுக்கு எதிர்க்கிறதில்லை;

ஆனால் அவர் ஒரு மதுபானப் பிரியர் அதாவது குடிகாரர் என்ற குற்றச்சாட்டு எனக்கு முற்றிலும் புதிதாகவும் அபாண்டமாகவும் தோன்றியது; உலகத்தாருக்கு வேண்டுமானால் இது பெர்ஸனல் விஷயமாக இருக்கலாம்; ஆனால் நமக்கோ உபதேசம் சம்பந்தமானது அல்லவா..?

எனவே இதுபோன்ற குற்றச்சாட்டுக்கான சரியான முகாந்தரம் இருக்குமானால் அதைக் குறித்து நாம் நல்லதொரு தீர்மானத்துக்கு வரவேண்டும்;ஏனெனில் மிக சமீபத்தில் கூட ஒரு அங்கிள் புதிய ஏற்பாட்டு காலத்தில் திராட்சைரசம் என்று பரிமாறப்பட்டது மது வகையைச் சார்ந்தது என்றே சொல்லுகிறார்; எனக்கு உண்மை தெரிந்தாலும் அவரை எதிர்த்து பேசமுடியவில்லை;

அப்படியானால் கிறித்தவத்திலேயே இதுபோன்ற ஒரு க்ரூப் உள்ளே இரகசியமாக இருக்கிறதோ என்று அஞ்சுகிறேன்;சில சிஎஸ்ஐ (CSI)  குருவானவர்கள் மீதும் இதே குற்றச்சாட்டு இருக்கிறது;ஒரு குருவானவர் அண்மையில் பீடத்திலேயே வாந்தியெடுத்த சம்பவம் ஆராதனை பீடத்திலேயே நடந்தது;எனவே இந்த குற்றச்சாட்டை முழுவதும் என்னால் புறக்கணிக்கமுடியவில்லை; அதே நேரம் முகாந்தரமில்லாத ஒரு குற்றச்சாட்டை ஏற்கவும் முடியவில்லை; உண்மையை அறிந்தவர்கள் தைரியமாக முன்வந்து உண்மையைச் சொன்னால் மட்டுமே நாம் ஒரு முடிவுக்கு வரமுடியும்;

இது குறித்து தேவைப்பட்டால் தனி திரியில் விவாதிப்போம்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

//ஆனானப்பட்ட இயேசுராஜாவைக் குறித்து திரைப்படமே எடுத்து வெளியிட்டு கோடிகோடியாக சம்பாதித்தார்கள் எனில் தினகரன் மட்டும் விதிவிலக்கா என்ன‌..?//

Are you talking about the "Passion of Christ" Movie, Brother???



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
இயேசு அழைக்கிறார் சொத்து தனியாருக்கு விற்பனை..!
Permalink  
 


suncauvery wrote:

 எந்தஅடிப்படையில் இதுபோன்ற குற்றச்சாட்டைக் கூறுகிறீர்கள் என்பதையும் தாங்களே விளக்கவேண்டும்.

ஐயா சர்ச்சைக்குரிய வரிகளை மட்டும் நீக்க நினைத்தோம். உங்களுக்கு அனுமதியில்லை என்ற செய்தி வந்தது. ஆதலால் அந்த பதிவை நீக்க முடியுமா என முயற்சித்தோம்.அது முழுவதுமாய் நீக்கப்பட்டுவிட்டது.. தவறுதலுக்கு மன்னிக்கவும். (ஆயினும், முழுவதுமாய் அழிந்து போனதும் ஓரு விதத்தில் நல்லதே...).

ஐயா நாம் எழுதியிருந்தவை கற்பனையோ அல்லது பொய்யோ கிடையாது...! இது அந்த மனிதருடன் நெருக்கமாய் இருந்த (Money Transaction) மனிதர்களின் பதிவு அல்லது வாக்குமூலம் எனலாம். எம்முடன் தொடர்பில் இருந்த மனிதரின் கைபேசி (Cell Phone) தொலைந்து போனதால், இவர்களின் உரையாடல்கள் அதில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதுவும் தற்போது இல்லாமல் ஆகிவிட்டது. அந்த மனிதரை தொடர்பு கொண்டு, இதை அவரிடம் விவரித்து. அவரை இங்கே கொண்டு வர முயற்சித்தோம். அவர் மறுத்து விட்டார். பயத்தில் அல்ல...! (ஒரு வேளை அவரும், அவருடைய மற்ற பழைய நண்பர்களும், வாயை திறந்திருந்தால். இன்னும் பல உண்மைகள் வெளிவந்திருக்கும்). தற்போது அந்த நபர் " நாம் தமிழர் " எனற அமைப்பில் ஓர் நிர்வாகியாய் செயலாற்றுவதால். "நாம் தமிழரை" கிறிஸ்தவர்களின் விரோதியாக சித்தரித்து விடுவார்கள். அதுவுமல்லாமல், செப கோபுரத்துக்கு விரோதிகளும், எமது தகவல்களை தவறாக பயன்படுத்தி விடுவார்கள். எனவே, தற்போதைக்கு இதை விடுங்கள். என அந்த மனிதர் கேட்டு கொண்டதால். மீண்டுமாக இதை குறித்து எழுத இயலாத நிலையில் உள்ளோம்..

இதற்கு முன் தமிழ் கிறிஸ்தவ தளத்தில், வேறு சிலவற்றை பதித்தோம் அது சர்ச்சையை உண்டு பண்னியதால். அதற்காக வருத்தம் தெரிவித்து, அதை நீக்கினோம். சிலவற்றை அவர்களே நீக்கினார்கள். ஆனால், இது அதை போலன்று....! செப கோபுரத்தின் மேல் எமக்கு. எந்த பொறாமையும் கிடையாது...! ஆனால்...! தமிழ் விரோதிகளை ஆதரிக்கிறார்கள் என்ற கோபம் நிச்சயம் உண்டு....!


 நண்பரே, ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தால் அதன் விளைவுகளை இறுதிவரை இன்று சந்தித்தாகவேண்டும்;கண்டுகொள்ளாமல் விட்டால் பிரிதொரு சமயத்தில் அதே காரியம் வேறு ரூபத்தில் வந்து தொல்லைதரும்; எனவே நீங்கள் நீக்கிய பதிவை என்னுடைய சேமிப்பிலிருந்து எடுத்து மீண்டும் பதித்திருக்கிறேன்;நாம் மறைத்தாலும் கடவுளிடமிருந்து ஒன்றையும் மறைக்க முடியாதல்லவா, எனவே யாராக இருந்தாலும் அவருக்கு அஞ்சி நடக்கவேண்டும்; அவருக்கு அஞ்சாதவர்களே எல்லாவற்றுக்கும் அஞ்சவேண்டும்; சில காரியங்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர் கூட தன்னைக் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டியிருக்கலாம் என்று நீதிமன்றங்களின் அண்மைய தீர்ப்புகள் கூறுகிறது;

எனவே இனி இதுபோன்ற காரியங்களை எனக்கு மெயில் அனுப்பி உறுதிசெய்துகொண்டு பதிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

ஆனானப்பட்ட இயேசுராஜாவைக் குறித்து திரைப்படமே எடுத்து வெளியிட்டு கோடிகோடியாக சம்பாதித்தார்கள் எனில் தினகரன் மட்டும் விதிவிலக்கா என்ன‌..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 32
Date:
RE: இயேசு அழைக்கிறார் சொத்து தனியாருக்கு விற்பனை..!
Permalink  
 


 எந்தஅடிப்படையில் இதுபோன்ற குற்றச்சாட்டைக் கூறுகிறீர்கள் என்பதையும் தாங்களே விளக்கவேண்டும்.

 

ஐயா சர்ச்சைக்குரிய வரிகளை மட்டும் நீக்க நினைத்தோம். உங்களுக்கு அனுமதியில்லை என்ற செய்தி வந்தது.ஆதலால் அந்த பதிவை நீக்க முடியுமா என முயற்சித்தோம்.அது முழுவதுமாய் நீக்கப்பட்டுவிட்டது.. தவறுதலுக்கு மன்னிக்கவும். (ஆயினும், முழுவதுமாய் அழிந்து போனதும் ஓரு விதத்தில் நல்லதே...).

ஐயா நாம் எழுதியிருந்தவை கற்பனையோ அல்லது பொய்யோ கிடையாது...! இது அந்த மனிதருடன் நெருக்கமாய் இருந்த (Money Transaction) மனிதர்களின் பதிவு அல்லது வாக்குமூலம் எனலாம். எம்முடன் தொடர்பில் இருந்த மனிதரின் கைபேசி (Cell Phone) தொலைந்து போனதால், இவர்களின் உரையாடல்கள் அதில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதுவும் தற்போது இல்லாமல் ஆகிவிட்டது. அந்த மனிதரை தொடர்பு கொண்டு, இதை அவரிடம் விவரித்து. அவரை இங்கே கொண்டு வர முயற்சித்தோம். அவர் மறுத்து விட்டார். பயத்தில் அல்ல...! (ஒரு வேளை அவரும், அவருடைய மற்ற பழைய நண்பர்களும், வாயை திறந்திருந்தால். இன்னும் பல உண்மைகள் வெளிவந்திருக்கும்). தற்போது அந்த நபர் " நாம் தமிழர் " எனற அமைப்பில் ஓர் நிர்வாகியாய் செயலாற்றுவதால். "நாம் தமிழரை" கிறிஸ்தவர்களின் விரோதியாக சித்தரித்து விடுவார்கள். அதுவுமல்லாமல், செப கோபுரத்துக்கு விரோதிகளும், எமது தகவல்களை தவறாக பயன்படுத்தி விடுவார்கள். எனவே, தற்போதைக்கு இதை விடுங்கள். என அந்த மனிதர் கேட்டு கொண்டதால். மீண்டுமாக இதை குறித்து எழுத இயலாத நிலையில் உள்ளோம்..

இதற்கு முன் தமிழ் கிறிஸ்தவ தளத்தில், வேறு சிலவற்றை பதித்தோம் அது சர்ச்சையை உண்டு பண்னியதால். அதற்காக வருத்தம் தெரிவித்து, அதை நீக்கினோம். சிலவற்றை அவர்களே நீக்கினார்கள். ஆனால், இது அதை போலன்று....! செப கோபுரத்தின் மேல் எமக்கு. எந்த பொறாமையும் கிடையாது...! ஆனால்...! தமிழ் விரோதிகளை ஆதரிக்கிறார்கள் என்ற கோபம் நிச்சயம் உண்டு....!



__________________
karna


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

//   மறைந்த DGS- க்கு குடிக்கும் பழக்கம் உண்டு. //

நண்பர் சன்காவேரி அவர்களே,

தாங்கள் மேலே குறிப்பிட்ட இந்த சற்றும் ஜீரணிக்க முடியாததாக உள்ளது; எந்த அடிப்படையில் இதுபோன்ற குற்றச்சாட்டைக் கூறுகிறீர்கள் என்பதையும் தாங்களே விளக்கவேண்டும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 32
Date:
இயேசு அழைக்கிறார் சொத்து தனியாருக்கு விற்பனை..!
Permalink  
 


ஐயா இந்திய தேசத்தில் எளிதில் பணக்காரர் ஆக வேண்டும் என்றால், ( சேவை செய்பவர்களை அல்ல ) அவர் ஒரு சமுகசேவை நிறுவனத்தை பதிவு செய்து நடத்த வேண்டும். குறிப்பாக இவரிடம்...

  • 1)  சமுகசேவை நிறுவனத்தை பதிவு செய்த சான்றிதல்.
  • 2) வங்கி புத்தகம்.
  • 3) இவர் பதிவு செய்த. ஆசிரமம் / மருத்துவமனை / பள்ளி.......
  • 4) FEC எனப்படும் பதிவு சான்றிதல் (மிகவும் அவசியம் ஏனெனில் பல கோடி ரூபாய் வாங்கலாம் / எடுக்கலாம் எந்த சட்ட சிக்கலும் கிடையாது..!)
  • 5) 80 G சான்றிதல் 1 & 2. இது இருந்தாலே போதுமானது. ( இது கிடைக்க இந்திய தலைநகரம் டில்லிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.)
  • 6) 30 AC எனப்படும் சான்றிதல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களே தேடி வருவார்கள். வகைதோகை இன்றி கோடிகளை பார்க்கலாம். ( இது கிடைக்க இந்திய தலைநகரம் டில்லிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.)

யாருக்கும் தவறான வழியை காட்டவில்லை...!

5- தாவதாக குறிப்பிட்டவை இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு சிலரிடம் மாத்திரமே உண்டு.அதில் ஒன்று இயேசு அழைக்கிறார் எனப்படும் ஸாதபனம்..

    பால் தினக்கரனின் தந்தை DGS.தினக்கரன் இருக்கும் போதே பல விவகாரங்கள் நடந்தேறியது.. அதில் ஒன்று. சிறுவாணி அணைப் பகுதில் உள்ள இயேசு அழைக்கிறார் மையம்.. முன்பு இது ஓர் இந்து சாமியாரின் சொத்தாக இருந்தது. சாமியாருக்கும், DGS- க்கும் இடையே நடந்த ஓர் விவகாரத்தில், கேரளாவில் இருந்த DGS-ன்  பல ஏக்கர் நிலம்.. சாமியாருக்கும். சிறுவாணியில் இருந்த சாமியாரின் இடம் DGS- கும் கை மாறின..

இதற்கு காஞ்சி சங்கராச்சாரியரை DGS / பால்தினகரன் சந்தித்தனர். அவருடைய காலை தொட்டு வணங்கினர். ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது.. அது...  சிறுவாணி காட்டுப்பகுதியில் இருக்கும் இந்து கோயிலை இடிக்கக்கூடாது. வருடாந்திரம் அதனை புதுப்பிக்க வேண்டும்.என்று ஒப்பந்தம் ஏற்பட்டது. இடமும் கைமாறியது.

   மறைந்த DGS- க்கு குடிக்கும் பழக்கம் உண்டு. DGS அடிக்கொரு முறை இப்படி சொல்வாராம்.. "ஆண்டவர் இயேசு கானாவூர் கலியாணத்தில் செய்த மதுவை குடித்தால் தலையின் உச்சியில் இருக்கும் முடி நிற்குமாம்"..!

இத்தகைய பணமாற்றம் (Transaction) ஏற்பட பலருடைய உதவி தேவை  வங்கி / சட்டம் / காவல்துறை / உள்ளூர் பிரமுகர்கள். ஆகியோர் தேவை. பணமாற்றம் ஏற்பட்டால் பலருக்கு பங்கு பிரிக்கப்படும். ஆனால் DGS கைக்கு பணம் சென்றால் திரும்ப கிடைப்பது அரிது. அப்பா தொடங்கியதை மகன் தொடர்கிறார்.

 சென்ற ஆண்டு. பால் தினகரன் தமது இயேசு அழைக்கிறார். செப கோபுரத்தை தனியாருக்கு விற்று கனாடாவிற்கு செல்ல திட்டமிட்டார். அரசியல்வாதி ஒருவரால் தனது பிள்ளைகளுக்கு ஆபத்து ஏற்பட்ட போது. " ஆண்டவர், தமிழ்நாட்டில் இனி உனக்கு பணி இல்லை. கனடாவிற்கு செல் என்றார்" அதனால் கனடாவிற்கு செல்கிறேன் என சொல்ல (இதற்கு முன். தனது பிள்ளைகளை கனடாவில் வசிக்க வேண்டிய அனைத்தையும் செய்து முடித்தார். அவர்களை அனுப்பியும் வைத்தார்). ஆனால் இவரின் திட்டத்திற்கு இவருடைய தாயார் எதிர்ப்பு தெரிவித்தார். மீண்டும் இவர் " மறுபடியும் ஆண்டவர். நீ தமிழ்நாட்டிற்கே செல் என்றார்" அதனால்.நான் தமிழ்நாட்டிற்கே வந்து விட்டேன் என்றார். உண்மை என்னவெனில் செப கோபுரம் இவர்களின் குடும்ப சொத்தாக இருக்கிறது. இவருடைய தாயாரின் கையோப்பம் தேவைபட்டது. அந்தம்மா எதிப்பு தெரிவிக்க, வேறு வழியின்றி இப்படி அறிக்கையிட்டார். என தமிழ்நாட்டில் வெளி வரும் ஜூனியர் ரிப்போர்ட்டர் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.

 DGS குடும்பம் எங்கே...தமது குடும்பத்தையே கவனிக்காமல், ஆண்டவருக்கு ஊழியம் செய்யனும் என 30 மைல் தொலைவு வரை நடந்து / மிதிவண்டியில் சென்றுவரும் எமது அருமை தமிழ்நாட்டு மக்கள் எங்கே...?

 இவர்கள் ஒரு நாளைக்கு 30 மைல் சென்று வந்தாலும் இவர்களுக்கு குடிக்க கஞ்சி மட்டுமே காணிக்கையாக கிடைக்கிறது. அதிலும் சாதி வேறுபாடு வேறு...? இந்த நிலையிலும் எமது மக்கள் உறுதியுடன் செயல்படுவது... மனதிற்கு கனமாகவும்.. நாமும் கடவுளுக்காக எதையாவது செய்யனும்... கடவுளுக்காக வீரமரணம் அடைய வேண்டும் என்ற உணர்வு மேலிடுகிறது...!

 இவர்கள் களைத்து வீடு திரும்பும்போது, காலில் படிந்திருக்கும் மண்னை காணும்போது... இந்தியாவின் வடதிசையில் மிசினரியாக பணியாற்றுபவர்களுக்கு இருக்கும் வசதி. இவர்களுக்கு இல்லையே...!

 இவர்களுடைய ஏழ்மை நிலை. தமிழ்நாட்டு கிறிஸ்தவ மக்கள் / ஊழியர் கண்களுக்கு தெரியாமல் போனதென்ன..?

தமிழனை தமிழனே மதிக்காதபோது... வந்தேறியவன் (குடியேறியவன்) எப்படி மதிப்பான்...!



__________________
karna


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இயேசு அழைக்கிறார் சொத்து தனியாருக்கு விற்பனை..!
Permalink  
 


இந்த செய்தியானது எங்கும் பரவியிருப்பதை சமாளிக்க பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டிருக்கிறார், பால் தினகரன் அவர்கள்; அதாவது இந்த குறிப்பிட்ட நிலத்தை விற்று அந்த பணத்தினால் வானகரம் ஜெப கோபுரத்துக்கான நிலம் வாங்கப்பட்டதாம்; இது அப்பட்டமான பொய்யேயன்றி வேறில்லை; ஏனெனில் இந்த நிலம் அண்மையில் தான் விற்கப்பட்டுள்ளது; வானகரம் ஜெப கோபுரம் அமைந்துள்ள இடம் மதுரவாயல் அருகேயுள்ள பிரம்மாண்டமான பாலத்துக்கு மிக அருகில் உள்ளது; இது விற்கப்ப்பட்டுள்ள விலைக்கு அதாவது வெறும் 45 கோடிக்கு (?!) வானகரத்திலுள்ள சென்னையின் பிரதான சாலையில் வாங்குவதென்பது இயலாத காரியமாகும்; ஏற்கனவே சுமார் 100 கோடி ரூபாய்க்கு பாரி டவர் வரி ஏய்ப்பு செய்யப்பட்டு கைமாறியது; அப்போதே இயேசு அழைக்கிறார் நிறுவனத்தில் (ஆம் அது ஸ்தாபனம் அல்ல‌..) அரசியல் புகுந்துவிட்டது; வரி ஏய்ப்பு செய்வோர் நிச்சயமாகவே அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பர். இது சம்பந்தமான விவரங்களையறிந்த உண்மையான கிறித்துவின் சீட‌ர்கள் இங்கே தாங்கள் அறிந்த உண்மையைப் பகிர்ந்துகொள்வதால் அநேகரை எச்சரித்து நல்வழிப்படுத்த முடியும்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
இயேசு அழைக்கிறார் சொத்து தனியாருக்கு விற்பனை..!
Permalink  
 




இயேசு அழைக்கிறார் ஊழிய ஸ்தாபனத்துக்கு சொந்தமான 15 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம் டாடா (TATA) தொழிற்சாலைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது; சென்னையிலிருந்து ஆவடி வழியாக திருவள்ளூருக்குச் செல்லும் வழியில் திருநின்றவூர் மற்றும் வேப்பம்பட்டு ஆகிய ஊர்களுக்கு இடையே இடதுபுறம் அமைந்திருப்பது குறிப்பிட்ட நிலமாகும்.

இந்த இடத்தைக் கடந்துசெல்லும்போதெல்லாம் ஒருபுறம் பொறாமையுடனும் இன்னொருபுறம் பெருமையுடனும் பெருமூச்சு விட்டவாறு கடந்து செல்லுவேன்; பொறாமைக்குக் காரணமானது கெட்ட எண்ணமல்ல, நாமும் இதுபோல ஆண்டவருக்காக நிலங்களைக் கொள்ளவேண்டும் என்ற உத்வேகம் சார்ந்த எண்ணமே; பெருமைக்குக் காரணம், பல்வேறு சர்ச்சைக்குரிய கொள்கைகளுடன் இயேசு அழைக்கிறார் ஊழியம் நடைபெற்றாலும் ஆண்டவருடைய நாமம் உச்சரிக்கப்படுவதற்குக் காரணமாக இருக்கிறார்கள்; மேலும் ஆண்டவருடைய நாமத்தை முன்னிறுத்தி செயல்படக்கூடிய நிறுவனங்களை உருவாக்கி நிர்வகிப்பதுடன் ஆங்காங்கு நிலங்களை வாங்கிப்போடுகிறார்கள்;எப்படியோ காணிக்கை பணங்கள் வீணாகாமல் நல்லதொரு விதத்தில் சாமர்த்தியமாக முதலீடு செய்கிறார்களே,நல்லது தான் என்ற விதத்தில் பெருமை தான்.


இதுபோன்ற எண்ணத்துடன் வழக்கமாக நான் பார்வையிட்டுச் செல்லும் இயேசு அழைக்கிறார் ஊழிய ஸ்தாபனத்துக்கு சொந்தமான இந்த நிலத்தின் காம்பவுண்டு சுவரில் திடீரென ஆங்காங்கு போர்டுகள் வைக்கப்பட்டிருந்தது, "இந்த நிலம் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு சொந்தமானது" என்பதாக‌;உடைந்து சாய்ந்து கிடக்கும் "இயேசு அழைக்கிறார்" பலகையைக் காணவில்லை; பாழடைந்த துருபிடித்த இருப்பு கதவு அழகாக நீலநிற வர்ணம் பூசப்பட்டுள்ளது;  சுமார் 15 ஏக்கர் பரப்பளவுள்ள நிலமானது தனியார் தொழிற்சாலைக்கு சுமார் 45 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக‌ அறிகிறோம்.

இந்த அதிர்ச்சிகரமான செய்தியை அறிந்ததும் என் மனதில் எழுந்த கேள்வி இதுதான்;இது தனியார் சொத்தாக இருப்பதால் தானே இஷ்டம் போல விற்கமுடிகிறது? இயேசு அழைக்கிறார் எனும் ஊழிய ஸ்தாபனமானது ஆர்வமுள்ள தேவ பிள்ளைகளின் தியாகமான காணிக்கைகளால் நடைபெறுவது உண்மையானால் அதைக் கொண்டு வாங்கப்படும் அனைத்து சொத்துக்களும் சபையாருக்கு தானே சொந்தமாக இருக்கமுடியும்? அதனை சபையாருக்கு அறிவிக்காமல் அவரவர் இஷ்டப்படி விற்கமுடியுமா? இதற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் சொல்லட்டும்,இதே காரியத்தை சிஎஸ்ஐ (CSI) போன்ற சபை நிர்வாகம் செய்யமுடியுமா?

ஏற்கனவே சபையாருக்கு சொந்தமான நிலங்கள் வடதேசத்து வியாபாரிகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தாரைவார்க்கப்பட்டு வரும் நிலையில் இதோ அண்மையில் ஒரு அநியாயம் நடைபெற்றுள்ளது; ஒருவேளை அந்த நிலத்தை மிகமிக குறைவான விலைக்கு எப்போதோ வாங்கி வைத்திருந்து தற்போது 100 மடங்கு கொள்ளை லாபத்துக்கு விற்றார்கள் என்றே வைத்துக்கொள்ளுவோம்; அப்படியானால் நாம் ஊழியம் செய்கிறவர்களா அல்லது நிலபேர முதலாளிகளா?

உண்மையான‌ ஆதங்கத்துடனே எழுதுகிறேன்,சென்னைக்கு வெளியே கிராமங்களில் சபைகள் நசுக்கப்படுகின்றன;வெளி ஊழியங்கள் செய்ய முடிகிறதில்லை;பல சபைகளுக்குக் கட்டிடமில்லை; ஊழியர்கள் பலரும் வறுமையில் வாடுகின்றனர்; இயேசு அழைக்கிறார் ஊழியம் போன்ற ஸ்தாபனத்தார் நடத்தும் சுவிசேஷ கூட்டங்களை நடத்துவதற்கு இடங்களும் கிடைப்பதில்லை;இந்த கடினமான சூழ்நிலையில் இரயில் நிலையத்துக்கு அருகே இரயில் பாதையை ஒட்டி நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்திருந்த இந்த நிலமானது கம்பீரமாக இருந்தது;அது இன்றைக்கு நம்மிடத்தில் இல்லை என்பது ஒரு மாபெரும் இழப்பாகும்.

ஒரு காலத்தில் ஏறக்குறைய திருநின்றவூர் முழுவதுமே கிறித்தவ சமுதாயத்துக்கு சொந்தமாக இருந்ததாம்;ஆனால் அந்த நிலை வேகமாக மாறிவருகிறது;திருநின்றவூரிலுள்ள தாசர் பள்ளி மைதானம் சுவிசேஷக் கூட்டங்களுக்கு பிரபலமானது;அந்த இடமானது பெரிதான எந்த வருமானமும் இல்லாவிட்டாலும் அதன் நிர்வாகிகளால்  தொடர்ந்து லாபநோக்கில்லாமல் பலவருடங்களாக செயல்பட்டு வருகிறது;இதன் ஸ்தாபகரான ஐயா அவர்கள் சுமார் 50 வருடத்துக்கு முன்பே இந்த பகுதிக்கு வந்து பல ஊழியங்களை செய்துள்ளார்;ஆனால் தற்போது இந்த பகுதியில் நமக்கு சொந்தமான ஒரு பெரிய சொத்து தனியாருக்கு அதுவும் தொழிற்சாலை நிர்வாகத்தாருக்கு கைமாறியது மனதுக்கு சங்கடமாக இருக்கிறது.


இதுபோலவே வெளிநாடுகளிலும் சபைக்கு வருவோரின் எண்ணிக்கையானது மிகவும் சொற்பமாக இருப்பதுடன் சபைகள் பலவும் கேளிக்கை விடுதிகளாகவும் மசூதிகளாகவும் மாறிவருகிறதாம்;அந்த நிலையானது தென்னகத்தின் கிறித்தவ தலைநகராம் சென்னைக்கு அருகே இந்தியாவின் எருசலேமான தென்னகத்துக்கும் ஏற்படத் துவங்கிவிட்டதோ என்று அச்சமாக உள்ளது.

ஒருவேளை அந்த நிலமானது உங்களுக்கு அவசியமில்லாவிட்டால் அங்கே ஒரு நகர் அமைத்து கிறித்தவ சமுதாயத்துக்கு சலுகை விலையில் நீண்ட கால கடனுக்கு கொடுத்திருக்கலாமே? ஒரு பள்ளியோ சமுதாய கூடமோ அமைத்திருக்கலாமே? இது இயேசு அழைக்கிறார் நிறுவனமானது ஊழியம் என்ற பெயரில்  செய்து வரும் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ அக்கிரமங்களில் ஒரு சிறு துளி தான்;இந்தியாவின் பல பகுதிகளிலும் நீங்கள் சுவிசேஷ படைமுயற்சி கூட்டங்கள் என்ற பெயரில் செய்து வரும் ஊழியங்களின் நோக்கமே இதுபோல நிலங்களை வேவு பார்த்து வாங்கி விற்கும் தொழிலுக்காகவே போலும்..!

பால் தினகரன் போன்ற தனியார் நிறுவன முதலாளிகளுக்கு இனியும் காணிக்கை என்ற பெயரிலும் இளம்பங்காளர் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் பெயரிலும் கடவுளுக்காக என்ற எண்ணத்தில் பணம் அனுப்புவதில் இனியும் பிரயோஜனமில்லை;அவர்களுடைய ஊழியம் நசிந்துவரும் ஊழியமும் அல்ல;அவர்களுடைய கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களுக்கு முன்பாக இந்த நிலத்தின் மதிப்பு அவர்களைப் பொருத்தவரையிலும் சாதாரண பல்குச்சி (Tooth Pick or Tooth Brush) வாங்கும் அளவுக்கு தான் இருக்கமுடியும்.

ஆனால் கடந்த 40 வருடங்களாக நினைவு தெரிந்த நாளிலிருந்து உங்கள் பின்னால் அலைந்து கொண்டிருக்கும் என்னைப் போன்ற ஏழை விசுவாசிகள் இன்றைக்கும் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறோம்;நீங்கள் ரொம்ப நாளாகவே கவலைப்படாதிருங்கள், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் என்று சொல்லிவருகிறீர்கள்;கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட உங்களுக்கே எங்கள் மீது அக்கறையில்லாவிட்டால் இனி நாங்கள் யாருக்காகக் காத்திருக்க வேண்டும்? யார் மூலம் கடவுள்
நாங்கள் ஆசீர்வதிக்கப்படுவோம்? உங்களை மட்டும் அபரிமிதமாக ஆசீர்வதித்த கடவுள் எங்களை மட்டும் ஏன் கண்டுகொள்ளுகிறதே இல்லை? உங்களை ஆசீர்வதித்த கடவுள் இப்பிரபஞ்சத்தின் தேவனாக இருப்பானோ? அப்படியானால் உங்கள் பின்னால் அலைந்தது எங்கள் தவறு தான்..!

ஓஹோ உண்மையுடனும் உத்தமத்துடனும் தேவனுக்கு பயந்து கடுமையாக உழைத்து சிக்கனமாக வாழ்ந்தால் நாங்கள் ஆசீர்வதிக்கப்படுவோம் அல்லவா? நாங்களும் வீடு வாசல் என்று சுதந்தரிக்கலாம் அல்லவா? அப்படியானால் உங்களுக்கு நாங்கள் ஏன் காணிக்கை அனுப்பவேண்டும்? சொல்லுங்கள் முதலாளிகளே, சொல்லுங்கள்..!


இனியும் கிறித்தவத்தின் பெயரால் காணிக்கை கொள்ளையடித்து குடும்பத்துக்கு சொத்து சேர்ப்பவர்களை கிறித்தவர்கள் நம்பக்கூடாது; புண்ணியம் வேண்டுமா,உங்கள் அருகில் ஏழை எளியோருக்கு உதவி செய்யுங்கள்;கடவுளைக் குறித்து டிவியைப் பார்த்து அறியவேண்டிய அவசியமில்லை;அருகிலிருக்கும் சபைக்கு செல்லுங்கள்;இப்படியே கிறித்தவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் எங்கு விற்கப்பட்டாலும் உடனே அதனை எதிர்த்து போராடுங்கள்;அதைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்;கர்த்தருக்காகவும் சபை ஊழியங்களுக்காகவும் சபை மக்களின் நலனுக்காகவும் சொத்துக்களை வாங்கவேண்டுமே தவிர அவற்றை எக்காரணம் முன்னிட்டும் விற்கக்கூடாது என்பதை சபையார் அழுத்தமாக வலியுறுத்தவேண்டும்;இது சம்பந்தமாக உணர்வடைந்த விசுவாசிகள் தாங்கள் இதுபோன்ற ஊழியங்களுக்கு பணம் அனுப்புவதை நிறுத்தினால் மட்டும் போதாது,அவர்களுக்கு எழுதியும் போன் செய்தும் விசாரித்து விளக்கம் கேட்கவேண்டும்,நமது எதிர்ப்பைப் பதிவுசெய்யவேண்டும்.

பின்குறிப்பு: குறிப்பிட்ட நிலத்தில் நெடுஞ்சாலையை ஒட்டி ஏதோ ஒரு விக்கிரகக் கோவில் இருந்தது அது இடிக்கப்பட்டதற்கான‌ அடையாளங்கள் அங்கே காணப்படுகிறது;ஒரு விக்கிரகக் கோவில் இடிக்கப்பட்டதற்காக சந்தோஷப்படுவதா அல்லது அது தற்போது மீண்டும் கட்டப்படுமே அதற்காக வருத்தப்படுவதா..?

கிறித்தவத்துக்கு இனியும் எழுப்புதல் வேண்டாம்,புரட்சி வெடிக்கட்டும்..!




Attachments
__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard